Friday, August 21, 2026
#ஜனநாயகம்_எங்கேபோகிறது
"#Quovadis"
———————————————————
நாட்டில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் அரைகுறை ஆட்கள் விவரம் தெரியாதவர்கள் வரலாறு தெரியாதவர்கள் நாடாளுமன்றத்தில், சட்ட மன்றத்தில் பேசுகிற பேச்சால் எந்த நடைமுறையும் சாத்தியம் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. தென்னாட்டுக்கு ஏதோ பிரதமர் பதவியே கிடைக்கவில்லை என்பது மாதிரிப் பிதற்றுகிறார்கள். நரசிம்ம ராவ் யார்?தேவகவுடா யார்?கர்நாடகத்துக்காரர்!
அது போக ஜி.கருப்பையா மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பைத் தடுத்தது யார்? வாய்ப்பு இருந்தும் கிங்மேக்கர் என்று சொல்லக்கூடிய காமராஜர் தான் இந்திரா காந்தியை பிரதமர் ஆக்கினார்! அவர் நினைத்திருந்தால் பிரதமராகியிருக்க முடியாதா? அவர் தென் மாநிலத்துக்காரர் இல்லையா? அன்றைக்கு அவரின் செல்வாக்கு காங்கிரசில் எவ்வளவு இருந்தது என்று யாருக்கும் தெரியாதா? அவர் நினைத்திருந்தால் நிஜலிங்கப்பாவையோ, நீலம் சஞ்சிவி ரெட்டியோ , சி சுப்பிரமணியத்தையோ கொண்டு வந்திருக்க முடியாதா?
அது மட்டுமல்லாமல் கரப்பான் பூச்சிக்காரர்களும் தென் மாநிலத்தவர்களும் நீட் வேண்டாம் என்று மறுக்கிறார்கள். நீட்டுக்கான அனுமதியை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்து குடியரசுத் தலைவர் அனுமதி பெற்றுத்தான் அமல்படுத்தப்பட்டது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்! எதையும் புரியாமல் பேசக்கூடாது சட்ட விதிமுறைகள் இருக்கின்றன அதற்கான ஒழுங்குகள் இருக்கின்றன! மனம் போன போக்கில் அவற்றை விமர்சித்து விட்டு அல்லது பொழுதுபோக்காக போராட்டம் நடத்தி விட்டுப் பொது அமைதியை குலைத்ததைத் தவிர இவர்கள் வேறு என்ன செய்தார்கள்?
இம் மாதிரியான போராட்டங்கள் எப்பொழுதும் வரலாற்றில் வெற்றி பெற்றதாகவே இல்லை! தூண்டப்பட்டதாகவும் தற்காலிகமானதாகவும் பின்னணிச் சதிகள் நிரம்பியதாகவும் தான் இருக்கிறது! இந்தப் போராட்டத்தை மதித்து பிரதமர் மோடி அவர்கள் இவர்கள் அனைவரும் நமது பிள்ளைகள்! அவர்களுக்குச் சிரமம் வந்துவிடக் கூடாது! என்று இறங்கி வந்து அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து அதற்கான ஏற்பாடுகளைக் குறிப்பாக நீட் தேர்வை முறைப்படுத்துவது குறித்து அதற்கான கறார் விதிகளைக் கொண்டு வரத் திட்டமிட்டு இருக்கிறார்! இனிமேல் நீட்கேள்வித்தாள் கணினி முறையில் தான் நடக்கும் என்று திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதெல்லாம் அறிந்து அறிவார்த்தமாக நடந்து கொள்ள வேண்டும்!மோடியைத் திட்டுவது அவர்கள் அம்மா பற்றிப்போகிற போக்கில் பேசுவதெல்லாம் பொறுப்பற்றவர்களின் அடாவடித்தனமான செயல்!
தனது பேச்சில் மோடி மிகத் தெளிவாகச் சொல்கிறார் நான் இதையெல்லாம் கடந்து போகத்தான் வேண்டும்! இதற்கு அப்பாலும் சர்வதேச நன்மதிப்புகளைப் பெறவும் இந்தியப் பொருளாதாரத்தின் சுயநிர்ணய உரிமைகளைத் தக்க வைக்கவும் அயராது நான் பாடுபட வேண்டி இருக்கிறது! என்று பக்குவமாகச் சொல்லித்தான் செயல்படுகிறார்!
எருதுநோய் காக்கைகளுக்குத் தெரியுமா என்ன ? எதோ பாராளுமன்றத்திற்கு வந்துவிட்டு மேலும் கீழும் பார்த்துவிட்டு அவர்கள் உணவைத் தின்றுவிட்டு வீடுகளுக்குப்போய்ச் சேர்ந்து விடுகிறார்கள். அன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையில் லோகியாவோ மசானி பிலுமோடி வாஜ்பாய் பேசினாலோ அல்லது அவர்கள் பேசினாலோ எந்தக் கண்ணியக் குறைவுமில்லாமல் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததுதான் வரலாறு.! அதையெல்லாம் அன்று காங்கிரஸ் ரசித்துக் கேட்டது! இப்படி எல்லாம் எதையாவது பேசிவிட்டு யாரும் ஓடிப் போகவில்லை!.
பதவியில் இருப்பவர்களைப் போடா வாடா என்று பேசுவது! நேற்று சட்டமன்றத்தில் ஒரு பெண் உறுப்பினர் சபாநாயகரிடம் மன்மத வணக்கம் என்றெல்லாம் அபத்தமாகப் பேசுகிறார்! எந்தச் சபை நாகரிகமும் இல்லாத இந்தக் கூட்டங்களால் நாட்டுக்கு என்ன நன்மை விளையும்! ஏதோ 100 நாட்கள் வேலைக்கு போகிறவர்கள் போல சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் போய் வரும் இவர்களால் என்ன உருப்படியான காரியம் நடக்கப் போகிறது. இவர்களால் நாட்டின் எதிர்காலம் கவலைக்குரியதாகவே மாறி வருகிறது. மத வாதம், தமிழில் பேச தெரியா தமிழக நிதி அமைச்சர்….என்ற நிலையில் என்ன சொல்ல….
#tamilnadupolitis
#parliament
#TamilNaduAssembly
#தமிழகஅரசியல்
#cjp
#TVKGovernment
#JantarMantar
#ksrpost
#KSRadhakrishnan
#கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment