Wednesday, February 28, 2018

அண்ணாச்சி எஸ். இரத்தினவேல் பாண்டியன்

அண்ணாச்சி எஸ். இரத்தினவேல் பாண்டியன்மறைவு
----------------------------------

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, அன்புக்கும் மாட்சிமைக்குரிய அண்ணாச்சி எஸ். இரத்தினவேல் பாண்டியன் இன்று மறைந்துவிட்டார். இவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர் எனும் ஊரில் பிறந்து தம் பள்ளிப் படிப்பை அம்பாசமுத்திரத்திலும் கல்லூரிக் கல்வியைத் திருநெல்வேலி தூய சேவியர் கல்லூரியிலும் முடித்தார். 1954 ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். திருநெல்வேலியில் கிரிமனல் வழக்குகளை நடத்தும் பிரபல வழக்கறிஞராக விளங்கினார். இவர் காலத்தில் சபாநாயகராக இருந்த செல்லப்பாண்டியன், என்.டி வானமாமனலை பாலாஜி போன்றவர்கள் கிரிமினல் வழக்கறிஞர்களாக அப்போது இருந்தனர். அக்காலத்தில் வெளிவந்த பிரபல திரைப்படமான 'சீவலப்பேரி பாண்டி' யின் அசல் வழக்கை திருநெல்வேலியில் நடத்தியவர் இவரே. தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, அம்பாசமுத்திரம் போன்ற பல துணை நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளை நடத்துவதுண்டு. அப்போது ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தது. தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்படவில்லை. இவரோடு ஜூனியர் வழக்கறிஞராக வைகோ இருந்தார். என்னை வைகோ தான் அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். 

இவர் 1960களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சீனியர் வழக்கறிஞராக மட்டுமல்லாமல் நெல்லை மாவட்ட திமுக மாவட்டச் செயலாளராகவும் விளங்கினார். அப்போது இவருடைய வழக்கறிஞர் அலுவலகம் திருநெல்வேலி முருகன்குறிச்சியில் இருந்தது. ஆரம்ப காலத்தில் இவர் ஒரு பியட் கார் வைத்திருந்தார். அந்த காரில் தான் அவர் கட்சிப் பணிகளுக்கு கிராமங்களுக்கு செல்வதுண்டு. வைகோ மீது இவருக்கு தனிப்பற்று உண்டு. தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களுக்கு செல்வதானால் வைகோவை அழைத்துக் கொண்டுதான் செல்வார். பேரவைத் தலைவராக இருந்த ஆவுடையப்பன் இவருடைய ஜுனியர், முன்னாள் சபாநாயகர் இவருடைய உறவினர். சேரன்மகாதேவி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்றபின் 1971ம் ஆண்டில் இவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்ந்தார். பின்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்தார். பின் 1988 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்று டெல்லிக்கும் சென்றார். மண்டல் கமிஷன் வழக்கிலும், கர்நாடக அரசை பிரிவு 356ஐ கொண்டு கலைத்த எஸ். ஆர். பொம்மை வழக்கிலும் விசாரித்து முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர். இவர் வழங்கிய முக்கியத் தீர்ப்புகள் பல உண்டு. இவரது புதல்வர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி. 

6வது. ஊதியக்குழ தலைவர்.
எளிமையாகவும், பகட்டில்லாமல் எந்த பதவியில் இருந்தாலும் வாழ்ந்து காட்டியவர். சட்டங்கள் ஒரு புறத்தில் இருந்தாலும் மனித நேயம், நாட்டின் நலன் என்பதையெல்லாம் மனதில் கொண்டுதான் இவருடைய தீர்ப்புகள் இருக்கும். 

இவர் எனக்கு நெருங்கிய ஆவார். மறைந்த என்னுடைய துணைவியாரை எனக்கு திருமணம் நிச்சயித்தது இவரும் பழ.நெடுமாறன் தான். எப்படியெனில் என்னுடைய சகலை ஸ்ரீராமலு இவரும் நண்பர்கள். சென்னை அண்ணாநகரில் ஆற்காடு வீராசாமி வீட்டின் பக்கத்தில் எனக்கு ஒரு வீடு உண்டு. அதை 1991 இல் விற்கும்போது கடுமையாக ஆட்சேபித்து எனது வீட்டிற்கே வந்து, "ஏனய்யா இப்படி சொத்துகளை விற்கிறாய்?" என்று சண்டை போட்டுவிட்டு போனார். அப்படி தனிப்பட்ட வகையில் என் மீதும் எனது குடும்பத்தினர் மீது பாசமும், நேசமும் கொண்டவர். இப்படி பல சம்பவங்கள் உண்டு. 

தேர்தலில் தோற்றவர் !
மக்கள் மனங்களை வென்றார் !!
தோற்றவர் வென்றார்!

அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

#எஸ்_இரத்தினவேல்_பாண்டியன்
#s_rathinavel_pandiyan
#KSRadhakrishnanPostings

#KSRPostings

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-02-2018

தமிழக ஆளுநர் மாளிகை.


இன்றைக்கு (28/02/2018) இரண்டு செய்திகள் கண்ணில் பட்டன. 
1. ஈரோடு மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக கிராவல் மண் அள்ளியவர்களுக்கு எட்டு கோடி ரூபாயை அபாராதமாக கோட்டாட்சியர் விதித்துள்ளார் என்ற செய்தியும், 
2.க்கு குளிர் சாதனப் பெட்டிகள், அவசியப் பொருட்கள், தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடு செய்தவர் கைது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாநில அதிகாரங்களில் தலையிடுகின்றார் என்ற குற்றச்சாட்டு ஒரு புறத்தில் உள்ளது. தேவையில்லாமல் அவர் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவது அர்த்தமற்றது. அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 
இருப்பினும், ராஜ்பவனில் இருந்து எனக்கு கிடைத்த தகவலின்படி எளிமையான உணவுகளையும், தேவையில்லாத வீண் ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்தினார் என்று கேள்விப்பட்டேன். பணியாளர்கள் என்ன உணவு உண்கிறார்களோ, அதே உணவைத் தான் ஆளுநரும் எடுத்துக் கொள்கிறார் என்ற செய்தியும் வந்நது.
ஒரு பக்கத்தில் அவரை கண்டித்தாலும் மற்றொரு பக்கம் அவரை பாராட்ட வேண்டியது உள்ளது. ராஜ்பவன் நிர்வாகத்தை எளிமையாக நேர்மையாகவும் நடக்க உத்தரவு போட்டுள்ளாராம். அதன் முதல் நடவடிக்கையாக ராஜ்பவனுக்கு பர்னிச்சர், சமையலறை பொருட்கள், குளிர் சாதனப் பெட்டிகள் வாங்கியதில் முறைகேடுகளை கண்டுபிடித்ததன் விளைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி. 
ராஜ்பவனில் இந்த முறையீடுகள் தொடர்ந்து நடந்து வருகிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது.
இந்த நேர்மையான நடவடிக்கையை பாராட்டி தான் ஆக வேண்டும். 
இதே போல 1977 காலகட்டங்களில் எளிமையின் அடையாளமாக பிரபுதாஸ் பட்வாரி தமிழகத்தின் ஆளுநராக இருந்தார். அப்போது அவர் ராஜ்பவனில் அசைவ உணவு, புகைப்பிடித்தல், மது பயன்படுத்துவது கூடாது என்று கடுமையான நடவடிக்கைகளை எடுத்தவர். இந்தியக் குடியரசுத் தலைவராக அப்போதிருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி சென்னை வந்தபோது தனக்கு அசைவ உணவு வேண்டுமென்று ராஜ்பவன் ஊழியர்களிடம் கேட்டார்.  உழியர்களோ அசைவ உணவு இங்கு சமைப்பதும், பரிமாறுவது கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு கவர்னர் பட்வாரி புலால் உணவு உண்ணக் கூடாது என்று கடுமையான உத்தரவு இட்டுள்ளார் என்ற விவரம் சஞ்ஜீவ ரெட்டிக்கு தெரியவந்தது. பட்வாரியிடம் இது குறித்து சஞ்சீவ ரெட்டியிடம் கேட்டபோது யார் வந்தாலும் அசைவ உணவு  பரிமாறக்கூடாது என்று நான் தான் உத்தரவிட்டேன். உங்களுக்கு வேண்டும் என்றால் வெளியே சென்று சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று தெளிவாகச் சொல்லி விட்டார். குடியரசுத் தலைவரை பார்த்து ஒரு ஆளுநர் கறாராக சொன்ன நிகழ்வு எல்லாம் நினைவுக்கு வருகிறது.
#chennairajbhavan
#சென்னைராஜ்பவன்
#தமிழக_ஆளுநர்
#TN_Governor
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-02-2018

Tuesday, February 27, 2018

சிறுவாணி - ஆழியாறு பிரச்சனைகள்

தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிறுவாணி அணையின் அவசர கால மதகுகள் மூடப்பட்டது. கோவை நகரம் மற்றும் கிராமங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது சிறுவாணி அணை. தமிழகம்-கேரளா என இருமாநில ஒப்பந்தத்தின்படி அணையில் இருந்து குடிநீருக்காக தினமும் 8 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 35 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இந்தநிலையில், கேரள அதிகாரிகள் கடந்த 23ம் தேதி அத்துமீறி சிறுவாணி அணையின் அவசர கால மதகுகள் வழியாக ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதில், வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி அட்டப்பாடி, அகழி பகுதிகளுக்கு சென்றது. இதனால் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அணையில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறினால் விரைவில் அணை வற்றிவிடும் என்பதால், வரும் காலங்களில் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. மேலும் ஆழியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என கேரளா கூறி வருவதால், அந்த தண்ணீரை சிறுவாணியில் பெறுவதற்காகத்தான் சிறுவாணி அணையில் இருந்து கேரள அதிகாரிகள் தண்ணீர் திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பதாக தமிழக அதிகாரிகள் உறுதியளித்ததன்பேரில், சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த கேரள அதிகாரிகள் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற உறுதியை ஏற்று, சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த கேரள அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்படி கடந்த 25/02/2018ம் தேதியன்று மதியம் 2 மணியளவில் சிறுவாணி அணையில் இருந்து ஆற்றுக்கு அவசர கால மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. வினாடிக்கு 450 கன அடி: கேரள மாநில அரசு மற்றும் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக நேற்று காலை முதல், பரம்பிக்குளம் அணையிலிருந்து தண்ணீர் எடுத்து, அதனை கான்டூர் கால்வாய் வழியாக பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு திருப்பி விடப்பட்டது. இதைதொடர்ந்து, ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 450 கன அடி வீதம், கேரள மாநில பகுதிக்கு திடீர் என தண்ணீர் திறக்கப்பட்டது. கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டதால், கோவை மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், வேதனையை உண்டாக்கியுள்ளது. #சிறுவாணி #ஆழியாறு #தமிழகம்_கேரளா_நதிநீர்_சிக்கல் #KSRadhakrishnan_Postings #KSRPostings கே.எஸ். இராதாகிருஷ்ணன். 27-02-2018

குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்

நடிகை ஸ்ரீ தேவி மறைந்த போது இரத்தத்தில் மது கலந்திருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. சற்று மனம் கனத்தது. சிறு குழந்தையில் இருந்து பார்த்த ஸ்ரீ தேவிக்கா இப்படி ஒரு அவலமும், துயரமும் என்ற வேதனை. ஸ்ரீ தேவியின் முகத்தில் எப்போதும் இயல்பாக உள்ளார்ந்த கவலைகளும், வெளிப்புறத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதும் தெரியும். துயரமும், இறுக்கமும் அவரின் வாழ்க்கையின் நடைமுறையாக தான் இருந்துள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் தன்னிலையை மறக்க, அக, புற நிலையில் மதுவை நாடி இருக்கலாம். மும்பை வாழ்க்கையில் இது சாதாரண விசயமாகும். ஒரு திரை ஆளுமைக்கு இப்படியான ஒரு துயரமான முடிவா?
அறந்தை நாராயணன் அவர்கள், “குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்”என்ற தன்னுடைய நூலில் தமிழ் திரையுலக ஆளுமைகள் குடிப்பழக்கத்தால் பல துயரங்களைச் சந்தித்து, மன அமைதி இழந்து வாழ்வைத் தொலைத்த கதைகளைச் சொல்லியுள்ளார். வாழ்வின் சீர்கேடுகள் எல்லையற்று நீண்டு சிதையுற்று முடிவில் அழிவின் விளிம்புக்கே சென்று முடிந்த சில புகழ்பெற்ற ஆளுமைகளை பற்றிய நூல். எத்தனையோ அரிய, பெரிய கலைஞர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள் மது அருந்தி, உடல் வருந்தி இறந்து போயினர். இன்றைக்கும் திரை வரலாற்றில் பி.எஸ்.வீரப்பா, வி.எஸ்.ராகவன். எம்.என்.நம்பியார், இன்றைய கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் போன்ற ஆளுமைகள் மீது இந்த கொடுமைகளின் வாசமே படவில்லை. நடிகையர் திலகம் சாவித்திரி, சந்திரபாபு, சுருளிராஜன் போன்ற ஆளுமைகள் மதுவுக்கு பலியாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்த நிகழ்வுகளை எல்லாம் தமிழகம் கண்டது. அறந்தை நாராயணன் இந்த நூலில் பதிவுச் செய்த சம்பவங்களை எல்லாம் படிக்கும் போது என்ன வாழ்க்கை என்று தோன்றினாலும், பிறந்த வாழ்க்கையை இயன்றளவு மன நிம்மதியோடு வாழக் கற்றுக் கொண்டால் எந்த துயரமும், ரணமும் நம்மைத் தீண்டாது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை எத்தனையோ மகத்தான ஆளுமைகளை மதுக் கோப்பையிடம் நாம் பறி கொடுத்திருக்கிறோம். திரையுலகம் மட்டுமல்ல, மானிட சமுதாயமே மதுவை நாடாமல் தங்கள் வாழ்க்கை தவத்தை நெறிப்படுத்திக் கொண்டால் நாட்டுக்கு நல்லது. #தமிழ்த்_திரையுலகம் #குடிப்பழக்கம் #அறந்தை_நாராயணன் #KSRadhakrishnan_Postings #KSRPostings கே.எஸ். இராதாகிருஷ்ணன். 27-02-2018

*காவிரி *காவிரி பிரச்சனையின் நியாயத்தை உணராத முரட்டு ஜென்மம் முன்னாள் பிரதமர் தேவேகவுடா.*


-------------------------------------
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாதென்றும் திருவாய் மலர்ந்துள்ளார் முரட்டு பிடிவாதக்காரர் *முன்னாள் பிரதமர் தேவேகவுடா*. 

தேவேகவுடா, காவிரிப் பிரச்சினையில் 1995 வாக்கில்  தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு எதற்கென்றால், நடுவர்மன்ற தலைவர் நீதிபதி *சித்த கோஷ் முகர்ஜி* தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஆய்வு நடத்தும் போது அவருக்கு தஞ்சை மாவட்ட கோவில்களில் பூர்ண கும்ப மரியாதையும், பரிவட்டமும் சூட்டினார்கள் என்ற நிலையில் அவரிடம் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்காதென்று வீண் ஒப்பாரி வைத்து ஒரு அவசியமற்ற ரிட் மனுவை தாக்கல் செய்தார். 

அந்த மனு நிலுவையில் இருக்கும்போதே 1996இல் பிரதமர் பொறுப்பையும் ஏற்றார். இந்தியப் பிரதமராக உறுதிமொழி எடுத்த தேவேகவுடா தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை எதிர்ப்பிரதிவாதிகளாக சேர்த்தவர். இந்தியப் பிரதமராக எப்படி உறுதிமொழி எடுக்க முடியும்? இது அரசியலமைப்புச் சாசனத்திற்கு விரோதமானது. 

இந்நிலையில்,நான் அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவேகவுடாவை எதிர்த்து பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என *Quo Warranto* ரிட் மனுவை தாக்கல் செய்தேன். ஏன் என்றால் தமிழகத்தினையும் கேரளத்தையும்,புதுவையை  எதிரிகளாக பாவிக்கும் ஒரு நபர் எப்படி இந்திய பிரதமராக இருக்க முடியும் என்ற வினாவை என்னுடைய ரிட் மனுவில் குறிப்பிட்டிருந்தேன். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் பிரதமர் தேவேகவுடாவுக்கும், மத்திய அரசிற்கும் நோட்டீஸ் அனுப்பினார். 

இதை அறிந்தவுடன் அலறியடித்து பிரதமர் தேவேகவுடா நிலுவையில் இருந்த தனது மனுவை பெங்களுரு உயர்நீதிமன்றத்தில் இருந்து உடனே திரும்பப் பெற்றார்.

தேவேகவுடாவை 1996 டிசம்பரில்,உச்ச நீதிமன்றத்தில் என்னுடைய நதிநீர் இணைப்பு வழக்கு குறித்து விவாதிக்க சந்தித்தேன். அப்போது என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள், இவர் எல்லாம் ஒரு மனிதரா என்று நினைக்கத் தோன்றியது. என்னை நீக்கச் சொல்லி வழக்கு போட்டவர் நீங்கதானே என்று கன்னடமும், ஆங்கிலமும் கலந்து முகத்தை சுளித்து பேசினார். 

மென்மையும், அடிப்படை நாகரிகமும் தெரியாதவர் ஒரு பிரதமராக உயர்ந்தார் என்ன செய்ய? 

மாநிலத் தலைமைச் செயலராக பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் ஓய்வு வட்டாட்சியர் போல நடந்து கொள்கின்ற பாணி தான் இவர் பாணி. அடிப்படை மனிதநேய குணங்கள் இல்லாத மனிதரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். 

காவிரிப் பிரச்சனையில் ஒரு கட்சித் தலைவராகவோ, ஒரு முன்னாள் பிரதமராகவோ நடந்து கொள்கின்ற பாங்கு இல்லாமல் தரமற்ற முறையில் நடந்து கொள்கிறார். 

இந்திய கூட்டாட்சியில் ஒரு முன்னாள் குடியரசுத் தலைவர், முன்னாள் பிரதமர், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசியலமைப்பு சாசனத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். 

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற *தலைமை நீதிபதி இ.எஸ். வெங்கட்ராமைய்யா*, தன்னுடைய கர்நாடக மாநில நலனுக்காக தமிழகத்திற்கு காவிரித் தண்ணீரை வழங்கக் கூடாதென்று கர்நாடக அனைத்துக் கட்சித் தலைவர்களோடு அன்றையப் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தவர் தான். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு இது தகுமா?. 

தேவேகவுடா முன்னாள் பிரதமர் என்ற அனைத்து சலுகைகளை பெற்றுக் கொண்டு கர்நாடகத்தின் வாட்டாள் நாகராஜன் நடந்து கொள்வதைப் போன்று நடந்து கொண்டால் மத்திய அரசு தரும் சலுகைகளை பறித்து, திரும்ப பெற்றுக் கொள்வதில் நியாயங்கள் இருக்கின்றன.

#காவிரிப்_பிரச்சனை
#உச்சநீதிமன்றத்_தீர்ப்பு
#காவிரி_மேலாண்மை_வாரியம்
#தேவேகவுடா
#Deve_gowda
#Cauvery_Issue
#Supreme_Court_of_India_Judgement
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-02-2018
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாதென்றும் திருவாய் மலர்ந்துள்ளார் முரட்டு பிடிவாதக்காரர் *முன்னாள் பிரதமர் தேவேகவுடா*. 

தேவேகவுடா, காவிரிப் பிரச்சினையில் 1995 வாக்கில்  தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு எதற்கென்றால், நடுவர்மன்ற தலைவர் நீதிபதி *சித்த கோஷ் முகர்ஜி* தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஆய்வு நடத்தும் போது அவருக்கு தஞ்சை மாவட்ட கோவில்களில் பூர்ண கும்ப மரியாதையும், பரிவட்டமும் சூட்டினார்கள் என்ற நிலையில் அவரிடம் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்காதென்று வீண் ஒப்பாரி வைத்து ஒரு அவசியமற்ற ரிட் மனுவை தாக்கல் செய்தார். 

அந்த மனு நிலுவையில் இருக்கும்போதே 1996இல் பிரதமர் பொறுப்பையும் ஏற்றார். இந்தியப் பிரதமராக உறுதிமொழி எடுத்த தேவேகவுடா தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை எதிர்ப்பிரதிவாதிகளாக சேர்த்தவர். இந்தியப் பிரதமராக எப்படி உறுதிமொழி எடுக்க முடியும்? இது அரசியலமைப்புச் சாசனத்திற்கு விரோதமானது. 

இந்நிலையில்,நான் அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவேகவுடாவை எதிர்த்து பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என *Quo Warranto* ரிட் மனுவை தாக்கல் செய்தேன். ஏன் என்றால் தமிழகத்தினையும் கேரளத்தையும்,புதுவையை  எதிரிகளாக பாவிக்கும் ஒரு நபர் எப்படி இந்திய பிரதமராக இருக்க முடியும் என்ற வினாவை என்னுடைய ரிட் மனுவில் குறிப்பிட்டிருந்தேன். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் பிரதமர் தேவேகவுடாவுக்கும், மத்திய அரசிற்கும் நோட்டீஸ் அனுப்பினார். 

இதை அறிந்தவுடன் அலறியடித்து பிரதமர் தேவேகவுடா நிலுவையில் இருந்த தனது மனுவை பெங்களுரு உயர்நீதிமன்றத்தில் இருந்து உடனே திரும்பப் பெற்றார்.

தேவேகவுடாவை 1996 டிசம்பரில்,உச்ச நீதிமன்றத்தில் என்னுடைய நதிநீர் இணைப்பு வழக்கு குறித்து விவாதிக்க சந்தித்தேன். அப்போது என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள், இவர் எல்லாம் ஒரு மனிதரா என்று நினைக்கத் தோன்றியது. என்னை நீக்கச் சொல்லி வழக்கு போட்டவர் நீங்கதானே என்று கன்னடமும், ஆங்கிலமும் கலந்து முகத்தை சுளித்து பேசினார். 

மென்மையும், அடிப்படை நாகரிகமும் தெரியாதவர் ஒரு பிரதமராக உயர்ந்தார் என்ன செய்ய? 

மாநிலத் தலைமைச் செயலராக பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் ஓய்வு வட்டாட்சியர் போல நடந்து கொள்கின்ற பாணி தான் இவர் பாணி. அடிப்படை மனிதநேய குணங்கள் இல்லாத மனிதரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். 

காவிரிப் பிரச்சனையில் ஒரு கட்சித் தலைவராகவோ, ஒரு முன்னாள் பிரதமராகவோ நடந்து கொள்கின்ற பாங்கு இல்லாமல் தரமற்ற முறையில் நடந்து கொள்கிறார். 

இந்திய கூட்டாட்சியில் ஒரு முன்னாள் குடியரசுத் தலைவர், முன்னாள் பிரதமர், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசியலமைப்பு சாசனத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். 

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற *தலைமை நீதிபதி இ.எஸ். வெங்கட்ராமைய்யா*, தன்னுடைய கர்நாடக மாநில நலனுக்காக தமிழகத்திற்கு காவிரித் தண்ணீரை வழங்கக் கூடாதென்று கர்நாடக அனைத்துக் கட்சித் தலைவர்களோடு அன்றையப் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தவர் தான். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு இது தகுமா?. 

தேவேகவுடா முன்னாள் பிரதமர் என்ற அனைத்து சலுகைகளை பெற்றுக் கொண்டு கர்நாடகத்தின் வாட்டாள் நாகராஜன் நடந்து கொள்வதைப் போன்று நடந்து கொண்டால் மத்திய அரசு தரும் சலுகைகளை பறித்து, திரும்ப பெற்றுக் கொள்வதில் நியாயங்கள் இருக்கின்றன.

#காவிரிப்_பிரச்சனை
#உச்சநீதிமன்றத்_தீர்ப்பு
#காவிரி_மேலாண்மை_வாரியம்
#தேவேகவுடா
#Deve_gowda
#Cauvery_Issue
#Supreme_Court_of_India_Judgement
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-02-2018

ஆரோவில் 50

*இன்றைய (27/02/2018) தினத்தந்தியில் ஆரோவில்லின் 50 ஆண்டுகள் நிறைவைக் குறித்து எனது சிறப்புக் கட்டுரை வெளியாகியுள்ளது.*

--------------------------

புதுச்சேரியில் சர்வதேச சமூகம் அமைந்த ஆரோவில் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. புதுவையில் இருந்தாலும் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. ஐ.நா. வின் யுனெஸ்கோ உதவியுடன் மாபெரும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இந்த பன்னாட்டு கிராமிய நகர சங்கமமாகும். அமைதியும், உயிரோட்டமான ஜீவனும் ஒருங்கிணைந்து அமைந்த இந்த ஆரோவில்லுக்கு சென்றாலே மனிதருடைய கவலைகள் அனைத்தும் ஓடிவிடும். உலக நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், ஜாதி, மதம், அரசியல் மற்றும் நாடுகளின் வேறுபாடுகளைக் கடந்து ஒரே சமூகமாக இங்கு வாழ்கின்றனர். உண்மையாகவே பன்மையில் ஒருமை தத்துவம் இங்கு தான் நிலைத்தோங்குகிறது. 
மானிடத்தின் ஒருமைப்பாட்டையும் மனித நேயத்தின் இயல்பையும் மெய்யாக்குவதே ஆரோவில்லின் அடிப்படை நோக்கமாகும். அரவிந்தர், அன்னையால் நிறுவப்பட்டது. பழமை, நவீனம், சமகாலம், எதிர்காலம், புதியவை, உண்மையை நோக்கி தேடல், மெய்ப்பொருள் காண்பது என்ற தத்துவங்களின் அடிப்படையில் ஆரோவில் அமைந்தது. 
ஆரோவில் உயிரோட்டமான உணர்வை கண்டறிய முயற்சி மேற்கொள்ளும் இடம் என அரவிந்தர், அன்னை வரைபடத்தை தொட்டுக்காட்டிய இடம் தான் ஆரோவில்.

விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டாரத்தில், புதுச்சேரியிலிருந்து 12 கி.மீ., தூரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி துவக்கி வைத்தார். இந்த இடம் காடுவெளிச் சித்தர் தவம் செய்த பூமி என்று நம்பப்படுகின்றது. இங்கு சிவன் ஆலயங்களும், நாட்டுப்புறத் தெய்வக் கோவில்களும் உள்ளன. ஞாணசம்மந்தரால் பாடல் பெற்ற திருவக்கரை, அரசிலி இதன் அருகே தான் உள்ளது.

இந்த நகரத்தை 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டு, பல பகுதிகளிலிருந்தும், தமிழகம், புதுச்சேரியிலிருந்தும் 5000 பேர் குழுமினர். அதன் மையத்திலிருந்த பெரிய ஆலமரத்திலிருந்து சிறுதொலைவில்  ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லால் ஆன ஒரு தாழியில் உலகின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களிலிருந்தும் அந்தந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்து வரப்பெற்று இந்த இடத்தில் ஒரு சேர சேர்க்கப்பட்டது. இந்த பன்னாட்டு நகரில் 50,000 பேர் வரை வசிப்பதற்காகத் திட்டமிடப்பட்டது. நகரத்தின் மத்தியில் ஆரோவில்லின் மாத்ரி மந்திர் அமைக்கப்பட்டது. அதனைச் சுற்றி சோலை வனங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மத்தியப் பகுதிக்கு பேரமைதி கேந்திரம் (Peace) என்று பெயர்.
இந்த இடத்தின் நான்குபுறமும் சுருள்சுற்று வடிவத்தில் பரந்த நான்கு பகுதிகள் இருக்கின்றன. வடமேற்குத் திக்கில் தொழிற்கூடங்கள் உள்ளன, நவீன கட்டிடக் கலைகளின் இருப்பிடமாக ஆரோவில் உள்ளது. பசுமை இயற்கைச் சூழ்நிலையில் குடியிருப்பு வீடுகள் அமைந்துள்ளன. வடகிழக்குத் திசையில் பண்பாட்டுப் பகுதியும், தென்மேற்குப் பகுதியில் பன்னாட்டுப் பகுதியும் அமைந்துள்ளன. 

பன்னாட்டு மைய அரங்கத்தில் அனைத்துலக இசை நடனம், நாடகம் போன்ற கலைகளை கற்பிக்கும் கலாசாலைகளும், கலையரங்குகள், நூலகங்கள், பயிற்சிக் கூடங்கள், கல்வி மற்றும் ஆய்வுக் கூடங்கள், விளையாட்டரங்குகள் உள்ளன. இந்த இடத்தில் ஒவ்வொரு நாட்டின் அரங்கமும் தனித்தனியாக உள்ளது. அந்த ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றும் அடையாளங்களைக் கொண்ட அரங்கங்களாக தனித்தனியாக விளங்குகின்றன. முதல் அரங்கமான இந்திய அரங்கம் பாரத் விலாஸ் என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மரபு மையமும் அமைந்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் அரங்குகளும் நிறுவப்பட்டு வருகின்றன. திபெத் காலச்சார மையமும் இடம் பெற்றுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்போடு, மாசு ஏற்படக்கூடாத தொழிற்கூடங்கள் பெரிய, சிறிய, நடுத்தர அளவில் செயல்படுகின்றன.

சர்வதேச சமுதாயத்தின் இடையே ஒருங்கிணைப்பும் நல்லிணக்கத்தையும் கொண்டு அந்தந்த நாட்டின் பண்பாட்டுத் தரவுகளை அறிந்து, புரிந்து, பகிர்ந்து கொள்ளவும் முடிகின்றது. ஆரோவில்லின் முதல் மொழி தமிழ், பிரெஞ்ச், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் உள்ளது. தனியாக ஆரோவில் ரேடியோவும் இயங்குகிறது. ஆரோவில் செய்திமடல் 20 ஆண்டுகளாக தமிழில் தற்போது மீனாட்சி அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிறது.
இந்த பகுதியில் பச்சை பசேலென்று மரங்கள், பூங்காக்கள், பூந்தோட்டங்கள் என நிறைந்திருக்கின்றன. ஐம்பதுக்கும் நாடுகளுக்கு மேற்பட்ட மக்கள் ஒரு சேர மகிழ்ச்சியோடும், அமைதியாகவும் வாழ்கின்றனர். இங்குள்ள கிராமங்களினுடைய முன்னேற்றம், கல்வி, மக்கள் நல்வாழ்வு, உணவு, சுவை நீர் என அனைத்தும் எளிதாக இங்கே கிடைக்கின்றது. 

முற்றிலும் வறண்ட செம்மண் 50 நாட்டு மக்களின் உழைப்பின் காரணமாக செழிப்பானது. இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, மாற்றுச் சக்தி, இரசாயன உரங்களை தவிர்த்தல் என்ற நிலையில் விவசாயம், கலைப் பொருள் தயாரிப்பு போன்ற பணிகளை அவரவர்களுக்கு ஏற்றவாறு செய்துவருகின்றனர். நேர்மையான உழைப்பே இவர்களுடைய தாரக மந்திரம். ஆரோவில் மட்டுமல்லாமல் இதை சுற்றியுள்ள ஏனைய கிராம வளர்ச்சிக்கும் இவர்கள் அக்கறை பாட்டி உதவுகின்றனர். அதுபோல, கடற்கரைப் பகுதிகளில் தொண்டு நிறுவனப் பணிகளை ஆற்றுகின்றனர்.
சுனாமிகா, ஸ்மால் ஸ்டெப்ஸ், வெல்பேப்ர் என திட்டப்பணிகள் மூலம் ஆரோவில் தன் அருகேயுள்ள கிராமங்கள் முன்னேற வேண்டிய பணிகளை ஆற்றுகின்றன. இதன் மூலம் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி, பிற மாற்றுப் பயன்படு பொருட்களை உற்பத்தி செய்து அந்த வட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றனர். ஆரோவில் அறக்கட்டளையின் 170க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் பல ஊர்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது. 
மறுஉற்பத்தி செய்யவல்ல சக்திகள், காற்று மூலம் மின்சார உற்பத்தி, உயர்தர இயந்திரங்கள், தகவல் தொகுப்புகள் ஆகியவற்றின் தனித்துவமுடைய நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இயற்கையை மாசுபடுத்தாத சிறு உலோகத் தொழிற்கூடங்கள், உயர்தரத் தொழில்நுட்ப வசதிகொண்ட ஒலிப்பதிவுக் கூடம், விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தின்போது உட்கொள்ளும் ஸ்பிருலினா (உணவுப் பாசி) உற்பத்தி செய்யும் நிறுவனம், சுடுமனைகள் மற்றும் கைவினை உற்பத்தித் தொழிற்கூடங்கள் எனப் பல்வகை நிறுவனங்கள் சிறப்புறச் செயல்படுகின்றன. ஆரோவில் குழந்தைகளுக்கான 5 பள்ளிகள், 4 சிறார் பள்ளிகள், 5 முன் மழலையர் பள்ளிகள் இவற்றோடு ஆரோவில் பகுதியைச் சுற்றிலும் பல பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம இளைஞர்கள் தொழிற்கல்வி கற்றுக் கொள்வதற்கென ஒரு பல்தொழிற் பள்ளியும், பணிமுடித்துத் திரும்பும் தொழிலாளர்களுக்கான இளைஞர்கள் கல்வி மையமும் மகளிர்க்கென வாழக்கைக் கல்வி மையமும் இயங்குகின்றன.

ஆரோவில் நூலகத்தில் உலக மொழிகளில் 50,000த்திற்கும் மேலான நூல்கள், குறுந்தகடுகள் உள்ளன. இந்திய மற்றும் பிறநாட்டு மொழிகளைக் கற்பதற்கான மொழிக்கூடமும் இங்கு இடம்பெற்றுள்ளது. ஆரோவில் ஆவணக் காப்பகம் பல தரவுகளை ஆய்வுசெய்ய உதவுகின்றன.
நடனம், நாடகம், இசை, ஓவியம், யோகா, தற்காப்புக் கலை போன்ற கலை சம்மந்தமான பயிலரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை முகாம்கள், அறிவியல் கண்காட்சிகள் எப்போதும் நடந்த வண்ணம் உள்ளது. 

இங்குள்ள கலைஞர்கள் உலக நாடுகள் பலவற்றிற்கு சென்று தங்களுடைய கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்தியாவின் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழும் இந்த நிறுவனத்திற்கு வெளிநாட்டுத் தலைவர்களும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர்களும், இந்திரா காந்தி, தலாய்லாமா, யுனெஸ்கோவின் பொதுச் செயலர், ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலர், இந்தியக் குடியரசுத் தலைவர்கள், துணைக் குடியரசுத் தலைவர்கள், மத்திய – மாநில அமைச்சர்கள், பிறநாட்டு அதிபர்கள், தூதர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் வந்து செல்லும் சிறப்புக்குரிய இடம் ஆரோவில்.
இந்த பசுமை வளையப் பகுதி 405 ஹெக்டேர் பரப்பளவில் மனிதர்கள், காடுகள், உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று இணக்கமாக ஜீவிக்கின்றன. மேலும் 800 ஹெக்டேர் நிலங்களை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படியான ஆரோவில் மனித இனத்தின் ஒற்றுமையை நிலைநாட்டவும், அதை பரிசோதிக்கும் சாலையாகவும் விளங்குகிறது. வேற்றுமையில் மனித இனத்தின் ஒற்றுமையை உருவாக்குவதே ஆரோவில்லின் நோக்கம். இந்த நோக்கம் எதிர்காலத்திலும் வெற்றி பெற வேண்டும். 

#ஆரோவில்50
#Auroville50
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-02-2018

Monday, February 26, 2018

சிரியா போர் நிறுத்தம்.

Image may contain: car and outdoor
ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது சிரியா அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஐ.நா. அவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவ வேண்டுமென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் கூட்டு தொலைபேசி உரையாடல் மூலமாக ஜெர்மயின் அதிபர் ஏங்கலா மெர்கல் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் கேட்டுகொண்டனர்.


கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
26-02-2018

நடிகை_ஸ்ரீதேவி...

ஸ்ரீதேவி குறித்து நேற்று பதிவிட்டதை தொடர்ந்து,பலர் என்னிடம் கேட்பதால் அதை தொடர்ச்சியாக சிலவற்றை சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன். 

ஸ்ரீதேவி 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி சிவகாசியில் பிறந்தார். இவர் பிறந்தபோது ஸ்ரீ அம்மா யங்கேர் என்று பெயர். பப்பி என அழைக்கப்பட்டார். அவரது தாயார் திருப்பதி,. அவருடன் ஸ்ரீலதா என்ற சகோதரியும் சதீஷ் என்ற சகோதரனும் கூடப் பிறந்தவர்களாவர். ஸ்ரீதேவியின் தந்தை 1991 ஆம் ஆண்டில் இறந்தார், அதேபோல் 1997 ஆம் ஆண்டில் அவரது அம்மா புற்றுநோயால்  இறந்தார்.

ஸ்ரீதேவியின் தகப்பனார் வழக்கறிஞர் அய்யப்பன், 1962, 63 வாக்கில் கீழ்ப்பாக்கம் உமையாள் தெருவில், ஆவின் பால் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற மக்கள் தொடர்பு அதிகாரியின் வீட்டில் வாடகைக்கு இருந்தார். பின் தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலையில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தார். 

மதுரையில்,1973 ம் ஆண்டு, ஸ்தாபன காங்கிரஸ் ஏடான பழ. நெடுமாறனின் செய்தி நாளேடு விழா தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது என நினைவு. பெருந்தலைவர் காமராஜர் அதை வெளியிட்டு, முதல் செய்திஇதழை அன்றைய மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தரான தமிழறிஞர். திரு. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பெற்றுக் கொண்டார். 

அந்த விழாவிற்கு ஸ்ரீதேவியின் பெரியப்பா மீனம்பட்டி இராமசாமி என்னுடன் வந்தார். அப்போது நடிகர் கமலஹாசனின் தந்தையார் பரமக்குடி வழக்கறிஞர் சீனிவாசன், தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த உ.சுப்பிரமணியம் வந்து அமர்ந்திருந்தார். இந்த சம்பவம் நடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கமலஹாசன் – பிரமீளா நடித்து வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காலக்கட்டத்தில் தான் ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் வரவேற்பையும் பெற்றார். விழாவின் இடையில் நான் கமலஹாசனின் தந்தையிடம் இவர் தான் ஸ்ரீதேவியின் பெரியப்பா என்று அறிமுகப்படுத்தினேன். அவர் உடனே, தெரியுமே என்றார். கமலஹாசனின் தந்தையார் மீனம்பட்டி இராமசாமியிடம் நல்லா நடிக்கிறாங்க இந்த பொண்ணு, நல்ல லட்சணமாக இருக்குது. நல்ல குரல் வளமும் உள்ளது. 

அந்த கால்கட்டத்தில் மதுரையில் எந்தவொரு காங்கிரஸ் கூட்டமாக இருந்தாலும், காமராஜர் நிகழ்ச்சியாக இருந்தாலும் கமலஹாசனின் தந்தையார் அரைக்கை கதர் சட்டை போட்டுக் கொண்டு கலந்து கொள்வது வாடிக்கை. 
•••••••••••••••

ஸ்ரீ தேவி குழந்தையாக இருக்கும் போது பாரீஸ் சாக்லேட்களை அதிகமாக கைகளில் வைத்துக் கொண்டிருப்பார்.

#நடிகை_ஸ்ரீதேவி
#தமிழ்_திரையுலகம்
#கரிசல்_மண்
#actress_sridevi
#bollywoood
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
26-02-2018

Sunday, February 25, 2018

கரிசல் மண்ணின் திரைத் தாரகை ஸ்ரீதேவி - சில நினைவுகள்

நடிகை ஸ்ரீ தேவி மறைந்துவிட்டார். இவரை சிறு குழந்தை பிராயத்திலிருந்து பார்த்தது நினைவில் இருக்கிறது. இவரது தந்தையார் அய்யப்பன் சிவகாசி பக்கத்தில் மீனம்பட்டியில் பிறந்தவர். தாயார் பெயர் ராஜேஸ்வரி. இவர் ஆந்திரத்தை சார்ந்தவராக இருந்தாலும் சென்னையில் வாழ்ந்தவர். இவரது பெரியப்பா மீனம்பட்டி ராமசாமி ஜனதா கட்சியின் சிவகாசிதொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1976 காலகட்டங்களில் இருந்தார். இவர் காமராஜருக்கு நெருக்கமாகவும் இருந்தவர். இவர்கள் எனக்கு உறவினர்கள். இவர் தந்தை அய்யப்பன் சென்னையில் கிரிமினல் கோர்ட்டுகளில் தனது வழக்கறிஞர் பணியைமேற்கொண்டார். ஒரு பியட் கார் வைத்திருந்தார். இவரை, திருத்தங்கல் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக இருந்த  எனது உறவினர் மறைந்த நத்தம்பட்டி சீதாராமனுடன் சென்னை வரும்போதெல்லாம் இவரை சந்தித்ததுண்டு. பிறகு, 1989 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டியில் நான் திமுக சார்பில் போட்டியிட்ட போது, அதன் அருகேயுள்ள சிவகாசித் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இவரது தந்தை அய்யப்பன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் 1967இல் விருதுநகரில் காமாரஜரை வென்ற பெ. சீனிவாசன் போட்டியிட்டார். அந்த காலகட்டங்களில் தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரங்களுக்கு வருவார். 
Image may contain: 3 people, closeup
Image may contain: one or more people and closeup
இவரை இறுதியாக 1990இல் சந்தித்தேன். எப்போது என்றால் உச்சநீதிமன்ற நீதிபதி வி. இராமசாமி இல்லத் திருமணத்தில் சந்தித்தேன். நீதிபதி இராமசாமியின் மகனும் சட்டமன்ற உறுப்பினரான சஞ்சய் உடன் இவரது சகோதரிக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது சந்தித்து பேசியதுண்டு. அதன்பின்னர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 1960களில் கோடை விடுமுறையென்றால் சிறு குழந்தையாக ஸ்ரீ தேவி சிவகாசி அருகேயுள்ள சொந்த கிராமத்திற்கு  வருவதுண்டு. அவருடைய குடும்பத்தார் அனைவரும் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருத்தங்கல் கோவிலுக்கு  வருவதுண்டு. தனது நான்கு வயதில் 1967இல் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கினார். அப்போதே சிறு குழந்தையாக படங்களில் நடித்ததால் சிவகாசி வட்டார மக்கள் இவரை அன்புடன் பார்ப்பதுண்டு. குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் துவங்கி தமிழ்த் திரையுலகு மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஏன் பாலிவுட்டிலேயே தன்னுடைய நடிப்பினால் புகழைப் பெற்றுள்ளார். மொத்தம் 300 படங்கள் நடித்துள்ளார். 

நான் அறிந்தவரையில் அப்பாவித்தனமாக யாருக்கும் பாதகம் நினைக்காமல் இருப்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உலகத்தைப் பற்றி சற்றும் அறியாதவர் என்றும் அவருடைய பெற்றோர்கள் சொல்வார்கள். ஒரு முறை அவரது வீடு அரசு ஊழியர்களால் பிரச்சனையில் இருந்தபோது கூட யாரிடமும் உதவி கேட்க யோசித்தார் என்று அவரைச் சார்ந்தவர்கள் என்னிடம் கூறியுள்ளனர். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கூட இதை கேள்விப்பட்டவுடன் நேரில் அழைத்து அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். அதன் பின்னும் அந்த பிரச்சனை தொடர்ந்தது எனத் தகவல். சென்னையில் இருந்தவரை யாராவது பள்ளி,  கோவில் கட்ட, பொது நலப் பணிகளுக்கு என்று உதவி கேட்டால் தாராளமாக உதவி செய்ததாகவும், அவரிடம் உதவி பெற்றவர்கள் என்னிடம் சொன்னதுண்டு. 

இயற்கை இவருடைய 54 வயதான இவருக்கு மரணத்தை அளித்துவிட்டதே என்பது தான் நமது ஆதங்கம்.

#நடிகை_ஸ்ரீதேவி
#தமிழ்_திரையுலகம்
#கரிசல்_மண்
#actress_sridevi
#bollywoood
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
25-02-2018

Making political class accountable for the growth in their personal and family assets

Making political class accountable for the growth in their personal and family assets, the Supreme Court in a significant decision on Friday held that, henceforth, all contesting candidates for election to Parliament and Legislative Assemblies must disclose the source of their income and that of their spouse and dependants. Non-disclosure of such information will amount to corrupt practice under Section 123(2) of the Representation of the People Act, leading to disqualification of the winning candidate, the bench added.
The decision came on a PIL filed by NGO LokPrahari that produced a report prepared by the Association of Democratic Rights (ADR) that showed a five-fold increase in the assets of several current MPs and MLAs by comparing the asset information of the politicians and their spouse and dependants with the nomination forms filed by them in the previous elections.

A Bench of Justices J Chelameswar and S Abdul Nazeer observed that "undue accretion of assets" of elected representatives and their associates was a matter that should "alarm the citizens and voters of any truly democratic society" as the electors have a fundamental right to know the relevant information about the candidates contesting polls.
The Court directed that Rule 4A of the Rules (Conduct of Election Rules, 1961) and Form 26 appended to the Rules to be suitably amended requiring candidates and their associates (spouse and dependents) to declare their sources of income. The Court also directed the Centre to put in place a mechanism to periodically collect data of the elected representatives, their spouses and dependents in order to examine whether there was any "disproportionate increase" in their assets and recommend appropriate action in such cases.
The Court held, "Purity of electoral process is fundamental to the survival of a healthy democracy…If left unattended it would inevitably lead to the destruction of democracy and pave the way for the rule of mafia. Democracies with higher levels of energy have already taken note of the problem and addressed it. Unfortunately, in our country, neither Parliament, nor the Election Commission of India paid any attention to the problem so far."
Although the petitioner demanded an investigation into how certain elected representatives managed to get their assets multiply by five-fold, the bench declined to hold such "selective scrutiny" that could lead to "political witch-hunting".
The top court also said there was a need to make appropriate provision declaring that undue accretion of assets was a ground for disqualifying a legislator even without prosecuting him for offences under the Prevention of Corruption Act but left it to the Centre to make such a stipulation. 

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-02-2018

Saturday, February 24, 2018



தமிழக நீர்நிலைகளை குறித்தான வழக்கு.

இந்த வழக்குக்காக தமிழக அரசுக்கு நான் எழுதிய விரிவான கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
தமிழகத்தில் 1947ல் நாடு விடுதலை பெற்றபோது 60,000 ஏரி,  குளங்கள்,  நீர் நிலைகள் இருந்தன. சுயநலப் போக்கோடு இந்த குளங்களை சமூக விரோதிகள் கபளீகரம் செய்துவிட்டனர். இதில் பாதியளவு எண்ணிக்கையான நீர்நிலைகளே தற்போது உள்ளது. தமிழக அரசு பொதுப் பணித் துறை ஒப்புக்கு பராமரித்து வரும் ஏரிகள் 39,202 என கணக்கில் உள்ளது. 18,789 நீர்நிலைகள் நூறு ஏக்கர் பரப்பில் அப்போது அமைந்திருந்தது. உள்ளாட்சி அமைப்புகள் 20,413 ஏரிகள்குளங்கள்நீர் நிலைகளை தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கிறது.


 ஆனால்இவையாவும் கணக்கில் மட்டுமே உள்ளதே அன்றி ஆயக்காட்டுதாரர்களுக்கு பயன்படுத்தும் அளவில் பராமரிப்பு ல்லாமல் உள்ளது. குடிமராமரத்துப் பணிகளும்கடந்த 40 ஆண்டுகளில் சரியாக நடத்தப்படவில்லை. இயற்கை வழங்கிய நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். பண்டைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இந்த நீர்நிலைப் பாதுகாப்பினை தங்களுடைய ஆட்சியின் முக்கியக் கடமை என்று எண்ணினார்கள். இந்த நிலையில் தான் கரிகாலன் கல்லணையைக் கட்டினான். வீராணம் ஏரி என்பதெல்லாம் இன்றைக்கு சான்றுகளாக உள்ளன. அறிவியல் ரீதியாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள மதுரையில் வண்டியூர் தெப்பகுளம், மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளம் என்பதெல்லாம் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன.
அதன்பின்னர், நாயக்கர் மக்கள் காலத்திலும் இந்த பணிகள் தொடர்ந்தன. கிராமப்புறங்களில் மன்னராட்சி காலத்தில், விவாசாய ஆயக்காட்டுத்தாரர்கள் நீர்நிலைகளை பாதுகாக்கக் கூடிய அளவில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டார்கள். கூட்டுறவு முறையில் ஒற்றுமையாக கிராமப்புறங்களில் நீர் நிலைகளின் கரைகளை உயர்த்தவும், மதகுகளை அவ்வப்போது சரி செய்யவும், குளங்களை தூர்வார வேண்டும் என்று அடிப்படைப் பணிகளை திட்டமிட்டு செய்தனர். இந்த பழமையான பணிகளை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், அதிக உணவு தானிய உற்பத்தி என்ற கொள்கையின் அடிப்படையில், இந்த திட்டத்தை அப்போதே விரிவுப்படுத்தப்பட்டது. மேலும் 1846இல் குடிமராமத்து பணிகளை எழுத்துப் பூர்வமான நடவடிக்கையை கொண்டு வந்தது.  1930 ல் மெட்ராஸ் வாட்டர் போர்டு ஆக்ட் என்ற சட்டத்தினைக் கொண்டு வந்து இந்த பணிகளை மேலும் வேகப்படுத்தினர். இதை முதன்முதலாக தஞ்சை மாவட்டத்தில் பிரிட்டிஷ் அரசு 1905 ல் குடிமராமத்தை விழாக்கோலத்தில் துவக்கி வைத்தது. அப்போது இதை நீர்க்கட்டு என்று அழைப்பது உண்டு. பிற்காலத்தில் அன்றைக்கு இருந்த சென்னை மாகாணத்தின் 12 மாவட்டங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் வளர்ச்சிக்காக 1940இல் பிரிட்டிஷ் அரசின் தலைமைப் பொறியாளர், நீர்ப்பாசனம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு 1940 ல் நிர்வாக ரீதியாக மாற்றியதெல்லாம் வரலாற்றுச் செய்திகள். இப்படியான நீர் நிலைகள் பல காணாமல் போய்விட்டன. இருப்பவைகள் பாராமரிப்பில்லாமல் போய்விட்டன. ஆங்காங்கே அள்ளி நீர்நிலைகளை நாசப்படுத்திவிட்டனர். இது தான் இன்றைய நிலை. இந்த அவலத்தை போக்கி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்பது அவசர, அவசியமாகும். இது குறித்து தமிழக அரசுக்கு பல தரவுகளோடு நான் எழுதிய கடிதம் வருமாறு.


#ஏரி
#குளங்கள்
#வாய்க்கால்
#ஆறுகள்
#நீர்நிலைகளை_பற்றி_வழக்கு
#நதிகள்
#Public_Interest_Litigation_on_water_storages_problem
#Water_Storages
#Lakes
#Tanks
#Ponds
#Canals
#Rivers
#Writ_Petition_on_water_storage
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24-02-2018


                                                                                                                        24.02.2018                                                                      By RPAD
To
1. The Principal Secretary to Government
     Revenue Department
     Government of Tamil Nadu,
     Secretariat, Fort St. George,
     Chennai  600 009.
2.  The Principal Secretary to Government
      Land Administration Department
      Government of Tamil Nadu,
      Secretariat, Fort St. George,
      Chennai  600 009.
3.  The Principal Secretary to Government
      Public Works Department
      Government of Tamil Nadu,
      Secretariat, Fort St. George,
      Chennai  600 009.
4.  The Principal Secretary to Government
     Agriculture  Department
     Government of Tamil Nadu,
     Secretariat, Fort St. George,
     Chennai 600 009.

Sirs,
I have been a political, social activist and I am an Advocate too. Hence I hereby submit my representation to your good office regarding to protect water recourses and water bodies for the future generation of our own people and for the present farmers/agriculturalists to raise crops for filling our hungry stomachs.
I would like to submit that I filed WP (Civil) No. 668 of 2002 before the Hon’ble Supreme Court of India seeking nationalization of rivers and praying for linking of Ganges – Cauvery – Vaigai – Tamirabarani and Neyyaru (Kanyakumari District). On 27.02.2012 the Hon'ble Supreme Court passed order in my favor with direction to Centre and State Governments in this regard.

I would invite your kind attention about some important articles published in Dailies about Water, irrigation, protect water bodies, etc. these hereunder as sample:
The Hindu dated 05/11/2016 contains the story of seven water bodies around Chennai. According to the report; 
(a)     80% of the Villivakkam Lake which had 214 acres in 1972 is reduced to an extent of 20 acres only.
(b)    Many commercial establishments and residential apartments have come into existence in the 600 acre Korattur Lake and the Lake is slowly disappearing.
(c)    The Narayanapuram Lake has now been split into two. A 200 Feet road, Badminton Court and a Temple have come into existence in the water body and the water body is disappearing.
(d)    The story of Pallavaram periyaeri is also disturbing. 70% of the area has gone for residential development and 20% area is used as garbage dump by the Municipality.
(e)    The Chittlapakkam lake has been reduced to 40 acres from 80 acres.
(f)     Apropos Pallikarnai Marsh, 6000 Hectares of Marsh Land is reduced to 600 hectares.
(g)     The same is the story of Tirupananthal Lake.         
The Tamil Hindu dated 22/11/2016 contains the present pitiable condition of Vandalur Tank. According to the report the total extent of the tank was 102 acres. The tank is encroached and has become a dumping ground for waste. The canals which bring water to the tank have been completely blocked. This is the order of the day.
The Hindu dated 09/04/2017 under the caption Kudimaramathu: A much needed revival or water down revamp highlights massive corruption by politicians and officials siphoning of 50% of the monies allotted for renovation of water bodies.


Again on the same date of article at the Tamil Daily Dinamalar dated 09/04/2017 highlights the apathy on the part of the Government in preserving even big dams such as Mettur Dam. So far any steps have not been taken to remove the silt resulting in reduction of capacity of major dams in Tamil Nadu. The ancient method and process of  maintaining and protecting water bodies in rural areas called Kudimaramarthu, which revived by British era in then integrated Thanjavur District  where they  formed ayakattuthaars among agricultural folks  those who draw water from that particular water body like Tank or Lake for irrigation by way of forming mutual co-operative methods for betterment irrigation which lead the better livelihood to the farmers. The said farmers also used to get fertile soil from those water bodies while de-silting the same for maintaining good condition.
I would draw your attention on  another article in The Tamil Hindu dated 11/12/2016 contains shocking details of waste of water for want of proper steps to store the rain water. It is stated that between 1990 and 2015 1165.71 TMC water has been lost on account of Government apathy in not maintaining the existing water storage facilities and in not taking steps to augment water resources.
Further I would invite your good Office to look into the  Tamil Nadu Act 49 of 1974 was passed amending Tamil Nadu (Estates Abolition and Conversion into Ryotwari) Act 1948. The patta granted by the Government in respect of Private Tanks stood automatically cancelled and they became public tanks. However the Government have not taken any worthwhile follow up measure to identify the private tanks for which patta were given and to retrieve the same. When the private tanks have become public tanks it is the duty of the State Government to restore the same for public use. The Government have all the data in their possession. But no steps have been taken to give effect to the provisions of the Act.
However, the Government of Tamil Nadu under your Good Officer have not considered the serious exploitation of natural resources of Water but Government itself has constructed bus stands and other institutions in water bodies.
Several educational institutions and hospitals have encroached water bodies with the active connivance and co-operation of Government Officials.
Further I draw your attention on the yesteryear water body status of our State that Tamil Nadu had more than 60,000 water bodies at the time of independence. It is now reduced to one half. Presently a reliable statistics says nearly 39,202 lakes are controlled by PWD department, controlled by The Government of Tamil Nadu. But this figure is uncertain. Nearly 18,789 water storage bodies extend about hundred acres per tank. It is approximately 20,413 water storages are controlled by local bodies. In Cauvery Delta 12,000 water storages and 36 sub canals are running as per Government records.
There is no proper maintenance and water management policy. The history reveals that the Chera, Chola and Pandiya Kings carefully planned canals and water storage facilities. Kallanai (Grand Anicut) is a telling example. It is the 4th oldest water diversion, water regulator structure in the world in use built by King Karikalan of the Chola Dynasty in the 2nd century AD. Veeranam lake built between 1907 and 1955 AD by Chola Kings is the main water source for the Chennai city. The temple tanks like Vandiyur Mariamman Theppakulam, Madurai and other Temple Tanks reveal the foresight of our fore- fathers to preserve the ground water facility.
I further draw your consideration that I submitted my earlier representation dated 23.08.2016 to your Good Office in this regard to which your good office responded with assurance of taking appropriate steps to protect water bodies in our State, however there was no result yielded except your assurance and it is yet to be met  into materialize. However, the present situation of water resources and issues regarding water bodies, I again submit this representation.
Under these pathetic situation in and around our State of Tamil Nadu regarding Water, Water Resources, conditions of Water Bodies which causes apathy to every Farmers and agriculturists, I request all of YOUR GOOD OFFICES to implement the following measures to protect Water and People of Tamil Nadu:
a)      To visit the old records, identify the water bodies lost and to retrieve the same.
b)      The Government have to identify the private tanks which were given patta retrieve the same and convert it as public tanks available for public.
c)      A proper mechanism should be put in every District for preservation of water bodies, de-silting and maintenance, every once in five years.
d)      Tank Bunds and Sluices should be properly maintained and shutters should be periodically monitored by experts.
e)       A mechanism should be evolved to allow the agriculturists alone to use the sediments which can be used a high quality manure.
f)       The local bodies should be empowered to regulate fishery rights and the villagers should not be denied their right to fish in local waters.
g)      There should be committees at Village, Taluk and District levels and there should be ombudsman in every District to ensure that erring public servants are under proper control.
I earnestly expect your Good Office to work out to protect water bodies of our State and also establish suitable mechanism to control the water bodies in Taluk level for our people of Tamil Nadu and do the needful.

with best regards,
Yours Sincerely,
Sd. 
(K. S. RADHAKRISHNAN)

Thursday, February 22, 2018

காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பின் இனி என்ன செய்யவேண்டும் ...

காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பின் இனி என்ன செய்யவேண்டும்என்பதை குறித்து தி இந்து – தமிழ் நாளேடு என்னுடைய கருத்துகளை இன்று பேட்டி வடிவில் வெளியிட்டுள்ளது. அது வருமாறு.

காவிரிப் பிரச்சனை – இனி என்ன செய்ய வேண்டும்.
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
நீண்ட காலம் எதிர்பார்ப்போடு காத்திருந்த காவிரி பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிவிட்டது. ஐம்பதாண்டு தவிப்பில் தமிழகம் 264 டி.எம்.சி., தண்ணீரை கோரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவில் 205 டி.எம்.சி., தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டது. நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் 192 ஆக குறைத்தது. உச்ச நீதிமன்றம் இறுதியாக 177.25 டி.எம்.சி., ஆக குறைத்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையான நிலை தான். 16.75 டி.எம்.சியை குறைத்த காரணங்கள் சரியானவையாக தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த இறுதித் தீர்ப்பு தமிழகத்தை பொறுத்தவரை எப்படியெனில்; நன்றாக உபசரித்து, தலை வாழை இலை போட்டு சோற்றை பரிமாறி, அதற்கான கூட்டுப் பொரியல், சாம்பார், ரசம், பாயாசம், தயிர் என கொடுக்காமல் வெறும் சோற்றை உண்ணுங்கள் என்ற கதை தான்....
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையமும் அமைக்கலாம் என்று உத்தரவில் இருந்தாலும் கூட கர்நாடகம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தன் எதிர்ப்புக் குரலை காட்டியுள்ளது. அம்மாநில முதல்வர் சித்தராமையா தண்ணீரைக் குறைத்துள்ளதை குறித்து, கர்நாடகத்தை காவிரித் தாய் காப்பாற்றினாள் என்று வரவேற்றுள்ளார்.  இப்படி மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்படியென்றால், எப்படியான முரண்பட்ட நிலையில் கர்நாடகம் காவிரி பிரச்சனையில் தொடர்ந்து நடந்து கொள்கிறது என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு. இப்படி உச்சநீதிமன்றம் நடுவர்மன்ற தீர்ப்புகளை மதிக்காத அரசாகத்தான் கர்நாடகம் இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியானாலும், பாஜக ஆட்சியானாலும் இது தான் கர்நாடக அரசின் நிலைப்பாடு. நியாயத்தை ஒரு போதும் மதித்ததே இல்லை கர்நாடகம். 
பெங்களூரு நகரம் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது என்றும், அதற்காக கூடுதலாக தண்ணீர் தருகிறோம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வாதத்தை தெரிவித்தாலும், ஏற்கனவே பெங்களூரு மாநகரம் நாளென்றுக்கு 140 கோடி லிட்டர் காவிரி நீரைப் பெற்று அதில் 52% வீணாக்குகிறது என்று சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகமே கூறுகின்றது. பெங்களூருவில் பிரம்மாண்டமான பூங்காக்களிலும், மால்களிலும், மைதானங்களிலும் ஆடம்பரத்திற்காக குடிநீர் வீணாக்கப்படுகிறது. 
 

இனி என்ன தமிழகம் செய்ய வேண்டியது?
1. நதிகள் தேசிய சொத்தாகும். இயற்கையின் அருட்கொடை. எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. இது குறித்து 1983இல் நான் தாக்கல் செய்த நதிகளை தேசியமயமாக்கி, கங்கை முதல் கிருஷ்ணா - காவிரி - வைகை - தாமிரபரணி - குமரியின் நெய்யாறு வரை இணைத்து கங்கை குமரியைத் தொட வேண்டும் என்ற என்னுடைய வழக்கில் உச்ச நீதிமன்றம் 2012 இல் அளித்த தீர்ப்பில் அப்போதே இதை குறிப்பிட்டுள்ளது.
2. தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் இருக்கிறது என்பதற்கு 1972ஆம் ஆண்டு UNDP என்ற ஐ.நா. நிறுவனம் கொடுத்த கணக்கையும், அதன் பின்னர் 1980இல் இந்திய அரசு நிறுவனம் கொடுத்த கணக்கையும் சான்றாகக் காட்டிய உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீர் பற்றி கணக்கு இல்லை என்று கைவிரிக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானது. தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவு 20 டி.எம்.சி ஆக கணக்கில் வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு வரவேண்டிய 14.75 டி.எம்.சி நீரை உச்ச நீதிமன்றம் குறைத்துவிட்டது. கர்நாடகத்தில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதையும், அங்குள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதையும், அவற்றை குடிநீராக பயன்படுத்த ஏற்புடையது என்பதை உச்சநீதிமன்றம் ஏன் பரிசீலிக்கவில்லை? 20 டி.எம்சி நிலத்தடி நீர் என உச்சநீதிமன்றம் எப்படி கணக்கில் கொண்டது என்றும், தமிழக அரசின் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில் இந்த பிரச்சனையை குறித்து சரியாக எடுத்துவைத்தார்களா? என்பது குறித்து சந்தேகமாக உள்ளது. மொத்தம் 802 கி.மீ., தூரம் உள்ள காவிரி நதிநீர் படுகையில் தண்ணீரின் அளவு 740 டி.எம்.சி என்று கணக்கிட்டு, நடுவர் மன்றத்திடம் தமிழகத்தின் சார்பில் 562 டி.எம்சி., தண்ணீரும், கர்நாடகத்தின் சார்பில் 465 டி.எம்.சி., தண்ணீரும் கேட்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட வழக்கு என்பது, காவிரியில் ஓடி வரும் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான (Cauvery Water Dispute) சிக்கல்தானே தவிர, காவிரிப்படுகை நிலத்தடி நீரைப்  (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான சிக்கல் அல்ல!
தமிழகத்திலுள்ள 384 வட்டங்களில் 142 வட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 33 வட்டங்களில் மிகவும் குறைவு. 54 வட்டங்களில் பற்றாக்குறையில் உள்ளது. தஞ்சை டெல்டா பகுதிகளில் கூட நிலத்தடி நீர் தரை மட்டத்திலிருந்து 21.5 மீட்டர் கீழே சென்றுவிட்டது. திருவாரூர் 9.2 மீட்டர், பூம்புகார் அருகே மிகவும் குறைந்துவிட்டது. பல ஆண்டுகளாக பருவமழை பெய்தபோதும் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் உப்பு நீராகவும் மாறிவிட்டன. இந்த சூழலில் தமிழகத்துக்கு வரவேண்டிய நீர் அளவை நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்துள்ளது. தமிழகத்தின் நிலத்தடி நீருக்கும், காவிரியின் கடைமடைப் பகுதியான தமிழகத்திற்கும் நீர் வருவதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தமிழகத்தைப் போல கர்நாடகம், கேரளம், புதுவை பகுதிகளின் நிலத்தடி நீரையும் கணக்கில் எடுக்காமல் தமிழகத்தை மட்டும் கணக்கில் எடுப்பது எவ்விதத்தில் நியாயம். அதுவும் காவிரி டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடல் நீரும் நிலத்தடி நீரில் சேர்வதால் இந்த கணக்கு சரியான வாதமாகவும், காரணமாகவும் இருக்குமா? என்பது நமது கேள்வி. 
ஆனால், நடுவர் மன்றம் ஒத்துக் கொண்டவாறு கேரளத்திற்கு 30 டி.எம்சியும், புதுவைக்கு 7 டி.எம்.சியும் வழங்குவதில் உச்சநீதிமன்றம் குறைக்கவில்லை. நதிநீர் பங்கீடு குறித்து சர்வதேச அளவில் முக்கியமாக பின்பற்றப்படும் 1966இல் உருவாக்கப்பட்ட ஹெலன்ஸ்கி கோட்பாடை பின்பற்றுகின்றோம் என்று உச்சநீதிமன்றமும், நடுவர் மன்றமும் தங்களுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. அப்படியென்றால், கீழ்ப் பாசனப் பகுதிகள் தான் பயன் பெற்றிருக்க வேண்டும். ஹர்மன் கொள்கை, கேம்பியோன் விதிமுறைகள், பெர்லின் விதி ஆகியவை நீர் பங்கீடு குறித்த பிரச்சனைகளில் கடைபிடிக்கும் வழிகாட்டு முறைகளாகும். ஆனால் காவிரிப் பிரச்சனையில் ஹெலன்ஸ்கி வழிகாட்டு முறையே முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டது. அப்படியெனில், தமிழகத்திற்கு தான் அதிகமான நீர் அளவு கிடைத்திருக்க வேண்டும். அப்படியெனில், தமிழகத்திற்கு தான் அதிகமான நீர் அளவு கிடைத்திருக்க வேண்டும். மேலும் ஹெலன்ஸ்கி உடன்பாட்டின்படி, ஓடிவரும் ஆற்று நீரில் மரபுரிமை அடிப்படையிலான நீர் உரிமை, நாடுகளின் எல்லை கடந்து இருக்கிறது. அதன் பெயர் தண்ணீர் மரபுரிமை (Riparian Right). இந்த உரிமையை இந்த நான்கு மாநிலங்களிலிருந்தும் பறிக்கின்ற வகையில், காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை – “தேசிய சொத்து” என்கிறது. இதன் பொருள், காவிரி – இந்திய அரசின் சொத்து என்பதாகும்! அதாவது, மாநில அதிகாரப்பட்டியில் உள்ள காவிரியை – இந்திய அரசு அதிகாரப்பட்டியலில் உச்ச நீதிமன்றம் சேர்ப்பதாகும். இப்படியான பிரச்சனைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழக அரசு தாக்கல் செய்யலாம். ஏனெனில் இப்போது இந்த பிரச்சனையை கவனிக்காமல் விட்டுவிட்டால் இனி 15 ஆண்டுகளுக்கு நீர் அளவை குறித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியாது. இதில் இன்னொரு சிக்கலும் இருக்கின்றது. என்னவெனில், சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டால் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்காமல் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு நிலுவையில் உள்ளது என்று காரணம் சொல்லி தட்டிக் கழிக்கும். கர்நாடகத்தின் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசே இம்மாதிரியான காலந்தாழ்த்தும் நடவடிக்கையும் எடுக்கலாம் என்ற அச்சமும் நமக்கு ஏற்படுகின்றது.
3. சென்னை மாகாணமும், மைசூர் அரசும் 1892ஆம் ஆண்டு கையொப்பமிட்ட ஒப்பந்தம், அதனடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கிரிஃபின் என்ற ஆங்கிலேயரை நடுவராக நியமித்தது. 1910இல் கண்ணம்பாடியில் மைசூர் அரசு 41.5 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணையை கட்டும் போது சென்னை மாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு அரசும் 11 டி.எம்.சி.,க்கு ஒத்துக் கொண்டு, அதையும் மீறி 41.5 டி.எம்.சி.,க்கே அணையை கட்ட ஆரம்பித்தது. இப்படியான சிக்கல் இருக்கும்போது அதை தீர்க்க 1924இல் இரண்டாவது ஒப்பந்தமும், மெட்ராஸ் மாகாணமும், மைசூர் சமஸ்தானமும் கையெழுத்திட்டது. அந்த கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை குறித்து 1974இல் மேலும் அமர்ந்து பேச வேண்டுமென்ற நிலைப்பாடு தான் இருந்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் சில பிரச்சனைகளை குறித்து துணை ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. 1929 ஒப்பந்தத்தின் படி கிருஷ்ணராஜசாகர் அணையும், சென்னை மாகாண மேட்டூர் அணை திட்டத்தையும் நிறைவேற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது. நாடு விடுதலைக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் சில பகுதிகளான கொள்ளேகால், கோலார், குடகு பகுதிகள் கர்நாடக மாநிலத்திற்கு சென்றுவிட்டன. இந்த இரண்டு ஒப்பந்தங்களுமே காலாவதி ஆகிவிட்டன என்று தொடர்ந்து கர்நாடகம் சொல்லி வந்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல் 1892 மற்றும் 1924, துணை ஒப்பந்தங்களான 1929 மற்றும் 1933 ஆகிய ஒப்பந்தங்களை செல்லும் என்று தீர்ப்பளித்துவிட்டது. 
இதனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தமிழகத்தின் உரிமைகளை சீராய்வு மனுவின் மூலமாக என்னென்ன உரிமைகளை மீட்க முடியுமோ, அதை மீட்க தமிழக அரசு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகவில்லை என்பது தமிழகத்துக்கு கிடைத்த ஒரு பாதுகாப்பாகும்.
4. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, சாரங்கி, கபினி ஆகிய நான்கு அணைகளின் கட்டுப்பாடும், அதனுடைய நிர்வாகத்தை மேலாண்மை வாரியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். அணைகளின் அனைத்து திறவுகோல்கள் கர்நாடகத்திடம் இருந்து மேலாண்மை வாரியத்தின் கைகளுக்கு வந்துவிடும். இதே போல தமிழகத்தின் மேட்டூர், பவானிசாகர், அமராவதி ஆகிய மூன்று அணைகளும், கேரளத்தின் பாணாகர சாகர் அணையும் மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். தீர்ப்பிலிருந்து ஆறு வாரத்திற்குள் இந்தப் பணி முடிவாக வேண்டும். கர்நாடகம் இதற்கு ஒத்துக் கொள்ளாமல் எப்போதும் போல வம்பு செய்யும்போது இதை உச்சநீதிமன்ற கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும். 
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று மேலாண்மை  வாரியத்தை முதலில் அமைப்போம் என்று உறுதியளித்த பின் அந்த நிலையிலிருந்து பின்வாங்கியது. மேலாண்மை வாரியம் அமைப்பதை குறித்து நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமென்று மாற்றி உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை வைத்தது. இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செய்த வஞ்சக வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல! மத்திய அரசு மாநிலங்களுக்கிடையே நீர்ப் பங்கீடு சட்டப்பிரிவு 6(ஏ) கீழ் செயல்திட்டம் என்ற ஸ்கீம் (Scheme) அமைப்பு முறையின் கீழ் தான் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் உருவாக்க முடியும் என்று வாதத்தையும் வைத்தது. மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப் பிரிவு 6(ஏ) தண்ணீர்த் தீர்ப்பாயம், தீர்ப்பளித்துவிட்டால், அதை செயல்படுத்த அதற்குரிய தனிப்பொறியமைவை (SCHEME) நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என்பதில் ஆங்கிலத்தில் “May” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல், “அமைக்கலாம்” என்ற பொருள் தருவதால், அதை மாற்றி “அமைக்க வேண்டும்” எனப் பொருள் தரும் ‘Shall’ போட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியபோது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் (Sollicitor General) இரஞ்சித்குமார், “அதைக் கட்டாயமாக்கி மாற்ற வேண்டாம், “மே” அப்படியே இருக்கட்டும், நடுவண் அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். இது தீர்ப்புரையில் வந்துள்ளது.
5. காவிரி நீர் விடுவதில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலுவில் அளவெடுப்பதை விட, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் இடத்திலிருந்தே அளவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் சீராய்வு மனுவிலும் மேலாண்மை வாரியத்திலும் வலியுறுத்த வேண்டும். ஏனெனில், பிலிகுண்டுலுவில் இருந்து மேலே 70 கி.மீ., தொலைவு வரையில் காவிரியின் மேற்கு பகுதி தமிழகத்தின் எல்லையாகும். பிலிகுண்டுலுவில் இருந்து இயற்கையாக உற்பத்தியாகின்ற தண்ணீர் சிற்றாறுகளின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி நீரை பிலிகுண்டுலு முன்பே, கர்நாடக அணையிலிருந்தே கணக்கிட்டு அதன் அளவை நிர்ணயிக்க வேண்டும். 
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, மாதேஸ்வரன் மலைப் பகுதியில் வரும் தண்ணீரையும் காவிரித் தண்ணீர் என்று கர்நாடகம் கணக்கு காட்டியது உண்டு. எனவே பிலிகுண்டுலுவைத் தவிர்த்து கர்நாடக அணைகளை கணக்கிட்டால் 15 முதல் 20 டி.எம்.சி., தண்ணீர் நமக்கு கிடைக்கும். இந்த நியாயத்தையும் கர்நாடகம் மறுக்கின்றது. 
6. கர்நாடகா அணைகளை கட்டும் போது தமிழகத்தின் அனுமதியை பெறாமலேயே கண்ணம்பாடி திட்டத்திலிருந்து, கபினி, ஹேமாவதி, ஹேரங்கி தற்போது மேகதாது, ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே 4 மிகப்பெரிய அணைகளை கட்ட முடிவு செய்தது. அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மேகதாது அணையின் உயரம் 441.8 மீட்டர் [1546 அடி உயரம்]. அதில் 75 டி.எம்.சி நீரை தேக்க முடியும். இது நம் மேட்டூர் அணையின் கொள்ளளவை விட மிக அதிகம். ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள 3 அணைகள் மூலம் மேலும் 45 டி.எம்.சி நீர் தேக்கப்படும். இதோடு தடுப்பணைகளையும் காவிரியின் குறுக்கே கட்ட திட்டங்களை தீட்டியது. இந்த தீர்ப்பின் விளைவாக கர்நாடகம் நிறைவேற்றவோ, மத்திய அரசு அனுமதி கொடுக்கவோ முடியாது. இந்த அணைகளை கட்ட ஒரு காலும் தமிழகம் அனுமதிக்க கூடாது. 
7. இந்த தீர்ப்பினால் தமிழகத்தின் இயற்கை வளங்களை கபளீகரம் செய்யும் சமூக விரோதிகள் மணல் அள்ளுவதை தடுக்கப்படும். காவிரி ஆற்றில் கரூர், டெல்டா பகுதிகளில் மணல் அள்ளி குவிப்பதை இனிமேல் செய்ய முடியாது. ஏனெனில், காவிரி நதி மேலாண்மை வாரியத்தின் கைகளுக்கு சென்றுவிட்டால் தமிழக அரசு இந்த மணல் அள்ளும் உரிமையை தவறாக பயன்படுத்த முடியாது. 
8. காவிரியில் தொழிற்சாலை கழிவுகளும், கழிவு நீர் கலப்பதும் தடுக்கப்படும். 
9. மேட்டூர் அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல், காவிரி பாசனக் கால்வாய்கள், அதையொட்டிய நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும். காவிரியின் ஆக்கிரமிப்பு பகுதிகளெல்லாம் மேலாண்மை வாரியத்தினால் கையகப்படுத்த வேண்டும்.
10. ஏற்கனவே திட்டமிட்டவாறு, தமிழக அரசு காவிரியில் 40 தடுப்பணைகள் வரை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
11. நடுவர் மன்றம் மாதவாரியாக பட்டியலிட்டு தமிழகத்துக்கு வரவேண்டிய நீரை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி 14.5 டி.எம்.சி., தண்ணீர் குறைத்த நிலையில் எப்படி சரியாக வரும் என்பதையும் சீராய்வு மனு மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறையும். 14.75 டி.எம்.சி நீர் இழப்பால் 88,500 ஏக்கர் நெற்பயிர் விளைச்சல் இல்லாமல் போய்விடும். காவிரி வெண்ணாற்றிலிருந்து பிரியும் 36 கிளை ஆறுகள் ஏ பிரிவு வாய்க்கால் மற்றும் சாதாரண வாய்க்கால்கள் என்பதெல்லாம் காவிரியின் உள்ளடக்கம். மேலும் காவிரி – குண்டாறு இணைப்பில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போல இராமநாதபுர கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்படும். இம்மாதிரியான ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் நீர்வரத்து இல்லாமல் பாதிக்கும். அதனால் முறையான சாகுபடி பணிகள் நடக்காது. எனவே டெல்டா மாவட்டங்களுக்கு மாற்று நீராதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். காவிரி படுகையில் தஞ்சை மாவட்டத்தில் முதன்முதலாக ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஆயக்காட்டு, குடிமராமத்து செயல்பாட்டினை மேம்படுத்த தமிழக அரசு நிபுணர்களை கொண்டு அதற்கான கொள்கைகளை சீரிய அளவில் உருவாக்க வேண்டும். காவிரி கர்நாடகத்தின் 13ஆறுகளில் 2000 டி.எம்.சி., தண்ணீர் அரபிக் கடலுக்கு செல்கிறது. இந்த உபரி நீரை திருப்பினால் கர்நாடக அணைகளுக்கே அதிக தண்ணீர் கிடைக்கும். உதாரணத்திற்கு ஹேமாவதி அணைக்கே 200 டி.எம்.சி., தண்ணீர் திருப்பலாம். காவிரிப் பிரச்சனை போன்று தமிழகத்தை கர்நாடகம் எவ்வாறு வஞ்கிக்கின்றதோ, அம்மாதிரியே மகதாயி அணைப் பிரச்சனையில் கோவா மாநிலம் கர்நாடகத்திற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருப்பதை பார்த்து புலம்பும் கர்நாடகம், தமிழகத்தின் உரிமைகளை மட்டும் நியாயம் வழங்க மறுக்கின்றது. 
12. எப்படி மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரை நியமனம் செய்யும் போது முதல்வர், பேரவைத் தலைவர், எதிர்கட்சித் தலைவர் என கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும் என்று சட்டங்கள் உள்ளதோ, அம்மாதிரி தமிழகத்தின் நீராதாரங்கள், நதிநீர் பிரச்சனை குறித்து முடிவு செய்யும் போது முதல்வர், எதிர்கட்சித் தலைவர், நதிநீர் பிரச்சனைகளை அறிந்த வல்லுநர்களை கொண்டு சட்டத்திற்கு உட்பட்டு குழு அமைத்து தமிழக முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
13. தமிழ்நாடு சட்டமன்றத்தை அவசரமாக கூட்டி காவிரி மேலாண்மை வாரியமும், இந்த தீர்ப்பின் கூறுகளை நடைமுறைப்படுத்த வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும்.
14. இறுதியாக தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள் அனைவரும் கூட்டுறவு கூட்டாட்சி எனக் கூறும் பிரதமர் மோடியை சந்தித்து ஒரே குரலாக காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்தில் அமைக்க அழுத்தம் கொடுத்து தீர்ப்பின் உத்தரவுகளை நடைமுறைக்கு கொண்டு வர வலியுறுத்த வேண்டும். 
தமிழக வரலாறு, நாகரிகம், அன்றாட வாழ்க்கை முறையில் இணைந்த காவிரி உரிமையை நிலைநாட்ட சர்வபரி தியாகங்களோடு தொலைநோக்கு சாத்தியக் கூறுகளை மனதில் கொண்டு அணுக வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது. காவிரிப் பிரச்சனையில் இதுவொரு முக்கியமான காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தை சமயோஜிதமாக அணுகி சாத்தியப்பட்ட உரிமைகளையாவது நிலைநாட்ட அரசியல் மனமாச்சரியங்களை கடந்து கடமைகளையாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.
தற்போது, உலக மத்திய கிழக்கு பகுதியில் யூப்ரேடிஸ் – டைகிரீஸ் நதிகள் சிக்கல், துருக்கி – சிரியாவும் – ஈராக்கும் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள நினைக்கின்றன. ஜோர்டான் நதி பிரச்சனையை இஸ்ரேல் – லெபனான் – ஜோர்டான் – பாலஸ்தீனத்தோடு சுமூகமான பேச்சுவார்த்தையில் உள்ளன. ஆப்பிரிக்காவில் நைல் நதி எகிப்து – எத்தியோப்பியா – சூடானோடு பேச்சுவார்தையில் உள்ளது. மத்திய ஆசியாவின் ஏரல் கடல் பிரச்சனையில் கஜகஸ்தான் – உஸ்பெகிஸ்தான் – துர்கெமெனிஸ்தான் – தஜிகிஸ்தான் – கிரிகிஸ்தான் போன்ற நாடுகள் தண்ணீர் பகிர்வுக்கு பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. ஏன் இந்தியா, பாகிஸ்தான், நேபாள், வங்காள தேசம் போன்ற அண்டை நாடுகளோடு நதிநீர் தாவாக்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
இப்படி உலகத்தில் பல நதிநீர் தீரங்களின் பிரச்சனைகளை நாடுகளுக்குள்ளே பேசித் தீர்த்துக் கொள்ளும் நிகழ்வுகளை நீண்ட பட்டியலிடலாம். கடைமடைப் பாசனப் பகுதியான காவிரிக்கு சகல உரிமைகள் இருந்தும், கூட்டுறவு கூட்டாட்சியில் கர்நாடகத்தால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் உரிய நியாயங்கள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்க நிலையில், இனிமேல் என்ன காவிரிப் பிரச்சனையில் செய்ய வேண்டுமோ அதை இதயசுத்தியோடு செய்ய வேண்டியது இன்றைய சூழலில் அவசியமாகிறது. 

செய்தித்தொடர்பாளர், திமுக.,
நூலாசிரியர், 
இணையாசிரியர், கதைசொல்லி,
பொதிகை – பொருநை - கரிசல்
rkkurunji@gmail.com

#காவிரிப்_பிரச்சனை
#உச்சநீதிமன்றத்_தீர்ப்பு
#காவிரி_மேலாண்மை_வாரியம்
#Cauvery_Issue
#Supreme_Court_of_India_Judgement
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-02-2018

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...