Saturday, September 30, 2023

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வரும் நாடாமன்ற தேர்தல் கூட்டணி நிலவரம் எப்படி இருக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் அரசியலாளர் K.S. ராதாகிருஷ்ணன்..

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வரும் நாடாமன்ற தேர்தல் கூட்டணி நிலவரம் எப்படி இருக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் அரசியலாளர் K.S. ராதாகிருஷ்ணன்.. 

#ksradhakrishnan #dmk #tnpolitics #admkvsbjp #annamalai 
https://youtu.be/-YH9Cs7bH7Q?si=HgdUX92ItqunPphT

#ksrpost
30-9-2023.

Friday, September 29, 2023

#*எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும்Vsநம்மாழ்வார் என்ற விவாதம்*… #*ஜேசி.குமரப்பா* #*பசுமைப்புரட்சி கர்த்தாக்கள் யாவர்?* *சில நேரங்களில் அறிவியலுக்கும் அரசியலுக்குமான வேறுபாடுகளும் உண்டு*.




—————————————
தமிழ்நாட்டில் எம் எஸ் சுவாமிநாதனுக்கும்  நம்மாழ்வார் இருவருக்கும் இடையே ஒரு முரண்பாட்டை வைத்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இருவரும் நம்மிடையே இப்போது இல்லை. பசுமைப் புரட்சி ஒரு கேடான வினை. ஆம்  உண்மைதான். அன்றைய சூழல்….




பசுமைப் புரட்சி கொண்டு வந்தது எம்.எஸ்.சுவாமிநாதன் மட்டுமல்ல அன்றைய பிரதமர் இந்திராகாந்தி மற்றும் உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் தலைமையில் எம்.எஸ்.சுவாமிநாதன் , பி. சிவராமன் மற்றும் நார்மன் இ.போர்லாக் ஆகியோருடன் இணைந்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற இந்திய பசுமைப் புரட்சியை அவர் முன்னெடுத்தார் .  பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியதில் சி.சுப்ரமணியம் ஆற்றிய பங்கிற்காக, 1998 ஆம் ஆண்டில், இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது .

ஆனால்,காந்திஜியின் நெருங்கிய சகாவான ஜே சி குமரப்பா பற்றி யாரும் இங்கு பேசுவதில்லை.  அவர்தான் இயற்கை சுயசார்பு விவசாயம் பற்றி மிகப் பெரிய ஆய்வையும் அதற்கான நூல்களையும் நடைமுறைக்கு ஏற்றவாறு எழுதியும் பேசியும் வந்தவர். தன் சக காந்திஜியிடமே செலவு கணக்குகளை மறுத்தவர் . பணம் தர முடியாது என்று கறாராகச் சொன்னவர்.எளிமையை மட்டுமே வாழ்நாள் சபதமாக கொண்டவர்.

மறைந்த எம் எஸ் சுவாமிநாதன் ஆதரித்தோ மறுத்தோ பேசியும் எழுதியும் கொண்டிருக்கும் சில எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் முற்றும் உணர்ந்த மத்திமர்கள் இதன் பின்புலத்தையோ அறியாதவர்கள்.  சில நேரங்களில் அறிவியலுக்கும் அரசியலுக்குமான வேறுபாடுகளும் உண்டு.

#எம்_எஸ்_சுவாமிநாதனுக்கும்Vsநம்மாழ்வார்_என்ற_விவாதம்…#ஜேசி_குமரப்பா #பசுமைப்புரட்சி_கர்த்தாக்கள் #சி_சுப்ரமணியம் #greenrevolution #MSSwaminathan

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
29-9-2023.

Thursday, September 28, 2023

பேயாழ்வார் தன்னை பெருந்தமிழன் அழைத்து கொள்ளும் பாசுரம்

பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலை என வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறு வெண்பாக்களைக் கொண்டது.

முதன்முதலில் பேயாழ்வார்தான் தன்னை "பெருந்தமிழன்" என்று அழைத்து கொள்கிறார். வைணவம் தமிழுக்கு எவ்வளவு செழுமை சேர்த்து உள்ளது பாருங்கள்.

இந்த பாசுரத்தை எங்காவது நமக்கு கற்பித்து உள்ளார்களா? என்றால் இல்லை. தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவன்களின் கட்டுரை மற்றும் அவர்தம் படைப்புகளை படித்து மனம், மொழி, உணர்வுகளை நச்சு ஆக்கி கொண்டோம்.

இதோ பேயாழ்வார் தன்னை பெருந்தமிழன் அழைத்து கொள்ளும் பாசுரம்
.
யானேதவம் செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானேதவம் உடையேன்; எம்பெருமான் - யானே
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது !”


#M.S.Swaminathan #எம்.எஸ்.சுவாமிநாதன்

*MS Swaminathan, 98 eminent agricultural scientist, passes away.. my well wisher…appreciated my national rivers link- net work  case on the file of the Supreme Court of India*…
*My deep condolences*.

*எம்.எஸ்.சுவாமிநாதன்* பிறந்தது குடந்தையில். பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பள்ளியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.சுவாமிநாதன் மீனாவினை மணந்தார். இவர் கேம்பிரிட்ஜில் படிக்கும் போது 1951-ல் மீனாவினைச் சந்தித்தார்.[3] திருமணத்திற்கு பின்னர் சென்னையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சௌமியா சுவாமிநாதன் ஓர் குழந்தை மருத்துவர் ஆவார். மதுரா சுவாமிநாதன் ஓர் பொருளாதார நிபுணர் ஆவார். இளைய மகள் நித்யா சுவாமிநாதன் பாலினம் மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்து பணியாற்றுகின்றார்.

Ph-1960s :: Dr. M. S. Swaminathan Inspecting Wheat In The Field







மகாத்மா காந்தி மற்றும் இரமண மகாரிசியால் ஈர்க்கப்பட்ட சுவாமிநாதன், தமது சொந்த நிலத்தின் ஒரு பகுதியினை வினோபாபாவின் பூமி தானம் இயக்கத்திற்க்கை வழங்கினார். 2011ல் சுவாமிநாதன் அளித்த பேட்டி ஒன்றில், தான் இளமையாக இருந்தபோது, சுவாமி விவேகானந்தரை பின்பற்றியதாக கூறினார்.
பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர்,  மத்திய திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர். எம். எஸ் .சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிலையம் (MS Swaminathan Research (institute)Foundation) சென்னை தரமணியில் இருக்கிறது. 

உச்ச நீதி மன்றத்தில் நான் தொடர்ந்த தேசிய நதிகள்- கங்கை கன்னியாகுமரியை - இணைப்பு வழக்கை பற்றி சந்திக்கும் எல்லாம் கேட்பார். பாராட்டுவார்.

ஆழ்ந்த இரங்கல்,
****

எம். எஸ். சுவாமிநாதன் மறைவு குறித்த செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
அஞ்சலிகள்!

சுவாமிநாதன் மண்கொம்பு என்கிற ஊரைச்சேர்ந்தவர். குடந்தையில் இவர் குடும்பம் பூர்விகம் ஆலப்புழையின் அருகில் இருக்கிறது. பூதலிங்கம் பூதப்பாண்டி. ஐ.சி.எஸ் தேர்வு பெற்றவர் ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் நிதித்தைறை செயலாளராகப்பணியாற்றியவர். இவரது மனைவியின் இயற்பெயர் மதுரம். கிருத்திகா எனும் புனைப்பெயரில் தமிழில் , புகைநடுவே, வாசவேஸ்வரம் போன்ற மிகச்சிறந்த நாவல்கள் எழுதியிருக்கிறார். கல்வியில் நாடகக்கலையை கலந்து பல சாதனைகள் புரிந்தவர். இவரது ஊர் திருப்பதிசாரம்.ஆனால் இவர் வடிவீஸ்வரத்தைச்சேர்ந்தவர் என்றே நான் 
அறிந்திருக்கிறேன். அதை மனதில் வைத்துத்தான் தனது  ஒரு நாவலுக்கு 
வாசவேஸ்வரம்என்று அவர் பெயரிட்டதாகக்கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்,


#M.S.Swaminathan 
#எம்எஸ்சுவாமிநாதன்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-9-2023.


*ஆண்டவா! இந்த100 நாள் வேலை திட்டத்தை ஆவணி to தை மாசம் நிறுத்தி வை சாமி. களவெட்ட ஆள் கிடைக்கல. இது தொடர்ந்தால் விவசாயம் நிச்சயம் அழியும் என விவசாயிகளின் வேண்டுதல்*. #ksrpost 28-9-2023.

*ஆண்டவா! இந்த100 நாள் வேலை திட்டத்தை ஆவணி to தை மாசம் நிறுத்தி வை சாமி. களவெட்ட ஆள் கிடைக்கல. இது தொடர்ந்தால் விவசாயம் நிச்சயம் அழியும் என விவசாயிகளின் வேண்டுதல்*.

#ksrpost
28-9-2023.


#*தலைவர்-தலைமை என்பது என்ன? எப்படி?*



#*தலைவர்-தலைமை என்பது என்ன? எப்படி?*




————————————————————-
தலைவர்-தலைமை என்பது நிர்வாகியாக இருப்பதை விட மேலானது. பிரச்சினைகளைக்  கண்டறிவதற்கு விமர்சன சுயமான சிந்தனைகள் போதும். ஆனால் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தேவை. Commission Omission கூடாது. No to artificial or synthetic deeds, speech’s, actions etc- loyal to followers and well wishers பிரச்சினைகளைக் கண்டு விலகி ஓடுவது என்பது, தீர்வுகளை விட்டும் விலகி ஓடுவதாகும்.தனக்கு உழைத்த எவரையும் ஒழிக்க நினைக்கூடாது. நாடு மக்கள் நினைப்பதை விட்டு தன் குடும்பம் என பொந்தில் அடைதல் கூடாது.அறமான சிந்தனகள், நல் கடப்பாடுகள் அவசியம்….தன் நலமாக பொருள் ஈட்டல் வியாபார பொது வாழ்வு என்பது    Animal Farm
Novella by George Orwell’s கதைதான் நினைவில் வருகிறது.

எண்ணத்தில் சிறுமைகள் அச்சம், மடமை, துன்பம்,பொய் முதலிய தீமைகள் அற்ற  வினைகள் வேண்டும். கொடுமைகள் எல்லாம் மாய்ந்து துயர் தீரும். நாகரிகம், பண்பாடு, கண்ணியம் இயற்கையாக இருத்தல் நிமித்தம் முக்கியம். எழுச்சிமிக்க எண்ணத்தின் சக்தியில் சிறியது பெரியது என்ற பாகுபாடில்லை; ஒரே ஒரு எண்ணத்தையோ, சொல்லையோ, செயலையோ கொண்டு பெரியதொரு மாற்றத்தைத் தோற்றுவிக்கும் ஆற்றலே  தலைவனுக்கு தகுதி ஆகும். இதுவே தலைவன் என்பதன் இலக்கணம்- சூத்திரம் ஆகும்

தலைவன் உதாரணம்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங், வ.உ.சிதம்பரனார்,  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இராஜபாளைம் பி.எஸ். குமாரசுவாமி ராஜா, ஜே. சி. குமரப்பா, ஜெயபிரகாஷ் நாராயண் என இப்படி சிலர் உண்டு.

#தலைவர்_தலைமை_என்பது_என்ன? #எப்படி? #leadership

 #கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-9-2023.

Wednesday, September 27, 2023

* முரண்பாடுகள் உள்ள இடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம். எங்கே தவறு இருக்கிறதோ, அங்கே உண்மையைக் கொண்டு வருவோம். சந்தேகம் இருக்கும் இடத்தில் நம்பிக்கை கொண்டு வரலாம். விரக்தி இருக்கும் இடத்தில், நாம் நம்பிக்கையைக் கொண்டு வருவோம்*. Where there is discord, may we bring harmony. Where there is error, may we bring truth. Where there is doubt, may we bring faith. And where there is despair, may we bring hope.

* முரண்பாடுகள் உள்ள இடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம்.  எங்கே தவறு இருக்கிறதோ, அங்கே உண்மையைக் கொண்டு வருவோம்.  சந்தேகம் இருக்கும் இடத்தில் நம்பிக்கை கொண்டு வரலாம்.  விரக்தி இருக்கும் இடத்தில், நாம் நம்பிக்கையைக் கொண்டு வருவோம்*. Where there is discord, may we bring harmony. Where there is error, may we bring truth. Where there is doubt, may we bring faith. And where there is despair, may we bring hope.

 #ksrpost.
 27-9-2023.


#இந்துமாகசமுத்திரம் #சீனாஆதிக்கம்

இன்றைய (27-9-2023)மலேசிய நாட்டில் வெளி வரும் தமிழ் மலர் ஏட்டில் என்னுடைய #இந்துமாகசமுத்திரம் #சீனாஆதிக்கம் குறித்த கட்டுரை…

#KSR_Post
#கேஎஸ்ஆர்போஸ்ட்
27-9-2023.


தங்களது வெற்றியை எக்களிப்பது வேறு. மக்கள் மத்தியில் சூசகங்கள் உள்ளிருந்து வினையாற்றும் என்பது வேறு

உண்மையாக இருந்தீர்கள்...
அவர்கள் ஊமையாக இருந்தார்கள்.

உங்களின் பெருந்தன்மை அவர்களுக்கு இளிச்சவாய்த்தனமாகப் போய் விட்டது. 
அண்ணா…

தனித்துவிடப்பட்ட தனி மரம் ஆகிவிடோம், தோப்பாக முடியாது என எண்ண வேண்டாம்....

தனித்துவிடப்பட்ட ஆலமரமாக நினைங்கள்...

விழுதுகளுடன் விரிவடைய...
- ஒரு well wisher

தங்களது வெற்றியை எக்களிப்பது வேறு. மக்கள் மத்தியில் சூசகங்கள் உள்ளிருந்து வினையாற்றும் என்பது வேறு

#*பெண்களுக்கான33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா* ஒரு பார்வை



—————————————
பெண்களுக்கான 33 சத வீத இட ஒதுக்கீடு மசோதா பல வருடங்களுக்கு முன்பு முன்மொழியப் பட்டு அது இன்னும் நடைமுறைக்கு ஏன் வரவில்லை என்பதைச் சற்று ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டியுள்ளது. மேற்கத்திய வளர்ந்த நாடுகளில் கூட குறைந்தபட்சம் பெண்களுக்கான 33 சதவீதத்தை தங்களுடைய நாடாளுமன்ற சட்டங்களில் கூட இன்னும் அமலுக்கு அவர்களால் கொண்டு வரஇயலவில்லை.ஸ்காண்டி
(Photo-The Hindu 27-9-2023)



நேவியா டென்மார்க் , நார்வே மற்றும் ஸ்வீடன்  நாடுகளின் ரிஸ்டேக் (நாடாளுமன்றம்) கில் பெண்களை நியமித்து உறுப்பினர்களாக நிரப்படுகின்றனர்

சுர்ஜித் காலத்தில் சிபிஎம் கட்சி இதை ஆதரித்தது. ஆனால் மே வங்க அன்றைய முதல்வர் ஜோதிபாசு இதை பெரியாக கவனத்தில் கொள்ளவில்.காங்கிரஸ் கடசி உள் இதற்கு 1980-90களில் எதிர்வினைகள் இருந்தன.

இந்திய நாடாளுமன்றத்தில் எத்தனை முறை முன்மொழிப்பட்டாலும்  முன்பு லல்லு பிரசாத் யாதவ், சரத் யாதவ்,  முலாயம் சிங் யாதவ், போன்றவர்களும் ராஷ்ட்ரிய சமாஜ்வாடி என கட்சிகள் உட்பட பலரும் அது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்று நிராகரித்திருக்கிறார்கள். பெண்களுக்கான 33 சத வீத இட ஒதுக்கீடு மசோதாவை சரத் யாதவ் நாடளுமன்ற மக்கள் அவையில் கிழித்து தூக்கி எறிந்தார்கள்.
1989இல் இம்மசோதாமீதான நாடாளுமன்ற விவாதங்களின்  போது வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி, வாஜ்பாய்,அத்வானி 
போன்றோரும் எதிர்த்துள்ளார்கள்.

அவர்கள் சொல்லும் பெரும்பாலான காரணம் சாதி இன குல மேட்டிமைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தான் மேலோங்கி அரசியலுக்கு வர முடியும் .அடித்தள உழைக்கும் பிரிவினர்களில்  இருந்து எந்த ஒரு பெண்ணும் இந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்க இயலாது என்று வாதிடுகிறார்கள்.

போக இந்திய அளவில் நகராட்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புற ஊராட்சித்தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு கொடுத்தாலும்  பதவிக்கு வரும் அந்தப் பெண்களை செயலற்றவர்களாக்கி அவர்தம் ஆண்களே மேலாதிக்கம் செய்கிறார்கள். இந்த இட ஒதுக்கீட்டை பல வகையிலும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

அதேபோல படித்த நாகரிகமான பெண்கள் தங்களிலும் கீழான அடித்தள பெண்கள் மீது வைத்திருக்கும் பார்வை அவர்கள் அறிவுற்ற பத்தாம் பசலிகள் என்பதுதான். அவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் நாகரிகமடைய மாட்டார்கள் என்பது மாதிரியான ஒரு taboo கற்பிக்கப்படுகிறது. போக இந்த மேல் தட்டு பெண்களின்  குழுக்கள் அவர்கள் சந்திக்கும் இடங்கள் எல்லாமே ஒரு சம்பந்தமும் இல்லாமல் தங்களுக்குரிய வசதியை ஒரு நாகரிகமாகக் கருதி வாழ்க்கையை  எல்லா வகையிலும் சுதந்திரமாக அனுபவிக்க உரிமை உண்டு என்கிற  அளவிற்கு தரம் தாழ்ந்து தன்னிச்சைப் போக்கை மேற்கொள்கிறார்கள். இவர்களுக்கு தேசம் அதன் உழைக்கும் பிரிவினர் மற்றும் இயற்கை குறித்த எந்த சிந்தனையும் இல்லாமல் அதிகாரம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் இவர்களும் பெண்களைப் படிநிலைப் படுத்துகிறார்கள் .மேலும் பெண்ணுரிமை என்கிற பெயரில்  ஒரு பக்கம் போராடுவது மறுபக்கம் உல்லாசமாக இருப்பது எனும் அளவிற்கு நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. என்றெல்லாம் அவர்கள் காரணங்களைக் கூறுகிறார்கள்.

இந்த சட்டத்தை முழுமையாக சீர்திருத்தி  நாடு முழுக்க சரிபாதி ஆக இருக்கும் பெண்களுக்கு வகுப்பு வாரியாக பிரதிநிதித்துவம் கொடுப்பதில் திறமைசாலிகளை ஆக்கபூர்வமாக உழைப்பவர்களை இனம் கண்டு அவர்களை முதன்மைப் படுத்திய பிறகு தான்  இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் . என்பதைத்தான் நானும் முக்கியம் என்று குறிப்பிடுகிறேன் .

அப்போதுதான் பெண்களின் சரி பாதி உண்மையான உழைப்பு இந்த நாட்டிற்கு கிடைக்கும். வெறுமனே  பயன்ற்ற பெண்ணியம் பேசுவதில் பிரயோஜனம் இல்லை.

இவை ஒருபுறம் இருக்க இன்றைய நாடாளுமன்றத்தில் 800 வகையான கடினக் கொலை கொள்ளை லஞ்சம் கற்பழிப்பு க் குற்றங்களை செய்த கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டிய 194 நபர்கள்  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதுவே கொடுமை என்றால்குறைந்தபட்ச தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்று பார்க்கும்போது கூட அவர்களில் 250 பேருக்கு மேல் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகி இருக்கிறார்கள். இந்த தொடர் குற்றவாளிகள் மாநிலங்களிலும் அதன் சட்டமன்ற அவைகளிலும் தொடர்ந்து இடம்பெறுகிறார்கள்.ஓட்டை விலை வைத்து வாங்கி வந்தவர்கள் இவர்கள். எங்கே ஜனநாயகம்….சாக அடிக்க பட்டது. வாரிசு அரசியல் வேறு ஒரு கொடுமை… தகுதி தரம் இல்லாதவர்கள் எம்பிகள், எம்எல்ஏகள், மந்திரிகள் ( எந்திரிகள்) என இங்கு நிலைமைகள…..

எதார்த்தம் என்னவெனில் இத்தகையக் குற்றவாளிகள் நாடாளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் அதிகாரத்திலும் நீடிக்க எளிய மக்கள் தங்களின் அன்றாட வாழ்வின் சிறையிலும் இருக்கிறார்கள்.
மேற்சொன்ன குற்றவாளிகளுக்கு
சாதகமாகத்தான் இன்றைய நடுநிலைமை போய்க்கொண்டிருக்கிறது.

நாம் பெரும்பாலும் சமூக நீதிப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.சமூக நீதி நமது உரிமை அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஒரு சமூகம் பாழ் பட்டு கொண்டு இருக்கும் போது அறிவு ஜீவிகள் அதில் இறங்கி இந்தசமூகத்தின் நல்லிணக்கத்திற்கு முழுமூச்சாய்  பாடுபட வேண்டும். எதிர்காலம் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியும்,இறையாண்மையோடு சம்பந்தப்பட்டது.

குறிப்பாக சட்டம் மருத்துவம் போன்றவை திறமையுள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும். அதில் அனுபவமும்  பட்டறிவும் சமூக சேவை மனப்பான்மையும் போக மனிதர்கள் மீதான மரியாதையும் அக்கறையும் உள்ளவர்களிடம்தான்  அவை ஒப்படைக்கப்பட வேண்டும்.

சமூக நீதி என்கிற பெயரால் அரைகுறை புத்தி உள்ளவர்களிடம் இத் துறைகளை ஒப்படைப்பது மிக மோசமான விளைவுகளையே உண்டாக்கும். தேங்கி கிடக்கும் இந்திய வழக்குகள் இன்று திறமையற்ற  வலிமையற்ற நீதியிடம் தான் மாட்டிக்கொண்டுள்ளது.

மாற்றங்கள் என்பது கற்பனை அல்ல நடைமுறை என்பதை பகுத்தாய்ந்து பார்ப்பது தான் அறிவுறவோர் சிந்தனை.

#பெண்களுக்கான33_சதவீத_இட_ஒதுக்கீடு_மசோதா #33percentReservation

கே எஸ் இராதாகிருஷ்ணன். 
#KSRPost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
27-9-2023.

Tuesday, September 26, 2023

#கிராநூற்றாண்டு நிறைவு விழா. #கிராவிருது வழங்கும்விழா ——————————————— கடந்த17-9-2023 அன்று கோவை பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் சிறப்பாக அமைந்தது நடந்தது….. எனது உரை…. "கல்லணை கட்டிய கரிகாலன் போல ஈழத்தில் இந்தக் கரிகாலன் வெற்றி பெற வேண்டும் என்று பிரபாகரனிடன் எழுதி கொடுத்தார் கி.ரா." கி. ரா. வின் வரலாறு எழுதப்பட வேண்டும் || கி.ரா விருது 2023 |

#கிராநூற்றாண்டு நிறைவு விழா.
#கிராவிருது வழங்கும்விழா
———————————————
கடந்த17-9-2023 அன்று
 கோவை பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் சிறப்பாக அமைந்தது  நடந்தது…..
எனது உரை….

"கல்லணை கட்டிய கரிகாலன் போல ஈழத்தில் இந்தக் கரிகாலன் வெற்றி பெற வேண்டும் என்று பிரபாகரனிடன் எழுதி கொடுத்தார் கி.ரா."

கி. ரா. வின் வரலாறு எழுதப்பட வேண்டும் || கி.ரா விருது 2023 | 

#coimbatore
#கிரா
#kira
#கிராஜநாரயணன்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
26-9-2023

youtu.be/EhDQjwhfDyY?si…

தியாகதீபம் திலீபன் நினைவ நாள்

*நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது ஈழ தமிழ் மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்*.



-*திலீபன்* *26.09.1987*



 #*தியாகதீபம் திலீபன் நினைவ நாள் - 36 ஆண்டு*




*படங்கள்2,3,4*  



*தியாக தீபம்  திலீபன் உண்ணா நோன்பிருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட பின் எஞ்சியிருக்கும் எச்சம்*. 

*நல்லூர் ஆலய வடக்கு வீதிக்கு செல்லும் வழி* 

*அன்றைக்குத் திரண்டிருந்த ஜனக்கூட்டம்*.
நன்றி- சர்மிளா- யாழ்


https://x.com/ksradhakrish/status/1706646411167855006?s=46&t=mJ-Q4yLvZG2SDXSXi7-7ow


*காவேரி* *முன்னள்பிரதமர் அந்தஸ்தில் தேவகவுடா, உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அந்தஸ்தில் வெங்கட்ராமையா என கர்நாடக சேர்தவர்கள் காவேரி சிக்கலில் அந்த மாநில கட்சிகள் குழவில் வெவ்வேரு நேரத்தில் இடம் பெற்ற அநீதிகள் உண்டு*

*காவேரி*
*முன்னள்பிரதமர் அந்தஸ்தில் தேவகவுடா, உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அந்தஸ்தில் வெங்கட்ராமையா என கர்நாடக சேர்தவர்கள் காவேரி சிக்கலில் அந்த மாநில கட்சிகள் குழவில் வெவ்வேரு  நேரத்தில் இடம் பெற்ற அநீதிகள் உண்டு*

————————————
இன்றைய தினமணி செய்தியில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி கார்நாட மாநில ஆதாரவாக தலையிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கர்நாடக வாட்டல் மடப்பா நாகராஜ் போல கோரிக்கை வைத்துள்ளார். 

இது  இவரை பற்றிய கடந்தகால 1990கள் செய்தி.

காவிரி தீர்ப்பாணையத்திற்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சித்த கோஷ் முகர்ஜி தலைவராக நியமிக்கப்பட்டு அந்த வழக்கை விசாரிப்பதற்கு என்று அவர் குடகு  பாசன நிலங்களையும் தஞ்சையில் காவிரி நீரின் தேவை எவ்வளவு என்பதை அறிவதற்காகவும்  குடகு பகுதிக்கும் தஞ்சைக்கும் வந்திருந்தார்.




அந்நேரத்தில் காவேரி டெல்டா - தஞ்சை பகுதி கோவில்களில் அவர் விரும்பி சென்று போது பூரண கும்ப மரியாதை எல்லாம் செய்தார்கள்.

இந்த நிலையில்,  தேவகவுடா சித்த கோஷ் முகர்ஜியை காவிரி தீர்ப்பாணையத்தின் நடுவர் பதவியில் நீடிக்க முடியாது;  தமிழகத்தில அவரை வரவேற்று பயன் அடைந்துள்ளார். எனவே எங்கள் கார்நாடகத்தின்கு காவேரியில நீதி அவரிடம் கிடைக்காது என பெங்களூர் உச்ச நீதிமன்றத்தில் quo warranto  ரிட்  மனுவை தாக்கல் செய்தார்.

தேவகவுடா அவர்கள் தமிழ்நாடு கேரளா புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களுக்கு எதிராக  ரிட்மனு தாக்கல் செய்து வழக்கும் உயர் நீதிமன்றத்தில்  நிலுவையில் இருந்தபோது நாட்டின் பிரதமர் ஆகிறார். இதற்கு அன்று ஆதாரவாக திமுக, தமாக தமிழக கடசிகளும் இருந்தன.

நிலைமை இப்படி இருக்க, 1996 கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நான் தோற்ற முடிவு வந்த மறு நாள்;  கோவில்பட்டியில் இருந்து   சென்னை திரும்பிய போது திருச்சிக்கு பக்கத்தில் அதுவும் அந்த காவிரி பாலத்தில் கார்செல்லும் நேரம் தேவகவுடா நாட்டின் பிரதமர் ஆகிவிட்டார் என்கிற செய்தியை ஒளிபரப்பினார்கள். இவர் எப்படி பிரதமர் ஆக முடியும்? தமிழ்நாடு கேரளா புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களுக்கு எதிராக காவேரி ஆணைய நடுவர் மீதே வழக்கு போட்டவர் ஆயிற்றே… என மனதில் பட்டது.

உடனே மறுநாள் தேவகவுடா இந்திய மாநிலங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர் பிரதமரை பதவிக்கு பதவி பிரமாணம் என அவர் மீது நானும் quo warranties ரிட் மனுவை தாக்கல் செய்தேன்.
நீதிபதி கனகராஜ் விசாரித்து தேவகவுடக்கும் மத்திய அரசுக்கு தாக்கீது(நோட்டிஸ்) அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.

எனது வழக்கு பற்றி செய்தி வந்தவுடன் பிரதமராக இருந்த தேவகவுடா அவரின் வழக்கை  உடனடியாக வாபஸ் வாங்கி நான்  கர்நாடகத்திற்கு மட்டுமானவன் அல்ல இந்தியாவிற்கே தலைமையானவன் என்கிற மாதிரிநடந்துகொண்டார்.உயர்நீதிமன்ற
த்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 
டி ஆர் பாலு எல்லாம் அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தேவகவுடா அவர்கள் வழக்கை வாபஸ் பெற்ற பின் சில மாதங்களுக்கு பின்அவரை சந்திப்பதற்காக  மத்திய அமைச்சாரக இருந்த ராம் விலாஸ் பஸ்வான்  அனுமதிவாங்கி தந்து டில்லி சென்றேன்.

அங்கே பிரதமர் தேவகவுடா
மிஸ்டர் கே எஸ் ராதாகிருஷ்ணன் யு ஆர் வைகோமேன். ந்தி நீர் இணைப்பு சுப்ரீம் கோர்ட் வழக்கை உங்கள் நியாயங்கள்  இருக்கட்டும்…என சொல்லி என்ன என்ற அறியமால் அவரது தொடர் பேச்சின் மூலம்
என்னிடம் மதிப்பு குறைவாகவும் நடந்து கொண்டார்.

மூன்று மாநிலங்கள் ஏன் நான்கு மாநிலங்களும் உள்ளிட்ட முழு இந்தியாவிற்கும் அப்போது அவர்தான் பிரதமர். ஆனால் இன்று அவர்தான் கர்நாடகாவுக்கு  பரிந்துரையும் செய்கிறார்.
ஜாலத்திற்கு ஒரு பாசம் கோலத்துக்கு ஒரு வேஷம் என்று பேசுகிற இவர் எப்படி ஒரு முன்னள்பிரதமர் அந்தஸ்தில் இருந்திருக்க முடியும் .

முன்னள்பிரதமர் அந்தஸ்தில் தேவகவுடா, உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அந்தஸ்தில் வெங்கட்ராமையா என கர்நாடக சேர்தவர்கள் காவேரி சிக்கலில் அந்த மாநில கட்சிகள் குழவில் வெவ்வேரு நேரத்தில் இடம் பெற்ற அநீதிகள் உண்டு

அன்றைக்கு நான் மட்டுமே முயன்று இத்தனைக்கும் தனி ஒருவனாய் பொதுநல வழக்காய் கொண்டு சென்று போராடிய போராட்டங்கள் பலருக்கும் நினைவு மறதியாக இருக்கலாம்.
இன்றைக்கு  காவேரியை பற்றி பேசுவர்கள் நினைக்க வேண்டும்.. 28 ஆண்டுகள் கடந்து விட்டது…
#CauveryWater
#காவேரி
#தேவகவுடா_காவேரி

கே எஸ் இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost
26-9-2023.

Monday, September 25, 2023

#*இந்துமகாசமுத்திரம்* *சீனாஆதிக்கம்* #*இந்து மகாசமுத்திர* *பாதுகாப்பு -இந்தியா* #*Indianocean China* #*இலங்கை #*Srilanka* #*டீகோகார்சியா* #*DiegoGarcia America base* #*IndianSecurity*



————————————
ஒரு காலத்தில் இந்தியாவின் தெற்கே முக்கடலும் சங்கமிக்கும் இந்து மகா சமுத்திரம் அமைதி நிலவும் மண்டலமாக இருந்தது. இரண்டு உலகப் போர்களிலும் கூட அவற்றில் எந்த சலனமும் இல்லை.நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த சமுத்திர பகுதியில் அமெரிக்கப் படைக்கான ஒரு ராணுவ தளத்தை காலத்தில் மையப்பகுதியில் டீகோ கார்சியா நிறுவினார். இது சீசெல்சு தீவுக்கு சொந்தமான தீவை தனக்கு சொந்தமானது சொல்லிக்கொண்டு,பிரிட்டன் குத்தைக்கு எடுத்து அமெரிக்காவுக்கு கீழ் வார குத்தைக்கு விட்டுள்ளது.கடந்த 1973 ல் இந்திரா காந்தி காலத்தில் பல்வேறு எதிர்வினைகள்,பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அந்த தளம் வாபஸ் வாங்கப்பட்டது. 



இக்கடலின் திரும்பவும் டீகோ கார்சியா தீவில் என்னும் இடத்தில், ஐக்கிய அமெரிக்காவும் தற்போது கப்பற்படை தளம் அமைத்துள்ளனர்.

 கோ கார்சியா(Diego Garcia) என்பது இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் நிலநடுக் கோட்டிற்கு தெற்கே அமைந்துள்ள ஒரு பவளத் தீவு ஆகும். இது பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் ஒரு பகுதியும், இம்மண்டலத்தில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளில் ஒன்றும் ஆகும். 1814 ஆம் ஆண்டில் பிரித்தானியா இத்தீவுகளை உரிமை கோரியது. பின்னர் 1965 ஆம் ஆண்டில் இவற்றைப் பிரித்தானிய தனது பிராந்தியமாக இணைத்துக் கொண்டது. இத்தீவுகளில் தியேகோ கார்சியா மிகப் பெரியதும், குடிமக்கள் அற்ற ஒரேயொரு தீவுமாகும். டீகோ கார்சியா தான்சானியா கரையின் கிழக்கே 3,535 கிமீ (2,197 மைல்) தூரத்திலும், இந்தியாவின் தென்முனையில் (கன்னியாகுமரியில்) இருந்து தென்-தென்மேற்கே 1,796 கிமீ (1,116 மைல்) தூரத்திலும், ஆத்திரேலியாவின் மேற்குக் கரையில் இருந்து 4,723 கிமீ (2,935 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. தியேகோ கார்சியா சாகோசு தீவுக் கூட்டத்தில் சார்கோசு-இலட்சத்தீவு குன்றின் தென்கோடியில் உள்ளது.

டீகோ கார்சியாவில் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை தனது தேவைக்கான உதவித் தளத்தை இங்கு வைத்துள்ளது. பெரும் கடற்படைக் கப்பல் மற்றும் நீர்மூழ்கி உதவித் தளம், படைத்துறைத் தேவைக்கான வான்படைத் தளம், தகவல் தொடர்பு, விண்வெளித் தொடர்புத் தளம் அகியவை இங்கு பேணப்படுகின்றன

இன்றைய அளவில் இலங்கை அம்மந் தோட்டா , பட்டு வழி பாதை, கொழும்பு கிழக்கு துறைமுக நிறுத்தம்,கச்சத்தீவுவரை,  யாழ்ப்பாணம் பகுதிகளிலும் சீனா ஆதிக்கம் பெருகி இருக்கிறது.

இந்து மகா சமுத்திரத்தில் சீனா மாதம் ஒன்று வீதமாக ஆறு போர்க்கப்பல்களை  இறக்கி உள்ளது. 2019 வரை சுமார் 45 சீனப் படைப்பிரிவுக் கப்பல்கள் இந்து மகா சமுத்திரத்தில் உலவுகின்றன.
அதில் பிரச்சனைக்குரிய யுவான்சுவாங் 5 என்ற கப்பலும் அடக்கம்.இந்த வாரம் இன்னொரு சீனா ஆய்வு கப்பல் அவர் இருக்கிறது. #Shi_Yan6, a Chinese ocean research vessel has entered the Malacca strait, displaying its destination as Indian Ocean #India #indianocean One more #Chinesen- Colombo -Bay of Bengal ;the vessel is expected to run an 80-day sea operation in the Indian Ocean Region .
- sources 
மீன்டும் இந்து மகா சமுத்திரத்தில் சீனா உளவுக்கப்பல் வருகிறது.சில மதங்கள் முன்
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க கூட்டு பாதுகாப்பு ராணுவ பயிற்சிகளும் இங்கு நடந்தது.இன்னொரு பக்கம் ஜப்பான் எண்ணெய் (oil) ஆய்வு பணிகள.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் முகமாகவும் அவற்றைச் சமாளிக்க வேண்டியும் இந்திய ராணுவம் கிழக்கு ஆப்பிரிக்க தீவுநாடான மொரிசியஸிலும்   மத்திய கிழக்கு நாடான ஓமன் கடல் பகுதியிலும்  தங்களது ராணுவ தளத்தை நிறுவிக் கொண்டிருக்கிறது.

அங்கே ராணுவ வீரர்களுக்கான கட்டமைப்புகள் நவீன தொழில்நுட்பக் கருவிகள் ராடார் வசதியுடன் இந்தத் தளங்கள் பல கோடி செலவில் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தக் கடல் பகுதியில் இந்தியாவிற்கு சவால் விடும் வகையில் ஆதிக்க நாடுகள் சூழ்ந்து வருவது ஒரு ஆபத்தாகவே பார்க்க வேண்டிய விசயம்.

இன்றைய மத்திய அரசு இதை உன்னிப்பாக கவனித்து நாட்டின் பாதுகாப்பு கருதி அனேக முன்னேற்பாடுகளை செய்து வருவது பாராட்டுதற்குரியது.  இதன் அருகே இருக்கும் அன்றைய, சூயஸ் கால்வாய் பிரச்சனயை போல ஆகி விட கூடாது.

நறுமணத் திரவியங்ளையும் பல்வேறு வணிகப் பொருட்களையும் பல நூறு ஆண்டுகளாக சுமந்து அலைந்த இந்திய பெருங்கடலின் கப்பல்கள் போக வாஸ்கோடகாமா, மரக்கோ போலே என பலர்  மற்றும் பல்வேறு காலனி வணிகர்களும் வந்து போன இந்து மகா சமுத்திரத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவது உலக நாடுகளின் ஜனநாயக பண்பு மட்டும் அல்ல அதை ஒட்டி ஏற்படும் வளர்ச்சிகளுக்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்பது தான் நமது விருப்பமும். உலகின் நிலப்பரப்பில் 20 சதவீத இடத்தை ஆழ்ந்தும் அகன்றும் கொண்டிருக்கிறது இந்திய பெருங்கடல். அதன் வளத்தை காக்க வேண்டியது நமது கடமை.

#இந்துமகாசமுத்திரம்_சீனாஆதிக்கம்
#இந்துமகாசமுத்திரபாதுகாப்பு_இந்தியா
#indianocean #இலங்கை #Srilanka
#டீகோகார்சியா #இந்துமகாசமுத்திரம
#DiegoGarcia

K.S.Radhakrishnan 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
25-9-2023.
‪(Pic-The Hindu 26-9-2023.‬)


Obstacles cannot crush me; every obstacle yields to stern resolve.

I am in politics with all setbacks because of the conflict between good and evil, and I believe that in the end good will triumph.

Politicians should resist the temptation to consider themselves experts in fields where they have no experience.
***
Obstacles cannot crush me; every obstacle yields to stern resolve.

*நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மோதலால் அனைத்து பின்னடைவுகளுடன் அரசியலில் இருக்கிறேன், முடிவில் நன்மையே வெல்லும் என்று நம்புகிறேன்*.

 *அரசியல்வாதிகள் தங்களுக்கு எந்த அனுபவமும் இல்லாத துறைகளில் தங்களை வல்லுனர்களாகக் கருதும் ஆசையை எதிர்க்க வேண்டும்.*
 ***
 *தடைகள் என்னை நசுக்க முடியாது;  ஒவ்வொரு தடையும் கடுமையான தீர்மானத்தை அளிக்கிறது*.

 #ksrpost
 25-9-2023.


Sunday, September 24, 2023

#அண்ணா #தசாவதானிபானுமதி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசவேண்டாம்.



•••••
சமீபத்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல் வெகு நாட்களாகவே மறைந்த முதல்வர் அண்ணா மற்றும் தசாவதானி பானுமதி   இருவர் பற்றியும் உண்மைக்கு மாறாக, முரணான விதத்தில், தவறான கண்ணோட்டத்துடன் இங்கே பலரும் வதந்தியாக பேசிக் வருகிறார்கள்.

நடிகை பானுமதி அம்மா எல்லோரையும்  மிஸ்டர் எம்ஜிஆர் மிஸ்டர் சிவாஜி கணேசன் என்று பெயர் சொல்லி தான் கூப்பிடுவார். ஆந்திர முதல்வராய் இருந்த  திரு ராமராவ் அவர்களை அண்ணா என்று அழைப்பார்.

கலைகளில் தீவிர மனோநிலையையும் இல்லத்தில் அதீத பக்தி மார்க்கத்தையும் கொண்டவர் திருமதி பானுமதி அவர்கள். எளிதில் யாரையும் அருகில் அண்ட விட மாட்டார்.
தனக்கு கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்துவிட்டு யாருடைய தயவும் இன்றி வெளியேறி செல்கிறவர் அவர். பலமுறை அவரை நடிக்க வற்புறுத்தி கேட்டுக்கொண்ட பிறகுதான் தன்னுடைய கௌரவத்திற்கு இழுக்கு வராத பாத்திரங்களை மட்டும் கம்பீரமாக ஏற்று நடித்து திரையுலகில் வலம் வந்தவர்.

எனது மனைவியின் குடும்பத்துக்கு நெருங்கியவர்.திருமணத்திற்கு வர இருந்தும் சில தவிர்க்க இயலாத காரணங்களால்  அவர் வர இயலவில்லை.  வெளி நாட்டுக்கு சென்று திரும்பிய உடன் எங்களை அழைத்து உபசரித்து வாழ்தினார்.

ஒழுக்கம் விஷயத்தில் நெருப்பை போன்றவர்.

யாருக்கும் அடிபணியாதவர்.

பொது வாழ்க்கைக்கு அல்லது கலைக்கு என  ஒருவர் வந்து விட்டால் அவர் குறித்து யாரும் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம் என்பது மாதிரியான நபர்கள் சற்று நிதானமாக தனது  கருத்துக்களை சொல்ல வேண்டும்! வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது மாதிரி இருக்க கூடாது.
நாகரீகம் முக்கியம்.

இதையெல்லாம் எளிதில் நானும் கூட கடந்து போக முடியும். திருமதி பானுமதி அவர்களை முற்றிலும் அறிந்தவன் என்கிற முறையில் இவ் வதந்திகள் வெறும் வாயை மெல்லும் அவல் தான்.

அவர் ஒரு கலைகளின் அரசி.
சுயமரியாதையிலும் சுய கௌரவத்திலும் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு நெருப்பை போன்றவர்.

இறந்தவர்களை அவர்களின் மகத்தான செயலின் பொருட்டு நினைவு கூறுங்கள். அரசியலிலும் கலைகளிலும் இருவரும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-9-2024

#*எனதுசுவடு-பகுதி41* நான் கொஞ்சம் அதிகமாய் தாங்கிக்கொண்டேன் நான் கொஞ்சம் அதிகமாய் விரும்பிவிட்டேன் நான் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே நம்பிவிட்டேன்

#*எனதுசுவடு-பகுதி41*

நான் கொஞ்சம் அதிகமாய் தாங்கிக்கொண்டேன்
நான் கொஞ்சம் அதிகமாய் விரும்பிவிட்டேன்
நான் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே நம்பிவிட்டேன்

நானும் எல்லோரும்போல்
வந்தால் வரட்டும் போனால் போகட்டும்
என்ற 
அற்பக்காதலொன்றை 
நிகழ்த்தியிருக்கவேண்டும்

கே. எஸ்.இ ராதாகிருஷ்ணன் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார். 
#ksr (https://m.youtube.com/hashtag/ksr), #ksrvoice (https://m.youtube.com/hashtag/ksrvoice), #ksradhakrishnan (https://m.youtube.com/hashtag/ksradhakrishnan)
#yenadhusuvadu (https://m.youtube.com/hashtag/yenadhusuvadu)

#எனதுசுவடு
#KSRPost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
24-9-2023.
https://youtu.be/MddNo46DKhI?si=Ns6xDoJioIxKwN-L

#*கீதா மேத்தா* #*பிஜி பட்நாயக்* #*திமுக -அதிமுக இணைப்பு 1979 தமிழக அரசியல் களம்* #*Geetha Mehta* #*Biju Patnaik* #*Merger of DMK-AIDMK 1979* #*Naveen Pattnaik*

#*கீதா மேத்தா* 
#*பிஜி பட்நாயக்* 
#*திமுக -அதிமுக இணைப்பு 1979 தமிழக அரசியல் களம்*
#*Geetha Mehta*  #*Biju Patnaik* 
#*Merger of DMK-AIDMK 1979* 
#*Naveen Pattnaik*
—————————————
My friend, Geetha Mehta, the renowned English novelist, sadly passed away in Delhi last week. She was the daughter of Biju Patnaik, one of the founders Indian modern politics, Close to M K Gandhi,
the former Union Minister and Chief Minister of Odisha. Nehru liked aircraft pilot also.Interestingly, Biju Patnaik played a pivotal role, in merger of DMK -AIDMK 1979; bringing together two iconic figures, MGR and Kalaignar, at a meeting held in Tamil Nadu State Guest House, Chepauk. But his efforts turned futile.  I noticed that Naveen Patnaik, the current Chief Minister of Odisha and Geetha Mehta's brother, did not mention his sister's passing on his social media profiles. This approach reflects a commendable separation of family matters from the realm of politics. It serves as an admirable example of how politics should ideally operate, without undue influence of familial connections. In a political landscape often characterized by dynastic trends, Naveen Patnaik's decision to maintain this distinction between family and politics is praiseworthy. His silence on his sister's passing demonstrates his commitment to this principle.







எனது நண்பர்,இலக்கிய படைப்பாளி கீதா மேத்தா ஒரிசா முன்னாள் முதலமைச்சர், முன்னாள் மத்திய அமைச்சர் பிஜி பட்நாயக்கின் மகளும் இந்நாள் ஒரிசா முதலமைச்சரான நவீன் பட்நாயக்கின் அக்காளும் ஆவார். தொடக்கத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிஜ்ஜிலும் பயின்றார். கீதா மேத்தா கதைகளையும், கதைகள் அல்லாத பிற நூல்கள் ஆகியவற்றையும் எழுதினார்.அவற்றில் இந்திய வரலாறு, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய பல செய்திகள் உள்ளன. ஆங்கில நூல்களை எழுதியதோடு, இங்கிலாந்து, அமெரிக்கா ஐரோப்பா ஆகிய பகுதிகளின் தொலைக்காட்சிகளுக்காக ஆவணப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். வங்காளதேசப் போரைப் பற்றிய ஆவணப் படங்களும் தயாரித்து இருக்கிறார். கீதா மேத்தாவின் கணவரான சானி மேத்தா, நூல்கள் பதிப்புத் தொழில் செய்கிறார். இவர்களுடைய குடும்பம் நியூயார்க்கில் உள்ளது.

ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தன் சகோதரி மறைவு குறித்த துயரத்தை தன் மனதில் கொண்டார். தனது சமூக ஊடகங்களில் கூட வெளிப்படுத்த வில்லை.
தனது குடும்பம் தன் பொது வாழ்கையை எப்பொழுதும் இணைத்து பார்ப்பதும் இல்லை நவீன். இன்று நம்பர் ஒன் இந்தியாவின் நேர்மையான அரசியல் தலைவர். பிஜி பட்நாயக்கின் மகனாக அரசியல் களம் புகுந்த நிலையில் ஆதிக்க குடும்ப அரசியலை வெறுப்பவர்.

இவரின் தந்தை பிஜு பட்நாயக்கின் (செப்டம்பர் 12, 13-1979 இல்) தமிழகத்தின்  அரசியலில் மாஸ்டர் பிளான் வெற்றி பெற்றிருந்தால் தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறுபட்டதாக இப்பவும்  இருந்திருக்கலாம். இப்போதும் தொலைதூரக் கனவாக தோற்றமளிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார் - திமுக மற்றும் அதிமுக இணைப்பு.  

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகளில்.
பிஜு பட்நாயக் ஜனதா கட்சியின் தலைவர் திமுக மற்றும் அதிமுகவை இணைக்கும் யோசனையை பட்நாயக் கொண்டு வந்தார்.

திமுகவின் பெயரையும், அண்ணா இருந்த அதிமுகவின் கொடியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கருணாநிதியின் நிபந்தனைகளில் அடங்கும். மேலும், எம்.ஜி.ஆரை முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இணைந்த கட்சியின் தலைவராக கலைஞர் இருக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். நிபந்தனைகளைக் கேட்ட பட்நாயக், தி.மு.க.வின் தலைவரைக் கட்டிப்பிடித்து, சாத்தியமற்ற நிபந்தனைகளை அவர் முன்வைப்பார் என்று நினைத்ததாகக் கூறினார்.

மறுநாள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கலைஞர் - எம்ஜிஆர் சந்திப்புக்கு பட்நாயக் ஏற்பாடு செய்தார். விருந்தினர் மாளிகையில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.அன்பழகன், அதிமுகவின் நாவலர் வி.ஆர்.நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் இருந்த நிலையில், மற்றொரு அறையில் எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இரு தரப்பினரும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அந்தந்த கட்சிகளின் அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டி, இணைப்பு குறித்து தீர்மானங்களை நிறைவேற்ற தலைவர்கள் முடிவு செய்தனர்.

பின்,மறுநாள் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., இணைப்பு குறித்து எதுவும் பேசவில்லை. இரு கட்சிகளையும் இணைக்கும் முன்மொழிவு இறந்தது போல் ஆனது.

••••
கீதா மேத்தா தனது 80 வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.  கனடிய இந்திய எழுத்தாளர் என்று அறியப்பட்ட இவர் என்னுடைய மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர். அவரின்
இழப்பு தனிப்பட்ட முறையில் துக்கரமானது. அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியும் வணக்கங்களும்.

கதைகள் மற்றும் கட்டுரைகள் பலவற்றையும் எழுதி  உலகப் புகழ் பெற்ற கீதா மேத்தா மிகச் சிறந்த ஆவணப்பட இயக்குனரும் ஆவார், "எரிவர் சூத்ரா"  எனும் நூல் இவரது  மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகும்! பல சிறப்புகளைப் பெற்ற கீதா மேத்தா பிரசித்தி பெற்ற முன்னாள் ஒரிசா மாநில முதல்வர் பிஜுபட்நாயக் அவர்களின் புதல்வியும் ஆவார்!

மதிப்பிற்குரிய  பிஜு பட்நாயக் அவர்கள் அக்காலத்திய நேரு அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மிகப் பெரும் முக்கியமான ஆளுமையும் கூட. காமராஜருடனும்  பிரதமர் நேருவுடனும் இணைந்து பல முக்கியமான  மக்கள் நலத் திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்.

பிற்காலத்தில் திருமதி இந்திரா காந்தி அவர்களின் சில பிடிவாத போக்குகளால் மனம் கசந்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி வந்தவர்.
அவருடைய புதல்வர்தான்  இன்றைய ஒரிசாவின் மாநில முதல்வர் நவீன் பட்நாய்க் ! தந்தையைத் தொடர்ந்து மிகச் சிறந்த நல்லாட்சியை அங்கு தந்து கொண்டிருக்கிறார். இந்திய முதல்வர்களில் குறிப்பிட தகுந்த செயலாற்றலும் மாநில மக்களின் நம்பிக்கையை சிறப்பாக பெற்ற வருமான நவீன் பட்நாயக் இன்று தன்  சகோதரி கீதா மேத்தா அவர்களின் இழப்பைச் சந்தித்து இருக்கிறார்.

 அப்பிடியான இழப்பை வெளியே விளம்பரங்கள் ஏதும் செய்யாமல் அல்லது அதையே
  துக்கநாளாக அறிவித்து இரக்கம் தேடாமல்    மிகுந்த மனவலியுடன் தனக்குள்ளேயே தன் குடும்பத்திற்கு உள்ளேயே அவருக்கான இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு மேற்கொண்டு
  அரச காரியங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறார். ஒரு பக்குவமான பாரம்பரியத்தில் பிறந்து நல்ல மன உயரங்களோடு மக்களாட்சி செய்து வரும்  இன்றைய ஒரிசா முதல்வர் நவீன்பட்நாய்க் அவர்களின் துக்கத்தில் இணைந்து அவருக்கான ஆறுதல்களை விழைகிறேன்!

#கீதாமேத்தா #பிஜிபட்நாயக் 
#திமுக_அதிமுக_இணைப்பு1979_தமிழகஅரசியல்_களம்
#GeethaMehta  #BijuPatnaik 
#Merger_of_DMK_AIDMK_1079 
#NaveenPattnaik

#ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
24-9-2023.

Saturday, September 23, 2023

முந்திரிகொத்து.... தென்மாவட்டங்களின்பலகாரம் (தின்பண்டம்) சுசீயம்,முட்டைகோஸ் ,குல்குந்து, மஸ்கட் அல்வா… என பல உண்டு.

#முந்திரிகொத்து....
தென்மாவட்டங்களின்பலகாரம்( மதுரை- தேனி- தின்டுக்கல் மாவட்டங்களின் தெற்கே)
(தின்பண்டம்) சுசீயம்,முட்டைகோஸ் ,குல்குந்து, மஸ்கட் அல்வா… என பல உண்டு.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
23-9-2023.


#*You Must Know Your Constitution * -#*Fali S.Nariman*

#*You Must Know Your Constitution *
-#*Fali S.Nariman*
—————————————
26 November 1949 marks the date when the longest constitution in the world was formally adopted to guide the largest democracy in the world. It effectively transformed the British Dominion of India into one nation―the independent Republic of India. The supreme law of the land set forth the workings of Indian democracy and polity, and its provisions aimed to secure justice, liberty, equality, and fraternity for the people of India. As drafted and as conceived, the constitution makes provision for a functioning democracy and not an electoral autocracy, and this is how it has to be worked. It is therefore imperative for all citizens to familiarise themselves with its provisions.




In this definitive tome, the author (who commenced his legal practice in the year the constitution was enacted) presents his comments in a style that is comprehensive, lucid, and systematic. The book traces the history and the origins of India’s document of governance and explains its provisions. Some of the salient features of the book include:

• An educative and informative exposition of the different parts of the Indian Constitution, including a bird’s-eye view of―and with comments on―all the three hundred and ninety-five articles of the constitution and additions made by constitutional amendments.
• Provides references of critical cases and prominent constitutional developments up to 31 July 2023.
• Insightfully describes the structure, powers, and directive principles of government institutions.
• Contains updated judicial pronouncements and legislative and constitutional amendments.

In essence, You Must Know Your Constitution is an immensely readable and insightful compendium, inter alia, for judiciary aspirants, academicians, legal and administrative authorities, policymakers, research scholars, and students as well as for general readers who are interested in exploring the manifold facets of India’s core document of governance.

@hayhouseindia
@penguinindia

#You_Must_Know_Your_Constitution -#Fali_S_Nariman
#Constituionofindia 

#ksrpost
23-9-2023.


‘India lives in its villages’. Real India

The Indian Village : Rural Lives in the 21st Century by Surinder S. Jodhka

‘India lives in its villages’.
This statement popularized by Mahatma Gandhi is often referred to in discussions about the country, its past, and its possible future. But what exactly is the Indian village? In the most basic sense, the ‘village’ is a kind of human settlement, always standing in contrast to the ‘town’ or ‘city’. Yet, it is also an idea, one which has undergone myriad shifts over the course of our nation’s history.

In The Indian Village: Rural Lives in the 21st Century, award-winning sociologist Surinder S. Jodhka critically examines the changing nature of the village in India, both as an idea and as a lived reality. Reflecting on the colonial construction of India as a land of village republics, a representation that was turned on its head in different ways by Indian nationalists in the early twentieth century, and the post-liberalization nation, this book provides a detailed account of how rural lives have been transformed in India through the decades.









 The book also looks at India’s modern villages to showcase the current diversity within agrarian and rural realities with specific focus on the processes of development and democracy in rural areas.
The Indian village, the author suggests, is not a relic of the past. It has always been a dynamic reality and it lives on in an active relationship with the wider world. Besides its many other aspects and processes, it enables the city to prosper, just as the city keeps the village going. Radical, innovative, and grounded in impeccable scholarship, The Indian Village is a seminal study of rural India.

@alephbookco

Friday, September 22, 2023

"பணி செய்தவனை நீங்கள் முதுகில் குத்தியிருக்கிறீர்கள்."-KS

#ksrvoice #radhakrishnan #கேஎஸ்ஆர்
'அரசியலில் புரியாத புதிர்கள்' என்னும் தொடரில் உங்களுக்காக. அரசியலில் விடை தெரியாத பல விடயங்கள் பற்றி பேசிவருகிறார் கே எஸ் இராதாகிருஷ்ணன்.
"பணி செய்தவனை நீங்கள் முதுகில் குத்தியிருக்கிறீர்கள்."

#ksrvoice, #radhakrishnan, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #இராதாகிருஷ்ணன், #அரசியல், #புதிர், #புரியாதபுதிர், #kkssrramachandran, #ramachandransatturramachandran, #kkssrramachandranspeech, #kkssrramachandran press meet, #kkssrramachandran
#kkssrramachandranmla, #MinisterUdhayanidhiStalin youtu.be/XKLNWw2rsnk?si…

Thursday, September 21, 2023

இனிதே துவங்கப்பட்ட சினிமாவுக்கான தனி இணைய இதழ்!

இனிதே துவங்கப்பட்ட சினிமாவுக்கான தனி இணைய இதழ்!
https://thaaii.com/2023/09/21/cini-rocket-website-launch/
பல லட்சம் வாசகர்களைச் சென்றடைந்திருக்கிற தாய் இணைய தளத்தைத் தொடர்ந்து, அதே குழுமத்திலிருந்து சினிமாவுக்கென்று தனி வடிவமைப்புடன் இன்று (21.09.2023) வெளி வந்துள்ளது - சினி ராக்கெட் (https://cinirocket.com/) இணைய தளம்.


Wednesday, September 20, 2023

*அரசியல் சாசன மசோதாக்கள்* #*Constitutionamendmentbills 105/128* #*சட்டங்கள்4000 from1947* #*புதியநாடளுமன்றக்கட்டிடம்* #*Indian Parliament* #*Art356 etc invoked123 times*

#*அரசியல் சாசன மசோதாக்கள்*
#*Constitutionamendmentbills 105/128*
#*சட்டங்கள்4000 from1947*
#*புதியநாடளுமன்றக்கட்டிடம்* 
#*Indian Parliament*
#*Art356 etc invoked123 times*
—————————————
நவ இந்தியாவின் புதிய நாடளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டு அதில் முதல் மசோதாவாக (128ம்திருத்தம்)மகளிருக்கான இட ஒதுக்கீடு 33% பரிந்துரைக்கப்பட்டுள்ளது.





















சுதந்திரம் பெற்ற 1947ற்குப் பிறகு
நமது மதிப்புப் பெற்ற பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் 4000 ற்கும் மேலான மசோதாக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.  அவை சட்டங்கள் என நடை முறைக்கு வந்தன.




அதில் சட்ட சாசன Constitution amendment bills)வரைவுக்கு உட்பட்டு 128 மசோதாக்கள் இறுதியை எட்டிய போதும் 105 மசோதாக்கள் சட்ட வடிவம் ஆக்கப்பட்டு  பழைய பாராளுமன்றத்தின்  கட்டிடத்தில் மூலமே நடைமுறைக்கு வந்துள்ளன. என்பதை இங்கே ஞாபகம் ஊட்ட வேண்டி இருக்கிறது!

தொடரட்டும் மக்கள் உரிமைகளும் நலன்களும்.

#அரசியல்சாசனமசோதாக்கள்
#Constitutionamendmentbills
#புதியநாடளுமன்றக்கட்டிடம்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்,
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost,
20-9-2023.

#*தமிழக முதல்வரின் பார்வைக்கு*, #*இதுதான் தங்களின் தமிழ் இலக்கிய புரிதலா*? *கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை*, #*கு.அழகிரிசாமி கவிஞர் மீராவுக்கு சிலைஇல்லையா*?

#*தமிழக முதல்வரின் பார்வைக்கு*,
#*இதுதான் தங்களின் தமிழ் இலக்கிய புரிதலா*?
*கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை*,
#*கு.அழகிரிசாமி கவிஞர் மீராவுக்கு சிலைஇல்லையா*?
————————————
கவிஞர் தமிழ் ஒளிக்கு 
பல்கலைக்கழகத்தில் சிலை வைப்பது மகிழ்ச்சி தான். இன்றைய நவீன கூட்டணி சார் இடதுசாரிகளின் வற்புறுத்தலின் பேரில் அல்லது சிபாரிசுகளின் பேரில் இந்த ஏற்பாட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் வானம்பாடி காலங்களில் இருந்து கலைஞருக்கு நெருக்கமாக இருந்தவரும் அன்றை இளைஞர்களின் மனதில் நீங்க இடம்பெற்று வருமான திராவிட சிந்தனைகளின் முன்னோடி கவிஞர் மீரா அவர்களுக்கு இந்த பார்வை ஏன் செல்லவில்லை. பகுத்தறிவும் தமிழ் வாழ்வின்  பண்பாட்டு நுட்பங்களை எல்லாம் திறம்பட கதைகளாக எழுதி மறைந்து போன 
கு .அழகிரிசாமி அவர்கள் மீது ஏன் இந்த பார்வை செல்லவில்லை. சந்தர்ப்பவாத கூட்டுகளுக்காக இத்தகைய விளம்பரங்களைச்செய்துகொண்டு  வரும் இன்றைய அரசு திராவிட இயக்கத்தை தோள் கொடுத்து தாங்கி நின்ற ஒரு பாரம்பரியத்தையே கைவிட்டு செல்கிறது என்பதை தவிர இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை .

குறிப்பாக இன்று மாறிவரும் நவீன இலக்கியப் போக்குகளை மேற்சொன்ன இருவரும் மாற்றியமைத்து இருக்கிறார்கள். அதை எடுத்துச் செல்லவும் அத்தகைய கலை இலக்கிய பண்பாட்டை வளர்த்தெடுக்கவும் இன்றைய அரசிற்கு அதை எடுத்துச் சொல்லவும் ஆட்கள் இல்லாமல் போய்விட்டது காலத்தில் பெரிய இழப்புதான்.
CMOTamilNadu  M. K. Stalin

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
20-9-2023

Tuesday, September 19, 2023

#Indian Parliament Diaries

#Indian Parliament Diaries 

How NDA govt lost by 1 vote due to dishonesty of Congress n simplicity of Vajpayee

Today in farewell speech at old parliament, Modi spoke abt Vajpayee govt lost by 1 vote



But People who born in 90s or after don't know abt how he was defeated




Hats off to Meneka ji for her remarkable speech today..an historical..

Voters of her constituency for electing a very right candidate for the past 35 years..

https://youtu.be/L8mE2lQgm8w?si=X81LeSXk9be286i7

நாட்டின் விடுதலைக்கு பின் பழைய நாடாளுமன்றத்தில் இது வரை4,000 சட்டங்கள் நிறைவேற்றம்! 

#Indian_Parliament 

#ksrpost
19-9-2023.


Indian Parliament

Picture of the day..
Last day of #

 old house.
19-9-2023.

#*இந்தியா கனடா உறவு மோசமடைகிறது* #*கொந்தளிப்பில் முதிர்ச்சியடையாத கனடா பிரதமர் ஜஸ்டின்ட் ரூடோ,** #*இந்திய தூதரை வெளியேற்றியது கனடா* *கடந்த கால சில நிகழ்வுகள்*



————————————
"ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற சீக்கியத் தலைவரின் கொலைக்கு இந்திய ஏஜெண்டுகள்  திட்டமிட்டனர்" என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய தூதரக அதிகாரியை கனடாவில் இருந்து வெளியேற்றினார்.

"இ இந்தியாவை "வடகொரியா" வைப் போல ஒரு முரட்டு நாடாக மாற்றுகிறது" எனவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. 

இந்தியா விடுதலை பெற்ற காலம் முதல் 
அமெரிக்கா,ரஷ்யா மற்ற நாடுகளின் உறவை
போல கனடா உடன் பெரிய நட்பு இருந்தது இல்லை. இவர்கள் விடுதலைக்கு முன்பு பிரிட்டன் பிரதமர் சர்ச்சிலை நம்பியவர்கள். சர்ச்சில் இந்தியாவையும் காந்தியையும் வச படியவர்.காமன்வெல்த் அமைப்பிலும்  கனடா நமக்கு பெரிதாக உறவு காட்டியதும் இல்லை.

இந்திரா காந்தி படு கொலை செய்யப்பட்ட போது அவரின் படங்களை கனடாவில எரிக்கபட்டது என செய்திகள் வந்தன. அங்கு பிரதமர் ராஜிவ் காந்தி மீதும் எதிர்வினைகள் ஆற்றினர்.

தற்போது ட்ரூடோ.

 •திருமணம் முடிந்தது
 •ஜக்மீத்துடனான நட்பு விகாரமானது
 •சர்வதேச தனிமைப்படுத்தல்
 •G20 இல் கவனிக்கப்படவில்லை
 •உலகளாவிய ஊடக விமர்சனம்
 •விமானம் முறிவு
 •மோடியின் கண்டனம்
 •அரசியல் நிச்சயமற்ற தன்மை
 •வீட்டில் புகழ் குறைவது தொழிலை அச்சுறுத்துகிறது

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா- இந்தியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஹர்தீபை இந்திய அரசு கொன்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கனடா உயர் அதிகாரியை மத்திய அரசு வெளியேற்றியது.

இந்தியாவில் தேடப்பட்டு வந்த ஹர்தீப்நிஜ்ஜார், கடந்த ஜூன் 18ம் தேதி, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பல ஆண்டுகளாக, நிஜ்ஜாரின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து இந்தியா தனது கவலைகளை பலமுறை கனடாவிடம் தெரிவித்தது. காலிஸ்தான் அமைப்பு இந்தியாவிற்கு எதிராக, போஸ்டர் ஓட்டுதல், போராட்டம் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது: ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறினர் என அபத்தமாக பேசியுள்ளார்.

கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது.

கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜூலி கூறியிருப்பதாவது: ''ஜஸ்டின் ட்ரூடோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம்.

அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் தலைவராக செயல்பட்டவர்'' என்றார்.

இது குறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது: கனடாவில் நடக்கும் இந்தியாவிற்கு எதிரான செயல்களில் சட்ட ரீதியிலான நடவடிக்கை தேவை. கனடா அரசு எடுத்த நடவடிக்கை தவறானது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். அதைப் பற்றியே இப்போது பேச வேண்டும்.

இந்த விஷயத்தில் கனடா அரசின் செயலற்ற தன்மை கவலையாக உள்ளது. இவ்வாறு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே, கனடா உயர் அதிகாரியை மத்திய அரசு வெளியேற்றியது.

ஆனால் இந்த வித்தை அவரை காப்பாற்றாது.

 சவூதி அரேபிய மற்றும் சீன ஜனாதிபதி கூட பல சந்தர்ப்பங்களில் அவரை இழிவுபடுத்தியுள்ளனர். இந்த பையன் வெளிநாடுகளுடனான கனடாவின் உறவை கெடுக்க நரகத்தில் முனைந்துள்ளார்.

கானடாவில் மற்றொரு நாட்டின் உளவாளிக்கு உள் நுழைந்து கொலைச் செய்யலாம் என்ற அளவிற்கு அந் நாட்டின் பாதுகாப்புத் துறை உள்ளதா?


#*இந்தியா_கனடா_உறவு_மோசமடைகிறது
#ஜஸ்டின்ட்ரூடோ

#கேஎஸ்ஆர்போஸ்ட்
 #ksrpost
 19-9-2023.

#India Canada relation Worsens. **#Immature Trudeau in Turmoil**

#India Canada relation Worsens.

**#Trudeau in Turmoil**

I think it’s bigger than we think. His statement against india is on what basis? Are we told that?
No country can just allege, accuse on global platform & walk off

Canada’s outrageous statements against India will have immediate consequences. I think three things are likely to happen: 

1. India to summon Canadian High Commissioner at the highest level to rubbish PM @JustinTrudeau statement.

2. India to reciprocate and throw out a Canadian top diplomat.

3. A strongly worded text and verbal statement against Canadian Government’s actions.

•Marriage ended
•Friendship with Jagmeet strained•International Isolation



•Overlooked at G20
•Global media criticism
•Plane breakdown
•Modi’s reprimand•Political Precariousness



•Diminishing popularity at home threatens career

But this gimmick will not save him.

Even Saudi Arab and Chinese President had snubbed him on many occasions.This guy is hell bent ruining Canada's relationship with foreign countries.

#ksrpost
19-9-2023.

Sometimes it feels so good to just sit by yourself, relax and not talk to anyone .

தோற்றவனின் காவியம் சுவையானது. வாழ்க்கை முழுவதும் நேர்மையாக பணி செய்தும் தோற்றுக் கொண்டே இருந்தவனுக்கு அந்த சுகமான சுமை தெரியும் . அதை ஏற்றுக்கொண்டு கடக்க பக்கவமும் உண்டு. 
அப்போது, Sometimes it feels so good to just sit by yourself, relax and not talk to anyone என. Shakespeare சொன்ன  அர்த்தம் வழி செய்யும்.

#ksrpost
19-9-2023. 


#*Shi Yan6, a Chinese ocean research spy vessel In Indian Ocean* *மீன்டும் இந்து மகா சமுத்திரத்தில் சீனா உளவுக்கப்பல்*….



—————————————
#Shi Yan6, a Chinese ocean research vessel has entered the Malacca strait, displaying its destination as Indian Ocean #India #indianocean One more #Chinesen- Colombo -Bay of Bengal ;the vessel is expected to run an 80-day sea operation in the Indian Ocean Region .
- sources 

மீன்டும் இந்து மகா சமுத்திரத்தில் சீனா உளவுக்கப்பல்….

#Chineseocean_spy_research_ship

#ksrpost
19-9-2023.

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...