Saturday, April 27, 2024

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும்  சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும்
போட்டியாக  வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே  வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள் என்றேன்.

#ksrpost
27-4-2024.

#EVMs - #History #elections #ElectionCommissionOfIndia , its journey "A long way from 1984: When SC junked ECI's first EVM experiment"

#EVMs - #History #elections #ElectionCommissionOfIndia , its journey

"A long way from 1984: When SC junked ECI's first EVM experiment"


*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in the direction of the best. On the way you may find some rough roads but they lead you to a better life. The two most important days in your life are the day you are born and the day you find out why. So understand, when life is good, make sure you enjoy and receive in fully. And when life is not so good, remember that it will not last forever and better days are on the way....

#ksrpost
27-4-2024.


Friday, April 26, 2024

*Sometimes you might feel like giving up on everything*.

*Sometimes you might feel like giving up on everything*. You might have both good  and bad days, but more bad than good or so it seems. Everyday you might have more question than answers "what is this all for?"," am I making the right choices?" or "am I supposed to be here, now?" and most of the time you don't even know how to explain them. Life is hard, but you have to keep going,you have to rise above the waters of your soul, and bloom, no matter how hot the fire is. Believe, you're a warrior and a soldier filled with both pain and love. And life is just another beast you were meant to tame and you are the one better for the job... 

#ksrpost
26-4-2024.


Thursday, April 25, 2024

23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

23rd April Happy #Shakespeare_Day!

Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

° We know what we are, but know not what we may be.
° Love all, trust a few, do wrong to none.
° It is not in the stars to hold our destiny but in ourselves.
° Better three hours too soon than a minute too late.
° If music be the food of love, play on.
° A fool thinks himself to be wise, but a wise man knows himself to be    a fool.
° Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them.
° Good night, good night! Parting is such sweet sorrow, that I shall say good night till it be morrow.
° Hell is empty and all the devils are here.
° Brevity is the soul of wit.
° This above all; to thine own self be true.
° Cowards die many times before their deaths; the valiant never taste of death but once.
° We are such stuff as dreams are made on; and our little life is rounded with a sleep.
° What's in a name? That which we call a rose by any other name would smell as sweet.

I know so many beautiful quotes are left. Do add them in comment.

#shakespeareandco


Nandini Satpathy

#NandiniSatpathy: 
The Iron Lady of Orissa by Pallavi Rebbapragada..




Nandini Satpathy was graduated from Madras Presidency college. Met her during my NSUI years as  union minister. Delhi and then Madras.

Obliterated from the pages of history, as women often are, Odisha’s first woman Chief Minister, Nandini Satpathy, known also as the Iron Lady of Orissa, was born to a family of revolutionaries and intellectuals. During her teenage years in the ‘40s, this petite girl in a starchy cotton saree was jailed for pulling down the Union Jack from atop the edifice of Ravenshaw College.

Thus began the makings of a force to be reckoned with.

Coming up through the ranks to ultimately reach the hallowed halls of the Rajya Sabha at the mere age of 31, this grassroots student politician went on to become the I&B minister in Indira Gandhi’s first government, where she facilitated the working of the Free Bangla Radio that played a key role in the information war that was ’71. She hobnobbed with the likes of Raj Kapoor, Nargis, and Meena Kumari as India produced films around socialist films and warmed up to Russia. And still, in Delhi circles, she is best remembered as ‘Indira Gandhi’s friend’.

@simonandschusterin


Remember, if you don't like a situation, you can either take action to change it or change the way you think about it.

Remember, if you don't like a situation, you can either take action to change it or change the way you think about it. Either way, choosing unhappiness is no way to live. Control what you can control.  Don’t lose sleep worrying about things that you don’t have control over because, at the end of the day, you still won’t have any control over them. Whatever may be your age, if you are planning for tommorow, you are still young to achieve it..... 

#ksrpost
22-4-2024.

அனைத்தும் விலை போன காலத்தில் எம்பி பதவி யாரிடம் இருந்து என்ன பயன். ஒட்டுமொத்த பங்குதாரர்கள் தேர்தலை நடத்தி தங்கள் வணிகத்தை செய்யப் போகிறார்கள். இதில் நாம் கருத்து கூற என்ன இருக்கிறது.

எலக்சன்ல யார் ஜெயிச்சு வருவாங்க எத்தனை சீட்டு வருவாங்கன்னு டெலிபோன்ல நண்பர்கள்  கேட்கிறார்கள்.

யார் ஜெயிச்சு வந்தா மட்டும் என்ன ஆகப்போகுது! 50 வருஷமா கெடக்கிற பிரச்சனை கெடப்பிலதான் இருக்கும்.

அது காவேரி பிரச்சனையாகட்டும் கச்சத்தீவுப் பிரச்சனையாகட்டும் இல்ல சேது சமுத்திரக் கால்வாய் திட்டமாகட்டும் இல்ல தமிழ்நாட்டின் நலன்கள் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் ஆகட்டும் இங்கிருந்து ஜெயிச்சு போற யாரராலும் எதுவும் ஆகப் போறது இல்ல .

எல்லா கூட்டத்தொடர்க்கும் விமானத்தில் போவாங்க வருவாங்க அலவன்ஸ் வாங்கிகிட்டு நாடாளுமன்றத்தில் கொட்டாவி விட்டு தூங்கி எழுந்து வர வேண்டியது தான்.

ஜெயிக்கிறதுல என்ன பெருமை இருக்கு. செயல்பாட்டில் ஊக்கமும்  ஒருமித்த கருத்தும் இல்லாமல் இங்கு ஒன்றும்  நிகழாது. இது வெறும் ஒரு அலங்காரப் பதவிதான். 
எந்த விதத்திலும் ஒரு எம்பி தனது தொகுதிக்கான காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியாது. மசோதாக்களை எதிர்த்தோ ஆதரித்தோ இரட்டை வேடமிட்டு
வேண்டுமானால் சிலவற்றைப் பங்கு போட்டுக் கொள்ளலாம்.

ஆகவே இந்த எம்பி பதவி என்பது பல்லு இல்லாதவனுக்கு பட்டாணி கடலையைக் கொடுத்த மாதிரிதான்.

ஒரு பதவி என்றால் அதற்குரிய கம்பீரமும் நடத்தையும் செயல் திறனும் சமூகப் பொறுப்பும் இருக்க வேண்டும் அது இல்லாமல் பணத்தைக் கொடுத்து ஓட்டை வாங்கிப் பதவியில் அமர்ந்தால் அதற்கு  மக்களிடத்தில் என்ன மரியாதை இருக்கும்.

ஆகவே யார் ஜெயித்தால் என்ன எத்தனை எம்பி வந்தால் என்ன என்று ஒன்னும் ஆகப்போறது இல்லை ஐயா என்று சொல்லி  விட்டேன்.

அதுபோக ஊடகங்களில் கருத்துக்கணிப்பு என்று சொல்லுகிற  அனைவருமே திமுகவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஏதோ இவர்கள்தான் ஊடக நடுநிலைச் செய்தியாளர்கள் போல நிறைந்து வழிகிறார்கள்.

எத்தனை சப்பை கட்டுதல் எத்தனை விதமான மூடு மந்திரங்கள் எல்லாவற்றிற்கும் பின்னாலான காரிய பின்னணி . இவர்களையெல்லாம் தேர்தல் கணிப்பாளர்கள் என்றோ சிந்தனையாளர்கள் என்றோ ஏற்றுக் கொள்ள முடியுமா? ஊதுற சங்க ஊதி வைக்கக்கூடிய ஆண்டிகள் தான் இந்த திமுக செய்தியாளர்கள். 

எனக்குத் தெரிந்து தேர்தலை நடுநிலையாக பொதுவாக சமூக பார்வையுடனும் இன்று நடந்து இருக்க கூடிய மாற்றங்களுடன் கூடிய சில முன்னெடுப்புகளை இணைத்து பேசக்கூடிய ஒரு அறிவார்ந்த ஒரு ஊடகவியலாளரை நான் பார்க்க முடியவில்லை.

அனைத்தும் விலை போன காலத்தில் எம்பி பதவி யாரிடம் இருந்து என்ன பயன். ஒட்டுமொத்த பங்குதாரர்கள் தேர்தலை நடத்தி தங்கள் வணிகத்தை செய்யப் போகிறார்கள்.

இதில் நாம் கருத்து கூற என்ன இருக்கிறது.

நேற்று தென்காசி நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட குருஞ்சாக்குளம் கிராமத்தில் நேற்றைய நாளில் கருப்பு துணி கட்டியும், கருப்பு கொடி கட்டியும், பொதுமக்கள் கருப்பு பட்டை அணிந்தும் கிராபைட் திட்டத்தை எதிர்த்தார்கள்.

நேற்று தென்காசி நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட குருஞ்சாக்குளம் கிராமத்தில் நேற்றைய நாளில் கருப்பு துணி கட்டியும், கருப்பு கொடி கட்டியும், பொதுமக்கள் கருப்பு பட்டை அணிந்தும் கிராபைட் திட்டத்தை எதிர்த்தார்கள்.

கிராபைட் எதிர்ப்பு

நேற்று குருஞ்சாக்குளம் மற்றும் பாதிப்பு அடையும் மற்ற ஊர்களில் கருப்பு பட்டை அணிந்து வாக்கு செலுத்தினர்.

நான்கு மணி வரை கிராமத்தில் உள்ள 710 வாக்குகள் உள்ள பூத்தில் வாக்கு செலுத்த செல்லவில்லை. இதனால் பதறிப்போன அதிகாரிகள் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, தென்காசி மாவட்ட அதிகாரிகள் என்னிடம் பேசிய பின்னர் நான் தலையிட்டு பொது மக்களை சமரசம் செய்து வாக்கு செலுத்த வைத்தார்கள்.
பிறகு  மாலை வாக்கு சாவடிக்கு சென்று அமைதியான முறையில் வாக்கு செலுத்தினார்கள். இதனை நேரில் சென்று நான் கண்காணித்தேன்.எந்த அரசியல் சார்பும் இல்லாமல் ஊர் நலன் கருதி செய்ய வேண்டிய கடமை.


Change is slow and gradual

Change is slow and gradual. You may fear change , you do your very best, you try so hard to protect yourselves and be safe. Bad things come, with no warning but you forget,  sometimes that's how good things come. It requires hard work, a bit of luck, a fair amount of self-sacrifice, and a lot of patience. Realize, you can’t have a harvest without a few weeds. So the best thing you can do is not to think, not to wonder, not to imagine, not to obsess, just breathe and have faith that everything will work for the best......

இன்று (19-4-2024) கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலை பள்ளியில் எனது வாக்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவு செய்தேன். I exercised my right to vote today at Everest Mariappa Nadar School, Kovilpatti.

இன்று (19-4-2024) கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலை 
பள்ளியில் எனது வாக்கை நாடாளுமன்ற
தேர்தலில் பதிவு செய்தேன்.

I exercised my right to vote today at Everest Mariappa Nadar School, Kovilpatti.



 #LokSabhaElection2024



கோவில்பட்டி நியூஸ்டைம்
Kovilpatti news
நம்ம கோவில்பட்டி



#parlimentelection2024
#நாடாளுமன்றதேர்தல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
19-4-2024


True wisdom comes to you when you realize how little you understand about life, yourselves, and the world around you

True wisdom comes to you when you realize how little you understand about life, yourselves, and the world around you.The unexamined life is not worth living.Strong minds discuss ideas, average minds discuss events, weak minds discuss people.The only thing that will make you happy is being happy with who you are, and not who people think you are. If being happy is important to you, try this instead of regretting all you lack, celebrate all you’ve got....

*Never regret anything that has happened in your life*,

*Never regret anything that has happened in your life*, it cannot be changed, undone or forgotten so take it as a lesson learned. Move on and always look for the good in the bad, the happy in the sad, the gain in your pain, and what makes you grateful not hateful. Trust that there is peace up ahead even if you can't see it yet. And do what you can to bring some peace. Believe everything comes to you at the right time. Be patient. Breathe. Go easy on yourself and Keep moving...

Photo 
#Thanjavur big temple
Sasi

#ksrpost
17-4-2024.


Wednesday, April 24, 2024

*Confident Walking is more Successful than Confused Running*.

*Confident Walking is more Successful than Confused Running*. Confidence doesn't come when you have all the answers. Be brave to live from your heart. Mastering yourself is true power But it comes when you are ready to face all the Questions. Understand some steps need to be taken alone(with confidence). It's the only way to figure out where you need to go and who you need to be. Yes sometimes the smallest step (with confidence) in the right direction ends up being the biggest step of your life... 

#ksrpost
24-4-2024.


Tuesday, April 23, 2024

*23rd April Happy Shakespeare Day*! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

*23rd April Happy Shakespeare Day*!

Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

° We know what we are, but know not what we may be.
° Love all, trust a few, do wrong to none.
° It is not in the stars to hold our destiny but in ourselves.
° Better three hours too soon than a minute too late.
° If music be the food of love, play on.
° A fool thinks himself to be wise, but a wise man knows himself to be    a fool.
° Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them.
° Good night, good night! Parting is such sweet sorrow, that I shall say good night till it be morrow.
° Hell is empty and all the devils are here.
° Brevity is the soul of wit.
° This above all; to thine own self be true.
° Cowards die many times before their deaths; the valiant never taste of death but once.
° We are such stuff as dreams are made on; and our little life is rounded with a sleep.
° What's in a name? That which we call a rose by any other name would smell as sweet.

I know so many beautiful quotes are left. Do add them in comment.
#ksrpost
23-4-2024.


#*எனது சுவடு - பகுதி 58*

#*எனது சுவடு - பகுதி 58* 
————————————
#*காங்கிரஸ் இணைப்பிற்குப் பின் நடந்த நிகழ்வுகள்*

#dmk, #nedumaran, #valapadiramamoorthy, #rajaji, #indiraghandi, #cpi,  #nehru#moopanar, #narasimarao, #dmk, #congress 
https://youtu.be/CwPN6nOqL7E?si=wWFZ6JmWU_huiAJP

———————-

*எனது சம்பாத்தியம்*….. *நான் பெற்றது*….. *ஆயிர கணக்கில் புத்தகங்கள்தான்*…. *மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகங்கள்தான்*… *இதுவே எனது சொத்து*!




//அலமாரியின் வரிசையில் நின்று நமக்கு முதுகைக் காட்டின புத்தகங்கள் ஜன்னல் விளிம்பில் சிந்தியிருந்த புத்தகங்கள். கட்டின பெண்டாட்டி மாதிரி நம்முடன் படுக்கையில் கூடப் படுத்துறங்கிய புத்தகங்கள். பெற்ற பிள்ளை மாதிரி மார் மீது கவிழ்ந்து  தவழ்ந்த  புத்தகங்கள் .படித்தவை !  படித்து  மறந்தவை,  பிடித்தவை ! பிடித்து மறக்க முடியாதவை.




பிடித்த  புத்தகம் பிடித்த பெண்ணைப்போல மறுபடி மறுபடி அழைக்கும். விடுமுறைப்  பிற்பகலில்,  நள்ளிரவில்  புரட்டக்  கூப்பிடும்.

அதைத் தேடிப் புறப்பட்டவன் கையில் கவிதை சிக்கும். தத்துவம் பிடிபடும். வாழ்க்கைப்  பந்தைப்  பிரித்து  வீசிய  கேள்விகள்  இடறும் ! பதிலும், திகிலும் எதிர்ப்படும்//

- என் யோசனை என்ற கதையிலிருந்து,
மாலன் 

#ksrpost
23-4-2024.

#*இதுதான் வாழ்க்கை உலகம்* *வாழ்க்கை என்பதே அந்த அந்த நேரத்தின் நியாயங்கள் தான்*!- -#ஜெயகாந்தன். சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு…

#*இதுதான் வாழ்க்கை உலகம்*

*வாழ்க்கை என்பதே அந்த அந்த நேரத்தின் நியாயங்கள் தான்*!- -#ஜெயகாந்தன்.

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு…
————————————
காலம் தோறும் மனிதர்களின் வாழ்க்கை  கருத்தியல் ரீதியாகத்தான்பரிசீலிக்கப்படுகிறது.



இறுதியில் அது ஆன்மீக ரீதியாக ஒரு முடிவுரையை எழுதிப் பார்க்கிறது
மிக சிறந்த உதாரணமான பொன்மொழிகள் சொல்லப்பட்டு விட்டன.

வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போல தோன்றி மறைகிற தற்கணத்தின் இருப்பு சார்ந்த அல்லது மானுட வாழ்வின் உள்ளீடற்ற அபிலாசைகள் சார்ந்ததுதான். அதற்குள் கனவுகளும் உண்டு கற்பனைகளும் உண்டு. அவை நிறைவேற வேண்டும் என்று அவன் எத்தனிக்கையில் அரசு குடும்பம் இன்ன பிற வகையில் உண்மையாக அவை எவற்றின் மீதும் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட அதை எதிர்கொள்ள வேண்டியே அவன் அரசியல் மயமாகிறான்

அப்படியான நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள் எவ்வளவு ஊதி பெருக்கப்பட்டாலும் ஒரு பலூன் இறுதியில் வெடித்து விடுவதைப் போலத்தான் என்பதாக  அவை அனுமானிக்கப்பட்டு அது சார்ந்த அனைத்தும் சுருக்கமாகத் தத்துவத்தில்  ஏற்கனவே இன்மையாகவும் வெறுமையாகவும் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏனெனில் பிறந்தால் இறந்து போவோம் என்கிற அறிவை பெற்ற முதல்  உயிரி மனிதன்தான் .

ஐந்தறிவு உள்ள பிற மிருகங்களுக்கு இந்த உண்மை தெரியாது.

ஆகவே மனிதன் தன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே எதையாவது சொல்லிவிட்டு போவதை அதாவது தன் இறப்பிற்கு முன் தன்னை நிரூபணம் செய்து கொள்வதை சாகசமாக மேற்கொள்கிறான்.

அதற்காக அவன் கயிற்றின் மீது கழைக்கூத்தாடுகிறான்.
அதே கயிறு தான் அவனுக்கு சுருக்கிட்டு கொள்ளும் மரண கயிறுமாக ஆகிறது.

கர்ம வினை என்பது இவ்விடத்தில் தான் மனிதன் அறிய முடியாத மர்ம வினை ஆகி முடிகிறது.

இப்போது மனிதன் ஒரு அரசியல் உயிரி என்கிற இடத்தில் கை விலங்கு இடப்படுகிறான்.

என்னை பொருத்தவரையில் பல கோடி ஆண்டுகளாக இந்த உலகம் தோன்றித துலங்கி வந்திருக்கிறது மறைந்தும் புதுப்பித்தும் இந்த பூமி பந்து தன் உயிர் தன்மையைக் காப்பாற்றிக் கொள்கிறது ‌.

இதை ருசுபிக்க மிகச்சிறந்த உன்னத மனிதர்கள் ஆதி முதல் அந்த வரை தோன்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிறப்பு இறப்பு இருந்தாலும் ஒரு வகையில் காலத்திற்கு அப்பால் அவர்கள் நெடுநாள் நினைவு கூறப்படுகிறார்கள்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்றான் வள்ளுவன்

இப்படித்தான் அனைத்திலும் நிறையத் தான் நான் விரும்பினேன் ஆனால் என்னிலும் எப்படியோ நிறைந்துதான் இருக்கிறது வாழ்வு.

•உங்கள் இறுதிஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,

•பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..
வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...

•படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..

•சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..

•ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

•மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..

•இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,

•தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

•அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..

•உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,

•ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, 
உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

•இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர், 

•ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,

•அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,

•அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

•ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,

•மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும்,  ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..

•நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,
இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

•கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, 
என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,

•உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

•மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்..

•மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,
இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?. 

உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்தபோவதும் இல்லை. வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள் .

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு…

#ksrpost
23-4-2024.


Monday, April 22, 2024

மதுரை வரும் அழகரை தூங்காநகர் வரவேற்கிறது.

மதுரை வரும் அழகரை தூங்காநகர்  வரவேற்கிறது. 









ஆலவாய் அண்ணலும் அங்கயற்கண் அம்மையும் அவர்களோடு செவ்வேளும்...






ஊரெல்லாம் மீனாட்சி! அன்பின் அரசாட்சி!மதுரை…








***

அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போறதுக்குள்ள காட்சிகள் அதிகம்…!!!







மதுரை புதூர்ல ஒரு பைக்கை எடுத்தா இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம். வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு. ஆனால், அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போறதுக்குள்ள…



தங்கச்சி மீனாச்சி கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து மதுரைக்கு கிளம்புவாரு… சும்மால்லாம் கிளம்பிட முடியாது, அங்க காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்புகிட்ட உத்தரவு வாங்கிட்டு தான் கிளம்ப முடியும். 

அங்க இருக்கிற ஒத்த கருப்ப சாமி ஓராயிரம் கருப்பசாமியா மாறி பக்தர்களுக்குள்ள இறங்கி  பாதுகாப்புக்குக் கூடவே வரும். சாமி இறங்கினவங்க ’திரி’ப் பந்தம் ஏந்தி, கையில் மொரட்டு அருவாளைத் தூக்கிக்கிட்டு கருப்பன் அருளோட சாமியாடிட்டு வருவதை எதிரில் நின்னு பார்த்தா அடிவயித்துல அமிலம் சுரக்கும்.

வருஷத்துக்கொரு தடவ வெளியே வர்றவர சும்மா விட்டுட முடியுமா? வர்ற வழியில கள்ளந்திரி, அப்பன் திருப்பதின்னு எல்லா ஊர்லயும் மண்டகப்படி போட்டு மரியாத பண்ணி கொஞ்சிக் கூத்தாடும் பக்தர்கள் அன்புல தங்கச்சி கல்யாணத்துக்கு நேரத்துக்குப் போகணும்ங்கிறதையே மறந்துடுவாரு. 
 
இந்தப் பக்கம் எங்க ஆத்தா மீனாச்சிக்கும், எங்கப்பன் சொக்கனுக்கும் கல்யாணம் நடந்திடும். எங்க வீட்டுக் கல்யாணக் கொண்டாட்டத்துல அந்தப் பக்கம் அழகர் இன்னும் வரலைங்குறதையே இவய்ங்களும் மறந்துடுவாய்ங்க… மங்கையர்க்கரசி திருக்கல்யாணத்துக்காகவே வருஷம் பூராம் காத்திருந்து மதுரை மகராசிக பூராம் மாங்கல்யம் மாத்துவாங்க. 

அதாவது, அன்னிக்கு அம்புட்டு வீட்லயும் கல்யாணந்தேன். ஆத்தாவையும் அப்பனையும் தேர்ல வச்சு ஊர்வலம் சுத்தி வந்தப்புறம் தான், ஐயய்யோ அழகரு வாராம எல்லாம் நடந்துடுச்சேன்னு இவய்ங்களுக்கு சுருக்குனு இருக்கும். இருந்தாலும் எப்படியாவது சமாதானப் படுத்துவோம்னு தென்கரையில நினைச்சுட்டு இருக்கிற நேரத்துல, வடகரையில அழகரு ஆடி அசஞ்சு மதுரைக்குள்ள வந்துடுவாரு.

ராத்திரி கொஞ்சம் காலாறுவோம்னு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, அங்க ஏற்கனவே வந்து காத்திருக்கும் நம்ம ஆண்டாள் நாச்சியின் மாலைய தோளில் வாங்கிச் சாத்திக்கிட்டு,  மறுபடி தங்கக் குதிரையில ஏறி கோயில விட்டு வெளியே வரும் அழகைப் பார்த்ததும், ” *கோயிந்தா…. கோய்ய்ந்தோவ்வ்வ்* ”னு லட்சக்கணக்கான குரல்கள் ஒன்னா கூப்பிடும் பாருங்க….. ஆத்மா சிலிர்த்தெழுறதுன்னா என்னானு அப்ப தெரியும்.

சித்திர மாசக் கத்திரி வெயிலுல இத்தன லட்சம் பேரு கூடியிருந்தா வெந்து போயிட மாட்டீங்களானு வெளியூர்க்காரங்களுக்கு தோணலாம். ஆனால்,  தண்ணீர் பீச்சும் பக்தர்கள் தோள் வலிக்க வலிக்க சந்தோசமா தோப்பறையில தண்ணிய நெப்பிக்கிட்டு ரோட்டிலேயும் ஆகாசத்திலும் தண்ணியப் பீச்சிப் பீச்சு மதுரையவே குளிர வச்சுடுவாங்க… (தோலினால் செய்யப்பட்ட பை. ஒரு பக்கம் பெரிய துவாரம் வழியாக நீரை ஊற்றி அடைத்துவிட்டு இன்னொரு பக்கம் சின்னதா ஒரு துவாரம் வழியாக நீரினைப் பீச்சி அடிப்பது).

இப்படி ஒவ்வொரு மண்டகப்படியா அழகரை இழுத்துப் பிடிச்சு வாங்கய்யா வாங்கய்யானு மதுரக்காரய்ங்க பாசத்தைக் கொட்டிக் கொட்டி அலைக்கழிச்சு ஆத்துக்குள்ள இறங்கிறப்ப விடிஞ்சுடும்… 

விடியக்காலம் அழகர் ஆற்றில் இறங்கும் போது ஒட்டு மொத்த மதுரையும், லட்சக்கணக்கான குரலில் அடிமனசிலிருந்து “ *கோவிந்தாஆஆஆஆ*…..”னு கூப்பிடும் போது பாற்கடலிலிருந்து பரந்தாமன் லேசா திரும்பி மதுரையைப் பாப்பாரு… 

எங்க அழகர் தங்கக் குதிரையில் பட்டுடுத்தி, பவனிக்கும் அழகில் மயங்கி மறுபடி சயனத்துக்கே போயிருவாரு. 

திருப்பதி ஏழுமலையானும், திருவனந்தபுரம் பத்மநாபசாமியும் என்னதான் கட்டி கட்டியாக தங்கமும், கட்டுக்கட்டாக பணமும் வைத்திருந்தாலும் அவர்கள் இருவரும் திருமாலிருஞ்சாேலை அழகரை நெருங்கக் கூட முடியாது.

 " ஏனெனில் அழகுமலையான் மக்களைத் தேடி வரும் தெய்வம், எளியவர்களின் தெய்வம் "

" திருவிழாக்களின் தலைநகரம் மதுரை "  



கோவிந்தா….!!! கோவிந்தா!!!


(1915 pic of the Temple street in Madurai)

#மதுரைசித்திரைதிருவிழா
#MaduraiMeenakshi

முதல்வர் ஸ்டாலின் #மேகேதாட் குறித்து ஏன் திருவாய் திறக்காமல் உள்ளார்⁉️இந்தியா கூட்டணி வேடிக்கை காட்சிகள்… அடி தடிகள் நடக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் #மேகேதாட் குறித்து ஏன் திருவாய்  திறக்காமல் உள்ளார்⁉️இந்தியா கூட்டணி வேடிக்கை காட்சிகள்… அடி தடிகள் நடக்கிறது.
——————————————————-
கர்நாடகாவில் மேகேதாட்அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர், துணை முதல்வர்  சூளுரைக்கிறார்கள். 

கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடி மேகேதாட்அணையைக் கட்டுவதற்கான அனுமதியை இன்னும் எங்களுக்கு தரவில்லை. அவர் சமீப காலமாக  தமிழ்நாட்டு பக்கமே  சென்று கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சாதகமாகவே இயங்குகிறார். ஆனால் இங்கு கர்நாடகாவிற்கு வந்து மட்டும் ஓட்டு கேட்கிறார் என்று முறையிடுகிறார்.






















இது பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் எதையும் சொல்லாமல் வாயைத் திறக்காமல் இருக்கிறார். ஏதோ துரைமுருகன் மட்டும் தேர்தல் நாளில் மேகேதாட் அணையை பற்றி ஏதோ குறிப்பிட்டுச்  சொல்லி இருக்கிறார்.

அந்த அணையைக் கட்டினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வரத்து குறையும் என்று தெரிந்தும் முதல்வர் ஸ்டாலின் இது பற்றி பேச மறுப்பது இந்திய கூட்டணியின் ஓட்டு வங்கிக் காகவா?

வெற்றி பெறும் வரை உம்மென்று இருந்துவிட்டு நாளை மேகேதாட் பிரச்சனை வருகிற போது எதுவும் செய்ய முடியாமல் கையைப்பிசைவது  முதல்வரது வழக்கம் ஆகிவிட்டது.

மேகதாது அணை நீண்ட தொலைநோக்குப் பார்வையில் மாநிலங்களுக்கு  இடையேயான தண்ணீர் பங்கீட்டில் கூர்மையாக ஆராயப்பட வேண்டியது. 

வழக்கம்போல் கொம்பை விட்டு வாலை பிடிப்பது இனி ஆகாது அதற்கான நிரந்தர முடிவுகளை இரு மாநிலங்களும் எட்ட வேண்டும்.

போக கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  டி ராஜா அவர்களின் மனைவி படு மோசமாக ராகுலை விமர்சனம் செய்கிறார்.

இந்திய கூட்டணியில் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் என்கிற தேசியக்கூட்டணிக் கட்சிக்குள்ளேயே ஒற்றுமையற்று இந்த முரண்பாடு நிகழ்வது எனில் இந்த இ.ந்.தி.யா கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல தான் இருக்கிறது.

இந்தியக் கூட்டணியிடம் ஒரு கேள்வி நீங்கள் சிபி எம் ஐ வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். மேற்கு வங்காளம் மம்தா பானர்ஜியை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? சரத் பவார்  சரி படுவாரா? காஷ்மீர் பரூக்  முதலில் வெட்டி விட்டார். இப்போது மீண்டும் இணைந்து கொண்டார். இப்படி மாநிலங்கள் பல்வேறு போக்கில் இருக்க பழைய ஜனதா கட்சி 1977 இல் அரசமைத்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது. இவைகள் தாக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை.

என்ன கேட்டால் அருகருகே இருக்கக்கூடிய மாநிலங்களின் பிரச்சனைகளை முதலில் தீர்த்து கொண்டு பிறகு இந்திய அளவில் நாடாளுமன்ற இணைப்பு மற்றும் கூட்டணி தலைமை பற்றி பேச வேண்டும். ஒருவருக்கொருவர் உள்ளுக்குள்ளே முரண்பாடு வைத்துக்கொண்டு ஆட்சி  ஒற்றுமையை எப்படி அவர்கள் வலியுறுத்த முடியும். நடைமுறைப்படுத்த முடியும். 

நேற்று( 21-4-2024) ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே நடைபெற்ற கடும் மோதலில் பலருக்கும் காயம் ஏற்பட்டது.
 ராஞ்சியில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, 'உல்குலன் நியாய யாத்திரை' என்ற பெயரில், மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஏற்பாடு செய்திருந்தது. 

ராஞ்சியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.ஆனால் திட்டமிட்டு ராகுல் இதில் கலந்து கொள்ளவும் இல்லை.

இன்னும் எத்தனை முரண்பாடுகள் இருக்கிறதோ? இதுவரையிலும் முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை பற்றி வாயைத் திறக்கவில்லை.

#மேகேதாட்
#இந்தியகூட்டணி
#megathat
#IndiaAllaince

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
22-4-2024.

Thursday, April 18, 2024

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர்,#கேஎஸ்ஆர்போஸ்ட்,#கேஎஸ்ராதாகிருஷ்ணன்,#கேஎஸ்ஆர்வாய்ஸ்,#ksr,#ksrvoice,#ksrpost,#ksradhakrishnan#dmk, #admk, #congress, #bjp, #stalin, #kalingar, #mgr, #jayalaitha, #arignaranna,

*கனவாகிப் போன கச்சத்தீவு*- எனது நூல்-KSR

*கனவாகிப் போன கச்சத்தீவு*- 
எனது நூல்
••••
எனது "கனவாகிப் போன கச்சத் தீவு" எனும் எனது நூல் விரிவான நான்காவது பதிப்பாக  வெளிவருகிறது.

கச்சத்தீவின் ஆதி முதல் அந்தம் வரை குறிப்பாக இன்றைய சமகாலத்தில் அதன் மீது நடந்து வரும் விவாதங்கள் பல்வேறு வரலாற்று தகவல்கள் என  அத்தனை ஆவணங்களையும் இந்த நான்காவது பதிப்பில் இணைத்து தொகுத்து ஒரு புதிய பரிமானத்துடன் அந்நூல் வெளிவருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சத்தீவு ஒப்பந்தங்கள் குறித்த புதிய உண்மைகள் இதில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

#கனவாகிப்போனகச்சத்தீவு
#katchathivu 

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
18-4-2024.


#*Cauvery* #*காவேரி*

#*Cauvery*
#*காவேரி* 
————————————
T. Ramakrishnan's latest book, "Cauvery: A Long-Winded Dispute," published by The Hindu Group, is an extraordinary piece of work that deserves to be translated into Tamil. It delves deeply into all facets of the Cauvery dispute, showcasing meticulous observation and research. Ramakrishnan, undoubtedly one of the finest journalists, has handled this subject with exceptional skill. His work is a highly valuable resource for anyone seeking insights into this complex issue. I  remember Hindu already published a book on cauvery thirty years ago..most likely written by Guhan  Rtd I.A.S officer. I extend my heartfelt congratulations to him and eagerly anticipate more such exemplary works in the future.

தி இந்து குழுமத்தால் வெளியிடப்பட்ட டி.ராமகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் எழுதிய புத்தகம், "Cauvery: A Long-Winded Dispute," மிகச் சிறந்த படைப்பாக நிற்கிறது. இவர் காவேரி பிரச்சனையின் அனைத்து அம்சங்களையும் ஆழமாக ஆராய்ந்து, உன்னிப்பாக அவதானித்துப் பெரும் அளவில் ஆய்வினை மேற்கொண்டு எழுதியுள்ளார். இந்த புத்தகம் தமிழிலும் வெளிவர வேண்டும் என்பதே எனது விருப்பம். மிகச்சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ராமகிருஷ்ணன், இந்தச் சிக்கலான பிரச்சனையைத் திறமையுடன் கையாண்டுள்ளார். காவேரி பிரச்சனை பற்றிய தகவல்களைத் தேடும் அனைவருக்கும் இந்த நூல் ஒரு ஆதாரமாக விளங்கும். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற முன்மாதிரியான பல படைப்புகளை ஆவலுடன் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

#Cauvery
#காவேரி
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
18-4-2024


*In journey through life you are going to hit many walls that may seem unbreakable. When that time comes you will be tested and your strength will decide whether you or the wall will crumble*

*In journey through life you are going to hit many walls that may seem unbreakable. When that time comes you will be tested and your strength will decide whether you or the wall will crumble*. Understand you know yourself better than anyone else, yet you crumble at the words of someone who hasn't even lived a second of your life. Believe yourself, focus on your voice, It's the only one that matters. Remember to always stay strong no matter what stands in your way and you will. Yes definitely you will get through...

#ksrpost
18-4-2024.


*தேர்தல் விளம்பரங்கள் மக்களின் கண்ணை கட்டும் மாயை!!. காட்சிப்பிழைகள்*.

*தேர்தல் விளம்பரங்கள் மக்களின் கண்ணை கட்டும் மாயை!!. காட்சிப்பிழைகள்*.
————————————
இன்றைக்குத் தேர்தல் பிரச்சாரம்  முடிந்து ஏப்ரல்19ஆம் தேதி முழுமைக்கும் மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

இன்றைக்கு காலையில் தினசரித்தாள்களைத் திறந்தால் அனைத்திலும் முழு பக்கத் தேர்தல் விளம்பரங்கள். சகட்டு மேனிக்கு வேட்பாளர்கள் சின்னங்கள் என வண்ணங்களில் பத்திரிகைகள் நிரம்பி வழிகின்றன. வேறு செய்திகளுக்கு கொடுக்காத முக்கியத்துவம் இந்தத் தேர்தல் விளம்பரங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த விளம்பரக் கலாச்சாரம் காமராஜர் காலத்திலும் அண்ணா காலத்திலும் கிடையாது. தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த கட்சிகள் ஊர்ச் சுவரில் சின்னம் தீட்டுவதற்கோ சிறு விளம்பரங்கள் செய்வதற்கோ ஆகும் செலவுகளுக்கு  பொதுமக்களிடம் நன்கொடைகள் கூட வாங்கிச் செய்திருக்கிறார்கள்.
அது அந்தக் காலம்.

இப்படி  இன்று முழுப்பக்க அளவில் வந்து கொண்டிருக்கும் விளம்பரங்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இது ஊழல் பணம். மக்களின் பணம்.மது விற்பனை பணம் என…..

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் என்றும்
மாணவிகள் கல்வித்தொகை ஆயிரம் என்றும் முதல்வர் திட்டங்களின் கீழ் ஆயிரங்கள் என்றும் வீட்டிற்கு 5000 வரை கொடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்கள்.

மக்களைப் பிச்சைக்காரர்கள் என்று நினைத்து தான் இப்படி எல்லாம் பொய் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கிறார்களா?இல்லை

இப்படி எல்லாம் அள்ளிக் கொடுத்தால் தமிழ்நாடு மிகப் பெரும் கடன்கார நாடாகிவிடாதா?

இப்படிப் பல இலவசங்களை அள்ளிக்கொடுத்த பல மாநிலங்கள் எல்லாம் இப்பொழுது கடனில் சிக்கித் தவிக்கின்றன.

எந்த அடிப்படையில் இவர்கள் இப்படி வாக்குறுதி தருகிறார்கள். நாட்டின் பொருளாதாரப் பின்னணியை ஆராயாமல் இப்படி மக்களை ஏமாற்றி ஓட்டுவாங்குதற்கு என பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது எப்படி முறையாகும்.

எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட்டால் போதும் இந்த வாக்குறுதிகளை எல்லாம் பின்னர் மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

இலவசம் என்பதை விவசாயம்,கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் வாழ்விடத்தில்  இருக்கிற பொது சேவைகள் சார்ந்துதான் அதுவும் மக்கள் வரிப்பணத்தில் தான் ஒரு அரசு நிறைவேற்ற முடியும்.

அதைவிட்டு இவ்வளவு இலவசங்கள் கொடுக்க இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. இது ஒன்றும் அவர்கள் சொந்த வீட்டு பணமல்ல. நம் செலுத்தும் வரிப்பணம்.மக்கள் ஒன்றும் பிச்சைக்காரர்களும் அல்ல. இலவசங்களைக் கொடுத்து விட்டு மக்களை ஏகடியும் பேசுகிற ஆட்சியாக இது இருக்கிறது.

செருப்பு, டிவி,சைக்கிள் என்று இலவசங்களை கொடுத்து விட்டு மக்களிடம் ஓட்டை பெற்று பெரும் கொள்ளைகளில் ஈடுபடுவது குடும்ப சொத்துகளைப் பெருக்கிக் கொள்வது என்பது எப்படி மக்கள் மீது அன்புள்ள நல்லாட்சியாக இருக்க முடியும்.

16/04/2024 

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த கூட்டம் இது...

பாஜக எழுப்பி இருக்கும் நூறு கேள்விகளும் பொய் என்று திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதுதான் மிகப்பெரிய பொய். 463 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம், மீதியை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று கூறி இருக்கிறார்கள். இந்த 462 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை, ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடத் திமுக தயாரா?

வேங்கை வயல் விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம் தலையிட்டு ஜூலை மூன்றுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. சமூக நீதிக் காவலர்களே, அது குறித்து எழுப்பப்பட்ட கேள்வி பொய்யா?

ரூபாய்க்கு மூன்று படியில் தொடங்கி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் என்று ஏய்க்கும் போக்கு தானே இன்றைக்கும் தொடர்கிறது. கபட நாடகம் ஆடுவது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.
தமிழகத்தைத்  இவர்களிடம் தந்ததற்கே, தலைமுறைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இவர்களிடமா இந்தி கூட்டணி எனஇந்தியாவை ஒப்படைக்கப் போகிறோம்? சிந்தித்து செயல்படுவோம்! நிலையான வளர்ச்சி முக்கியம்

இவை  மக்களின் மீது இறையாண்மை உள்ள ஆட்சி இல்லை. ஜனநாயக ரீதியான ஆட்சியும் இல்லை. இது முற்றிலும் வணிக நோக்கம் சார்ந்த தங்களது ஆட்சி அதிகாரத்தால் சுயநலங்களை பெருக்கிக் கொள்ளும் பொருளியல் பாசிசத்தைக் கொண்டதாக இருக்கிறது என்பதைத்தான் அறிவுடையவர்கள் விமர்சனம் செய்வார்கள்.

அப்படி இல்லையெனில் நேர்மையாக இருப்பவர்களுக்கு எதற்கு இப்படியான விளம்பர மோகங்கள். எப்படி மக்கள் வாக்களிக்க தானே போகிறார்கள்.

பொய் வாக்குறுதிகள் ஒரு ஏமாற்று வேலை! விளம்பரங்கள் மக்களின் கண்ணை கட்டும் மாயை!!.

#நாடாளுமன்றதேர்தல்2024
#ParliamentaryElection2024

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-4-2024.


Wednesday, April 17, 2024

*திமுகவுக்கு 2024இது அரைப்பரிட்சைதான்*... #*2026இல் முழுப்பரிட்சையில் தெரியும் சேதி*

*திமுகவுக்கு 2024இது அரைப்பரிட்சைதான்*...
#*2026இல் முழுப்பரிட்சையில் தெரியும் சேதி*

அரசியலாளர் 
KS Radhakrishnan 

#ksradhakrishnan #elections2024 #dmk #annamalai #seeman #ntk #edappadipalaniswami #admk #mkstalin #electionupdate2024 #bjp #congress #savukkumedia #savukkuonline #savukkunews

youtu.be/jdanQ_2pkBo


#ParliamentaryElection2024 
#நாடாளுமன்றதேர்தல்2024

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-4-2024.

*Never regret anything that has happened in your life*, it cannot be changed……

*Never regret anything that has happened in your life*, it cannot be changed, undone or forgotten so take it as a lesson learned. Move on and always look for the good in the bad, the happy in the sad, the gain in your pain, and what makes you grateful not hateful. Trust that there is peace up ahead even if you can't see it yet. And do what you can to bring some peace. Believe everything comes to you at the right time. Be patient. Breathe. Go easy on yourself and Keep moving...

Photo 
#Thanjavur big temple




#ksrpost
17-4-2024.

Tuesday, April 16, 2024

வாழ்வின்சுழற்சி #கிராமசூழல்

#வாழ்வின்சுழற்சி
#கிராமசூழல்
————————————
இம்முறை  சித்திரை முதல் நாள் சொந்த ஊரான குருஞ்சாக் குளம் கிராமத்திற்குச் சென்று அங்கே இரண்டு நாட்கள்   தங்கி இருந்தேன். கரிசல் மண் கோடை வெயில். கிராமம் தூத்துக்குடி, விருதநகர், தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளின் எல்லை பகுதி . தேர்தல் சூடு வேறு

என்னுடன் படித்த என் சக வயது தோழர்கள சிலரை அங்கே சந்திக்க முடிந்தது. அதில் சிலர் பலகாலமாக இந்தியாவின் வடக்கில், வெளி நாட்டில் சென்று வேலை செய்து திரும்பி இருந்தார்கள்.













நன்கு படித்து முன்னேற வேண்டிய ஆட்கள் மிக அதிக அளவு பள்ளியில் மதிப்பெண் எடுத்தவர்களும் கூட.
என்னுடன் படித்த கருத்த பாண்டி மிகச் சிறப்பான மாணவர் நன்கு மதிப்பெண்கள் எடுக்கக் கூடியவர். மிகச்சிறந்த தச்சுஆசாரித் தொழில் பார்த்துக் பார்த்துக்கொண்டு அவர் போக்கில் இருக்கிறார். அவருடன் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

போக என்னுடன் பள்ளியில் படித்தவர்கள் அல்லது ஊர் நண்பர்கள் சிலர் அவர்கள் போக்கில் இருக்கிறார்கள் .பலர் இறந்தும் போய் விட்டார்கள். பால்ய நினைவுகளோடு இரண்டு நாள் அவர்களுடன் பல விஷயங்களைப் பேசி கலந்து இருந்து வந்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.




எல்லாவிதமான மனப்பாரங்களையும் இறக்கி வைத்து எளிமையாக  கிராமத்து வெள்ளந்தி மனிதர்களாகப் பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தது ஆறுதல் ஆகவும் அமைதியாகவும் இருந்தது.

 என்னுடன் படித்த நண்பர் வெங்கடச்சலம் அக்காலத்தில் எம் எஸ் சி கணிதம் முடித்தவர். பிறகு ராமசுப்பு என்பவர் அவர் வெகு காலம் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்தார். இப்போது இந்த இருவர் இல்லை. ராமசாமி கேந்திரிய பள்ளியில் ஒய்வு பெற்ற பட்டம் பெற்ற chemistry ஆசிரியர்.இப்படி பலர்…

இப்படிப் பலரும் என்னை பார்க்க வந்தார்கள் மனம் விட்டு அளவளாவினோம். இரண்டு நாள் காலை இரண்டு நாள் இரவு மாலை என அந்த ஏதார்த்த மனிதர்களுடன் களித்தது ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது.
இப்படியான மனிதர்களுடன்  இங்கேயே திரும்ப கிராமத்து வீட்டில் தங்கி விடலாமா என்று கூட மனதில் தோன்றியது. நல்ல தண்ணீர், நல்ல உணவு,  நல்ல பெரிய வீடு,அமைதி என…. முடியுமா? முடியாது

வாழ்வின் சுழற்சி அதன் கதிகள் போக்குகள் எல்லாவற்றிற்கும் ஒரு விதமான தத்துவ இருப்பு இருக்கிறது.

#வாழ்வின்சுழற்சி
#கிராமசூழல்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-4-2024


இப்போதெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் பாய்ந்து பாய்ந்து செல்கிறார்கள்.

இப்போதெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் பாய்ந்து பாய்ந்து செல்கிறார்கள்.

இது அவர்களுக்கான வசதி வாய்ப்பும் உரிமையும் கூட.

ஆனால் கலைஞர் இருந்தவரை தனது 98 வது வயது வரையும் கூட சாலைகளில் தான் பயணித்தார்.

ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது.
கலைஞரின் நள்ளிரவு கைதிற்குப் பின்பு என்று நினைக்கிறேன். அனேகமாக
2001 ஆக இருக்கலாம்.  கலைஞர் கோவா செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.  என்னையும் உடன் அழைத்தார்.உடனே முரசொலி மாறன் அவர்கள் உங்களுக்கு ஒரு தனி விமானம் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார்.

எனது தனி விமானமா. அதெல்லாம் வேண்டியதில்லை நான் எப்போதும் ரயிலில் தான் போவேன் கொஞ்சம் தொலைதூரமானாலும் என்னுடைய பிரச்சார வேனில் செல்வது தான் எனது வழக்கம். அப்படியும் இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு தூர தொலைவு செல்ல வேண்டும் எனில் பயணிகள் விமானத்தை தான் பயன்படுத்திக் கொள்வேன் என்று அந்த தனி விமானப் பயணத்தை மறுத்தார்.

அப்படியான பல தலைவர்களும் இருந்தார்கள். இப்போது வட இந்தியத் தலைவர்கள் டெல்லியில் இருந்து சென்னை போன்ற இடங்களுக்கு வர வேண்டுமென்றால் தனி விமானம்,ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது சரிதான். அது காங்கிரஸோ பாஜகவோ யாராக இருந்தாலும் சரி. 

ஆனால் இங்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தலைவர்கள் பத்து மைலுக்குள் தாங்கள் செய்ய வேண்டிய தேர்தல் பிரச்சாரத்திற்கு என தனி விமானம்,ஹெலிகாப்டரில் வந்தா பந்தாக் காட்டுவது?

இது அவர்களின் செல்வாக்கை
மக்களின் முன்பு பெருமிதமாக நிலை நாட்டுவதன்றி இவர்களையெல்லாம் மக்கள் தலைவர்கள் என்று எப்படி சொல்ல முடியும்? இவர்களால் மக்களுக்கு எந்த பலனும் விளையப் போவதில்லை என்பதுதான் இந்த ஹெலிகாப்டர் பிரச்சாரங்களின் பின்னணி.

ஹெலிகாப்டரில் வந்து இறங்கி மக்களின் முன் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்வது அவர்களை கவர்ந்திழுக்க உதவும் என்று நினைக்கிறார்கள். இது என்ன சினிமா காட்சியா? இவர்கள் மக்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாளைக்கு மக்களுக்கு ஒரு தனிப்பட்ட பிரச்சினை என்றால் இவர்களெல்லாம் ஹெலிகாப்டரில் வந்து உதவி செய்வார்களா? 40 சதவீதத்திற்கு மேல் வறுமையில் இருக்கும் மக்களின் முன்பு இந்த பந்தா தேவை தானா?

கலைஞர் தேர்தல் பிரச்சாரத்திற்கு எல்லாம் ஹெலிகாப்டரில் ஒருபோதும் சென்றதில்லை.
எம்ஜிஆர் விமான பயணங்கள் மேற்கொண்டு இருக்கிறார். எனக்கு தெரிய ஜெயலலிதா பின் ஸ்டாலின் மட்டுமே தனிவிமானத்தில் பயணித்து இருக்கிறார்.

ஆனால் இந்த தேர்தலில் இந்த ஹெலிகாப்டர் கலாச்சாரம் மக்களுக்கான தலைவர்கள் எளிமையாக இருக்க வேண்டியது இல்லை கவர்ச்சிகரமாகவும் மிரட்டக்கூடிய அளவில் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் வளர்ந்து நிற்கிறது.

ஜனநாயகத்தில் மக்கள் தான் வளர்ச்சி அடைய வேண்டும் தலைவர்கள் அல்ல. அவர்களது பணி எளிமையான தொண்டு மற்றும் மக்களுக்கு உரிய நன்மைகளை சதா சிந்தித்து கொண்டு இருப்பது தனது வாழ்வை
ஒரு கட்டுக்குள் வைத்து பொதுச் சேவை செய்வது தங்களது வாரிசுகளை அரசியலில் இறக்கிவிடாமல் இருப்பது போன்ற அறங்களை உடையது. அப்படியான தலைவர்கள் தான் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு அடியுரமாக இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு வரைக்கும் அவர்களுக்கான மரியாதை எந்த வகையிலும் குறைவில்லாமல்  அவர்கள் இருந்தாலும் மறைந்தாலும் பேசப்படுகிறார்கள்.

#parlimentelection2024
#நாடளுமன்றதேர்தல்2024
@mkstalin @KanimozhiDMK
@EPSTamilNadu 
@annamalai_k @VanathiBJP 
@BJP4TamilNadu 

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-4-2024.


கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...