Sunday, July 31, 2016

China-Silk road

China is reviving the historic Silk Road trade route that runs between its own borders and Europe. Announced in 2013 by President Xi Jinping, the idea is that two new trade corridors – one overland, the other by sea – will connect the country with its neighbours in the west: Central Asia, the Middle East and Europe.

The project has proved expensive and controversial. So why is China doing it?#china#silkroad

Karnataka not bother about Cauveri;

Karnataka not bother about Cauveri;
தமிழகத்திற்கு தொடர்ந்து  தண்ணீர் தர மறுக்கும் கர்நாடாகாவை தண்ணீரே தண்டித்தது ..

# துயரம் .Water, water, every where,
And all the boards did shrink;
Water, water, every where,
Nor any drop to drink.
....................Rime of the Ancient Mariner, Samuel Taylor Coleridge.

The poet wrote this during 1797-98, seems very relevant today for Karnataka. 

The image I have posted is of the River Basin of Karnataka. If you see the image, Karnataka ideally should have no water problem, but Karnataka faced the worst water shortage this summer and this issue is hitting the roof.

The river in crisis is River Mahadayi. Mahadayi originates from a cluster of 30 springs at Bhimgad in the Western Ghats of Belgaum district. The river has a length of 77 km, 29 km in Karnataka and 52 km in Goa. The river has a 2,032 kms catchment area in Karnataka and a 1,580 kms catchment area in Goa.
With its cerulean waters, Dudhsagar Falls and Varapoha Falls, it is also known as the Gomati in a few places. Mahadayi becomes Mandovi as it enters the state of Goa, connecting north and south parts of the state and finally flows into the Arabian Sea.
There are 17 rain gauge stations in and around the basin. The stations inside Karnataka are Supa, Khanapur, Kankumbi, Jamagaon, Amgaon and Castlerock. In Maharashtra there is one at Tilariwadi, whereas Goa has stations at Panaji, Sanguem, Margao, Quepem, Mapusa, Bicholim, Valpoi, Ponda, Colem and Marmugao. 

Malaprabha river is about 47 kms from River Mahadayi, cutting across the Western Ghats.  
As Malaprabha is the only river with no catchment, the river basin was virtually dry the entire summer and the people of North Karnataka bore the brunt of an empty water bed. 
But……This is not a new story. The problem has been persistent for a long time now. 

Hence, the Kalasa-Banduri Nala Project was undertaken by the Government of Karnataka to improve drinking water supply to the Districts of Belagavi, Dharwad and Gadag. It involves building across Kalasa and Banduri, two tributaries of the Mahadayi river to divert 7.56 TMC of water to the Malaprabha river, which supplies the drinking water needs to these districts.  This project had been on paper for decades and the Karnataka government decided to implement it during S M Krishna's regime. Clearance for the project was received from the center in 2002. The project however, soon ran into trouble when the then CM of Goa raised objections to the project claiming that the project would harm Goa's flora and fauna. Following this, the then government which was in power at the center, put on hold, its approval and funding of the project. At Karnataka’s end, the fight by many groups is on for a long time now, but without any outcome. While the need to supply water to North Karnataka is definitely the idea, some groups are also against the Govt for going ahead with this project, as this involves destruction of the Western ghats. The ecology of #Mahadayibasin is already very fragile on account of massive deforestation and quarrying . The basin falls in the Western Ghats and much of the biodiversity will be at peril.

Dispute..
Karnataka is demanding that 7.5 tmc of water be diverted to River Malaprabha from the initial flow so that the parched districts are fed with drinking water. But Goa has not agreed. Now the tribunal’s verdict is against the benefit of the state.. you can expect unrest. Be prepared.

I always kept wondering, even during the Cauvery crisis, why should Karnataka need anyone’s permission to use its own water the way it wanted? While Google will give answers in the form of National Water Tribunal, the fact remains that its our water and our necessity.  There is a distant dream project called National Water Grid, that was conceived by our own Sir. M. Vishweshwaraiah, a 100 years ago, which is being revisited now, but this project is far too long and far too ambitious. 

Furious uproar against the verdict in the form of Hartal, Bandh and agitation of sorts are well underway, but these things are also so politically driven that you don’t know how things might pan. Until then, quiet flows the river to join the deep blue Arabian sea. But Karnataka not bother about Cauveri.

எழும்பூர் ரயில் நிலையம்:

எழும்பூர் ரயில் நிலையம்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரயில் நிலையம் கட்ட வேண்டும் என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆண்டு எழும்பூர் ரயில் நிலையம் கட்டப்பட்டது. முதலில் ராயபுரம் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலைமை அலுவலகம் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்குதான் செயல்பட்டது. 

இந்திய, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கலந்து இந்தோ-சாராசனிக் பாணியில் இக்கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். பெங்களூர் நகரில் இவர் கட்டிய கட்டிடங்கள் பலராலும் பாராட்டப்பட்டதால், இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm)  எழும்பூர் ரயில் நிலையத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.

அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது இந்த ரயில் நிலையம். மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக் கொண்டு கதை பேச, ஒரு பெரிய கூட்டம் கூடுமாம். கொல்லங்கோடு மகாராஜா உள்பட பல மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வச் சீமான்களும் இங்குள்ள ஓய்வு அறையில், ரயில் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர்.

இங்குள்ள இரண்டு நடைமேடைகளில் மட்டும் நேராக கார்களை செலுத்திக் கொண்டு போய், தேவையான கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வசதி ஒரு காலத்தில் இருந்தது. இந்தியாவிலேயே ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரயில் பாதைகள் வந்த பிறகு இந்த வசதி பறிபோய்விட்டது. 

எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் - தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுவிடும். அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

ரயிலுக்கு அடுத்தப்படியாக மெட்ராஸ்வாசிகளுக்கு சீக்கிரமே மற்றொரு வாகனமும் கிடைத்தது. அது என்ன ........?

Saturday, July 30, 2016

Oxford University press

Did you know the first book was printed in #Oxford in 1478, just two years after Caxton set up the first printing press in England?

The University has a rich history of printing, formalised in 1636 with the Great Charter secured by Archbishop Laud from King Charles I, which entitled the University to print 'all manner of books'.

Today, the #OxfordUniversityPress has offices in 50 countries, and is the largest university press in the world. Find out more about its history here: http://po.st/lwcWtb



Important organic reactions in single note.


Greek Alphabet


Ode to the West Wind

P. B. Shelley
 
 Ode to the West Wind
 
O WILD West Wind, thou breath of Autumn's being—  
Thou from whose unseen presence the leaves dead  
Are driven, like ghosts from an enchanter fleeing,  
Yellow, and black, and pale, and hectic red,  
Pestilence-stricken multitudes!—O thou          5
Who chariotest to their dark wintry bed  
The wingèd seeds, where they lie cold and low,  
Each like a corpse within its grave, until  
Thine azure sister of the Spring shall blow  
Her clarion o'er the dreaming earth, and fill   10
(Driving sweet buds like flocks to feed in air)  
With living hues and odours plain and hill—  
Wild Spirit, which art moving everywhere—  
Destroyer and Preserver—hear, O hear!  
  
  Thou on whose stream, 'mid the steep sky's commotion,   15
Loose clouds like earth's decaying leaves are shed,  
Shook from the tangled boughs of Heaven and Ocean,  
Angels of rain and lightning! they are spread  
On the blue surface of thine airy surge,  
Like the bright hair uplifted from the head   20
Of some fierce Mænad, ev'n from the dim verge  
Of the horizon to the zenith's height—  
The locks of the approaching storm. Thou dirge  
Of the dying year, to which this closing night  
Will be the dome of a vast sepulchre,   25
Vaulted with all thy congregated might  
Of vapours, from whose solid atmosphere  
Black rain, and fire, and hail will burst:—O hear!  
  
  Thou who didst waken from his summer-dreams  
The blue Mediterranean, where he lay,   30
Lull'd by the coil of his crystalline streams,  
Beside a pumice isle in Baiæ's bay,  
And saw in sleep old palaces and towers  
Quivering within the wave's intenser day,  
All overgrown with azure moss, and flowers   35
So sweet, the sense faints picturing them! Thou  
For whose path the Atlantic's level powers  
Cleave themselves into chasms, while far below  
The sea-blooms and the oozy woods which wear  
The sapless foliage of the ocean, know   40
Thy voice, and suddenly grow gray with fear  
And tremble and despoil themselves:—O hear!  
  
  If I were a dead leaf thou mightest bear;  
If I were a swift cloud to fly with thee;  
A wave to pant beneath thy power, and share   45
The impulse of thy strength, only less free  
Than thou, O uncontrollable!—if even  
I were as in my boyhood, and could be  
The comrade of thy wanderings over heaven,  
As then, when to outstrip thy skiey speed   50
Scarce seem'd a vision,—I would ne'er have striven  
As thus with thee in prayer in my sore need.  
O lift me as a wave, a leaf, a cloud!  
I fall upon the thorns of life! I bleed!  
A heavy weight of hours has chain'd and bow'd   55
One too like thee—tameless, and swift, and proud.  
  
  Make me thy lyre, ev'n as the forest is:  
What if my leaves are falling like its own!  
The tumult of thy mighty harmonies  
Will take from both a deep autumnal tone,   60
Sweet though in sadness. Be thou, Spirit fierce,  
My spirit! be thou me, impetuous one!  
Drive my dead thoughts over the universe,  
Like wither'd leaves, to quicken a new birth;  
And, by the incantation of this verse,   65
Scatter, as from an unextinguish'd hearth  
Ashes and sparks, my words among mankind!  
Be through my lips to unawaken'd earth  
The trumpet of a prophecy! O Wind,  
If Winter comes, can Spring be far behind?

ஈழத்தமிழ்அகதிகளின்கண்ணீர்

இந்த ஈழ அகதிகள் பாவப்பட்ட பிறவிகள். வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
ஏழைகள் போல் வாழ்கிறார்கள். இல்லை செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திபத்திய அகதிகளுக்கு நிலம், வீடு, பள்ளிக்கூடங்கள், வங்கிகள், மருத்துவமனைகள் எனக் கொடுத்து பராமரிக்கும் இந்தியத் திருநாடு தமிழ் அகதிகளை கூடுகளுக்குள் வைத்திருக்கிறது. எங்கே போனாலும் மாலை 6 மணிக்கு முகாமுக்கு திரும்பி விட வேண்டும். மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக தமிழ்நாடு காவல்துறை இவர்களை சுரண்டி வாழ்கிறது. கூச்சம் இல்லாமல் இலஞ்சம் கேட்டு வாங்குகிறார்கள். இவர்களில் 5 விழுக்காட்டினர் ஈழம் திரும்பி விட்டனர். மிகுதிப் பேரும் திரும்ப வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
#ஈழத்தமிழ்அகதிகளின்கண்ணீர்

இலங்கை இனப் படுகொலையும் இந்திய அரசியலும்

இலங்கை இனப் படுகொலையும் இந்திய அரசியலும்

உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் பெற்றுவிட்டனவா என்னும் பொதுப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம். அரசியல், பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய உலக அரசியல் ஒழுங்கைத் தோற்றுவிக்க முயன்று வருகின்றன. உலகின் பொதுவான இயங்குதிசை வல்லரசுகளால் தலைமை தாங்கப்படும், அவற்றின் நலன்களை முன்னிறுத்தும் சக்திகளால் இயக்கப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை மக்கள் நலனை முன்னிறுத்தும், மக்களால் தலைமை தாங்கப்படும் சக்திகளால் இயக்கப்படுவதாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது.

2011இல் தெற்கு சூடானின் விடு தலையை உள்ளடக்கிய அண்மைக் காலம்வரையிலான நிகழ்வுகள் உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் இன்னும் முற்றுப் பெறாதவை என்பதை நிரூபிக்கின்றன. 1990களில் ஸ்லேவேனியா, கொசாவோ, மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிராண்டஸடிரியா, போஸ்னியா, எரித்ரியா, மால்டோவா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளிலும் இரண்டா யிரங்களில் மாண்டி நிக்ரோ, தெற்கு ரேசடியா, தெற்கு சூடான் முதலான நாடுகளிலும் நடைபெற்ற தேசிய இன விடுதலைப் போராட்டங்களே அதற்கான சான்றுகளாக உள்ளன. இன்றுவரையில் தொடர்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர், மேற்கு இரியான், திபேத்து, ஈழ மக்களின் விடுதலைக்கான போராட்டங்களும் இப்பட்டியலிலிருந்து வருபவை. இவற்றுள் மிகக் கூர்மையானதும் அதிக முக்கியத்துவமும் கொண்டது ஈழப் போராட்டம்.

தமிழீழக் கோரிக்கை சரியானதா பிழையானதா என்பன போன்ற கேள்விகளைக் கடந்து வந்துவிட்டது வரலாறு. லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிப் படுகொலைசெய்த சிங்களப் பேரினவாத அரசுடன் ஈழத் தமிழ்ச் சமூகம் இணக்கமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இனி இல்லை. கொடூரமாகப் பழிவாங்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தமக்கான இன விடுதலைப் போராட்டத்தை அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டும்.

இது தொடர்பில், “வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போது இலங்கைத் தமிழர்களைப் போல இனப்படு கொலைகளுக்குள்ளான எந்தவொரு மக்கள் குழுவும் தமக்கெனச் சுதந்திரமானதொரு நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் அவற்றிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டனர். கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்ட போது எந்த நாடும் அந்த வெறித்தனமான படுகொலைகளைத் தடுக்க முயலவில்லை. 1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தமது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டன. எனவே இலங்கை அரசிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தனிநாடு ஒன்றை உருவாக்கிக்கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடைய தீர்வு. “பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்’’ எனப் பிராசிஸ் பாய்ல்ஸ் கூறியதை மனங்கொள்ள வேண்டும். (பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல்ஸ், உலக மனித உரிமைகள் அமைப்பின் (Amnesty International) முன்னாள் உயர்மட்டக்குழு இயக்குநர்; இல்லினாய் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர்.)

நாம் ஏற்கிறோமோ இல்லையோ ஓர் உண்மையைப் பதிவுசெய்தாக வேண்டும். எந்தப் போராட்டமும் அறவழியில் பயணிக்கும்போது அது உலகின் கவனத்தைப் பெறுவதில்லை. அறவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுக்கும்போது மட்டுமே சர்வதேசக் கவனமும் தலையீடும் கிடைக்கப்பெறுகின்றன.

ஈழத் தமிழர் விடுதலைப் போர் சுமார் முப்பதாண்டுகள்வரை அறவழியில் அதுவும் இந்தியாவின் காந்தி காட்டிய சத்தியாக்கிரக வழியிலேயே நடந்தது. மிகப் பெரிய சனநாயக பூமி என்று சொல்லப்பட்ட இந்தியாவும் அது காலம்வரை அதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது நடைபெற்ற அறவழிப் போராட்டத்தை அங்கீகரித்து அமைதித் தீர்வு காணும் முயற்சிகளைக் காந்திய இந்தியாவால் அப்போதே மேற்கொண்டிருக்க முடியும்.

1972ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் சிறிய அளவிலான ஆயுதப் போராட்டங்கள் உருவாகத் தொடங்கிய பின்னர்தான் இந்திய அரசு ஈழப் போராட்டத்தைக் கவனிக்கத் தொடங்கியது. 1983இல் இலங்கையில் நடைபெற்ற பெரிய அளவிலான இனப்படுகொலைக்குப் பின்னரே இந்தியா நேரடியாகத் தலையிடவும் முற்பட்டது. இந்தத் தலையீடுகூடச் சுயநலன் சார்ந்ததே.

“இலங்கைத் தீவு இரு அரசுகளாக இருப்பதைவிட ஓர் அரசாக இருப்பதே இந்தியாவின் எதிர்கால நலன்களுக்குச் சாதகமானது. அப்போது தான் இந்தியாவால் இலங்கையைச் சுலபமாகக் கையாள முடியும். எனவே இந்தியா தமிழீழக் கோரிக்கையை-தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தனது நலனுக்குகந்த அளவில் ஓரளவுக்குத் தீர்த்துவைப்பதும் தனது தலைமையை இலங்கை அரசை ஏற்கவைப்பதுமே இந்தியாவின் பிரதான நோக்கமாய் இருக்கிறது’’ என்னும் ஒரு கருத்து எண்பதுகளின் மத்தியில் ஈழத்தில் நடைபெற்ற அரசியல்சார்ந்த உரையாடல்களில் அடிக்கடி இடம்பெற்றிருந்தது.

தான் விடுதலைபெற்ற கையோடு மக்கள் விடுதலை அரசியலிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுக்கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களுடைய, நாடுகளுடைய விடுதலைக்கான போராட்டங்களுக்குத் துணைபுரிவது என்ற சுதந்திர இந்தியாவின் கொள்கைக்கு இருந்த குரலளவிலான ஆதரவு நேருவுக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து பிறகு ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது. பிடல் காஸ்ட்ரோவின் தொடக்கக் காலக் கியூபா போர்ச்சுகீசியக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த ஆப்பிரிக்க நாடுகளான கினிபிஸ்ஸா, அங்கோலா ஆகிய நாடுகளின் விடுதலைக்குப் பொருளாதார, ஆயுத, மருத்துவ உதவிகள் மூலம் துணை நின்றது. அன்றைய கியூபாவுக்கும் மே 28, 2009இல் ஐ.நா. மனித உரிமை அவையில் இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை முன் மொழிந்த இன்றைய கியூபாவுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தீர்மானிப்பது வெறும் ஐம்பதாண்டுகள் மட்டுமல்ல விடுதலை பற்றிய அதன் புரிதலில் ஏற்பட்டுள்ள தலைகீழான மாற்றமும்தான்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தொடர்ந்து மோசமான நிலைப்பாடுகளையே எடுத்துவந்துள்ளது. 1983 இலங்கை இனப் படு கொலையைக் கண்டித்து, ஐ. நா. துணைக்குழுக் கூட்டத்தில் இதயமுள்ள நாடுகளின் தலைவர்கள் பலர் பேசினர். ஐ. நாவின் இந்தியப் பிரதிநிதி சையத் மசூத், “இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ. நா. அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது’’ என்று பேசினார். அப்போதைய உலக முக்கியத்துவ முள்ள பிரச்சினைகள் பற்றி ஐ. நா. அவையில் பேசிய அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி 1983இன் இனப் படுகொலை பற்றி எதுவும் பேசவில்லை. பேசும் அளவுக்கு முக்கியத்துவமுடையவை அல்ல அப்படுகொலைகள் என இந்திரா கருதினார் போலும்.

தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பதுபோல இலங்கை அமெரிக்கச் சார்பு நிலை எடுத்த பிறகு இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக ஜெ. ஆர். ஜெயவர்த்தனா இலங்கை அதிபராக இருந்தபோது தமிழ்ப் போராளிக் குழுக்களுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்தது இந்தியா. இலங்கை அரசு இனவாதத்தைச் சாக்காக்கி 1970களில் மேலைநாடுகளுடன் கைகோத்துக் கொண்டு இந்திய எதிர்ப்பில் தீவிரமாக நின்றது. இலங்கையின் எதிர்க்கட்சிகளும் இனவாதத்தை மூலதனமாகக்கொண்டே அரசியலில் ஜீவிக்க முடிந்தன. இப்பிராந்தியத்தில் வல்லரசாக உருவெடுத்துக்கொண்டிருந்த இந்தியா தன் நோக்கு நிலையிலிருந்தே தீர்வை முன்வைத்தது. முரண்பாடுகள் இராணுவரீதியிலிலேயே தீர்க்கப்படக்கூடியவனவாக முறுகல்நிலை கொண்டன. ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என முன்னர் போராளிகளுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்த இந்தியா 1987இல் இலங்கையின் மீது இராணுவ நடவடிக்கை எடுத்தது. அமெரிக்காவோ முழு இலங்கையையும் இழந்துவிடத் தயாராக இல்லை. சிறிய விட்டுக்கொடுத்தல்களுடன் ஒரு சமரசத்தை அமெரிக்கா முன்மொழிந்தபோது ஜெ. ஆர். ஜெயவர்த்தனா அமெரிக்காவின் நோக்கத்தைப் புரிந்துகொண்டார். அமெரிக்கா அந்தச் சமரச உடன்பாட்டை எப்படி வரவேற்றது என்பதை இங்குக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

“இந்தியாவுக்கு வயது வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு எடுத்த நிலைப்பாட்டால் அது தன்னைப் பிராந்திய வல்லரசாக மாற்றிக் கொண்டுவிட்டது. இந்தியாவின் இந்த இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது’’ என்ற மிகச் சாகசமான வார்த்தைகளின் மூலம் வரவேற்றது அமெரிக்கா. அந்த நேரத்தில் வளைகுடா நாடுகளில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவுடன் குறைந்தபட்சமாகவேனும் ஒத்துப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது அமெரிக்காவுக்கு. ஆனால் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைக்குப் பின் இலங்கை-இந்திய அரசுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் கைவிலங்கை அகற்றிக்கொள்ள முயன்றவர்களுக்குக் கால்விலங்கும் மாட்டப்பட்ட கதையாக ஆனதாகத் தமிழர்களால் வர்ணிக்கப்பட்டது.

பொதுவாக்கெடுப்பு நடத்தி வடக்கு-கிழக்கு மாகாணங்களை நிரந்தமாக இணைக்கும் காலம்வரை தற்காலிகமாக அவை இணைக்கப்பட்டு ஓர் அலகாகச் செயற்படும் என இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது. தற்காலிகமாக அல்ல, நிரந்தரமான இணைப்பே தேவை என விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அப்போது வலியுறுத்தினார். அப்போது பிரபாகரன் பக்கம் நெருங்கி வந்த ராஜீவ் காந்தி அவரது காதோடு காதாக “சிங்களத் தீவிரவாதிகளையும் சிங்கள மக்களையும் திருப்திப் படுத்துவதற்காகத்தான் அப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் நிரந்தர இணைப்புதான் நோக்கம்’’ என்றார். ராஜீவ் சொன்னதை அப்போதைக்கு ஏற்றுக்கொண்ட பிரபாகரன் தன் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் அதைச் சொன்னார். புலிகள் இதை ஏற்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து இரு போராளிகள் குப்பி கடித்து இறந்தனர். நிரந்தர இணைப்பு என்று உறுதியளித்த ராஜீவ் காந்தி பின்னாட்களில் அதன் மேல் அக்கறை காட்டவில்லை. இப்போது கூட இந்திய அரசியல் தலைமைகள் அந்த ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசுவதில்லை.

வடக்கு-கிழக்கு மாகாணங்களைத் தற்காலிகமாக இணைத்து ஒரு முதல்வரை நியமிக்க வேண்டியுள்ளது எனவும் மூன்று பெயர்களைப் பரிந்துரைக்குமாறும் அப்போதைய இலங்கைக்கான இந்தியத் தூதர் தீட்சித் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டார். “மூன்று பெயர்கள் அல்ல, ஒரு பெயரைத் தான் கொடுக்க முடியும்” என்று பிரபாகரன் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்தார். “மூன்று பெயர்கள் கொடுங்கள். அதில் முதலாவது பெயரையே தெரிவுசெய்வோம்’’ என தீட்சித் அளித்த உறுதிமொழியின் பேரில் புலிகள் அப்போது மூன்று பெயர்களை அவரிடம் அளித்தனர். புலிகள் அளித்த பட்டியலில் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பைச் சேர்ந்த உயர்நிலை அரசு அதிகாரியான பத்மநாதன் பெயர் முதலாவதாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவஞானம் பெயர் மூன்றாவதாகவும் இடம்பெற்றிருந்தது. தந்திரமான முறையில் பட்டியலில் மூன்றாவது நபராக இருந்த சிவஞானத்தையே முதல்வராகத் தேர்வுசெய்தார் ஜே. ஆர். ஜெயவர்த்தனா. கிழக்கு மாகாணம் தொடர்ந்து புலிகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்னும் பிரச்சாரத்துக்கு வலுவூட்டும் நோக்கத்துடன் ஜெயவர்த்தனா மேற்கொண்ட இந்த நடவடிக்கையை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது.

இப்படியான நிகழ்வுகள்தாம் பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் இந்தியாமீது அவநம்பிக்கையை ஏற்படுத்தின. புலிப் போராளிகள் மட்டுமல்ல, பிற போராளிக் குழுக்களும் இந்தியா ஏமாற்றிவிடும் என்பதை உணர்ந்தே இருந்தனர். ஆனால் இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தை அனைத்துப் போராளிக் குழுக்களும் விளங்கிக் கொண்டிருந்தனர். யாரும் அந்த உண்மையை மறுக்கவில்லை. இந்தியாவின் ராஜதந்திரிகளும் கொள்கை வகுப்பாளர்களும் ஜே. ஆரின் தந்திரங்களால் கட்டுப்படுத்தப்பட்டனர். பிரச்சினை இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியது. ஒப்பந்த ஷரத்துகளில் கூறப்பட்டதற்கு மாறாக ஜெயவர்த்தனா மேற்கொண்டு வந்த எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. சண்டே லீடர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் “நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் (சிங்களவர்கள்) எல்லோரும் என்னை எதிர்ப்பீர்கள். ஒப்பந்தத்தை முதலில் மீறியது இலங்கைதான். தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை” என்றார் இந்தியத் தூதர் தீட்சித் (Sunday Leader:Sep 4 1994, Tamil hopes not met.Dixit blames the Singalese for breaking of India -Lanka accord).

இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காக ஜே. ஆர். ஜெயவர்த்தனேவும் ராஜபக்க்ஷக்களும் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இது போன்ற தொடர்ச்சியான நம்பிக்கைத் துரோகங்களின் முடிவில் தான் “இந்தியாவை நம்பிச் செயற்பட்டால் முதலையின் முதுகில் பயணித்த குரங்கின் கதியாகி விடும்’’ என்று பிரபாகரன் கூறியதாகத் தெரிகிறது. இது இந்தியா பற்றிய அவருடைய, போராளிகளினுடைய கசப்பானஅனுபவங்களின் வெளிப்பாடாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொல்ல வந்த சிங்களவரின் நம்பிக்கையைப் பெறுவதில் காட்டிய அக்கறையில் நான்கில் ஒரு பகுதியைக்கூட நண்பர்களாய்க் கருதப்பட்ட தமிழர்கள்மீது இந்தியா காட்டத் தயாராயில்லை. முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் தமிழர்களை முழுமையாக அழிப்பதற்குத் துணைபுரிவதன் மூலம் சிங்களவர்களின் நேசத்துக்குரியோராக மாறிவிடலாம் என்று இந்திய ஆட்சியாளர்கள் நினைத்து விட்டிருப்பார்கள் போலிருக்கிறது. இப்போதும்கூட தன்னுடைய புவியிட முக்கியத்துவத்துக்கும் பாதுகாப்புக்கும் ஈழத் தமிழரின் ஆதரவு முக்கியமென்பதையும் ஈழத் தமிழர் வாழும் புவிப் பரப்பும் கடற்பரப்பும் இந்தியாவுக்குப் பாதுகாப்பு என்பதையும் இந்தியத் தலைமைகள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

ஒப்பந்தத்தை மீறியதாகக் காரணம் காட்டிப் புலிகளை அழித்தாயிற்று. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இலங்கை அரசு அதை நடைமுறைப்படுத்தாததற்காக அதன்மீது இந்தியா என்ன நடவடிக்கை எடுத்தது? இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா 2012, சனவரியில் மேற்கொண்ட இலங்கைப் பயணத்தின்போது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் காணப்பட்டுள்ள 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்ஷ ஒத்துக்கொண்டுள்ளார் என்று செய்தியாளர்களிடம் கூறிவிட்டு அந்தப் பக்கம் நகரவில்லை. “அப்படியெல்லாம் நான் செய்துவிட முடியாது. நாடாளுமன்ற ஒப்புதலோடுதான் எதையும் நடைமுறைப்படுத்த முடியும்’’ என்று அவருக்குப் பதிலடி கொடுத்தார் ராஜபக்ஷ.

இலங்கைக்குச் சென்ற எஸ். எம். கிருஷ்ணா காவிரி நதிநீர் ஆணையத்தின் ஒப்புதலை ஏற்காமல் தமிழகத்துக்குத் தண்ணீர் தரமாட் டேன் என்று மறுத்த அப்போதைய கர்நாடக முதல்வர். அதனால்தான் ராஜபக்ஷ அமைத்த இலங்கை அரசுக்குச் சாதகமான ‘கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீள் இணக்க விசாரணைக் குழுவின்’ அறிக்கையை அவரால் வரவேற்க முடிகிறது. புலிகள் அழிக்கப்பட்ட பின் இலங்கை அளித்த 13ஆம் சட்டத் திருத்தத்துக்கும் அதற்கு அப்பாலும் செல்வது என்ற பிரதான வாக்குறுதியைச் செயல்படுத்தாதது ஏன் என எஸ். எம். கிருஷ்ணா கேள்வி எழுப்பவில்லை. அப்பால் செல்வது என்பதைவிடப் பல காத தொலைவு பின்னோக்கிச் செல்வதே தனது நோக்கம் என ராஜபக்ஷ தன் மறுப்பு அறிக்கையின் மூலம் உறுதிப் படுத்தியிருக்கிறார்.

o

யதீந்திரா குறிப்பிடுவதுபோல் இந்திய சரணாகதி அரசியல் அல்ல தீர்வு. இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்காமல் தீர்வு இல்லை. ஆனால் இந்தியாவை எதிர்கொள்ள ஈழப் பிரதேசத்துக்குள்ளேயே ஓர் ஐக்கிய முன்னணி அமைத்துக் கொள்வது இன்றியமையாதது என்பதைப் புலிகள் உணரவில்லை. இலங்கை இனவெறி அரசை எதிர்கொள்ள முதலில் இந்த ஐக்கிய முன்னணித் தந்திரத்தைப் புலிகள் கையிலெடுத்திருக்க வேண்டும். புலிகள் இதில் அக்கறை செலுத்தவில்லை. தாமே ஏகப் பிரதிநிதி என்ற கோட்பாட்டை முன்வைத்துச் செயற்பட்டதால் எதிரிக்குப் பிரித்தாளும் வாய்ப்பைக் கொடுத்தார்கள்.

“விடுதலைப்புலிகள் 1991இல் மேற்கொண்டதொரு வரலாற்றுத் தவறு (ராஜீவ் கொலை) இந்தியா விற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நிரந்தரமான பிரி கோடாக அமைந்தது’’ என யதீந்திரா குறிப்பிடுகிறார். அது வரலாற்றுத் தவறு. அது விடுதலைப் போருக்குப் பின்புலமாக இருந்த தமிழக மக்களைத் தனிமைப்படுத்திவிட்டது. தேசப்பற்று என்று ஏற்றப்பட்டிருக்கும் மக்களின் உளவியலை இந்தியா தனக்கு நிரந்தரப் பிரிகோடாய் மாற்றிவிட்டது. ஆனால் ராஜீவ் கொலை தொடர்பான விசயத்தை வேறொரு கோணத்தில் பார்க்கிறார் மு. புஷ்பராஜன்,

“உண்மையில் ராஜீவ் காந்தி கொலைக்கு இந்தியா தனது வல்லாதிக்கக் கனவுகளின் பின்னணியிலேயே அழுத்தம் கொடுத்தது. ராஜீவ் காந்தி கொலை, விடுதலைப் புலிகளை அழிப்பதற்குத் தானாக மடியில் விழுந்த கனி. அக்கொலை நடைபெற்றிருக்காவிடினும் இந்தியா அவர்களை அழித்தே இருக்கும்; வேறு காரணங்களைத் தேடியிருக்கும்”. (மு.புஷ்பராசன்: வாழ்புலம் இழந்த துயர்)

இந்தப் பின்புலத்தை ஏற்றுக்கொள்வதில் யதீந்திரா இடறுகிறார். மாறாக வேறொரு எதிர் இடத்துக்கு நகர்ந்து சென்று, “தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போக்கில் இடம் பெற்றுவந்த அனைத்துத் தவறுகளும் இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விளங்கிக்கொள்ளாமையின் விளைவுகள்தாம்’’ என்று நியாயப்படுத்தும் புள்ளியில் போய் நிற்கிறார். இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விடுதலைப் புலிகள் புரிந்துவைத்திருந்தார்கள். போராளிகளுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தது. பின்னர் திம்புப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் போனது, மிரட்டி விடுதலைப் புலிகளையும் ஒப்புக்கொள்ளவைத்து, 1987இல் ஈழத்தின் மீது இந்தியப் படையெடுப்புவரை இந்தியா எந்த இடத்தைத் தகவமைப்பதற்கான முயற்சியிலிருக்கிறது போன்ற தெளிவுகளை மற்ற அரசியல் ஆய்வாளர்களும் எடுத்துத் தந்திருந்தார்கள்.

யுத்த நிறுத்த உடன்பாடானது அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கே நன்மையளித்தது என நார்வே அறிக்கை விவரிப்பது உண்மைக்குப் புறம்பானது. ஆனால் அறிக்கை விவரித்திருக்கும் மேற்படி விடயங்கள் அனைத்தும் பொதுவாக ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் அறிந்த உண்மைகள் என யதீந்திரா நிறுவ முயல்வதுதான் அர்த்தமில்லாதது. நார்வே அறிக்கை இயலாமை, கையாலாகத்தனம் என்பவற்றை மறைத்துச் சொல்லப்பட்டதாக இருக்கிறது என்பதுதான் உண்மை. “இன்னும் ஆழமாகப் பார்ப்போமாயின் யுத்த நிறுத்த காலத்தில் தனது இராணுவக் கட்டமைப்புகளின் வலிமையைப் பெருக்கிக்கொண்டு மீண்டும் பொருத்தமானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த நிறுத்தத்திலிருந்து வெளியேறுவது பிரபாகரனின் திட்டமாக இருந்தது’’ என்கிற நார்வே அறிக்கையின் பகுதி யதார்த்த நிலைமைகளிலிருந்து, நடைமுறைகளிலிருந்து பெறப்பட்டதாக இல்லை. புரிந்துணர்வு காலத்தில் செயல்கள் இதற்கு எதிர்மறையானதாகவே இருந்தன. இலங்கை தனது இராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்திக் கொண்டே இருக்க விடுதலைப் புலிகள் இயல்பான வாழ்நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களிடம் மிகக் குறைந்த போராளிகளே இருந்தனர். அங்கங்கே நிர்வாகக் கட்டமைப்பைப் பேணிக்கொண்டிருந்த போராளிகள் தவிர களத்தில் நின்றவர்கள் குறைவானவர்களே. விடுதலைப் புலிகள் மக்களுடனான தொடர்பாடல்களில் ஈடுபட்டிருந்தாலும் அது போதுமான வையாக இல்லை. அவை எதுவும் வெகுமக்கள் திரள் நடவடிக்கைகளாக உருக் கொள்ளவில்லை. தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கும் அதற்கு அப்பாலுள்ள மக்களுக்குமான சனநாயக வெளியாக அது மாற்றப்படவில்லை.

2001 செப்டம்பர் 11 உலக வரலாற்று அரங்கில் மோசமான நாள். அதுவரையிலான எல்லாவற்றையும் அது தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தனது அரசியல் இருப்புக்காக நடத்திய செப்டம்பர் 11 நடவடிக்கை வெற்றிகரமான அரசியல் நாடகமாகவே இருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் புனித வசனத்துடன் பெரும் ஊடக, இராணுவ வலிமைகொண்ட அமெரிக்கா காட்டிய வழியை உலக நாடுகள் பின்பற்றின. உலகின் பல்வேறு பகுதிகளில் இயக்கிக் கொண்டிருந்த யதேச்சதிகார அரசுகளுக்கு இது பெருவாய்ப்பாக மாறியது. விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சிகள் போன்றவற்றைப் பயங்கரவாதமாகச் சித்தரிப்பதற்கும் அமெரிக்கா வழங்கிய புனித வசனத்தின் துணையுடன் போராடும் மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கும் கொலைக்களங்களை உருவாக்குவதற்கும் அந்தப் புனித வசனம் துணைநின்றது. பயங் கரவாத ஒழிப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து உலகை வேறொரு திசைக்கு வல்லரசுகள் நகர்த்திக் கொண்டிருந்தன. ஆனால் மாறிய சூழலை விடுதலைப் புலிகள் கணக்கில் கொள்ளவில்லை. கணக்கில் கொண்டிருப்பார்களோயனால் இராணுவ வல்லமையைப் பெருக்குவதற்காகக் கடைசிவரை காத்திருந்து மோசம் போயிருக்க வாய்ப்பில்லை.

நார்வேயின் சமாதான முன்னெடுப்பு பற்றி (1997-2009 வரை) அதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் ஆய்வுசெய்தால் சமாதான முன்னெடுப்பு என்பது முதலில் நார்வேயின் முயற்சி அல்ல. அதை முன்தள்ளுவதில் அமெரிக்கா போன்ற மேற்குலகம், இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் தத்தம் விருப்ப அடிப்படையில் பங்காற்றியுள்ளன. ஈழத்தில் சர்வதேசச் சுற்றிவளைப்பு என இதைக் குறிப்பிடலாம்.

நார்வே என்பது சர்வதேச அரசுகளால் பின்னிருந்து திணிக்கப்பட்ட கருவி. இதைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருந்த விடுதலைப் புலிகள் நார்வேயால் முன்னெடுக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை நம்பவில்லை. அதை நடைமுறைப்படுத்துவதில் நார்வே நடுநிலையாகக் கூட இல்லை. அமைதி ஒப்பந்தத்தின் ஷரத்துகளில் முக்கியமான ஒன்று தமிழர் பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்பு இலங்கையின் ராணுவ அகற்றல்களும் தமிழர் மீள்குடியேற்றங்களையும் பற்றியது. இவை பற்றிப் பலமுறை ஆதாரங்களுடன் அளித்தும் நார்வேயின் நடவடிக்கை எதுவும் இல்லை. நார்வே அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பதற்கு எதிரிடையானவையாகவே நிகழ்வுகள் இருந்தன.

2002 சனவரியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. 2002 அக்டோர் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டுக்கு நாங்கள் சென்றிருந்தோம். முடிந்து திரும்புகையில் கிளிநொச்சியில் பிரபாகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. அச்சந்திப்பின் போது “அமைதிப் பேச்சு வார்த்தைக்கான நார்வேயின் முயற்சிகளை நம்புகிறீர்களா?” என அவரிடம் கேட்டோம். எங்களின் கேள்விக்கு உலக அரசியலை அவதானித்து வருகிறோம் என நிதானமாகப் பதிலளித்தார் பிரபாகரன். உலக ஆதிக்கப் போட்டிகள் அனைத்தையும் தீர்க்கமாகப் புரிந்துகொண்டுள்ள தொனியில் சொன்னார், “நாங்கள் நார்வேயை நம்பவில்லை. அமெரிக்காவின் குரூர முகம் இஸ்ரேல், அமெரிக்காவின் மென்மையான முகம் நார்வே. இதை நாங்கள் தெளிவாகப் புரிந்துவைத்துள்ளோம்.’’

அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மட்டுமேயல்ல, நார்வேயின் சமாதான முன்னெடுப்பு முயற்சிகளின் பின்னணியில் இந்தியாவே பிரதான சக்தியாக இருந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ள செய்தி யதீந்திராவுக்கு மட்டுமல்ல நமக்கும் புதிய செய்திதான். ஆனால் நார்வே அறிக்கையை நடுநிலையான எந்தச் சார்புமற்றது என யதீந்திரா கருதினாரென்றால் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒவ்வொரு அறிக்கையின் நோக்கமும் அதனதன் சாராம்சங்களின் அடிப்படையிலேயே அமைகிறது. ஐ. நா. விசாரணைக் குழுவின் அறிக்கை போன்றது அல்ல நார்வே அறிக்கை. ஐ.நா. அறிக்கை இரு தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களைப் பட்டியலிட்டிருந்தாலும் இலங்கை அரசுக்குப் பொறுப்புக் கூறும் கடமை உண் டென அந்த அறிக்கை சுட்டுகிறது. நார்வே அறிக்கையால் வழி நடத்தப்படும் யதீந்திரா போன்றவர்கள் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்ற எண்ணம் இந்தியாவுக்கு இருந்திருக்கவில்லை என்பதை நார்வே அறிக்கையை அவதானிக்கும்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

இந்தியா புலிகளை அழித்ததா என்ற கேள்வியைவிட அது ஈழத்தின் அப்பாவி மக்களை அழித்தது என்ற உண்மை முக்கியமானது.

“போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்தபோதும் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை ரா அமைப்பு சரியாக இனங் காட்டியிருந்தபோதும் முள்ளி வாய்க்காலுக்குள் போரற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் குழுமியிருந்த பகுதியில் வலுவான தாக்குதல்களைத் தொடுக்குமாறு ஒரு குரூரமான திட்டத்தை இந்தியாவின் எம். கே. நாராயணனும் சிவசங்கர மேனனும் இலங்கையை அறிவுறுத்தினர். இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகா தரும் தகவலின்படி பொதுமக்கள் இழப்புகளைக் குறைக்கும் வகையில் ஆகஸ்ட் மாத அளவிலேயே இறுதி வலிந்த தாக்குதலை நடத்துவதெனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்க வேண்டும் என்று உறுதிப்பாட்டின் பேரில் செயற்பட்ட சோனியா காந்தியின் அதிகாரம் பெற்ற முகவர்களான எம். கே. நாராயணனும் சிவசங்கர மேனனும் மேலும் தாமதித்தால் அமெரிக்கா விடுதலைப் புலிகளின் தலைமையையும் பொதுமக்களையும் வெளியேற்றுவதற்கு வழிசெய்துவிடும் என அஞ்சினர். இதன் விளைவுதான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலை என்கிறார் வி. எஸ். சுப்பிரமணியம் என்ற ரா உளவு அமைப்பில் பணியாற்றிய முக்கிய அதிகாரி. (Ground Report:V.S.Subramaniam 3.1.2010)

இந்த சுப்பிரமணியம் தொடர்ந்து சொல்கிறார் “சோனியாவின் அதிகாரம் பெற்ற இந்த முகவர்களின் மறைமுகமான கையாள்களாகவே கோத்தபய அப்போது செயற்பட்டிருக்கிறார். இந்தக் கொலைகளுக்கான தனிப் பொறுப்பை கோத்தபயமீது மட்டும் சுமத்த முடியாது. அவ்வாறு சுமத்த முயன்ற தில்லியின் குற்றச் சாட்டால் கோபமடைந்த கோத்தபய கொழும்பு போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுதில்லியும் உடந்தையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாத்த சோனியாவின் அதிகாரம் பெற்ற ஆட்களுடனான உரையாடல் பதிவைக் கையிலெடுக்கப் போவதாக அச்சுறுத்தினார். இது தில்லியின் வாயை அடைத்தது (3.1. 2010 - Ground Report: V.S.Subramaniam)

இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்தவர் சதீஷ் நம்பியார். இவர் மேஜர் ஜெனரலாக இருந்தபோது இலங்கையின் உயர் பாதுகாப்பு வலையங்கள் பற்றி ஆய்வுசெய்து அது பற்றி இந்தியாவுக்குக் கருத்துச் சொல்வதற்காக 2003இல் அனுப்பப்பட்டார். “வடக்கு-கிழக்கு மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்” என்பது அவர் அளித்த அறிக்கையின் சாரம். இந்த சதீஷ் நம்பியார்தான் ஓய்வுபெற்ற பின் #இலங்கையின் ராணுவ ஆலோசகராகப் பணிபுரிந்தார் என்பதும் விடுதலைப் புலிகளையும் மக்களையும் அழிக்கும் இந்தியாவின் திட்டத்தைச் செயல்படுத்தவே அவர் அங்கு அனுப்பப்பட்டார் என்பதும் இவரது சகோதரர் விஜய் நம்பியார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்புச் செயலர் என்பதும் விஐய் நம்பியார் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது கொழும்பில் இருந்தார் என்பதும் முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்ற பின் தடயங்கள் இல்லாமல் அழிப்பதில் இந்த இரு நம்பியார்களும் பின்னிருந்து செயல்பட்டார்கள் என்பதும் நாமறிந்த உண்மைகள். ஆனால் நார்வே அறிக்கையில் குறிப்பிடப்படாத உண்மைகள்.

o

இந்தியாவே எல்லாம் என்ற கூவல் ஆபத்தானது. இது அமெரிக்காவே எல்லாம் என்பதற்குச் சமமானது. இந்தியாவை நம்பியும் அமெரிக்காவை நம்பியுமே இறுதிக் காலப் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

#ஈழத்தமிழர் தமது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்து முன்னெடுப்பது தவிர வேறு வழியில்லை. இந்தியாவையும் இந்தியா போன்ற வல்லரசுகளையும் உலக அரசியல் போக்குகளையும் கூர்மையாய் அவதானித்து, எப்படிக் கையாளுவது என்ற ராஜதந்திரத்துடன் நகர வேண்டும். ஈழத் தமிழர், புலம்பெயர் தமிழர், தாயகத் தமிழர் ஆகிய மூன்று தளங்களில் ஒருங்கிணந்த செயல்பாடுகள்தாம் விடிவுக்கு வழி. ஒவ்வொரு தளத்திற்கும் தனித் தனிக் கடமைகள் உண்டு. ஆனால் இந்திய சரணாகதி அரசியல் யாருடைய கடமையாகவும் Balachandran nimalandran

Child labour

A Study on the Conditions of Children in Tea Gardens of Alipurduar District of West Bengal
 
A report of a study conducted jointly by ActionAid India West Bengal regional office and the West Bengal State Commission for Protection of Child Rights. The study covered more than 3700 children and their parents living in 20 tea gardens in the district. The major findings of the study are:
-- Child labour is rampant in the region
-- 40 cases of missing of children aged less than 20 years come to light
-- Rate of drop out among girls is as high as 71%
-- Around 56% of tea workers are from tribal communities, having monthly income of less than Rs. 3000/-
-- Health service and drinking water are big problems in the areas.

Read the full report here: http://actionaid.org/sites/files/actionaid/condition_of_children_in_the_tea_gardens2.pdf

Mending Wall" by Robert Frost

"Mending Wall" by Robert Frost

 Something there is that doesn’t love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun;
And makes gaps even two can pass abreast.
The work of hunters is another thing:
I have come after them and made repair
Where they have left not one stone on a stone,
But they would have the rabbit out of hiding,
To please the yelping dogs.  The gaps I mean,
No one has seen them made or heard them made,
But at spring mending-time we find them there.
I let my neighbor know beyond the hill;
And on a day we meet to walk the line
And set the wall between us once again.
We keep the wall between us as we go.
To each the boulders that have fallen to each.
And some are loaves and some so nearly balls
We have to use a spell to make them balance:
‘Stay where you are until our backs are turned!'
We wear our fingers rough with handling them.
Oh, just another kind of outdoor game,
One on a side.  It comes to little more:
There where it is we do not need the wall:
He is all pine and I am apple orchard.
My apple trees will never get across
And eat the cones under his pines, I tell him.
He only says, ‘Good fences make good neighbors.'
Spring is the mischief in me, and I wonder
If I could put a notion in his head:
'Why do they make good neighbors?  Isn’t it
Where there are cows?  But here there are no cows.
Before I built a wall I’d ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn’t love a wall,
That wants it down.'  I could say ‘Elves’ to him,
But it’s not elves exactly, and I’d rather
He said it for himself.  I see him there
Bringing a stone grasped firmly by the top
In each hand, like an old-stone savage armed.
He moves in darkness as it seems to me,
Not of woods only and the shade of trees.
He will not go behind his father’s saying,
And he likes having thought of it so well
He says again, ‘Good fences make good neighbors.'

Important organic reactions in single note.


Friday, July 29, 2016

பட்டாசுத் தொழிலின் பரிதாப நிலை

இன்றைய (29.7.2016) தினமணியில் நடுப்பக்க தலையங்கப் பக்கத்தில் "பட்டாசுத் தொழிலின் பரிதாப நிலை" என்ற தலைப்பில் வெளி வந்துள்ள எனது பத்தி.

பட்டாசுத் தொழிலின் பரிதாப நிலை

வறண்ட கரிசல் அக்னி பூமியான விருதுநகர் மாவட்டம் சிறுதொழிலுக்கும் விவசாயத்திற்கும் தமிழகத்தின் கேந்திரமாக விளங்கும் பகுதியாகும். குறிப்பாக குட்டி ஜப்பான் என்ற சிவகாசியில்,வருடம் முழுவதும் பட்டாசு உற்பத்தி தொழில் நடக்கும். புத்தாண்டு என்றால் காலண்டர், டைரிகள் என்ற அச்சுத் தொழில் ஒருபுறம். விறகு அடுப்பு காலங்களில் தேவைப்படும் தீப்பெட்டி உற்பத்தியும் இங்கு அதிகம். சிவகாசி பட்டாசுகள் அமெரிக்க விடுதலை நாளில் பயன்படுத்தபடுவது உண்டு. ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த பட்டாசுகள் செல்வது உண்டு. இங்கு அச்சாகும் காலண்டர்கள், பன்னாடுகளுக்கும் செல்கின்ற பரிசு பொருட்களாக திகழ்கின்றன. சாத்தூரில் பேனா நிப் செய்யும் குடிசைத் தொழிலும் 1975 வரை உலகத்தின் எழுத்துத் தேவைக்கு பயன்பட்டது. மூதறிஞர் இராஜாஜி இங்கு உற்பத்தியாகும்தங்க முலாம் பூசிய நிப்புகளை பேனாவில் வைத்து எழுதுவது உண்டு. இதை சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு அவருக்கு கொண்டு வந்து கொடுப்பது வாடிக்கை. சத்யஜித்ரே, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிபோன்ற பல ஆளுமைகளுக்குநிப்புகள் சாத்தூரிலிருந்து சென்றது உண்டு.  இராஜபாளையத்தில் பஞ்சுத் தொழில், விருதுநகரில் மிளகாய், பருப்பு, எண்ணெய் கமிஷன் மண்டிகள் என்ற தொழில்கள் இந்த வட்டாரத்திற்கு வளம் சேர்த்தன.  இன்றைக்கு இந்த சிறுதொழில்கள் எல்லாம் சீரழிந்து, பட்டாசு தொழிலில் நித்தமும் விபத்துக்கள் ஏற்பட்டு இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மடியவேண்டிய கொடூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிவகாசி கன்னிவெடி நகரமா?வவுனியா காடா?என்று கேட்கக் கூடிய அளவில் பதட்டமான நிலை.

மனித உயிர்கள் பட்டாசு உற்பத்தி விபத்தில் மடிவது சாதாரணமாக போய்விட்டது என்பதுதான் கொடுமை. அது வறுமையின் பிடியில் மாட்டிக்கொண்டவர்கள் வேறு வழியில்லாமல் பட்டாசுத் தொழிலுக்கு வேலைக்கு செல்கின்றனர். அதுவும் 20 வயதை அடைந்தவர்கள் அதிகமாக இத்தொழிலுக்கு செல்கின்றனர் என்பது செய்தி. 2012ல் முதலிபட்டி கிராமத்தில் 45 பேரும், அதே கிராமத்தில் 2014ல் 40 பேரும் பட்டாசு ஆலை எரிந்து மடிந்தனர்.  நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.  இப்படி வேதனை தரும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.  சரியான புள்ளி விவரங்கள் இதுவரை எத்தனை பேர் விபத்தில் இறந்துள்ளனர் என்று சரியாக இல்லை. கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கு மேலான விபத்துகள் நடந்துள்ளன. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 400க்கு மேல்.படுகாயமடைந்தவர்கள் 250க்கு மேல் இருக்கும் என்று புள்ளி விவரங்கள் சொன்னாலும் இவை யாவும் சரியானவையா என்பது கேள்விக் குறிதான்.

2005-ல் சிவகாசியின் மீனாம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு ஜூலை மாதம் சிவகாசி அனுபன்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், 22 பேர் காயம் அடைந்தனர். 2006-ல் சிவகாசி பர்மா காலனியில் ஏற்பட்ட பட்டாசு தீ விபத்தில் 12 பேரும், 2007-ஆம் ஆண்டு நாராயணபுரத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 4 பேரும் உயிரிழந்தனர்.  2009-ல் சிவகாசியின் நமஸ்கரித்தான்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் 18 பேரும், மற்றொரு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். 2010-ல் சிவகாசியில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 7 பேர் பலியாகினர். அதே ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி சிவகாசி மாரனேரி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் பலியானார். 2010-ல், செப்டம்பர் மாதம் சாத்தூர் தாயில்பட்டி அருகே மீனாட்சிபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு கருந்திரிகளை அழிக்கச் சென்ற வருவாய்துறையினர் 6 பேர், காவல்துறையினர் 2 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 2011-ல் விருதுநகர், சிவகாசி மற்றும் தூத்துக்குடிமாவட்டத்தில்நிகழ்ந்த பட்டாசு விபத்துகளில் 14 பேர் உயிரிழந்தனர்.  2013-ல் சிவகாசி நாரணாபுரம் கிராமத்தில் ஒரு ஆலையில், தடை செய்யப்பட்ட செந்தூரம் வேதிப் பொருட்களைக் கொண்டு மரத்தடியில் பட்டாசு தயார் செய்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு சாத்தூர் அருகே உள்ள ஆலையிலும் மற்றும் கோணம்பட்டியில் உள்ள ஆலையிலும் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 2014-ல் ஒண்டிப்புலி நாயக்கனூரில் அனுமதியின்றி இயங்கி வந்த பட்டாசு கருந்திரி ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 சிறுவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள ஆலையில் பட்டாசு திரிகளை வெட்டும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இப்படி இன்று வரை இந்த துயரங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.  இந்த விபத்துகளுக்கு சிவகாசியில் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை கட்டடங்கள்தான் கட்டப்பட்டதே ஒழிய உரிய மருந்துகளும் கருவிகளும் பற்றாக்குறை.  விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் வாழை இலையை உடலில் போர்த்தி முதலுதவி செய்வதுதான் நடைமுறையாகிவிட்டது.  வெடி விபத்துக்கள் நடந்தால் அதற்கான சிகிச்சைகளை செய்வதற்கான தயார் நிலை இல்லாதது மிகவும் கவலைக்குரியதாகும்.

பட்டாசு ஆலை போன்றே தீப்பெட்டி ஆலை விபத்துகளும் தொடர்ந்து நடக்கின்றன.  வறண்டு போன இந்த வட்டாரத்திற்கு விவசாயம் பொய்த்துப் போவதால் அங்குள்ள மக்கள் ஜீவனத்திற்கு விபத்துகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர்.  ஆண்டுக்கு 5000 கோடி வரை பணத்தை ஈட்டும் சிவகாசி தொழில் நகரத்தில் இப்படியான துன்பங்கள், அழுகைகள் தினமும் நடக்கின்றன.  மகிழ்ச்சியோடு வெடித்து காசு தருகின்ற பட்டாசை உருவாக்கும் கைகளில் பெரிய கண்ணீர் கதை உள்ளது.  பல விபத்துக்கள் வெளியே தெரியாமலும் போய்விடுகின்றன.  சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் வரை பரவியுள்ள இந்த வெடி ஆலைகளில் தினமும் ஒரு உயிர் பலியாகின்றது. இது விபத்துதான். இதை யாரையும் குற்றம் சொல்ல முடியாவிட்டாலும் இந்த விபத்துக்களை தடுக்கக் கூடிய மேல் நடவடிக்கைகளை எடுக்க ஆலை அதிபர்கள் தவறுவதால்தான் இந்த மோசமான நிலை.

இன்றைக்குக்கு அங்குள்ள நிலைமை என்ன? சிறு அளவிலான பட்டாசு ஆலைகளுக்கு அனுமதியை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் தந்தாலே போதும்.  அதற்கு அடுத்து பெசோ என்று சொல்லக்கூடிய மத்திய பெட்ரோலிய மற்றும் வெடிபொருள் அமைச்சகத்தின் நிறுவனமும் உரிமை வழங்க வேண்டும். இந்த பெசோ நிறுவனத்தின் அலுவலகம் சிவகாசியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகமும் விபத்துகள் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.   சற்று பெரிய ஆலைகளுக்கு சென்னையிலும், பெரிய நிறுவனங்களுக்கு புனேவில் உள்ள மத்திய அரசின் அலுவலகத்தில் இருந்து உரிமைகள் வழங்கப்படுகின்றன.  இதில் அடிக்கடி மாநில அரசு அதிகாரிகளுக்கும், மத்திய அரசு அதிகாரிகளுக்கும் கண்காணிப்பில் போட்டா போட்டியும் நடப்பது உண்டு. மாநில அரசு அதிகாரிகள் சல்ஃபர் வேதிப்பொருளை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கின்றோம். மற்றவற்றை கண்காணிப்பதில் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கை விரிப்பார்கள்.

பட்டாசு வெடிபொருளில், "சல்பர்" மட்டுமே படைக்கலச் சட்டத்தின் கீழ் வருகிறது. ஆனால், பட்டாசு உற்பத்திக்கு தேவையான ''அலுமினியம் பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், பேரியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட்" போன்ற பல மூலப்பொருட்களை வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழியில்லை. அதை வைத்திருப்போர், விற்பனை வரியை ஒழுங்காக செலுத்தி வருவதால், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எனவே அனைத்து வெடிபொருள்ளுக்கான மூலப்பொருட்களை வைத்திருப்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் விதிமுறைகளை உருவாக்கினால்தான் அவர்களை கட்டுப்படுத்த முடியும். இதுதான் விபத்துக்களுக்கு அடிப்படை. விருப்பம் போல இந்த மூலப்பொருட்களை கட்டுப்பாடு இல்லாமல் புழக்கத்தில் இருப்பதால் விபரீதங்கள் நடக்க காரணமாகிவிடுகின்றன.

கடந்த ஜூலை 2, 2016 அன்று சிவகாசி நகரின் மையப்பகுதியில் நடந்த விபத்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. விற்பனைக் கடையை ஒட்டிய இடத்திலேயே பட்டாசு செய்ய தேவையான வேதிப்பொருள்கள் பதுக்கப்பட்டிருந்தது. அதனால் வெடி விபத்து நிகழ்ந்து, அந்த கட்டிடமே தரைமட்டமாகி நான்கு பேர் பலியானார்கள்.  சிவகாசி நகரின் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வெடி மருந்து பொருட்கள் சேமிப்புக் கூடங்கள் இருக்கக் கூடாது என்று இருந்தததை 13 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு என்று கூடுதலாக்கப்பட்டது.  அதன் பின்பும் பாதுகாப்பை கருதாமல் ஒரு சிலர் சிவகாசி நகரத்திலும், அதன் எல்லையிலும் இம்மாதிரி சட்டத்துக்குப் புறம்பாக வேதிப் பொருள்களை சேமித்தது தவறு. அதை சரியாக அரசு நிர்வாகமும் கண்காணிக்கவில்லை.  நடந்த விபத்தைக் கண்டு சிவகாசி மக்களே அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்து நடந்த இடம் சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் விருதுநகர் சாலை அருகில் மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற பகுதியாகும்.  அன்றைக்கு நடந்த விபத்தில் பெரும் புகையும், தீயையும் உருவாக்கி மக்கள் பயத்தில் எட்டுத் திக்கில் அலறி ஓடியதை பார்த்ததை பலர் வேதனையோடு குறிப்பிட்டிருந்தனர். அமைதியான வாழ்க்கை தான் பிரதானம் என்று நினைக்காமல் ஒரு சிலர் தங்கள் சுயநலத்திற்காக நடந்துகொள்கின்ற முறையால் இந்த ரணங்கள் ஏற்படுகின்றன.

பட்டாசு, தீப்பெட்டி ஆலை விபத்து என்பதை தடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இதைக் கட்டுப்படுத்தவேண்டும். இதில் பல இடங்களில் சிறுவர்களும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். வேலைக்கு ஆள்களை திரட்டிக்கொண்டு வருவதற்கு மேஸ்திரிகள் என்ற இடைத்தரகர்களும் உண்டு.  இப்படியான சட்டத்திற்கு புறம்பாக இந்த பட்டாசுத் தொழில் இயங்குவதை முறைப்படுத்த வேண்டும்.  முன்பெல்லாம் ஆலையில் விபத்து என்றால் ஆலையின் உரிமையாளர் முதலில் வந்து நின்று முதலுதவிப் பணிகளை ஆற்றுவார். ஆனால் இன்றைக்கோ ஆலையில் விபத்து என்று சொன்னவுடன் பயந்து ஒளிந்து, நீதிமன்றத்தில் பிணைகள் வாங்குவதில்தான் ஆர்வம் செலுத்துகின்றனர்.  இம்மாதிரி விபத்துக்களுக்கு சரியாக காப்பீட்டுத் தொகைகளும் எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதும் கிடையாது. சில சமயங்களில் இந்தக் காப்பீட்டுத் தொகைகள் கிடைப்பதும் இல்லை.  சிவகாசி பகுதியில் மட்டும் 250 சிறு ஆலைகள் உள்பட 850 பட்டாசு ஆலைகள் உள்ளன.  இது தவிர, முறைப்படுத்தாத ஆலைகள் என்று 100 ஆலைகள் வரை இயங்குகின்றன. அவர்களிடம் உரிமங்கள் இருக்கும். விதிமுறைகளையும், நடைமுறைகளையும் ஆலை அதிபர்கள் பின்பற்ற மாட்டார்கள்.

ஒரு பட்டாசு ஆலைக்கு உற்பத்திக்கு தகுந்தவாறு தனி செட் அமைக்க வேண்டும். அந்த செட்டில் இத்தனை பேர்தான் பணியில் அமர்த்தவேண்டும் என்ற முறை உள்ளது. ஒரே செட்டில் அதிகமானவர்கள் பணி செய்யும் போது விபத்துகளில் இருந்து தப்பிக்க இயலாது. ஒரே அதிபரிடம் பட்டாசு உற்பத்தி செட்டுகள் 20 இருந்தால், அதை 20 பேருக்கு குத்தகைக்கு விட்டுவிடுகின்றனர். அப்படி குத்தகைக்கு விடும்பொழுது விபத்துகள் நடந்தால் அந்த குத்தகைதாரர் இழப்பீடு தொகையை தருவதும் இல்லை.  இந்த குத்தகைதாரர்கள் வெடிபொருட்களை நேரடியாக வாங்காமல் தங்களுக்குத் தேவையான அளவை சில கடைக்காரர்களிடம் சில்லரையாகவும், சட்டவிரோதமாகவும் வாங்குகின்றனர். இதை கண்காணிக்கவும் முடியாது. இந்த விபத்துகளுக்கு இப்படி பல காரணங்கள்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிவகாசியில் இத்தொழில்கள் அழிந்து வருகின்றன. 1995 வரை இம்மாதிரி விபத்துக்கள் நடப்பது அரிதாக இருந்தது.  ஒரு பக்கம் 80 ஆண்டுகளாக நடந்து வரும் சிவகாசி பட்டாசுத் தொழிலை நசுக்கக் கூடிய வகையில் சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான கண்டெய்னர்கள் கப்பலில் வந்து இறங்குகின்றன.  சீனப் பட்டாசுகள் பாதுகாப்பற்றது. அலுமினியம் நைட்ரேட்டைக் கொண்டு சிவகாசி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சீனப் பட்டாசுகள் பொட்டாசியம் குளோரேட்டை வைத்து தயாரிப்பதால் எளிதில் தீப்பற்றி விபத்துக்கள் ஏற்படும். சிவகாசி பட்டாசுகளின் ஒலி 145 டெசிபல்.  ஆனால் சீனப் பட்டாசின் டெசிபல் அளவு அதிகம். சீனப் பட்டாசால் அரசுக்கு வரும் வருவாயும் குறையும். உள்நாட்டு உற்பத்தியால் மத்திய அரசுக்கு 12.5 சதவீதம் கலால் வரியும், மாநில அரசுக்கு 14.5 சதவீதம் வணிக வரியும் கிடைக்கும். ஆனால் சீனப் பட்டாசால் இந்த வருவாய்கள் கிடைக்காது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விபத்துகளின் எண்ணிக்கை கூடுதலாகிக்கொண்டே இருக்கிறது.  கையால் செய்கின்ற தீப்பெட்டித் தொழிலும் அழிந்துகொண்டிருக்கின்றது; பட்டாசுத் தொழிலம் மருவிக் கொண்டிருக்கின்றது; அச்சுத் தொழிலும் அரிதாகிவிட்டது இந்த வட்டாரத்தில். சிவகாசி வட்டாரத்தில் வாழும் மக்களுக்கு வேறு வழியில்லை. விபத்துக்களையும் எதிர்பார்த்துதான் அன்றாடம் இம்மாதிரியான ஆபத்தான பணிகளுக்கு செல்கின்றனர்.  ஆதியில் சிவகாசி ஐய்யநாடார் குடும்பத்தினர் கல்கத்தா சென்று அறிந்து கரி மருந்து மூலம் தீப்பெட்டியும், பட்டாசு வெடிகளையும் உற்பத்தி செய்ய காரணமாக இருந்தனர். கி.ரா.வும், மேலாண்மை பொன்னுசாமியும் இவ்வளவு துன்பங்கள் இருந்தாலும், வேறு வழியில்லாமல் துணிந்து ஆபத்தான தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் வேலைக்கு ஏழை சாலைகள் செல்கின்றனர் என்பதை தங்களுடைய படைப்புகளில் வேதனையோடு குறிப்பிட்டுள்ளனர்.

கி.ரா. குறிப்பிட்டதைப்போல “கறுப்பு மண்ணில் வாழ்ந்தாலும் வெள்ளை மனது படைத்தவர்கள். இவர்களின் உடைதான் அழுக்கு, நாக்கு சுத்தம். இந்த குணத்தை பெற்றவர்கள் இந்த சிறு தொழில்களை நம்பி வாழ்க்கையை காப்பாற்ற தவிக்கின்ற மக்களின் துயரங்களை கணக்கில் கொள்ள வேண்டும்.”

பட்டாசுத் தொழில் விபத்துக்களை செய்திகளில் பார்க்கும்பொழுது ஒரு செய்திதானே என்று நினைக்காமல் நாம் வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசை உருவாக்கிய கைகளின் பின்னணியில் ஒளிந்திருக்கும் துயரக்கதையை எண்ணிப் பார்க்க வேண்டும். பட்டாசுத் தொழில் பாடுபடும் பாட்டாளிகளின் பாதிப்புகளை களைந்து அத்தொழில் பதட்டமற்ற பட்டாசுத் தொழிலாக மாற மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்


Hermitage

I always loved her, and I love strong again,
And I'm for amar most of the day,
That sweet spot where crying I come back
Thick Fïate when love strike me;
And I'm firm of love time and time
CH ' every vil care I levàr around;
And one more which it beautiful face adorno
Ben to co ' his examples i falls in love.
But who thought never to see them all together
For me ' l cor or so or quinci
These sweet enemies that the much love?
Amor, with how much effort today I win!
And, if not that al desio grows the hope,
The more I'd dead where I live.
(Francesco Petrarca: Sonnet Lvi)
Painting by Giulio Romano | Lovers, 1523-1524. Hermitage

Thursday, July 28, 2016

பயோடைவர்சிட்டி

அழிந்து வரும் பாரம்பரியப் பசுக்கள்...
அரசு துணை உடன் விதை வங்கி,
ஜீன் வங்கி கொள்ளைகள்.

நமது இயற்கை அற்புதங்களின் முக்கிய அம்சம் “பயோடைவர்சிட்டி’ என்ற பல்லுயிர்ப் பெருக்கம்.

இப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு நமது தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் வேற்றுமைப் பண்புகள் அடிப்படை. உதாரணமாக நெல்லில் மட்டும் 5 ஆயிரம் வித்தியாசமான ரகங்கள் உண்டு. 

கத்தரிக்காயில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் தமிழ்நாட்டில் உண்டு.
இயற்கையின் அற்புதத்தால் நிகழ்ந்த பல்லுயிர்களின் வேற்றுமை குணங்களின் பல்லாயிரம் ஆண்டுக்காலப் பெருக்கமே நமது தேசியச் செல்வம். 

நவீன விவசாயத்தாலும், நவீன கால்நடை வளர்ப்பினாலும் நமது தேசியச் செல்வங்கள் “”விதைவங்கி” “”ஜீன் வங்கி” என்ற பெயரில் கொள்ளை போனது ஒரு பங்கு. 

அரசின் ஆதரவு இல்லாமல் அழிந்தவை பல பங்கு.

எதிர்கால வேளாண்மைக்கு வளம் சேர்க்கும் இலக்கில் நாம் இழந்து விட்ட நெல் ரகங்களைத் தேடிப் பாதுகாத்து அதன் சாகுபடியை உயர்த்த தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய நெல்லில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் பல விவசாயிகள் கிச்சலி, சீரகச்சம்பா, பெருங்கார், சம்பா, வையக்குண்டான் என்று தேடி அலைந்து பயிர் செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் இதே விழிப்புணர்வு பாரம்பரியப் பசுக்களின் மீட்பில் இல்லை. “”மூர்த்தி சிறிது, ஆனால் கீர்த்தி பெரிது” என்று பெயர் பெற்ற 
புங்கனூர்க் குட்டை எங்கே? 
காங்கேயம் எங்கே? 
உம்பளச்சேரி எங்கே? 
காங்கிரஜ் எங்கே? 
ரதி எங்கே? 
சாசிவால் எங்கே? 
தார்ப்பார்க்கர் எங்கே? 
தாங்கி எங்கே? 
சிந்தி எங்கே? என்று கேட்பாரில்லை. 

இன்றுள்ள சீமை ரகக் கலப்பினங்களை விடவும் அல்லது அதே அளவும் அதை விடக் கெட்டியான பால் வழங்கும் இயல்புள்ளவை நாம் வளர்த்த நம் நாட்டு பாரம்பரியப் பசுக்கள்.

இந்தியாவின் செல்வங்களை மதிப்பீடு செய்ய முகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் இங்கு வந்து நமது மேழிச் செல்வத்தைக் கண்டு வியந்தனர். நாட்டினப் பசுக்களின் பால், காளைகளின் உழைப்புத் திறன், நோயற்ற நிலை கண்டு புகழ்ந்துரைத்தனர்.

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் லிட்டில்வுட், ஓல்வர், மெக்கென்னி என்று கால்நடைத் துறையில் பணியாற்றிய பலரின் குறிப்புகள் கவனத்திற்கு உரியவை.

18, 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்திய மாடுகள் பிரேசில், வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. 
அன்றுதொட்டே இந்திய நாட்டு மாடுகளுக்கு அந்நாடுகளில் மிகுந்த மரியாதை உண்டு. 

அகராதியில் திமில் பருத்த மாட்டு இனம் என்று பொருள். இந்தியப் பசுக்களை அந்நியர்கள் இப்பெயரில் அழைப்பார்கள். சீமை இன மாடுகளுக்கு திமில் இல்லை. இந்தத் திமில் காரணமாகவே இந்திய மாடுகள் வெப்பத்தைத் தாங்கும் சக்தியுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் இருந்தது.

சீமை மாடுகளின் இயல்பு படி அந்த நாட்டின் தட்பவெப்பம் வளர்ப்பு காரணமாக அதிக பால் தந்தாலும் வலு குன்றியவை. நோய் எதிர்ப்புச் சக்தி இல்லை. 

இறைச்சி ருசிக்காகவும் ,நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் திமில் பருத்த மாடுகள் கடல் கடந்து சென்ற கொடுமைகளும் உண்டு.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது கறவைக்காகவும் சில மாடுகளின் தூயரகம் போற்றப்பட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டவற்றில் காங்கிரஜ், தார்ப்பார்க்கர், சிவப்பு சிந்தி, சாஹிவால், நெல்லூர், புங்கனூர், காங்கேயம் குறிப்பிடத்தக்கவை.
அம்ரித்மகால், ஹள்ளிகர், ஓங்கோல் காளைகளின் சக்தி குதிரை சக்தியை விட அதிகம். 

இவற்றில் ஹள்ளிகர், அமரித்மகால் செல்லும் வேகத்தினால் திப்புசுல்தானுக்குப் போர் வெற்றி கிடைத்துள்ளது. ராணுவத் தளவாடங்களைச் சுமந்து செல்லும் வண்டிக்குப் பூட்டப்பட்ட இக் காளைகள் சிட்டாய்ப் பறந்து வெள்ளைக்காரர் குதிரைகளை வென்றனவாம். 

அம்ரித்மகால் இன காளைகளை உருவாக்கியவர்கள் உடையார் மன்னர்கள். வளர்த்தவர்கள் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும்.

தமிழ்நாட்டில் காங்கேய இனம் அழிந்து வருகிறது. கூடவே கொரங்காடு மேய்ச்சல் நிலமும் அழிகிறது. சில தலைமுறைகளுக்கு முன்பு பாளையங்கோட்டை ஜமீன் மன்றாடியார் வம்சத்தினர் காங்கேய மாடுகளின் இனப்பெருக்கத்தையும் கொரங்காடு மேய்ச்சல் நிலத்தையும் தொடங்கினர். காங்கேயம் பகுதி கறவைப் பசுக்களுடன் ஹள்ளிகர் – அம்ரித் மகால் கலப்பினமாக காங்கேயம் உருவானது. ஓங்கோல் கலப்பும் இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உம்பளச்சேரி இனப்பெருக்கத்துக்கு வேலாயுதம்புரையர் என்ற ஜமீன்தார் 435 ஏக்கர் நிலம் வழங்கி 1950-ல் கொற்கைப் பண்ணையை உருவாக்கினார். சரியான தூய உம்பளச்சேரி இனத்திலிருந்து 4 லிட்டர் பால் பெறலாம்.

இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட நல்ல கறவை இனங்களான காங்கிரஜ், நெல்லூர், தார்ப்பார்க்கர், காங்கேயம், புங்கனூர், சிந்தி ஆகியவற்றின் தூய்மை இனம் காப்பாற்றப்படாமல் ஜெர்சி – எச்.எஃப் ப்ரீசியன் சீமை இனங்கள் கொண்டு வந்து நமது நாட்டு மாடுகளுக்குக் கரு ஊட்டம் செய்தனர்.

சீமை மாடுகளை இந்தியாவில் வளர்க்க குளிர் சாதன அறைகள் வேண்டும். செலவு மிக்கது. நோய்மிக்கது. இப்படி உருவாக்கப்பட்ட கலப்பினத்தில் சீமை இனப் பண்புகள் மாறியதால் சராசரி பால் அளவு 5 லிட்டர்தான் தேறுகிறது. கொடி கோமாரி நோய் தொற்றுகிறது. இம் மாடுகளின் இறப்பு வீதமும் அதிகம். 

இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிப்பதால் வந்த வினை.

இந்திய மாடுகளில் மிகவும் குள்ள ரகத்தை அடையாளம் செய்து வளர்த்தவர் புங்கனூர் ராஜா. சித்தூர் மாவட்டத்தில் இது மதனப்பள்ளி – பாலமனூர் பகுதி என்பதால் சென்னை – வேலூர் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்க வாய்ப்புண்டு. மிகவும் குறைந்த எடையுள்ள இந்த மாட்டில் சராசரி 4 லிட்டர் பால் பெறலாம். 
வளர்க்கும் செலவும் குறைவு.

நமது கால்நடைத் துறையினர் அந்த இனத்தைக் கண்டு பிடித்து, பெருக்கி விவசாயிகளுக்கு அளித்தால் பேருதவியாக இருக்கும் அல்லவா?.

"என் மக்கள்" 
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

தாமிரபரணி...

தாமிரபரணி
------------
வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்!

நம்ம மாநிலத்தை தண்ணீர் பிரச்னைக்காக பக்கத்து மாநிலங்களோட சண்டை போட வைக்காத ஒரே நதி தாமிரபரணிதான். பொதிகை மலையில உற்பத்தியாகும் இந்த நதிதான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களோட தாகத்தைத் தீர்த்து, பசுமையைக் கொழிக்க வைக்குது.
இந்த தண்ணியில தாமிரச்சத்து கலந்திருக்கிறதால, இந்த நதிக்கு தாமிரபரணினு காரணப் பெயர் வந்திருக்கும்னு சொல்றாங்க. அதாவது, பொதிகை மலை உச்சியில பூங்குளம்ங்கிற இடத்துல இருந்துதான், தாமிரபரணி நதி உற்பத்தியாகுது. தாமிரபரணி உற்பத்தியாகி வர்ற வழியில சில மரங்களோட இலைகள்லயும், பாறைகள்லயும், தாமிரச்சத்து இருக்கிறதாவும், அந்தச் சத்து தண்ணியோட கலந்து வருதுனும் சொல்றதுண்டு. அறிவியல்பூர்வமாவே, இந்த தண்ணியில தாமிரச்சத்து இருக்குனு கண்டுபுடிச்சிரு
க்காங்க. 

தாமிரபரணி தண்ணி எல்லா வகைக் காய்ச்சல், பித்ததோஷம், கண்புகைச்சல், உள்சுரம், சுவாச ரோகம், கக்குவான், என்புருக்கி, கை, கால் எரிச்சல், மிகுந்த நீர்வேட்கை ஆகிய நோய்களைத் தீர்க்கும்.

#தாமிரபரணி ஆறு, மலையில இருந்து, இறங்கி பாபநாசம் வழியா நடந்து, தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் பகுதியில கடல்ல கலக்குது. இந்தக் காலத்துல பல விதமான ரசாயன கழிவுகள் கலந்துதான், தாமிரபரணி கடலுக்குள்ள போய் சேருது. குறைஞ்சபட்சம் பாபநாசம் வரையிலும், வேணும்னா தண்ணி தூய்மையா இருக்கலாம். அதுக்கும் கீழ இறங்க, இறங்க தண்ணியோட தரம் மாறி, உருமாறிடுது. தாமிரபரணியில வெள்ளப்பெருக்கு உருவாகி, கடல் தண்ணியில கலந்தாதான், சுத்துப்பட்டுல நல்ல மழையும், கடலுக்குள்ள மீன் வளமும் பெருகும். நன்னீர் கடல்ல, கலக்குற பகுதிகளிலிருந்துதான் மேகங்கள் அதிகமான தண்ணீரை உறிஞ்சி மழையைக் கொடுக்குது. நன்னீர் இருக்கிற பகுதியிலதான், பல வகையான மீன்கள் உற்பத்தியாகி பெருகி வளருது. ஆக, இனிமேல் கடல்ல வெள்ள நீர் வீணா கலந்துடுச்சுனு சொல்லாதீங்க.

சரி, தாமிரபரணிக்கு வருவோம். அந்தக் காலத்திலிருந்தே, தாமிரபரணி வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்கு. பொதிகை மலையில மழை பெஞ்சி, திடீர்னு வெள்ளம் வர்ற செய்தி திருநெல்வேலியில இருக்கிறவங்களுக்கு எப்படி தெரியும்?
தாமிரபரணியில நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல்பூர்வமா தெரிஞ்சுக்கிட்டாங்க. அதுக்குப் பேரு, சங்குக் கல்மண்டபம். தாமிரபரணி ஆத்து மையத்தில சங்குக் கல்மண்டபம் அமைச்சிருந்தாங்க. மூணு பக்கம் திறந்தவெளியாகவும், தண்ணி வர்ற எதிர்ப்பக்கம் மட்டும் கற்சுவராலயும் அடைக்கப்பட்ட மண்டபம் அது. மண்டபம் உச்சியில சங்கு மாதிரி ஒரு அமைப்பு இருக்கும். ஆத்துல வெள்ளம் வரும்போது, அந்த மண்டபத்துக்குள்ள குறிப்பிட்ட அளவுக்கு மேல நீர்மட்டம் உயர்ந்தா, வெள்ளத்தோட இரைச்சலால் காத்து உந்தி தள்ளி, அந்த சங்கு சத்தமாக ஊதும். இதுதான் வெள்ளம் பற்றிய அறிவிப்பு. இதன் மூலமா, சுற்று வட்டார மக்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயிடுவாங்க.
நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகும். சங்கு சத்தம் குறைஞ்சதுனா, வெள்ளம் வடிஞ்சிருச்சுனு அர்த்தம். சங்குச் சத்தம் குறைஞ்ச பிறகு, கரையோர மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு வந்துடுவாங்க.
ஒரு காலத்துல பாபநாசம் தொடங்கி, கடல்ல சங்கமம் ஆகிற வரையிலும், குறிப்பிட்ட தூரத்துக்கு தாமிரபரணியில ஒரு சங்கு மண்டபம் இருந்திருக்கு. அதுக்கு சாட்சியா, தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி (வைணவ ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த ஊர்)யில, தாமிரபரணிக் கரையில இன்னும் சங்கு மண்டபம் நின்னுக்கிட்டிருக்கு. பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே, வெள்ளம் வந்தா தப்பிக்கிறதுக்கு, முன்னறிவிப்பு சொன்ன, சங்கு மண்டபம் மட்டும் வெளிநாட்டுல இருந்திருந்தா, இந்நேரம் உலக பாரம்பர்ய சின்னமா அறிவிச்சிருப்பாங்க.

water issue

மகாராஷட்டிரா, கோவா, பெங்களூரு இடையில் மகதாயி #நீர் பிரிப்பு நீண்ட கால பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடாகவுக்கு தண்ணீர் பெறும் உரிமை இல்லை தீர்ப்பாயம் என தீர்ப்பளித்துள்ளது. ...
#waterissue

Morocco..

"Morocco provided for an abundance of cultural and societal interactions, all of which resulted in breathtaking photo opportunities. Yet with the hustle and bustle of Morocco's many cities and tourist attractions, few experiences allowed for introspection and a moment of calm to reflect like when in the Sahara.  T.E. Lawrence, of Lawrence of Arabia fame, said that "this creed of the desert seemed inexpressible in words, and indeed in thought." Encountering the desert brought a new level of appreciation for the unique opportunity to learn and travel with 16 other Yalies, and emphasized the captivating nature of such an environment."

Photo by Azad Amanat (SC '14) during Summer 2014 in #Merzouga, #Morocco

Refugees

OnThisDay 65 years ago the United Nations Refugee Convention was signed. 

In 1951, today, and always, we stand .

http://trib.al/smemgcs

தமிழகத்திற்குரியதலைநகரமாக்க ....

#சென்னை நகரைத் #தமிழகத்திற்குரியதலைநகரமாக்க (1956),சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் 
அனைத்துக் கட்சித் தலைவர்களும் திரு.ஜி.உமாபதி இல்லத்தில் கூடிய காட்சி.
இதில் அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி,நாவலர்,இரா.நெடுஞ்செழியன்,சி.பா.ஆதித்தனர், ப.ஜீவானந்தம்,என்.வி.நடராசன்,ஒளவை சண்முகம், எச்.டி.ராஜா,பாவேந்தர் பாரதிதாசன், எல்லைப்போராட்ட வீரர் கே.விநாயகம்,பிரபல எழுத்தாளர் நாரண்.துரைக்கண்ணன், பொதட்டூர்ப்பேட்டை ஈ.எஸ்.தியாகராஜன், தமிழ்வேள் பி.டி.ராஜன் ஆகியொரும் திரு.ஜி.உமாபதியும் உள்ளனர்

Discussion held in Ji.Umbathy's house under the leadership of Ma.Po.Si regarding movement to retain #chennai in TamilNadu and make it the state capital.
In The Pic:Arignar Anna,Silambu selvar Ma.Po.Si,Navalar Nedunchezhian,Si.Pa.Aathithanaar,Pa.Jeevanantham,N.V.Natarajan,Ovvai Shanmugan,H.D.Raja,Paventhar Bharathidasan,K.Vinayagam,Writer Naran,Thuraikannan,E.S.Thiagarajan,P.T.Rajan,

இராமா காவியம்

இராமா காவியம் ...
கைகேயியின் தியாகம்...!
.
தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.

இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தான் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ஸ்ரீஇராமரால் அனுப்பப்பட்டார்.

அவரும் நந்திகிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு, பரதனிடம், “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். பரதனும், “ஸ்ரீஇராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ.” எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். “ஸ்ரீஇராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லக்ஷ்மணனையும், என் தம்பி சத்ருக்னனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர்.” எனக் காட்டினான் பரதன். அவளையும் வணங்கிய பின்னரும், வெளிப்படையாக, “உன்னைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார் அனுமன்.

துணுக்குற்ற பரதன், “அவள் மஹாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே! என நான் வருந்தாத நாளில்லை. அவளுக்கு நீங்கள் ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?” எனக் கேட்டான். அப்போது அனுமன் பின்வருமாறு பிறர் அறியாத கைகேயியின் பெருமைகளைக் கூறினார்.

“பரதா! நீயோ இந்த உலகமோ அவளை அறிந்து கொண்ட லக்ஷணம் இவ்வளவுதான். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா?
தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகளிலும் உயிரோட்டத்தை உணர்ச்சிகளைக் கண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவன் தசரதன் உத்யானவனத்தில் இருந்தபோது, தளதளவெனப் பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான். ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி, “தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய்.”

பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷிகுமாரனான சிரவணன் குடுவையில் தன் தாய் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள, அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால், “உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய்” என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார்.

தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.

தசரதர் இராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து, தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி, குறித்த முகூர்த்தத்தின் பின்விளைவுகளை, பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.

அந்த முகூர்த்தப்படி இராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால், ராஜ்யபாரத்தில் இராமன் அன்று அமர்ந்திருந்தால் அதுவே அவனது ஆயுளை முடிந்திருக்கும். புத்ரசோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ரசோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும்போது, அது இராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு வைதவ்யம் வந்துவிடும் என்று தெரிந்திருந்தும் ஸ்ரீஇராமனின் உயிரைக் காப்பாற்ற நிச்சயித்தாள் உன் அன்னை.

அந்தக் கணத்தில் அரணாக இருப்பவன் உயிர் நீப்பது இராஜ்யத்தின் ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள். அப்போது கூட அவள் கேட்க விரும்பியது பதினான்கு நாள்கள் வனவாசம். வாய்தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம்கூட இராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகிவிட்டது.

எந்தப் பெண் தன் சௌமங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து மாற்றான் மகனைக் காப்பாள்? இராமனிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான் அத்தகைய வரத்தைக் கேட்டாள். ஒருகால் நீ ஏற்றால் ஸ்ரீஇராமனின் உயிர் காக்க உன்னையும் இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் மஹா தியாகி. அவளால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ஸ்ரீஇராமனின் தரிசனம் கிட்டியது. கர-தூஷணர் முதலாக இராவணன் வரை பல ராக்ஷஸர்களின் வதமும் நிகழ்ந்தது. அந்த புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்கவேண்டும்” என்றார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவம் புரிந்தது.
இராமாயணத்தில் தன்னலம் அற்ற இன்னொரு மங்கையும் திரை மறைவில் உண்டு.
.
ஸ்ரீஇராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பி விட்டனர். அவர்களுக்குச் சேவை செய்ய லக்ஷ்மணரும் கிளம்பிவிட்டார். கிளம்பியவர் தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக்கொள்ள அவளது அந்தப்புரத்துக்குச் சென்றார்.
தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியுமாதலால், இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால், தன் நினைவும் விரகதாபமும் அவரை சரிவர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள்.

ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ளவேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லக்ஷ்மணனை வரவேற்கத் தயாரானாள். லக்ஷ்மணன் வந்து கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன், “தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர உங்களை அல்லவே? நீங்கள் ஏன் கஷ்டப்படவேண்டும்? அண்ணிதான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர்பின் போகிறாள். நானாக இருந்தால் அதுகூட போகமாட்டேன். வாருங்கள் என்னுடன்; நாம் மிதிலைக்குப் போய் சௌக்கியமாக வாழலாம்.” என்றாள்.
லக்ஷ்மணன் கோபத்துடன், “நீ இவ்வளவு மோசமானவளா? நீ வரவேண்டாம்; என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு; என் அண்ணனுடனும், அண்ணியுடனும், நான் போகிறேன்.” என்றான்.

“உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன்.” என்றாள் சிரித்துக்கொண்டே ஊர்மிளை. “அப்படியே ஆகட்டும்.” எனக் கூறிச்சென்ற லக்ஷ்மணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காது இராமனுக்குச் சேவை செய்ய முடிந்தது. ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லக்ஷ்மணனை வாட்டவில்லை. இராம பட்டாபிஷேகம் முடிந்தபிறகு சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லக்ஷ்மணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை எப்போதையும் விட அதிகமாக நேசித்தான்.

இதேபோல லக்ஷ்மணனை ஊர்மிளை வேறொரு கோணத்தில் அறிந்து கொள்ள சீதையே வழிசெய்தாள். பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஒரு நாள் தன் கால் கொலுசுகளை ஊர்மிளைக்குப் பரிசாக அளித்தாள். அன்றிரவு அவளின் அந்தப்புரத்துக்கு வந்த லக்ஷ்மணனின் பார்வையில் அந்தக் கொலுசுகள்தான் முதலில் பட்டன. தினமும் சீதையின் கால்களை மட்டுமே வணங்கி வந்துள்ள லக்ஷ்மணன் சீதையே தன்முன் நிற்பதாகக் கருதி அவள் கால்களில் விழுந்து வணங்கினான். துணுக்குற்றுப் பின்வாங்கிய ஊர்மிளை உண்மையைக் கூற, அவளைக் கடிந்து அந்தக் கொலுசுகளை உடனே அண்ணிக்குத் திருப்பித்தரப் பணித்தான் லக்ஷ்மணன். அதைப் பெற்றுக் கொண்ட சீதை வேறோர் உயர்ந்த கொலுசை அவளுக்குப் பரிசளித்து லக்ஷ்மணன் தன்னிடம் கொண்ட பக்தியை விளக்கவே அவ்வாறு தான்செய்ததாகக் கூறினாள்.

இந்த உலகில் எதையும் ஆராயாது நம்பக் கூடாது என்பதை இந்த நிகழ்ச்சி விளக்குகிறது.

ஞானகூத்தன்

ஞானக்கூத்தனுக்கு இறுதிவிடை கொடுத்துவிட்டு சற்றுமுன் திரும்பினேன். ஞானக்கூத்தன் வீட்டின் முன் பிரபஞ்சன் உட்பட பத்துப்பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்தார்கள். எனக்கு பாரதி இறுதி ஊர்வல காட்சி நினைவுக்கு வந்தது. ஞானக்கூத்தன் வீடிருந்த ஈஸ்வர லால்  தெருமுனையில் உச்சிவெய்யிலில் நின்றுகொண்டிருந்தபோது யாரோ மைக்கை நீட்டி ' ஞானக்கூத்தனை பற்றி சொல்லுங்கள்" என்றார். என் குரல் உடைந்தது - Pudu elathu Manonmani 
------------------------------------------------
நவீன தமிழ் கவிதைகளின் முன்னோடி ஞானகூத்தன் சென்னையில் காலமானார் அவருக்கு வயது 78.

சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்த ஞானகூத்தனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.நேற்று அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மயிலாடுதுறை அருகே உள்ள திரு இந்தளூரில் பிறந்த ஞானகூத்தன் பொதுப்பணிதுறை அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் தமிழின் மீது கொண்ட பற்றால் விருப்பு ஓய்வு பெற்று தமிழ் கவிதை தொகுப்புகள் , ஆய்வு கட்டுரை உள்ளிட்டவைகளை எழுதினார். 
               ------------

...திடுக்கிட்டுத் திடுக்கிட்டு நகர்ந்த முள்
ரயிலின் புறப்பாட்டு நேரத்தைத் தொட்டது.
சென்ட்ரல் ஸ்டேஷன் ரயில் நிலையத்தில்
சிந்திய எனது கண்ணீர் உன்னை மறைக்கிறது.
இரயிலின் கடைசிப்பெட்டியின் பின்புறம் போல்
சோகம் தருவது உலகில் வேறேது?
- ஞானக்கூத்தன்
         ---------------------

Wednesday, July 27, 2016

University of Oxford,

Oxford University:
-----------------
Theo Silkstone Carter (St Edmund Hall, University of Oxford, 2011) has made a beautiful #Oxford video using drone technology:

http://www.oxfordtoday.ox.ac.uk/culture/videos-podcasts-galleries/air-dreaming-spires-seen-drone

Herbert Macaulay-Nigeria

Herbert Macaulay
During the 1920s, a period in Nigerian history associated with the beginning of political agitation for self-rule, Macaulay became a leading figure in the first generation of Nigerian Nationalists. In 1921, Macaulay passionately led protests in Lagos over water rates, land issues, and mishandling of the railway finances. In 1922, he helped a Lagos chief in his legal battle with the colonial government who had forcefully taken some of his land for government purposes. The highest court in England heard the case and returned the land to the chief. This victory inspired Macaulay to establish in 1923 Nigeria’s first political party, the Nigerian National Democratic Party whose members were the first to sit in the Legislative Council.
The Nigerian National Democratic Party dominated Nigerian politics throughout the 1920s until the late 1930s. However in 1934, the NNDP lost its dominant position to newly organized student groups such as the Nigerian Youth Movement. In order to avoid the demise of the party, Macaulay’s NNDP joined forces with the Nigerian Youth Movement to form the National Council of Nigeria and the Cameroons, NCNC. The NCNC led by Macaulay was not a political party, it was a nationalist organization designed to advocate for an independent #Nigeria. #HerbertMacaulay did not live to see the attainment of independence in 1960. He died in Lagos at the age of 81 on May 7, 1946.

காலிங்கராயன்வாய்க்கால்

காலிங்கராயன் வாய்க்கால்;
 

(மேலே பாலம் அமைத்து ஓடிக்கொண்டிருப்பது காலிங்கராயன் வாய்க்கால்;கீழே இயற்கையாக ஓடும் ஓடை)

ஈரோடையில், காலிங்கராயன் என்ற ஆட்சியாளரால் 730 ஆண்டுகளுக்கு முன்பாக பவானி ஆற்றிலிருந்து நொய்யல் ஆறு வரை ஒரு கால்வாயினை வெட்டினார்.இதனால் இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளும் வேளாண்மையால் செழித்தது.இக்கால்வாயினை வெட்டும்போது,இக்கால்வாயானது ஓடையினை குறுக்காக கடக்கவேண்டிய நிலையேற்பட்டது.அதற்காக  இக்கால்வாய் செல்ல ஓடையின் குறுக்காக பாலம் அமைத்து கொண்டு செல்லப்பட்டது.

தற்போது மேல பேருந்து பாலமும்,கீழே ரயில் பாதையும்  இருப்பது போன்று  #காலிங்கராயன்வாய்க்கால் மேலாகவும்,இயற்கையில் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை அதன் வழியிலும் எந்த இடையூறும் இன்றி ஓடிக்கொண்டிருக்கிறது.

INAUGURATION of TV in MADRAS

INAUGURATION of TV in MADRAS..year 1975...!!!

Invitees viewing the inauguration of TV in Madras as Tamil Nadu Governor K.K. Shah, on the television sets installed at the special shamiana adjoining the Television Centre's studios on August 15, 1975. —PHOTO: THE HINDU ARCHIVES

சேலம் இரும்பாலைத் திட்டம்

தலைவர் கலைஞர்  அறிக்கை சேலம் இரும்பாலை சிதறிவிடாமல் காப்பாற்றப்பட வேண்டும்!
-------------------------------------
*சேலம் இரும்பாலைத் திட்டமும், சேதுக் கால்வாய்த் திட்டமும் நிறைவேற்றப்பட வேண்டுமென பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் 1967 ஜூலை 23 ஆம் நாளில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்வகையில் தமிழகம் முழுவதும் ‘எழுச்சிநாள்’ கடைப்பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணா அவர்கள் மறைவுக்குப் பின் நான் முதல்வராக இருந்த போது, 21-3-1970 அன்று டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சேலம் உருக்காலைத் திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு இல்லாவிட்டால், ஐந்தாண்டுத் திட்ட வரைவையே தமிழ்நாடு ஏற்றுக் கொள்ள முடியாது என்று பேசினேன். அதன் விளைவாகத் தான் 17-4-1970 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா காந்தி தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, நான்காம் அய்ந்தாண்டுத் திட்டத்திலேயே சேலம் உருக்கு ஆலை துவக்கப்படும் என்று அறிவித்தார். அதே ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் உருக்கு ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா என் தலைமையில் நடைபெற்று, பிரதமர் இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். முதலில் உருட்டாலையாகத் தொடங்கப்பட்டு இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் புகழ் பெருக்கி நிற்கிறது. இதில், 300 அதிகாரிகள், 1000 நிரந்தரப் பணியாளர்கள், கூட்டுறவு சங்கம் மூலம் பணியாற்று பவர்கள் 350 பேர், 500 ஒப்பந்தப் பணியாளர் என 2,500க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், இந்த உருக்காலை மூலம் மறைமுக வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். 

இங்கே கார்பன், மற்றும் சாதாரண ஸ்டீல், சுருள், நாணயவில்லை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆகிய பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ரெயில் பெட்டித் தொழிற்சாலைக்கு மட்டும், ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அளவுக்கு வளர்ந்து வரும் சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்கும் முயற்சி தொடங்கியிருப்பதாக வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சேலம் உருக்காலை, தொடக்கம் முதல் லாபகரமாக இயங்கி வருகின்றது. 2003ஆம் ஆண்டு முதல் 2010வரை ஆண்டுக்கு சராசரியாக 100 கோடி ரூபாய் இலாபம் ஈட்டித் தந்துள்ளது. அதற்குப் பிறகு 2 ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவில் அங்கே ஒரு எஃகு உற்பத்திக் கூடம் அமைத்ததால், உருக்காலையின் கடன் சுமை அதிகமானது. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை இலாபத்தில் இயங்கி வந்த உருக்காலை, தற்போது இழப்பில் இயங்குவதாகக் கூறி, தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான முயற்சி நடைபெறுவதாகச் செய்திகள் வருகின்றன. சேலம் உருக்காலையை தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மத்திய விற்பனை மையம் கொல்கத்தா விற்கு மாற்றம் செய்யப்பட்டதால், உருக்காலையின் வாடிக்கையாளர்கள் பலர் குறைந்து விட்டார்களாம். இதைக் காரணமாகக் காட்டி, தனியாரிடம் இந்த உருக்காலையை ஒப்படைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடாமல், நிர்வாகத் திறமை மிக்க நபர்களை பணியமர்த்த வேண்டும். தனியாக மின் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ரூ. 7.70 காசுகள் வரை செலவு ஏற்படும். ஆனால் உருக்காலையில் 4 ரூபாய்க்கு ஒரு யூனிட் உற்பத்தி செய்யலாம். இங்கு 120 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றை நிறைவேற்றினால், 60 மெகாவாட் உருக்காலைக்கும், 60 மெகாவாட் தமிழ்நாடு மின்சார வாரியத் திற்கும் கிடைக்கும். ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை சேலத்தில் தொடங்கலாம். 

தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் இது போன்ற பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்க்காமல் முயற்சி மேற்கொண்டது. எனவே தமிழக அ.தி.மு.க. ஆட்சியினர், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாயிற்றே என்று எண்ணாமல், #சேலம்உருக்காலையைத் தனியாருக்குத் தாரை வார்க்கின்ற முயற்சிக்கு முட்டுக் கட்டை போடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கிட வேண்டுமென்றும், மத்திய அரசும் தமிழகத்தின் நலன் கருதியும், ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை எண்ணிப் பார்த்தும், இந்தப் பொதுத் துறை நிறுவனத்தின் மீது கை வைக்காமல் இருக்க வேண்டு மென்றும் வலியுறுத்துகிறேன்.

மாற்றங்கள்.,.

வரலாற்று உணர்வு என்பது என்ன? மாற்றங்களை குறித்த பிரக்ஞை மற்றும் தர்க்கம். எந்த ஒரு விஷயத்திற்கும் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் ஒரே அர்த்தம் இருக்க முடியாது. இன்றைய நிலையில் ஒரு விஷயத்திற்கான அர்த்தம் என்ன, அது எப்படி உருவாகி வந்தது, எவ்வகையில் எல்லாம் மாறி வந்துள்ளது எனபதை புரிந்துகொள்வதே வரலாற்று உணர்வு. வர்த்தகம் என்றால் பண்டமாற்றிலிருந்து காட் ஒப்பந்தம் வரை அது ஒன்றேதான் என்று நினைத்தால் ஒருவருக்கு வரலாற்று உணர்வு சுத்தமாக இல்லை என்பது பொருள். அதே போல இன்றைய மதிப்பீடுகளும் எல்லா காலத்திலும் இருந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் யோசிப்பது தவறு. சாக்ரடீஸ் எவ்வளவு பெரிய அயோக்கியப்பயல், அடிமைகளெல்லாம் ஊழியம் செய்துகொண்டிருப்பதை பற்றி கவலைப்படாமல் தத்துவம் பேசிக்கொண்டிருந்தான் என்று சொல்வதில் பொருளில்லை. இந்த இடத்தில்தான் விமர்சனம், மதிப்பீடு, கண்டனம், நிராகரிப்பு ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். வரலாற்று நிகழ்வுகளுக்கு காரண காரிய தொடர்ச்சி இருக்கிறது என்று நம்புபவர்கள் கூட, ஒன்றுக்கு மேற்பட்ட காரண காரிய தொடர்ச்சிகளின் ஊடுபாவாகவும் அத்துடன் தற்செயல் என்ற புதிரான அம்சமும் சேர்ந்துதான் ஒரு நிகழ்வு ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றியபோது எழுதப்பட்ட வாசகங்கள்தான் இன்றைக்கு தீவரவாதம் அந்த மதத்தில் உருவாகக் காரணம் என்று அபாண்டமாக கூறுவது, பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் மார்க்ஸ் உருவாக்கிய வர்க்க போராட்டம் என்ற கருத்தாக்கம்தான் இருபதாம் நூற்றாண்டு கம்போடியாவில் போல்பாட் கொலைக்களங்களை உருவாக்கக் காரணம் என்று அடித்துவிடுவது போன்ற போக்குகளுக்கெல்லாம் அறியாமை என்பதற்கு மேல் அறிவுலகில் எந்த மதிப்பும் கிடையாது. அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய நூலின்றி கோட்டி கொளல் என்ற வள்ளுவர் வாக்கைத்தான் நினைவுகூற முடியும்.

தஞ்சை பெரிய கோவில்

WOMEN rights

WHY ALL WOMEN SHOULD BE CELEBRATING THIS EXTRAORDINARY MOMENT IN AMERICAN HISTORY TODAY
168 years ago in 1848, a brave group of women gathered together in Seneca Falls, New York to form the first movement of women fighting for equal rights. For thousands of years before, women had been treated as second class citizens,  denied the freedoms that men had, unable to have a voice in how they were governed, to own property, and to live dignified, empowered lives. 
Now, the women in America rose up to demand their rights.
 They took to the streets and marched. They refused to have their voices silenced. 
Their daughters and granddaughters continued the battle into the 20th century.They were humiliated, bullied, insulted, beaten and jailed--just for insisting that they be treated equally, just for asking that they be afforded the same rights as men.
Finally, in 1917, the first women were given the right to vote, and began the long, slow, and difficult journey towards equality, still opposed-even today- by so many men who could not conceive of or stomach a female in power, or making as much money as they did, or achieving what they had, or greater.
Tonight, the blood, sweat, tears and sacrifice of those unnamed women who first marched for our freedom comes to new fruition, almost a century after we were given the right to vote,  as the first woman in history, Hillary Clinton, is nominated to be a party's nominee for President of the United States. 
Whatever your politics, I hope you are proud of our country, of women and men everywhere who have fought for equality, and how far we have come in the past few hundreds years. 
Now your daughters and granddaughters can dream another dream--that they, too, could grow up to be President. Now girls all over the world who are still enslaved with no rights can look to America and see a female face of love, compassion and leadership. 
I pray for the sake of our future and the dignity of our democracy that Hillary Clinton becomes our next president, and the first female president. However, even if that was not my choice, my eyes would still be overflowing with the same tears. 
I have fought my whole life for my own equality and the rights of women, and I thank God that I am alive to see this historic moment in the history of the human race and of this great country.
Thank you for listening, and for passing this on to as many people as you can.

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...