Friday, May 31, 2019

#யாழ் நூலக எரிப்பின் 38ஆம் ஆண்டு ...

#யாழ் நூலக எரிப்பின் 38ஆம் ஆண்டு ...
-----------------------
யாழ்.பொது நூலகம் (Library) எரியூட்டப்பட்டு வரலாறுகளை அழித்த நாள். 31-05-1981 நள்ளிரவில் (01.06.1981)
கடந்த 1981 மே 31 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின.
கடந்த 1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். ஹிட்லர் கூட செய்யாத கொடூர உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெருமதிப்புமிக்க நூல்கள் அழிந்தன.
இன்றோடு ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும்.
20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.
இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இது.
இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சிலரும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் மருத்துவமனை வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.
1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.
நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணி தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் அரச சிங்கள காவல்துறையினரின் உதவியோடு திட்டமிட்ட சதியாக இடம்பெற்றது.
இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் அரிய நூல்களுடன்தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. தமிழீழ விடுதலை போராட்டம் வீச்சுப் பெற யாழ் நூலக எரிப்பும் ஒரு காரணமாயிற்று.
1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போன அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண. டேவிட் அடிகள். அந்த நூலக எரியூட்டலினால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு இலக்கியவாதி “சுஜாதா” 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் “ஒரு இலட்சம் புத்தகங்கள்” என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.
அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து “கிருதயுகம்” என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.
யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த “The Jaffna Public Library rises from its ashes” என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார். எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.
இவை போல் பல ஆவண நூல்கள் யாழ் நூலக எரிப்பு குறித்து உருவாயின. இந்த கொடும் வலியை உணர்வில் ஏற்றுக் கொள்ளும் தமிழ் மக்கள் தாம் வாழும் இடமெல்லாம் ஆவணப்படுத்தல்களையும் நூலகங்களையும் கட்டி எழுப்பி அன்று மூண்ட தீயின் எழுச்சியை உலகெங்கும் விதைக்க வேண்டும்.

May 18 and Mullivaikkaal Kanji

May 18, 2019 marked the 10th anniversary of the end of the Sri Lanka civil war.
This year, perhaps due to tragedy of the Easter bombings and also coincidence with the Vesak festival, (a sacred day for Buddhists), there were no large triumphant victory parades or memorials for dead soldiers in Colombo. But there were military memorial events in the North, after the 18th – such as an event to remember fallen soldiers and policemen, organised by the Northern Governor’s office and the Ranaviru Seva (services for War Heroes) Authority, in coordination with the Security Forces Headquarters – Jaffna, on 20th May.
There had been advance plans made for civilian remembrances by Tamils in the North. But in the days leading upto May 18, organizers expressed fear and uncertainties, triggered by the questioning of some organizers by the armed forces, arrests of Jaffna university student leaders, a large number of checkpoints, and emergency regulations. But several memorial events nevertheless went ahead.

May 18 and Mullivaikkaal Kanji
Mullivaikkaal beach memorial on 18 May, 2019

தமிழகமே தமிழகமே! நேசமணியைவிட அவசியமானதாக காவிரி பிரச்சனை தெரியவில்லையா?


தமிழகமே தமிழகமே! நேசமணியைவிட அவசியமானதாக காவிரி பிரச்சனை தெரியவில்லையா?
————————————————
நேசமணி என ஏதோ தேவையில்லாத ஒன்றைப் பற்றி  சமூகவலைத் தளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை, வறட்சி நீடிக்கின்றது. கோடை காலத்தில் குடிநீர் தேவைக்கு என்ன செய்யப் போகின்றோம் என்ற நெட்டீசன்களுக்கு இல்லாத அச்சம் சமூக ஆர்வலர்களுக்கு இருப்பதாக அறிகின்றேன். 
கடந்த 28 மே 2019 அன்று காவேரி மேலாண்மை வாரியம் ஜூன் மாதத்திற்கு 9.19 டி எம் சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமே உத்தரவை வழங்கியுள்ள நிலையில் கடந்த ஜூலை 2018 காலகட்டத்தில் முதல்முறையாக காவேரி மேலாண்மை வாரியம் கூடியது. இரண்டாவது முறையாக டிசம்பரில் கூடியதும் அதற்கு பிறகு தற்போது கூடியுள்ளது .
இந்த ஜூன் 2019ஆம் ஆண்டுக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் மறுத்துள்ளார் மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார். உச்சநீதிமன்ற ஆணையை சட்டப்படி உத்தரவிட்டும் கர்நாடக அரசு மறுப்பது எந்த வகையில் நியாயம்? 
காவிரி மேலாண்மை வாரியம் ஒழுங்காற்று குழு நேரடியாக ஆய்வு செய்து சொல்வதற்கு கூட இல்லாத உரிமையை கர்நாடக நீர்வளத் துறை அமைச்சருக்கு யார் அளித்தது? கர்நாடகம் தேவையற்ற சாக்கு சொல்லி இழுத்தடிப்பு செய்து நொண்டி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது 
தமிழக அரசு நம் உரிமையை கேட்டுப் பெறுவதற்கு தக்க குரல் எழுப்ப வேண்டிய நேரத்தில் அமைதி காக்கக் கூடாது.
கடந்த 2012 முதல் இம்மாதம் மே மாதம் வரை திறந்துவிட வேண்டிய 19.5 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விடவில்லை. தமிழக அரசும் எவ்வித கூச்சநாச்சமின்றி மெத்தனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.
காவேரி மேலாண்மை ஆனையத்தின் உத்தரவின்படி நமக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை அணையின் இருப்பை கூட நேரில் சென்று ஆய்வு செய்து காவேரி ஆணையமும், ஒழுங்காற்று குழுவை முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில் சரிவர இயங்கவில்லை. குறுவை சாகுபடி காவிரி ஆணையம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நமக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை அளிக்க வேண்டும். இதனை காவிரி மேலாண்மை வாரியம் கண்காணிக்க வேண்டும். பெங்களூரில் அமைக்கப்பட்டிருந்த ஒழுங்காற்று குழு இதுவரை செயல்படவில்லை. 
தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்ற இந்த காலகட்டத்தில் நேசமணி. மீ டு என்ற தேவையற்ற பொழுது போக்குகளை தேவையற்ற பொழுதுப்போக்குகளில் காலத்தை விரயம் செய்து ஊடகத்தின் கவனத்தையும் ஈர்த்து வீணடித்துக் கொண்டிருக்கிறோம் . 
பிரச்சனைகளை பிரச்சினையாக கவனியுங்கள் , தேவையில்லாதவற்றை பிரதானமாக கவனித்தால் நம்முடைய உரிமை பறிபோகும்.
தமிழகமே தமிழகமே! நேசமணியை விட அவசியமானதாக காவிரி பிரச்சனை உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? 

#காவிரிமேலாண்மை 
#காவிரி_ஒழுங்காற்றுவாரியம்.
#pray_for_Neasamani 
#kSRadhakrishnanposting 
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
30-05-2019

Image may contain: plant, sky, grass, outdoor and nature

Thursday, May 30, 2019

வறட்சி; யார் காரணம்? கவனித்து சிந்தியுங்கள்*

*வறட்சி;யார் காரணம்? கவனித்து சிந்தியுங்கள்*
-------------------------------------
*** வற்றாத நதியான பவானி வறண்டது. கோவை, திருப்பூருக்கு தண்ணீர் தட்டுப்பாடு.
*** நெல்லை மாவட்டம் காரையாறு அணை வற்றியது. சேறும், சகதியுமாக மீன்களும் செத்து கிடக்கிறது. துர்நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது.
*** நெல்லை மாவட்டத்தின் இராமநதி ஒரு சொட்டு நீர் இல்லாமல் வறண்டுவிட்டது.
*** காவிரி பாயும் 11 மாவட்டங்களில் அனைத்து நீர்நிலைகளும் வறண்டன.
*** வறட்சியால் விளைநிலங்கள் மேய்ச்சல் நிலங்களானது.
*** நெல்லை மாவட்டத்தில் மட்டும் குடிநீர் ஒரு குடம் ஐந்து ரூபாய்க்கும் ஒரு பேரல் 50 ரூபாய்
*** தூத்துக்குடியில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் 
*** தாராபுரத்தில் ஒரு குடம் தண்ணீர் 7 ரூபாய்
*** சென்னைக்கு தண்ணீர் தரும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், மதுராந்தகம்,
போரூர் ஏரிகள் வற்றி மண் பாலங்களாக வெடித்துள்ளது.
*** பொன்னேரியில் உள்ள ஆரணி ஏரி வறண்டுவிட்டது.
*** பெரியபாளையம் முக்கிரம்பாக்கம் ஏரியும் வறண்டுவிட்டது.
*** திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1416 ஏரிகள் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.இப்படி
நீண்ட பட்டியல்......
*** சுகாதாரமற்ற நீரால் நோய் பரவும். நிலத்தடி நீரை பாதுகாக்கவில்லை.
*** அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் கொளுத்துகிறது. 
*** மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மரங்களை வெட்டி வறட்சியை நாமே உருவாக்கினோம்.
*** வற்றாத நதிகளில் மணலை அள்ளி நிலத்தடி நீரை பாழ்படுத்திவிட்டோம்
*** ஓசோன் படலத்தில் நம் பேராசையால் அழித்து வருகிறோம்.

பிறகு எப்படி மழையையும், தண்ணீரையும் பார்க்க முடியும். இப்படித்தான் தமிழகத்தில் நீராதாரம் உள்ளது.
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-05-2019
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: outdoor and nature
Image may contain: beach, ocean, sky, outdoor and nature

செம்பரம்பாக்கம் ஏரி வற்றி விட்டது.

Chembarambakkam lake...
So dry...
செம்பரம்பாக்கம் ஏரி வற்றி விட்டது.
தண்ணீர் தட்டுப்பாடு வரலாம்....
Image may contain: sky, ocean, outdoor and water

G. K. Chesterton

G.K. Chesterton (born 29 May 1874), was an English writer, best known for his fictional priest-detective Father Brown. Chesterton often used popular sayings, proverbs, and allegories in his writing, often turning them inside out. 

G. K. Chesterton
G.K. Chesterton LCCN2014686602.tif

#பாபநாசம்அணை #karaiyardam

———————————————

#திருநெல்வேலி , #தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயப் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக உள்ள பாபநாசம் அணை -#காரையாறு அணை நீர்மட்டம் குறைந்துவிட்டது.
பத்தடிக்கும் குறைவாகவே நீரளவு இருக்கிறது.இது ஒரு பழமையான அணைக்கட்டு.அணை காட்டிய காலத்திலிருந்தே இதை சீர்திருத்தி தூர்வாரி சரியாக பாராமரிக்கவில்லை.
Image may contain: mountain, sky, outdoor and nature
அந்தக் காட்சியை இப்படங்களில் காணலாம்.வெறும் சேறாக இந்த அணை கண்ணில் படுகிறது. தற்போது நீர்மட்டம் குறைந்ததால் அணையிலிருந்த மீன்கள் செத்து துர்வாடைவீசுவதால் இந்தப் பகுதியில் நடமாட முடியவில்லை.இந்த நிலை கடந்த பத்து நாட்களாக நீடிக்கிறது. மாநில அரசும் பாராமுகமாகவே இருக்கிறது.

பாபநாசம் அணை பகுதிகள் நீராதாரம் மட்டுமல்ல அருவிகள் நிறைந்த சுற்றுலாத் தளமுமாகும். திருநெல்வேலி தூத்துக்குடி, குமரி,விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வந்து போகும் மிக அழகிய பகுதியாகும்.தற்போது வீசும் துர்வாடையால் வந்துபோகும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிப்பதைக் காண முடிகிறது. இனியும் மெத்தனம் காட்டாமல் இறந்த மீன்களை அப்புறப்படுத்தி, அந்த கழிவை மக்கள் நடமாட்டமில்லாத உரிய இடத்தில் போடவேண்டும்.

#திருநெல்வேலி
#பாபநாசம்அணை #karaiyardam
KSRPostings
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-05-2019.
Image may contain: sky, beach, outdoor and nature
Image may contain: outdoor and water

#தூத்துக்குடி,#வேம்பார்கருவாடு...

———————————————-

கருவாடு என்பது பலர் அறிந்திருக்க வாய்புண்டு ஆனால் நாம் உண்ணும் அசைவ உணவுகளில் கொழுப்பு சத்து மிக மிக குறைவான உணவு கருவாடு தான் .நெத்திலி, வெள்ளை நெத்திலி,நெய் மீன் கருவாடு, சங்கரா, சீலா,பாற,அவளி,சாலை,வில்லை மீன்,விளா,பளா,பாறை என பல வகை கருவாடுகள் உண்டு. மாசிவகையும் உண்டு. ராமேஸ்வரத்திலும் கருவாடு உற்பத்தி அதிகம்.

வாரத்தில் ஒரு நாளாவது சிக்கன் மட்டன் என கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் நாம் சுவை நிறைந்த உடலுக்கு ஆரோக்கியமாண கருவாட்டை மறந்துவிட்டோம் என்பதே கசப்பான உண்மை.!
நம்முன்னோர்கள் செவ்வாய் வெள்ளி தவிர்த்து பெரும்பான்மையான நாட்களில் பழைய கஞ்சி முதற்கொண்டு சாம்பார் வரை அனைத்துடனும் கருவாடு கூட்டுடன் சேர்த்து சாப்பிடுவதை பார்த்திருப்பிர்கள். தினமும் உண்ணும் அசைவ உணவுகளில் கருவாடு தான் நமது வீட்டை ஆக்கிரமித்திருக்கும்.!
அதுபோல இந்தியாவின் கடலோர பகுதி ஊர்களில் கிடைக்கும் மீன்களில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வகை மீன்கள் தனி சுவையுடன் இருப்பதுண்டு.அந்த வகையில் தூத்துக்குடி கருவாடு என்றால் அதற்கென தனி சிறப்பும் சுவையும் உண்டு என்பது உலகறிந்த விஷயம்.கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உணவு பொருளாகவும் குழந்தை பேறுக்கான மருத்துவ உணவாகவும் கருவாடு தமிழர்களின் மிக முக்கிய உணவுபொருளாகவிளங்குகிறது.
தூத்துக்குடி கருவாடு மற்றும் மீன் வகைகள் உலகின் பல நாடுகளுக்கும் பயணிக்கிறது என்பது தூத்துக்குடி, விளாத்திகுளம் வேம்பாரின் பெருமைமிகு குறிப்புகளில் ஒன்று.நாம் விரும்பி உண்ணும் உணவுகள் பலருக்கு கிடைக்கவில்லை என்பதே தற்போதைய நிதர்சனமான உண்மை.கால ஓட்டத்தில் பணிசுமையில் கிடைத்ததை உண்னும் நிலைக்கு காலம் நம்மை கடத்திவிட்டது.தூத்துக்குடி மற்றும் வேம்பார் கடலில் கிடைக்கும் மீன் வகைகளை சுத்தமான முறையில் கடற்கரை மணலில் வெயிலில் காய வைத்து பக்குவம் இந்த கருவாடு மிகவும் சுவையாக இருக்கும். கார்பரேட் மார்கெட்டிங் பெருகிவிட்ட நிலையில் கருவாட்டு உற்பத்தி குறைந்துவிட்டது.

29-05-2019
Image may contain: food
No photo description available.

Wednesday, May 29, 2019

கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு பற்றி இன்று பேசுபவர்களின் பார்வைக்கு. ......

கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு பற்றி இன்று பேசுபவர்களின் பார்வைக்கு. ...... அதன் மூலம்
————————————————-
நாட்டில் பாயும் நதிகளை தேசியமயமாக்கப்பட்டு கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி, குமரி மாவட்டம் நெய்யாறோடு இணைக்க வேண்டும். அதாவது கங்கை குமரியைத் தொட வேண்டும்; கேரளாவில் உள்ள அச்சன்கோவில் - பம்பை படுகைகளை தமிழகத்தினுடைய சாத்தூர் அருகே வைப்பாறோடு இணைக்க வேண்டும். கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலுக்குச் செல்லும் நீரின் ஒரு பகுதியை தமிழகத்திற்கு திருப்ப வேண்டுமென்று 1983லிருந்து வழக்குகளை தொடுத்தபோது என்னை பரிகாசம் செய்தவர்கள் பலர் உண்டு.

அன்றைக்கு மூத்த வழக்கறிஞராக இருந்த வி.பி.இராமன் கூட இதெல்லாம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது என்று கூறினார். அவர் இன்றைக்கு இல்லை. அவரைப் போலவே மூத்த வழக்கறிஞரும், அரசு வழக்குகளை எல்லாம் நடத்திய என்.ஆர். சந்திரன் இந்த வழக்குகள் எல்லாம் சாத்தியமில்லை என்று கிண்டலடித்து அப்போது லா வீக்லி (*Law Weekly*) என்று சட்டத் தீர்ப்புகளை வெளியிட்டுவரும் வார ஏட்டிலும் விரிவாக எழுதியிருந்தார்.
ஆனால் இதையெல்லாம் கேட்டு சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து 30 ஆண்டுகள் வழக்கை நடத்தி உச்சநீதிமன்றத்தில் கடந்த *27-02-2012இல்* சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பொறுப்பாளராக இருந்தபோது தீர்ப்பு வந்தது. தேர்தல் பணியின் காரணமாக தீர்ப்பு வந்த அன்றைக்கு டெல்லிக்கு கூட செல்லமுடியாத நிலை.
இந்த வழக்கை நடத்தி உரிய உத்தரவைப் பெறுவதற்காக டெல்லிக்கும், தமிழகத்திற்கும் இடையே நூற்றுக்கும் அதிகமான விமான பயணங்கள். இந்த வழக்கின் தீர்ப்புக்கான உத்தரவை பெற்ற பின்னர் கலைஞர் அவர்களிடம் தீர்ப்பு நகலை வழங்கினேன். அவர் மகிழ்ந்தார்.அந்த தீர்ப்பு நகலை குறித்து கலைஞர் அவர்கள் குறிப்பிட்டு எழுதியபோது தேவையில்லாமல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா விமர்சனத்தை வைத்தார்.
அந்த வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசு நதிநீர் இணைப்புகளைப் பற்றி ஆராய ஒரு ஆக்கப்பூர்வமான குழுவை அமைத்து, ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கூடி, இந்த முக்கிய பிரச்சனைக்கு அவசியம் தீர்வு காணவேண்டும். ஒருபக்கத்தில் வெள்ளம், ஒருபக்கம் வறட்சி என்ற நாட்டின் நிலையை சரி செய்ய இது உதவுவதோடு இதுஒரு முக்கியப்பிரச்சனை. இதைப்பற்றி ஆக்கப்பூர்வமான நடவடிக்கை வேண்டுமென்று *தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா* மற்றும் நீதிபதிகள் *ஏ.கே. பட்நாயக், சுவந்திரகுமார்* அடங்கிய நீதிபதிகள் குழு நதிநீர் இணைப்பைக் குறித்து முதல் தடவையாக தெளிவான தீர்ப்பை வழங்கியது.
இந்த நதிநீர் இணைப்பில் முதற்கட்டமாக தீபகற்ப நதிகள் அதாவது தக்கான பீடபூமி, ஆந்திராவின் தென்பகுதி, கர்நாடகத்தின் தென்பகுதி, தமிழகம், கேரளம், விந்திய - சத்புரா மலைகள், சோட்டா நாகபூர் பீடபூமிக்கு தென்புரம் அதாவது மகாநதி தீரத்திலிருந்து குமரி வரை உள்ள தென்னக நதிகளை இணைக்கப்பட வேண்டுமென்று முதற்கட்டமாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின் வடபுலத்தில் இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் நதிகளோடு மகாநதியை இணைத்தால் நதிநீர் இணைப்பு தேசியளவில் முழுமையாகிவிடும். அந்த வகையில் தான் கோதாவரி - காவிரி வரை இணைப்பு என்று சொல்லும்போது மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி முதல் வைப்பாறு வரை இணைத்தால் மட்டுமே இது பலனளிக்கும். இது தொடர்பான பல்வேறு தரவுகளை மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பித்துள்ளேன். அவ்வாறு அணைத்து தென்னக நதிகளை இணைப்பதற்கு ஏன் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது.
இன்றைய இந்த கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு மூலமே நதிநீர் இணைப்பில் நான் தாக்கல் செய்த வழக்கு தான். தீர்ப்பு வந்தவுடன் நானும், அன்றைய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ச. தங்கவேலுவும் அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவூத்தை மூன்று முறை சந்தித்தோம். அதன்பிறகு ஒரு அதுகுறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. அதுவும் ஆமை வேகத்தில் செயல்பட்டது. மன்மோகன் சிங் அரசாங்கமும் முடிவுக்கு வந்துவிட்டது.
அதன்பின், 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடன் துவக்கத்தில் அன்றைய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்து உச்சநீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்துங்கள். இந்த தீர்ப்பு வந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இனியும் அதுகுறித்தான மேல்நடவடிக்கை இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தான் தொடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தபின்னர் பல நாட்கள் கழித்து இன்றைக்கு கோதாவரி - காவிரி இணைப்பு நடக்கவுள்ளது என்பது ஒரு சின்ன ஆறுதல்.
இதைத் தொடர்ந்து நதிநீர் இணைப்பு தொடர்பாக பி.என். நவலவாலா தலைமையில் மத்திய அரசின் குழு அமைக்கப்பட்டு இந்த ஐந்தாவது கூட்டம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நவலவாலா குழுவின் துணைக்குழுக்கலான இரண்டு குழுக்களின் காலத்தையும் மத்திய அரசு நீட்டிக்கவேண்டும்.
தென்னக நதிகள் இணைப்பதை பற்றி எந்த திட்டமும் இல்லையே என்பது கவலையளிக்கிறது. நதிநீர் இணைப்பு வழக்கு தொடுத்ததோடு மட்டுமல்லாமல் இது தொடர்பாக நான் தனிப்பட்ட வகையில் எடுத்த முயற்சிகள் ஏராளம். நதிநீர் இணைப்பு வழக்கை குறித்து பிரதமர்களாக இருந்த *வி.பி.சிங்(1990), பி.வி.நரசிம்ம ராவ் (1992), தேவகவுடா (1996 இறுதி), ஐ.கே. குஜ்ரால் (1997)* ஆகியோரை நான் நேரடியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசி பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.
அன்றைக்கு வி.பி.சிங்கிடம் கேட்டபோது மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென்றும் அது தொடர்பான செயல்பாடுகள் முடிவடைந்த பின்னர் விவாதிக்கலாம் என்றார். அவருடைய ஓராண்டு ஆட்சி கலைக்கப்பட்டது. பி.வி.நரசிம்மராவ் ஆட்சி புதிய பொருளாதாரக் கொள்கைகள் குறித்தான முக்கியமான தருணத்தில் நாடு இருந்ததால் இது குறித்து ஒரு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. தேவேகவுடாவை 1996 டிசம்பரில், உச்ச நீதிமன்றத்தில் என்னுடைய நதிநீர் இணைப்பு வழக்கு குறித்து விவாதிக்க சந்தித்தேன். அப்போது என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள், இவர் ஒரு பிரதமரா என்று நினைக்கத் தோன்றியது. “ஆர் யூ ராதாகிருஷ்ணன்?. என்னை நீக்க
சொல்லி quo waranto வழக்கு போட்டவர் நீங்கதானே” என்று கன்னடமும், ஆங்கிலமும் கலந்து முகத்தை சுளித்து பேசினார்.

இப்படி நதிநீர் இணைப்பில் பல்வேறு காலக்கட்டங்களில் இவ்வளவு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. பலமுறை அவமானங்களும், கேலிப் பேச்சுகளும் மனதை ரணப்படுத்தின. இதன் பின்புலத்தில் நடந்த சேதிகளையும், சங்கதிகளையும் சொல்லக்கூடிய தகுதி இருக்கிறது. மக்கள் மன்றத்தில் பதிவு செய்வது என்னுடைய கடமையாகும்.
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-05-2019
Image may contain: 3 people, people standing
Image may contain: 3 people, people smiling, people standing
Image may contain: 3 people, indoor
No photo description available.

Sad things about DEMOCRACY

Sad things about DEMOCRACY
--------------------

In the old days, public opinion could be mobilised over issues such as nuclear disarmament. But not any longer. Twitter has lent legitimacy to populism of the irresponsible type. New media that spreads populism is loyal only to its profit motive. 

It is strange that democracy can offer such contrasting scenarios. That anomaly must have been one reason for Winston churchill's remark that "democracy is the worst form of Government, except for all the others that have been tried". A generation after Churchill, even backhandled compliments seem out of place. The ground has been shifting unnoticed by the general public, but recorded by vigilant scholars.

Two books with remarkably similar titles paint a picture of democracy that should make us sad. How democracy ends by David Runciman, who teaches politics at Cambridge University and How Democracies Die, co-authored by two Harvard professors Stephen Levitsky and Daniel Ziblatt, came out last year. 

A possible tactic, he elaborates, is strategic election manipulation. That is, unseen powers will avoid outright tampering of elections, but will use just enough manipulation to get the results they want. Does this sound like a report on Indian elections 2019?

The Harvard professors move along similar lines of analysis and argument as they watch the dying of democracies. They show how democracy can be subverted even if those who do it are elected leaders and they are using majority decisions of Parliament; it happened in Hungary, Turkey, Poland, Sri Lanka, Philippines. (Our finance minister pushing through some self-serving laws as "money bills" when they were not money bills. But then, he is not an elected leader, so why not?

However, the professors share American notion that socialism and Stalinist communism are synonyms, indicating the end of the world. They picture Salvador Allende as an autocrat under whom Chile saw an "erosion of Democratic norms" which finally led to the "military seizing power" and ruling the country for 17 years. How easily they skip such as Allende's attempt to introduce socialism in child Chile. Nixon's America going berserk over "communism's attempt to conquer South America, Henry Kissinger arranging a coup that killed Allende and Chile going under the dictatorship of one of the cruellest autocrats of the 20th century, Augusto Pinochet. Well, the danger of socialism was avoided.

*Moral: Down with moral, up with money.*

-TJS George

28-05-2019

Image may contain: text

Tuesday, May 28, 2019

இந்திய பெருங்கடலின் மர்மங்கள். விஞ்ஞானிகள் ஆய்வு.


இந்திய பெருங்கடலின் மர்மங்கள். விஞ்ஞானிகள் ஆய்வு.
-------------------------
பல ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடலில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஒரு மாதமாக மாலத்தீவின் அருகே இந்தியப் பெருங்கடலில் புவி ஆய்வைக் குறித்து JOIDES என்ற கப்பலின் உதவியோடு ஆரய்ந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பாறைகளான மலைத் தொடர் 3 மைல் தூரம் நீண்டுள்ளதாகவும் கண்டுள்ளனர். அந்த பாறையின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது, இந்தியப் பெருங்கடலில் பனியுகத்திற்கான படிமங்கள் இருக்கிறது. அந்த படிமங்கள் 20,000 ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்காலம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதை வைத்து பனியுகத்தில் வெப்பநிலை மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிந்தால் நாம் எதிர்கால வானிலை குறித்து ஓரளவு புரிந்துக் கொள்ள முடியும். இதிலுள்ள படிமங்களை பிரித்தெடுத்து பார்க்கும்போது அது சாதாரண கடல்நீரை விட அதிக உப்புத் தன்மை வாய்ந்ததாக ள்ளது. இந்தியப் பெருங்கடலில் பன்னாட்டு புவியரசியல் போட்டிகளுக்கிடையே இந்த ஆய்வுகளும் எதிர்காலத்தில் எந்த சூழ்நிலைக்கு அழைத்து செல்லும் என்பது கேள்விக்குறி.


In a first, scientists have discovered the remnants of seawater dating back to the Ice Age, tucked inside rock formations in the middle of the Indian Ocean. Researchers from the University of Chicago in the U.S. made the discovery on a months-long scientific mission exploring the limestone deposits that form the Maldives.
The ship, the JOIDES Resolution, is specifically built for ocean science and is equipped with a drill that can extract cores of rock over a mile long from up to three miles beneath the seafloor.
“Previously, we had to reconstruct seawater from the last Ice Age from indirect clues, like fossil corals and chemical signatures from sediments on the seafloor,” said Clara Blattler, an assistant professor at the University of Chicago.
“But from all indications, it looks pretty clear we now have an actual piece of this 20,000-year-old ocean,” Ms. Blattler said in a statement.
When they extracted the water, they noticed their preliminary tests were coming back salty — much saltier than normal seawater.
Further studies showed that the water was not from today’s ocean, but the last remnants of a previous era that had migrated slowly through the rock.
Scientists are interested in reconstructing the last Ice Age because the patterns that drove its circulation, climate and weather were very different from today’s.
Understanding these patterns could shed light on how the planet’s climate will react in the future.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-05-2019

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம்

Oxford is undoubtedly one of England’s most beautiful cities.

Lined with golden-hued architectural masterpieces, historic and literary treasures and timeless old pubs, this charming university town is every culture-lover’s dream.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-05-2019
Image may contain: outdoor

Jawaharlal Nehru and Sardar Vallabhbhai Patel 's speech after the assassination of Mahatma Gandhi.

Jawaharlal Nehru and Sardar Vallabhbhai Patel 's speech after the assassination of Mahatma Gandhi.

"Friends and Comrades,
The light has gone out of our lives and there is darkness everywhere. I do not know what to tell you and how to say it. Our beloved leader, Bapu as we called him, the Father of the Nation, is no more. Perhaps I am wrong to say that.

"Nevertheless, we will never see him again as we have seen him for these many years. We will not run to him for advice and seek solace from him, and that is a terrible blow, not to me only, but to millions and millions in this country. And it is a little difficult to soften the blow by any other advice that I or anyone else can give you.
The light has gone out, I said, and yet I was wrong. For the light that shone in this country was no ordinary light.
The light that has illumined this country for these many years will illumine this country for many more years, and a thousand years later, that light will be seen in this country and the world will see it and it will give solace to innumerable hearts. 
For that light represented something more than the immediate past, it represented the living, the eternal truths, reminding us of the right path, drawing us from error, taking this ancient country to freedom.
All this has happened when there was so much more for him to do. We could never think that he was unnecessary or that he had done his task. But now, particularly, when we are faced with so many difficulties, his not being with us is a blow most terrible to bear.

A madman has put an end to his life, for I can only call him mad who did it, and yet there has been enough of poison spread in this country during the past years and months, and this poison has had an effect on people’s minds.
"We must face this poison, we must root out this poison, and we must face all the perils that encompass us, and face them not madly or badly, but rather in the way that our beloved teacher taught us to face them."
Image may contain: 2 people, including Bava Samathuvan, crowd and outdoor


"Just as my dear brother, Pandit Jawaharlal Nehru, has spoken to you. My heart is aching. What shall I say to you? My tongue is tied. This is a day of sorrow, shame and agony for India. Today I went to Gandhiji at about 4 p.m.,and was with him for about an hour...
"Hardly had I reached home when somebody broke the dreadful need to me that Gandhiji was shot at thrice by a Hindu young man in the prayer ground.I immediately hurried back to Birla House and was near Gandhiji.His eyes were closed but his face was as calm and serene as before I could even detect a streak of compassion and forgiveness over his ebbing face...

Friends , the occasion demands not anger but earnest heart searching from us all. If we give vent to our understable anger, it would mean that we have forgotten our beloved master's teachings .
so soon after his death. And let me say that even vin his lifetime we only haltingly followed our master.

The burden which of late India has been called to bear is a tremendous one. It would have broken our backs if we had not support of that great man. 
That support has now gone, but Gandhiji will live in our hearts forever... Tomorrow at 4 p.m. his body will turn to ashes but his imperishable teachings will abide with us.
The mad youth who killed him was wrong if he thought that hereby he was destroying his noble mission.
Perhaps God wanted Gandhiji's mission to fulfill and prosper through death".

Image may contain: 1 person

Water Conservation for a growing world.

No photo description available.

"I don't need the chair. The chair needs me!" - Didi


"I don't need the chair. The chair needs me!" - Didi பதவி நாற்காலிகள் நம்மை நோக்கி வரட்டும். அதை நோக்கி நாம் செல்லக்கூடாது.
#KSRPostings

#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-05-2019

Monday, May 27, 2019

#தண்ணீர்ப்பற்றாக்குறையும் #யதார்த்தநிலையும்! என்ற எனது பதிவு மின்னம்பலம் இணைய இதழில் இன்று (26-5-2019)வெளியாகியுள்ளது.

என்ற எனது பதிவு மின்னம்பலம் இணைய இதழில் இன்று (26-5-2019)வெளியாகியுள்ளது.

தண்ணீர்ப் பற்றாக்குறையும் யதார்த்த நிலையும்!
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
கோடை வெயில் அதிகரித்துவிட்டது. தண்ணீருக்காகக் காலிக் குடங்களுடன் தொலைதூரத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. நிலத்தடி நீரும் குறைந்து போர்வெல்லும் கிணறுகளும் வற்றிவிட்டன. பருவமழை பொய்த்துவிட்டது. காவிரியிலும் தாமிரபரணியிலும் தண்ணீர் இல்லாத காரணத்தினால் குடிநீர்த் திட்டங்களும் சரிவர இயங்கவில்லை. பெரிய நீர்நிலைகள் குடியேற்றப் பகுதிகளின் ஆக்கிரமிப்பால் அழிந்துவிட்டன. மத்திய நிலத்தடி நீர்வாரியம் 2018இல் வெளியிட்ட அறிக்கையின்படி நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குடிநீர் நம்மை அச்சறுத்தும் விதமாக மாறிவிட்டது. குறிப்பாகப் பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரைப் போலத் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு வரிசையில் நின்று தண்ணீரை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோமோ என்ற பயம் எழுகிறது.
தண்ணீர்ப் பற்றாக்குறையும் யதார்த்த நிலையும்!
உரிமையும் கடமையும்
தண்ணீர் அடிப்படைத் தேவை. தண்ணீர் கிடைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனுடைய உரிமை. தண்ணீர் விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் உரிமை மட்டுமல்ல, கடமையும் இருக்கிறது. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது நம் கடமை. ஆனால், நாம் பல் துலக்கும்போதோ, முகச்சவரம் செய்யும்போதோ தண்ணீரை வீணடிக்கிறோம். ஒரு நாளைக்கு இப்படியாக 86,500 துளிகள் வீணாகின்றன. இதன் விளைவு என்னவாகும் என்று யோசித்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் வற்றிவிட்டன. இந்த நான்கு ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. இன்றைக்கு இங்கெல்லாம் ஒட்டுமொத்தமாக மிகவும் குறைவான தண்ணீரே உள்ளது.
சென்னைக்கு நீர் வழங்கும் முக்கிய ஏரியான செம்பரம்பாக்கத்தில் 6 மில்லியன் கனஅடி நீர்தான் உள்ளது. இந்த இரண்டு ஏரிகளிலும் தற்போது குடிநீர் எடுக்கப்படுவதில்லை. பூண்டி, புழல் ஆகிய இரண்டு ஏரிகளிலும் 162க்கும் மேற்பட்ட மில்லியன் கனஅடி நீர் இருப்பதாகச் செய்தி. சென்னைக்கு ஒரு நாளைக்கு 550 மில்லியன் லிட்டர் தேவை.
தமிழகத்தின் உள்பகுதியில் 848 முதல் 946 மிமீ மழை பெய்கிறது. கடற்கரை, மலைப்பகுதிகளில் 1,666 மிமீ மழை பொழிகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவ மழை, அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவ மழை வளம் சேர்க்கிறது. இதில் வடகிழக்குப் பருவ மழையில் 46 சதவிகிதம் கிடைக்கிறது. கோடை மழையால் 14 சதவிகிதம் வருகிறது. குளிர்காலத்தில் பெய்யும் மழையால் 5 சதவிகிதம் தண்ணீர் சேருகிறது. நிலத்தடி நீரையும் சேர்த்துத் தமிழகத்தின் நீர் இருப்பு 1,643 டிஎம்சி ஆகும். நிலத்தின் மேற்பரப்புத் தண்ணீர் வரத்து 853 டிஎம்சி. இதில் 261 டிஎம்சியை அண்டை மாநிலத்திலிருந்து பெறுகிறோம். நமக்கு வர வேண்டிய இந்தத் தண்ணீர் பல சமயங்களில் கிடைப்பதில்லை.
ஏரிகளின் அவல நிலை
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கான ஏரிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. தற்போது 39,292 ஏரிகள் மட்டுமே உள்ளன. சென்னையில் 1964ஆம் ஆண்டு நிலவரப்படி 474 நீர்நிலைகள் இருந்தன. இன்றைக்கு அது 43ஆகக் குறைந்துள்ளது. இதிலும் பல நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன. இந்த நீர்நிலைகள் குடியிருப்புகளாக மாறிவிட்டன. சென்னையைச் சுற்றி மீதமுள்ளவை போரூர், செம்பரம்பாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், பள்ளிக்கரணை ஆகியவை மட்டுமே. போரூர் ஏரி 800 ஏக்கராக இருந்தது. தற்போது 330ஆகச் சுருங்கிவிட்டது. முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, வேளச்சேரி ஆகிய பகுதிகளின் நீர்நிலைகள் வேறு வகைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி பகுதிகளில் சாக்கடைக் கழிவு நீர் கலந்து நாசமாகிவிட்டது. மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் இதே நிலைதான்.
சென்னையில் இல்லாமல் போன ஏரிகளும் நீர்நிலைகளும் வருமாறு:
நுங்கம்பாக்கம் ஏரி
தேனாம்பேட்டை ஏரி
வியாசர்பாடி ஏரி
முகப்பேர் ஏரி
திருவேற்காடு ஏரி
ஓட்டேரி
மேடவாக்கம் ஏரி
பள்ளிக்கரணை ஏரி
போரூர் ஏரி (பாதி)
அம்பத்தூர் எரி
ஆவடி ஏரி
கொளத்தூர் ஏரி
ரெட்டேரி
வேளச்சேரி
பெரும்பாக்கம் ஏரி
பெருங்களத்தூர் ஏரி
கல்லு குட்டை ஏரி
வில்லிவாக்கம் ஏரி
பாடியநல்லூர் ஏரி
வேம்பாக்கம் ஏரி
பிச்சாட்டூர் ஏரி
திருநின்றவூர் ஏரி
பாக்கம் ஏரி
விச்சூர் ஏரி
முடிச்சூர் எரி
சேத்துப்பட்டு ஏரி
செம்பாக்கம் ஏரி
சிட்லபாக்கம் ஏரி
மாம்பலம் ஏரி
கோடம்பாக்கம் டேங்க் ஏரி
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் அருகே இருந்த இரண்டு குளங்கள்
ஆலப்பாக்கம் ஏரி
வேப்பேரி
விருகம்பாக்கம் ஏரி
கோயம்பேடு சுழல் ஏரி
அல்லிக்குளம் ஏரி
இப்படிச் சென்னை நகரத்தில் உள்ள ஏரிகள் கிட்டத்தட்ட மறைந்தேவிட்டன. இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் என் போன்றவர்கள் வழக்குகளும் தொடுத்துள்ளோம். நீரின்றி அமையாது உலகம் என்று வள்ளுவர் பேராசான் சொல்கிறார். அப்படிப்பட்ட திரவத் தங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். வனம், ஆறு, ஏரிகள், தருவை குளம் என அனைத்து நீர்நிலைகளும் அந்த அமைச்சகத்தின் கீழ் வர வேண்டும். நீரைப் பன்னாட்டு நிறுவனங்களோடு பங்கீடு செய்துகொண்டாலும் ஆயக்காட்டு, மராமத்து செய்ய வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். குளங்கள், கண்மாய்கள், வரத்துக்கால், களிஞ்சல்கள் ஆகியவை முழுமையாகப் பராமரிக்கப்பட வேண்டும். குளங்கள், கண்மாய்களின் நீர்வள அமைப்புகளைப் பழுது பார்த்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்.
சென்னை, மதுரை, சேலம், நெல்லை போன்ற பெருநகரங்களில் நீர்நிலைகள் மூடப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மாற்று வழிகளை உருவாக்க வேண்டும். சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் குப்பைக் கொட்டும் பகுதிகளாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீர்நிலைகளைப் பராமரிப்பது குறித்தும், நீர்நிலைகள் குறித்த புகார்களை விசாரித்து நியாயம் வழங்கவும் சுய அதிகாரம் படைத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு ஒன்ற அமைக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்தால்தான் நாம் ஓரளவாவது தப்பிக்க முடியும். இல்லையேல் பெரும் நெருக்கடிக்குள் மிக விரைவில் சிக்கிக்கொள்வோம்.

23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few h...