Sunday, July 17, 2016

துருக்கி-Turkey

வரலாற்றில் அரிய தாக்கங்களை ஏற்படுத்திய வளமிக்க தேசம் என்ற பெருமை துருக்கிக்கு உண்டு . கடந்த 75 ஆண்டுகளில் மேற்கத்திய அடிமைகள் அந்நாட்டின் எழில்மிகு வரலாற்றை சேதப்படுத்தி , பாரம்பரிய உணர்வுகளுக்கு விரோதமாக ஆட்சி நடத்தி வந்தனர் . 

#துருக்கியின் இழந்த பெருமையை மீட்டு ; துருக்கியை சர்வதேச அரங்கில் உயர்த்திய பெருமை எழுச்சித் தலைவர் #ரஜப்_தையிப்_எர்துகானை சேரும் !

மக்களால் நேரடியாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான ஆட்சியை நடத்திவரும் அவர் , அமெரிக்க – இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார் . 

அவருக்கு எதிராக நள்ளிரவில் இராணுவ சதிப்புரட்சி திடீரென நடைபெற்றது அதிர்ச்சியளிக்கிறது . இதற்கு பின்னால் சர்வதேச சதி இருக்கிறது என்பதில் ஐயமில்லை . 

இராணுவத்தில் ஒரு பிரிவினர் நடத்தியிருக்கும் இச்சதி மக்கள் ஆதரவோடு முறியடிக்கப்பட்டிருக்கிறது ஆறுதல் அளிக்கிறது . 

இதுபோன்ற தீய சக்திகளுக்கு எதிராக , சர்வதேச சமூகம் தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும்

ராணுவத்தின் ஒரு பிரிவு நடத்திய சதிப்புரட்சிக்கு எதிராக, துருக்கி போலிசார் அரச விசுவாசத்தோடு நடத்திய துணிகர நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.

துருக்கி மக்கள் அதிபர் எர்துகானின் வேண்டுகோளை ஏற்று, சாலைகளில்  இறங்கி உண்மையான புரட்சியை நடத்திவிட்டனர்.

ஆயுதமற்று, ஆவேசத்துடன் கிளர்ந்து எழுந்த துருக்கி மக்களுக்கு  முன்பு, ஆயுதம் தரித்த துருக்கி ராணுவத்தினர் கைகளை உயர்த்தி சரண் அடைந்தது இதுவரை உலகம் காணாதது. தோட்டாக்களால் மக்களின் உணர்வுகளை நசிக்கிவிட முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ராணுவ டாங்கிகளுக்கு முன்னால்,மக்கள் நெஞ்சை நிமிர்த்தி மோதி நின்ற காட்சிகள் , பாலஸ்தீன போராட்டத்தை கண் முன் நிறுத்துகின்றன.முன்பு சீனாவில் தியான்மென் சதுக்கத்தில், சீன படைக்கு எதிராக மாணவர்கள் இவ்வாறுதான் போராடினார்கள்.

அதிபர் எர்துகானின் மீது துருக்கி மக்கள் வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பு, உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
ராணுவ சதி புரட்சியை அடக்கிய மகிழ்ச்சியில் மக்கள் துருக்கி வீதிகளில் வெளிப்படுத்தும் கொண்டாட்டங்கள் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

இனி உள் நாட்டு அரசியலிலும், உலக அரசியலிலும் துருக்கி  துணிச்சலான பல முடிவுகளை எடுப்பதற்கு இந்நிகழ்வு எர்துகானுக்கு புதிய சக்தியை தந்திருக்கிறது.

..............................................................
17/07/2016துருக்கியில் தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் உள்பட மொத்தம் 265 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிபர் அலுவலகம் அறிவித்திருக்கிறது.
கொல்லப்பட்டோரில் 104 பேர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள்.
ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு துவங்கிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் துருக்கியின் நான்கு முக்கிய அரசியல் பிரிவுகளும் திட்டமிடப்பட்ட இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
அவர்களின் இந்த கூட்டு நிலைப்பாடு துருக்கியின் ஜனநாயகத்திற்கு மதிப்பிட முடியாதது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
துருக்கியின் நாடாளுமன்ற கட்டடமும் டாங்கிளாலும், விமானங்களாலும் வெள்ளிக்கிழமை இரவில் தாக்குதலுக்குள்ளானது.
இந்த அதிரடி புரட்சி முயற்சியை தேசத் துரோக நடவடிக்கை என்று துருக்கி அதிபர் ரசீப் தையிப் எர்துவான் சாடியுள்ளார்.
மக்களை வீதியில் இறங்கி போராட தன்னுடைய டுவிட்டர் சமூக வலைத்தளம் மூலம் அவர் அழைப்பு விடுத்தார்.
அவருடைய அழைப்பை ஏற்ற பொது மக்களும் வீதிகளில் திரண்டு இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்துள்ளனர்.
இது துருக்கியின் ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு கறுப்பு கறை என்று துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் விவரித்துள்ளார்.
நாட்டின் விடுதலைக்காக 161 பொதுமக்கள் இறந்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து ராணுவத்தின் டாங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்களை கைப்பற்றிய துருக்கி ராணுவத்தை சேர்ந்த 3,000 பேரை தடுத்து வைத்துள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அமைதியின்மைக்கு ஃபாதுல்லா ஹியூலென் என்ற மதபோதகரை குறித்துகாட்டும் இணை அமைப்பு தான் காரணம் என்று துருக்கி அதிபர் எர்துவான் குற்றம் சுமத்தியுள்ளார்.
துருக்கியை விட்டு வெளியேறி பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் மத போதகரான ஹியூலென், துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கும் தனக்கும் எவ்விதப் பங்கும் இல்லை என்று மறுத்துள்ளார்.
75 வயதான அவர் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை கடுமையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துருக்கி ராணுவ ஹெலிகாப்டரில் கிரேக்க நாட்டிற்குள் நுழைந்த 8 பேரை கைது செய்திருப்பதாக அந்நாடு தற்போது தெரிவித்துள்ளது.
அங்கு அரசியல் தஞ்ச கோரிக்கை வைத்துள்ள எட்டு பேரையும் துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி கோரப்போவதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவு அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்ததை அடுத்து, நாட்டை அமைதிக் கவுன்சில் ஒன்று வழிநடத்துவதாகவும், நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவும் ராணுவச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.Israel reacted tersely to a thwarted coup in Turkey, saying it expected a new reconciliation deal between the two regional powers following a six-year rift to be implemented as planned.

Violence erupted in Turkey late on Friday after the start of the Jewish Sabbath, when most government business officially takes a break.

This allowed Prime Minister Benjamin Netanyahu time to consider his response on the move against Turkish President Tayyip Erdogan, long a critic of Israeli policies but now a key player in the rapprochement with Israel.

No comments:

Post a Comment

#செண்பகவல்லிதடுப்புஅணைசீர்அமைப்பு கோரிக்கை , தென்மலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் (இன்று , 10-7-2025 காலை முதல் நடக்கும்) பங்கேற்று உரையாற்றிகிறேன். அனைவரும் வருக! •••• ச.பென்னிகுயிக் பாலசிங்கத்தின் பதிவு (ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்) *செண்பகவல்லி கால்வாய்---தாகம் தீர்க்குமா...!!!* 60 ஆண்டு காலங்களுக்கு மேலாக செண்பகவல்லி கால்வாய் தண்ணீருக்காக காத்துக் கிடக்கிறது தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள். மானாவாரி காடுகளுக்கு பெயர் பெற்ற கரிசல் காடுகளினூடாக ஏழெட்டு தலைமுறைகளாக பாய்ந்தோடி வந்த செண்பகவல்லி கால்வாய்த் தண்ணீர்,வேறு வழியேயின்றி இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 1965 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட நாளில் தொடங்கிய,விவசாயிகளின் போராட்டங்கள் இன்று வரை ஓயல்லை. இயல்பாகவே உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல,அது எந்த நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்தாலும் அதை ஒருபோதும் மதித்து நடைமுறைப்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு கேரளாவின் மீது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வரக்கூடிய குற்றச்சாட்டாகும். அது முல்லைப் பெரியாறாக இருக்கட்டும், பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, மலம்புழா, நெய்யாற்றின்கரை அணை என எல்லாவற்றிலும் அவர்களுடைய ஆதிக்கம் சுதந்திரத்திற்கு பின்னால் கொடிகட்டிப் பறக்கிறது. 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, இன்னமும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்திலுள்ள பரணில் தூங்கிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். அந்த அடிப்படையில் தான் அது செண்பகவல்லி கால்வாயியையும் அணுகுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 40 ஆண்டு காலம் தொடர் சட்டப் போராட்டங்கள் நடத்தியும்கூட முல்லைப் பெரியாறு அணையில் அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறோம் ஐந்து மாவட்ட விவசாயிகள். ஒருவேளை செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழ்நாடு உரிமை கோருமோ என்கிற கவலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கோட்டமலை டிவிசன், மணலாறு டிவிஷன், மாவடி மற்றும் சுந்தரமலை டிவிஷன்களை பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிசனாக அறிவித்தது கேரள மாநில அரசு. சிவகிரியையொட்டி இருக்கும் இந்த சுந்தரமலை டிவிசன்தான், செண்பகவல்லி கால்வாயின் மையப் பகுதியாகும். அது இன்றைக்கு ஒரு புலிகள் காப்பகத்தின் அங்கமாக அறிவிப்பு செய்யப்பட்டு, வாசுதேவநல்லூர் அருகே இருக்கும் தரணி சர்க்கரை ஆலையிலிருந்து தலையணை செல்லும் வழியில் நிறுவனமயமாக்கப்பட்டிருப்பதும் நிதர்சனமான உண்மை. கிட்டத்தட்ட 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட பெரியார் புலிகள் காப்பகத்தில், செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கிழக்கு டிவிஷன் மட்டும் சுமார் 620 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. கொடுமை என்னவென்றால் இவையெல்லாம் முறையாக 1956 மொழிவழிப் பிரிவினையின் போது அளவீடு செய்யப்படாத பகுதிகளாகும். செண்பகவல்லி கால்வாய் இருக்கும் பகுதி தற்போது புலிகள் காப்பகத்தின் ஒரு அங்கம் என்கிற நிலையில் மறுபடியும் அதற்குள் சென்று நம்மால் கால்வாயை சீரமைக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. உலகமெல்லாம் நடக்கும் போர் அத்துமீறல்களால் கான்கிரீட் கட்டிடங்கள் எல்லாம் உடைந்து சிதறும் நிலையில், கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் பாசனப்பரப்புக்காக நாம் சீரமைக்கச் சொல்வது மொத்தமுள்ள 1603 மீட்டரில், வெறும் 400 மீட்டர் நீள கட்டுமானம் மட்டுமே. தென்காசி மாவட்டத்தில், மேற்குப் பகுதியில் மட்டும் செழித்துக் கிடக்கும் வாசுதேவநல்லூரை உள்ளடக்கிய சிவகிரி தாலுகா, எப்போதும் வறண்டு கிடக்கும் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகாக்கள்... விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சாத்தூர் தாலுகாக்கள்... எப்போதும் வறண்டு கிடக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்கள்... என செழித்து கிடக்கும் மக்கள் தொகையும், பரப்பளவும் எதிர்காலத்தை நினைத்து பயந்து கிடக்கிறது. நிலத்தடி நீரே குதிரைக் கொம்பாகியிருக்கும் காலகட்டத்தில், செண்பகவல்லி கால்வாய் தண்ணீர் மறுபடியும் பாய்ந்தோடி வந்தால் அத்தனை ஊரும் கூமாபட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கேரளா இந்த செண்பகவல்லி கால்வாய் உடைப்பை சரி செய்வதற்கு அனுமதிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நம்முன் எழுந்து நிற்கிறது. வருடத்திற்கு 2,700 டிஎம்சி தண்ணீரை கடலுக்குள் கொண்டு போய் சேர்க்கும் கேரளா, போகிறபோக்கில் இந்த தமிழகத்திற்கு 100 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது இந்த அப்பாவிகளுடைய இயலாக் குரல்கள். காது கொடுத்து கேட்கத்தான் கேரளாவில் யாரும் இல்லை. இந்த நிலையில் கால்வாய் அருகே ஒரு தங்குமிடத்தை அமைத்திருக்கும் பெரியார் புலிகள் காப்பகம்,அங்கு செல்வதற்கு கேரளாவின் வழியே பயண வழி இல்லாததால்,புலிகள் காப்பகத்தின் தலைமையகமான தேக்கடியில் இருந்து கம்பம் தேனி ஆண்டிபட்டி உசிலம்பட்டி பேரையூர் திருவல்லிபுத்தூர் ராஜபாளையம் சிவகிரி வாசுதேவநல்லூர் வழியாக வாகனங்களில் தன்னுடைய வனத்துறை பணியாளர்களை 10 நாட்களுக்கு ஒரு முறை அழைத்து வரும் பெரியார் புலிகள் காப்பகம், அவர்களை தலையணை முகாமில் தங்க வைத்த பிறகுதான், செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழக வனப் பகுதி வழியாக செல்ல அனுமதிக்கிறது. ஆனால் அந்த செண்பகவல்லி கால்வாய் இருக்கும் வனப்பகுதிக்குள், தமிழக வனத்துறையினர் செல்வதற்கு தடை இருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். ஆயுதங்களை தூக்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள தேனி மதுரை விருதுநகர் மாவட்டங்களின் வழியாக தென்காசி மாவட்டத்திற்குள் புகுந்து 5,000 அடி உயரத்தில் இருக்கும் செண்பகவல்லி கால்வாய்க்கு ஆயுதங்களை தாராளமாக கொண்டு செல்கிறார்கள் பெரியார் புலிகள் காப்பக வனத்துறை பணியாளர்கள். கேட்பதற்குத்தான் நாதிகளற்றுக் கிடக்கிறோம். இதுகுறித்து தமிழக அரசியல்வாதிகள் எந்த நிலையிலும் வாயே திறக்கவில்லை என்பது கசப்பான உண்மை.விதிவிலக்குகளும் இருக்கிறது. அரிதினும் அரிதானவராக வழக்கறிஞர் அண்ணன் கே. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் இதற்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த செண்பகவல்லி கால்வாய் பிரச்சனை மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுக்குமானால், அரசியல்வாதிகளால் ஊருக்குள் நடமாட முடியாது என்பதை இந்த விவசாய சமூகம் செய்து காட்ட வேண்டும். இந்த நிலையில் வரும் பத்தாம் தேதி சிவகிரி அருகே இருக்கும் தென்மலை கிராமத்தில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒரு மாநாடு போல செண்பகவல்லி கால்வாய் மீட்பு போராட்டம் நடக்கவிருககிறது. முன்னத்தி ஏர்களாக அந்த ஒருங்கிணைப்புக்கு பணியை முன்னின்று செய்து வரும் அத்தனை பேருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சொல்லி... நீண்ட காலமாக அந்தப் பகுதியில் செண்பகவல்லி கால்வாய்க்காக போராடிய இடையன்குளம் அண்ணன் ஜெயக்குமார் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் அண்ணன் கருணாநிதி போன்றவர்களையும் அழைத்திருக்கலாமா என்று முடிக்கிறேன். நன்றி ச.பென்னிகுயிக் பாலசிங்கம் ஒருங்கிணைப்பாளர் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

  #செண்பகவல்லிதடுப்புஅணைசீர்அமைப்பு கோரிக்கை , தென்மலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் (இன்று , 10-7-2025 காலை முதல் நடக்கும்) ப...