Sunday, March 31, 2019

தூத்துக்குடி

இன்றைக்கு காலையில் நாடாளுமன்றத் தேர்தலில் #

யின் கழக வேட்பாளர் கவிஞர் கனிமொழியை ஆதரித்து கிளவிபட்டி, கரிசல்குளம், துறையூர், ஈராச்சி, தீர்த்தாம்பட்டி ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டேன். உடன் கழக பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், ராஜகுரு, வர்த்தக அணி செயலாளர் டி.ஆர்.குமார் மற்றும் மாவட்ட தேர்தல் பணி நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் உடனிருந்தனர்.

#KSRpostings#KSRadhakrishnanpostings



கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-03-2019






செய்யவேண்டியதை விடுத்து செய்யக்கூடாததை செய்வதால் விளைவுகள் விபரீதமாகும்.

செய்யவேண்டியதை விடுத்து செய்யக்கூடாததை செய்வதால் விளைவுகள் விபரீதமாகும். ஆங்கிலத்தில் இதனை #commisson and #omission -committed and omitted என்றும் சொல்வார்கள். அதன் தீய விளைவுகள், இழப்புகள் பலரை பாதிக்கும். அதன் தாக்கம் எதிர் காலத்திலும் ரணப்படுத்தும்.மகாபாரத கதையாடல்களிலும் இது குறித்தான விபரங்கள் உள்ளன.

*தர்மன் நினைத்திருந்தால்...*

 மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிய பிறகு, கிருஷ்ணரிடம் ஒரு கேள்வி கேட்கபட்டதாம். "கிருஷ்ணா... நீ பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பு கொண்டவன். அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன். உன் தங்கை சுமித்ராவை கூட , அர்சுனனுக்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கிறாய். இப்படி இருக்க....பாண்டவர்கள் சூதாடி, நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். நீ நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியாதா?" அதற்கு கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான். சூதாடுவது என்பது அரச தர்மம். தர்மன் சூதாடியத்தில் தவறு இல்லை. ஆனால் துரியோதனன் சூதாட அழைத்த போதே, தன் சார்பாக மாமா சகுனி ஆடுவார் என்று துரியோதனன் சொன்னான். ஆனால் தர்மனோ "தான்" என்ற எண்ணம் கொண்டு தானே ஆட முனைந்தான். தர்மன் என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். 

*தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்கு காரணம் என்றார்.*

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
31-03-2019.

பாஞ்சாலி சபதம்

"மன்னர்க்கு நீதியொரு வகை - பிற
மாந்தர்க்கு நீதிமற்றோர் வகை" - என்று
சொன்ன வியாழ முனிவனை - இவன்
சுத்த மடையன் என்றெண்ணியே - மற்றும்
என்னென்னவோ கதை சொல்கிறான் - உற
வென்றும் நட்பென்றும் கதைக்கிறான் - அவர்
சின்னமுறச் செயவே திறங்கெட்ட
செத்தை என்றென்னை நினைக்கிறான்...

- கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

உத்தமர்காந்தி

#உத்தமர்காந்திக்கு உயர்ரத்த அழுத்தம் இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தேசப்பிதா உத்தமர் காந்தியின் மருத்துவ அறிக்கை முதன்முறையாக வெளிவந்துள்ளது. அதில் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு 1938ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மருத்துவ ஆய்வின்படி அவரது உடல் எடை 46.7 கிலோ என்றும், உயரம் 5 அடி 5 அங்குலம் ஆக இருந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. அவர் முறையே 1925, 1936, 1944 என மூன்று முறை மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் 1919, 1924 ஆகிய ஆண்டுகளில் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். IJMR - Indian Journal of Medical Research வெளியிட்ட Gandhiji and Health 150 என்ற பெயரில் அறிக்கை வெளியானது. 

அதில் காந்தி எப்படி சுகாதாரம், தூய்மை ஆகியவற்றின் மீது முக்கியத்துவம் கொடுத்தார். உடல்நலம், மனநலம் என இரண்டையும் ஒருசேர பேணி வந்தால் தான் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும் என்பதை உணர்ந்திருந்ததாக குறிப்பிடுகிறது. ஒரு நாளைக்கு 18 கிலோமீட்டர் தூரம் நடப்பாராம். அவர் 1913 முதல் 1948 வரை மட்டும் சுமார் 79 ஆயிரம் கிலோமீட்டர் நடந்து உள்ளார். இந்த தூரமானது பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம். அவர் தேநீர், காபி, புகையிலை, போதை வஸ்துக்கள், மது ஆகியவற்றை தவிர்த்துவிட்டு இயற்கை முறையிலான உணவு பழக்கத்தை கடைபிடித்தார். ஆரோக்கியமான மனநிலையே ஆரோக்கியமான உடல் நலத்திற்கு உதவும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்.




#உத்தமர்_காந்தி
#Mahatma_Gandhi_Health
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
29-03-2019

கக்கன்

#கக்கன் ,இவர் போன்ற அரசியல்வாதிகள் வாழ்ந்த மண்ணில் தற்பொழுது யார் யாரைப் பற்றி விவாதிக்கிறோம் என எண்ணி மனம் வேதனை அடைகிறது.

நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். 1909 ஜூன் 18-ல் மதுரை அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த பூசாரி கக்கன் - குப்பி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் கக்கன். ஆம், தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பெயர். வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை இடையிடையே விட நேர்ந்தது. எனினும், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பள்ளிப்படிப்பை முடித்தார் கக்கன்.

அரசியல் ஆர்வம்

சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருந்த காலகட்டம் அது. பள்ளி மாணவரான கக்கனுக்கும் சுதந்திர வேட்கை தொற்றிக்கொண்டது. காந்தியும் காங்கிரஸும்தான் கக்கனுக்கான ஈர்ப்புப் புள்ளிகள். படிக்கும் நேரம் போக எஞ்சிய நேரங்களில் அரசியலில் ஆர்வம் செலுத்தினார். படிப்பு சரியாக வரவில்லை. என்றாலும், கக்கனின் காங்கிரஸ் பாசத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றும் ஆர்வத்தையும் புரிந்துகொண்ட வைத்தியநாதய்யர், மதுரையில் உள்ள சேவாலயம் என்கிற விடுதியில் காப்பாளர் வேலையைக் கக்கனுக்கு வாங்கிக் கொடுத்தார்.

1932-ல் சொர்ணம் பார்வதி என்ற பெண்ணை மணம் செய்துகொண்டார் கக்கன். அதன் பிறகுதான் அரசியல் நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபட்டார். காந்தி மதுரைக்கு வந்தபோது அவருக்கு கக்கனை அறிமுகம் செய்துவைத்தார் என்.எம்.ஆர்.சுப்பராமன் என்கிற மூத்த காங்கிரஸ் தலைவர். அது கக்கன் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. தமிழகத்தின் பல இடங்களுக்கும் காந்திக்குத் துணையாகச் சென்றுவந்தார் கக்கன். அந்தப் பயணமும் பழக்கமும் கக்கனின் மனதில் தனிப்பட்ட முறையிலும் அரசியல்ரீதியாகவும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் பிரவேசத்தை வைத்தியநாதய்யர் நடத்தியபோது, அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் கக்கன்.
முதல் பதவி, முதல் சிறை

1940-ல் மதுரை மேலூர் வட்டார காங்கிரஸ் செயலாளரானார். அதுதான் காங்கிரஸில் அவர் வகித்த முதல் பதவி. அப்போது காந்தி அறிவித்த போராட்டம் ஒன்றில் பங்கேற்ற கக்கன், பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். முதல் சிறைவாசம் அதுதான். அதன் பிறகு, போராட்டங்களும் சிறைவாசங்களும் தொடர்ந்தன. வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், மதுரை மாவட்டப் பொருளாளரானார்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலைய நுழைவு போராட்டத்தில் வைத்தியநாத 
அய்யர் தலைமையில் நடந்ததில் கக்கன்
கலந்து கொண்டார்.

1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸாரின் கண்ணில் சிக்காமல் தப்பிக்கத் தலைமறைவாக இயங்கினார் கக்கன். ஒருகட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தைப் பற்றிய முழு அம்சங்களும் கக்கனுக்குத் தெரியுமென்பதால், தலைமறைவாக உள்ள மற்ற தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுமாறு சித்திரவதை செய்தனர் காவலர்கள். ஆனால், கக்கனிடமிருந்து ஒரு துப்புகூடக் கிடைக்கவில்லை. ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் அரசு, கக்கனை அலிப்பூர் சிறைக்கு அனுப்பிவைத்தது. 18 மாதங்களுக்குக் கொடும் சிறைவாசம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

1946-ல் மத்திய சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்வானார் கக்கன். 1952-ல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது, மதுரை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கக்கனின் எளிமையான வாழ்க்கைமுறையும் பொதுமக்களை அணுகும் பாங்கும் மதுரை வட்டாரத்தில் அவரைச் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்த்தியது. 1954-ல் காமராஜர் முதல்வரானபோது, அவர் வகித்துவந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கக்கனுக்குத் தரப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய கக்கன், 1957-ல் நடந்த தேர்தலில் மேலூர் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சரானார் கக்கன்.

நேர்மையும் எளிமையும்

அமைச்சர் பதவியில் இருந்தபோது அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்தவர் கக்கன். சிபாரிசு, பரிந்துரை போன்ற வார்த்தைகளை அடியோடு நிராகரித்தார். துறைசார்ந்த திட்டங்களைக் கொண்டுவருவதில் அக்கறையும் ஆர்வமும் செலுத்தினார். அமைச்சராக இருந்தபோதும் தனது குழந்தைகளை அரசு மாநகராட்சிப் பள்ளிகளிலேயே படிக்கவைத்தார்.

1962 தேர்தலில், சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கக்கனை விவசாயத் துறை அமைச்சராக்கினார் காமராஜர். மணிமுத்தாறு, அமராவதி போன்ற நீர்த்தேக்கத் திட்டங்கள் அமலுக்கு வந்தது, மேட்டூர் அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டது, வைகை, பாலாறு திட்டங்களை நிறைவேற்றியது, பூண்டி நீர்ப்பாசன ஆய்வு மையம் அமைத்தது ஆகியவற்றில் கக்கனின் பங்களிப்பு முக்கியமானது.

விவசாயிகளுக்குக் குறித்த நேரத்தில் உரம் கிடைக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார் கக்கன். பசுந்தாளுரம் அறிமுகமானது கக்கனின் காலத்தில்தான். கூட்டுறவு விற்பனை நிலையத்தின் வழியாக விவசாயிகளுக்கான பொருட்களை வழங்க வழிவகை செய்தவர் கக்கன்.

பதவியும் பணிகளும்

1963-ல் காமராஜர் ராஜினாமா செய்ததை அடுத்து, பக்தவத்சலம் முதல்வரானார். அப்போது தமிழக அரசின் உள்துறை அமைச்சரானார் கக்கன். தேர்வுகள் வழியே காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது, காவலர் பயிற்சிப் பள்ளிகளை உருவாக்கியது, சாதிக் கலவரங்கள் மூள்வதை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க ரகசியக் காவலர் பிரிவைத் தொடங்கியது, லஞ்ச ஒழிப்புக் காவல் பிரிவை உருவாக்கியது என கக்கனின் பணிகள் அநேகம்.

1967 தேர்தலில் மேலூர் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ.பி.ராமனிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார் கக்கன். தூய்மையான அரசியலுக்கு விழுந்த சம்மட்டி அடியாகவே கக்கனின் தோல்வி பார்க்கப்பட்டது. தான் வசித்துவந்த அரசு வீட்டிலிருந்து வெளியேறி, குடும்பத்தோடு வாடகை வீட்டுக்குக் குடியேறினார். சுதந்திரப் போராட்டத் தியாகி என்ற அடிப்படையில், தனக்குத் தரப்பட்ட நிலத்தை வினோபா பாவேவின் பூமிதான இயக்கத்துக்குத் தானமாகக் கொடுத்துவிட்டவர் கக்கன் என்பது இங்கே நினைவுகூர வேண்டிய சங்கதி. 1971 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராகக் கக்கனை நிறுத்தினார் காமராஜர். வெற்றி வசப்படவில்லை. ஆகவே, அரசியலிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார் கக்கன்.

வறுமையும் நோயும்

கக்கன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அரசுப் பேருந்தில் பயணிப்பதும் வரிசைகளில் காத்திருப்பதும் பொருளாதாரரீதியாகச் சிரமப்படுவதும் பத்திரிகைகளில் அவ்வப்போது செய்திகளாக வந்தன. அதைப் பார்த்த சிவாஜி கணேசன், தனக்குப் பரிசாக வந்த தங்கச் சங்கிலி ஒன்றைப் பொதுவெளியில் ஏலம் விட்டு, அதில் கிடைத்த தொகையைத் தனியார் நிதி நிறுவனத்தில் நிரந்தர முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டித்தொகை ஒவ்வொரு மாதமும் கக்கனுக்குக் கிடைக்க ஏற்பாடுசெய்தார்.

சில ஆண்டுகள் வீட்டிலேயே இருந்த கக்கனுக்கு மீண்டும் உடல்நலன் பாதிக்கப்படவே, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் உத்தரவால் தரமான மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டபோதும் கக்கனுடைய உடல்நலன் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போனது. இறுதியாக, 23 டிசம்பர் 1981 அன்று மரணம் அடைந்தார் கக்கன். அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்த கக்கனைப் போல் இன்னொரு தலைவர் வருவாரா என்று பேசவைத்தது அவரது வாழ்நாள் சாதனை!

Friday, March 29, 2019

கோவில்பட்டி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அய்யலுசாமி அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்து, தனக்கு ஆதரவு திரட்டினார் சகோதரி கனிமொழி அவர்கள்.

#KSRPostings
#KSRadhakrishnanPostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-03-2019


தூத்துக்குடிநாடாளுமன்றதொகுதி

*#தூத்துக்குடிநாடாளுமன்றதொகுதி
யில் #கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் #கனிமொழியை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம்.*
--------------------------

இன்று  கோவில்பட்டி நகரில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் கனிமொழி அவர்களை ஆதரித்து நான் பேசிய பேச்சின் சாரம் வருமாறு,

இந்த கோவில்பட்டி நகருக்கு தாமிரபரணி குடிநீரை 1970களில் வழங்கியவர் கலைஞர். இரண்டாவது பைப்லைன் குடிநீர்த் திட்டத்தையும் கலைஞர் ஆட்சியில் தான் கோவில்பட்டிக்கு கிடைத்தது. இதற்காக நான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடுத்த பின்னர் தான் கலைஞரின் உத்தரவு இந்த அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. 

கலைஞர் ஆட்சியில் விவசாயிகள் மீது அன்பு காட்டி செய்த சாதனைகள் அதிகம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இலவச மின்சாரமும், உழவர் சந்தை மற்றும் 7000க்கு மேல் கோடி விவசாயக் கடனையும் ரத்து செய்தார்.

இந்த கோவில்பட்டி விவசாயிகள் போராட்டக் களமாகும். என்னுடைய கிராமத்திலேயே 8 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. ஜெயலலிதா ஆட்சியில் 1992 காலக்கட்டத்தில் 2 பேர் பலியானார்கள். இப்படியெல்லாம் போராடிய விவாசயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டியவர்தான் தலைவர் கலைஞர். இது விவசாயிகளின் கேந்திரப் பகுதியாகும்.




எந்த நகராட்சிக்கும் கிடைக்காத வகையில்  மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கோவில்பட்டி நகராட்சிக்கு இரயில்வே மேம்பாலங்கள் மூன்றைக் கட்ட அனுமதி கிடைத்தது. அன்று 1999இல் கலைஞரின் ஆட்சி. அன்றைக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக மறைந்த தா.கிருட்டிணன் இருந்தார். அந்த மூன்று பாலங்களையும் கட்டுவதற்கான மாநில அரசின் பங்குத் தொகையை வழங்க கலைஞர் உத்தரவிட்டதெல்லாம் இன்றைக்கும் மனக்கண்ணில் தெரிகிறது.

நமது தலைவர் கலைஞர் அவர்கள் திமுக துவங்கியவுடன் அன்று ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைத்த இடம் இந்த கோவில்பட்டி. இன்றைக்கும் தெற்கு பஜார் ஜில் விலாஸ் சோடா பான உற்பத்தி நிலையத்தின் அருகில் தான் அந்த கொடியை தலைவர் கலைஞர் அவர்கள் அன்று ஏற்றி வைத்தார். 

அதேபோல திருநெல்வேலி மாவட்ட முதல் மாநாட்டையும் தலைவர் கலைஞர் தான் கோவில்பட்டியில் நடத்தினார். 

இன்றைக்கு நாராயணசாமி திரையரங்கம் இருக்கும் இடத்தில் முதல் உருவாக்க மாநாடு அன்றைக்கு அண்ணா, கலைஞர், ஈ.வி.கே. சம்பத், நாவலர் போன்ற முக்கியத் தலைவர்களெல்லாம் அங்கே பங்கேற்றனர். எனவே கோவில்பட்டிக்கும் திமுகவிற்கும் அழிக்கமுடியாத தொடர்புண்டு. இன்றைக்கு இங்கே கலைஞரின் புதல்வி களத்தில் உள்ளார்.

கவிஞர் கனிமொழி இந்த தூத்துக்குடி வட்டாரத்திற்கு புதியவர் அல்ல. திருவைகுண்டம் பகுதி கிளாக்குளத்தில் புனிதா என்ற பெண் பாலியல் பலாத்காரத்தை உட்பட்டு உயிர் இழந்தார். அதை  கண்டித்து இந்த மண்ணுக்கே வந்து போராடியவர். 

இங்குள்ள வெங்கடேசபுரம் என்ற கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்தின் தேவைகளை உணர்ந்து கடமையாற்றியவர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலர் துப்பாக்கிச் சூட்டில் சாகடிக்கப்பட்டதை குறித்து ஹென்றி டீபன் அறிக்கையை தூத்துக்குடி நகருக்கே வந்து வெளியிட்டார். 

ஏற்கனவே நான் விரிவாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தேவை என்ன என்பதை ஒரு நீண்ட பட்டியலாக தொகுதி தேர்தல் பிரகடனமாக பட்டியலிட்டேன். அதை நிச்சயம் பரிசீலித்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என்றேன். 

1. கோவில்பட்டி நகருக்கு இரண்டாவது குடிநீர்த் திட்டம், நீண்டகாலமான கோரிக்கையாகும்.

2. உச்சநீதிமன்றம் தேசிய நதிகளை இணைக்க வேண்டுமென்று 1983இல் நான் தொடர்ந்த பொதுநல வழக்கின்படி வழக்குக்கு தீர்ப்பளித்தது. அதன் ஒரு பகுதியாக கேரளாவின் அச்சன்கோவில் - பம்பை – தமிழகத்தின் வைப்பாற்றில் இணைக்கும் திட்டமாகும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் பயன்பெறும். சாத்தூர் வைப்பாற்றில், அச்சன்கோவில் பம்பையை இணைத்து நீர்வரத்தின் போது அதற்கு தெற்குமுகமாக ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டால், எட்டையபுரம், கோவில்பட்டி விவசாயிகளுக்கு பாசன வசதி கிடைக்கும். குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கும்.

3. வானம் பார்த்த கரிசல் கந்தக பூமியான விளாத்திக்குளத்தில் விளையும் மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் விவசாய விளை பொருட்களை பாதுகாக்க குளிர்பதனம் செய்யப்பட்ட சேமிப்பு கிட்டங்கிகள் அமைக்க வேண்டும்.

4. நீண்டகாலமாக கோவில்பட்டி, கயத்தாறு பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து இந்த வட்டார இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

5. கோவில்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.

6. கோவில்பட்டி நகருக்கு முழுமையாக பாதாள சாக்கடை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

7. வானம் பார்த்த விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளுடைய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

8. அனைத்து இரயில்களும் கோவில்பட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டும்.

9. ஹாக்கிப்பட்டி என்று அழைக்கும் கோவில்பட்டியில் ஹாக்கி விளையாட்டு கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நடந்து வந்தது. அகில இந்திய வகையில் இந்த போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெறும். மேலும் அதை உலகத் தரத்திற்கு எடுத்துசெல்ல வேண்டும்.

10. கோவில்பட்டி, அதன் சுற்று வட்டாரங்களில் நடக்கும் தீப்பெட்டித் தொழிலில் பிரச்சனைகளை களைந்து அந்த தொழில் சிறக்க வேண்டும்.

11. கோவில்பட்டியில் பருத்தி அரவைத் தொழிலையும், நெசவாலைகளையும் பாதுகாக்க வேண்டும்.

12. எட்டையபுரத்தில் பாரதி, உமறுப்புலவர், நாவலர் சோமசுந்தரபாரதி, முத்துசாமி தீட்சிதர் போன்ற ஆளுமைகள் உலாவிய மண். இங்கு நாட்டுப்புறக் கலைகளை ஆய்வு செய்யும் மையத்தை அமைக்க வேண்டும். தேவராட்டம், வில்இசை போன்ற நாட்டுப்புறக் கலைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கரிசல் இலக்கிய ஆய்வுகளும் இங்கே மேற்கொள்ள வேண்டும்.

13. தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் போன்றோரால் மதிக்கப்பட்டு அவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய விளாத்திக்குளம் சாமிகளை பற்றிய நினைவைப் போற்றும் வகையில் விளாத்திக்குளத்தில் அவரது நினைவிடத்தில் அவரது வரலாற்றை பதிவு செய் வேண்டும்.

14. விவசாயிகளின் தலைவராக விளங்கிய நாராயணசாமி நாயுடு கடந்த 1984இல் கோவில்பட்டியில் பயணியர் விடுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மரணமடைந்தார். நீண்டகாலமாக அவருடைய சிலையை வைக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தும் இதுவரை எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

15. தூத்துக்குடியில் பத்திரிக்கை உலகின் முன்னோடியாகத் திகழ்ந்த சி.பா.ஆதித்தனாரைக் குறித்து ஆய்வுகளை செய்ய நடவடிக்கைகள் வேண்டும்.

16. விடுதலைப் போர் வீரர் வ.உ.சி., தனது இறுதி நாட்களில் கோவில்பட்டியில் வாழ்ந்த பகுதியில் உள்ள தெருவின் பெயரை அவரது நினைவைப் போற்றும் வகையில் நடவடிக்கைகள் வேண்டும்.

17. சென்னையில் இருந்து குமரி முனை வரும் கிழக்கு கடற்கரைச் சாலை இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட மணப்பாடை தாண்டியும் சாலைப் பணிகள் சரியாக அமையவில்லை. அவை மேலும் நவீனப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

18. காவிரி டெல்டாவை நாசம் செய்துவரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் இராமாநாதபுரத்தில் வழியாக திருந்செந்தூர் வரை செயல்படுத்தும் திட்டத்தை தடுக்க வேண்டும்.

19. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, எட்டையபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை செல்ல தொடர்வண்டி இருப்புப் பாதை அமைக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

20. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும்..

21. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாறு, சிப்பிக்குளம், தூத்துக்குடி, பழைய காயல், புன்னைக்காயல், வீரபாண்டியப்பட்டணம், அமலிநகர், கொம்புதுறை, ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை போன்ற மீனவர் பகுதிகளில் மீன்பிடிக்கும் திட்டங்களை குறித்து விரிவான செயல்பாடுகளையும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

22. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், சாத்தான்குளம் பகுதிகள் மூன்றில் ஒருபங்கான செம்மண்ணான தேரிக்காடு இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்

23. கடலோரங்களில் கடல் ஓதங்களினால் சராசரியாக 1 மீட்டர் அளவுக்குத்தான் நீர்மட்டம் உயரவோ அல்லது குறையவோ செய்கிறது. தூத்துக்குடி பக்கில் ஓடை இவைகளில் சாக்கடை நீர் கடலில் கலக்காமல், உயர் ஓதத்தின் போது பின்னோக்கிப் போகின்றன. இந்த பக்கில் ஓடை பிரச்சனை தூத்துக்குடி மாநகராட்சியில் நீண்டகாலமாக இருக்கின்ற பிரச்சனை.

24. பனை மரங்ளையும், பனைத் தொழிலை பாதுகாக்கவும், உரிய நடவடிக்கைகள் வேண்டும்

25.  தாமிரபரணி நதி வங்கக்கடலில் சேரும் புன்னைக்காயல் முகத்துவாரப் பகுதிகள் சீர்செய்ய வேண்டும்.

26. ஸ்டெர்லைட் போன்ற நச்சைக் கக்கும் ஆலைகளை ஒருபோதும் இந்த மண்ணில் வர அனுமதிக்க கூடாது.

27. ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்த சத்தியமூர்த்திக் குழு அறிக்கைகயை நீண்டகாலமாக மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுக்காமல் இருகிறது. இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

28. கட்டபொம்மன் சிலை சென்னையில் நிறுவ வேண்டும்.

29. தூத்துக்குடியில் சரக்கு வாகன நிறுத்தவதற்குத் தனி முனையம் ஏற்படுத்த வேண்டும். 

30. திருவைகுண்டத்திற்கும் – ஆத்தூருக்கும் இடையே தாமிரபரணியில் ஓர் அணை கட்ட வேண்டும்.

31. காயல்பட்டினத்திற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

32. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதியில் உள்ள வடகால், தென்கால், மருது மேலக்கால், கீழக்கால் வாய்க்காலில் உள்ள 53 குளங்களையும் தூர்வார வேண்டும்.

33. திருநெல்வேலி, திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும்.

34. தூத்துக்குடி கடற்கரை அருகேயுள்ள முயல் தீவு போன்ற சிறு தீவுகள் சுற்றுச் சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

35. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லுர், வைணவ நவதிருப்பதிகள், திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலயம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா, தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயம், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை, எட்டையபுரம் பாரதியின் நினைவில்லம், மணப்பாடு புனித சவேரியார் உலாவிய கடற்கரை, தேரிக்காடு போன்ற பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

36. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீட்டு அங்கீகாரம் வழக்கப்பட வேண்டும்.

எனவே கனிமொழியை நாம் ஆதரித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும்.

#தூத்துக்குடி_தொகுதி
#KSRPostings
#KSRadhakrishnanPostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-03-2019


Thursday, March 28, 2019

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அய்யலுசாமி

இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் பணி நிமித்தமாக கோவில்பட்டி அருகேயுள்ள குலசேகரபுரம் என்ற பெருமாள்பட்டிக்கு சென்றபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அய்யலுசாமி (வயது 89) அவர்களை சந்தித்தேன். சோ. அழகர்சாமிக்குப் பிறகு இவர் #கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து 1996இல் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நான் இழந்தேன். சோ. அழகர்சாமியை எதிர்த்தும் 1989 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியிலேயே வெற்றி வாய்ப்பை இழந்தேன். கோடங்கால் கிருஷ்ணசாமி, இராமசுப்பு, குளத்துள்ளாபட்டி பெருமாள்சாமி, போன்ற பலர் இந்த வட்டாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தவர்கள். 


சோ. #அழகர்சாமி கிட்டத்தட்ட 5 முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்ப்டடவர். அய்யலுசாமியும் 1996இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் இருவரும் என்னிடம் நெருங்கிப் பழகி பாசம் காட்டியவர்கள் தான். இவர்கள் இருவரையும் அரசியல் ரீதியாக தேர்தலில் எதிர்த்து போட்டியிட வேண்டிய காலக்கட்டம். அய்யலுசாமி எளிமையானவர். விவசாயம், கோழிப்பண்னை என்று நடத்தி அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. #அய்யலுசாமி அவர்கள் பேருந்திலும், சைக்கிளிலும், நடந்தும் செல்வார். இவர் அரசியலில் அன்று பகட்டில்லாத மனிதராக தெரிந்தார். உடல் நலமும் விசாரித்தேன். 


கே. இராமானுஜம், ப.மு.பாண்டியன், அண்ணாதுரை, டி.ஆர்.குமார் போன்ற கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


#KSRPostings

#KSRadhakrishnanPostings 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

28-03-2019



Wednesday, March 27, 2019

கொத்தமல்லி அறுவடை

விளாத்திகுளம் பகுதியில் விதைத்த நாள் முதல் மழை பெய்யவில்லை. மார்கழி, தை மாத பனிப் பதத்தில் முளைத்து விளைந்துள்ள கொத்தமல்லி அறுவடை  ெய்யப்பட்டு அதை சுத்தப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.





தூத்துக்குடி நாடாளுமன்றம்

இன்று(24-03-2019) தூத்துக்குடி நாடாளுமன்ற  ொகுதி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தார் ஒன்றிய பகுதியில் சுற்றுப்பயணத்தில் கழகத் தோழர்களையும் நண்பர்களையும் சந்தித்தபோது...#கவிஞர்கனிமொழி

#KSRPostings
#KSRadhakrishnanPostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.




விளாத்திகுளம்

இன்று
(24-3-2019) தூத்துக்குடி நாடளுமன்ற தொகுதியில் 

 சட்ட மன்ற
தொகுதி செயல் வீரர் கூட்டம் .
#ksrpost




*தேர்தல் களம்*

இன்று (23/02/2019) தினமலர் திருநெல்வேலி பதிப்பில் *தேர்தல் களம்*  குதியில் வெளிவந்துள்ள தேர்லைக் குறித்தான எனது பேட்டி வருமாறு.

*மக்கள் மத்தியில் மனமாற்றம், தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்.*
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
கே.எஸ்.ஆர். என்றழைக்கப்படும் திமுகவின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் நமது தேர்தல் களத்தில் பேசுகிறார்.

*தற்போதைய தேர்தல் களத்தில் கூட்டணிகளை விடவும் பேசப்படும் விவகாரம் வைட்டமின் ‘ப’ எப்போது வரும் என்பதில் தான் இருக்கிறது….*

எனக்கு 1957 தேர்தலில் சற்று மங்கலான நினைவுகள். 1962ஆம் தேர்தலில் சற்று தெளிவான நினைவுகள் இன்றைக்கும் இருக்கின்றன. அப்போதெல்லாம் பிரச்சாரம் என்பது பெரிதாக இல்லை. போட்டியிடும் வேட்பாளர் ஏதாவது ஒரு வீட்டிற்கு வந்து அமர்ந்து வாக்களியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார். இது மாதிரியான ஒலிபெருக்கி பிரச்சாரங்கள் அப்போது கிடையாது. கோவில்பட்டி அருகேயுள்ள சித்திரம்பட்டி சுப்பா நாயக்கர், சங்கரன்கோவில் ஊர்க்காவலன் போன்றோர் வேட்பாளராக போட்டியிட்ட களத்தையும் எங்கள் பகுதியில் நான் பார்த்ததுண்டு. அதற்கு முன்னர் தேர்தல்களில் வர்ணப்பெட்டிகளில் வாக்களிக்கும் சூழல் இருந்தது. அதற்குப் பிறகு சின்னங்கள் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டது. கட்சியின் வேட்பாளர் தங்களுடைய சின்னங்களை பிரபலப்படுத்தினர். காங்கிரஸ் கட்சியின் இரட்டை மாட்டுச் சின்னம், கம்யூனிஸ்டின் கதிர் அரிவாள், சோசலிஷ்ட் கட்சிகள் (பி.எஸ்.பி, எஸ்.எஸ்.பி) ஆலமரம், மண்குடிசை சின்னத்திலும் போட்டியிட்டன. திமுகவுக்கு ஆரம்பக் கட்டத்தில் வெவ்வேறு சின்னங்களில் நின்றனர். முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி போட்டியிட்ட உதயசூரியன் சின்னம் பிற்காலத்தில் திமுகவின் சின்னமாக மாறியது.

நான் 1967ஆம் ஆண்டிலிருந்து தேர்தல் களத்தில் இருந்து வருகிறேன். அப்போதெல்லாம் தேர்தல் திருவிழா போல் நடக்காது. 1964 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தேர்தல் பிரச்சார மேடைகளில் பாடுவார். இன்று ஒத்த ரூபா தாரேன் என்ற பாடல் அந்த காலத்து அரசியல் மேடைகளில் போட்ட மெட்டு. அந்த காலத்தில் அவர் ராகம் போட்டு பாடுவதைக் கேட்டு இருக்கிறேன். 1964 ஆம் ஆண்டில் ஆலடி அருணா திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட போது அவருக்காக பணியாற்றி இருக்கிறேன்.

அப்போதெல்லாம் வீதிக்கு வீதி வேட்பாளர்களுக்காக டோர் சிலிப் மட்டுமே விடுவார்கள். 1964 ஆம் ஆண்டில் தான் கொஞ்சம் சின்ன சைஸ் போஸ்டர்கள் தேர்தலில் தலைகாட்டியது. 1964ஆம் ஆண்டு காரில் மைக்கோடும், ஒலிப்பெருக்கியோடும் தான் வேட்பாளர்கள் வருவார்கள். அந்த கார் கூட அதிசயமாக எங்கோ ஒரு இடத்தில் தான் காணப்படும். இதன் பின்னர் தேர்தலில் பணியாற்றும் தொண்டர்களுக்கு பொதுவான இடத்தில் சாப்பாடு போடும் கலாச்சாரம் வந்தது. 1987ஆம் ஆண்டில் தான் தேர்தலில் பெரிய அளவிலான போஸ்டர் கலாச்சாரமே வந்தது. அப்போதெல்லாம் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பவர்களுக்கு ஐந்து ரூபாய் போடுவார்கள். ஆனால் எங்க ஊர் பெண்கள் வாங்கமாட்டார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கிராமம் சார்பில் இந்தாங்க இரண்டாயிரம் ரூபாய் என்று மொய் எழுதிக் கொடுத்து அனுப்புவார்கள். கட்சியின் தொண்டர்கள் தேர்தல் செலவுக்கு பணம் வாங்குவதை வெட்கப்படும் தொண்டர்களைப் பார்த்து எனது தலைமுறை.

நான் 1989, 1996 ஆம் ஆண்டுகளில் கோவில்பட்டியில் போட்டியிட்ட போது மிகவும் எளிமையாக ஓட்டுக் கேட்டேன். கிராமங்களில் எங்களுக்காக சாப்பாடு தயாரித்து தருவார்கள். சுமார் 100 பேருக்கான உணவை தயாரித்து வழங்குவர். அதுமட்டுமல்லாமல், மக்கள் கடலை மிட்டாய், வாழைப்பழம், கருப்பட்டி போன்றவற்றை கொடுத்து அனுப்பினார்கள். எங்கள் கிராமத்து மக்கள் வேட்பாளர்கள் சாப்பிட மறந்தால் அதுதான் அன்றைய சாப்பாடாக இருக்கும். கோவில்பட்டியில் நான் வேட்பாளராக போட்டியிட்ட போது மக்களும் பணம் கேட்டதில்லை. நானும் கொடுத்ததில்லை. கொடுக்கவும் மாட்டேன்.
---
*பணப் பட்டுவாடா இல்லாத தேர்தலுக்கு என்ன தான் வழி?*

தேர்தலில் பல்வேறு வகையான சீர்திருத்தங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை. அதை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இந்திரஜித் குப்தா தலைமையிலான குழு அறிக்கையாக வழங்கியது. அந்த குழு வேட்பாளர்களுக்கான பிரச்சார செலவை அரசே ஏற்க வேண்டும். ஓட்டளிப்பதை கட்டாயப்படுத்த வேண்டும். ஓட்டு அளிக்காவிட்டால் ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு சலுகைகளை பறிக்க வேண்டும். ஒருவர் தேர்தலில் போட்டியிடும் போது வைத்திருந்த சொத்து, தேர்தலுக்குப் பின் அவரது சொத்து என்ன என்பது குறித்தும், அவர் தேர்தலுக்குப்பின் எவ்வளவு சொத்துக்களை இழந்தார் என்றும், அதையும் கணக்கில் காட்ட வேண்டும் என்றும், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சொத்துக்களை இழந்திருந்தால் அதுவும் நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அதை வெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தேன். ஒரு நபர் 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். இன்னொருவர் 40,000 ஓட்டுகள் வாங்கி கொண்டு தோல்வி அடைகிறார் என்றால் அதைவிட சோகம் வேறு எதுவும் இல்லை.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் அடிப்படையிலான தேர்தல் சின்னம் மட்டும் தான் கதாநாயகன். சின்னத்திற்கு விழும் ஓட்டுகளின் அடிப்படையில் வேட்பாளரை கட்சிகள் தீர்மானித்துக் கொள்ளும். இதனால் கொள்கை அடிப்படையில் மக்கள் ஓட்டளிக்கும் நிலையை அடைவார்கள். அதனால் தனிநபரைவிட நாட்டு நலனே முக்கியமாக மக்கள் கருதும் நிலை ஏற்படும். 
---
*ஓட்டு சீட்டு முறையில் மீண்டும் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து குரல்கள் எழுந்து இருக்கிறது?*

ஓட்டுச்சீட்டு முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதுகுறித்த தீவிரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓட்டுச்சீட்டு முறையிலிருந்து நாம் மாறி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல சிரமங்கள் இருக்கின்றன. இது குறித்து உச்ச நீதிமன்றமும் தேர்தல் கமிஷனும் தான் முடிவெடுக்க வேண்டும். 
---
*இன்றைய தேர்தலில் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது?*

காலம் தரும் மாற்றங்கள் அணிவகுத்து வந்த வண்ணம் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் செய்திகளை தந்த பத்திரிக்கைகள் புலனாய்வு பத்திரிகைகள் ஆக மாறின. போபர்ஸ் வழக்கில் புலனாய்வு பத்திரிகைகள் பெரும் பங்கை வகித்தன. இப்போது தொழில்நுட்ப யுகம். அதற்கேற்ப வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வந்து தகவல்களை தந்து கொண்டிருக்கின்றன. அது உண்மையா, தவறா என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
---
*விளாத்திகுளத்தில் விருப்பமனு கொடுத்த உங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லையே?*

முதலில் சீட் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னுடைய நண்பர்கள் சிலர் எனக்காக விருப்ப மனு  கொடுத்திருந்தனர். அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நேர்காணலில் கலந்து கொண்டேன். சீட் கொடுக்காததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மக்களுக்கு தொண்டாற்ற எனக்கு தேர்தல் திருவிழாவில் கதாநாயகனாக நடிப்பது ஒன்றும் பெருமை இல்லை என்று கருதுகிறேன். 
---
*திமுக தொகுதி பகிர்வும் வேட்பாளர் தேர்வு தொண்டர்களுக்கு திருப்தி அளிக்கும் என்று கருதுகிறீர்களா?*

நிச்சயம். திமுக கூட்டணியில் தலைவர் ஸ்டாலின் சரிசமமாக கட்சிகளுக்கு தொகுதிகளை பகிர்ந்தளித்திருக்கிறார். இதை ஒரு சமயோசிதமான புதிய வியூகமாக நான் கருதுகிறேன். கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி உடன்பாட்டில் திருப்தியோடு ஏற்றுக் கொண்டுள்ளனர். நேர்காணல் நடத்தி சிறப்பான முறையில் ஒன்றியம், வட்டம், மாவட்டம், பொதுக்குழு உறுப்பினர்கள் என்று கட்சியினர் அனைவரும் ஒப்புதலோடுதான் திமுக வேட்பாளர்களை தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார், அதை கட்சிகளும் வரவேற்கிறார்கள், மக்களும் வரவேற்கிறார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வீதிவீதியாக அலைந்து திரிந்ததை தமிழக மக்கள் மறக்கவில்லை. ஜி.எஸ்.டி என்ற பெயரில் புதுப்புது வரிகள் போட்டுக் கொள்ளும் மத்திய அரசுக்கு மக்கள் சரியான சம்மட்டி அடி கொடுப்பார்கள். மக்கள் மத்தியில் உள்ள மனமாற்றம் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக கூட்டணிக்கு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி தேடித்தரும்.

*இன்னா நாற்பது என்பது இனியவை நாற்பதாகும் மாறும்.*

#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-03-2019


தூத்துக்குடி

இன்று இரவு (21-3-2019) தூத்துக்குடி நகரில் கவிஞர் கனிமொழி அவர்களை
அண்ணாச்சி வைகோ அவர்கள் ஆதரித்து உரையாற்றி கூட்டத்தில் 
பங்கேற்ற போது......


தூத்துக்குடிநாடாளுமன்றதொகுதி

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கனிமொழியை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம்.
--------------------------

இன்று  கோவில்பட்டி நகரில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் கனிமொழி அவர்களை ஆதரித்து நான் பேசிய பேச்சின் சாரம் வருமாறு,

இந்த கோவில்பட்டி நகருக்கு தாமிரபரணி குடிநீரை 1970களில் வழங்கியவர் கலைஞர். இரண்டாவது பைப்லைன் குடிநீர்த் திட்டத்தையும் கலைஞர் ஆட்சியில் தான் கோவில்பட்டிக்கு கிடைத்தது. இதற்காக நான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடுத்த பின்னர் தான் கலைஞரின் உத்தரவு இந்த அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. 

கலைஞர் ஆட்சியில் விவசாயிகள் மீது அன்பு காட்டி செய்த சாதனைகள் அதிகம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இலவச மின்சாரமும், உழவர் சந்தை மற்றும் 7000க்கு மேல் கோடி விவசாயக் கடனையும் ரத்து செய்தார்.




இந்த கோவில்பட்டி விவசாயிகள் போராட்டக் களமாகும். என்னுடைய கிராமத்திலேயே 8 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. ஜெயலலிதா ஆட்சியில் 1992 காலக்கட்டத்தில் 2 பேர் பலியானார்கள். இப்படியெல்லாம் போராடிய விவாசயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டியவர்தான் தலைவர் கலைஞர். இது விவசாயிகளின் கேந்திரப் பகுதியாகும்.





எந்த நகராட்சிக்கும் கிடைக்காத வகையில்  மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கோவில்பட்டி நகராட்சிக்கு இரயில்வே மேம்பாலங்கள் மூன்றைக் கட்ட அனுமதி கிடைத்தது. அன்று 1999இல் கலைஞரின் ஆட்சி. அன்றைக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக மறைந்த தா.கிருட்டிணன் இருந்தார். அந்த மூன்று பாலங்களையும் கட்டுவதற்கான மாநில அரசின் பங்குத் தொகையை வழங்க கலைஞர் உத்தரவிட்டதெல்லாம் இன்றைக்கும் மனக்கண்ணில் தெரிகிறது.

நமது தலைவர் கலைஞர் அவர்கள் திமுக துவங்கியவுடன் அன்று ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைத்த இடம் இந்த கோவில்பட்டி. இன்றைக்கும் தெற்கு பஜார் ஜில் விலாஸ் சோடா பான உற்பத்தி நிலையத்தின் அருகில் தான் அந்த கொடியை தலைவர் கலைஞர் அவர்கள் அன்று ஏற்றி வைத்தார். 

அதேபோல திருநெல்வேலி மாவட்ட முதல் மாநாட்டையும் தலைவர் கலைஞர் தான் கோவில்பட்டியில் நடத்தினார். 

இன்றைக்கு நாராயணசாமி திரையரங்கம் இருக்கும் இடத்தில் முதல் உருவாக்க மாநாடு அன்றைக்கு அண்ணா, கலைஞர், ஈ.வி.கே. சம்பத், நாவலர் போன்ற முக்கியத் தலைவர்களெல்லாம் அங்கே பங்கேற்றனர். எனவே கோவில்பட்டிக்கும் திமுகவிற்கும் அழிக்கமுடியாத தொடர்புண்டு. இன்றைக்கு இங்கே கலைஞரின் புதல்வி களத்தில் உள்ளார்.

கவிஞர் கனிமொழி இந்த தூத்துக்குடி வட்டாரத்திற்கு புதியவர் அல்ல. திருவைகுண்டம் பகுதி கிளாக்குளத்தில் புனிதா என்ற பெண் பாலியல் பலாத்காரத்தை உட்பட்டு உயிர் இழந்தார். அதை  கண்டித்து இந்த மண்ணுக்கே வந்து போராடியவர். 

இங்குள்ள வெங்கடேசபுரம் என்ற கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்தின் தேவைகளை உணர்ந்து கடமையாற்றியவர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலர் துப்பாக்கிச் சூட்டில் சாகடிக்கப்பட்டதை குறித்து ஹென்றி டீபன் அறிக்கையை தூத்துக்குடி நகருக்கே வந்து வெளியிட்டார். 

ஏற்கனவே நான் விரிவாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தேவை என்ன என்பதை ஒரு நீண்ட பட்டியலாக தொகுதி தேர்தல் பிரகடனமாக பட்டியலிட்டேன். அதை நிச்சயம் பரிசீலித்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என்றேன். 

1. கோவில்பட்டி நகருக்கு இரண்டாவது குடிநீர்த் திட்டம், நீண்டகாலமான கோரிக்கையாகும்.

2. உச்சநீதிமன்றம் தேசிய நதிகளை இணைக்க வேண்டுமென்று 1983இல் நான் தொடர்ந்த பொதுநல வழக்கின்படி வழக்குக்கு தீர்ப்பளித்தது. அதன் ஒரு பகுதியாக கேரளாவின் அச்சன்கோவில் - பம்பை – தமிழகத்தின் வைப்பாற்றில் இணைக்கும் திட்டமாகும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் பயன்பெறும். சாத்தூர் வைப்பாற்றில், அச்சன்கோவில் பம்பையை இணைத்து நீர்வரத்தின் போது அதற்கு தெற்குமுகமாக ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டால், எட்டையபுரம், கோவில்பட்டி விவசாயிகளுக்கு பாசன வசதி கிடைக்கும். குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கும்.

3. வானம் பார்த்த கரிசல் கந்தக பூமியான விளாத்திக்குளத்தில் விளையும் மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் விவசாய விளை பொருட்களை பாதுகாக்க குளிர்பதனம் செய்யப்பட்ட சேமிப்பு கிட்டங்கிகள் அமைக்க வேண்டும்.

4. நீண்டகாலமாக கோவில்பட்டி, கயத்தாறு பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து இந்த வட்டார இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

5. கோவில்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.

6. கோவில்பட்டி நகருக்கு முழுமையாக பாதாள சாக்கடை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

7. வானம் பார்த்த விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளுடைய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

8. அனைத்து இரயில்களும் கோவில்பட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டும்.

9. ஹாக்கிப்பட்டி என்று அழைக்கும் கோவில்பட்டியில் ஹாக்கி விளையாட்டு கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நடந்து வந்தது. அகில இந்திய வகையில் இந்த போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெறும். மேலும் அதை உலகத் தரத்திற்கு எடுத்துசெல்ல வேண்டும்.

10. கோவில்பட்டி, அதன் சுற்று வட்டாரங்களில் நடக்கும் தீப்பெட்டித் தொழிலில் பிரச்சனைகளை களைந்து அந்த தொழில் சிறக்க வேண்டும்.

11. கோவில்பட்டியில் பருத்தி அரவைத் தொழிலையும், நெசவாலைகளையும் பாதுகாக்க வேண்டும்.

12. எட்டையபுரத்தில் பாரதி, உமறுப்புலவர், நாவலர் சோமசுந்தரபாரதி, முத்துசாமி தீட்சிதர் போன்ற ஆளுமைகள் உலாவிய மண். இங்கு நாட்டுப்புறக் கலைகளை ஆய்வு செய்யும் மையத்தை அமைக்க வேண்டும். தேவராட்டம், வில்இசை போன்ற நாட்டுப்புறக் கலைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கரிசல் இலக்கிய ஆய்வுகளும் இங்கே மேற்கொள்ள வேண்டும்.

13. தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் போன்றோரால் மதிக்கப்பட்டு அவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய விளாத்திக்குளம் சாமிகளை பற்றிய நினைவைப் போற்றும் வகையில் விளாத்திக்குளத்தில் அவரது நினைவிடத்தில் அவரது வரலாற்றை பதிவு செய் வேண்டும்.

14. விவசாயிகளின் தலைவராக விளங்கிய நாராயணசாமி நாயுடு கடந்த 1984இல் கோவில்பட்டியில் பயணியர் விடுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மரணமடைந்தார். நீண்டகாலமாக அவருடைய சிலையை வைக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தும் இதுவரை எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

15. தூத்துக்குடியில் பத்திரிக்கை உலகின் முன்னோடியாகத் திகழ்ந்த சி.பா.ஆதித்தனாரைக் குறித்து ஆய்வுகளை செய்ய நடவடிக்கைகள் வேண்டும்.

16. விடுதலைப் போர் வீரர் வ.உ.சி., தனது இறுதி நாட்களில் கோவில்பட்டியில் வாழ்ந்த பகுதியில் உள்ள தெருவின் பெயரை அவரது நினைவைப் போற்றும் வகையில் நடவடிக்கைகள் வேண்டும்.

17. சென்னையில் இருந்து குமரி முனை வரும் கிழக்கு கடற்கரைச் சாலை இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட மணப்பாடை தாண்டியும் சாலைப் பணிகள் சரியாக அமையவில்லை. அவை மேலும் நவீனப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

18. காவிரி டெல்டாவை நாசம் செய்துவரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் இராமாநாதபுரத்தில் வழியாக திருந்செந்தூர் வரை செயல்படுத்தும் திட்டத்தை தடுக்க வேண்டும்.

19. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, எட்டையபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை செல்ல தொடர்வண்டி இருப்புப் பாதை அமைக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

20. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும்..

21. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாறு, சிப்பிக்குளம், தூத்துக்குடி, பழைய காயல், புன்னைக்காயல், வீரபாண்டியப்பட்டணம், அமலிநகர், கொம்புதுறை, ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை போன்ற மீனவர் பகுதிகளில் மீன்பிடிக்கும் திட்டங்களை குறித்து விரிவான செயல்பாடுகளையும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

22. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், சாத்தான்குளம் பகுதிகள் மூன்றில் ஒருபங்கான செம்மண்ணான தேரிக்காடு இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்

23. கடலோரங்களில் கடல் ஓதங்களினால் சராசரியாக 1 மீட்டர் அளவுக்குத்தான் நீர்மட்டம் உயரவோ அல்லது குறையவோ செய்கிறது. தூத்துக்குடி பக்கில் ஓடை இவைகளில் சாக்கடை நீர் கடலில் கலக்காமல், உயர் ஓதத்தின் போது பின்னோக்கிப் போகின்றன. இந்த பக்கில் ஓடை பிரச்சனை தூத்துக்குடி மாநகராட்சியில் நீண்டகாலமாக இருக்கின்ற பிரச்சனை.

24. பனை மரங்ளையும், பனைத் தொழிலை பாதுகாக்கவும், உரிய நடவடிக்கைகள் வேண்டும்

25.  தாமிரபரணி நதி வங்கக்கடலில் சேரும் புன்னைக்காயல் முகத்துவாரப் பகுதிகள் சீர்செய்ய வேண்டும்.

26. ஸ்டெர்லைட் போன்ற நச்சைக் கக்கும் ஆலைகளை ஒருபோதும் இந்த மண்ணில் வர அனுமதிக்க கூடாது.

27. ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்த சத்தியமூர்த்திக் குழு அறிக்கைகயை நீண்டகாலமாக மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுக்காமல் இருகிறது. இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

28. கட்டபொம்மன் சிலை சென்னையில் நிறுவ வேண்டும்.

29. தூத்துக்குடியில் சரக்கு வாகன நிறுத்தவதற்குத் தனி முனையம் ஏற்படுத்த வேண்டும். 

30. திருவைகுண்டத்திற்கும் – ஆத்தூருக்கும் இடையே தாமிரபரணியில் ஓர் அணை கட்ட வேண்டும்.

31. காயல்பட்டினத்திற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

32. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதியில் உள்ள வடகால், தென்கால், மருது மேலக்கால், கீழக்கால் வாய்க்காலில் உள்ள 53 குளங்களையும் தூர்வார வேண்டும்.

33. திருநெல்வேலி, திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும்.

34. தூத்துக்குடி கடற்கரை அருகேயுள்ள முயல் தீவு போன்ற சிறு தீவுகள் சுற்றுச் சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

35. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லுர், வைணவ நவதிருப்பதிகள், திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலயம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா, தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயம், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை, எட்டையபுரம் பாரதியின் நினைவில்லம், மணப்பாடு புனித சவேரியார் உலாவிய கடற்கரை, தேரிக்காடு போன்ற பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

36. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீட்டு அங்கீகாரம் வழக்கப்பட வேண்டும்.

எனவே கனிமொழியை நாம் ஆதரித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-03-2019

#தூத்துக்குடி_தொகுதி
#KSRPostings
#KSRadhakrishnanPostings



Friday, March 22, 2019

தேர்தல் அறிக்கையும், அதன் ஆதியும் அந்தமும்...

இன்றைய (22.03.2019) தினமணியில் நடுப்பக்க கட்டுரையாக தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் குறித்தான வரலாற்றுப் பார்வையும் அதனுடைய தாக்கத்தையும் குறித்து எழுதியுள்ளேன்.
———————————————-


- கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
 
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியத் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வாக்குப் பதிவுக்கு முன்பே வெளியிட வேண்டுமென்ற அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை என்பது சம்பிரதாயமா, சடங்கா அல்லது ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சியின் வழிகாட்டு நெறிமுறைகளோடு அதில் சொல்லப்பட்ட உறுதிமொழிகளுடன் நடைமுறைக்கு வருமா என்று விவாதத்தில் உள்ளன. 

தேர்தல் அறிக்கை என்பது ஒரு அரசியல் கட்சி தேர்தல் களத்தில் மக்களின் வாக்குகளை பெற மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னர் தருகின்ற உறுதிமொழி சாசனம் ஆகும். இந்த தேர்தல் பிரகடனம் மக்கள் நல அரசுக்கு ஒரு ஜனநாயக நாட்டில் வழிவகுக்க ஒரு முக்கிய அடிப்படையாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் காலத்தில் வெளியிடுகின்றது. சில கட்சிகள் இந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட உறுதிமொழிகளை 100 சதவீதம் நடைமுறைப்படுத்த முடியுமா என்பது இயலாத காரியம் தான் என்றாலும் தேர்தல் களத்தில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற வேண்டியது அந்த ஆட்சியின் ஆளவந்தார்களின் கடமையாகும்.

தேர்தல் அறிக்கையும், தேர்தல் சீர்திருத்தங்களும் ஜனநாயக பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக திகழ்கின்றன. இந்த தேர்தல் அறிக்கையின் வரலாறு என்ன என்று பார்த்தால், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே இந்தியாவில் பிரிட்டிஷ் அரசியல் கட்சிகள் வெளியிட்டவாறு தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ரிப்பன் பிரபுவின் 1882இன் தீர்மானம், இந்திய கவுன்சில் சட்டம் 1892, மின்டோ – மார்லி சீர்திருத்தம் (1909) இதையொட்டி உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் அமைப்பு முறை சட்டம், லக்னோ ஒப்பந்தம் (1916), மாண்டேகு – செம்ஸ்போர்டு சட்டம் (1919), அதன்பின் பிரிட்டிஷாரால் நிறைவேற்றப்பட்ட சட்டம் 1919, முடிமான் விசாரணைக்குழு அறிக்கை (1924) என இந்தியர்களுக்கும் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலின் உறுப்பினராக உரிமைகளை வழங்கும் நடவடிக்கைகளை பிரிட்டிஷார் மேற்கொண்டனர். இந்த அடிப்படையில் 1920, 1923, 1926, 1930 என மாகாண கவுன்சிலின் தேர்தல்களும் நடந்தேறின.
இந்த காலக்கட்டத்தில் இந்தியாவிலிருந்த அரசியலமைப்புகள் தேர்தல் களத்தில் இறங்கியது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற அமைப்பு முறைப்படி நடந்த தேர்தலில் இந்திய அரசியலமைப்புகள் தங்களுடைய உறுதிமொழிகளை தேர்தல் அறிக்கைகளாக முதன்முறையாக வெளியிடத் துவங்கின. காங்கிரஸ் ஜனநாயக கட்சி 1920இல் முதன்முதலாக பாலகங்காதர திலகர் தேர்தல் அறிக்கையினை இந்திய மண்ணில் வெளியிட்டார். இதில் அவர் இந்தியப் பொருளாதாரத்தை நவீனப்படுத்த வேண்டும். அதேபோல, சுதேசிப் பொருட்கள் உற்பத்தியை பெருக்க வேண்டும். தொழிற்கல்வி, பொது சுகாதாரம், இலவசக் கல்வி போன்ற திட்டங்களை நாங்கள் வெற்றி பெற்றால் நடைமுறைப்படுத்துவோம் என்ற உறுதியை அந்த அறிக்கையில் திலகர் குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கைகள் ராஜாராம் மோகன்ராய், தாதாபாய் நௌரோஜி, மகாதேவ் கோவிந்த ரானடேவின் பொருளாதாரக் கொள்கைகள், ரமேஷ் சந்திர தத்தின் பொருளாதார அணுகுமுறைகள், கோபாலகிருஷ்ண கோகலேவின் அதிகாரம் பரவலாக்குதல், உத்தமர் காந்தியின் கோட்பாடுகளை எல்லாம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படை விடயங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்பின் 1923, 1926 இல் சுயராஜ்ய கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த காலக்கட்டத்தில்தான், தமிழகத்திலிருந்து நீதிக்கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை 1923, 1926, 1930 தேர்தல்களில் வெளியிட்டது. அன்று சென்னை மாகாணம், ஆந்திரம், கேரளாவின் வடபகுதி, கர்நாடகத்தின் தென்பகுதிகளெல்லாம் இணைந்த சென்னை ராஜதானியாக தென் தமிழகம் விளங்கியது. இந்த தேர்தல் அறிக்கையில் பிராமணர்கள் அல்லாத மக்களின் நலனைப் பாதுகாக்கக் கூடிய வகையில் உறுதிமொழிகள் சொல்லப்பட்டன. மற்றொரு கட்சி தேசிய ஐக்கிய கட்சி 1923, 1926 தேர்தல்களில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
பண்டித நேரு 1937 தேர்தலில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை தயாரித்தார். இதே போல, பிராந்தியக் கட்சிகளான கிரசக் பிரஜா கட்சி, தேசிய விவசாயிகள் கட்சி போன்ற கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை பிரிட்டிஷார் காலத்திலேயே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டதெல்லாம் வரலாற்று செய்திகளே. கடந்த 1919லிருந்து நாடு விடுதலைபெறும் வரை இம்மாதிரி தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் தொடர்ந்து வெளியிட்டன. அவைகள் யாவும் மூன்று நான்கு பக்கங்களிலேயே அடங்கிவிடும் ஆவணமாக இருந்தது. அதேபோன்று கம்யூனிச சிந்தனை உள்ளவர்களும் தங்களுடைய தேர்தல் அணுகுமுறை மற்றும் உறுதிமொழி ஆவணங்களையும் வெளியிட்டது.

நாடு விடுதலை பெற்றபின், தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் விரிவாக அன்றைய காலச் சூழ்நிலை மற்றும் அரசியல் சூழலுக்கேற்றவாறு, மக்களின் அபிலாஷைகளை கொண்டு தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கத் துவங்கின. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு முதன்முறையாக திட்டக்குழுவை (Planning Commission) அமைத்தது. இது ரஷ்ய மாடலைப் போன்று நேரு தன்னுடைய நேரடிப் பார்வையில் அமைத்தார். இன்றைக்கு மோடி அதை நிடி ஆயோக் என்று மாற்றிவிட்டார்.
இந்தியாவின் 1951, 52 தேர்தலில் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, முக்கியத் தேவைகள் மற்றும் அணுகுமுறைகளை மனதில் கொண்டே தேர்தல் அறிக்கை வெளிவந்தது. அதேபோல, 1951இல் கம்யூனிஸ்ட் கட்சியும் பொதுவுடைமை சித்தாந்த்தோடு தேர்தல் அறிக்கையை அக்காலத்தில் வெளியிட்டது. இந்த சூழலில் துணை அறிக்கைகளாக காங்கிரஸ் பொருளாதாரத் திட்டங்களை குறித்து 1948 ஜனவரியிலும், கம்யூனிஸ்ட் கட்சி பொருளதார அமைப்பு முறையைக் குறித்து 1951லும், சோசலிஷ்ட் கட்சி தன்னுடைய திட்டங்களை 1947, அக்டோபர் மாததிலும், அன்றைய ஜனசங்கம் (இன்றைய பாஜக) தன்னுடைய தேர்தல் அறிக்கையை 1951 அக்டோபரிலும், சுதந்திரா கட்சி தன்னுடைய கொள்கைகள் திட்டங்களையும் குறித்து 1959 ஆகஸ்டிலும் வெளியிட்டது. இந்த ஆவணங்கள் தான் அக்கால தேர்தல் அறிக்கையின் மையக் கருத்துகளாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பொதுத் தேர்தலில் தி.மு.க. 1957இல் போட்டியிட்டபோது, பேரறிஞர் அண்ணா தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். திமுக, ஜெயப்பிரகாஷ் நாராயணன் வலியுறுத்திய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கூறியது. அந்த தேர்தலில் 15 சட்டமன்ற தொகுதியிலும், 2 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றிபெற்றது. கட்சி துவங்கப்பட்ட பதினெட்டே ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் 1967-ல் ஆட்சிக் கட்டிலில் தி.மு.க அமர்ந்தது.
இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் மாநில முதல்வராக பதவிக்கு வந்தவர் பீகார் மாநிலத்தின் மகாமய பிரசாத் சின்கா (Mahamaya Prasad Sinha) ஆவார். இவரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கொள்கைகளை கொண்ட தேர்தல் அறிக்கைகளை தயாரித்து வெளியிட்டார். ராஜேந்திர பிரசாத்தின் சீடராக இருந்து காங்கிரசில் இருந்து விலகி இறுதிவரை ஜனதா கட்சியிலும் இருந்தார்.
அதேபோல, நாட்டின் இரண்டாவது காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வராக கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதரிபாட் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கம்யூனிஸ்டுகள் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான பொதுவுடைமைக் கொள்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின் வெவ்வேறு தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டாலும் கூட்டணி அமைச்சரவை அமைக்கும் பொழுது பல கட்சிகள் இணைந்து தேர்தல் அறிக்கையை போன்று குறைந்தபட்ச செயல் திட்டத்தை (minimum common program) வெளியிடுகின்றன. 1998 ஆம் வருடத்திலிருந்து இந்தப் போக்கு நடைமுறைக்கு வந்தது.

காலப்போக்கில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் ஆங்காங்குள்ள ஸ்தலப் பிரச்சனைகளை மையப்படுத்தி தொகுதிவாரியாக தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். இது வடக்கே சோசலிஷ்ட் லோகியோவின் அணுகுமுறையாகும். இதே போன்று நான் 1989 கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டபோது, தமிழகத்தில் முதன்முறையாக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே கீழ்குறிப்பிட்டவாறு எனது தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டேன்.
கோவில்பட்டி வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து இல்லாமல் இருந்தது.
குடிநீர் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. கோமல் சாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்'என்ற பாலசந்தரின் திரைப்படம் கோவில்பட்டி தொகுதியில் உள்ள ஏழுபட்டி கிராமத்தில் தான் எடுக்கப்பட்டது. அந்தத் திரைப்படம் வந்த நான்கு வருடம் கழித்து அந்தத் தொகுதியில் வேட்பாளராக களம் கண்டேன்.
கிராமங்களுக்கு உயர்நிலை குடிநீர்த்தொட்டி வசதியும், கைப்பம்பு குடிநீர்வசதியும் இன்ன இன்ன கிராமங்களுக்கு அமைத்து தருகிறோம் என்ற உறுதியையும் அந்த அறிக்கையில் சொல்லியிருந்தேன்.
எட்டயபுரம் மகாகவி பாரதி நெசவு ஆலை தொழிலாளருக்கு வீட்டு வசதியும், சங்கீத மேதை முத்துசாமி தீட்சதர், விளாத்திகுளம் சுவாமிகள் என்ற நல்லப்ப சுவாமிகள் கால் ஊன்றிய எட்டயபுரத்தில் இசைக் கல்லூரியும்,
மகாகவி பாரதியும், சீதகாதியும், சோமசுந்தர பாரதி போன்ற தமிழறிஞர்கள் உலாவிய மண்ணில் கிராமிய படிப்புகள் சார்ந்த நிகர்நிலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் எனவும்,
எட்டயபுரம் தனி தாலுக்கா அமைக்கப்படும் என்றும்,  கோவில்பட்டி வட்டாரத்தில் விவசாயப் போராட்டத்தில் தமிழகத்திலேயே அதிகமானவர்கள் அதாவது 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரிமை கேட்டு போராடியபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் எனவும்,
விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான இலாப விலையும், விவசாய இடுப் பொருட்களின் விலை குறைக்கவும் குரல் கொடுப்பேன் எனவும்,
கோவில்பட்டியில் உள்ள அரசு விவசாயப் பண்ணையில் விவசாயக் கல்லூரி துவக்கவும் குரல் கொடுப்பேன் எனவும்,
வறண்ட குளங்களை தூர்வாரி முள் செடிகளை வெட்டுவதும் என்றும்,
கேரள அச்சங்கோவில் - பம்பையை வைப்பாறாரோடு இணைத்து கங்கை, வைகை, தாமிரபரணி, குமரிமுனை வரை தேசிய நதிகளை இணைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். அந்த வழக்கை விரிவுப்படுத்தி கோவில்பட்டி வட்டாரத்தில் நீர்ப்பாசன வசதியை பெருக்குவேன் எனவும்,
கோவில்பட்டி குடிநீருக்கு புதிய பைப் லைன் அமைப்பதும்,
அரசு கலைக்கல்லூரி அமைப்பது எனவும்,
புறவழி சாலை அமைக்கவும்,
பாதிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கவும்,
என பல அத்தொகுதியின் தேவைகளை தேர்தல் அறிக்கையில் அப்போது சொல்லியிருந்தேன்.
இம்மாதிரி தேர்தல் காலத்தில் உறுதிமொழிகளை கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்று மக்களுக்காக வாதாட வேண்டுமென நினைக்கும் மக்கள் பிரதிநிதிகள் நாளுக்கு நாள் அரிதாகிவிட்டனர். இன்றைய சூழ்நிலையில் வாக்குகளை பணத்திற்கு விற்றபின் எந்த தேர்தல் அறிக்கையின் ஆளுமையும், அதன் வீச்சும் சில நேரங்களில் அரசியல் கட்சிகளுக்கு கைகொடுப்பதை மறுக்க முடியாது.
தேர்தல் அறிக்கைகள் ஆவணங்கள் மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலம் என உள்ளார்ந்த உளவியல் காரண காரியங்கள் உள்ளடங்கியது.
 
-செய்தித் தொடர்பாளர், திமுக,
இணையாசிரியர், கதைசொல்லி,
rkkurunji@gmail.com
#electionmanifesto
#தேர்தல்அறிக்கை
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-03-2019

Thursday, March 21, 2019

தூத்துக்குடி

#தூத்துக்குடிநாடாளுமன்றத்தொகுதி கழக வேட்பாளர் கவிஞர். #கனிமொழி அவர்களை இன்று தூத்துக்குடியில் சந்தித்து தேர்தல் பணிகளை குறித்து விவாதித்தேன். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டுமல்லாமல் தொகுதி முழுவதும் பணிகளை ஆற்றக்கூடிய விடயங்களை குறித்து அவரிடம் பேசினேன். உடன் முன்னாள் ஒன்றியச் செயலாளர் பா.மு.முத்து, பொதுக்குழு உறுப்பினர் பா.மு.பாண்டியன், முன்னாள் நகரச் செயலாளர் ராமன், ராஜகுரு மற்றும் பல நிர்வாகிகள் உடன் வந்தனர். சென்னையிலிருந்து இன்றைக்கு காலையில் தூத்துக்குடியில் இறங்கியதிலிருந்து தேர்தல் பணிகள் குறித்தான நடைமுறைகளைக் குறித்து பல கழகத் தோழர்களிடம் விவாதித்து திட்டமிடப்பட்டுள்ளது.

#தூத்துக்குடி_நாடாளுமன்றத்_தொகுதி
#தூத்துக்குடி

#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-03-2019


#Kalaignar_Karunanidhi #LTTE_Leader_Prabakaran,

இன்று விடியலில் சில ஆவணங்களை தேடிய போது பார்வையில் பட்டது...... 25-03-2015 ஜூனியர் விகடன் ஏட்டில்....



#KS_Radhakrishnan, 
#Juniorvikatan,

Wednesday, March 20, 2019

*இந்தியாவில் 2,301 அரசியல் கட்சிகளா?*

*இந்தியாவில் 2,301 அரசியல் கட்சிகளா?*
------------------------------------

இந்தியாவில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் வித்தியாசமானப் பெயர்களில் புதிய கட்சிகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் ஏழு தேசிய கட்சிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற 50 ஒரு மாநில கட்சிகள் உள்ளன. 2018 ஜுன் 20ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
வித்தியாசமானப் பெயர்களில் டுவென்டி 20 கட்சி, ஜாக்தே ரஹோ பார்ட்டி(விழித்திரு கட்சி), இந்திய காதலர்கள் கட்சி, அமைதியான வாழ்க்கை கட்சி, சூப்பர் தேசியக் கட்சி, வாக்காளர்கள் கட்சி, எம்எல்ஏ கட்சி, நம்பிக்கை கட்சி, அனைத்தையும் விட பெரிய கட்சி எனப் பட்டியல் தொடர்கிறது.
இவை பதிவானவை என்றாலும் இன்னும் இவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் தம் சின்னங்களில் போட்டியிட முடியாது. இதற்காக அரசியல் கட்சிகளுக்காக ஆணையம் ஒதுக்கி உள்ள பொதுச் சின்னங்களில் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த பட்டியலில் தற்போது 86 சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.
20/20 கிரிக்கெட் போட்டியைக் கண்டு கவர்ந்த கேரளவாசிகளால் டுவென்டி 20 கட்சி துவக்கப்பட்டுள்ளது. இந்திய காதலர்கள் கட்சியின் சின்னம், தாஜ்மகாலின் உள்ளே இதயம் வரையப்பட்டு அதில் அம்புக்குறி எய்தபடி வரையப்பட்டுள்ளது. புதிய சந்ததியின் மக்கள் கட்சிகோயம்புத்தூரில் இருந்து பதிவாகி உள்ளது. தேர்தல் சமயங்களில் பதிவாகும் பெரும்பாலானக் கட்சிகள் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தேர்தல் எனும் பெயரில் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் நிதி திரட்டும் கட்சிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதில் கடந்த 2006-ம் வருடம் சிக்கிய 255 கட்சிகள் மீது மத்திய நேரடிய வரிகள் வாரியத்தால் வழக்குகள் பதிவாகி நடைபெற்று வருகிறது. புதிய கட்சிகள் சட்டப்பேரவை அல்லது மக்களவை தேர்தலில் போட்டியிடுகையில் குறிப்பிட்ட சதவிகிதம் வாக்குகளுடன் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அவர்களின் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கிடைக்கும். அங்கீகாரத்திற்கு பின் அவை எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதுவும் ரத்தும் செய்யப்பட்டுவிடும்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 10 ஆம் தேதிக்கு முன்தினம் வரை ஆணையத்தில் பதிவான மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,301 ஆகும். இதில் தேசியக்கட்சிகளாக ஏழு, மாநிலக்கட்சிகளாக 59-ம் அங்கீகாரம் பெற்றுள்ளன. மக்களவை தேர்தலை குறி வைத்து பிப்ரவரி முதல் மார்ச் வரை என 37 நாட்களில் மட்டும் 149 கட்சிகள் புதிதாகப் பதிவு பெற்றுள்ளன.
தேர்தலில் போட்டியிடாமல் உள்ள புதிய கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என ஆணையம் அனுப்பிய யோசனை பல ஆண்டுகளாக மத்திய சட்டத்துறை அமைச்சகத்தால் சட்டத்திருத்தம் செய்ய நிலுவையில் உள்ளது.

#தேர்தல்
#அரசியல்கட்சிகள்
#இந்தியதேர்தல்ஆணையம் 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-03-2019

Tuesday, March 19, 2019

தேர்தலோ தேர்தல் ....

சகோதரர் கவிஞர்Tk Kalapria அவர்களின் பதிவு.அவசியம் வாசிக்கவும் .

தேர்தல் -சில நினைவலைகள்

________________________________________


தேர்தலோ தேர்தல் ....


1957, எனக்கு ஏழு வயது. மத்தியானம் சாப்பிட்ட பிறகு சர்வ அலங்கரங்களுடன் அம்மா, அக்கா, பக்கத்து வீட்டுப் உறவுப் பெண்கள் சிலர் நெருக்கியடித்து உட்கார்ந்து  கொண்டிருந்த குட்டியான ஸ்டாண்டர்ட் 10 காரில் நானும் வருவேன் என்று திணிந்து கொண்டு ஓட்டுச் சாவடிக்குப் போனேன். அப்போதெல்லாம் அபேட்சகர்களின் காரில், மாட்டு வண்டியில், குதிரை வண்டியில் எல்லாம் பூத் வரை போய் வாக்களிக்கலாம். 

 காரின் முன் கண்ணாடியின் வலது பாதியில் டிரைவர் பார்ப்பதற்கு மட்டும் இடம் விட்டு விட்டு இடது பாதியில் இரட்டைக் காளைச் சின்னத்திற்குக் கீழ் காங்கிரஸுக்கே ஓட் செய்யுங்கள் என்று உள்ளூர் பிரஸ்ஸில் அச்சடித்த நோட்டீஸ் ஒட்டியிருந்தது. திருநெல்வேலி டவுன் மார்க்கெட்டுக்கு மேலிருக்கும் லைப்ரரிதான் ஓட்டுச் சாவடி. நானும் அம்மாவின் பின்னாலேயே போய் விட்டேன். இரட்டைக் காளைச் சின்னம் ஒட்டிய இரண்டு பெட்டிகள், ரோஜாப்பூ சின்னம் ஒட்டிய பெட்டி ஒன்று இன்னும் சில பெட்டிகள். அவற்றின் மீதான சின்னங்கள் நினைவில்லை.  அம்மாவுக்குத் தரப்பட்ட மூன்று ஓட்டுச் சீட்டுகளையும் மூன்று இரட்டைக் காளைச் சின்னம் ஒட்டிய ஒட்டுப் பெட்டியில் போட்டு விட்டு வந்தாள். நான் விவரம் தெரியாமல், ஏன் ஒரு ஓட்டை ரோஜாப்பூவில் போட்டால் என்ன என்று கேட்ட நினைவு. 


1957 இல் ஒவ்வொரு அபேட்சகருக்கும் ஒவ்வொரு பெட்டி, அதில் அவர்கள் சின்னம் ஒட்டப்பட்டிருக்கும். அதில் விழுகிற ஓட்டுகள் எல்லாம் அவர்களுக்கு.

மேலும்  திருநெல்வேலி அப்போது இரட்டைத் தொகுதி, ஒரு பொது அபேட்சகர், ஒரு S.C அபேட்சகர், இருவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி 62 தொகுதிகள் தமிழ்நாட்டில். இதே போல் நான்கு தொகுதிகள் S.T. அபேட்சகர்களுக்கு.ஆக மொத்தம் 66 இரட்டைத் தொகுதிகள். அது போக மூன்றாவது ஓட்டு பார்லிமெண்ட் அபேட்சகருக்கு. அபேட்சகர்,  ஓட்டு, ஓட்டுச் சாவடி எல்லாம் அப்போதைய சொல்லாடல்கள். இவையெல்லாம், 1962 தேர்தலில் உத்வேகம் பெற்ற தி.மு.க  மும்முரமாகப் போட்டியிட்டு 50 இடங்கள் வென்ற போது அபேட்சகர்= வேட்பாளர், ஓட் செய்யுங்கள்= வாக்களியுங்கள் ஓட்டுச் சாவடி= வாக்குச் சாவடி என்று முழுமையாக மாறியது. இரட்டை.த் தொகுதி முறை 1962 இல் கை விடப்பட்டு தனித் தொகுதிகள் (ரிசர்வ்) வந்தன. அந்த மாற்றம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன, அப்போது. திருந்ல்வேல்யில் காங்கிரஸ் பொது அபேட்சகராக  ஸ்ரீமதி ராஜாத்தி குஞ்சிதபாதம் அம்மையாரும், எஸ்.சி. வேட்பாளராக ஸ்ரீமான் சோமசுந்தரம் என்பவரும் போட்டியிட்டு ஜெயித்தார்கள். என் பெயரும் சோமசுந்தரம் என்பதால் சினேகிதர்கள் கிண்டல் செய்தது பசுமையாக நினைவிருக்கிறது. டெல்லிப் பாராளுமன்றத்திற்கு காங்கிரஸ் சார்பில் பி.டி. தாணுப்பிள்ளை என்பவர் ஜெயித்தார். 


அதற்கு முந்திய பிரிட்டிஷ் காலங்களில் காங்கிரஸுக்கு மஞ்சள் பெட்டி, கம்யூனிஸ்டுகளுக்கு சிகப்புப் பெட்டி, முஸ்லிம் லீகிற்கு பச்சைப் பெட்டி. (இப்போது இந்த முறை அமுலில் இருந்தால் ஜெயலலிதா  ஆதரவாளர்கள் எங்களுக்குப் பச்சைப் பெட்டி வேண்டுமென்று கேட்கலாம்,  ) 

ஓட்டுப் போடுவதைப் பார்த்து விட்டு வந்து, பக்கத்து வீட்டு நண்பனுடன் சேர்ந்து ஆளுக்கொரு அட்டைப் பெட்டியும்  எடுத்துக் கொண்டு, தெருவின் அவரவருக்குத் தெரிந்த ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து, துண்டுத்தாளில் பெயர் எழுதி  பெட்டிக்குள் போடச் சொல்லி ஓட்டுச் சேகரிப்பு விளையாட்டு நடத்தினோம்.நான் போகும் வீட்டுக்கு அவன் போக்க் கூடாது. சீட்டில் ஓட்டுப் போடுபவர்களின் பெயரை எழுத வேண்டும் என்று பேச்சு. நண்பனுக்கு நிறைய ஓட்டுகள் விழுந்திருந்தது. அப்புறம்தான் தெரிந்தது, அவனே பெயர்களை எழுதி கள்ள ஓட்டுப் போட்டுக் கொண்டது.


கள்ள ஓட்டுகளும், ஓட்டுக்கு காசு கொடுப்பதும் எல்லாக் காலங்களிலும் உண்டு. அப்போதைய தேர்தல் விதிகளின் படி லெஜிஸ்லேட்டிவ் அசெம்ப்ளிக்கும், லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்கும் (கீழ் சபை, மேல் சபை என இரண்டு சபை) பொதுத் தேர்தல் நடக்கும். மக்கள் வாக்களிக்க வேண்டும்.  எம்.எல்.சி பதவிக்கு வசதியான தலைகளே போட்டியிடுவார்கள். ஆங்கிலேயக் கவர்னரே சிலரை நியமிப்பார் என்பதால் அவருடன் நெருக்கம் உண்டாகும் என்றும் அவர்கள் நினைத்திருக்கலாம். 1923 எம்.எல்.சி  தேர்தலில் ஒருவர் பெரிய சாப்பாட்டுப் பந்தி  ஏற்பாடு செய்து,  இலையில் சாப்பாடு பரிமாறும் போது முதலில் வைக்கப்படும் உப்பின் மேல் ஒவ்வொரு பவுன் வைத்தாராம். அப்போது ஒரு பவுன் விலை கிட்டத்தட்ட 15 ரூபாய்.அப்படிக் கொடுத்த காங்கிரஸ் வேட்பாளர், எங்கள் தெருவினரும் கூட. இந்தத் தகவலை அம்மா அடிக்கடிச் சொல்லுவாள், தேர்தலில் நின்று விட்டால் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறி வந்து விடும். கூடவே இருப்பவர்கள் உசுப்பேற்றி விட்டு விட்டு தேர்தல் காய்ச்சலில் இப்படிச் செய்ய வைத்து விடுவார்கள். அதிலும் நகர சபைத் தேர்தலில் நின்று பணத்தை அள்ளி விட்டுத் தோற்றுப் போய் தங்கள் சொந்த வியாபாரத்தை இழந்த பலரை எனக்குத் தெரியும். தேர்தலில் பணம் கொடுக்கவில்லை என்று யாரும் சொன்னால் அது ‘தேர்ந்தெடுத்த’ பொய். இப்போது இதையே கிட்டத்தட்ட சட்ட பூர்வமாக  அரசு கஜானாவிலிருந்தே  வழங்குகிறார்கள். 


67அழைக்கிறது........

————————————————

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, பேட்டை இந்துக் கல்லூரியிலிருந்து கிளம்பியது ஒரு ஊர்வலம். அது வியாழக்கிழமை ஜனவரி 28 என்று நினைவு. (அன்று காலையில் நகரெங்கும் ஒட்டியிருந்த எங்க வீட்டுப் பிள்ளை மூன்றாவது வாரம்  சுவரொட்டி பற்றியும் கரூரில் அந்தப் படத்தை ஓட விடாது ஆளுங்கட்சியினர் நிறுத்தி விட்டதாக வந்த செய்தி பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம், அதனால் அநேகமாகச் சரியாக இருக்கும்). முந்தின தினம், உள்ளூர் பெண் எம்.எல்.ஏ வீட்டின் முன் கூடி இந்திக்கு எதிராகக் கோஷமிட்ட மாணவர்களை, எம்.எல்.ஏயின் கணவர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அது மாணவர்களிடையே பரவி பெரிய கொதிப்பு உண்டாகி இருந்தது.  அதே நேரம் சிதம்பரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் இறந்து போன தகவல் வந்தது. அதனால் ஊர்வலம் போயே தீர்வது என்று கல்லூரியில் முடிவெடுத்தார்கள். ஊர்வலம் அப்போதைய காங்கிரஸ் எம்.பி முத்தையா அவர்கள் வீட்டினைக் கடக்கும் போது, யாரும் எதிர் பாராமல், ஒரு நண்பர் எம்.பி வீட்டின் முகப்பிலிருந்த ஒரு குழாய் வழியாக ஏறி மாடியின் மேல், ஏந்தி வந்த ஒரு கருப்புக் கொடியைக் கட்டினார். மாணவர்கள் செயலைப் பார்த்து உத்வேகம் பெற்ற பொது மக்களும் இணைந்து, இந்திக்கு எதிராகப்  பயங்கரமாகக் கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்த நாட்களில் மாணவர்கள் கடுமையாக வேட்டையாடப் பட்டோம். 


ரதவீதியில் மாணவர்களோ, மாணவர் போலத் தோற்றம் கொண்டவர்களோ தென்பட்டால் மலபார்  போலீஸ் விரட்ட வருவார்கள். நாங்கள் சந்து பொந்துகளில் திசைக்கொருவராக ஓடித் தப்பித்து விடுவோம். அவர்கள் வீதியிலேயே நின்று விடுவார்கள். ( தெருவுக்குள் வந்ததும், ”வீடு வரை உறவு வீதி வரை போலீஸ்’ என்று கிண்டலடித்துப் பாடிக் கொள்வோம்.) அன்றிலிருந்து கனன்ற நெருப்பு, ஆட்சியாளர்கள் மீது அதீத வெறுப்பாக வெக்கையை உமிழ்ந்து கொண்டிருந்தது, இளைஞர்களிடையே. மாவட்டம் தோறும் நடைபெறும் தி.மு.க மகாநாடுகளில் ”சந்திப்போம் சந்திப்போம் 67 இல் சந்திப்போம்” என்று எழுப்பிய வார்த்தை முழக்கம் செயல் வடிவம் பெறும் 1967 தேர்தல் கடைசியில் வந்து சேர்ந்தது.

 1967 தேர்தலில்தான் வலுவான எதிர்க் கட்சிக் கூட்டணி தமிழ்நாட்டில் அமைந்தது. 1962லேயே ராஜாஜியின் சுதந்திராக் கட்சி, வலது கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்றவற்றுடன் தி,மு.க வுக்குக் கூட்டணி ஏற்பட்டிருந்தாலும், அதை வலுவானதாகக் கொள்ள முடியாது.  அப்போதெல்லாம் வலது கம்யூனிஸ்ட் வந்தால் இடது வராது. இடது கம்யூனிஸ்ட் இணைந்து கொண்டால் வலது ஒதுங்கிக் கொள்ளும். (அதனாலேயே பல தொகுதிகளில், இரு கட்சி வேட்பாளர்களும் வெற்றி வாய்ப்பை இழந்து,  சொற்ப வித்தியாசத்தில் அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.)   


1959 இல் ’சோசலிஸச் சிற்பி’ நேருவின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின், லைசன்ஸ், பெர்மிட் பொருளாதாரக் கொள்கைகளுக்கு (licence & Permit Raj) எதிராக ராஜாஜி, சுதந்திரா கட்சியை ஆரம்பித்தார். சோசலிஸ்டு என்று சொல்லிக் கொள்பவர்களையே விரும்பாத அவர், கம்யூனிஸ்டுகள் கூட்டணிக்குள் வருவதை 1962ல் அவ்வளவு விரும்பவில்லை. ஆனாலும் ஒரு வகையான கூட்டணி ஏற்பட்டு இருந்தது. சுமாரான வெற்றிகளை சுதந்திரா கட்சி பெற முடிந்தது. ஆனால் ராஜஸ்தான் போன்ற ‘ராஜ விசுவாசப்’ பிரதேசங்களில் அது நல்ல  வெற்றியைப் பெற்றது. இங்கே நூறு சீட்டுகள் வரை போட்டியிட்டு ஆறு சீட்டுகள். சுமார் 7 சதவிகிதம் போல வாக்குகள் வாங்கினார். 1962 தேர்தலில் தி.மு. க, 1957 இல் பெற்ற 15 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து 50 ஆக, மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்ந்தது. ஆனால் மகிழ்ச்சியை முழுதுமாகக் கொண்டாட முடியாமல் காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி பெற முடியவில்லை. ஆனந்த விகடனில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். அண்ணாவின் கைகளில்  தி.மு.க. என்னும் குழந்தை வருத்தமான முகத்தோடு அமர்ந்து இருக்கும். அண்ணவின் சட்டைப்பையில் ”50 சீட்” என்றும் எழுதப்பட்டிருக்கும். சிரித்த முகத்தோடு speech balloon இல் அண்ணா, ”தம்பீ, எனக்காக அழாதே, உனக்காக சிரி,” என்று சொல்வது போல.  அண்ணா ராஜ்ய சபா உறுப்பினர் ஆகச் சென்றார். 


1964 உள்ளாட்சித் தேர்தல்களில்த்தான் சுதந்திரா கட்சியுடனான கூட்டணி ஒரு முழு வடிவுக்கு வந்து மகத்தான வெற்றிகளை காங்கிரசுக்கு எதிராகப் பெற முடிந்தது. திருநெல்வேலி,வேலூர் போன்ற முனிசிபாலிட்டிகளை (நகராட்சிகளை) தி.மு.க கைப்பற்றியது. பல காங்கிரஸ்‘ அபேட்சகர்கள்’ (வேட்பாளர்கள்) தோல்வி அடைந்தனர். அப்போது புழக்கத்தில் இருந்த தேர்தல் அகராதிப்படி அபேட்சகர் என்றால் வேட்பாளர். ஓட் செய்யுங்கள் என்றால் வாக்களியுங்கள். உள்ளாட்சித் தேர்தலின் பெயர் ‘ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்’. 1962ல் ’ஸ்தல ஸ்தாபன இலாக்கா மந்திரி,’ கடையநல்லூர் மஜீத். 1967 இல்  கலைஞர் பொதுப் பணித்துறை அமைச்சராகும் வரை அது ’மராமத்து இலாக்கா மந்திரி பதவி’. மாண்பு மிகு முதல்வர்  என்பதை, முதல் மந்திரி கனம் ஸ்ரீமான் பக்தவத்சலம் என்று நோட்டீஸில் அச்சடிப்பார்கள்.

 1967 கூட்டணியை தி.மு.க., அகரக் கூட்டணி என்று வர்ணித்தது. அ= அறிஞர் அண்ணா. ஆ= ஆச்சார்ய ராஜாஜி, இ= இஸ்மாயில் சாய்பு ( சிலர் ஆ= ஆதித்தனார், இடது கம்யூனிஸ்ட் என்றும் சொல்லிக் கொள்வார்கள்,) இது போக ம.பொ.சியின் தமிழரசுக்கழகம், ஃபார்வர்ட் ப்ளாக், ஆதித்தனாரின் ‘ நாம் தமிழர்’ கட்சி. எல்லாமும் இருந்தது. ஆனால் உண்மையில் அது மாணவர்களாகிய எங்களைப் பொறுத்து அரிசி, ஆளும்கட்சி வெறுப்பு, இந்தி எதிர்ப்புக் கூட்டணி  என்றே தோன்றியது. அப்போதைய காங்கிரஸ்காரர்கள். அரிசி கிடைக்காவிட்டால் எலிக்கறி சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். அதற்காக, ஒவ்வொரு ஊரிலும் அரசியல்க் கூட்டம், குறிப்பாகக் காங்கிரஸ் கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சற்று முன்னர், செத்த எலிகளைத் தோரணம் போலக் கட்டித் தொங்க விடுவது தொண்டர்கள் தலையாய பிரச்சார உத்தி. இப்படி பதினாறு அடி பாயும் ஒரு தொண்டர் பட்டாளத்தை வேறு கட்சியில் பார்க்கவே முடியாது.தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று அவ்வையார் இவர்களுக்காகத்தான் பாடினாளோ என்னவோ.  ஒரு கொடிக் கம்பம் நடுவது என்றால்க் கூட, அதற்குப் பெயிண்ட் அடிப்பதற்கு ஒரு பெயின்டர் எதற்கு நாமே அடிப்போம் என்று விடிய விடிய உட்கார்ந்து அடிப்பார்கள். அதே போல தெரு நீளத்திற்கு சணல்க் கயிறு கட்டி அதில்க் கழகக் கொடி ஒட்டி அது காயும் வரை காத்திருந்து மடித்து வைப்போம். எல்லாம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்டுவதற்காக. அப்போது டீ குடிப்பது கூட தொண்டர்கள் சொந்தக் காசில்தான்.    


திருநெல்வேலி பேட்டையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே, வீதிக்குக் குறுக்காக, இரவோடு இரவாக இப்படி ஒரு பெருச்சாளியைத் தோரணம் கட்டி வைத்து விட்டார்கள். அன்று தி.மு.க சார்பில் எம்.ஆர்.ஆர் வாசு மீட்டிங், அதற்கு வருவோரெல்லாம் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்கவும் பெரிய பரபரப்பு ஆகி விட்டது. அதை அவிழ்ப்பாரில்லை. போலீஸ், காசு தருகிறோம் என்று நயமாகச் சொல்லியும் மிரட்டியும்  பஜாரில் அலையும் அன்றாடங்காய்ச்சிகள் கூட முன் வரவில்லை. கடைசியில்  ஒரு உயரமான சுமையுடன் வந்த லாரி தானகவே அறுத்து விட்டுப் போனபோது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் ஹோவென்று கத்தினோம். போலீஸ் விரட்டிக் கொண்டு வந்தது. ஏற்கெனவே மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இரண்டு வருடமாகத் தீராத பஞ்சாயத்து. 

  இப்போதோ பிரியாணிப் பொட்டலம் குவார்ட்டர், 300 ரூபாய் இது ஆண்களுக்கு. பெண்களாயிருந்தால், பிரியாணி அல்லது புளியோதரை தண்ணீர்ப் பாக்கெட், 200 ரூபாய். இதெல்லாம் இப்போதைய தேர்தல் திருவிழாவில் கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டு நாற்காலியில் அமர்த்தப் படும் தொண்டர்களுக்கான மொய். இதிலும் மேலிடத்தில் கள்ளக் கணக்குச் சொல்லி அதிகமாக வாங்கி ஆட்டையைப் போடுவது கட்சிக்காரர்களின் பொய். எந்த வேலையும் பார்க்காமல் இப்படிக் கிடைக்கும் பணத்திற்காகக் கூட்டத்தில் வெந்து வியர்வையில் கரைந்து காணாமல்ப் போகிறவர்களின் காலம் இது. 

சுதந்திராக் கட்சி கூட்டணியில் இணைந்ததில் சில வீடுகளின் பெரியவர்கள், மாணவர்களை அதிகம் மிரட்டுவதில்லை. மிரட்டினாலும் கேட்பது யார்.  பொதுவாக “என்னன்னும் போங்கலே.”  என்று தண்ணீர் தெளிச்சு விட்ட கேசுகள்தான் அதிகம். காணாததற்கு பழம்பெரும் காங்கிரஸ் தியாகிகள் எல்லாம் ராஜாஜியோடு சுதந்திராக் கட்சியில் இருந்தார்கள். அதைப் பயன் படுத்தி பிரமாதமான தேர்தல் உத்தியாக தி.மு.கவினர். ஒவ்வொரு ஊரிலும் அண்ணா பேசும் கூட்டத்திற்கு அப்படிப்பட்ட தியாகிகளைத் தலைமை தாங்க வைத்தார்கள். திருநெல்வேலியில் சாவடி கூத்தநயினார் பிள்ளை என்பவரின் தலைமையில் அண்ணா பேசினார். ஒரு காலத்தில் அவர் வீட்டில்தான் மகாத்மா காந்தி வந்து தங்கி இருந்தார். அநேகமாக எல்லா ஊரிலும் மாணவர்கள் தாங்களாகவே வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்கள். அவரவர் பகுதிகள் தவிர பக்கத்திலுள்ள பகுதிகளுக்கும் கூட்டமாகச் செல்வோம். சொந்தத் தெரு, வார்டு என்றால் எல்லாம்  அநேகமாகப் பழகின மக்கள்தான். அதனால் யார் வீட்டிற்குள்ளும் சுதந்திரமாகச் சென்று விடுவோம். எதிர்க் கட்சியினரால் அப்படி முடியாது. கடைசி நேரத்தில் பணம் கொடுக்கும் முயற்சிகளை முறியடிக்க இந்தப் பழக்கமும் நெருக்கமும் பெரிதும் உதவின. மக்களும் பணம் வாங்குகிற மனோ நிலையில் அன்று இல்லை. அப்போது ஆளும் கட்சிக்கு மருந்துக்குக் கூட தொண்டன் கிடையாது. தினமும் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் வாங்கிக் கொண்டு சிலர் வேலை பார்த்தார்கள். அதுவும் நிழலில் உட்கார்ந்து கொண்டு பூத் ஸ்லிப் எழுதுவது போன்ற மேனி நோகாத வேலைகள் மட்டுமே.

 

நாங்கள் விருது நகர் போய் இரண்டு நாட்களாவது சீனிவாசனுக்கு தேர்தல் வேலை பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அங்கே இப்போது பயங்கரக் கெடு பிடியாய் இருக்கிறது போக வேண்டாம்,  என்று தெருவின் மூத்த தொண்டர்கள் எங்களைப் போக அனுமதிக்கவில்லை. தேர்தலுக்கு முந்திய இரவுகளில் போலீஸ் மாணவர்களைக் குறி வைத்துப் பிடிப்பதில் மும்முரமாக இருந்தது. அதனால் எங்களை வீதிக்குப் போகக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால் தேர்தல் அன்று போலீஸின் முகமே மாறி விட்டது. அதுவே வெற்றிக்கு அறிகுறி என்று தெரிந்து விட்டது. தேர்தல் அன்று அதிகாலையில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை, வாக்குச் சாவடிக்கு அனுப்பத் தயாராக இருங்கள் என்று சொல்லி விட்டார்கள். உண்மையிலேயே அதுதான் மிக முக்கியமான வேலை. ஒரு தடவைக்கு மூன்று தடவை ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, “ ஓட்டுப் போட்டாச்சா, கூட்டமே இல்லை போய்ட்டு வந்துருங்க ஐயா, அண்ணாச்சி, மதினி, அக்கா என்று சலிக்காமல் சொல்லுவோம். எல்லா ஊர்களிலும் இதுதான் நிலைமை. அதனால் பதிவான வாக்குகள் 77 சதவிகிதம் வரை கணிசமாக உயர்ந்தது. 1962 இன் நிலைமை தலை கீழாக மாறியது. தி..மு.க 137 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் கட்சி 51 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

 ஆனால் என்ன அவ்வளவு பாடுபட்டும் எங்களால் ‘ஓட்டு’ப் போடமுடியவில்லை, அப்போதைய ’வாக்களிக்கும் வயதான 21 எங்களில் பலருக்கும் வந்திருக்கவில்லை.  நாங்கள் பெரும்பாலானோர் எங்கள் 18 வயதில் இருந்தோம். ராஜிவ் காந்தி அரசால், 61 வது அரசியல் சட்டத் திருத்தப் படி 1989 மார்ச்சு முதல் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப் பட்டது. அதன் பலனை அவர் அனுபவிக்க முடியவில்லை. இப்போதைய தேர்தலிலும் வெற்றியை நிர்ணயிக்கப் போவது சமீபத்தில் 18 வயது ஆகிய கணிசமான புது வாக்காளர்கள்தான் என்று கருதப்படுகிறது.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது , மற்றும் திருநெல்வேலி அல்வா செய்யும் முறை உங்களுக்காக............!!!!!!!

1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள் இக்கடையை. மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த ஸ்டாக்கும் காலியாகி விட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.

மற்ற கடை அல்வா விட இங்கு செய்யப்படும் அல்வா ருசியாக இருக்கக் காரணம், அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும் அதை தயார் செய்வதும் Manual முறையில் தான். இது தான் அல்வாவிற்கு ஒரு யூனிக் சுவை தருகிறதாம். மேலும் இந்த அல்வா தயாரிக்கும் முறை இவர்களுக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் தெரியாது !




இப்படி கையால் தயார் செய்வதால், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு தான் இவர்களால் தயார் செய்ய முடிகிறது. அதனை மட்டும் விற்று முடித்து விட்டு, திருப்தி அடைந்து விடுகிறார்கள். இவர்கள் நினைத்தால் மெஷினைக் கொண்டு இன்னும் 10 மடங்கு கூடுதல் அல்வா தயார் செய்து விற்க முடியும். இருப்பினும் தங்கள் தரம் சிறிதும் குறைய கூடாது என்பதால் பெரிய அளவில் செல்லாமல் இருக்கிறார்கள்.




இருட்டுக்கடை என்று பெயர் வர காரணம், 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி, 'இருட்டுக்  கடை அல்வா' என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு இங்கு காண்டா விளக்கு அகன்று, ஒரு 200 வாட்ச் பல்பு எரிகிறது, அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை. 

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. வேறு கடைகளில் விசாரித்தால் உங்களை மற்ற இடங்களுக்கு மாற்றி விட வாய்ப்பு உண்டு. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அது தான் அடையாளம் !

இருட்டு கடை என்கிற பெயரில் இன்னொரு கோஷ்டி காபி ரைட் வாங்க, அவர்கள் மேல் இவர்கள் வழக்கு துவங்கி தங்கள் கடை பற்றி பல வருடங்களாக பத்திரிக்கைகளில் வெளி வந்த குறிப்புகளை காட்டி தங்களுக்கு தான் அந்த பெயருக்கு உரிமை உண்டு என போராடி வருகிறாகள். 

உள்ளூர் வாசிகள் நூறு கிராம் அல்வா சுட சுட வாங்கி கொண்டு ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, சைடில் சென்று கை நீட்ட , சற்று மிக்சர் இலவசமாக தருகிறாகள். அதை சாப்பிட்டு விட்டு அங்கு மாட்டியுள்ள பேப்பரை எடுத்து கை துடைத்து கொண்டே செல்வதை காண முடிந்தது 

சில நேரங்களில் கியூவில் நின்றும் வாங்கி செல்வதுண்டாம். எப்பவும் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்கள் தயாராய் இருக்கின்றன. நீங்கள் சென்றவுடன் கேட்கிற அளவை கொடுத்து உடன் அனுப்பி விடுகிறார்கள். இருந்தும் தீபாவளி பொங்கல் நேரங்களில் கூட்டம் மிக அதிகமாகி இருக்கும் அல்வாவை அனைவருக்கும் பகிந்தளிக்க வேண்டிய சூழலில் ரேஷன் முறையும் அமல் படுத்தப்படுமாம் ! ( ஒரு கிலோ கேட்டால் கால் கிலோ தருவது !)

இருக்கடை அல்வாவில் வெறும் அல்வா மட்டுமே இருக்கும். முந்திரிப்பருப்பு போன்ற எக்ஸ்ட்ரா அயிட்டங்கள் எதுவும் சேர்ப்பதில்லை. அப்படிச் சேர்த்தால் அல்வாவின் ருசியை முழுமையாக உணரமுடியாதாம்.  இங்கு வாங்கப்படும் அல்வா ஒரு வாரம் வரை கெடாது.  
எப்பூடி நாங்க திருநெல்வேலிக்காரங்கல்லே.

திருநெல்வேலி ஒரிஜினல் சாந்தி அல்வா :

இந்த கடை 1977ஆம் ஆண்டு உதயமானது. இவர்கள் சுவை இருட்டு கடை அல்வாவில் இருந்து மாறுபடும். அல்வா என்ற சொல் அரேபிய மொழியாகும்.

தாமிரபரணி ஆற்று தண்ணீரில் தாமிர தன்மை அதிகம் இருப்பதே இந்த சுவைக்கு காரணம். இவர்கள் சொக்கம்பட்டி ஜமீன் பரம்பரை அவர்களுக்கு இந்த அல்வாவை செய்து வழங்கி வந்துள்ளார்கள் பின்னர் சாந்தி பலகாரகடை ( மிட்டாய் கடை ) என்ற பெயரில் ஆரம்பித்து இன்று வரை அவர்கள் தரத்தில் ஒரு குறையையும் கூற இயலாது.

இருட்டுக்கடை அல்லாவும் சாந்தி மிட்டாய்கடை அல்வாவும் தான் சுவையில் கொஞ்சம் மாறுபடும். ஆனால் இரண்டுமே தரத்திலும், சுவையிலும் நம்பர் 1 தான்.

தேவையான பொருட்கள் :

சம்பா கோதுமை 1/2 கப் 
அஸ்கா சர்க்கரை 1 1/2 கப் ( வெள்ளை )
முந்திரி பருப்பு 12
பசு நெய் 3/4 கப்

செய்முறை :

1. சம்பா கோதுமையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

2. கோதுமை நன்றாக மிருதுவாக மாறியதும் கோதுமையை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதை மிக்ஸியிலோ அல்லது ஆட்டு கல்லிலோ அல்லது கிரைண்டரிலோ போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.

3. அதிலிருந்து கோதுமையை பிழிந்து கோதுமை பால் எடுத்துக் கொள்ளவும். அந்த சக்கையை மறுபடியும் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும், கோதுமை பாலை பிழிந்து எடுத்து கொள்ளவும். இந்த முறையை மறுபடியும் ஒரு முறை பின்பற்றி கோதுமை பாலை சேகரித்து கொள்ளவும்.

4. இந்த கோதுமை பாலை குறைந்தபட்சம் 30 நிமிடம் அந்த பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே வைத்து கொள்ளவும். இப்பொழுது அதில் மேலே தேங்கியுள்ள தெளிந்த நீரை மெதுவாக வேறு ஒரு பாத்திரத்துல ஊற்றி எடுத்துக்கொள்ளவும்.

5. அடியில் தேங்கியுள்ள கோதுமை பால் கரைசலை மற்றும் பயன்படுத்தி கொள்ளவும்.

6. முந்திரி பருப்பை பொன்னிறமாக நெய்யில் வறுத்து கொள்ளவும். ஒரு வடசட்டியில் 1/2 கப் சர்க்கரையை கொட்டி அதில் ஒரு மேஜைக்கரண்டி தண்ணிர் விட்டு கிளறி கொண்டே இருக்கவும். சிறு தீயில் கிளறி கொண்டே இருந்தால் சர்க்கரை உருகி கொஞ்சம் கெட்டியாகி சிறிது நேரத்தில் சர்க்கரை நிறம் மாற தொடங்கும் ( பிரவுன் நிறம் ) அடுப்பு சிம்மில் அல்லது சிறுதீயில் இருப்பது மிக அவசியம் இல்லாவிட்டால் சர்க்கரை கருகி தீய்ந்து போய் அல்லாவின் சுவையே கெடுத்து விடும்.

7. சர்க்கரை கரைசல் இப்பொழுது தங்க நிறத்தில் அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். இதை தங்க நிற பிரவுன் கலர் என்று கூறுவார்கள். மெதுவாக 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும் இல்லையெனில் வெடித்து சிதறி மேலே எல்லாம் விழும். சர்க்கரை கரைசல் முழுவதுமாக கரைந்ததும் அதில் 1 கப் சர்க்கரையை சேர்த்துகோங்க.

8. அந்த கோல்டன் பிரவுன் கரைசலை கிளறி கொண்டே இருந்தால் அதை கொஞ்சம் எடுத்து நமது ஆள்காட்டி விரல் மற்றும் நமது கட்டை வரலில் தொட்டு எடுத்தால் ஜவ்வு மிட்டாய் போல் அல்லது ஊசி போன மெதுவடை போல் ஒரு மெல்லிய நூல் வரும் அதுதான் கம்பி பதம். இது வந்தவுடன் கோதுமை பாலை மெதுவாக சர்க்கரை கரைசலில் ஊற்றி கொள்ளவும்.

9. இதை அனைத்தையும் சிறுதீயில் மட்டுமே செய்ய வேண்டும். கோதுமை பாலை சர்க்கரை கரைசலில் ஊற்றியவுடன் கிளறி கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் கோதுமை பால் வெந்ததும் மறுபடியும் கோல்டன் பிரவுன் கலர் மாறிவிடும்.

10. இப்பொழுது இந்த சமயத்துல கொஞ்சம் கொஞ்சமாக 1 மேஜைக்கரண்டி நெய்யை சேர்த்து கொண்டே இருக்க வேண்டும். இந்த கரைசலை கிளறி கொண்டே இருக்கவும் கிளறுவதை நிறுத்த கூடாது. இந்த கரைசல் ஊற்றும் நெய்யை உறிந்து கொண்டே இருக்கவும்.

11. ஒரு பக்குவத்துல இந்த கரைசல் நெய்யை உறிஞ்சாமல் பாத்திரத்தின் ஓரங்களில் நிற்கும் இந்த சமயத்தில் நெய் ஊற்றுவதை நிறுத்தி கொள்ளவும். இப்பொழுது வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து கொள்ளவும். கரைசலை கிளறி கொண்டே இருக்கவும். (முதலில் கிளறும் சமயத்துல கரண்டியில் ஓட்டி கொள்ளும்.)

12. பாத்திரத்துல அல்வா ஓட்டாமல் வரும் அந்த சமயத்துல அல்வாவின் நிறம் மாறும். அல்வாவின் கலவையில் சின்ன சின்ன சின்னதாக வெள்ளை நிறம் முட்டைகள் அல்லது புள்ளிகள் தோன்றும். இந்த சமயத்தில் அல்வா கிளறும் கரண்டியில் ஓட்டி கொள்ளாமல் வரும். இது தான் சரியான பக்குவம். இந்த பக்குவத்துல அல்வா கலவையை நெய் தடவிய ஒரு அகன்ற ஃட்ரேவில் கொட்டி கொள்ளவும். பிறகு ஆறவைத்து பரிமாறவும்.

குறிப்பு 
1. கோதுமை மற்றும் சர்க்கரையின் சதவீதம் 1 : 3 அதாவது கோதுமை அரை கப் என்றால் ஒன்று மற்றும் அரை கப் சர்க்கரை எடுத்து கொள்ள வேண்டும்..


விடுதலைப்புலி இயக்கத் தலைவர் #வேலுப்பிள்ளைபிரபாகரனின் #வல்வெட்டுத்துறையில்....

#

 தரைமட்டமான அவர் பிறந்த இல்லம், அவர் சிறுபிராயம் மற்றும் இளமைக்காலத்தில் உட்கார்ந்து பேசிய மரத்தடியில் எடுத்த புகைப்படங்களை யாழ்ப்பானத்திலிருந்து இன்று சரோஜா சிவச்சந்திரன் அனுப்பியிருந்தார். இந்த இடத்திற்கு பல வரலாறுகள் உண்டு. இம்மரத்திற்கு கீழிருந்து பிரபாகரன் பலரிடம் பேசி போராளிகளாக மாற்றிய வீரவரலாறும், இந்த மரத்தின் கீழுள்ள மண்ணுக்குண்டு.  இங்கே இன்றைக்கு சிறு வட்ட வடிவ மேடை அமைத்துள்ளார்கள்.




#பிரபாகரன்
#விடுதலைப்_புலிகள்
#Prabhakaran
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-03-2019

Monday, March 18, 2019

எம்.ஜி.ஆரின் கல்லூரியையே #புறக்கணிக்கிறதாஅதிமுக ?

#எம்ஜிஆரின்பக்தர்கள்என்பவர்களின்
பார்வைக்கு
எம்.ஜி.ஆரின் கல்லூரியையே #புறக்கணிக்கிறதாஅதிமுக ?
———————————————-
அ.தி.மு.க.வை உருவாக்கிய தலைவரான மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை மிகவும் ஆர்ப்பாட்டத்துடன் கொண்டாடி முடித்தார்கள் அ.தி.மு.க ஆட்சியில் தற்போது அமர்ந்திருப்பவர்கள்.
ஜெயலலிதா முதல்வராக அமர்ந்தபோதிருந்தே எம்.ஜி.ஆரின் பெயரை இருட்டடிப்பு செய்வதற்கான பல வேலைகள் துவங்கிவிட்டன. அவருடைய வாழ்வுடன் தொடர்புடையை பல அம்சங்கள் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டன.அவற்றில் ஒன்று எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டூடியோ.



சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சத்யா ஸ்டூடியோவுக்குப் பின்னால் ஒரு வரலாறே உண்டு. பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம் பொறுப்பில் இதே ஸ்டூடியோ இருந்தபோது எம்.கே. தியாகராஜ பாகவதர் துவங்கிப் பலரும் இதே ஸ்டூடியோவில் நடித்திருக்கிறார்கள். அவரிடமிருந்து கைமாறி எம்.ஜி.ஆரின் கைக்கு வந்து ‘’சத்யா ஸ்டூடியோ’வாக மாறியபோது இங்கு அவர் நடித்த பல படங்களுக்கான படப்பிடிப்பு நடந்திருக்கிறது. தி.மு.க.விலிருந்து விலகி அவர் அ.தி.மு.க வைத் துவக்கியபோது தொண்டர்கள், கட்சிப்பிரமுகர்களைச் சந்திப்பதற்கான இடமாகவும் இருந்திருக்கிறது சத்யா ஸ்டூடியோ.
1987 ல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு சத்யா ஸ்டூடியோ வளாகம் சத்தியபாமா மாளிகை ஆகி- பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாறி 1996 ல் துவக்கப்பட்டபோது கல்லூரியைத் திறந்து வைத்தவர் டாக்டர் கலைஞர்.
சுமார் நான்காயிரம் மாணவிகள் வரை படிக்கும் இந்தக் கல்லூரியில் அடிப்படை வசதியான குடிநீர் இணைப்புக் கூட இதுவரை தரப்படவில்லை என்பதைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. முன்னாள் முதல்வர் பெயரில் நடக்கும் கல்லூரிக்கே இந்தக்கதியா என்றும் தோன்றியது.
விசாரித்தபோது அது உண்மை தான் என்பது தெரிய வந்தது.
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க ஆட்சி தான் இங்கு ஆளும்கட்சியாக இருக்கிறது. அவர் பெயரைச் சொல்லித்தான் தமிழகம் முழுக்க நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடந்தன. சிலைகள் திறக்கப்பட்டன. அலங்கார வளைவுகள் நிறுவப்பட்டன. கல்விநிறுவனங்களில் சிறப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டன.
இருந்தும் அவருக்குச் சொந்தமான இடத்தில் இயங்கும் பெண்கள் கல்லூரிக்கு மெட்ரோ குடிநீர் இணைப்புக் கொடுப்பதைக் கூட அ.தி.மு.க அரசு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் செய்யவில்லை. எடப்பாடி முதல்வரான பிறகும் செய்யவில்லை என்று சொன்னால் அதை எப்படி எடுத்துக் கொள்வது?
தமிழகத்திற்குச் சத்துணவுத்திட்டத்தை அமல்படுத்தி இளைய மாணவ சமுதாயம் பசியாறக் காரணமாக அமைந்த அ.தி.மு.க.வைத் துவக்கிய தலைவரான எம்.ஜி.ஆருக்கே இந்தப் புறக்கணிப்பு என்றால் ‘’ இங்கு உண்மைகள் தூங்கவும், ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்’’ என்று எம்.ஜி.ஆர் நடித்த ‘’ எங்க வீட்டுப் பிள்ளை’’ பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

விடுதலை புலிகள் இயக்க தலைவர் 
பிரபாகரனால் எனக்கு எம்.ஜி.ஆரின்
அறிமுகம்;என்னை  எம்.ஜி.ஆர் வக்கில்
என  அழைப்பார் .அந்த நிலையில் 
சுட்டிக்காட்டுவது எனது கடமை.

#MGR
#எம்ஜிஆர்
#சத்யாஸ்டூடியோ
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18– 03-2019

அதுவே தெய்வம்.

முழுக்க உளியால்
காயம் படும் உடல் கல்லே சிலை;அதிர்ஷ்டமிருப்பின் 
அதுவே  தெய்வம்.
K.S.Radha Krishnan
கே.எஸ.இராதா கிருஷ்ணன் 




Sunday, March 17, 2019

*தேர்தல் களத்தில் வியாபார அரசியல்.*

இன்றைய (17/03/2019) தினமலரில் *#தேர்தல்களத்தில் வியாபார அரசியல்* என்ற தலைப்பில் வெளிவந்துள்ள எனது முழுமையான பேட்டி வருமாறு.



-------------------------------------
-திமுக செய்தித்தொடர்பாளர், கே.எஸ்.இராதாகிருஷ்ணன் முழுமையான சிறப்பு பேட்டி.

*லோக்சபா தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சந்திக்க இருக்கின்ற ‘சாதகம், பாதகம்’ என்ன?*

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவையும் வாட்டி வதைக்கும் மத்திய, மாநில அரசுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணமதிப்பிழப்பு, போன்ற பல பிரச்சினைகளில் மத்திய அரசின் அடக்குமுறை எங்கள் கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு “செய்ய வேண்டியதை செய்யாமல், செய்யக்கூடாததை எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து செய்வது”. இந்த பழமொழியை தான் மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றனர். எனவே எங்கள் கூட்டணி மக்களை சந்தித்து இந்த இரு அரசுகளும் வீழ்த்துவதற்கு பிரச்சாரம் செய்வது எங்களுக்கு சாதகமாக அமையும். பாதகம் என்ற பேச்சுக்கு இடமில்லை.
---

*ஜெயலலிதா இல்லாத அதிமுக அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?*

அதிமுக கூட்டணி என்ற கப்பலில் ஜெயலலிதா என்று ‘கேப்டன்’ இல்லை. அதனால், கப்பல் கரைசேர வாய்ப்பில்லை. கப்பலில் சேர்ந்துள்ள ‘எக்ஸ்ட்ரா லக்கேஜ்’களால் ஓட்டை விழுந்துவிட்டதால் அது மூழ்கும் நிலையில் தான் உள்ளது.

---

*தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் உங்களுக்கு, தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உண்டா?*

பல்வேறு தேர்தலில் காமராஜர், நெடுமாறன், வைகோ, கம்யனிஸ்ட் தலைவரும், நீண்டநாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த சோ.அழகிரிசாமியுடன் பணியாற்றிய அனுபவம் உண்டு. தேர்தல் களப்பணியாளர், தேர்தல்களில் வேட்பாளர், வேட்பாளர்களின் முகவர், களப்பணியாளர் என 48 ஆண்டு காலமாக தேர்தல் களத்தில் அனுபவமும் எனக்குண்டு. நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டபோது அங்கு பணிகள் செய்ததெல்லாம் நினைவுக்கு வருகின்றது. 1989, 1996இல் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தேன். 

---

*அன்றும், இன்றும் தேர்தலுக்காக வேட்பாளர்கள் செய்யும் செலவு விபரம் ஒப்பிடுங்களேன்?*

கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன் தேர்தலில் போட்டியிட்டபோது பணம் பிரதானமாக இல்லை. தற்போது பணம் தான் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கிறது. இதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சோ. அழகிரிசாமி, கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட போது, அவரிடம் பணம் கிடையாது. ஆடம்பர கார் கிடையாது. அப்போது பிரசாரம் செய்ய மைக்செட் இணைக்கப்பட்ட வாடகை அம்பாசிடர் கார் மட்டுமே இருந்தது. ஊர் ஊராக பிரச்சாரம் செய்வோம். கிடைத்ததை சாப்பிட்டு திண்ணையில் ஓய்வு எடுத்துவிட்டு பிரச்சாரத்திற்கு செல்வோம். நல்லகண்ணுவுடன் இணைந்து கிராமம், கிராமமாக எங்களின் பகுதி கிராமங்களில் பிரச்சாரம் செய்த நினைவுகளும் இருக்கின்றன. 

மதுரை மத்திய தொகுதியில் நெடுமாறனுக்கு வேலை செய்தேன். பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தல், திருநெல்வேலி, மயிலாப்பூர், பெருந்துறை, ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை, சங்கரன்கோவில் போன்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றிய அனுபவம் உண்டு. இப்போது போல் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் செலவு கிடையாது. தற்போது படித்தவர்களும், அரசு பணியாளர்கள் கூட எங்களுக்கு ஏன் பணம் தரவில்லை என வாய்கூசாமல் கேட்கின்றனர். ஏண்டா அரசியலுக்கு வந்தோம் என்ற வேதனை தான் மிஞ்சுகிறது. அன்று கோவில்பட்டியில் நான் போட்டியிட்டபோது ராஜமரியாதையுடன் மக்கள் வரவேற்பார். ஆரத்தி எடுப்பர், ஆனால் பணம் வாங்க மாட்டார்கள். வீடுகளில் சாப்பிடச் சொல்வார். சிவகாசியில் வைகோ போட்டியிட்டபோது பூத் கமிட்டி செலவுக்கு பணம் கொடுத்தால் அதை வாங்க மறுப்பர். எங்களை அசிங்கப்படுத்தாதீர்கள் என்று அவர்கள் சத்தம் போடுவர்.

இன்று அதே பூத் கமிட்டிகள் தேர்தல் செலவுக்கு பணம் தர வேண்டும் என கறாராக கேட்கின்றனர். இந்த மாதிரியான வியாபார அரசியல் போக்கு தேர்தல் களத்தில் இருப்பது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. 

---

*அப்படியானால் தேர்தல் சீர்திருத்தம் வருவதற்கு உங்கள் சிந்தனையில் என்ன வழி இருக்கிறது?*

தேர்தல் முடிவை பணம்தான் நிர்ணயிக்கும் என்ற புரையோடிய புற்றுநோயை அகற்ற வேண்டும். அதற்கு ஒரே வழி நீதிமன்ற தீர்ப்பு தான். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் நடத்தி அதை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். உலக நாடுகள் பலவற்றில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை உள்ளது. சின்னம் மட்டும் இருக்கும். மக்கள் அதற்கு ஓட்டு போட வேண்டும்.

விகிதாச்சார அடிப்படையில் அதிக ஓட்டுகள் பெற்ற கட்சிகளுக்கு பதவிகள் ஒதுக்கப்படும். கட்சியின் தலைமையே எம்.பி., எம்.எல்.ஏக்களை தேர்வு செய்யலாம். இந்த முறை வந்தால் அரசுக்கும், வேட்பாளர்களுக்கும், கட்சிக்கும் தேர்தல் செலவு ஏற்படாது.

இது தொடர்பாக ஆய்வு செய்த இந்திரஜித் குப்தா கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டும். ஓட்டு போடாதவர்கள் ரேஷன் கார்டை ரத்து செய்ய வேண்டும். இப்படி 30, 40 சீர்திருத்த பட்டியலுடன், உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. 

---

*திமுக கூட்டணியில், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம் பெறாமல் போனதால் நீங்கள் ஏமாற்றம் அடைந்தீர்களா?*

எந்த ஏமாற்றமும் எங்களுக்கு ஏற்படவில்லை. கூட்டணிக்காக 4 தலைவர்கள் வருவர், 4 தலைவர்கள் செல்வர். சில தலைவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட லாப - நட்ட கணக்குகளுக்காக திமுக கூட்டணியில் சேராமல் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். 

--- 

*திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு அதிகம் என கருதுகிறீர்களா?*

கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதை தளபதி ஸ்டாலின் அவர்கள் சிந்தித்து பார்த்து தான் முடிவெடுத்துள்ளார்.

---

*திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது?*

இன்று தொட்டு அல்ல. தொடங்கப்பட்ட நாளிலிருந்து திமுக மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சியாகவே இருக்கிறது.

---

*நீங்கள் பல கட்சிகளுக்கு ஜம்ப், ஆனது பற்றி?*
என் 48 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, நாராயணசாமி நாயுடு போன்றவர்களிடம் பழகியுள்ளேன். பல கட்சிகளில் பணியாற்றியுள்ளேன். அந்தக் கட்சிகள், கூடு கட்டுவதற்கு உதவியாக இருந்துள்ளேன். ஆனால், அந்த கூட்டிலிருந்து ஒரு குச்சி கூட நான் எடுத்து செல்லவில்லை. என் உழைப்பு, அனைத்து கட்சிகளுக்கும் பயன்பட்டுள்ளதே தவிர, எந்த ஒரு பலனும் எனக்கு இல்லை. ஏனென்றால் தகுதியே தடை. என்ன செய்ய?

தேசிய நதிகளை இணைக்கவேண்டுமென்று 1983 முதல் 30 ஆண்டுகள் போராடி 2012 பிப்ரவரி மாதம் வரை வாதாடி இறுதி உத்தரவை பெற்றேன். தமிழகத்தின் பிரச்சனைகளான முல்லை-பெரியாறு, காவிரி, கூடங்குளம், கண்ணகி கோவில் பிரச்சனை, வாக்குரிமை, விவசாயிகள் மீது ஏவப்பட்ட ஜப்தி நடவடிக்கைகளை ரத்து செய்தது, மனித உரிமைகள் பிரச்சனைகள், தமிழக குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் பாதுகாப்பு, தமிழக சட்ட மேலமை அமைக்க வேண்டும். தூக்கு தண்டனை கூடாது என்று 1983லேயே இரண்டெழுத்து தந்தியை வைத்து தூக்குதண்டனையை, ஜனாதிபதியின் கருணை மனுவை நிராகரித்த பின்னர் நீதிமன்றத்தால் தண்டனையை தடுத்து நிறுத்தியது என்று பல பிரச்சனைகளில் பொதுநல வழக்குகளை முப்பது ஆண்டுகளுக்கு முன்னாளில் இருந்தே நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உத்தரவுகளை பெற்றதெல்லாம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. 

இம்மாதிரி செயல்பாடுகள் தான் ஒரு மனிதனுடைய தரத்தையும், தகுதியையும் வெளிப்படுத்தும். தேர்தலில் வெற்றி பெற்றும், எம்.எல்.ஏ, எம்.பி., ஆகியும் பொம்மைகளாக இருப்பதை விட இந்த பணிகளும், எழுத்துப் பணிகளும் திருப்தியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. இதுவே எனக்கான அடையாளத்தையும், முகவரியையும் தரும் என்று நம்புகிறேன். மற்றபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று அக்கறையானவர்கள் பலர் என்னிடம் குறிப்பிட்டு பேசினாலும், என்ன செய்ய? இதுதான் இன்றைய நிலைப்பாடு. இந்நிலையில் இதையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டும்.

---

*அதிமுக – பா.ஜ.க., கூட்டணி பற்றி உங்கள் கருத்து?*

பா.ஜ.க.,வின் பினாமி தான் அதிமுக அரசு. மாநில அரசின் அதிகாரத்தை டில்லிக்கு தாரைவார்க்கும் விதமாக பவர் ஆஃப் அட்டர்னியே கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை இயக்குவது பா.ஜ.க., தானே. பாவைக்கூத்து போல அதிமுகவை பா.ஜ.க., ஆட்டிப் படைக்கிறது.

--- 

*மத்தியில் திமுக தயவுடன் காங்கிரஸ் ஆட்சி அமையுமானால், தமிழகத்தில் மீண்டும் மேல்சபை வருமா?*

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக மேல்சபை வராமல் முட்டுக்கட்டையாக இருந்தனர். தமிழகத்தில் திமுக ஆட்சியும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் அமையும் போது நிச்சயம் மேல்சபை வரும். இது தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்.

#தேர்தல்_திருவிழா
#Indian_Elections
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17-03-2019

இன்று (19-4-2024) கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலை  பள்ளியில் எனது வாக்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவு செய்தேன். I exercised my r...