Sunday, March 31, 2019

செய்யவேண்டியதை விடுத்து செய்யக்கூடாததை செய்வதால் விளைவுகள் விபரீதமாகும்.

செய்யவேண்டியதை விடுத்து செய்யக்கூடாததை செய்வதால் விளைவுகள் விபரீதமாகும். ஆங்கிலத்தில் இதனை #commisson and #omission -committed and omitted என்றும் சொல்வார்கள். அதன் தீய விளைவுகள், இழப்புகள் பலரை பாதிக்கும். அதன் தாக்கம் எதிர் காலத்திலும் ரணப்படுத்தும்.மகாபாரத கதையாடல்களிலும் இது குறித்தான விபரங்கள் உள்ளன.

*தர்மன் நினைத்திருந்தால்...*

 மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிய பிறகு, கிருஷ்ணரிடம் ஒரு கேள்வி கேட்கபட்டதாம். "கிருஷ்ணா... நீ பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பு கொண்டவன். அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன். உன் தங்கை சுமித்ராவை கூட , அர்சுனனுக்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கிறாய். இப்படி இருக்க....பாண்டவர்கள் சூதாடி, நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். நீ நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியாதா?" அதற்கு கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான். சூதாடுவது என்பது அரச தர்மம். தர்மன் சூதாடியத்தில் தவறு இல்லை. ஆனால் துரியோதனன் சூதாட அழைத்த போதே, தன் சார்பாக மாமா சகுனி ஆடுவார் என்று துரியோதனன் சொன்னான். ஆனால் தர்மனோ "தான்" என்ற எண்ணம் கொண்டு தானே ஆட முனைந்தான். தர்மன் என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். 

*தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்கு காரணம் என்றார்.*

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
31-03-2019.

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...