Tuesday, September 8, 2026

#தொகுதிகளைமறுவரையறை

 #தொகுதிகளைமறுவரையறை

——————————————— மக்கள் தொகையின் அடிப்படையில் தான் தொகுதிகள் அமைக்கப்படுகின்றன!மக்கள் தொகைக்கணக்கெடுப்பு என்பது கடைசியாக 2011 இல் நடந்தது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஆண்டில் நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது கொரோனா தொற்று பரவலாக இருந்ததால் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை 2013 கணக்கு எடுப்பின் படி நாட்டின் மக்கள் தொகை சுமார் 123 கோடியாக இருந்தது.நியாயப்படிப் பார்த்தால் இப்போது நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் தான் தொகுதிகளை மறு வரையறை செய்ய முடியும்! மக்கள்த் தொகை கணக்கெடுப்பிற்கு பின் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்குப் பதிலாக இப்போதே ஏன் தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது என்று கேட்கிறார்கள்! மத்திய அமைச்சர் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நடந்து வரும் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படாது என்றுதான் கூறியிருக்கிறார்! மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டுத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதும் ஒரு வழிமுறைதான்! கடந்த காலத்தில் நடந்த மக்கள்த் தொகை கணக்கெடுப்பின்படி 1952 ல் 404 தொகுதிகளாக இருந்த நாடாளுமன்ற இடங்கள் 1963ல் 542 இடங்களாக உயர்ந்தது! இன்று வரை இந்த 542 இடங்கள்தான் நாடாளுமன்றத் தொகுதிகளாக உள்ளன! குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கடுமையாக அமல்படுத்திய தமிழ்நாடு கேரளம் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களின் தொகுதிகள் குறைய கூடும் என்று திமுக போன்ற கட்சிகள் கூறுகின்றன! கூடுதலோ குறைவோ அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நிலப்பரப்பில் உபி பெரிய மாநிலம் அதனால் அங்கு 80 எம்பிக்கள் உள்ளனர். இது ஒரு புறம் இருக்க த வெக அரசியல் ரீதியாகத் திமுகவை எதிர்க்கிறது!ஆனால் இந்த தொகுதி மறு வரையறை விஷயத்தில் மத்திய அரசை திமுக எதிர்ப்பது போல் ஆளுங்கட்சியான த வெக வும் எதிர்க்கிறது! அரசியலில் எதிர் முகமாக உள்ள இரண்டு கட்சிகளும் தொகுதி வரையறை விஷயத்தில் ஒத்த கருத்துகளைக் கொண்டிருக்கின்றன! பொதுவாக மத்திய அரசை அனுசரித்துப் போவோம் என்று ஜோசப் விஜய் கூறியிருந்தாலும் இந்த விஷயத்தில் திமுகவை போல் அவரும் அவரது கட்சியும் இதை எதிர்ப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது! விஜயின் பார்வையில் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்பது இப்படித்தான் போல! மறுவரையறை சம்பந்தமான மசோதா ஆகஸ்ட் 13ஆம் தேதியுடன் முடிவடையும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்படவில்லை! அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படலாம்! ஆனால் இந்த மசோதா கொண்டுவரப்படுவதற்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள திமுக காங்கிரஸ் த வெ க முதலான கட்சிகள் இந்த மசோதாவை எதிர்க்கின்றன! விஜய் தலைமையிலான த வெ க அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றியுள்ளது! தொகுதிகள் மறு வரையறை செய்யப்பட்டால் அப்போது தமிழகத்திற்கு உள்ள 39 நாடாளுமன்ற இடங்களும் குறைக்கப்பட்டு தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று திமுக மாதிரியான கட்சிகள் கூச்சல் போடுகின்றன! இந்த கூச்சலில் ஆளுங்கட்சியான தவெகவும் இணைந்து கோரஸ் பாடுவது எப்படி என்று தெரியவில்லை! ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க மாட்டார்கள் போல! ஒரு சட்டம் அல்லது ஒரு மசோதா தேசம் முழுக்க அமலுக்கு கொண்டுவரப்படும் பொழுது பொறுமையாக இருந்து அதனுடைய சாதக பாதகங்களை அலச வேண்டும்! வளைக்கு முன் கல்லெறியக் கூடாது! எல்லா மாநிலங்களின் நலன்களை கணக்கில் எடுப்பது தான் இறையாண்மை. இப்போது தவெக தொகுதிகள் எந்த வகையிலும் குறையக்கூடாது என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டு உள்ளது. #Delimitation #elections #tamilnadupolitics #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost #KSRadhakrishnan

No comments:

Post a Comment

AUG 28