Showing posts with label Western Ghats. Show all posts
Showing posts with label Western Ghats. Show all posts

Friday, July 31, 2015

மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச் சூழல் பிரச்சனையில் தமிழ்நாட்டின் பாராமுகம்- Western Ghats - Neglections Government of Tamil Nadu .

மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச் சூழல் பிரச்சனையில் தமிழ்நாட்டின் பாராமுகம்- Western Ghats - Neglections Government of Tamil Nadu .





ஏற்கனவே என்னுடைய தளங்களில் இதைக்குறித்து விரிவான பதிவைச் செய்திருந்தேன். மாதவ காட்கில், கஸ்தூரி ரங்கன் ஆகிய குழுக்களின் அறிக்கைகள் மத்திய அரசிடம் வழங்கப்பட்டும் இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் இல்லை.

குஜராத்திலிருந்து தமிழகம் வரை ஆறு மாநிலங்களில் படர்ந்த இம்மலையில் பரப்பளவு 60,000சதுர கி.மீட்டர்கள். இதில் சுற்றுச் சூழல் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்று இந்தக் குழு வழங்கிய அறிக்கைகளை எதிர்த்து பல சுயநல சக்திகள் போராடின. ஆனால் இந்த அறிக்கை குறித்து தமிழக அரசு எந்த நிலைப்பாட்டையும் இதுவரைத் தெரிவிக்கவில்லை.

இதில் தமிழகத்தில் 6914சதுர கி.மீட்டர் மேற்குத் தொடர்ச்சிமலையின் பரப்பு அடங்கியுள்ளது. இயற்கையை அழித்து மாசுபடுத்துகின்ற சக்திகளிடமிருந்து காக்க இந்த ஆறுமாநிலங்களுடைய அறிக்கையை மத்திய அரசு எதிர்ப்பார்த்தது. ஆனால் தமிழக அரசு அளிக்க வேண்டிய அறிக்கையின் அவகாச கால இன்றுடன் (31-07-2015) முடிவடைகின்றது.

தமிழக அரசுக்கு மேற்குத் தொடர்ச்சி  மலை சுற்றுச்சூழல் பற்றிய அறிக்கையை வழங்குவதற்கு என்ன தயக்கம்? ஏன் மெத்தனப் போக்கு?
இந்தப் பிரச்சனையை எத்தனைபேர் அறிவர்? இது வேதனையிலும் வேதனை.


See also : http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_24.html


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2015.


Wednesday, July 15, 2015

Western Ghats’ green zone may shrink.





Courtesy : Hindustan Times.

-K.S.Radhakrishnan
15-07-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #WesternGhats

Tuesday, February 24, 2015

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் - சில குறிப்புகள்.


மேற்குத்தொடர்ச்சி மலைகள் மயத்தைவிட காலத்தினால் மூத்தது. இந்த மலைத்தொடரில் 126 ஆறுகள்பல சிற்றாறுகள்,  29 பெரிய நீர்வீழ்ச்சிகள்சுணைகள்,  50க்கும் அதிகமான  அணைக்கட்டுகள் மற்றும்   கொடைக்கானல்உதகைமூனார்நீலகிரி போன்றபல மலைவாசஸ்தலங்கள்பசுமை நிறைந்த காடுகளை கொண்டடங்கியது. 

தமிழ் பிறந்த  தொட்டிலாக  தென்கோடியில் அகஸ்தியர் வாழ்ந்த  பொதிகை மலையிலிருந்து வரும் தென்றலுக்கு இணையாக எதுவுமில்லை. மாமதுரைப் பாண்டியன் அவையில் நீதிகேட்டு இறுதியில் கற்புக்கரசி கண்ணகி  சென்றது மேற்குத்தொடர்ச்சி மலைப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கம்பம் பகுதிக்கே! 

யுனஸ்கோ நிறுவனத்தால் உலகின் பாரம்பரியம் மிக்க சின்னமாக  2011ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலை அறிவிக்கப்பட்டது.  இம்மலைத்தொடரில் எத்தனையோ அற்புதங்கள்மனத்திற்கேற்ற ரம்யமான அமைதிபுதிய உலகம்அரியகாட்சிகள் ,  கானுயிரிகள், நிறைந்து மனத்துயரத்தைப் போக்கும் மாமருந்துதான் இம்மலைத்தொடர்.

குஜராத் மாநிலம் துவங்கி மகராஷ்ட்ரம்கோவா,  கர்நாடகம்,  கேரளம்தமிழகம் குமரிமுனை வரை 1200 கீ.மீ மேலாக தொடர் சங்கிலி போல நீண்டு தென்னிந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது மேற்குத் தொடர்ச்சி மலைகள்.  அரபிக்கடலிலிருந்து வரும் காற்றைத் தடுத்து தீபகற்ப இந்தியாவிற்கு மழைப் பொழிவைத் தருகின்றது. 

இம்மலைத்தொடரில் 7402 பூக்கும் தாவரங்களும், 1814 பூக்காத தாவரங்களும்அருமருந்தாக அமைந்த பல மூலிகைச் செடிகளும் -மரங்கொடிகளும், 6000வகையான பூச்சிகளும், 10 வகையான காட்டுத் தேனீக்களும்,  508வகை பறவை இனங்களும், 179 இருவாழ் உயிரினங்களும், 290 வகையான அரியமீன்களும்அதிக அளவில் யானைகளையும் கொண்ட பகுதியாக இருக்கின்றது.  


14 தேசியப்பூங்காக்கள், 44 வன உயிரின சரணாலயங்கள், 11 புலிகள் காப்பகங்கள் மட்டுமல்லாமல்புலிசிறுத்தைவரையாடு போன்ற 139 வகை பாலூட்டி உயிரினங்கள் இந்த மலைக்காடுகளில் வாழ்கின்றன. பலவகையான  நீர்வளம்வனவளம்கனிம வளம் ஆகியவற்றோடு  35 சிகரங்களைக் கொண்ட இந்த மலைத்தொடர்  150மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்ரிக்க - மடகாஸ்கர் நிலப்பரப்போடு இணைந்த மலைத்தொடராக இருந்து பிரிந்தது என்று ஆய்வுகள் சொல்கின்றன. 

80மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட  எரிமலை சீற்றத்தினால்இப்போதுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்தது என்று மற்றொரு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கோதாவரிகிருஷ்ணாகாவிரிதாமிரபரணி போன்ற பல ஆறுகளின் நதிமூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகள் தான். 





மணிமுத்தாறுதென்பெண்ணைவைகைபெரியாறுபோன்ற ஆறுகளின் நீர்வரத்தும் இங்கிருந்துதான். எண்ணற்ற பழங்குடிமக்கள் இம்மலைத்தொடர்களில் வாழ்கின்றனர். அவர்களின் கலாச்சாரமும், வாழ்க்கைமுறையும், தனித்துவம் மிகுந்த தாய்மொழியும் அலாதியானது.

குற்றாலம்அகஸ்தியர்சுருளிவெள்ளிநீர்வீழ்ச்சிசுஞ்சனா சுட்டேசோகக்சாலக்குடிகல்கட்டிஉஞ்சள்ளிபாணதீர்த்தம் சத்தோடுசிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி என இங்கு நீர்வீழ்ச்சிகள் ஏராளம். ஊட்டி ஏரிகொடைக்கானல் ஏரிபேரிஜம் ஏரிபூக்காடு ஏரிதேவிக்குளம் ஏரிலிட்சினி யானை ஏரிஉள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் செயற்கை ஏரிகளும் இங்கு அமைந்துள்ளன.

அத்தனை இயற்கை வளங்களும் அமைந்த மலைகளின் வளத்தைப் படிப்படியாகசில சுயநலவாதிகள் அழிக்க ஆரம்பித்தனர். பேராசை சக்திகளால் இந்த பசுமை நிறைந்த மலைகள் மொட்டையடிக்கப்பட்டு வருகின்றது. 

மரங்களை வெட்டி வனத்தின் பசுமையை அழித்தார்கள். குவாரிகள் என்ற பெயரில் மலையை துண்டாடினார்கள். ராட்சத குழாய்க்களைக் கொண்டு சுவைநீரையும் திருடத் துவங்கினார்கள்.  பண்ணைவீடுகள்,  தங்கும் விடுதிகள் என வணிக ரீதியில் மேற்குத் தொடர்ச்சி மலையையே கபளீகரம் செய்து வருகின்றனர். 

மனிதர்கள் காடுகளை நோக்கிப் புறப்பட்டதும்காடுகளிலுள்ள விலங்குகள் நாட்டை நோக்கிப் புறப்படத் துவங்கின. இவர்கள் செய்த சுயநல கூத்துக்களால்புவி வெப்பமயமாகி பருவமழை பொய்த்து , ஓசோன் படலத்தில் வாயு விரிவடைந்தது என இயற்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. கேளிக்கைகும் , மதுஅருந்துவதற்கும் காடுக்குள் சென்று காட்டை நாசப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. புற்காடுகளை அழித்து மனைகளாக மாற்றியதின் விளைவு உதகை மலைப்பகுதியே நிலச்சரிவுக்குள்ளாகியது மறக்கமுடியுமா என்ன?.

ஊட்டிநீலகிரிமூணாறுமேகமலைகொடைக்கானல் போன்ற மலைநகரங்களில் மாஸ்டர் ப்ளான் மற்றும் வனச்சட்டங்களை மீறி பண்ணைவீடுகளும்தேயிலை எஸ்டேட்டுகளும் பெருகிவிட்டதால்மலையின் அமைப்புக்கே  ஆட்டம் கொடுக்குமோ என்ற அச்சம் நமக்கு ஏற்பட்டுள்ளது.  

வைகையாற்றின் கரையில் அமைந்துள்ள வருசநாடு பகுதியில் சில பேராசைக்காரர்களால் கஞ்சா பயிரிடுவதும்வனவிலங்குகளை வேட்டையாடுவதும் நடக்கிறது. இங்குதான் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தற்போது ரோந்துப்பணிகள் நடைபெற்றன.

இம்மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகஆனைக்கல் காடுகள் • அன்சி தேசிய பூங்கா • ஆரளம் காடுகள் • அகத்தியமலை உயிர்கோள காப்பகம் • அகத்தியவனம் உயிரியல் பூஙகா • பந்திப்பூர் தேசிய பூங்கா • பன்னார்கட்டா தேசிய பூங்கா • பத்திரா காட்டுயிர் உய்விடம் • பிம்காட் காட்டுயிர் உய்விடம் • பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் • சன்டோலி தேசிய பூங்கா • சின்னார் காட்டுயிர் உய்விடம் • தான்டலி தேசிய பூங்கா • இரவிகுளம் தேசிய பூங்கா • கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா • இந்திராகாந்தி தேசிய பூங்கா • இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் •

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் • கரியான் சோலை தேசிய பூங்கா • கர்நாலா பறவைகள் உய்விடம் • கோய்னா காட்டுயிர் உய்விடம் • குதிரைமுக் தேசிய பூங்கா • முதுமலை தேசிய பூங்கா • முதுமலை தேசிய பூங்கா • முதுமலை புலிகள் காப்பகம் • முக்கூர்த்தி தேசிய பூங்கா • நாகரகொளை தேசிய பூங்கா • புது அமரம்பலம் காடுகள் • நெய்யார் காட்டுயிர் உய்விடம் • நிலகிரி உயிர்கோள காப்பகம் • பழனிமலைகள் தேசிய பூங்கா • பரம்பிக்குளம் காட்டுயிர் உய்விடம் • பெப்பாரா காட்டுயிர் உய்விடம் • பெரியார் தேசிய பூங்கா • புசுபகிரி காட்டுயிர் உய்விடம் • ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் • செந்துரிணி காட்டுயிர் உய்விடம் • அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா • சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் • திருவில்லிப்புத்தூர் காட்டுயிர் உய்விடம் • தலைகாவிரி காட்டுயிர் உய்விடம் • வயநாடு காட்டுயிர் உய்விடம் ஆகிய இடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
   மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
   குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே... " திரிகூட ராசப்பக் கவிராயர் பாடின குற்றாலக்குறவஞ்சி இம்மலையில் நீராடுதுறையாக அமைந்திருக்கும் குற்றாலத்தின் இயற்கை எழிலைப் பாடுகிறது.

இயற்கையோடு இயைந்து விவசாயம் செய்து அதனை இயற்கைக்கே படைத்துக் களித்த முன்னோர்களை புறநானூற்றுப் பாடலொன்று பாடுகின்றது. பிட்டங் கொற்றன் என்ற குறுநிலமன்ன்னைப் பற்றி முல்லை நிலத்தில் பாடப்பட்டிருக்கும் பாடலின் எளிய உரை அந்தக் காலக்கட்டத்தின் பழங்குடிமக்களின் வாழ்வை நம் கண்முன்னே கொண்டுவருகின்றது. 

''அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு
கடுங்கட் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை
முந்து விளை யாணர்” - புறநானூறு : 168'''

அருவி ஒலித்துப்பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக் கொடி வளரும் மலைச்சாரலில் காந்தள் மலர்கள் மலர்ந்து இவ்விடத்தில் மனத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த காந்தள் மலர்களின் கொழுந்த கிழங்குகளைக் கிளறித் தின்னுவதற்காக காட்டுப் பன்றிகளின் கூட்டம் அங்கு வருகின்றன. தங்களின் கூரிய கொம்புகளால் (பற்கள்) நிலத்தைக் குத்தி,கிளறி,நொண்டி காந்தள் மலர்களின் கிழங்குகளை வெளிய எடுத்து தின்று விட்டு செல்கின்றன.

இப்பொழுது அந்த நிலம் பார்ப்பதற்கு ஏர் கொண்டு உழுந்த வயல்க்காட்டைப் போன்று காட்சியளிக்கின்றது.இதைப் பார்த்த அந்த மலைவாழ் மக்கள் நிலத்தின் மேலிருந்த காந்தள் தழைகளை எடுத்து வீசி விட்டு அதன் மீது தினையை விதைக்கின்றார்கள். விதைத்த தினைக்கதிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்குத் அணியமாகின்றன.

தினைக் கதிர்களை அறுவடை செய்ய அந்த மலைவாழ் மக்கள் ஒரு நல்ல நாளுக்காகக் காத்திருந்து அறுவடை செய்ய முதல் விளைச்சலை கடவுளுக்குப் படைப்பது அவர்களின் மரபு. சந்தனக் கட்டைகளால் அடுப்பில் தீ மூட்டி அதன் மீது காட்டு ஆமாக்களிடமிருந்து (மாடு) நுரை தளும்ப கறக்கப்பட்ட புதிய பால் உற்றப் பட்ட பானையை வைக்கின்றார்கள். பால் நன்றாக கொதித்ததும் அதில் தினையை போட்டு பொங்கல் சமைத்து கடவுளுக்குப் படைக்கின்றனர். என்ன இனிமை பாருங்கள். 

இத்தகைய மேற்குத் தொடர்ச்சி மலைகள் போலல்லாமல்கிழக்குத் தொடர்ச்சி மலைகள்  தனித்தனியாக துண்டிக்கப்பட்ட அமைப்பினை உடையது. அதிலும் பசுமையைச் சூரையாடியே விட்டார்கள். திண்டுக்கல் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலையின் அங்கமாக இருக்கும் சிறுமலைக்காட்டின் ஒரு பகுதி முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டது. கொல்லிமலைக்கும் ஜவ்வாது மலைக்கும் அதே நிலைமை. 

மேற்குத் தொடர்ச்சி மலையினைக் கண்காணிக்க உரிய கருவிகளும்போதுமான அளவு அலுவலர்களும் இல்லை என்பது பெரிய குறை. பல்வேறு வெளிநாட்டு கும்பல்களோடு சேர்ந்து இந்தப் பகுதியில் வேட்டையாடி விலங்கினங்களுடைய தோல் மற்றும் உடல்கூறுகளை அயல்நாடுகளுக்குக் கடத்துகின்ற நிலையும் உள்ளது. 

இந்த அவலங்களை எல்லாம் தீர்க்க வேண்டுமென்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தாலும்வணிக நோக்க ஆதிக்கச் சக்திகள் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று காட்டுக்குள் புகுந்து தங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு காட்டைச் சுரண்டுகின்றார்கள். 

இதற்காகவேமாதவ காட்கில் தலைமையிலும்கஸ்தூரி ரங்கன் தலைமையிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டன.

 இந்த குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றக்கூடாது என்று கேரளா போன்ற பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஏனெனில் அவர்களால் மரங்களை வெட்டமுடியாதுகுவாரி நடத்த முடியாதுஉல்லாச விடுதிகள் கட்ட முடியாதுதங்களுக்கு பணம் கொழிக்காது என்ற சுயநலத்தில் இந்த அறிக்கைகளை நிறைவேற்ற விடாமல் நெருக்கடி கொடுத்தனர்.

அதற்கேற்றார்போல்டெல்லி ஆட்சியிலுள்ள பாதுஷாக்களும் மாதவகாட்கில்கஸ்தூரி ரங்கன் அறிக்கைகளைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.  பத்துபேர் கொண்ட கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை, கடந்த 2013 ஏப்ரல் 15 நாள் மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டது. 

மேற்குத்தொடர்ச்சி மலையின் 37சதவீத வனப்பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுகட்டிடங்கள் கட்டுவதுகுவாரிகள்
அணைகள்மின் உற்பத்தி திட்டங்கள்தொழிற்சாலைகள்அணுமின் நிலையங்கள் அமைக்கத்தடை விதிக்கப்பட வேண்டும். 

20,000 சதுர கி.மீ காட்டைச் சுற்றி கட்டுமானங்களே இருக்கக் கூடாது. 50,000ஹெக்டேருக்கு மேல் வீடுகள் அமையக்கூடாது.  புதிதாக எந்த நிலத்திற்கும் பட்டா வழங்கக் கூடாது. வனநிலங்களை
வேறுபணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. 

அமைதிப் பள்ளத்தாக்குவருசநாடு போன்ற பல  வனப்பகுதிகள் மிகவும் எச்சரிக்கையாகவும்கடுமையாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கஸ்தூரி ரங்கன் அறிக்கையை விடமாதவ காட்கில் அறிக்கையின் பரிந்துரைகள் இன்னும் கடுமையானவை. 

வளர்ச்சிபேராசைசுயநலம் என்ற நோக்கத்திற்காக இயற்கையின் அருட்கொடையான வளங்களை ஒருபோதும் அழிக்கக்கூடாது என்று மாதவ காட்கில் தன்னுடைய அறிக்கையில் தெளிவாக்கியுள்ளார். 

கர்நாடகமும் கேரளாவும் அரசுப்பணியில் விலக்குக் கோரும் பகுதிகளை தயார்ப்படுத்தி வருகிறது. மகாராஷ்ட்டிர மாநிலமும் இதே நிலைப்பாட்டைக் கொண்டு வருகிறது. கேரள மாநிலம் மூவர் குழுவை அமைத்து அம்மாநில கிராமங்கள் தோறும் கஸ்தூரி ரங்கன் அறிக்கைக்கு எதிராக கருத்துக் கேட்புக் கூட்டங்களும் நடத்தின.
ஆனால் தமிழ்நாடு இதைக் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.


தமிழக நீராதாரங்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையிலே உள்ளது. அந்த நீராதாரங்களைப் பாதுகாக்கவேண்டுமென்ற கஸ்தூரி ரங்கன் அறிக்கையை ஆதரிக்கத் தமிழ்நாடு தவறிவிட்டது. இதுவரை மத்திய அரசு கேட்டு எந்தக் கருத்தையும் தமிழகம் தெரிவிக்காமல் உள்ளது கவலையைத் தருகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் மொத்தம் 1,60,000 சதுரகிலோமீட்டர் பரப்பளவில், தமிழகம்  28,200ச.கிலோமீட்டர் பரப்பளவைப் பெற்றுள்ளது. கேரளாவோ 28,100 சதுர கிலோமீட்டரும், கோவா 1,075 சதுர கிலோமீட்டரையும், மகாராஷ்ட்டிரா 58,400சதுர கிலோமீட்டரையும், கர்நாடகா 43,300சதுர கிலோமீட்டரையும் பெற்றுள்ளதாக இக்கருத்துகள் சொல்லும் போது தமிழகம் மட்டும் வாய்மூடி மௌனியாகவே இருக்கின்றது.

இந்த இரண்டு அறிக்கைகளும் கையில் வாங்கியபின்பு மத்திய அரசு ம் இவற்றை நடைமுறைப் படுத்தவில்லை. இந்த இரண்டு குழுக்களையும் மத்திய அரசுதானே அமைத்து அறிக்கை தரச்சொன்னதுஅதே மத்தியஅரசு  அறிக்கைகளின் பரிந்துரைகளைபரிசீலித்து நிறைவேற்றுவது தானே நியாயமும் நேர்மையும். அதைக் கிடப்பில் போட அவசியம் என்ன?இந்த கேள்விகளின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை தானே!.

கலாச்சாரத்திலும் ஒன்றோடு ஒன்று இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அழிவுநேர்கிறது என்பதை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. மனித ஜீவனோடும்இந்த சமுதாயத்தோடும் அங்கமாகத்தான் மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கின்றது.  இயற்கையை காப்போம் வாரீர்..  

 -கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
24-02-2015.



தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...