Saturday, February 29, 2020

*Constitutional Amendment and Fundamental Rights*

*Constitutional Amendment and Fundamental Rights*
————————————

We often commit a tactical blunder while subscribing to the fallacy that the Fundamental Rights enshrined under the Part III of the Constitution of India (hereinafter, "The Constitution") have been vouchsafed (to us) by the State. Our Constitution just reiterates that individuals possess some basic and inherent fundamental rights and the State must facilitate the enjoyment of such fundamental rights. The Constitution does not bequeath fundamental rights to us; however, it does root for the fundamental rights of the individuals.

The Constitution elucidates the beinghood of such rights and goes on to accord them supreme patronage. Since the fundamental rights do not stem from State and its organs, they should not be entitled to take them away or make them of no use. If we pore over major Supreme Court judgments, we would appreciate the fact that the Supreme Court has, through landmark judgments, acknowledged the paramountcy of the fundamental rights time and again.

To be au fait with the importance of fundamental rights, we can summarily peruse the observation of the Supreme Court in some celebrated cases. To name a few, in the case of A. K. Gopalan v. State of Madras ([1950] S.C.R. 88, 198), fundamental rights have been described as "paramount". In State of Madras v. Smt. Champakam Dorairajan 1951 AIR 226, these rights have been called "Sacrosanct". In Pandit M. S. M. Sharma v. Shri Sri Krishna Sinha 1959 AIR 395, these rights have been termed as "rights reserved by the people". Also, in the case of Smt. Ujjam Bai v. State of Uttar Pradesh 1963 SCR (1) 778, these rights have been termed as "inalienable and inviolable". Not to forget that in the case of Keshvanand Bharti v. State of Kerala, AIR 1973 SC 1461, it was said that fundamental rights constitute the ark of the constitution.

The Supreme Court has also played an imperative role in devising some rights (akin to fundamental rights) which are not categorically and objectively mentioned under part III of our Constitution. Supreme Court has been able to formulate these rights on its own after realizing that certain unarticulated rights are implicit in the enumerated guarantees (Part III of the Constitution).

Amenability of fundamental rights and Article 368 to the Constitution
It is worth noting that in the case of Sajjan Singh v. State of Rajasthan [1965] 1 S.C.R. 933, the Supreme Court held that the fundamental rights enshrined under Part III of the Constitution were not intended to be kept beyond the reach of any future amendments. By logical and necessary implication, we can say that it is not the case that the makers of the Constitution had thought of settling and cataloguing fundamental rights once and for all; rather, they wanted these rights to correspond to the changing circumstances.
We must bear this fact in mind that our Constitution is definitely not a religious book and so it can and must be changed with time. However, it is equally true that the amending power given to the Parliament, though wide in its sweep and reaching every provision of the Constitution, does not enable Parliament to alter the basic structure or framework of the Constitution. (as held in Keshvanand Bharti v. State of Kerala, AIR 1973 SC 1461 case).

It is to be noted that the Parliament derives the power to amend the Constitution from Article 368 to the Constitution but the reason why the Parliament cannot, by way of bringing amendment, change the basic structure of Constitution is, that the power to amend the Constitution cannot be equated with the power to frame the Constitution (a task already undertaken by the Constituent Assembly).

Now, let's look at the bare language of Article 368 (1) to the Constitution. It reads,
368. Power of Parliament to amend the Constitution and procedure therefor
(1) Notwithstanding anything in this Constitution, Parliament may in exercise of its constituent power amend by way of addition, variation or repeal any provision of this Constitution in accordance with the procedure laid down in this article.
If we read the marginal note of Article 368 to the Constitution, it reads, "Power of Parliament to amend the Constitution and procedure thereof". Before 1971, the marginal note of this Article read, "Procedure for amendment to the constitution". It is to be noted that the Constitution (Twenty-fourth Amendment) Act, 1971 is responsible for this sea change.

In fact, in the Case of I.C. Golak Nath And Ors. vs State Of Punjab And Anr. 1967 2 SCR 762, Subbarao C. J. delivered the leading majority judgment which held that, under Article 368, only the procedure to amend the Constitution has been given, whereas the power to amend the Constitution is derived from Entry 97 of List I read with Article 245. To affirm that the Parliament indeed derives its power from Article 368 (to amend the Constitution) and not from Entry 97 of List I read with Article 245, the Constitution (Twenty-fourth Amendment) Act, 1971 came into being.

Now, if we observe the language of Article 368, we would get to know its mandate. In plain terms, this Article deals with the powers of Parliament to amend the Constitution and the procedure to do the same. It states that the Parliament may, in the exercise of its Constituent power, add/remove an article, repeal any provision of the Constitution. Since the present article doesn't deal with the types of amendment envisaged in Article 368 [Article 368 (2), to be precise] and the procedure to amend the Constitution, so we will not go into the related details.

Moving on, we know that as per Article 13 (2) to the Constitution, The State shall not make any law which takes away or abridges the rights conferred by this Part and any law made in contravention of this clause shall, to the extent of the contravention, be void. The question is, whether a 'Constitution Amendment Act' can be termed as 'Law' or not. The present article is essentially an inquiry into this question (and many others) and in this article we would examine various phases through which this question has got its principal answer.
It won't be an erroneous observation to make if we say that the Parliament's power to amend part III of the Constitution has witnessed a transformative journey. In my opinion, this journey could very well be categorised into four episodes. Further, these four episodes would attempt to canvass the journey through which this debate flourished and a definitive conclusion was achieved at the end.

First Episode
With a lot of aspirations our Constitution came into operation in 1950, however, the first test which was faced by the Constitution and specifically by the Part III of the Constitution (consisting of fundamental rights) was in the year 1951. It is noteworthy that in the year 1951, Parliament had enacted the Constitution (First Amendment) Act, 1951 which aimed at curtailing the then fundamental right i.e., right to property. Soon thereafter, the validity of this amendment was challenged in the case of Sri Shankari Prasad Singh Deo vs. Union of India 1952 SCR 89.
In this case, it was argued by the petitioners that Article 13 (2) to the Constitution prohibited the State to come up with any law which takes away or abridges any fundamental right. Not just that, it was also contended that the word 'State' as appears in Article 12 would include 'Parliament' and the word 'Law' in Article 13 (2) therefore, must include an amendment to the Constitution and so by necessary implication, the Constitution (First Amendment) Act, 1951 should be struck down as it goes against the fundamental right enshrined under Article 31.

Before testing the validity of this Amendment Act, Court had to validate the contention of the petitioners that a Constitution Amendment would fall within the meaning of word 'Law' as it appears in Article 13 (2). The Supreme Court was not impressed with the arguments of the petitioners and held that deriving the power from Article 368; the Parliament can very well amend fundamental rights by way of bringing a Constitution Amendment Act.

Court further held that the word 'Law' as appears in Article 13 (2) doesn't include a Constitution Amendment Act, which is passed by the Parliament in exercise of the Constituent power, unlike an ordinary law which is made in exercise of its Legislative power.

The Supreme Court did not find it appropriate to equate a Constitution Amendment Act with ordinary laws made by the Parliament and held that when the Constitution is amended, the Parliament exercises its Constituent power. The Supreme Court was satisfied that ordinary laws may not, but Constituent laws can very well amend fundamental rights enshrined under part III of the Constitution.

Again, in the year 1964-65 Supreme Court got another chance to have a re-look at this powerful verdict in the case of Sajjan Singh. While approving the verdict of Shankari Prasad, the Supreme Court held that "Amendment of the Constitution" would mean that the Parliament, by passing a Constitution Amendment Act under Article 368 can amend any provision of the Constitution (including the Fundamental Rights and even Article 368).

Second Episode
In a surprising turn of events, in the year 1967 Supreme Court almost upset the apple-cart by overruling the two judgments (Shankari Prasad & Sajjan Singh) and thereby breaking the status-quo on this point. Essentially, the Supreme Court in the case of I.C. Golak Nath overruled the then settled law that fundamental rights can be amended by the Parliament.

In this case, the Constitution (Seventeenth Amendment) Act, 1964 faced the test of validity. This Act had inserted certain state acts in the Ninth schedule. Supreme Court ruled that the Constitution in its actual form proposes to give fundamental rights a 'transcendental and immutable' position and hence, the Parliament cannot abridge or take away any of these rights. Hence, this Constitution Amendment Act was held to be invalid.

The 11 Judges bench held by majority (6:5) that Constituent power and Legislative power of the Parliament cannot be distinguished and hence the Parliament does not have that power under Article 368 to abridge or take away any fundamental right, just as it could not do so by enacting an ordinary legislation (this view was against the view taken in the Shankari Prasad and Sajjan Singh case).

Also, the Supreme Court held that an amendment to the Constitution would come under the purview of word 'Law' as it appears in Article 13 (2) and therefore if it violates any of the fundamental rights, it may be declared void. The Court didn't stop there, it further opined that if any such rights provided under part III of the Constitution has to be amended, a new Constituent assembly must be convened for making a new constitution or radically changing it.

The parliament had to overturn this decision, so in the year 1971, it came up with the Constitution (Twenty-fourth Amendment) Act, 1971. The said act added novel wings to the amending power of the parliament and it nullified the effect of I. C. Golaknath judgment.

This Constitution Amendment Act amended Article 13 [clause (4) added] and Article 368 [clause (1) & (3) added and new marginal heading to Article 368 was placed] and it was made obvious that the Parliament (in exercise of power provided under Article 368) has the power to abridge or take away any of the fundamental rights enshrined under part III of the Constitution.

This Constitution Amendment Act created a regime where an amendment to the Constitution (made in accordance with Article 368) was no more considered to be a 'Law' as per Article 13 (2) [see clause (4) to Article 13 and clause (3) to Article 368].

Third Episode
The game of claiming supremacy over one another was nearing to an end. The year 1973 was significant in many ways. This year saw the culmination of a prevailing conflict between Judiciary and Parliament over guardianship of the Constitution. This was the year when the Supreme Court pronounced the judgment in the celebrated case of Keshvanand Bharti v. State of Kerala, AIR 1973 SC 1461 (13 Judges bench). The verdict of this case changed the way Judiciary, Parliament and a common citizen saw our Constitution and the fundamental rights enshrined thereunder.

Essentially, the Constitution (Twenty-fourth Amendment) Act, 1971 along with 25th and 29th Constitution Amendment Act was challenged in this case. Court had to answer the question as to what was the extent of the amending power conferred by Article 368 of the Constitution.

The Court overruled I. C. Golaknath judgment and held that Parliament can very well amend fundamental rights and that Constitution (24th Amendment) Act, 1971 is valid. However, in this case Supreme Court envisaged the 'Doctrine of Basic Structure/Feature' and held that while deriving power from Article 368, the Parliament is not empowered to amend the Basic structure/feature or framework of the Constitution.
In other words, the majority opinion did not accept the unlimited power of the Parliament to amend the Constitution and instead held that Article 368 has implied limitations. Overruling I. C. Golaknath, it was held that Article 368 does not enable the Parliament to alter the basic structure or framework of the Constitution and if Courts declare that a certain fundamental right forms part of the Basic Structure, then the same cannot be abridged or taken away by the Parliament by way of bringing an Amendment Act.

The Court was satisfied that there are inherent or implied limitations on the amending power of the Parliament and Article 368 does not confer unlimited power on the Parliament to amend the Constitution to damage or destroy the essential elements or basic features of the Constitution. Now, the settled position is that while the parliament has the power to amend the Constitution, it cannot abrogate the Constitution in disguise of amending in.

This case turned out to be a kind of proclamation where Supreme Court emphatically laid down that no limitation can be imposed on the powers of Parliament to amend the Constitution (including the part III of the Constitution), but no such amendment can disrupt the basic structure of the Constitution. As of today, many of our fundamental rights have been included under the basic structure doctrine and so if any Constitution Amendment Act abridges or takes away any of such rights then the Amendment Act could be successfully challenged in the Court of law.

This case promptly established the Supreme Court's right to review and, therefore, the Supreme Court got the supremacy on constitutional matters. It could be noted that the power of judicial review is now an integral and essential feature of the Constitution constituting the basic part as per the judgment in the case of L. Chandra Kumar v. Union of India & Ors. (1997) 3 SCC 261]

While the Supreme Court overruled I.C. Golakanth in the case of Keshvanand Bharti, it did not re-establish the supremacy of Parliament. While I. C. Golaknath gave primacy to fundamental rights, Keshvanand Bharti recognised that some other provisions in the Constitution may be equally crucial and if they form the basic feature, they are un-amendable. After Keshvanand Bharti was decided, it became clear that power to amend the Constitution is subject to the doctrine of the basic structure.

Fourth Episode
The Parliament was not satisfied with the verdict of Supreme Court in Keshvanand Bharti case and the doctrine held therein. Also, it was obvious that this doctrine will be practised more in the breach than in compliance. Parliament, in an attempt to steal the thunder of Supreme Court and to nullify the Keshvanand Bharti verdict, enacted the Constitution (Forty-second Amendment) Act, 1976 and clause (4) & (5) were added to Article 368.

It is to be noted that while Clause (5) to Article 368 purported to remove all limitations on the amending power of the Parliament, Clause (4) deprived the courts of their power to call in question any amendment to the Constitution. Most importantly, Clause (4) to Article 368 deprived the citizens of one of the most valuable modes of redress which is guaranteed by Article 32.

As was destined to happen, in the case of Minerva Mills Ltd. & Ors vs Union Of India & Ors 1981 SCR (1) 206 both the clauses were struck down by the Supreme court. Not just that, in this case it was held that a limited amending power itself is a basic feature of the Constitution. Further, Supreme Court in the case of Waman Rao And Ors vs Union Of India (Uoi) And Ors. (1981) 2 SCC 362 clarified that the doctrine of basic structure will apply to amendments (to the Constitution) only if they an Act to that effect is passed after 24-4-1973 (the day when Kehsvanand Bharti case was decided) i.e. it will apply prospectively and not retrospectively to earlier legislations.

Basic Structure Doctrine: The Decider
We have now understood that the Parliament indeed has the power to amend the Constitution (including the power to amend Part III of the Constitution), but if such an amendment attempts to attack the basic structure of the Constitution, then such an amendment shall be held void to that extent. This means that the Court can, in each case check if an Amendment Act to the Constitution abrogates the basic structure of the Constitution, and if it does it could be held void to that extent.

Now, a question which may arise is, if an Act is included in the Ninth schedule, is it open for the Court to check if it attacks the basic feature of the Constitution? Supreme court answered this question in the case of I.R. Coelho (Dead) By Lrs vs State Of Tamil Nadu & Ors (2007) 2 SCC 1. Supreme Court held that even after a law is placed in the Ninth Schedule, its validity could be tested on the touchstone of basic structure doctrine. In this case the Supreme Court stated that Waman Rao rightly held that the Acts inserted in the Ninth Schedule after 24th April, 1973 would not receive the full protection from judicial review.
In the end, it is crucial to note that while it is true that the phrase 'Basic Structure' is not explicitly mentioned anywhere in the Constitution, but this doctrine is legally valid because it was recognised in the case of Kesavananda Bharati. It is a doctrine which has evolved through judicial interpretations.
To name a few, Freedom and dignity of an individual, liberty and republic nature of Indian polity, Judicial review, Federal character, Free and fair elections, Supremacy of the constitution, Rule of law, Powers of SC under Article 32, 136, 142, 147, Power of HC under Article 226 and 227, Sovereignty,. Harmony and Balance between fundamental rights and directive principles, Limited power of parliament to amend the constitution etc. have been included under the umbrella of basic structure of the Constitution by the Courts through various celebrated judgments.

Apart from that, in the case of In Smt. Indira Nehru Gandhi v. Raj Narain [1975 Supp. (1) SCC 1], Chief Justice Chandrachud stated that for determining whether a particular feature or Fundamental Right of the Constitution is part of its basic structure, one has to examine in each individual case the place of that particular feature in the scheme of our Constitution, its object and purpose, and the consequences of its denial on the integrity of the Constitution as a fundamental instrument of the country's governance.

நேர்மையின் அடையாளம் மொரார்ஜி தேசாய்*

*நேர்மையின் அடையாளம் 
மொரார்ஜி தேசாய்*
நேற்று  பெங்களூருவில்  உள்ள காங்கிரஸ்  மூத்தத்  தலைவரான துளசிதாஸ்யப்பாவின்   வீட்டிற்குச் சென்றபோது, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் பிறந்தநாளை (29.02.2020) நினைவுபடுத்தினர்.
மொரார்ஜி தேசாய் 1896 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தார்.  எனவே நான்காண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டு வரும்போது தான் அவருக்கும் பிறந்தநாள் வரும்.

எளிமையையும் நேர்மையையும் தனது அடையாளமாகக் கொண்ட மொரார்ஜி தேசாய், மனதிற்கு சரியென்று பட்டதைப் பேசுபவர். வரதட்சணை வாங்குவதைக் கடுமையாக எதிர்த்த அவர், அதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளில்  இருந்து வெளியேறி  இருக்கிறார். 

மொரார்ஜி  தேசாய் தமிழகம் வந்தபோதெல்லாம் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றால் வரிசையில் நின்று தான் தரிசனம் செய்வார். 

ஸ்தாபன காங்கிரசில் இருந்தபோது அவரைச் சந்தித்திருக்கிறேன். என் மீது அன்பும் பாசமும் கொண்ட மத்திய முன்னாள் அமைச்சர் தாரகேஸ்வர் சின்ஹாவிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து  வைத்தார்.
மொரார்ஜி தமிழகம் வரும்போதெல்லாம் சந்திப்பதுண்டு. எளிமையான உணவையே உட்கொள்வார். பெரிய பந்தாக்கள் இல்லாமல் தம்முடைய அரசியல் பணிகளில் ஈடுபடுவது இவருடைய வழக்கம். 

நண்பர் மதுரை மு.சிதம்பர பாரதிக்கும் நன்றாகத் தெரியும். மதுரையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த போது சர்க்யூட்   ஹவுசில்  தங்குவார். 
ஒருமுறை மதுரை சர்க்யூட் ஹவுசில் தங்கியிருந்தபோது செட்டிநாடு ராஜா சர்.முத்தையா செட்டியாரைச் சந்திக்க மொரார்ஜி விரும்பினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். பின்னர் மொரார்ஜி பிரதமரானதும் மதுரை சர்க்யூட் ஹவுசில் தங்கியிருந்தபோது,   ராஜா சர்.முத்தையா செட்டியார் மொரார்ஜியைச் சந்திக்க விரும்பினார். அப்போது ஜான் மோசஸ், மு.சிதம்பர பாரதி   போன்றோரெல்லாம் ஆட்சேபித்தபோதும், முன்பு நடந்த நிகழ்வை  மனதில்  வைத்துக் கொள்ளாமல் முத்தையா செட்டியாரை சந்தித்தார்  மொரார்ஜி.

ஒரு முறை     திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை சர்க்யூட் ஹவுசில் தங்கியிருந்தோம். அப்போது இரவுநேர உணவு குறைவாக இருந்தது. இதைப்பற்றித் தெரிந்து கொண்ட அவர், எல்லோருக்கும் உணவு வந்த பின்னர் தான் சாப்பிட ஆரம்பித்தார். வெறும் பழங்களைமட்டும்உட்கொண்ட
தெல்லாம் நினைவில் உள்ளது. 
அப்போது காந்தியைப் போல் ஆட்டுப் பாலை நாட்டுச் சர்க்கரையோடுப் பருகுவது உண்டு. பப்பாளிப் பழத்தை விரும்பிச் சாப்பிடுவார். 

இதுபோன்ற அரசியல் ஆளுமைகளைப் பார்ப்பது அரிது.  மொரார்ஜி  குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அவரது மகள் மருத்துவப் படிப்பில்  இறுதித் தேர்வை எழுதினார்.   மதிப்பெண் குறைந்ததால்   மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினார் மகள். ஆனால் அதற்கு அனுமதி  மறுத்த மொரார்ஜி, அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெற்றதாக மற்றவர்கள் கருதுவார்கள்.  அதற்கு முன்னுதாரணமாக இருந்துவிடக் கூடாது என்று நினைத்தவர் மொரார்ஜி. 
இறுதிக் காலத்தில் தனது சொத்துக்களைப் பொதுநலனுக்காக அர்ப்பணித்த ஒப்பற்ற மனிதர் மொரார்ஜி தேசாய்.

#மொரார்ஜி_தேசாய்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-2-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings


Friday, February 28, 2020

#ஈழத்தமிழர் #ஐநா_மனித_உரிமை_ஆணைய #தீர்மானம்_முடக்கமா.....?

https://youtu.be/3_YW3b3gmqM

நீதிபதிகள்

*நீதிபதிகள் *
——————
கடந்த 1970-'80  களில்  முக்கியமான சமூக நிகழ்வுகளில் விசாரணை நடத்தும் நீதிபதிகள் அன்றைய செய்திகள்களை படிப்பதை தவிர்த்து விடுவார்கள்
ஏனென்றால்  ஒரு  வேளை ஒரு  தலைப்பட்சமான செய்திகளை படிக்க நேரிட்டால் தங்கள் நடுநிலை பாதிப்படையலாம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வே.... என்ற விளக்கம் சொல்லப்படுவதுண்டு... ஆனால் நீதிபதிகளுக்கு அன்றாட நடப்புகள் தெரிய வேண்டும்.
அவசர நிலை காலத்தில்  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீராசாமி அடையார் காந்தி நகர் வீடு. சோதனை இடப்பட்டது.எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நீதிபதி வி.ராமசாமியை உளவு பார்த்தாகவும் மயிலாப்பூர் கபாலீஸவர்ர் குளம் அருகே பின் தொடர்நத உளவுத்துறை அதிகாரி விரட்டப்பட்டார். நீதிபதி சத்ததேவ்,அரசு நில ஆர்ஜித வழக்கில்  பிறப்பித்த உத்தரவு பிரச்சனை அப்போது எழந்தது.பி.எச். பாண்டியன் சர்ச்சை என இப்படி பல நிகழ்வுகள்......

ஆனால் ஒரு தமிழக நீதிபதி நள்ளிரவு அமர்வில் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் உறுதிப்படுத்தப்படாத  செய்திகளை வைத்து தன்னிச்சையாக (?) ஆதாரமாக எடுத்துக்கொண்டு ஜனரஞ்சக உத்தரவுகளை பிறப்பித்ததார்..
எனக்கு சகாக்களக இருந்தவர்களும் சிலர் உயர்நீதி மன்ற நீதிபதிகள்தான். அவர்கள் வழக்கறிஞராக எப்படி புரிதலாக இருந்தார்கள் என்று நன்கு அறிவேன்.

 "not only justice must be done, but also seen to be done"

#நீதிபதிகள்

#kSRadhakrishnan_postings*
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
28-02-2020.

Thursday, February 27, 2020

நெல்லை மாவட்டம் புளியரை....

நெல்லை மாவட்டம் புளியரை எப்பொழுதும் ஒரு அழகிய மேற்க்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமம் தான்,  நெல் அறுவடைக்கு பின் இதோ இந்த விரைந்த காட்சி!!!...

நெல் அறுவடைக்கு பின், வைக்கோல்கல் வண்டிகளில்  ஏற்ற பட்டு கேரளாவிற்கு செல்ல தயாராக,  அதற்கு முன்பாக கால்நடைகள் அடிமாடுகளாக கேரளாவிற்கு சென்று  கொண்டிருக்கிறது!!!!

#ksrpost




ஈழத்தமிழர் #ஐநா_மனித_உரிமை_ஆணைய #தீர்மானம்_முடக்கமா.....?

#ஈழத்தமிழர்
#ஐநா_மனித_உரிமை_ஆணைய #தீர்மானம்_முடக்கமா.....?
————————————————-
இலங்கையில் 2009-ல் நடந்த இறுதிப்போரில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். இப்படி இந்திய அரசின் உதவியுடன், சிங்கள அரசால் தமிழினத்தை அழிக்கும் கொடுமை நடந்தேறியது.
இது குறித்த சர்வதேச நம்பகமான சுதந்திரமான விசாரணை வேண்டும் என்று ஐ.நா  மனித உரிமை ஆணையத்தில் தீர்மான விவாதங்களும் நிலுவையில் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. 
இத்தனை ஆண்டு காலம் நடந்த விவாதங்களை, மேற்கொண்டு எடுத்துச் செல்லாமல் சிங்கள அரசு இந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற முனைந்துள்ளது. நியாயங்களும், உண்மைகளும் வெளிப்படுத்த உள்ள வாய்ப்பை இந்த சிங்கள அரசு தடுக்க முனைகிறது.
இது குறித்து தமிழகத்தில் எந்த எதிர்வினைகளும் ஏற்படவில்லை என்பது தான் மிகுந்த மனவேதனையாக உள்ளது. நேற்று ஜெனிவாவில் நடந்த மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் சிங்கள அரசின் சார்பில் இது குறித்தான விவாதம் தொடங்கி உள்ளது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-2-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings 
#ஈழத்தமிழர்

https://m.facebook.com/story.php?story_fbid=10159451749443835&id=787733834

Wednesday, February 26, 2020

இன்றைய_டெல்லி_கலவரங்கள் #டெல்லி_1984_கலவரங்கள்

https://www.thaaii.com/?p=30252

அறிவியலுக்கு அருட்கொடை குலசேகரன்பட்டினம்*

*அறிவியலுக்கு அருட்கொடை குலசேகரன்பட்டினம்*
————————————
இன்றைய (26.02.2020) தினமணி நாளிதழில் குலசேகரப் பட்டினம் ராக்கெட் ஏவுதளம் குறித்து வெளியான என்னுடைய பத்தி:

அறிவியலுக்கு அருட்கொடை குலசேகரப்பட்டினம்
••••••
தெற்கு சீமையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி கலவரங்கள் கடுமையாக இருந்தது. கொடுமையான நிலை இது குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மறைந்த எஸ். ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் ஆராய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையில் சமூக பொருளாதார காரணங்களால் இந்தக் கலவரங்கள் நடக்கின்றன. பொருளாதார ரீதியாக பல்வேறு திட்டங்களை இந்த வட்டாரத்திற்கு அரசு மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டுமென பரிந்துரைத்தது. அதன் விளைவாக நாங்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தொழில் நுட்ப பூங்கா, குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம், தாமிரபரணி நதியை சீர்படுத்தல், கோவில்பட்டி, சங்கரன்கோவில், விளாத்திகுளம், ஒட்டபிடாரம், வானம் பார்த்த பகுதியில் விவசாயிகளின் நலனை நிலைநிறுத்தல், தூத்துக்குடி துறைமுக நகரை மேலும் வலுப்படுத்தல் எனப் பல விடையங்களை நீதிபதி எஸ்.ஆர். பாண்டியன் குழு வலியுறுத்தியது.
அந்த வகையில் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் நீண்ட நாளாக மத்திய அரசின் பார்வையில் இந்திராகாந்தி ஆட்சி காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இதை திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே.டி. கோசல்ராம் வலியுறுத்தினார். இன்றைக்கு குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து ஸ்ரீரிஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட்டுகளை விண்ணுக்கு ஏவி வருகின்றன. அங்கு இரு ஏவுதளங்கள் இருக்கின்றன. குலசேகரப்பட்டிணம் தசரா விழாவுக்கு முக்கியமான இந்துக்கள் வழிபடும் தளமாகும். கிராம்மாக இருந்தாலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர தளமாக விளங்க இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியாக இந்த நெல்லை வட்டாரத்தில் கூடங்குளம் (இதற்கு மாற்றுக்கருத்து உண்டு) மகேந்திரகிரி, நாங்குனேரி கட்டபொம்மன் பாதுகாப்புத் தளம் என இவ்வட்டாரத்தில் மத்திய அரசினுடைய அமைப்பு ரீதியான பல நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இஸ்ரோ நிறுவனத்தின் குலசேகரப்பட்டின கடல் கிராமத்தில் அமைய இருக்கின்ற மூன்றாவது ஏவுதளம் தமிழகத்தின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும். பல்வேறு இயற்கை சீற்றங்களால் ஹரிகோட்டா ஏவுதளத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் வேறு ஏவுதளங்கள் இல்லாத நிலை இருந்தபோது குலசேகரப்பட்டினத்தில் அமைவது அவசியமே. அமெரிக்க, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வட்டாரங்களில் ராக்கெட் ஏவுதளங்களை அமைத்துள்ளது.
இந்த முன்றாவது ராக்கெட் ஏவுதளம் பனிரெண்டாவது ஐந்தாவது திட்டத்தில் சேர்க்கப்பட்டும் தாமதமாகத்தான் இந்த்த் திட்டத்தை நாடாளுமன்றத்தில் அணுசக்தி அமைக்க ஜிதேந்திரசிங் குலசேகரப்பட்டின திட்டத்தை அறிவித்தார்.
கடந்த 2012ல் பேராசிரியர் நாராயணா தலைமையில் அண்ணாமலை, அபேகுமார், சுதர்குமார், சோமநாத், சேஷ்டகிரிராவ், கணங்கோ என ஏழு பேர் குழு தமிழகம், ஆந்திரம் ஏன் கேரள பகுதிகளில் ஆய்வு செய்து மூன்றாவது ஏவுதளம் குலசேகரப்பட்டினம்தான் ஏற்றது என்று தங்களது ஆய்வு கட்டுரையை மத்திய அரசிடம் சமர்பித்த்து. அப்போது இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன்.
கடற்கரைப் பகுதிதான் இதற்கு சரியாக இருக்கும். குலசேகரப்பட்டினம் சுமார் பூமத்திரேகைக்கு ஸ்ரீஹரிகோட்டாவைவிட சற்று அருகில் உள்ளது. எனவே ராக்கெட் ஏவுவதற்கான செலவு மிச்சமாகும். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து தெற்கு முகமாகத்தான் செலுத்த வேண்டியிருக்கும். அதில் சிறிது சிரமங்கள் உள்ளன. ஆனால் குலசேகரப்பட்டினம் தெற்கே இருப்பதால் ராக்கெட் செலுத்த எளிதாக இருக்கும். குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட் நேரடியாகவே அருகே உள்ள இலங்கையை எல்லையில் பறக்காமல் நேராக விண்ணுக்கு செல்லும். ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தும்பொழுது தென்கிழக்கு திசையை நோக்கி சென்று இலங்கை வரை இதனுடைய தாக்கம் ஏற்படும். அயல்நாடுகளில் எல்லைகளில் ராக்கெட் பயணம் தாக்கம் இருக்க்க்கூடாது என்று சர்வதேச சட்டங்கள் இருக்கின்றன. இந்த வகையில் ஹரிகோட்டாவைவிட குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவ இந்த பிரச்சினைகளையெல்லாம் எழாது. இந்த இட்டத்தில்லிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் தெற்கு திசையை நோக்கி வானத்தில் எழும். ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 13 டிகிரி கோணத்தில் தென்கிழக்கு நோக்கி சில சிரமங்களுக்கிடையே மாற்றி சில கட்டுப்பாடுகளோடு வான் நோக்கி செலுத்த வேண்டும். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் 8 டிகிரி கோணத்தில் செலுத்தி இந்த சிக்கல் இல்லாமல் வானத்தில் பயணிக்கும். அதுமட்டுமல்ல இதற்கு வேண்டிய திரவ வடிவமான எரிபொருள் மிக அருகாமையில் மகேந்திரகிரியில் கிடைக்கின்றது. இங்கிருந்து 1479 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விசாகப்பட்டிணத்திற்கு கொகண்டு சென்று ஹரிகோட்டாவிற்கு மாற்றப்படுகிறது. இப்போது குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் தளம் 97 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகேந்திரகிரியிலிருந்து எளிதாக எரிபொருள் கிடைப்பதால் 1400 கிலோமீட்டர் எரிபொருள் ஸ்ரீஹரிகோட்டாவில் பயணித்தது மிச்சமாகும்.
தற்போதைய இஸ்ரோ தலைவர் சிவன் முயற்சியில் இந்த தளம் அமைய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு 2300 ஏக்கர் தேவையான நிலங்களை பள்ளக்குறிச்சி, மாதவகுறிச்சி, படுக்கைப்பத்து என திருச்செந்தூர் வட்டார கிராம நிலங்களில் ஆர்ஜிதப்படுத்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்காண்டு வருகின்றது. இதற்கான பணி அலுவலகத்தை திருச்செந்தூரில் அமைந்து எட்டு பிரிவுகளாக அதிகாரிகள் பணிகளாற்றி வருகின்றனர். இங்கு தென்னை, பனைமரங்கள் கணக்கெடுத்து நில எடுப்பு சட்டங்களுக்குட்பட்டு பணிகளை முடுக்கி விடப்பட்டன. ஏற்கெனவே குலசேகரப்பட்டினம் விடுதலைப் போராட்ட களத்தில் முக்கிய தளமாக அமைந்தது. பாண்டியர் ஆட்சி காலத்தில் நாணயம் அச்சடிக்கவும், இந்த வட்டாரத்தில் அப்போதைய ரயில் வண்டிகள் திருச்செந்தூர், குலசேரகப்பட்டினம், திசையன்வினை என்ற மார்க்கத்தில் ஓடி பின்னர் நிறுத்தப்பட்டன. குலசேகரப்பட்டினம் துறைமுகம், உவரி எனும் முக்கியம் வாய்ந்த பகுதிகளாக அமைந்தன. இப்படி வரலாற்று தரவுகளும் குலசேகரப்பட்டினத்திற்கு உண்டு. இங்கிருந்து சாலமன் மன்னனுக்கு மயில் றெக்கைகளை அனுப்ப்ப்பட்டதாக விவிலியம் கூறுகின்றது.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைந்தால் வேலைவாய்ப்பு இந்த வட்டாரங்கள் வணிக ரீதியாக முன்னேற்றம், தூத்துக்குடி சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் எனப்பல பயண்பாடுகளும் ஏற்படும்.
ஸ்ரீஹரிகோட்டாவைவிட குலசேகரப்பட்டினத்தில் பெரிய ராக்கெட்டுகளை ஏவ இயற்கையாக பொருத்தமான இடமாகும். 1350 கிலோ ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எடையுடன் செலுத்தப்படுகிறது. ஆனால் குலசேகரப்பட்டினத்திலிருந்து 1800 கிலோ எடை அனுப்பலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
குலசேகரப்பட்டினம் ஏவுதளம் இரண்டு மூன்று ஆண்டுகளில் பணிகளை முடிக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வட்டாரத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட சேதுசமுத்திர திட்டமும் நடைமுறைக்கு வந்து திரும்பவும் முடக்கப்பட்டது. துத்துக்குடி துறைமுக விரிவாக்கம், கேரள மேற்கு நோக்கி பாயும் நதிகள் கிழக்கு முகமாக இந்த வட்டாரத்தை திருப்புதல், தாமிரபரணி கருமேணி ஆறு, நம்பியாறு இணைப்பு மதுரையிலிருந்து அருப்புகோட்டை-விளாத்திகுளம்-தூத்துக்குடி-திருச்செந்தூர் ரயில் பாதை, கிழக்கு கடற்கரை சாலை முடிந்தும் முடியாமலிருக்கின்ற நிலையில் இருக்கின்ற நிலை என்பதையெல்லாம் குலசேகரப்பட்டிண ராக்கெட் ஏவுதளம் வந்தால் இதற்கும் விடிவு காலம் கிடைக்கலாம். தாமிரபரணி மணற்கொள்ளை, செயல்படாத நாங்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தொழிற்நுட்ப பூங்கா, திருச்செந்தூரிலிருந்து குலசேகரப்பட்டினம் – மணப்பாடு - உவரி எனத் தெற்கு முகமாக குமரிமுனை வரை ரயில்பாதை திட்டங்களும் நடைமுறைக்கு வரலாம்.
இப்படி பலவகையிலும் ஏற்றங்கள் நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்கள் ஏன் குமரி மாவட்டம் வரை குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தால் பயன்கள் பெறும்.
இது ஒரு ஆறுதலான செய்தியாக இருந்தாலும், நேரு ஆட்சி காலத்தில் தென்னிந்தியா பாதுகாப்பாக இருக்கின்றது என்ற எண்ணத்தில் எண்ணற்ற இராணுவ தளவாட மையங்களை அமைத்தார். ஆனால் இன்றைக்கு தெற்கு இந்துமகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம், அமெரிக்காவின் டீகோகர்சியா, பிரிட்டன், ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகளின் நடமாட்டம் மற்றும் இலங்கை திரிகோணமலை துறைமுக பிரச்சினைகளில் போட்டா போட்டி, எண்ணெய் கிடங்குகள் ஆய்வு என பல நாடுகளினுடைய ஊடுறுவல் உள்ளன. குறிப்பாக கூடங்குளம், மகேந்திரகிரி, குலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதளம் அனல்மின் நிலையங்கள், ஐ.என்.எஸ். நாங்குனேரி கட்டபொம்மன், கேரளத்தில் தும்பா என மிகவும் பாதுகாக்க வேண்டிய கேந்திர பகுதிகள் உள்ளன. அதையும் மத்திய அரசு மனதில் கொண்டு இந்தியாவின் பாதுகாப்பை, இந்துமகா சமுத்திரத்தில் இந்தியாவின் ஆளுமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வடக்கு வாழ்ந்தது, தெற்கு தேய்கிறது என்ற நிலையை போக்கும் வகையில் இப்படிப்பட்ட திட்டங்கள் தமிழகத்தில் மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும்.
குலசேகரப்பட்டினம் வரலாற்றில் இடம் பெற்றது. இனி அறிவியல் பூர்வமாக பன்னாட்டு அளவில் முக்கிய அடையாளமாக திகழ்வது தமிழகத்திற்கு காலம் கொடுத்த அருட்கொடையாகும்.


Tuesday, February 25, 2020

இன்றைய_டெல்லி_கலவரங்கள் #டெல்லி_1984_கலவரங்கள்

#இன்றைய_டெல்லி_கலவரங்கள் 
#டெல்லி_1984_கலவரங்கள்
————————————————
இன்றைக்கு டெல்லியில் நடக்கின்ற கலவரங்களும், துயரங்களும் வேதனை மட்டுமல்ல,நாட்டின்முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் பாழ்படுத்தும். இதே மாதிரி கடந்த  1984 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா  காந்தி   அவருடைய பாதுகாவலர்களால்  படுகொலை செய்யப்பட்டபோது, சீக்கியர்கள் மீது டில்லி மட்டும்மில்லாமல் இந்தியா முழுவதும்   கொடூர  தாக்குதல் நடத்தப்பட்டது.  அப்போது ஹெச்.கே.எல். பகத், ராஜேஷ் பைலட், கமல்நாத்  போன்றவர்கள்   மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல இன்றைக்கு  குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது தாக்குதல்   நடக்கின்றன   என்று பிரச்சனைகள்  எழுந்துள்ளன. கவலை
அளிக்கிறது.

1984இல் இந்திரா காந்தி மறைந்தபோது இந்த காட்சியை கண்முன்னே கண்டேன். டெல்லியில் அவருடைய இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது ;அன்றைய அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் நெடுமாறன். போன்ற தலைவர்கள் எல்லாம் இன்றைய பழைய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார்கள். அப்போது பால்,  காய்கறிகள் போன்றவைகள்தமிழ்நாடுஇல்லதிற்க்குகூட வருவதற்கு சிரமங்கள் இருந்தது. அவ்வளவு முடக்கப்பட்டது. இருப்பினும் வாழப்பாடி இராமமூர்த்தி,  மத்திய முன்னாள்அமைச்சர்கே.பி.உன்னி
கிருஷ்ணன் போன்றோருடைய வாகனங்களில் சென்று இந்திரா காந்தி வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியதெல்லாம் நினைவில் உண்டு. டெல்லியில் சுற்றி வந்த போது தாரியா கஞ்ச், கன்னட்பேலஸ், சரோஜினி மார்க்கெட் போன்ற பகுதிகள் எல்லாம் கலவரத்தில் தீயாக எரிந்தது. அப்போது உணவு கூட கிடைக்காமல் வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் வீட்டின் பின்புறம் உள்ள தமிழ்நாடு கார் ஷெட்டில் உணவு   விடுதி நடத்துபவர்கள் உணவளித்து தான் உண்டோம். அன்றைய தமிழக  காங்கிரஸ் தலைவர்கள்  ஏகேஎஸ, எஸ.கே.டி. ராமச்சந்திரன் போன்றவர்களோடு பட்ட
சிரமங்கள் அதிகம். அதுபோல, இன்றைக்கும் டெல்லி தீயாக எரிகிறது என்று பத்திரிக்கை வாயிலாக தெரிய வருகிறது. இது நல்லதல்ல. 

இந்தியா என்பது பல்வேறு மதங்களும், இனங்களும், மொழிகளும், கலாச்சாரமும் கொண்ட நாட்டில் பன்மையில் ஒருமை காண வேண்டுமேயொழிய இப்படியான கலவரங்கள் ஏற்படுத்துவது நல்லதல்ல. இவ்வாறு ஏற்படுத்துபவர்களின் மனசாட்சிக்கே அதை விட்டுவிட வேண்டும். இதே நிலைமை இந்திரா காந்தியின் படுகொலையின் போது கோயம்புத்தூரில் உள்ள சீக்கியர்களின்
வியாபார நொறுக்கப்பட்டது. அப்போது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, வழக்கறிஞர்கள் கீதா ராமசேஷன், தண்டபாணி,   அடியேனும் முயற்சிகளெடுத்து கோயமுத்தூரில் பாதிக்கப்பட்டோருக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து 1984 காலகட்டங்களில் இழப்பீடு வாங்கிக் கொடுத்தோம். இந்திரா காந்தி மறைவிற்கு எப்படி கோயமுத்தூரில் இருந்த சீக்கியர்கள் பாதிக்கப்
பட்டனரோ அதுபோல ஏதாவதொரு கலவரம் என்றால் இந்தியா முழுவதும் பாதிக்கப்படும் என்பதை கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். 

கடந்த 1984 கலவரத்தைக் குறித்து வாஸந்தி அவர்கள் நேரடியாக டெல்லியில் அந்த கொடுமைகளை பார்த்தததைக் குறித்து தன்னுடைய படைப்பான ‘மௌனப் புயலில்’ பதிவு செய்துள்ளார். தற்போது வரை 9 பேர் இறந்துள்ளதாகவும், 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இன்றைக்கு என்ன நிலைமையோ? 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.02.2020
#ksrposts
#ksrpostings
#delhi_riots

#டெல்லி_கலவரங்கள்




#தி_ஜானகிராமன்_வர்ணித்த_அந்தக் #காவேரி_ஆற்றங்கரையில்..... #திருச்சி #திருப்பராய்த்துறை #அம்மா_வந்தாள்



————————————————-
காவேரி   ஆற்றின்  அழகை  கீர்த்தியை
தி.ஜானகிராமனைப் போல வேறு யாராலும் வர்ணித்துவிடமுடியாது.
அப்படியொரு வர்ணனை அவருடைய படைப்புகளில் சிதறிக்கிடக்கும்.
’அம்மா வந்தாள்’ நாவல் அதற்குக் கச்சிதமான உதாரணம். காவேரி ஆற்றங்கரை. அதில் பொங்கும் அலைகள், பிரவாகம். கரையோரம் பொழுது கீழிறங்குகிற காட்சி. அதன் மோனம்.  வெளிச்சம் நரைத்துக் கொண்டே போகிற மாலைப் பொழுதை தி.ஜானகிராமன்  வர்ணித்துத் தீர்த்திருப்பார்.




அவர் வர்ணித்த அதே காவிரி ஆற்றங்கரை. அம்மா வந்தாள்- நாவலின் கதாநாயகனான அப்பு படிக்கிற வேத பாடசாலை.  காதில். விழும்
உபந்நியாசங்கள். அதே காவேரியில் குளித்து வெள்ளைப் புறாக்களைப் போன்று வளைந்த பாதங்களுடன் வளைய வந்து அப்புவை விரும்பும் இந்து. அப்புவின் தாயார் பவானியம்மாள் என்று எத்தனை உயிரோட்டமான பாத்திரங்கள்.இதெல்லாம் நினைவுக்கு வந்தன அதே காவேரிக் கரையோரம் அண்மையில்  இரண்டு   நாட்கள் தங்கியிருந்த போது.  திருச்சி  திருப்பராய்த் துறையில் இருக்கிற ராமகிருஷ்ண தபோவனத்தில் – விவசாயிகள் நடத்திய தமிழக நீர்வளப் பாதுகாப்புப் பயிற்சி முகாம் நடந்த
போது, இரண்டு நாட்களும் அதில் கலந்து கொண்டு பேசும் சந்தர்ப்பம் வாய்த்தது.

இதே இடத்தைத் தான் தான் எழுதிய ”அம்மா வந்தாள்” நாவலின் பின்னணிக் களமாக ஒருமுறை குறிப்பிட்டிருந்தார் ஜானகிராமன்.அருகில் உள்ள காவேரி-முக்கூடல் (முக்கொம்பு) அரசு விருந்தினர்  மாளிகையில் தங்கியிருந்தேன். இடத்தைச் சுற்றி அதே மோனத்தோடு நகரும் காவேரிக் கரை. இதே காவேரி தலைக் காவேரி கர்நாடகத்தில்  துவங்குகிற இடத்திலிருந்து தவங்கிப் பயணித்து “நடந்தாய் வாழி காவேரி’ என்கிற நீர்ப்பயண நூலை சிட்டியுடன் இணைந்து எழுதியிருக்கிறார் தி.ஜா. 
அந்த ஆற்றோரக் குளுமையில் இரண்டு நாட்கள் இருக்கக் கிடைத்த சந்தர்ப்பம் பெரும் ஆசுவாசம்!

#தி_ஜானகிராமன்
#காவேரி_ஆற்றங்கரையில்.....
#திருச்சி  #திருப்பராய்த்துறை
#அம்மா_வந்தாள்

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
22-02-2020

#kSRadhakrishnan_postings*
#KSRpostings

Monday, February 24, 2020

டில்லி_சம்பவங்கள்

#டில்லி_சம்பவங்கள்
—————————
டில்லி  சம்பவங்கள்  கவலையைத் தருகின்றன.  அன்றைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலையின் போது, 1984 இல்  நடந்த கலவரத்தை நேரில்  பார்த்தவன்.  அன்று சீக்கியர்கள் பாதிக்கபட்டனர். அன்று டில்லி நகரமே எரிந்தது. அம்மாதிரி வேதனையான நிலைமை ஓர் போதும் திரும்பக்கூடாது.
அரசியல் கட்சிகள் மற்றும் சகலரும் சேர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வன்முறையால் அதிகம் பாதிக்கப்படப் போகிறவர்கள் இஸ்லாமியர்கள்தாம். 

1984இல் நடந்த கலவரத்தின் போது கூட  ஆர் எஸ் எஸ்  அமைப்பை கடுமையாக எதிர்த்த குஷ்வந்த் சிங் கலவரத்தின்  போது  துன்புற்ற சீக்கியர்களை ஸ்வயம் சேவகர்கள் எவ்வாறு பாதுகாத்தார்கள் என்று கூறியுள்ளார். அமைதியே நிலவட்டும். வன்முறை எதற்கும் தீர்வாகாது.

#ksrpost
25-2-2019.


இராமகிருஷ்ண தபோவனம் மாணவர்களுடன்.... திருப்பராயத்துறை,

இன்று (23-2-2020)


திருச்சிராப்பள்ளி. 



#ksrpost
23-2-2020.






தமிழக நீர் வள பாதுகாப்பு பயிற்சி முகாமில் உரையாற்றினேன்

இன்று (22-2-2020)தமிழக நீர் வள பாதுகாப்பு பயிற்சி முகாமில் உரையாற்றினேன்.
இராமகிருஷ்ணதபோவனம்,
திருப்பராயத்துறை,
திருச்சிராப்பள்ளி. 



#ksrpost
22-2-2020.




US President Dwight D. Eisenhower visit Taj ,Agra during 1959.



————————————————

“Between the first largest democracy on earth: India and the second largest: America, lie ten thousand miles of ocean. But in our fundamental ideas and convictions about democracy we are close neighbours. We ought to be closer.” These were the words of Dwight D. Eisenhower the first American President to visit India in December 1959 at a public meeting on the Ram Lila grounds in New Delhi.

The historic significance of the visit was not lost on Jawaharlal Nehru, then Prime Minister of India either. He famously said, “…when the history of the present day is written this occasion will form a prominent place… not because the four days were full of merely big functions but also because the hearts of two big countries were opened to each other a little.”

ட்ரம்ப் - மோடி சந்திப்பில் விடயங்கள்*

*ட்ரம்ப் - மோடி சந்திப்பில்  
விடயங்கள்*

ட்ரம்ப் -மோடி சந்திப்பு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தொற்றிக்கொண்ட பரபரப்பு அதிகார வட்டாரங்களில் சூடுபிடித்துக்கொண்டே இருக்கிறது.

 வர்த்தகர்கள், பாதுகாப்பு நிபுணர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், புலனாய்வு அதிகாரிகள் என அனைவரும் திங்கட்கிழமை இந்தியாவுக்கு வரும் ட்ரம்புக்காக தொடர்ச்சியாக உழைக்கிறார்கள். 

பல எதிர்பார்ப்புகளை விதைத்திருக்கும் இந்த சந்திப்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் என்ன?

*1. சந்திப்புக்கான தயார்நிலை*

ட்ரம்ப் மோடி சந்திப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே, நூற்றுக்கணக்கான ரகசிய கண்காணிப்பு முகமைகள் இந்தியாவின் புலனாய்வுத்துறையுடனும், சிறப்புப் பாதுகாப்புக் குழுவுடனும் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகிறார்கள். ட்ரம்ப பயன்படுத்தவிருக்கும் சிறப்பு போயிங் 747-உடன், குண்டுவெடிப்புகளில் பாதிக்காத காரும் அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

*2. பொருளாதார பங்கீட்டு ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்பு*

1980-இல் இருந்து இந்திய அமெரிக்க உறவுக்கான அடிப்படை விஷயம் என்பது பொருளாதார உடன்பாடுகள்தான். சமீப காலங்களில், அமெரிக்காவின் கட்டுப்பாடுகளும் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவும் அந்த பொருளாதார உடன்படிக்கைகள் தொடர்வதற்கு வாய்ப்புகள் அளிக்குமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

பலரும் எதிர்பார்த்த limited Free Trade Agreement என்னும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திடப்போவதில்லை. சுலபமான முதலீடுகள் மற்றும் தொழிற்துறை சார்ந்தவர்களின் இடப்பெயர்வு குறித்த விஷயங்களில் ஒப்பந்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

*3. பாதுகாப்பு*

2000-ஆம் ஆண்டில் இருந்து, இந்தியாவுக்கான பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு அமெரிக்காவாக இருந்து வருகிறது. 10 பில்லியன் டாலர் மதிப்புக்கொண்ட மொத்தம் 8 முதல் 10 பிரதான ஆயுதம் பெறும் முடிவுகளில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.

F21 காம்பேட் வகை ஜெட் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா வலியுறுத்தும். இந்தியாவின் பாரம்பரியமான பாதுகாப்பு முறையுடன் தொழில்நுட்ப ரீதியாக ஒன்றுபடுவதில் அமெரிக்காவுக்கு சிக்கல் நிலவுகிறது.
எனினும் இரு தரப்பும் தங்களுக்கு இடையிலான கடந்தகால கசப்புகளை புறந்தள்ளிவிட்டு, ஆசியக் கண்டத்தில் எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பான உறவுமுறைக்கு அடித்தளமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*4. எல்லைப் பிரச்சனைகளில் இரு நாடுகளின் நிலைப்பாடு*

காஷ்மீர் விஷயத்தில் தலையிட முயன்ற அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்கனவே பெரிய நோ சொல்லிவிட்டது. பாகிஸ்தானுடன் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சனை என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. ஆஃப்கானிஸ்தான் மீதான குறிப்பிடத்தக்க ஆற்றலையும் அமெரிக்கா செலுத்தத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் - இந்தியா இடையிலான பிரச்சனையில் எடுக்கக்கூடிய சில முடிவுகளும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தென் கிழக்கு ஆசிய -சீனா புவி அரசியல்.இந்து மகா
சமுத்தரம் குறித்து

*5. இந்திய - அமெரிக்க உறவு : சாமான்யருக்கான பலன்கள்...*

மெக்சிக்க நாட்ட்டினருக்குப் பிறகு, அமெரிக்காவின் இருக்கும் அடுத்த வெளிநாட்டு இனக்குழு இந்தியர்கள்தான். பொருளாதாரம், அரசு, கல்வி, அரசியல் என அனைத்து தளங்களிலும் இயங்குபவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்தியர்கள் அமெரிக்காவின் 1 சதவிகித மக்கள்தொகையாகவே இருந்தாலும், அவர்களின் அரசியல் சார்ந்த, வாக்கரசியல் சார்ந்த பங்களிப்பு முக்கியமானது. விசா முதல் தேசியவாதம் வரை புதிய சவால்களைச் சந்தித்துவரும் இந்திய வம்சாவளி மக்கள், இந்த சந்திப்பை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.


*'மினி அமெரிக்க அதிபர் மாளிகை' - ட்ரம்ப் வருகை தரும் விமானத்தின் வசதிகள்!*

*'மினி அமெரிக்க அதிபர் மாளிகை' - ட்ரம்ப் வருகை தரும் விமானத்தின் வசதிகள்!* பிரத்யேக கார்... 
————————————————-
அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் விமானத்தின் குறியீட்டுப் பெயர் Air Force One. அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றின் மிக முக்கியமான அடையாளம் இது. அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான இந்த விமானம், சிறப்பான வடிவமைப்பையும் கட்டமைப்பையும் கொண்டது. அதிபர் மட்டுமே இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும்.

1953-ம் ஆண்டு அதிபராக இருந்த ஐஸனாவர் சென்ற விமானத்தின் வழித்தடத்தில் லாக்ஹீட் நிறுவனத்தின் விமானம் ஒன்று பறந்து வந்ததால், விபத்து ஏற்படும் நிலை உருவானது. இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக அமெரிக்க அதிபரின் விமானம் மட்டும் ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற குறியீட்டுடன் அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து பல வகையான விமானங்கள் அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் ஏர் ஃபோர்ஸ் ஒன் சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 1990-ல் இருந்து போயிங் விசி 25 ஏ என்ற வகையைச் சேர்ந்த இரு விமானங்கள் அதிபர்களின் பயணத்துக்காகப் பயன்பட்டு வருகின்றன. இந்த விமானங்களின் உள்வடிமைப்பு பிரமாண்டமானது.

3 அடுக்குகளாக சுமார் 4 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட விமானத்தில் கூட்ட அரங்கு, படுக்கையறை, சமையல் அறை, ரகசிய பாதுகாப்பு அறை, விருந்தினர்களுக்கான பகுதி, விளையாட்டு அரங்கு என சிறிய அதிபர் மாளிகையே இருக்கும். தொலைபேசி, கணினி, இணையம் என தகவல் தொடர்பு வசதிகளும் இதில் உண்டு.

அமெரிக்காவில் ஏதாவது நெருக்கடி ஏற்படும்போது, அதிபர் விமானத்தில் பறந்து கொண்டிருந்தால்கூட இந்த வசதிகள் மூலம் உடனடியாக ஆலோசனைகளையும் கட்டளைகளையும் வழங்க முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் அளவுக்கு திறன் கொண்டது இந்த விமானம். தேவைப்பட்டால், வானத்திலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் முடியும். பொழுதுபோக்குக்காக கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை ஆடவும் இந்த விமானத்தில் வசதி உள்ளது. அதிபரின் பாதுகாப்புக்காக அவருக்கான பிரத்யேக பாதுகாவலர்கள் நவீன ஆயுதங்களுடன் உடன் இருப்பார்கள்.

அமெரிக்கா மீது யாரும் தாக்குதல் நடத்தும் நிலையில், இந்த விமானம் அதிபர் கட்டளை அளிக்கும் மினி Mobile Command Center ஆகவே மாறிவிடும்.

*ட்ரம்ப் இந்தியப் பயணத்துக்காக வந்துள்ள பிரத்யேக கார்... வாய் பிளக்க வைக்கும் சொகுசு வசதிகள்!*

காரின் எடைக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தக் காருக்கு 5.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

 மைலேஜ் லிட்டருக்கு 3 கி.மீ எனக் கூறப்படுகிறது.
 
ட்ரம்ப் இந்தியப் பயணத்துக்காக வந்துள்ள பிரத்யேக கார்... வாய் பிளக்க வைக்கும் சொகுசு வசதிகள்!

இன்று பிப்ரவரி 24-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

 ட்ரம்ப்-ன் 36 மணி நேர இந்தியப் பயணத்தில் அவர் பயன்படுத்த அமெரிக்காவிலிருந்து பிரத்யேகமாக ‘பீஸ்ட் 2.0’ என்ற கார் வந்துள்ளது.

அதிபரின் லிமோசின் ‘பீஸ்ட் 2.0’ கார் வகை உலகிலேயே ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

 இந்த வடிவமைப்பு உடனான கார் ட்ரம்ப்-க்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது ஆகும்.

 உலகிலேயே மிகவும் பாதுகாப்பும் சொகுசும் நிறைந்த கார் இதுதான் என்ற சாதனையையும் ‘பீஸ்ட் 2.0’ படைத்துள்ளது.

ட்ரம்ப்-பிடம் குண்டுகள் துளைக்க முடியாத ‘பீஸ்ட் 2.0’ கார்கள் இரண்டு உள்ளது. 

அவசர கால உதவிக்காக ஒரே மாதிரியாக இரண்டு கார்களை வைத்துள்ளார் ட்ரம்ப். 

இந்தக் காரின் சிறப்பு என்னவென்றால் இந்தக் கார் உடன் பிரத்யேக விமானம் ஒன்றும் இணைப்பிலேயே இருக்கும். 

இந்தக் கார் எங்கெல்லாம் ட்ரம்ப் உடன் பயணமாகிறதோ அங்கெல்லாம் அந்த a C-17 விமானமும் பயணமாகும்.

இந்தக் காரின் சக்கரங்களில் காற்று முழுவதுமாக இறங்கினாலும் இந்த ‘பீஸ்ட் 2.0’ காரினால் இயங்க முடியும். 

இந்தக் காரின் கண்ணாடிகள் 5 இன்ச் தடிமன் உடையன. 

மேலும், கதவுகளும் காரின் உடல் பாகங்களில் 8 இன்ச் தடிமனான உலோகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. 

டைட்டானியம், செராமிக்ஸ் மற்றும் குண்டு துளைக்காத ப்ளேட்கள் கொண்டு இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரம் அல்லது சற்றும் வெளிச்சம் இல்லாத பகுதிகளிலும் இந்தக் காரால் பயணிக்க முடியும். 

உட்புறத்தில் அவசர கால ஆக்சிஜன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 

கூடுதலாக சாட்டிலைட் தொலைபேசி இணைப்பு மற்றும் அணு குறியீடுகள் வசதியும் உள்ளது. 

தீ பிடித்தால் இந்தக் காரின் வெளிப்புறப் பகுதிகளிலிருந்து தானியங்கியாக தீயை அணைக்கும் வாயு வெளியேறும்.

காரின் எடைக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தக் காருக்கு 5.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

 மைலேஜ் லிட்டருக்கு 3 கி.மீ எனக் கூறப்படுகிறது.

 அமெரிக்கப் பாதுகாப்புப் படையினருக்கு மட்டுமே இந்தக் காரின் அத்தனை தகவல்களும் தெரியும்.

 பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தாத இன்னும் பல வசதிகள் அந்தக் காரினுள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காரணம், இந்தக் காரின் வெளிப்புறத்தின் அல்லது உட்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களின் விவரங்கள் இதுவரையில் வெளியிடப்பட்டதில்லை. 
ஓட்டுநரிடம் துப்பாக்கி இருக்கும் என்ற விவரம் மட்டுமே அதிகாரப்பூர்வமானது.

இதனுடன் ட்ரம்ப்-க்குத் தேவையான அத்தனை மருத்துவ வசதிகளும் அந்தக் காரினுள்ளேயே இருக்குமாம். அவரது ரத்த வகை கூட ஸ்டாக் வைக்கப்பட்டிருக்குமாம்.
••••ஆனால், இதையும் தாண்டி 

 பல வசதிகளும் ‘பீஸ்ட் 2.0’-வின் சிறப்பம்சங்களும் ட்ரம்ப்-க்கும், பாதுகாப்புப் படையின் பிரத்யேக குழுவுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரிந்ததாக இருக்கும்..



சூரியா_சென்

#சூரியா_சென் 
———————-
இவரை யாரென்று நமக்குத் 
தெரியாது.

வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள் ; நகங்களைப் பிடுங்கினார்கள் ; 

எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரை தூக்கு மேடையில் ஏற்றினர் .

அவ்வளவு வெறி ; குரூரம் ; வன்மம் . 

இவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் - "ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்".

பாட புத்தகங்களில் இவர் இல்லை . 

பத்திரிகைகள் இவரை எழுதவில்லை . ஏனெனில் அவற்றின் உண்மை எஜமானர்களான வெள்ளையனை உண்மையாக உறுதியாக எதிர்த்தவர் .

மாஸ்டர் தா என்று அன்போடு அழைக்கப்பட்ட சூர்யா சென்தான் இவர். சுதந்திரப் போராளி .

மார்ச் 24 இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டு கடந்து போனது.

வங்காளப்புரட்சி இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர் சூரியாசென் .

சிட்டகாங் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றிய சூரியாசென் , ஜலாலாபாத் மலைப்பகுதியில் ஏப்ரல் 22,1930 ஆம் ஆண்டில் பிரிட்டீஷாரை எதிர்த்தார் .

பிப்ரவரி 16,1933இல் கைது செய்யப்பட்ட சூரியாசென் ஜுன் 12,1934 இல் தூக்கிலிடப்பட்டார் .

பகத்சிங் வரலாற்றை முக்கால்வாசி மறைத்த  சூரியாசென் வரலாற்றை முழுவதும் மறைத்து விட்டது .


Unhrc Sri Lanka

https://www.thaaii.com/?p=30007

Saturday, February 22, 2020

Sri Lanka- UNHRC Resolution


Sri Lanka - UNHRC Resolution 

ஐநா_தீர்மானம்_இலங்கை_ #விலகல்.

#ஐநா_தீர்மானம்_இலங்கை_
#விலகல். Sri Lanka - UNHRC Resolution 
————————————————
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 1 1/2 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் கொன்று   அழிக்கப்பட்டனர். அப்பொழுது அதிபராக இருந்த ராஜபக்சே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார். இந்த கொடுமையான இனஅழிப்பை ஒட்டி சர்வதேச நம்பகமான சுதந்திரமான புலனாய்வு விசாரணை  நடத்தப்பட வேண்டும் என்று  உலகத்தின் பல நாடுகளில்  இருந்து ஈழத்தமிழர்பால் மீது அக்கறையுடன்  அவ்வப்போது தீர்மானங்களை  நிறைவேற்றி உள்ளோம். 

அதுமட்டுமின்றி ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வை தாங்கள் விருப்பத்திற்கேற்ப அரசியல் சுயநிர்ணயம் செய்துக் கொள்ளும் பொருட்டு பொதுவாக்கெடுப்பு சர்வதேச கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும்.



இதனை தமிழகம் மற்றும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்ட அனைவரும் அறிவர்.  ஐநா மனித உரிமை ஆணையத்தில் நான அளித்த அறிக்கை ஐநா மன்றத்தின் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.  கடந்த எட்டு அல்லது  ஒன்பது ஆண்டுகளாக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி வருகின்றோம்.  எல்.எல்.ஆர்.சியின்  பரிந்துரையும் ஏற்று,  13வது சட்டத் திருத்த உரிமையும் வழங்கப்படும் என ராஜபக்சே அளித்த வாக்குறுதி  இதுவரை காப்பாற்ற படாமல் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.







ஈழத்தில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என அழுத்தமாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் வலியுறுத்திய போதிலும் ஐநா மன்றம் பரிந்துரையை ராஜபக்சே அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.  ராஜபக்சே,  மைத்ரி சிரிசேனா,  ரணில் விக்ரமசிங்கே ஆகியோரின் ஆட்சி காலத்தில் இந்த சுதந்திரமான விசாரணையும் ,  பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ,  இறுதிக்கட்ட போரின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் மற்றும் போரின் போது காணாமல் போன தமிழர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தியும்  ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எவ்விதமான நடவடிக்கையும் இலங்கை அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை.

பிப்ரவரி,  மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இது குறித்த பிரச்சனைகள்,  எழுப்பப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள ராஜபக்சே முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.  இந்த தீர்மானங்களை மனித உரிமை ஆணையம் எந்த சூழ்நிலையிலும் திரும்பப் பெறாமல் சர்வதேச சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும்  தங்கள் அரசியல்  நிலைப்பாட்டுக்கு பன்னாட்டு கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்.  இந்திய அரசும் இந்த விஷயத்தில் தலையிட்டு முனைப்புக்  காட்டி ஐநா மனித உரிமை ஆணையத்தில் இதனை வலியுறுத்த வேண்டும்.

#ஐநா_தீர்மானக்குழுவில்_இலங்கை_விலகல். 
#ஐநா_தீர்மானங்கள்
*kSRadhakrishnan postings*
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
22-02-2020

••••

செய்தி :
————-
ஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. 

இலங்கை அரசாங்கம் இதற்கான முடிவை எட்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சே இன்று (கடந்த புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா செல்ல பயணத்தடை விதிக்கப்பட்ட சம்பவத்தை கருத்தில் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க பயணத்தடை விதித்திருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் 2015ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவை வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு அப்பாற் சென்று 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே 2015ஆம் ஆண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இலங்கை பாதுகாப்பு தரப்பனருக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன உள்ளடங்கிய நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்களை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.


கிட்ணம்மா_மூட்டிய_அடுப்பு - #பசிப்பிணி_நீக்கும்_மருத்துவன்_இல்லம்

#கிட்ணம்மா_மூட்டிய_அடுப்பு - #பசிப்பிணி_நீக்கும்_மருத்துவன்_இல்லம்
————————————————-
சமீபத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம் சென்று விட்டு லிங்கம்பட்டி கிராமத்திற்கு ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றபோது,  என்னுடைய நிமிரவைக்கும் நெல்லை நூலில் அந்த ஊரில் கிட்ணம்மா இலவச உணவுக் கூடம் நினைவுக்கு வந்தது.
கரிசல் வட்டாரத்தில் நாட்டுப்புறத் தரவுகளில் முக்கியமான செய்தியாகும். கடந்த நூற்றாண்டின் மத்தியில் கோவில்பட்டிக்கு கிழக்கே உள்ள லிங்கம்பட்டியில் உள்ள கிட்ணம்மா அன்னசத்திரம், பசிப்பிணி நீக்கும் மருத்துவன் இல்லம் போலப் பசி என
வரும் அனைவருக்கும் வித்தியாசம் பார்க்காமல் பசியாற்றிடும் இடமாகக் கிட்ணம்மாவின் இல்லம் திகழ்ந்தது. கிட்ணம்மா, அவரது கணவர் ஆகியோரின் கொடைத் தன்மை தெற்குச் சீமை எங்கும் பரவியது.
ஒரு சமயம் அந்தணர் ஒருவர் ராமேஸ்வரம் செல்லும் நோக்கத்தில் நடை பயணமாக வந்து கொண்டிருந்தபொழுது, அவர் வைத்திருந்த பணத்தை வழிப்பறி திருடர்கள் பறித்துக் கொண்டனர். ராமேஸ்வரம் செல்ல வழியில்லை என கவலைப்பட்டுக் கொண்டு லிங்கம்பட்டி வந்துள்ளார். அங்கு கிட்ணம்மாளைச் சந்தித்து தன் கவலையை கூறியுள்ளார். அவருக்கு அன்னம் படைத்து அவர்தம்



களைப்பை நீக்கி இராமேஸ்வரம் செல்ல பண உதவி செய்தார்.
சில நாள்கள் கழித்து கிட்ணம்மாளும் ஒரு வில் வண்டியில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தீர்த்தங்களில் நீராடியபின் இறைவனின் சன்னதியை அடைந்து இறைவழிபாடு செய்ய நின்று கொண்டிருக்கும்போது ஒரு மெல்லிய குரல், "இது லிங்கம்பட்டி கிட்ணம்மா புண்ணியம், புண்ணியம்' என்று ஒலித்துக் கொண்டிருந்ததைக் கேட்கிறார். திரும்பிப் பார்த்தார். இவரால் உதவி பெற்ற இராமேஸ்வரம் வந்த அந்தணர்தான் அப்படி சொல்லியபடி வேண்டிக் கொண்டிருந்தார்.
நாம் செய்த சிறுஉதவியே நம்பெயரை இறைவனின் சன்னதியில் கேட்க முடிகிறதே என்று மெய்சிலிர்த்து இந்த நல்ல காரியத்தை விரிவாகச் செய்ய வேண்டுமென்று நினைத்து தனது செல்வத்தையெல்லாம் தரும காரியங்களுக்கு செலவிட அன்னச்சத்திரம் தொடங்கினார். வருவோர்க்கு எல்லாம் உதவி செய்தார். பசித்தவர்களுக்கு உணவு படைத்தார்.
இப்படி இவரது செய்கை எட்டயபுரம் அரசர் காதுகளுக்குச் சென்றது. அவரும் கிட்ணம்மாவின் அறத்தை அறிந்து தன் அரண்மனைக்கு வரவழைத்துப் பாராட்டினார். தங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று ஜமீன்தார் கேட்டார். அவரோ அன்ன சத்திரத்திற்கு அடுப்பு எரிக்க விறகு அதிகமாக தேவைப்படுகிறது. தங்களின் ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட நிலங்களில் உள்ள காய்ந்த விறகுகளை வெட்டிக்கொள்ள அனுமதி வேண்டினார். தனக்கென வேண்டாமல் பிறருக்காக வேண்டியரை பாராட்டிய அரசர் அப்படியே அனுமதியை வழங்கினார். கடந்த 1960 ஆம் ஆண்டு வரை அந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களிடம் அரிசி, கம்பு, கேப்பை, சோளம், குதிரைவாலி போன்ற தானியங்களை வண்டிகளில் சேகரித்து, தினம் தவறாமல் உணவு அனைவருக்கும் லிங்கம்பட்டியில் உள்ள கிட்ணம்மாவின் இல்லத்தில் வழங்கப்பட்டது.
தனிமனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்  என்றான் இந்த வட்டாரத்துக் கவிஞன் பாரதி. எனவே,  காமராஜர் முதல்வராக இருந்தபோது, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பசியால் துடிக்கக் கூடாது என்று இதே எட்டயபுரம் மண்ணில் கிட்ணம்மாவின் அன்னசத்திரத்தை  மனதில் கொண்டு மதிய உணவை தொடங்கினார். அப்போது கல்வி இயக்குநராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலுவும் கிட்ணம்மாவைப் பற்றி சிலாகித்ததும் உண்டு. 
காமராஜரும் அந்த வட்டாரத்தில் சுற்றியவன் நான், இதை குறித்து அவரும் எனக்கு நன்றாக தெரியும் என்று கூறியதெல்லாம் செய்திகள்.
அந்த வட்டாரத்தில் வாழ்ந்த விளாத்திகுளம் சாமிகள், எட்டயபுரம் அரசர், கி.ரா., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த இப்பகுதிக்கு வந்த அக்கட்சியின் தலைவர்கள், பேரவை முன்னாள் தலைவர் செல்லப்பாண்டியன் போன்றோர்கள்  எல்லாம் பாராட்டியதுண்டு. திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் இதை கேள்விப்பட்டு என்னிடம் பேசியதுமுண்டு.
எட்டயபுரம் பாரதி விழாவிற்கு வந்த ஜெமினி கணேசன், சாவித்திரி போன்றோர்கள் மட்டுமல்லாமல், காருக்குறிச்சி அருணாச்சலம் போன்ற பெருந்தகைகள் கிட்ணம்மாவைப் பற்றிய செய்திகள் அறிந்து வியப்படைந்தனர். தண்ணீர்.. தண்ணீர்.. படமெடுக்க கே.பாலசந்தர் இந்த
பகுதிக்கு வந்தபோது, இந்த நாட்டுப்புறத் தரவுகளை எல்லாம் கேள்விப்பட்டு கோமல் சாமிநாதனிடம் இப்படியான பாத்திரங்களையும், திரையுலகில் பதிவுசெய்ய வேண்டுமென்ற தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
இந்தத் தரவும், செய்தியும் தெற்குச் சீமையில் குறிப்பாக கரிசல் வட்டாரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு கிட்ணம்மா அன்னசாலை ஒரு அருட்கொடையாக திகழ்ந்தது. இந்த செய்தி பெரிதாக வெளிச்சத்திற்கு வராமலேயே சென்றதில் என்னைப் போன்றோருக்கெல்லாம் சற்று வருத்தங்கள் உண்டு. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிட்ட போது இதை குறித்து விரிவாக அறிய முற்பட்டேன். அங்கு 1989இல் நடைபெற்ற தேர்தல் களத்தில் எனக்கு எதிராக களத்தில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த
தலைவராக இருந்து மறைந்த சோ.அழகர்சாமியும், நானும் ஒரே நேரத்தில் இந்த கிராமத்தில் ஓட்டு சேகரிக்கும் போது இந்த வீட்டின் அருகே எதிரெதிரே சந்தித்தோம். அப்போது என்னப்பா, கிட்ணம்மா வீட்டு முன்னாடி சந்திக்கிறோம். 
நல்ல இடந்தான். நீ ஜெயிக்க வாழ்த்துகள் என்று பெருந்தன்மையோடு  சொன்னதெல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளன.
வடக்கே வடலூரில் வள்ளலார் அன்னதானம் செய்ய ஏற்றிய நெருப்பு இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. அவரது சீடர்கள் இன்றும் அன்னம் படைத்து வருகின்றனர். ஆனால் கிட்ணம்மா மூட்டிய அடுப்பு அணைந்துவிட்டது. கிட்ணம்மா புகழ் ஓங்கட்டும்.

#கிட்ணம்மா
#கோவில்பட்டி_லிங்கம்பட்டி

#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
22.02.2020


Friday, February 21, 2020

திருதராஷ்டர் ஆலிங்கணம்*

*திருதராஷ்டர் ஆலிங்கணம்*
--------------------------

அனைத்தலின் மூலம் தங்களுடைய அன்பையும், காதலையும், ஆறுதலையும் வெளிப்படுத்துவார்கள்.ஆனால்,
திருதராஷ்டர் ஆலிங்கணம் என்றால், உதட்டளவில் பாராட்டி அனைத்து  நன்றி  மறந்து  அழிப்பதுதான் திருதராஷ்டர் ஆலிங்கணம்.
பாரதத்தில் இதுதான் நடந்தது.
பொது வாழ்வில்தகுதியானவர்களையும், தரமானவர்களையும், ஆளுமைகளின் உழைப்பை  உறிஞ்சி, பாராட்டி அனைத்து  நன்றி அற்ற முறையில் சம்மந்தப்பட்டவரை அழிப்பதுதான் திருதராஷ்டர் ஆலிங்கணம் என சொல்வது வாடிக்கை.

ஆளுமைகளை  அழிப்பது
மட்டுமல்லாமல், சம்மந்தப்பட்டவர்களின் உதவியாளர்களையும்  உயர்த்திக் காட்டி ரனப்படுத்துவதும் சில கட்டங்களில் உண்டு. இதை இராஜாஜி கூறுவார் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ். மாரிசாமி என்னிடம் அடிக்கடி கூறுவது உண்டு.

#திருதராஷ்டர்ஆலிங்கணம்
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
21.02.2020

Ulysses*from "*Troilus and Cressida*

"Take but degree away, untune that string, And hark, what discord follows! each thing meets In mere oppugnancy." --*

" (Act 1, Scene 3)

#பணம்_பணம்

#பணம்_பணம்
————————-
இன்றைக்கு காலை ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே உள்ள பழைய கவிதா ஓட்டல் அமைந்த இடத்திற்கு செல்லக் கூடிய பணி இருந்தது. பக்கத்தில் தான் வைஜெயந்தி மாலா பாலி வீடும் இருந்தது. கவிஞர் கண்ணதாசனின் அதிகமான இருப்பு கவிதா ஓட்டல். அவரைக் காண  அங்கே  அடிக்கடி செல்வதுண்டு. கவிதா ஓட்டல் குலோப் ஜாம் நன்றாக இருக்கும்.

இன்றைக்கு  தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர்ந்த நிர்வாகத்தில் உள்ளவர் அந்த பகுதிக்கு என்னோடு ஒரு வேலையாக வந்திருந்தார். அவர் பணம் பணம் என்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு வந்த போது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கடந்த காலத்தில் கூறிய வார்த்தைகள் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. பெருந்தலைவர் காமராஜர் மறைவுக்குப் பின் 1976 என்று  நினைக்கிறேன், தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் - இந்திரா காந்தி தலைமையில் இருந்த ஆளும் காங்கிரஸ் இணைப்பு விழா பணிகள் நடந்துக் கொண்டிருக்கின்ற நேரம் அது. ஒரு காங்கிரஸ் மூத்த  தலைவர்ஒருவர் , இப்போது அவர் இல்லை, இணைப்பு விழா பணிகளுக்கு அவரிடம் கொடுத்த பணத்திற்கு சரியான கணக்கு வழக்கு  இல்லை  என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அதைக் குறித்து  கவிஞர்  கண்ணதாசன் சொல்லும்  போது, மனிதன்  ஏன் திருமண்ணும் விபூதியும் நெற்றியில் இடுகிறான் என்றால் இறுதியில் நீ தனியாக பிணமாக மண்ணுக்கு தான் போகின்றாய்  என்பதை தினமும் தெரிந்துக் கொள்வதற்காக தான் இந்த பழக்கங்கள். உன்னுடைய இறுதிப் பயணத்தில்  உற்றார்  உறவினர்கள் நண்பர்கள் வருவார்கள். இடுகாட்டில் சடங்குகள் முடிந்தவுடன் உனக்காக கொண்டு வந்த  பானையைக் கூட உடைத்துவிட்டு உன்னுடைய முடிவை அறங்கேற்றி  விட்டு  திரும்பிக் கூட பார்க்காமல் வந்து விடுவார்கள். இது தான் மனித வாழ்வு என்றார். அப்போது கவிஞர் ஏற்ற இறக்கத்தோடு அவருடைய தொனியில் சொல்லும்போது இந்த வார்த்தைகள்  கவனத்தை  ஈர்த்தது. கவிஞரும்  இந்த  மாதிரி  பணத்தை சேர்த்து வைத்து பணம் தான் எல்லாம் என்று நினைக்கின்ற நினைக்காத ஒரு ஆளுமை ஆவார். அவர் பணத்திற்கு எப்போதும்   முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இந்த கருத்தை உடன் வந்த  கார்ப்பரேட்  நண்பரிடம் சொன்னபோது அதற்கு மேல் அவர் ஒன்றும் பேசவில்லை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
20.02.2020

#ksrposts
#ksradhakrishnanposts

Thursday, February 20, 2020

Sri Lanka UNHRC

https://www.aljazeera.com/news/2020/02/sri-lanka-withdraw-rights-resolution-200220054223108.html

ஐநா மனித உரிமை ஆணையம்-UNHRC

ஜெனிவாவில் வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் 




 ஐநா மனித உரிமை ஆணையதின் 43 வது கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பேசவுள்ளேன்.

#UNHRC
#ஈழத்தமிழர்
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-02-2020.

Wednesday, February 19, 2020

#கே_ஆர்_விஜயா

#கே_ஆர்_விஜயா  பிறந்த நாள் சிறப்பு பதிவு 

குடும்பப்பாங்கான படங்களில், குணசித்திர வேடங்களில் முத்திரை பதிக்கும் வண்ணம் நடித்து ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் குடியிருக்கும் சிறந்த நடிகைகளில் கே.ஆர்.விஜயாவுக்கு ஒரு தனி இடம் உண்டு.

கதாநாயகி வேடங்களிலேயே நீண்ட காலம் நடித்த மிகச் சில நடிகைகளில் இவரும் ஒருவர்.
அவருடைய திரைப்படம் பயணத்தை பற்றி நினைவலைகளை நம்மோடு பகிர்ந்தது.

“என் தயார் கல்யாணி குட்டிக்கு கேரள மாநிலம் திரிச்சூர்தான் சொந்த ஊர். என் தந்தை ராமசந்திரனோ ஆந்திராவைச் சேர்ந்தவர். இரண்டாம் உலக யுத்தத்தின்போது ராணுவத்தில் பணியாற்றியவர் அவர். என் அம்மாவின் சகோதரர்களும் அப்போது அவருடன் ராணுவத்தில் பணியாற்றியிருக்கின்றனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தால் இரு குடும்பத்தாரும் பேசி முடிவெடுத்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

என் பெற்றோருக்கு நான்தான் மூத்த பெண். எனக்குப் பிறகு பிறந்த குழந்தைகளில் இப்போது மிஞ்சியிருப்பது எனது தங்கைகள் இருவரும் ஒரு தம்பியும்தான். சிறிய வயதில் கேரளாவில் கொஞ்ச காலமும் ஆந்திராவில் கொஞ்ச காலமும் இருந்ததால் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும்படியாகிவிட்டது. ஆந்திராவில் அப்பா வீட்டில் நாங்கள் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர் தெலுங்கு நடிகர் நாகையா. எங்கள் இரண்டு வீட்டுக்கும் நடுவில் பொதுவாக ஒரு கிணறு இருக்கும். நாகையாவுக்கு குழந்தை கிடையாது என்பதால் என்னிடம் மிகவும் பிரியமுடன் இருப்பார். குடும்பத்துடன் எங்காவது வெளியில் செல்லும்போது தவறாமல் என்னையும் அழைத்துச் செல்வார்.

அப்பா ராணுவத்தில் பணியாற்றினாலும் கலைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். எனக்கு சுமார் பத்து அல்லது பதினோரு வயது இருக்கும்போது எங்கள் குடும்பம் தமிழ்நாட்டில் பழனிக்கு வந்து செட்டில் ஆனது. இங்குதான் முதல் முறையாக நான் மேடை ஏறினேன். அப்பாவுக்கு நாடகத் துறையில் இருந்த ஈடுபாடே நான் மேடை ஏறக் காரணமாக அமைந்தது. பள்ளிக்குச் சென்று நான் கற்க முடியாத கல்வியை நாடக மேடைகளும், நாடக வசன புத்தகங்களும்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தன.

ஐம்பதுகளில் நான் நாடக மேடை ஏறியபோது அப்போது வெளியாகியிருந்த “பாசமலர்’ பாவமன்னிப்பு’ போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்குத்தான் பெரும்பாலும் என்னை ஆட வைப்பார்கள்.

காசநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நாடகம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஒரு நாள் நிகழ்ச்சிக்கு பத்து ரூபாய் சம்பளம். அந்த நாள்களில் பத்து ரூபாய் என்பது பெரிய தொகை. அவ்வளவு பெரிய தொகையை வைத்துக்கொண்டு எப்படி செலவு செய்வது என்று மலைப்பாக இருக்கும். பழநியில் இந்த நாடகம் வெற்றிகரமாக நடந்த பின், மதுரை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய ஊர்களுக்கும் சென்று நாடகம் நடத்தவேண்டியிருந்தது. அந்தந்த ஊர்களில் நடக்கும் அரசு பொருட்காட்சிகளில் இந்த நாடகம் நடக்கும்.

எங்கள் பிரச்சார நாடகம் முடிந்ததும் பிரபல திரைப்பட நட்சத்திரங்களின் நாடகங்கள் நடக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, டி.ஆர்.மகாலிங்கம், ஆகியோர் தங்கள் குழுவினருடன் நடத்திய நாடங்களை அப்போது நான் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்திருக்கிறேன். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் குழுவில் அப்போது நடித்து வந்த முத்துராமன் நடித்த நாடகங்களைப் பார்த்ததுகூட இப்போதும் எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

எங்கள் நாடகம் பல ஊர்களிலும் நடத்தப்பட்ட பின் இறுதியில் சென்னை தீவுத்திடலுக்கு வந்தது. இதற்கு தலைமை தாங்கிய ஜெமினி கணேசன் நாடகம் முடிந்த பிறகு என்னைப் பாராட்டிப் பேசியதுடன், “இந்தப் பெண்ணுக்கு கலைத்துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று வாழ்த்தும் தெரிவித்தார். இதற்குப்பின் பல அமெச்சூர் நாடகங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புக்கள் வரவே நான் அவற்றில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது முதல்முறையாக மாடலிங் செய்யும் வாய்ப்பும் வந்தது.

அப்போது பிரபலமாக இருந்த சிம்சன் பிஸ்கட் அண்ட் சாக்லேட் விளம்பரத்துக்காக நான் புடவையில் போஸ் கொடுத்தேன். அப்போது எனக்கு புடவை கட்டும் வயதே இல்லை. அவ்வளவு சின்ன பெண்ணாக நான் இருந்தேன்.

புடவையுடன் நான் இருந்த சிம்சன் சாக்லேட் விளம்பரம்தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தந்தது. ஜெமினி கணேசன், சாவித்திரி ஜோடி நடிக்கவிருந்த “கற்பகம்’ படத்துக்காக இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முக்கிய வேடமொன்றில் சரோஜாதேவியை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் சரோஜாதேவி அப்போது ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் உடனடியாக கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. எனவே புதுமுக நடிகை ஒருவரை அந்த வேடத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டார்.

சிம்சன் சாக்லேட் விளம்பரத்தில் என்னைப் பார்த்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன் உடனே நேரில் வரவழைத்துப் பார்த்ததுடன் சில வசனங்களையும் எழுதிக் கொடுத்து பேசவைத்துப் பார்த்த பின்னர் “கற்பகம்’ படத்துக்காக என்னைத் தேர்வு செய்தார். சென்னையில் நான் நடித்த நாடகத்துக்குத் தலைமை தாங்கிப் பேசிய ஜெமினியின் வார்த்தை அவ்வளவு சீக்கரம் பலிக்கும் என்றோ அதுவும் முதல் படத்திலேயே அவருடனேயே சேர்ந்து நடிப்பேன் என்றோ நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சிறு வயதில் என்னைத் தூக்கிக் கொஞ்சிய நாகைய்யாவும் “கற்பகம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெமினி, எம்.ஆர்.ராதா, ரங்காராவ், வி.கே.ராமசாமி, முத்துராமன், சாவித்திரி, என்று அந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகையர் அத்தனை பேரும் மிகப்பெரிய நட்சத்திரங்கள். அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனது முதல் படத்திலே கிடைத்ததை நான் பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.

சரியாக நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு 1963ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு தீபாவளி நாளில் வந்த “கற்பகம்’ தமிழ் ரசிகர்களிடையே எனக்கு மிகச்சிறந்த அறிமுகத்தைத் தேடித்தந்ததுடன் என் வாழ்க்கைப் பாதையையும் முழுதாக மாற்றியமைத்து விட்டது.

அதன் பிறகு தொடர்ந்து எனக்குக் கிடைத்த படங்களும், அதில் நான் ஏற்ற வேடங்களும் என் படவுலக வாழ்க்கையை பலமுள்ளதாக்கிவிட்டன. எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று அப்போதிருந்த ஜாம்பவான்களில் ஆரம்பித்து இன்றைய தலைமுறை நட்சத்திரங்கள்வரை அனைவருடனும் நடித்துவிட்டேன். “கற்பகம்’ படத்தில் என்னை அறிமுகப்படுத்திய கே.எஸ்.கோபாலகிருஷ்ணனே “நத்தையில் முத்து’ என்ற என் நூறாவது படத்தையும் இயக்கினார். எனது முன்னூறாவது படமாக அமைந்த “படிக்காத பண்ணையார்’ படத்தையும் அவரே இயக்கினார். இப்போது நானூறாவது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.

நூறு, நூற்றைம்பது, இருநூறு, இருநூற்றைம்பது என எண்ணிக்கையில் வந்த படங்களை எல்லாம் இயக்கியது என் முதல் படத்தே இயக்கிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான். திட்டமிட்டு இப்படி செய்யவில்லை. யதேச்சையாக அமைந்தது இது. எனது நூறாவது படமாக “நத்தையில் முத்து’ வெளியீட்டுக்குத் தயாராக இருந்த போதே “தீர்க்கசுமங்கலி’ படமும் திரைக்கு வரத்தயாராக இருந்தது. “தீர்க்கசுமங்கலி’ வெளியீட்டைத் தள்ளி வைக்கலாமா என்றுகூட யோசித்தார்கள். கடைசியில் இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி இரண்டும் நூறு நாள்கள் ஒடியது.

அந்தக்காலத்தில் இரண்டு அல்லது மூன்று கதாநாயகிகள் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தாலும் நடிப்பில்தான் எங்களுக்குள் போட்டி இருக்குமே தவிர நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அன்பாகவும் அனுசரனையாகவும் நடந்து கொள்வோம். படப்பிடிப்பில் சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடுகூட இல்லாமல்தான் பழகுவோம். நடிப்பிலும் மேக்கப்பிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். “கற்பகம்’ படத்தில் நான் அறிமுகமானபோது புகழின் உச்சத்தில் இருந்த சாவித்திரி புதுமுகமான என்னிடம். “நீ காதுகளை மறைப்பதுபோல் தலைமுடியை வாருவதுதான் மிகவும் அழகாக இருக்கிறது. அப்படியே மேக்கப் போட்டுக்கொள்” என்று சொன்னதுடன் எப்படி பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி பல விஷயங்களையும் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அன்று தொடங்கி இன்றுவரை நான் சாவித்திரி சொல்லிக் கொடுத்த மாதிரிதான் தலை வாரிக் கொள்கிறேன். கதாபாத்திரத்துக்கு தேவை என்றால் மட்டுமே நான் “ஹேர் ஸ்டை’லை மாற்றிக்கொள்வேன்.

இதேபோல்தான் சரோஜாதேவியும் என்னிடம் பழகினார்.

அப்போது எம்.ஜி.ஆர்.ஜோடியாக தொடர்ந்து பல படங்களில் நடித்ததுடன் வேறு பல படங்களிலும் நடித்துக்கொண்டிருந்த பிசியான நடிகையான சரோஜாதேவி யாருடனும் அதிகம் பழகமாட்டார். ஒதுங்கியே இருப்பார் என்று சொல்வார்கள். “நான் ஆணையிட்டால்’ படத்தில் முதன்முதலாக சரோஜாதேவியுடன் சேர்ந்து நடித்தபோது அது எவ்வளவு தவறான தகவல் என்று எனக்கு புரிந்தது. முதல்நாள் படப்பிடிப்பின்போதே,”வா விஜயா சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லி அழைத்துச் சென்று அவ்வளவு அன்பாக என்னை உபசரித்தார். ஆத்மார்ந்தமான அந்த அன்பு இன்றுவரை நீடிக்கிறது. பெங்களுரில் இப்போது வசிக்கும் சரோஜாதேவி தொலைக்காட்சியில் நான் நடித்த ஏதாவது ஒரு படத்தின் பாடல் காட்சியைப் பார்த்தால்கூட உடனை எனக்கு போன் செய்து பேசுவார். சமீபத்தில் ஒரு நாள் போன் செய்து, “பழைய படங்களில் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?’ என்றாரே பார்க்கலாம்.

“கன்னடத்துப் பைங்கிளின்னு பெயரெடுத்ததே நீங்கள்தான். உங்களைவிட யார்அழகு?’ என்றேன்.

இதுபோல் எனது சமகாலத்து நடிகைகள் மட்டுமின்றி அஞ்சலிதேவி, வைஜயந்திமாலா, பி.எஸ்.சரோஜா போன்ற சீனியர் நடிகைகளின் அன்பையும் பெற்றிருப்பதை எண்ணி உண்மையில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நடிகர் நடிகைகள் மட்டுமின்றி தொழில் நுட்பக்கலைஞர்களும் அந்தக்காலத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு படத்தின் வெற்றிக்கு உழைப்பார்கள்.

இப்போது இருப்பதுபோல் வசனங்களை தனியாக ஒலிப்பதிவு செய்யும் பழக்கம் அப்போது இல்லாததால் சவுண்ட் இன்ஜினியர், “அம்மா நீங்கள் பேசும் வசனத்தில்முதல் வார்த்தை சரியாக கேட்கவில்லை. கடைசி வார்த்தையை இன்னும் அழுத்தமாக உச்சரிக்க வேண்டும்” என்றெல்லாம் ஆலோசனைகள் சொல்லி காட்சி சிறப்பாக வர உதவுவார்கள். நட்சத்திர நடிகர் நடிகையரும் “இவரெல்லாமா நமக்கு ஆலோசனை சொல்வது’ என்று நினைக்காமல் படம் நன்றாக வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தானே சொல்கிறார் என்று புரிந்துகொண்டு நடிப்பார்கள். அதுதானே முக்கியம்?

சிவாஜியுடன் சேர்ந்து நடிக்கும்போது நடிப்பைப்பற்றி மட்டுமல்ல வாழ்க்கைக்குத் தேவையான வேறு பல விஷயங்களையும் நாம் கற்றுக்கொள்ளலாம். சிவாஜி படப்பிடிக்குத் தாமதாக வரமாட்டார்-குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னதாக வருவதுதான் அவர் வழக்கம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் படப்பிடிப்பு என்றில்லை. எங்கேயுமே தாமதமாகப் போகும் வழக்கம் அவருக்கு இல்லை. திருமணம் என்றாலும் சரி, பொது நிகழ்ச்சி என்றாலும் சரி குறிப்பிட்ட நேரத்திற்குள் தாமதமின்றி செல்ல வேண்டும் என்பதை நான் அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

அதேபோல் செட்டுக்குள் வந்தால் முழுக்க முழுக்க அவர் கதையிலும் தன் பாத்திரத்திலுமே இன்வால்வாகிவிடுவார். யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால்கூட மற்றவர்கள் வசனம் பேசுவதையும் நடிப்பதையும் கவனித்துக்கொண்டுதான் இருப்பார். அப்போதுதானே அவர் நடிக்கும்போது சரியான ரியாக்ஷன் கொடுக்க முடியும்? இப்படி செய்யும் தொழிலில் ஒரு ஈடுபாடும் அர்ப்பணிப்பு உணர்வும் இருந்ததால்தான் நடிப்பில் புதிய உயரங்களைத்தொட்ட அவரால் சாதனை சரித்திரங்களையும் படைக்க முடிந்தது.

இதேபோல் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல படங்களில் நடிக்கும்போதும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. பொது இடங்களில் சினிமா நட்சத்திரங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். நமது சொந்த உணர்ச்சிகள் எதையும் பொது இடத்தில் காட்டிக் கொள்ளக்கூடாது. நமது இமேஜுக்கு பங்கம் வரும்வகையில் எக்காரணத்தை முன்னிட்டும் நடந்து கொள்ளக் கூடாது, லேடி ஆர்டிஸ்ட் என்றால் மற்றவர்கள் கை எடுத்து கும்பிட்டு, “வாங்கம்மா உட்காருங்கம்மா’ என்று சொல்லி வரவேற்கும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் சொல்லுவார்.

அண்ணா முதல்வராக இருந்தபோது அவர் கையால் தமிழக அரசின் கலைமாமணி விருது வாங்கிய பெருமை எனக்கு உண்டு. எம்.ஜி.ஆரும் அதே ஆண்டுதான் கலைமாமணி விருது பெற்றார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் கூட்டத்துக்கு கேட்கவா வேண்டும்? நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கிலிருந்து வெளியே வந்து கார் இருக்கும் இடத்திற்கு செல்லக்கூட முடியவில்லை. எம்.ஜி.ஆரைச் சுற்றிலும் மக்கள் வெள்ளம்தான். ஆயினும் அவர் தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் என்னை பத்திரமாக அழைத்துச் சென்று என் காரில் என்னை ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதுதான் எம.ஜி.ஆர். இதேபோல் அவர் முதல்வராக இருந்தபோது அரசு சார்பில் சேலத்தில் நடந்த ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் இரவு கணவருடன் காரில் புறப்பட்டபோது, “இரவில் நீண்ட தூரம் காரில் செல்ல வேண்டாம். தங்கிவிட்டு காலையில் புறப்பட்டுச் செல்லுங்கள்’ என்று அதே பழைய அன்போடும் அக்கறையோடும் எம்.ஜி.ஆர். கூறிவே அதன்படியே நாங்கள் அன்றிரவு அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் பகலில் புறப்பட்டு சென்னை வந்தோம்.

எனது நூறாவது படம் “நத்தையில் முத்து’ வெளியானபோது ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, என்.டி.ராமாராவ் மற்றும் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டு என்னை வாழ்த்தியதை என்றென்றும் என்னால் மறக்க முடியாது. இவர்கள் எல்லோருடைய வாழ்த்தும்தான் இருநூறு, முன்னூறு, என்று படங்களின் எண்ணிக்கையை கடக்கச் செய்து இன்று நானூறாவது படத்தை நான் நெருங்குவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்த நான் இந்தியில் மட்டும் ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறேன். பாலசந்தரின் “மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் தமிழுக்கு முன்பு முதலில் இந்தியில்தான் படமானது. “ஊஞ்சலோக்’ என்ற இந்தப் படத்தில் அசோக் குமார், பெரோஸ்கான், ராஜ்குமார், ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர். நாடகத்தைப்போலவே கதாநாயகி பாத்திரப் படைப்பு இந்திப் படத்தில் சஸ்பென்ஸôக உருவாக்கப்பட்டிருக்கும். நான் நடித்த இப்படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்ததுடன் தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புக்களும் வந்தன. ஆனால் என் கணவர்,””தமிழில்தான் நிறைய படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனவே! இப்போது ஏன் இந்திப் படங்களில் கவனம் செலுத்த வேண்டும்?’ என்றார். அது எனக்கு சரியாகப் படவே நானும் வேறு இந்திப்படவாய்ப்புக்களை ஏற்காமல் தமிழிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

நடிகைகளுக்கு திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குறைந்துவிடும். ஆனால் திருமணத்துக்கு முன்பு நடித்ததைவிட அதிகமாக திருமணத்துக்குப் பிறகுதான் நான் நடிக்க ஆரம்பித்தேன். காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணிவரை மட்டுமே நடிப்பது, ஞாயிற்றுக் கிழமைகளில் நடிப்பதில்லை என்பதையும் செயல்படுத்திய முதல் நடிகை நான்தான்.

எழுபதுகளின் மத்தியில் திருச்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கு கொள்ளச் சென்றிருந்தபோது அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் நான் சற்றும் எதிர்பாராதவகையில் “புன்னகை அரசி’ என்ற பட்டத்தை எனக்குக் கொடுத்துவிட்டார்கள். நாள்கள் செல்லச் செல்ல என் பெயருக்கு இணையாக இந்தப் பட்டத்தாலும் என்னை அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் “புன்னகை இளவரசி’ என்று பட்டம் சூட்டப்பட்ட சிநேகாவை என் வீட்டுக்கு அழைத்துவந்து ஒரு பத்திரிகைக்காக சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். அதன் பின்னர் அவரது திருமணத்துக்குக்கூட நான் சென்று வாழ்த்திவிட்டு வந்தேன்.

பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நான் நடித்திருந்தாலும் ஏவி.எம். தயாரித்த “நாணயம்’, எழுத்தாளர் தேவிபாலாவின் “மடிசார்மாமி’, அரிராஜன் இயக்கிய “மங்கை’ போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.

என்னைப் பொறுத்தவரை எல்லாவிதத்திலும் சந்தோஷமான நிறைவான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் ஒரே மகள் ஹேமாவுக்குக்கு இரண்டு பையன்கள். மூத்த மகன் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் பணியாற்ற, இளைய மகன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பரோடாவில் பணியாற்றுகிறார்.” என்று புன்னகை ததும்ப கூறுகிறார் புன்னகை அரசி.
(பகிர்வு- படித்ததில் ஈர்த்தது)


*#Rare_Photo* - #நாடோடி_மன்னன் #அண்ணா #கலைஞர்,



————————————————-
எம்ஜிஆர் தயாரித்து நடித்து 1958 ஆகஸ்ட் 22 அன்று வெளியான நாடோடி மன்னன் திரைப்பட வெற்றி விழா  மதுரை  தமுக்கம் மைதானத்தில் மதுரை முத்து தலைமையில் நடந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் இந்த விழாவில் தங்க வாளை  எம்ஜிஆருக்கு பரிசளித்தார். அந்த விழாவில் தலைவர் கலைஞர், நாவலர், பேராசிரியர், என் வி. என் முரசொலி மாறன் போன்றோர் கலந்து கொண்டனர். அண்ணாவுடன் இந்த விழாவில்  அன்றைய   திராவிட முன்னேற்றக் கழகத்தின் தளகர்தர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர் நிகழ்வை மதுரை பத்திரிக்கையாளர் சீனிவாசனால் எடுக்கப்பட்ட படம்.

பின்னாட்களில் அந்த வாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு எம்ஜிஆர் வழங்கிவிட்டார்.

#நாடோடி_மன்னன்

#KSRadhakrishnan_Postings 
#KSRPostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-02-2020.

History has two sides to it. Let us acquaint ourselves with both.

#Life should be experienced as an ardent spectator. Cosequential questions in retrospect, about our objectives , goals and destination helps in self-appraisal  and reaffirms our faith in our journey .
The Mind does not accept failure as much as it rejoices victory.
 History is an illusion created by magnifying success. The  journey of the people who have not made it to the top is as interesting as the journey of the achievers.

Talent   and  sincerity have.  been spurned.  Many highly skilled and determine people have not made a mark in  the  history  yet  their experiences are the ones that has to be recorded and understood. A hero is one who handles success and failure with a same attitude. 



#ksrpost
18-2-2020.

அன்றும்-இன்றும்.....





Tuesday, February 18, 2020

#A_pride_swells_within.



————————————-
As I turn to look at the path I have traversed,
A pride swells within. 
Nowhere and with no one,
Even during tough moments,
have I lowered my self esteem.
I have been betrayed,
and shamed by thankless trusted ones.
Great heights I may have clambered kneeling,
but Bharathi's bold words kept my head high.
I would never have forgiven myself 
had I stooped to conquer.
Adamance, determination  self respect-
 I have lived to my satisfaction May nature bless me with peace hereafter.

-K S Radhakrishnan
#ksrpost.
18.2.2020.

அகநானூறு

#அகநானூறு
——————-
முதல், கரு, உரி ஆகிய முப்பொருளும் அமைய நானூறு பாடல்களால் ஆகிய அகத்திணை இலக்கியமே அகநானூறு. பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தூண்ட, மதுரை உப்பூரி குடிகிழார் மகன் உருத்திர சன்மன் பதின்மூன்று முதல் முப்பத்தோர் அடிகொண்ட நானூறு பாக்களை அழகாகத் தொகுத்துள்ளார். ஒற்றை எண்ணில் அமைபவை பாலைப்பாக்கள் இருநூறு; இரண்டு, எட்டு ஆகிய எண்களில் அமைபகை குறிஞ்சித் திணைப்பாக்கள் எண்பது, நான்கு என்று வரும் எண்களில் அமைபவை முல்லைத் திணைப்பாக்கள் நாற்பது, ஆறு என்று வரும எண்களில் அமைபவை மருத்த்திணைப் பாக்கள் நாற்பது, பத்து, இருபது, முப்பது என்று வரும் எண்களில் அமைபவை நெய்தல் திணைப்பாக்கள் நாற்பது, பாரதம் பாடிய பெருந்தேவனார் இறைவாழ்த்துப் பாடியுள்ளார். முதல் நூற்றிருபது பாடல்கள் ஆண்யானை போன்ற தோற்றமும் நடையும் பெற்று வருவதால் களிற்றியானை நிரை என்று போற்றப்படுகின்றன. நூற்றிருபத்தொன்று முதல் முந்நூறு வரை உள்ள நூற்று எண்பது பாடல்கள் முத்தும் பவளமும் கலந்தது போன்ற நடைநலம் பெற்றிருப்பதால் மணிமிடை பவளம் ஆகும். இறுதி நூறு பாடல்கள் முத்துக் கோத்த்து போன்று பொருளும் நடையும் கொண்டு பொலிவதால் நித்திலக் கோவை ஆகும்.
நூற்று நாற்பத்து நான்கு புலவர் பாடியுள்ள அகநானூற்றுப் பாக்கள் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை வனப்புற விளம்புகின்றன. தமிழர் திருமண முறையினை 86, 136 ஆகிய எண்கள் கொண்ட பாடல்கள் புலப்படுத்துகின்றன. மகத நாட்டு ந்ந்தர் தம் செல்வத்தைக் கங்கை ஆற்றின் அடிப்பகுதியில் மறைத்து வைத்திருந்த இருபாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. யவனர் தந்த வினை மாண் நன்கலம், குடவோலைத் தேர்தல் முறை, பொன்னேடு வந்து மிளகைப் பெற்றுச் செல்லும் அயல்நாட்டார் ஆகிய பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தலைவனும் தலைவியும் சந்தித்த இடமும் காலமும் முதற்பொருள் என்பர். தெய்வம் முதலாகத் தொழில் ஈறாக வருபவை கருப்பொருள் ஆகும். தினைதோறும் அமையும் ஒழுக்கமுறை உரிப்பொருள் ஆகும்.
குறுங்கொடி முருகனார் பாடிய முல்லைத் திணைப் பாடல் தலைவன் பண்பாட்டுச் சிறப்பையும் உயிர்களிடம் காட்டும் பரிவையும் விளம்புகிறது. காந்தள் மலர் போன்று மணக்கும் தலைவியைப் பார்ப்பதற்காக உறையூர் நோக்கித் தேரிலே விரைந்து வரும் தலைவன், வரும் வழியில் பூஞ்சோலையில் வண்டுகள் இன்பம் பண்பாடிக் கொண்டிருப்பவை பிரிந்து போய்விடக் கூடாது என்று கருதுகிறான். தேரை நிறுத்திக் குதிரைகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளின் நாவை ஒலிக்காமல் கட்டுகிறானாம்;
பூத்த பொங்கர்த் துணையுடன் வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
என்ற தொடர், இன்பப் பண்பாடி இன்புறும் வண்டுகள் கலைந்து சென்று விடக்கூடாது என்று எண்ணுவது பேரின்பம் பயப்பதாகும்.
இயற்கையினைக் காட்சிப்படுத்துவதற்கு உவமைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. விண்மீன்கள் போன்று முசுண்டைப் பூக்களும் கரி பரந்த்து போன்று காயா மலர்களும் எரிபரந்த்து போன்று இலவம் பூக்களும் தோன்றுகின்றன. நண்டின் கண்ணுக்கு வேம்பின் அரும்பும் வெள்ளெலியின் கண்ணுக்குக் குன்றிமணியும் உவமையாக அமைந்துள்ளன.
அறிஞர் காசி விசுவநாதன் மூன்று தொகுதிகளாக அகநானூற்றைப் பாகனேரித்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார். (1943-46) முனைவர் தட்சிணாமூர்த்தியின் ஆங்கில மொழியாக்கம் பாரதிதாசன் பல்கலைக் கழக குறிஞ்சித் திணைப் பாடல்களிலும் அம்மூவனாரும் உலோச்சளாரும் நெய்தல் திணைப்பாடல்களிலும் ஒக்கூர் மாசாத்தியாரின் முல்லைத் திணைப்பாடலிலும் பெருங்கடுங்கோ பாலைத் திணைப் பாடல்களிலும் இளங்கடுங்கோவின் மருதத்திணைப் பாடலிலும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்பு ஒளியுடன் மிளிர்கிறது.
வாழையை உண்ணவந்த ஆண் யானை பக்கத்துக் குழியில் வீழ்வதும், பெண் யானை மரத்தை முறித்து ஆண்யானை ஏறிவரப் படியமைத்துக் கொடுப்பதும் மலைக்குகையான விடரகத்து எதிரொலிக்கிது; தலைவியின் நலம் நகர வரும் தலைவன், களவொழுக்கத்தை நாடுகிறான்; தோழி அறத்தொடு நிற்பதால் மணந்து கொள்ளும் முயற்சி ஊரார் அறியுமாறு செய்கிறது என்னும் உள்ளுறை உவம்ம் சிறப்புமிக்கது. 

- கே.எஸ். இராதாகிருஷ்ணன்
18.02.2020

#அகநானூறு
#ksrpost
#KSRadhakrishnan_post

Life

#

 should be experienced as an ardent spectator. Cosequential questions in retrospect, about our objectives , goals and destination helps in self-appraisal  and reaffirms our faith in our journey .
The Mind does not accept failure as much as it rejoices victory.
 History is an illusion created by magnifying success. The  journey of the people who have not made it to the top is as interesting as the journey of the achievers.

Talent   and  sincerity have.  been spurned.  Many highly skilled and determine people have not made a mark in  the  history  yet  their experiences are the ones that has to be recorded and understood. A hero is one who handles success and failure with a same attitude. 

History has two sides to it. Let us acquaint ourselves with both.

#ksrpost
18-2-2020.

10% Less Democracy,

ஜனநாயகம் குறித்து

 by Garett Jones, Stanford University Press வெளியிட்டுள்ளது. மக்களாட்சி என்ற அணுகுமுறை இன்றைக்கு மாறுபடுகின்றது. ஆரம்பக்கட்ட நிலையிலிருந்து இன்றைய நிலை வரை ஜனநாயக அணுகுமுறைகள் உலகளவில் எப்படி இருக்கிறது என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

Why an excess of democracy can lead to poor decisions
Cutting back on people power can be beneficial, thinks Garett Jones




10% Less Democracy: Why You Should Trust Elites A Little More and the Masses A Little Less. By Garett Jones.Stanford University Press; 248 pages; $28 and £22.99.

Garett jones, an economics professor at George Mason University in Virginia, knew he was on to a good thing when he got a call from the campus police. A student journalist had written a report on a lecture that he had given suggesting that rich countries would be better off if they were less, rather than more, democratic. The hostile reaction, which spread beyond the university, included a call threatening enough to trouble the university’s private security force. Mr Jones concluded that he had an idea powerful and contentious enough to make into a book. The result is “10% Less Democracy”.

This is a fertile time for critiques of democracy. In light of the use of state apparatus by elected leaders to undermine an opponent in America, murder people in the Philippines, render a religious minority stateless in India, threaten judicial independence in Poland, and rob the public purse in South Africa, the system which has long provided the rich world with a satisfying mix of moral superiority and stable government is looking a bit ropy. A report last month from the Centre for the Future of Democracy at Cambridge University found that support for democracy had declined sharply in most of the world since the 1990s, including in America and western and southern Europe. The world’s biggest autocracy, meanwhile, is bringing prosperity to its own population and extending its influence round the world.

But as Mr Jones discovered, criticising democracy in the West is still a bit like launching a broadside against the pope in 15th-century Europe—or against a modern-day authoritarian president. You can suggest that all is not going to plan, but you will get a friendlier reception if you pin the blame on dodgy advisers or foreign interference, rather than on the concept itself.

David Runciman’s recent “How Democracy Ends” attributed democracy’s woes to decadence. The system was healthier, he argued, when change or conflict—the expansion of the franchise in the first half of the 20th century, the second world war—had given it a shot in the arm. Pankaj Mishra, in “Age of Anger”, maintained that the problem lies in the growing gap between a political system that promises equality and an economic one that leads to inequality.

By contrast, Mr Jones plants responsibility squarely on the shoulders of the voters. As an economist, he approaches democracy as a production system whose output is governance, and examines how it can be tweaked to improve the product. The core of “10% Less Democracy” is thus research on whether more or less democracy produces better or worse outcomes for countries and citizens.

Early and less often
As the title suggests, Mr Jones’s critique operates within a narrow band. He concedes that massacres and famines are less likely to happen in democracies than in autocracies, and that there is a clear correlation between democracy and prosperity. But he takes issue with Daron Acemoglu’s claim, in the title of a paper published last year, that “Democracy Does Cause Growth”. The paper found that when undemocratic countries became democratic, they grew faster, raising gdp per head by an average of 20% in the long run.

But democracy, Mr Jones points out, is not like virginity: countries can be a bit more or a bit less democratic. No modern country, not even Switzerland, is as insanely democratic as ancient Athens, where citizens voted to recall their military leaders from Sparta. All democracies limit popular participation in collective decision-making, be it by handing over responsibility to elected representatives to make big decisions, or by appointing judges and other public servants. Mr Jones believes that, because people do not always vote for what is good for them, those countries that have made it to the top quartile of the democracy scale should set slightly tighter limits.

A study by Alberto Alesina and Lawrence Summers in 1993, for instance, showed that inflation was lower in countries with independent central banks. There was no cost in terms of growth or employment; it was a free lunch. The trick was simply to hand over responsibility for the money supply to an official who had no interest in using it to boost growth in the run-up to elections. (In the best—or only—joke about central bankers, a student visits his former professor, who has become one. The phone rings. “No…no…no…no…yes…no…no,” says the central banker. Hanging up, he explains that the caller was the finance minister. “What did you answer ‘yes’ to?” wonders the student. “He asked if I could hear him.”)

Likewise, regulators’ backbones are stiffened by independence. A study in Europe showed that the less dependent on politicians they are, the more likely they are to stand up to government-owned utilities. Free trade, too, benefits when farther from democracy. The closer politicians are to an election year, the less likely they are to vote for measures to liberalise trade.

In America, which has historically been devoted to democracy, all sorts of officials are elected. State-by-state variations allow comparison of their performance with the appointed type. It turns out that elected judges make worse judgments and elected city treasurers cost their taxpayers more (though not many are as improvident as the man who consulted a psychic to help him manage the voters’ money—and eventually bankrupted Orange County).

A price worth paying
Mr Jones musters plenty of convincing evidence that fewer elections and more distance between voters and decisions make for better governance. But he stretches the argument for limiting democracy far beyond that observation. He is attracted by the idea of “epistocracy”, or rule by clever people; he advocates giving an official role in decision-making to bondholders, who already constrain governments’ freedom by raising the costs of lending to badly managed countries.

These arguments expose the flaw at the centre of this interesting and enjoyable book. Mr Jones looks at democracy as an economic system. But for most people, democracy’s moral component is also essential. It is an expression of the belief that everybody is equal in the sight of God or the presence of the ballot box, and that a country’s people should have power over their government. Less democracy may mean more sensible outcomes, but it also means less legitimacy.

Recent events illustrate that point. Hong Kong is in many ways a splendidly governed place, with reliable social order and a thriving economy—and very limited democracy. The result of last year’s election, in which voters supported pro-democracy protesters, was a clear message to the territory’s Chinese overlords that its people wanted more of a say, even at the cost of less stability.

For its part, the European Union is a model of co-operation and rational decision-making. Yet it has just lost one of its larger members, in part because British voters felt no connection with its governance structures. Technocrats may make sensible decisions, but democracy without legitimacy is a ship without a sail.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-02-2020

கணேச மூர்த்திகள் ….. பெண்கள் பொது வெளியில் தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது.

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்!    பெண்கள் பொது வெளியில்  தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில...