நடிகை ஸ்ரீ தேவி மறைந்த போது இரத்தத்தில் மது கலந்திருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. சற்று மனம் கனத்தது. சிறு குழந்தையில் இருந்து பார்த்த ஸ்ரீ தேவிக்கா இப்படி ஒரு அவலமும், துயரமும் என்ற வேதனை. ஸ்ரீ தேவியின் முகத்தில் எப்போதும் இயல்பாக உள்ளார்ந்த கவலைகளும், வெளிப்புறத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதும் தெரியும். துயரமும், இறுக்கமும் அவரின் வாழ்க்கையின் நடைமுறையாக தான் இருந்துள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் தன்னிலையை மறக்க, அக, புற நிலையில் மதுவை நாடி இருக்கலாம். மும்பை வாழ்க்கையில் இது சாதாரண விசயமாகும். ஒரு திரை ஆளுமைக்கு இப்படியான ஒரு துயரமான முடிவா?

No comments:
Post a Comment