Tuesday, August 4, 2026

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேடிக்கையாக இருக்கிறது! இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு முதல்வர் விஜயை அழைத்துப் பார்த்தார்!அவருக்கு வேலை இருக்கிறது வர முடியாது என்று மறுத்துவிட்டார்.! அதற்கு முன்பாகத் துணைக் குடியரசு தலைவரை அழைத்தார் அவரும் மறுத்து விட்டார்! அந்த நூலில் அவர் பேசிய அனைத்தும் காங்கிரஸுக்கு எதிராக இருந்தபோதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வைத்தே இந்த நூலை வெளியிடுவதாகச் சொல்லி இருப்பது முதல் வேடிக்கை! ராகுல் செய்வது எல்லாம் தனி வேடிக்கை அது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கடுத்து ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் போன்றவர்களுடைய படங்களை பதாகையில் வைத்தநு போன்று நிகழ்விற்கு வாராத முதல்வர் விஜய்யின் பதாகையையும் வைத்திருக்கிறார். வரமாட்டேன் என்று சொன்னவரின் பதாகையை வைத்து எதற்கு இப்படிப் பம்மாத்து வேலைகளைச் செய்ய வேண்டும்! இதையெல்லாம் தொடர்ந்து செய்யக்கூடியவர் தான் வைகோ! முதலமைச்சராக யாராக இருந்தாலும் கூட அவர்களின படத்தை போட்டு விடுவார். ஏனெனில் எப்போதும் பதவியில் இருக்க வேண்டும்! எதிலாவது ஒட்டிக்கொண்டு தொங்க வேண்டும்! இதற்காக எல்லா வேடிக்கைகளையும் செய்யும் அரசியல் ஆகிவிட்டனர் அவருடன் இருந்தவர்களுக்கு அவரை இப்படி ஒரு நிலைமையில் பார்ப்பது….⁉️ #vaiko

Image

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...