Monday, July 20, 2026

JULY 19


 

#முல்லைப்பெரியாறு

 #முல்லைப்பெரியாறு

——————————- கேரளாவைப் பொறுத்தவரை இடதுசாரி ஆட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் தங்களுக்குள்ளாகவே முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக தமிழகத்திற்கு எதிராக நீரில் அரசியல் செய்வார்கள்! காங்கிரஸ் ஆட்சியில் இது கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்! கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில் நேரடியாக இறங்காமல் சில்லரை அமைப்புகளை ஏவி தொடர்ந்து போராட வைப்பது அவர்களது வழக்கம். 2011 இல் உம்மன் சாண்டி ஆட்சியில் “முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் “என்ற கோஷத்தோடு கேரள அரசியல்வாதிகளால் நடத்தப்பட்ட போராட்ட ங்களால் அப்போதைய தேனி மாவட்ட மக்கள் கடுப்பாகிவிட்டனர்! அதை எதிர்த்து அப்போது நடந்த போராட்டத்தில் இரண்டு மாதம் போக்குவரத்து முடக்கப்பட்டது! பெரிய அளவில் பொருட்சேதங்களும் ஏற்பட்டன.! தேசியக் கட்சியான காங்கிரஸ் கேரளாவில் மட்டும் தனிக் கொள்கையுடன் முல்லைப் பெரியாறு அணைத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது! கடந்த 35 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி பல்வேறு நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அந்தக் குழு ஆய்வு செய்து அந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அணை பலமாக உள்ளது எனத் தீர்ப்பு அளித்துள்ளது !!இந்தத் தீர்ப்பை காங்கிரஸ் அரசு அலட்சியப்படுத்துவதோடு அணை பலவீனமாக இருப்பதாகப் பொய் சொல்லி அதனால் மக்கள் அச்சப்படுகிறார்கள்! அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென தொடர்ந்து பேசுவதெல்லாம் வெறும் வெத்து அரசியல் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! கேரளக் காங்கிரஸ் அரசின் மீது தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்” அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி கண்டனத் தீர்மானத்தை கேரளா அரசுக்கு எதிராக நிறைவேற்ற!வேண்டும்!தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அமைச்சரவை இடம் பெற்றுள்ளது! இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு சொல்வதை காங்கிரஸ் கேட்குமா என தெரியவில்லை! எனவே இறுதியாக எச்சரிக்கிறோம்! கேரள முதல்வர் புதிய அணை கட்டுவோம் என்ற கோஷத்தைக் கைவிட வேண்டும்! இல்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பெரும் போராட்டங்களை மீண்டும் கையில் எடுப்போம் எனத் திண்டுக்கல் உட்பட ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட முல்லைப் பெரியாறு வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் உறுதியாக உள்ளனர் கேரளாவுக்குப் பாதுகாப்பு தமிழகத்திற்குத் தண்ணீர்! என்று சொன்ன உம்மன் சாண்டியினுடைய வாக்குறுதியை மீண்டும் கையில் எடுக்கப் போகிறோம் என இன்றைய கேரளா ஆட்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்! உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி எந்தவிதப் பேச்சு வார்த்தையும் நடத்த முடியாது! அதே உச்ச நீதிமன்றம் 2021 மீண்டும் அணையின் கட்டுமானத்திற்குத்தேவையான கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்லவும் சாலை அமைப்பதற்கும் அனுமதிக்க வேண்டும்! மீண்டும் மின்சாரத்தை கொடுக்க வேண்டும்! பேபி அணையைப் பலப்படுத்தவும் அதற்கு இடைஞ்சலாக இருக்கும் மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது!ஆனால் இதைக் கேரளா அரசு ஏற்கவில்லை!உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் ஒரு அரசு இருக்க முடியுமா? திமுக அரசும் நான்காண்டுகளாகஅதைச் செயல்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை!அதிமுக ஆட்சியில் 142 அடி தண்ணீர் திறக்கப்பட்டது!அதன் பிறகு தான் பாசனத்திற்கு உபரி நீரையும் திறந்தார்கள்! திமுக ஆட்சி காலம் முழுவதும் 142 அடி தண்ணீரை அணையில் தேக்க முடியாமலே இருந்தது.! கேரளா நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தன்னிச்சையாக தண்ணீரைத் திறந்த அவலமும் நடந்தது” பேரிடர் காலத்தில் மட்டும் தான் இம்முறையை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது! ஆனால் கனமழை காலத்தில் அணையில் தண்ணீர் திறப்பதை தடுப்பது கேரளா செய்யும் சட்டவிரோதச் செயலாகும்! தற்போதைய கேரள முதலமைச்சர் சதீசன் ஏற்கனவே உம்மன் சாண்டி முன்வைத்த கோஷத்தையே நாங்களும் கையில் எடுத்திருக்கிறோம்! இது குறித்து நாங்கள் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சொல்கிறார்! இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்!ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டிருக்கும் உயர்மட்டத் தொழில்நுட்பக் குழுவும் அடிக்கடி அணையை ஆய்வு செய்து அணையின் உறுதித் தன்மையை வெளிப்படுத்தி வருகிறது! கடந்த மாதம் கூட ஆய்வு செய்தது! அணையின் பலம் குறித்துத் தெளிவுபடுத்தி இருக்கிறது! அணையின் பாதுகாப்புக் குழுவும் அதை உறுதி செய்து அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று தனது ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற அகில இந்திய தேசியக் காங்கிரஸ் இன்றைய கேரளா காங்கிரஸை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்றபடி கட்டுப்படுத்த வேண்டும்! இல்லையெனில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்பதாகப் பல்வேறு தமிழக அமைப்புகள் தயார் நிலையில்…2

இருக்கின்றன.

 இருக்கின்றன. இதில் கேரளாஙில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் ஆடசிகள் ஒரே குரலாக் தமிழக உரிமைகளை

பாழ்படுத்தும். #MullaperiyarDam is a masonry gravity dam on the Periyar River in the Idukki district of Kerala, India. Constructed between 1887 and 1895 by British engineer John Pennycuick, it is entirely located in Kerala but is operated and maintained by the neighboring state of Tamil Nadu under a 999-year lease agreement.Its primary purpose is to divert the west-flowing waters of the Periyar River eastward to supply drinking water and irrigation to five arid districts in southern Tamil Nadu: Theni, Dindigul, Madurai, Sivaganga, and Ramanathapuram. The dam also features a surrounding area that is famous for the Periyar National Park in Thekkady, a popular tourist destination.The structure has been a longstanding point of geopolitical dispute between the two states. Kerala frequently expresses concerns about the structural safety of the older dam—especially during heavy monsoon seasons—and advocates for the construction of a new reservoir, while Tamil Nadu pushes to maintain or raise the reservoir level to ensure steady water supply for its agricultural sectors. #MullaiPeriyar #ksrpost #கேஎஸ்ஆர்போஸட்

#தமிழகநாள்_நவம்பர1 தான் ஜூலை18 அல்ல

 #தமிழகநாள்_நவம்பர1 தான் ஜூலை18 அல்ல

———————————————————————- பிரிட்டிஷார் காலத்தில் வழங்கிய சென்னை (இராஜதானி)மாகாணம் தமிழ்நாடு என்ற பெயரில் சட்டபூர்வமாக அமைந்த நாள் என்று சொன்னால் அது நவம்பர் ஒன்றாம் தேதி என்று தான் சொல்ல வேண்டும் ! தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய் இன்றைய ஜூலை 18 ஐ தமிழ்நாடு நாள் என்று வாழ்த்திப் பேசி உள்ளார்! அண்ணா அவர்கள் 18-7-1967 பெயர் வைத்த நாளை தமிழ்நாடு நாள் எப்படி கொண்டாடுவது? இன்றைய தமிழக எல்லைகள் அமைந்த 1-11-1956 தான் தமிழ்நாடு உதயமான நாள். எனவே நவம்பர் -1 தானே கொண்டாட வேண்டும். பொதுவாக் குழந்தை என்று பிறந்ததோ அந்த நாளைத் தான் பிறந்தநாள் என்று சொல்ல வேண்டும்! குழந்தைக்குப் பெயர் வைத்த நாள் எல்லாம் பிறந்தநாள் கணக்கில் சேராது! திமுக காரர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஜெராக்ஸ் காப்பி போல இவரும் அதைச் சொல்ல வேண்டியதில்லை! அப்படிச் சொன்னால் அது அர்த்தமற்றதும் பொறுப்பற்றதும் ஆகும்! 1956 நவம்பர் ஒன்றாம் தேதி இன்றையத் தமிழக எல்லைகள் கன்னியாகுமரி , திருநெல்வேலியின் செங்கோட்டை உட்பட தமிழ்நாட்டுக்கு என வரையறுக்கப்பட்ட நாள்! அந்த சமயத்தில் பின் தான் திருத்தணி நம்முடன் இணைந்தது!. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு வரலாறற்றையும் தெரிந்துகொண்ட பிறகுதான் இதை எல்லாம் பேச வேண்டும்! இதைச் சொல்வதற்கு தமிழக முதல்வருக்கு யார் தான் இருக்கிறார்கள்! அவர் நியமித்த அமைச்சர்களுக்கும் ஏன் இன்றைய புதிய அதிகாரிகளுக்கும் கூட ஒன்றும் தெரியாது! #tamilnaduday1july #தமிழகம்நாள்நவ11 #MadrasPresidency #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்

இவர் யாரை சொல்கிறார்? தவெக கூட்டணி கட்சிகள் கம்யூனிஸ்ட்களையா? திருமாவளவனையா?

 இவர் யாரை சொல்கிறார்? தவெக கூட்டணி கட்சிகள் கம்யூனிஸ்ட்களையா? திருமாவளவனையா?




"பாஜகவுடன் உடன்பாடு வைக்க போகிறீர்களா?

 "பாஜகவுடன் உடன்பாடு வைக்க போகிறீர்களா?

நான் சவால் விடுகிறேன் தேர்தல் வந்தால் விஜய் 180 தொகுதி வெற்றி பெறுவார்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ… இந்த வாய் 4 மாதங்களுக்கு முன் என்ன சொன்னது… மானம் கெட்ட பிழைப்புகள்…

radhakrishnanks.com

 radhakrishnanks.com

Presenting the much talked about book: Lal-Bal-Pal by Bidyut Chakrabarty, published by @BloomsburyIndia .

 Presenting the much talked about book: Lal-Bal-Pal by Bidyut Chakrabarty, published by

.



நினைத்ததையெல்லாம் மனம் விட்டுப் பேச முடிவதில்லை..

 நினைத்ததையெல்லாம் மனம் விட்டுப் பேச முடிவதில்லை.. நினைத்த போதெல்லாம் வாய் விட்டுச் சிரிக்கவும் முடிவதில்லை.. நினைத்த இடத்தில் கண்ணீர் விட்டுக் கதறவும் முடிவதில்லை.. நினைத்தவரை நினைத்த நேரத்தில் பார்க்கவும் முடிவதில்லை.. நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்யும் வாழ்க்கை வேண்டும் என்று கடவுளிடம் கேட்டால் நானும் அதையேதான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என்கிறார்..!!

ஊரை உலையில் போட்டு கொள்ளையடித்த

 ஊரை உலையில் போட்டு கொள்ளையடித்த குற்றசாட்டில் வந்த பணத்தில் வாட்ச் கார் bikenu போட்டோ போட்டுத்தான் அண் பணத்தில் வாட்ச் கார் bikenu போட்டோ போட்டுத்தான் அண்ணா, கலைஞர் முன் எடுத்த திமுகவ தெருவுல வந்து நிப்பட்டிருக்கானுக..

திமுக வரலாறும் தெரியாது இவனுங்க….



#Modi’s #ForeignPolicyandvisits

 #Modi’s #ForeignPolicyandvisits

—————————————————- இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பலமுறை வெளிநாடு சென்று வருகிறார்! எப்போது போனார் எப்போது வருகிறார்! என்றே தெரியவில்லை!!அதற்கான தகவல்களும் முறையாகச் சொல்வதும் இல்லை. எதற்காக அங்கு அவர் யாரைப் பார்க்கப் போகிறார். அவருடைய அந்த பயணங்களின் நோக்கம் என்ன என்பதும் யாருக்கும் தெரிய வில்லை! இருந்தாலும் அவரிடம் யாரும் எந்த கேள்வியும் கேட்பதில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது! கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி அவர்கள் கூட பன்னாட்டு உறவுகள் இறக்குமதி ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் ஒப்பந்தங்கள் சார்ந்து 103 முறைதான் வெளிநாட்டுப் பயணம் செய்திருக்கிறார்! ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் 2014 முதல் 2019 டிசம்பர் வரை ராகுல் 247 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். இந்தியக்காங்கிரஸ் காரிய கமிட்டியிலிருந்து கூட இதற்கான அறிவிப்புகள் ஏதுமில்லை.! இவ்வளவு பயணங்கள் எதற்கு என்ற கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது!? இந்தாண்டு பிப்ரவரி 25- 26 இஸ்ரேல் மே 15 -20 ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து ஸ்வீடன் நார்வே இத்தாலி: ஜூன் 13 -18 ஜி 7 நாடுகள் சந்திப்பு,பிரான்ஸ் செக்கோஸ்லாவாகியா,: ஜூன் 27- 29 ஸுசெல்ஸ் தீவு :ஜூலை 6- 11 இந்தோனேசியா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆக இந்த ஆண்டு மட்டும் ஐந்து மாதங்களில் 12 நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மோடி ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்ற கேள்விகள் எழுந்தன! அவரை (நான் ரெசிடென்ட் இந்தியர்) “நாட்டில் தங்காத இந்தியர்” என்று குறிப்பாக காங்கிரஸும் ஊடகங்களும் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பரிகாசக்கேள்விகள் கேட்பது வழக்கமாக இருந்தது! ஆனால் அந்தப் பரிகாசங்கள் இன்று நின்று விட்டன. ஏன் நின்று விட்டன என்பதைப் பார்ப்போம்! 1990களில் தொடங்கிய உலகமயமாக்கல் போதையில் இருந்து 2008 முதல் தெளிந்து வந்த உலகக் கட்டமைப்பு இன்றைக்குத் தலைகீழாக மாறிவிட்டது! உலகையே மயக்கிய உலக மயமாக்கல் மீது 2008 உலக நிதி நெருக்கடி கேள்விக்குறி எழுப்ப, அமெரிக்கா மேற்கு ஐரோப்பிய நாடுகள் மள மளவென சரியத் தொடங்கின! இதற்கிடையில் கிடுகிடுவென்று சீனா உயர்ந்த நிலையில் உலக அரசியல் கண்ணுக்கு தெரியாமல் மாறி வந்தது!! 2020ல் உலகை உலுக்கிய கொரோனா, கம்யூனிஸ வீழ்ச்சிக்குப் பிறகு உருவான உலக அரசியல் கட்டமைப்பே மாறிவிடும் என்று அதை உருவாக்கிய ஹென்றி கிஸ்ஸிங்கரே கூறினார்! அது வெளிப்படையாக மாறத் தொடங்கியது! 2023 உக்ரைன் யுத்தம் 2024 அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி, அதனால் உலக நாடுகளை ஒரு குடையில் கொண்டுவரும் உலகமயமாக்கலின் வீழ்ச்சி,வர்த்தகப் போர்கள், 2026 இல் வளைகுடா நாடுகள் யுத்தம், போன்ற தொடர் நிகழ்வுகள் காரணமாக உலகமே தலைகீழானது! ஐக்கிய நாடுகள் சபை உலக வங்கி உலக வர்த்தக சபை போன்ற அனைத்து நாட்டு அமைப்புகளும் பலவீனமடைந்தன. இரண்டு உலகமகா யுத்தங்களுக்கு முன் இருந்த நட்பு,விரோத, நடுநிலை நாடுகள் என்ற சர்வதேச உறவு முறை திரும்பியது!உலகமயமாக்கல் மற்றும் டபிள்யூ டி ஓ முடங்கியதன் விளைவு என்னவென்று AI ஜெமினியைக் கேட்டபோது!”அதனால் உலகளாவிய ராஜ தந்திரம் மிக முக்கியமாக மாறியது “மட்டுமில்லாமல் செயல் இழந்த HTO ஐ எம் எஃப் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் ராஜதந்திரம் மாற்றாக மாறியுள்ளது!” சிதறிய சூழலில் பொருளாதாரக் கருவிகளை ராஜதந்திர ஆயுதங்களாகப் பயன்படுத்திக் கையை முறுக்கிப் பேச்சு வார்த்தை நடத்தவும் அச்சுறுத்தவும் செய்கிறது அமெரிக்கா!! இந்த அடாவடி போக்கைச் சமாளிக்க நட்பு நாடுகளுடன் வர்த்தகம் பிராந்திய ஒப்பந்தங்கள் என்று பொருளாதார ராஜதந்திரம் அதன் அளவிலேயே பெருகி வருகிறது என்று கூறியது!அது மேலும் வர்த்தகம் என்பது இனிப் பொருளாதாரம் செயல் திறன் மலிவான பொருள்களுக்கான சந்தை மட்டுமல்ல! அது தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாகி விட்டது!இன்று முக்கிய வர்த்தகப் பாதைகள் உள்ளிட்ட ஓட்டங்கள் விநியோகச் சங்கிலிகள் தனி நாடுகளின் ராஜ தந்திர நடவடிக்கைகளால் தீர்மானிக்கப்படுகின்றன” என்றும் AI கூறுகிறது. 2014இல் பிரதமர் ஆன மோடியை தீண்டத் தகாதவர் என்று வெறுத்தன அன்று உலக மகா சக்திகளாக இருந்த வல்லரசுகள். முதல் இரண்டு ஆண்டுகளில் அவர்களைத் தன்னை காட்டி ஏற்க வைத்த மோடி உலகமயமாக்கல் மயக்கம் நீங்க நீங்க அவர்களது சர்வாதிகாரமும் மங்கும் என்று கணித்தார்! அவர் கணித்தது போல உலகக் கட்டமைப்பு குலைந்து அவிழ்ந்த நெல்லிக்காய் மூட்டை போலச் சிதறியது உலகம்!! உலகக் கட்டமைப்பு குலைந்ததால் தனிப்பட்ட நாடுகளுடன் நல்லுறவே நிலைக்குமென்று இன்று AI கூறுவதை அன்றே கணித்த மோடி முக்கியமான நாடுகள் தவிர முக்கியத்துவம் இல்லாத நாடுகளுடன் முன்கூட்டியே நல்லுறவை வளர்த்தார்! வல்லரசுகளை எதிர்க்காமல் சாதுரியமிக்க..2

@highlight

 @highlight

சிறிதும் பெரிதுமான உலகநாடுகள் அனைத்துக்கும் சூறாவளிப் பயணம் செய்து ஒவ்வொரு நாட்டோடும் சிலவற்றுடன் குழுவாகவும் நல்லுறவை வளர்த்தார்!

 சிறிதும் பெரிதுமான உலகநாடுகள் அனைத்துக்கும் சூறாவளிப் பயணம் செய்து ஒவ்வொரு நாட்டோடும் சிலவற்றுடன் குழுவாகவும் நல்லுறவை வளர்த்தார்! அந்த அந்த நாடுகள் உயரிய விருதுகளையும் நமது பிரதமருக்கு வழங்கினார்

அவர் ஆங்காங்கே மக்களிடம் தொடர்பு கொண்டார்! உலகம் முழுவதும் பரவிய இந்தியர்களைத் திரட்டி அதில் 5,6 லட்சம் பேர் சேர அந்த நாட்டு அரசுகள் தலைவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்!! அவரது இந்த முயற்சியின் பின்னணியில் இன்று உலகக் கட்டமைப்பு நொறுங்கிவிழ,தொன்று தொட்ட உறவுமுறைகள் பந்தங்கள் கூட குலைவதால் நாடுகளிடையே விளையும் இடைவெளியை அறிவுலகம் காண வேண்டும்! என்றும் குலையாது என்று உலகமே நினைத்த அமெரிக்க ஐரோப்பிய உறவுகள் கூட இன்று சிக்கலடைந்து சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது! பாரம்பரிய உறவுகள் சிதறியதால் இன்று ஒவ்வொரு நாடும் நட்பு நாடுகள் எங்கே என்று தேடி அலையும் நிலையில் இருக்கின்றன! உதாரணமாக அமெரிக்காவுடன் நட்புப் பேணிய நேச நாடுகளின் மீதே அமெரிக்கா வரி விதித்ததால் அமெரிக்காவை ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு #EU ஆதரிக்காதது ட்ரம்புக்கு ஏமாற்றமானது! இ யு ஏன் அமெரிக்காவை ஆதரிக்கவில்லை! என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க பிரான்ஸ் இத்தாலி இரண்டிடமும் மோடி நெருக்கமான உறவு கொள்ள அவர்கள் EUவை நமக்கு எதிராகச் செயல்பட விடவில்லை என்பதுதான் முக்கியமான மன மாற்றம் ! வர்த்தகப் போர் தொடங்கி அமெரிக்கா நம் கையை முறுக்கிய போது அதற்கு நெருக்கமானவர்கள் நம்முடன் வர்த்த ஒப்பந்தங்கள் செய்தது ட்ரம்புக்கு பெரும் சரிவாகக் கருதப்பட்டது! அதனால்தான் ட்ரம்பும் நம்முடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முன்வந்து நம்மீது விதித்த வரிகளை நீக்கினார்! வளைகுடாவில் போர் சமயத்தில் ஏற்பட்ட எரிசக்தித் தட்டுப்பாட்டை நாம் உலகமே ஆச்சரியப்படும்படியாகத் தவிர்க்க குறிப்பாக எரிசக்தி தரும் நாடுகளுடன் இருந்த ஆழ்ந்த உறவுகள்தான் நமக்கு உதவியது! யுரேனியம் கனிமத்தை வைத்து #அணுசக்திமின்சாரமும் தயாரிக்கலாம்! அணுகுண்டும் தயாரிக்கலாம்! எனவே அணுகுண்டு தயாரிப்பு ஒப்பந்தமான என் பி டி யில் கையெழுத்திடாத நாடுகளுக்கு யுரோனியம் உற்பத்தி செய்யும் நாடுகள் அதைத் தருவதற்கு தடை இருக்கிறது! நாம் என் பி டி யில் கையெழுத்திடாத நாடு! யுரேனியக் கனிம வளம் உள்ள ஆஸ்திரேலியா கனடா போன்ற நாடுகள் என் பி டி ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத நாடுகளுக்கு யுரோனியம் தர மறுத்து வந்தன! நமக்கோ அணு மின்சாரம் தயாரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது! காரணம் அது மாசு தராத மின்சாரம்! உலக மாசுக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நம் நாடு 2031 - 32 க்குள் 32,000 மெக்கா வாட் 2047 ல் ஒரு லட்சம் மெக்கா வாட் அணு மின்சாரம் தயாரிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்.! அதற்கு ஆண்டுக்கு பத்தாயிரம் முதல் 12000 டன் வரை யுரேனியம் தேவை! நம் நாட்டுக்குள் 500 டன் யுரேனியம் மட்டுமே கிடைக்கிறது! நமக்குத் தேவையான யுரேனியத்தை நாம் #யுரோனிய வளம் உள்ள ஆஸ்திரேலியா கனடாவிடமிருந்துதான் பெறவேண்டும்! இதுவரை யுரேனியம் தர மறுத்து வந்த அவர்களுடன் ஆழ்ந்த நல்லுறவை வளர்த்தார் மோடி! அதன் விளைவாக கனடா வரும் 2027-35 வரையிலான எட்டு ஆண்டுகளில் பத்தாயிரம் டன் யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்திருப்பது ! உலகுக்கே ஆச்சரியம்! காரணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை நம்முடன் விரோதம் பாராட்டிய அது அணுகுண்டு தயாரிக்கும் நாடுகளுக்கு யுரோனியம் தருவதில்லை என்று முடிவு செய்திருந்தது. எல்லா நாடுகளும் நம் நட்பை வேண்ட கனடாவும் நமது நட்பை நாடியது! இது ஒரு பிரம்மாண்டமான மாற்றம்! அதுபோல சென்ற வாரம் ஆஸ்திரேலியா சென்ற மோடியுடன் அந்நாடும் நமக்கு யுரோனியம் தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இருக்கிறது. பிரதமர் மோடி 2014 முதல் சர்வதேச அளவில் அதற்கான தயாரிப்பை மேற்கொண்டு ஒரு அமைச்சகத்தின் கீழ் இருந்த வெளியுறவுத் துறையின் வீச்சைக் கையில் எடுத்துத் தானே உலகம் சுற்றும் தலைவராக மாறி பல உலக நாடுடன் ஆழ்ந்த உறவை ஏற்படுத்தி வலுப்படுத்தியுள்ளார்! அவர் கணித்தபடி கொரோனா காலத்தில் உலகக் கட்டமைப்பு கலகலக்க அதுதான் தருணம் என்று அவர் சுயசார்பு பாரத (ஆத்ம நிர்பர் பாரதம்} கொள்கையைப் பிரகடனம் செய்தார்! மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் உலக அரசியலில் சரித்திரம் காணாத அளவிலானது!அவர் பாரதப் பிரதமர்கள் யாரும் செல்லாத நாடுகளுக்குச் சென்றார்! மூன்று நான்கு தசாப்தங்களாக நமது பிரதமர்கள் செல்லாத நாடுகளுக்கும் சென்றார். அவரது பயணங்களில் பரப்பும் வீச்சும் வியக்கத்தக்கது! 2014ல் பிரதமரானது முதல் பிரான்ஸ் அமெரிக்காவுக்கு பத்து முறை ஜப்பான் அரபு அமீரகம் எட்டு முறை ரஷ்யா ஏழு முறை!சீன ஜெர்மனி ஏழுமுறை! நேபாளம் சிங்கப்பூர் ஆறு முறை! பூட்டான் பிரேசில் இந்தோனேசியா தென் ஆப்பிரிக்கா இலங்கை இங்கிலாந்து 4 முறை!..3

3…ஆஸ்திரேலியா இத்தாலி மலேசியா மாலத்தீவு சவுதி அரேபியா தாய்லாந்து மூன்று முறை!

 3…ஆஸ்திரேலியா இத்தாலி மலேசியா மாலத்தீவு சவுதி அரேபியா தாய்லாந்து மூன்று முறை! ஆப்கானிஸ்தான் அர்ஜென்டைனா வங்கதேசம் கனடா இஸ்ரேல் ஜோர்டான் கஜகஸ்தான் கிர்கிஸ்தான் லாவோஸ் மொரிஷியஸ் நெதர்லாந்து மியான்மர் ஓமன் கத்தார் தென்கொரியா ஸ்வீடன் ஸ்விட்சர்லாந்து இரண்டு முறை! மற்றும் 42 நாடுகளுக்கு ஒரு முறை இப்படி 83 நாடுகளுக்குச் சென்ற மோடி இதுவரை 103 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்.

இந்தப் பயணங்களால் ஏற்பட்ட சாதகமான பிரம்மாண்டமான மாறுதல்கள் மேலும் நமக்கு கிடைத்த ஏராளமான பயன்கள் அனைத்தையும் பட்டியலிடுவது கடினம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் பார்க்கலாம் இஸ்லாமிய நாடுகளுக்கு அஞ்சி நாம் உறவு கொள்ளாமல் இருந்த #இஸ்ரேலுடன் மோடி உறவு ஏற்படுத்தினார்! இன்று அது மிக நெருங்கிய நமது நட்பு நாடாகவும் ராணுவப் பொருளாதார தொழில்நுட்பத் தோழனாகவும் மாறிவிட்டது. அதே நேரம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எட்டு முறை பயணம் செய்து அவற்றுடன் மோடி மிக நெருங்கிய உறவு கொண்டு சவுதி அரேபியா மற்ற வளைகுடா முஸ்லிம் நாடுகளுடன் நெருங்க, இஸ்ரேலுடன் நெருங்கிய உறவால் நமக்கு அரேபிய நாடுகளுடன் உராய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் மோடி.! இன்று இஸ்லாமிய பாகிஸ்தானை விட வளைகுடா நாடுகளுடன் ஹிந்து இந்தியாவின் நட்பு ஆழமானது!! அதே நேரம் இஸ்ரேல் அரபு நாடுகளை வெறுக்கும் #ஈரானுடன் நமக்கு நட்பு இருக்கிறது!! இதைத்தான் உலகமே மூக்கில் விரல் வைத்துப் பார்த்து வியக்கிறது. உலகின் மாபெரும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியாவிற்குக் கிடைத்த நமது பிரதமர் மோடி தனது ஆட்சி காலத்தில் இவ்வளவையும் செய்து இருக்கிறார் என்பதை நினைக்கும் போது எதிர்காலத்தில் அவரது ராஜதந்திர நடவடிக்கைகளால் இந்திய வளர்ச்சிக்கும் அதன் வழியே சர்வதேச உறவுகளுக்கும் இடையே பெரும் பாலம் அமைந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது! அதன் மூலம் இந்திய மக்களுக்கு நீண்ட பயன்களைப் பெற்றுத் தர அவர் கடினமாக உழைக்கிறார் என்பதுதான் இங்கே முக்கியமானது. அந்தப் பாதையில் இந்தியா தனது எதிர்காலத்திற்கான தொலைநோக்கில் பலவித நலன்களைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை! #ModiForeignTour #மோடி #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost



இது தென்காசியின் புறவழிச்சாலை..

 இது தென்காசியின் புறவழிச்சாலை.. வேலை ஆரம்பித்து சுமார் 4 வருடங்கள் ஆவது இருக்கும்.. சிறு சிறு பாலங்கள் கட்டி அப்படி அப்படியே கிடைக்கின்றது.. தென்காசி நகரத்திற்குள் அளவுக்கு மீறிய டிராபிக் உள்ளது..

அம்பாசமுத்திரம் டு கல்லிடைக்குறிச்சி பைபாஸ் சாலை குறுகிய மாதங்களிலேயே வெற்றிகரமாக நிறைவேற்றி திறந்து விட்டார்கள்.. இதில் மிகப்பெரிய ஆறான தாமிரபரணியில் சூப்பரான பாலமும் ஒன்று உண்டு வெற்றிகரமாக முடித்தார்கள். இதற்கிடையே தென்காசியில் உள்ள டிராபிக் போல் அம்பையில் கிடையாது. அம்பை நெருக்கடி ஆரம்பமாகி இருக்கும் நிலையில் இந்த பைபாஸ் சாலை மிகவும் வசதியாக உள்ளது. தென்காசியில் இவ்வளவு மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி முத்தி போய் இருக்கையில்.. இந்த புறவழிச் சாலையை விரைந்து நடத்திட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா..? தென்காசி பகுதிகளில் மட்டும் எந்த அரசு வேலையாக இருந்தாலும் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.. கவனிக்கவும் நாதியில்லை... துரிதமாக விரைந்து செயல்படுத்திட தூண்டிடவும், அறிவுறுத்தவும் ஆளில்லை.. என்றே நினைக்கிறேன். #tenkasidistrict



JULY 19