Sunday, April 30, 2023

Tamil Nadu Land Consolidation (for Special Projects - Act, 2023

நல்ல இருக்கு #திராவிடமாடல் 
“நிலத்தோடு நீர்நிலைகளும் தனியாருக்கு” என்ற விவசாயிகளுக்கு எதிரான “ நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023” இயற்றிய திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை தனியாருக்கு கூறு போட ஆயுத்தமாகியிருக்கிறது.

 நிலங்களை, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சிதைக்கும் திராவிட மாடல் அரசு.

நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால்கள் அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறைவான நிலங்களை சிறப்புத் திட்டம் (Tamil Nadu Land Consolidation (for Special Projects - Act, 2023)  என்ற பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒருங்கிணைத்துக் கொடுக்கலாம் என்று ஓர் ஆபத்தான மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகி
யுள்ளது. 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-4-2023

கிராமத்தில் நெல் அறுவடை காலத்தில் வயலில் அமைக்கப்படும் குச்சில்…

கிராமத்தில் நெல் அறுவடை காலத்தில் வயலில் 
அமைக்கப்படும் குச்சில்…
#ksrpost 
30-4-2023.


‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நிலையில்…….; இந்து கடவுளான திருவேங்கடவனை திட்டித் தீர்ப்பார்கள். மற்ற கடவுள்களையும் திட்டித் தீர்ப்பார்கள். இப்படியான படத்தின் முன் தன் பணிகளை கனிமொழி ஆற்றுகின்றார்….

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நிலையில்…….;

 இந்து கடவுளான திருவேங்கடவனை திட்டித் தீர்ப்பார்கள். மற்ற கடவுள்களையும் திட்டித் தீர்ப்பார்கள். இப்படியான படத்தின் முன் தன் பணிகளை கனிமொழி அவர்கள் ஆற்றுகின்றார். வாழ்க அவருடைய கோட்பாடு, செயல்பாடு. இது ஏதோ தூத்துக்குடி கட்சி நிர்வாக அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த கட்சி நிர்வாக அலுவலகத்தில் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பணியை ஆற்றுகின்றார். உண்மையிலேயே இவர் பெரியாரின் இறைமறுப்புக் கொள்கையில்தான் உறுதியாக இருக்கின்றாரா? இது அவருக்கே வெளிச்சம். 

கனிமொழி இதுவரை கடவுள் இல்லை; மதங்கள் இல்லை என்று சொல்லிக் கொண்டு வருபவர். கலைஞர், ஸ்டாலின் படங்களோடு மதச்சின்னத்தை வைத்துள்ள ஒரு கட்சி  அலுவலகத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய கருத்துக்கே அவர் முரணானவரா? கடவுள் மறுப்புக் கொள்கையில் பெரிய உறுதிப்பாடு இருப்பது மாதிரி பேசியவருடைய அணுகுமுறை இவ்வளவுதானா?

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-4-2024


1996 பொதுத்தேர்தலில் தமிழகத்தில் மதிமுக என்ற புதிய அரசியல் இயக்கத்தை களத்தில் எழுந்து நிற்க முடியமால் தடுத்த கோஷ்டிகள்… Rajini voice மேலும் ஊழல் ஆட்சிகள் வழி வகுத்தது. ஆனால்,அன்றைய இலட்சிய பாதையில் பயணித்த மதிமுக அழித்து விட்டது. ஜெயலலிதாவின் நேசத்தின் அன்பர் சோவின் கையங்கிர்யம் பல நல்லவர்களை ஆற்றல் பெற்றவர்களை தேர்தலில் தோற்க வைத்தது.

1996  பொதுத்தேர்தலில் தமிழகத்தில் மதிமுக என்ற புதிய அரசியல் இயக்கத்தை களத்தில் எழுந்து நிற்க முடியமால் தடுத்த கோஷ்டிகள்…
Rajini voice மேலும் ஊழல் ஆட்சிகள் வழி வகுத்தது. ஆனால்,அன்றைய இலட்சிய பாதையில் பயணித்த மதிமுக அழித்து விட்டது. ஜெயலலிதாவின் நேசத்தின் அன்பர் சோவின் கையங்கிர்யம் பல நல்லவர்களை  ஆற்றல் பெற்றவர்களை தேர்தலில் தோற்க வைத்தது.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-4-2023.


#திராவிடமாடல் #சிறுவாணி #ஸ்டாலின்அவர்களே, தமிழ்நாட்டின் உரிமையை சிறுவாணியில் நிலைநாட்ட உங்கள் உரத்த குரல் ஒலிக்குமா?

#திராவிடமாடல் #சிறுவாணி 
#ஸ்டாலின்அவர்களே,
தமிழ்நாட்டின் உரிமையை சிறுவாணியில் நிலைநாட்ட உங்கள் உரத்த குரல் ஒலிக்குமா?
—————————————
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நகமும் சதையும் போல நெருக்கமாக உறவாடி வருகிறார். கேரளத்தில் நடந்த நிகழ்ச்சிகளில், தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் இந்த காட்சிகள் அரங்கேறின என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
 
என்றாலும், 
கேரளா தொடர்ந்து முல்லைப் பெரியாறு, நெய்யாறு உட்பட பத்துக்கும் மேலான நதி நீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் இருக்கிறது. இது ஸ்டாலினுக்குப் புரியுமோ, புரியாதோ? எனக்குத் தெரியவில்லை. 



 
பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே கூலிக்கடவில் சிறுவாணியில் தடுப்பணை பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன. இதனால் கோவை வட்டாரத்துக்கு வர வேண்டிய தண்ணீர் தடைபடும். காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி பவானியில் 66 டிஎம்சி தண்ணீரைக் கேரளா எடுத்துக் கொள்ளலாம் என்ற பிரச்னை கடந்த 2007- 2008 ஆம் ஆண்டில் வந்தபோது, இங்கு திமுக அரசுதான் இருந்தது. அப்போது துரைமுருகன் பொதுப் பணித்துறை அமைச்சர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. அதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே நரசிம்மலு நாயுடுவின் வேண்டுகோளின்படி கோவைக்குத் தண்ணீர் வழங்க திட்டங்கள் எல்லாம் தீட்டப்பட்டது எல்லாம் உண்டு. சிறுவாணி அணையில் மழை பெய்தாலும்  50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கும் மேல் தண்ணீர் நிரப்ப தமிழகத்தை கேரளா அனுமதித்ததும் இல்லை. 
சிறுவாணி அணையிலிருந்து 1.3 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டும். இது குடிநீருக்குப் பயன்படுகிறது. இந்த தண்ணீரைத் தடுத்து இப்போது கேரளாவில் கட்டப்படுகிற தடுப்பணை 1.3 டிஎம்.சி கிடைக்க வேண்டியதையும் சேர்த்து கேரளா தன் உடமையை நிலைநாட்ட, எப்போதும் போல சண்டித்தனம் பண்ணிக் கொண்டு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களே… இந்த வியடங்களை எல்லாம் உங்களுக்குச் சொல்லக் கூடிய அளவில் திமுகவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,. சட்டமன்ற உறுப்பினர்கள் யாருமே இல்லையே… பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்? களப்பணி செய்கிறவர்கள், அறிவுசார்ந்த புரிதலுள்ளவர்கள் கட்சியில் இருந்தால்தான் உங்களுக்குப் பிடிக்காதே!

 விவரம்தெரிந்தவர்களும்,களப்பணியாளர்ளகளும் தன்னோடு இருக்க வேண்டும் என்று கலைஞர் நினைப்பார். ஸ்டாலின் அவர்களே,பாசாங்கு காட்டும் புகழ்பாடிகள்தான் தானே உங்களுக்கு வேண்டும். இந்த சிறுவாணி தடுப்பணை பிரச்னையில் என்ன செய்யப் போகிறீர்கள்? சிபிஎம் உங்களுடைய தோழமைக் கட்சிதானே? தமிழ்நாட்டின் உரிமையை சிறுவாணியில் நிலைநாட்ட உங்கள் உரத்த குரல் ஒலிக்குமா?

#சிறுவாணி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-4-2023.

#ஊழல்கள்வரலாறுகாலம் முதல். இன்று வரை #Corruption #scandals #ஊழல்கள்

#ஊழல்கள்வரலாறுகாலம்  முதல். இன்று வரை
#Corruption #scandals #ஊழல்கள்

#KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #அரசியல்,

#ksrpost
30-4-2023.

https://youtu.be/AcJxWlVy8uA

Saturday, April 29, 2023

மதிமுக MDMK

கண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா! செந்நீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?
-பாரதி.

தன் வாழ்க்கையை மறந்து உழைத்து  உதவியவர்களை கண்ணீர் வர வைத்தால் இதுதான் முடிவு.
இது இயற்கையின் நீதி…ஊழ் அல்ல..அவர்களே தேடி கொண்ட நிலை, பலா பலன் …
"கால தேச வர்த்தமானம்’’ கவனிக்கிறது.
****
வளமான திடமான ஆளுமைகள்- கருத்துகளோ  கொள்கைகளோ இலட்சியமோ  மதிமுக  விற்கு இருக்கவில்லை. உழைத்தவர்கள் புறக்கணிப்பு… அவர்கள் மற்றும் கருத்துகளோ;அவைதான் எந்தவொரு நிறுவனத்தின் /அமைப்பின் / இயக்கத்தின் ஆணி வேர்கள்.  அவை அறவே இல்லை. 

 அறிவுச்சார்ந்த மனிதர்களின் தொடர்ச்சியான வரவு /  பெருக்கு ( flowing intellectuality ) வேண்டும்   அதுதான் உடல். 

தொடர் சர்ச்சைகள் விமரிசனங்கள், சூழலுக்கேற்ப  மக்கள் நன்மைக்கருதி  முன்வைக்கப்படும் மாற்றங்கள் ( தலைமை மாற்றங்களும் உட்பட ) இவையெல்லாம் அதன் இலைகளாகவும் பூக்களாகவும் காய்கணிகளாகவும் இருக்க வேண்டும்.  அப்படியான அமைப்புகள் மட்டுமே தகவமைக்கப்படும். 

youtu.be/7aKD7D7yRPY


#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost29-4-2023.





Friday, April 28, 2023

#மரமண்டை என்று சொல்லாமல் எப்படி சொல்ல? Constitutional amendments- Art 356 so far invoked

#மரமண்டை  என்று  சொல்லாமல்எப்படி 
சொல்ல?

அமைச்சருக்கு இந்திய அரசியல் சாசனத்தில் எத்தனை திருத்தங்கள் இதுவரை வந்துள்ளன என்பதைக் கூட சொல்ல முடியவில்லை. இதுவரை 2021 வரை 105 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  125 ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா 2019  இல் மாநிலங்களவையில் வைக்கப்பட்டது. 

இந்த மசோதாவின் நிலைக்குழு தலைவராக ஆனந்த சர்மா இருந்தார். இந்த நிலைக்குழுவின் அறிக்கை. 6.05.2020 இல் நாடாளுமன்ற செயலகத்தில் வழங்கப்பட்டது. 




அதேபோல அரசியல் சாசனப் பிரிவு 356 மற்ற பிரிவுகளை-ஐக் கொண்டு மாநில அரசுகளைக் கலைத்ததும் சட்டமன்றங்களை முடக்கியதும் ஏறத்தாழ 125 தடவை நடந்துள்ளது. இவற்றையெல்லாம் சொல்லத் தெரியாத அமைச்சர். 

இப்படிப்பட்டவர்களெல்லாம் அமைச்சர், எம்.எல்.ஏ. எம்.பி.களாகத் சில தகுதியற்றவர்கள். கிராமத்து பள்ளிக்கூட வாத்தியார்கள் பிள்ளைகளைப் பார்த்துச் சொல்வதைப் போல சொல்ல வேண்டும் என்றால் இவர்களில்  தகுதியற்ற சிலரை மாடு மேய்க்கத்தான் அனுப்ப வேண்டும். இங்குதான் #தகுதியேதடை அல்லவா…

#தகுதியேதடை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-4-2023.

மணல் மாபியாக்களால் தமிழகத்தில் நடந்த கோரச் சம்பவங்கள்-

லூர்து பிரான்சிஸ் படுகொலைக்கு முன் மணல் மாபியாக்களால்   தமிழகத்தில் நடந்த கோரச் சம்பவங்கள்-

தமிழகத்தில் மணல் கடத்தல் என்பது அரசிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தருவதால்,ஆளுங்கட்சி,எதிர் கட்சியினர்,அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மேலும் வருவாய்த்துறை,காவல்துறை உதவியுடன், அரசியல் ஆதரவுடனே அவை நடந்தேறுகின்றன.

 தற்போதைய ஆட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர்,"கரூரில் தற்போதைய அரசு பொறுப்பேற்ற 10த்தே நிமிடங்களில் மணல் அள்ளலாம் என்றும்,அதிகாரிகள் குறுக்கிட்டால்,அவர்கள் அங்கே வேலையிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்" என்றும் பகிரங்கமாக அறிவிக்க முடியும் சூழலே தமிழகத்தில் உள்ளது.

லூர்து பிரான்சிஸ் படுகொலையை ஒட்டி தூத்துக்குடி பகுதியில் நிகழும் மற்ற மணல் திருட்டு விசயங்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

முறப்பநாடு பகுதிக்கு அருகிலுள்ள அகரம் பகுதியிலுள்ள விவசாயி பாலகிருஷ்ணன் அவர்கள்,நீதிமன்ற உத்தரவு பெற்று, ஆடு,மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் போது துப்பாக்கியுடன் உள்ள காவலர்கள் பாதுகாப்புடன் செல்லும் சூழல் உள்ளது. 
காரணம்-

அந்த ப்பகுதியில் நிலவும் மணல் கொள்ளை குறித்து பொதுவெளியில் தொடர்ந்து அவர் பேசி வருவதால் மணல் மாபியாக்கள் அவரை அச்சுறுத்தி வருகின்றனர். அவர் காவல்துறையிடம்("உண்மை மட்டுமே வெல்லும்"-காவல்துறையின் வாசகம்!) மணல்கொள்ளை குறித்து புகார் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால்,அவர் நீதிமன்றம்(மதுரை-உயர்நீதிமன்றக் கிளை)சென்று மனு செய்ததால்,அதை விசாரித்த நீதிமன்றம்,அவருக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

 ஆக,
உண்மையை சொன்னால், 100 கி.மீ.அப்பால் உள்ள நீதிமன்றம் சென்று நிவாரணம் பெறும் சூழல் தான் தமிழகத்தில் உள்ளது.(அதற்குள் அவர் உயிர் பறிக்கப்பட்டால்?!)

 "வாய்மையே வெல்லும்"!-

இது குறித்து பாலகிருஷ்ணன் கூறும்போது,"சட்டவிரோதமாக,நடைபெறும் மணல் கொள்ளையில் ஒரு லாரி மணல் மூலம் 25,000-30,000 பணம் கிடைப்பதால்,அதைக் கொண்டு மணல் மாபியாக்கள்,வருவாய்த்துறை,காவல்துறைஅரசியல்வாதிகள் ஆதரவுடன், சட்டத்தை துளியும் மதிக்காமல்,இக்கொள்ளையை நடத்தி வருகின்றனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கொங்காரயக்குறிச்சி-தாமிரபரணி கரையில் உள்ள கிராமம். அங்கேயும் ஆதிக்க சாதியினர் மணல்கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டபோது,அங்குள்ள ஓய்வுபெற்ற தலைமை-ஆசிரியர் தேவசகாயம் அவர்கள் உள்ளூர் மக்களின் துணையோடு,எதிர்த்ததால்,2014ல் அவர் மணல் மாபியாவால் கொலை செய்யப்பட்டார். அதை பழிதீர்க்க,2015ல் பிச்சையா தேவர் என்பவரும் கொல்லப்பட்டார்.

மணல் மாபியா குறித்து ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"அரசியல்வாதிகள் ஆதரவுன் மணல்கொள்ளையில் ஈடுபடும் மாபியாக்கள் 1 வருட காலத்திலேயே பெரும் பணம் சட்டவிரோதமாக சம்பாதித்து,அப்பணம் மூலம்,ஏரியாக்களில்நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் அதிபர்களாகி விடுவதால்,செல்வாக்கு பெற்றவர்களாக மாறி, அரசியல்வாதி+வருவாய்துறையினரின் ஆதரவு பெற்று,அவர்கள் மீது நான் சட்டரீதியான நடவடிக்கை எடுத்ததால் என்னை அரசியல்வாதிகள் உதவியுடன் வேறு இடத்திற்கு மாற்றினர்"என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

2018ல் திருநெல்வேலி நாங்குநேரியில் உள்ள நம்பியாற்றில் சட்டவிரோதமாக மணல் மாபியாக்கள் மண் கடத்தியபோது,அதை தட்டிக்கேட்ட ஜெகதீஷ்துரை எனும் காவலர்,சக காவலர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு,படுகொலை செய்யப்பட்டபோது,உதவாமல்("வாய்மையே வெல்லும்")அவர் படுகொலைக்கு காவல்துறையினரே காரணமாக இருந்து,அதற்கு துணைபோயுள்ளனர்.

நம்பியார் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கொள்ளையின் போது கொல்லப்பட்டவர்கள்-

கண்ணநல்லூர் தாஸ்-2,000,

மிட்டாதார்குளம் குமார்-2,012,

கருங்குளம் செல்லப்பா-2,017,

பெருங்குளம் வியாகப்பன்-2,018-

வருடங்களில் மணல் மாபியாக்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

25 வருடங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் குவாரி கொள்ளையர்களால் கொல்ல (லாரி ஏற்றி)முற்பட்ட போது மயிரிழையில் உயிர் தப்பினார்.அச்சமயம் லாரி ஓட்டுநர் மீது கொலைமுயற்சி வழக்கு பதியப்பட்டது.

2004 டிசம்பரில் செங்கல்பட்டில் உதவி தாசில்தார் ஒருவர் மணல் மாபியாக்களால் கொல்லப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்றமும்,பதேசிய பதுமை தீர்ப்பாயமும் மணல்கொள்ளை வழக்கில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது. (தற்போதும்,2 வழக்குகள் மணல்கொள்ளை தொடர்பாக நடந்து வருகிறது-இராமநாதபுரம் மாவட்டத்தில்,சிர்கம்பையூர் பகுதியில் உள்ள பாம்பார் ஆற்றில் நடந்து வரும் மணல்கொள்ளை-
பட்டுக்கோட்டை,ஏரிபுறக்கரை கிராமத்தில் நடந்து வரும் மணல் கொள்ளை-)

2013ம் ஆண்டு காஞ்சிபுர ஆட்சியரே சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மணல்கொள்ளையை தடுக்கத் தவறியதால்,தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அரசு ஆற்றுமணலுக்கு மாற்றாக M-sandஐ உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துவதோடு,அதன் தரத்தையும் உறுதிசெய்ய வேண்டும்.

ஆற்றுமணலை காப்பத்தில் அரசு மனஉறுதியுடன் செயல்பட்டு,அதை காக்க நினைக்கும் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் வந்தால்,உடனே தகுந்த செயலூக்க(Proactive)நடவடிக்கைகளை மேற்கொண்டு,அதையும் தாண்டி கொலை நிகழ்ந்தால் இரும்புக்கரம் கொண்டு,விரைந்து தக்க தண்டனை பெற்றுத் தருவதை உறுதிபடுத்த வேண்டும்.

டிரோன்களும்,CCTV கேமராக்களும்,ஆற்றின் எல்லையை தெளிவாக வரையறுத்து பாதுகாத்தலும்,முறையான கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டால்,மணல் திருட்டை ஓரளவிற்காவது கட்டுப்படுத்தமுடியும். 

ஜனநாயக சக்திகள் தான் ஒன்றிணைந்து,அரசிற்கும்/அதிகாரிகளுக்கும் உரிய அழுத்தம் கொடுத்து மணல் திருட்டு நடக்காவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்குமா?


இன்று உ.வே.சாமிநாதையர் நினைவு நாள்.

இன்று உ.வே.சாமிநாதையர் நினைவு நாள்.
————————————————————
“நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், “இந்தமாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார். நான், “என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத்திண்ணை யிலும் இருந்து படித்து வந்த மாகா வித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்” என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது...”

- ‘கடல் கடந்து வந்த தமிழ்’ என்ற கட்டுரையில், நினைவு மஞ்சரி முதல் பாகம்.  

( பிரெஞ்சு அறிஞரான ஜூலியன் வின்ஸோன் என்பவர் தனது தமிழ் சுவடி ஆராய்ச்சி குறித்து எவ்வளவு அக்கறை காட்டினார் என்பதை உ.வே.சா இக்கட்டுரையில் விளக்குகிறார். அவரது மாணாக்கரான பொண்டெனூ என்பவர் தன்னைப் பார்க்க வந்த தருணத்தையே மேற்கண்டவாறு எழுதியிருக்கிறார்). 

 "தமிழன்னையின் இளமைப் பருவத்தே அவள் புனைந்தருளிய சிறந்த பொற்பணிகள் பலவற்றைத் தேடிக்கண்டு அவற்றை மாசு நீக்கி மீண்டும் அழகுறுத்தி அவள் தெய்வத் திருமேனியில் அணிவித்து மகிழ்ந்த தமிழ்ச்செல்வர் யாவர்? தமிழ்ப் புலமைக்கு உரையாணியாக விளங்கும் தமிழ்ப் பெருந்தகையர் யாவர்? தமிழ்க் கல்வி புதியதோர் மேம்பாடுற்று எவரும் போற்றத்தக்க நிலையிலே தற்காலத்து நிலவுவதற்குக் காரணமாயுள்ள அருந்தமிழ்ப் பேராசிரியர் யாவர்? தமிழ் மக்கள் தங்களுடைய புராதன நாகரிகத்தையும், தொன்மை, பெருமை முதலியவற்றையும் நன்கு உணர்ந்து களிப்புறும் வண்ணம் செய்வித்த தமிழ் மகனார் யாவர்?  இச்செயற்கரிய செயல்களையெல்லாஞ் செய்த பெரியார் மகாமகோபாத்தியாய  தாக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களே ஆவர்.. " 

- டாக்டர் எஸ்.வையாபுரிப்பிள்ளை  (1942ல் திருவல்லிக்கேணி ஹிந்து இளைஞர் சங்க விழாவில் பேசிய குறிப்பினின்றும் எழுதியது).  நன்றி: "உ.வே.சா பன்முக ஆளுமையின் பேருருவம்" தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு. 

#உ_வே_சாமிநாதையர்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-4-2023.


#மணல் மபியாக்கள் #தமிழகசட்ட ஒழங்கு

கிராம நிர்வாக அதிகாரி படுகொலை 
#மணல் மபியாக்கள் #தமிழகசட்ட ஒழங்கு

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost
28-4-2024
https://youtu.be/zuhNnkFmxhI

Thursday, April 27, 2023

நினைவுகளின் கூர்மையால் இழைகள் மீண்டும் மீண்டும்அறுந்து போகின்றன…

காலத்தின் ஊசியால்
மடிப்புகளை இயைத்துத்
தைக்கவே முனைகின்றேன்
நினைவுகளின் கூர்மையால்
இழைகள் மீண்டும் மீண்டும்அறுந்து போகின்றன…பள்ளி, கல்லூரி, அவள், சுற்றி திரிதல் ஶ்ரீநகர் டால் லேக்-குள்மார்க்-பெகல்காம்-சிம்லா -வாரணாசி கங்கை பிரமபுத்திரா-மேற்கே தார் சுடுமணல்- துங்கபத்ரா-கோதாவரி - கிருஷ்ணா-காவேரி-தென் குமரி முக்கடல் வரை, இளமை-மாணவர் கால அரசியல்,அன்றைய தலைவர்கள் என…. மறக்க நினைக்கிறேன்
ஞாபக மடிப்புகளுக்குள்
ஒளிந்து கொண்டு அவ்வப்போது
எட்டி எட்டிப் பார்க்கின்றாய்…

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-4-2023.


முதல்வர் ஸ்டாலின் திடீரென்று இவ்வளவு ஆர்வமாக குடியரசுத் தலைவரைச் சந்திக்க செல்வதின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்திக்க இன்றைக்கு டெல்லிக்கு செல்ல உள்ளார். சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள வளாகத்தைத் திறக்க குடியரசுத் தலைவரை அழைக்கச் செல்வதாகத் தகவல். 

சரி. 
 குடியரசுத் தலைவர் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்த பிறகு முதல் தடவையாக  தமிழகம் வந்தபோது அவரை வரவேற்கக் கூட முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை. பிரசிடென்ஸ் மினிஸ்டர் ஃபார் வெயிட்டிங்கிற்குக் (President's waiting for ministers) கூட ஜூனியர் அமைச்சர்தான் அனுப்பி வைக்கப்பட்டார். 
 முதல்வர் திடீரென்று இவ்வளவு ஆர்வமாக குடியரசுத் தலைவரைச் சந்திக்க செல்வதின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. 

ஒரு பக்கம் ஜி ஸ்கொயர் ரெய்டுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏதோ நடக்கின்றது, நடக்கட்டும். 
 
அதோடு இன்று ஒரு முக்கிய திமுக தலைவர் என்னிடம் பேசும்போது, என்னுடைய இடைநீக்கம் குறித்து கூட கட்சித் தலைவருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் சரியான தெரிதல் வரவில்லை என்று ஒரு கருத்தைச் சொன்னார். அதனால்தான் விளக்கம் கேட்டு எனக்கு நோட்டீஸும், என்னை நீக்கம் குறித்தான அறிவிக்கையும் எனக்கு வரவில்லை என்று எனக்குப்பட்டது. எது நடந்தால் என்ன? நம் பணி நமக்கு.

" பூனைகளை விட
    புலிகள் வலிமையானவை
    என்பதை
    எலிகள் எப்போதும்
    ஏற்றுக்கொள்வதே
    இல்லை. " 
-புதுமைப்பித்தனின் சொற்கள் நினைவுக்கு வந்தது. வாழ்க தமிழகம்…வாழிய வாழிய வாழியவே…

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-4-2023.


Prakash Singh Badal

Prakash Singh Badal passed away at the age of 95. A long life, well lived. Was always helpful to everyone. Followed the rule book without making it hurtful. Entered public life by contesting the post of Sarpanch in his village, Badal.  Youngest CM of Punjab also, the oldest CM. Became CM five times. Longest serving tenure in Punjab. Broke the record of Partap Singh Kairon for being the longest serving CM. Promoted amity among all even in the face of constant instigation from divisive forces from across the border.
-India History



#TamilNadu_Land_Consolidation (for Special Projects) - #Act_2023 #நீர்நிலைகள், #நீரோடைகள், #வாய்க்கால்கள்

#இயற்கைவள சுரண்டல் சட்டம் 
—————————————
தமிழக சட்டமன்றத்தில் மற்றொரு ஆபத்தான மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாக்கல் செய்து அது சட்டவடிவமாகியுள்ளது. இது பெரிதாக கவனத்துக்கு வரவில்லை.

ஏற்கெனவே 12 மணி நேர வேலை தொழிலாளர் திருத்தச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் திரும்பப் பெறவில்லை. கடந்த ஏப்ரல் 21, 2023 அன்று நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால்கள் அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறைவான நிலங்களை சிறப்புத் திட்டம் (Tamil Nadu Land Consolidation (for Special Projects - Act, 2023)  என்ற பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒருங்கிணைத்துக் கொடுக்கலாம் என்று ஓர் ஆபத்தான மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகி
யுள்ளது. 

 இந்த சிறப்புத் திட்டத்தால் நீர் நிலைகள் அழிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். தொழிற்சாலைகள், வியாபாரமால்கள் கட்டுவதற்கு அந்த நிலங்களின் உரிமையாளரோ, அரசோ அவர்களின் விருப்பம் போல நிலங்களைப் பயன்படுத்தலாம். இது நீர் வரத்துகளில், நீர்நிலைகளில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்  இயற்கை வள சுரண்டல் சட்டமாகும். ஏற்கெனவே 65 ஆயிரம் நீர்நிலைகள் இருந்த தமிழ்நாட்டில் 30 ஆயிரம் நீர்நிலைகள்தாம்  இருக்கின்றன. அதில் வீடுகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், வியாபார மால்கள் என்று கட்டி சமூக விரோதிகள் நாசம் செய்துவிட்டார்கள். 

மேலும் அந்தக் கொடுமையை அதிகரிக்கும் வகையில்தான் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். 
 இந்த நுணுக்கமான விஷயங்களை அறிந்து சொல்ல யாரும் இந்த அரசாங்கத்தில் இல்லையா? தகுதியே தடை என்கிற நிலையில் தானே திமுக இதுவரை இயங்கி வருகிறது. என்ன சொல்ல? முதல்வர் ஸ்டாலினுக்கே வெளிச்சம்.

#TamilNadu_Land_Consolidation (for Special Projects) - #Act_2023
#நீர்நிலைகள், #நீரோடைகள், #வாய்க்கால்கள் 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-4-2023.

Wednesday, April 26, 2023

#ஊழல்கள் வரலாறு காலம் முதல் இன்று வரை #Corruption #scandals #ஊழல்கள்

#ஊழல்கள் வரலாறு காலம் முதல் இன்று வரை
#Corruption #scandals #ஊழல்கள்

#KS.Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே.எஸ்.இராதாகிருஷ்ணன், 
#அரசியல்,

#ksrpost
26-4-2023.

https://youtu.be/33pFL_2l-ZI

கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை

கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை 
—————————————
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கடந்த 21.04.2023 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழகம் நிம்மதியாக, அமைதியாக இருக்கிறது என்று தானே புகழ்பாடிக் கொண்டார். அது குறித்த எனது சமூக தளங்கள் பதிவில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் நிகழ்ந்தன, கொலைகள் என்று விரிவாக பட்டியல் இட்டிருந்தேன். 
 
நேற்று கிராம அதிகாரி லூர்து படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். லூர்து குடும்பத்திற்கு அரசுப் பணி மற்றும் ரூ.1 கோடி நிவாரணம்  என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சற்று ஆறுதல் தரும் விடயம்தான்.  இந்த மாதிரி நிவாரண நிதி இதுவரை பொதுவாக பல சம்பவங்களில் 25 -50 லட்சத்துக்கும் மேல் தாண்டாது. இங்கே surprising ஆக ரூ.1 கோடி லூர்து குடும்பத்துக்கு கொடுத்தது சரிதான். மறுக்கவில்லை. அதே சமயம்,  வேறு காரணங்களுக்காக ரூ.1 கோடி கொடுத்திருந்தால்  இதய சுத்தியோடு அதை வரவேற்கவும் முடியாது.

1. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் வெற்றி பெற வேண்டும்.
2 ஜி ஸ்கொயர் ரெய்டு, 12 மணி நேரம் வேலை தொழிலாளர் சட்டத் திருத்தம்,  மதுபானம் தொடர்பான அரசு அறிவிப்பு போன்றவற்றால் அவப் பெயர் வந்துவிட்டதே என்ற அச்சத்தின் காரணமாக இந்த நிதி வழங்கப்பட்டது என்ற சந்தேகமும் சிலருக்கு எழுந்துள்ளது. அதை பலருடைய முக நூல் பதிவிலும் பார்க்க முடிகிறது. 

அப்படி என்றால் நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்து உண்மையாகவே படுகொலைக்காகவா? தங்களின் சுயநல விருப்பத்துக்காகவா என்ற வினாக்கள் எழுகின்றன. என்றபோதிலும் லூர்து குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளித்ததும் ஏற்புடையதுதான்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
26-4-2023.

#மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே

#மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின்அவர்களே, 
—————————————
தலைவர் கலைஞரைப் போல அறிவுசார்ந்த புரிதலும், கட்சிக் களப்பணியும், மக்கள் உணர்வுகளையும் அறிந்த நிர்வாகிகளுடன் கூட இருங்கள். இல்லையென்றால், நீங்கள் நினைக்கும் நோக்கத்திற்கான ஆட்சி அமையாமல் போய்விடும். 52 ஆண்டுகால அரசியல் களப்பணி செய்தும் பல்வேறு வகையில் திமுகவுக்கு உழைத்தும் இடைக்காலமாக நீக்கப்பட்ட அடியேனுடைய எண்ணம் இது. இதை எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

#ksrpost
26-4-2023.

Tuesday, April 25, 2023

#விளாத்திகுளம்சாமிகளின் நினைவு நாள்

(April 25, 2022 மீள்)
  · 


--------------------------
இன்றைக்கு (25-04-2022) விளாத்திகுளம் சாமிகளின் நினைவுநாள். 
காடல்குடி ஜமீன் நல்லப்பசாமி தன்னுடைய இசைவளத்தால் விளாத்திகுளம் சாமிகள் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார். இன்னும் அவரைப் பற்றி அறியாத மக்கள் கரிசல் வட்டாரத்திலேயே இருக்கிறார்கள் என்பது வருத்தமான செய்தி. விளாத்திகுளம் பேருந்துநிலையம் அருகில் அவரது பெயரில் ஒரு கலைக்கூடம் இருந்தது தற்போது இல்லை. விளாத்திகுளம் சாமிகளின் புகழ் உலகெங்கும் சென்றடைய வேண்டுமென்பது என்போன்றவர்கள் மட்டுமன்றி, இந்த வட்டார மக்களின் அவா ஆகும். 



அவரைக் குறித்தான எனது கடந்துகால பதிவுகள் வருமாறு.
*விளாத்திகுளம் சுவாமிகள்*
இவரது முழுப் பெயர் நல்லப்பசாமி ஆகும். #வீரபாண்டியகட்டபொம்மனின் உறவினர். ராஜகம்பளம் வகையைச் சேர்ந்தவர். #காடல்குடி ஜமீன்தார் வழித்தோன்றல். விளாத்திகுளத்தில் வந்து குடியேறி, கூரை வீட்டில்தான் துறவி போல வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். கருத்த மேனி; ராஜ களையான முகம்; நெற்றியில் வாடாத திருநீற்றுப் பூச்சு, வெள்ளையான அடர்த்தி மீசை. பழுத்த ஆன்மிகவாதி. வெள்ளை வேஷ்டி, மஞ்சள் நிறத் துண்டு, சில நேரங்களில் பச்சை நிறத்தில் பீதாம்பரம். திருநீற்றுப் பை எப்பொழுதும் மடியில் இருக்கும். அப்பையில்தான் அனைத்தையும் வைத்துக்கொள்வார். பாதுகாப்புக்குப் பெட்டியோ, பீரோவோ எதுவும் கிடையாது. கோபமோ, ஆத்திரமோ வந்தது கிடையாது. #கச்சேரியில் #ராகதாளத்தில் யாராவது தவறு செய்துவிட்டால் கை ஜாடை மூலம் உணர்த்துவார்.
யாராவது இவரைச் சந்திக்க வந்தால் ‘சாப்பிட்டாயா?’ என்றுதான் முதலில் கேட்பார். அப்படிச் சாப்பிடவில்லையென்றால், உடனே கையிலுள்ள விபூதிப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துச் ‘சாப்பிட்டு வா’ என்று அனுப்புவார். கச்சேரிக்கு யாராவது தொகை என்ன? என்று கேட்டால், "கொடுப்பதைக் கொடுங்கள்; என்னுடன் வருவோர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்பதை மட்டும் சொல்வார்.
இவருக்கு மிகவும் நெருக்கமாகக் கட்டப்பூச்சி முதுலியார் உடன் இருப்பார். ஒரு தடவை மைசூர் மகாராஜா, சுவாமிகளை மைசூர் அரண்மனைக்குத் தசரா விழாவையொட்டி அழைத்த பொழுது, இந்தக் கட்டப்பூச்சி முதலியார், மைசூர் அரசரிடம் "விளாத்திக்குளம் சுவாமிகள் ஜமீன் பரம்பரையைச் சார்ந்தவர். அவர் தங்களைத் தலை தாழ்த்தி வணங்க மாட்டார்" என்று சொல்ல, விளாத்திகுளம் சுவாமிகளுடைய பாட்டை முழுமையாக இருந்து கேட்டு, மைசூர் அரசர் தங்க மெடல் ஒன்றைச் சன்மானமாகக் கொடுத்துவிட்டார். அதை மிகவும் வறுமையில் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுத்துவிட்டார். இதைக் கண்ட முதலியார், "வீட்டில் செலவுக்குக் கஷ்டப்படும்போது, சுவாமிகள் இப்படித் தானம் செய்கிறாரே" என்று புலம்பினாராம். அது போலவே சங்கரன் பிள்ளையும் சுவாமிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்.
சுவாமிகளிடம் குருமலை லட்சியம்மாள் இணைந்து பயின்றார். இவர், கே.பி. சுந்தராம்பாள் மாதிரி பாடக்கூடியவர். சுவாமிகளுக்குத் தமிழகமெங்கும் ரசிகர்கள் உண்டு. சுவாமிகளின் இசையில் சொற்கள் கிடையாது. ராகங்கள்தான் இருக்கும். உச்சத்தில் 5 கட்டத்திற்கு மேலேயே பாடுவார். ஒலிபெருக்கி, மின்சாரம் இல்லாத நேரத்தில் இவருடைய பாட்டு ஒரு மைல் தொலைவுக்குக் கேட்கும். கே.பி. சுந்தராம்பாள், டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்கள் சுவாமிகளைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெறுவதுண்டு.
ஒருமுறை தியாகராஜ பாகவதர் பரமக்குடியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காரில் விளாத்திகுளம் வழியாக வந்தபொழுது, விளாத்திகுளத்தில் காரை விட்டு இறங்கி நடந்து வந்தாராம். ஏனென்றால், விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் இருந்த இடம். அதில் மரியாதை நிமித்தம் நடந்து வர வேண்டும் என்பதற்காக நடந்து சென்றார்.
விளாத்திகுளத்தில் கனமழை. சுவாமிகளுடைய குடிசை வீடு முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருந்தது. ஊர் மக்கள் சுவாமியைக் காணோமே என்று தேடியபொழுது, குளக்கரையில் தவளை கத்தும் சத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தார் சுவாமிகள். அதுபோன்று மதுரை வைகையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, நாதசுவரக் கலைஞர் பொன்னுசாமியின் தகப்பனாருடைய நாதசுவர இசைக்கு ஏற்றவாறு தன்னுடைய வேட்டி துண்டுகளை அடித்துத் துவைத்தார். திடீரென்று இசை நின்று போனபொழுது மிகவும் வருத்தப்பட்டார். "நயமான தாளம் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தேன். இசை நின்றவுடன் விட்டுவிட்டேனே; போச்சு போச்சு" என்றாராம்.
இறுதிக் காலத்தில் சிவகிரி அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆசிரமம் கட்டி வாழ வேண்டுமென்று விரும்பினார். பொருளாதாரச் சிக்கலால் அப்பணியைத் தொடர முடியாமல் வேதனையடைந்தார்.
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், ராஜரத்தினம் பிள்ளையின் மைத்துனர் திருவெண்காடு சுப்பிரமணியம் ஆகியோர் சுவாமிகள் மீது பக்தியோடு கூடிய மரியாதையை வைத்திருந்தனர். விளாத்திகுளம் சுவாமிகளின் மணிவிழாவைக் காருகுறிச்சி அருணாசலம் ஏற்பாடு செய்தார். புதூர் ஆசிரியர் முருகையா இந்நிகழ்ச்சிகளின் அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொண்டார். மணிவிழா நிகழ்ச்சியில் ம.பொ.சி., சிவாஜி கணேசன், ஏ.பி. நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விளாத்திகுளத்தில் சுவாமிகளின் சமாதி பராமரிப்பு இல்லாமல் பஸ் நிலையம் அருகே இருக்கின்றது. இந்த நினைவிடத்தைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை பல சமயங்களில் எழுந்தும் பாராமுகமாகவே அரசு நிர்வாகம் இருக்கின்றது.
சேத்தூர் ஜமீன் "சோத்துக்கு அலைந்தவன் சேத்தூருக்குப் போ; சோறு மணக்கும் சேத்தூர்" என்ற பெருமைக்குரிய சேத்தூர் ஜமீன், இன்றைக்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்தாலும், இந்த ஜமீன் ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முக்கிய ஜமீனாகத் திகழ்ந்தது. அந்த ஜமீனில் கிஸ்தி வசூலிக்க வந்த வெள்ளையரை எதிர்த்துப் பெண்களே போராட்டம் நடத்தியது அக்காலத்தில் பெருமையாகப் பேசப்பட்டது. இந்த ஜமீனைச் சேர்ந்த ஜமீன்தார் சேவுகப் பாண்டியத் தேவர் பிற்காலத்தில் செம்மை, சித்தார் போன்ற பக்கவாத்தியங்களை வாசிக்கக்கூடிய அளவுக்குப் புகழ்பெற்றார்.
அதிசய சாதனை புரிந்த வித்துவானுக்கு மகாராஜா பண முடிப்பும் வைரக்கல் பதித்த தங்க மோதிரமும் பரிசாக அளித்தார். பரிசைப் பெற்றுக்கொண்ட வித்துவான், என்னைப் போல் யாராவது ஒரே ராகத்தை மூன்று நாட்கள் ஆலாபனை செய்து பாடினால், அவருக்குத் தான் பெற்ற பரிசுகளைத் திருப்பி அளித்துவிடுவதாகக் கூறினார். இதைக் கேட்ட விளாத்திகுளம் சுவாமிகள் மேடையேறி ‘கரகரப் பிரியா’ ராகத்தை ஐந்து நாட்கள் வரை பாடினார். சவால்விட்ட வித்துவான் மெய்ம்மறந்து சுவாமிகளின் காலடியில் விழுந்து வணங்கி, தான் பெற்ற பரிசுகளை சுவாமிகளுக்குத் திருப்பி அளித்தார். மகாராஜா சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, நல்லப்பரை அணைத்துப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, சன்மானமும் தங்கப்பா பதக்கமும் அணிவித்துச் சிறப்பித்தார்.
"கோவில்பட்டிக்கும் விளாத்திகுளத்துக்கும் இடையில் 32 கி.மீ. தொலைவு. சப்த நெரிசல் இல்லாத காலம். கோவில்பட்டி ஆலைகளில் சங்கு ஊதினால், விளாத்திகுளம் மந்தைக்குக் கேட்கும். உள்ளே இருக்கும் தொழிலாளிகளை வெளியே அனுப்பவும், வெளியிலிருப்பவர்களை உள்ளே அழைக்கவுமான சங்கு ஊதல் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும். சங்கொலி மெல்ல மெல்ல ஏறி உச்சிக்குப்போய் ஒரு பாட்டம் அந்தரத்தில் நிற்கும், ஆகாயத்தில் நின்று ‘எல்லாம் சரியா இருக்கா’ என்று பார்ப்பதுபோல் தோன்றும். வழுக்கு மரம் ஏறியவன் தானே கீழிறங்குவதுபோல், மெதுமெதுவாக வழுக்கிக்கொண்டே வரும். விளாத்திகுளம் மேற்கில் வடகயிறு போல் கிடக்கும் வைப்பாற்றின் வெட்டவெளியில் நின்று சங்கொலிக்கு இணையாக நல்லப்பர் குரல் பிடிப்பார். மேலே மேலே ஏறி ‘கும்’மென்று உச்சியில் நிறுத்திக் கீழே கொண்டுவருவார்" என தகவல்கள் ...
#விளாத்திகுளம்_சுவாமிகள்
#நல்லப்பசாமி
#Vilathikulam 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-04-2022.

தமிழகமுதல்வர் ஸ்டாலின் அவர்களே

#


நேற்று தங்களோடு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் உள்ள சிலர் அல்ல பலர், 2006 இல் இருந்து 2018 வரை முள்ளிவாய்க்கால் பிரச்னையிலிருந்து பல பிரச்னைகளுக்காகவும் -  2006 - 2011  தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2 ஜி விவகாரத்தில் இருந்து தொடங்கி ஊழல் என்று திமுகவுக்கும், கலைஞருக்கும், தங்களுக்கும் எதிராகவும் கூப்பாடு போட்டவர்களாக இருந்தார்கள். அந்த கூப்பாடுகளைச் சமாளிக்கக் கூடிய கேடயமாக அப்போது நான் உங்களுக்குப் பயன்பட்டேன்.
 
தாங்கள் ஈழப்பிரச்சனையில் ஐநா சபைக்குச் செல்ல ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்ததும், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தங்கள் கலந்து கொண்டபோது அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததிலும் முன்னணியில் இருந்தேன். அப்போது எல்லாம் கூப்பாடு போட்டவர்கள்தான் இவர்கள். திமுகவுக்கும், கலைஞருக்கும், தங்களுக்கும் உழைத்தவர்களாகிய என்னைப் போன்றவர்கள் கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டு, இப்போது வெளியே நிற்கிறோம். அன்றைக்கு திமுகவுக்கு எதிராக கோஷம் போட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு திமுகவுக்கு உழைத்தவர்கள் போல, களப்பணியாற்றியவர்கள் போல புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்கிறார்கள். அந்த புகைப்படத்தில் நீங்களும் இருக்கிறீர்கள். நல்லது. நாளைக்கு திமுக எதிர்க்கட்சியான பிறகு இவர்களே  திரும்பவும் உங்களைத் திட்டுவார்கள்.
****
தலைவர் கலைஞர் தன்னோடு நுண்மான் நுழைபுலம் மிக்கவர்களை அருகில் வைத்துக் கொள்வார். முரசொலி மாறன், நாஞ்சிலார், வைகோ அவர்களோடு இருப்பதை பெரும் மகிழ்வாக நினைப்பார். என்னிடம் ஒருமுறை, “உன்னைப் போன்ற விவரங்கள்,  தரவுகள் தெரிந்தவர்களோடு இருப்பது எனக்கு பலம்ப்பா ” என்றார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இது தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. 
எப்படியோ விழாக்கள் எடுத்து பாசாங்‌குத்தனமாக முதல்வருக்கு சந்தோஷத்தைக் கொடுப்பவர்கள்தான் உண்மையான கட்சி களப்பணியாளர்கள் என்று நினைக்கிறார் போலும். அப்படி அவர் நினைத்தால் ஜெயலலிதா ஏமாற்றப்பட்டது மாதிரி இன்றைய முதல்வரும் ஏமாற்றப்படுவார். கலைஞர் போல எந்த சோதனையையும் தாங்கக் கூடிய வல்லமை முதலமைச்சருக்கு வராது. 
 முதலமைச்சர் அவர்களே, போலிகளை ஒதுக்குங்கள். பதவி இருந்தால் போலிகள் எழுந்து நிற்பார்கள். பதவி இல்லையென்றால் காக்கிச் சட்டையைப் பார்த்து பயந்து ஓடிவிடுவார்கள். இது உங்களுக்கே தெரியும். 

சைதை இடைத்தேர்தல்,. ஆண்டிபட்டி இடைத் தேர்தல், வேளச்சேரியில் உங்கள் வீட்டிற்கு நள்ளிரவில் போலீசார் வந்தபோது முழுமையாக நான் அங்கிருந்து கண்ட காட்சிகள் இவற்றை எல்லாம் உங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். சொல்ல வேண்டியதைச் சொல்வதும், பதிவு செய்ய வேண்டியதும் என் கடமை. எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் முற்றும் தெரிந்த முதலமைச்சருக்கே உரியது.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-4-2023

#மாண்புமிகுமுதல்வர்ஸ்டாலின்அவர்களே, 

திடீரென்று  பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜன் அவருடைய இரண்டாவது வீடியோவை இன்று தெருவுக்குக் கொண்டு வந்துவிட்டார். எந்தவித உழைப்பும் இல்லாமல் உங்களால் பதவி கொடுக்கப்பட்ட மனிதர் அவர். அரசியலில் அவரை உச்சத்தில் வைத்தீர்கள். சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பி ஆட்சி நடத்தினாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் விட மாட்டார்கள். 
 நேற்று வரை வெளியேயும் சட்டமன்றத்திலும் தி.மு.கவையும், தலைவர் கலைஞரையும் உங்களையும் திட்டியவர்களை எல்லாம் நீங்கள் அழைத்து அவர்களுக்கு பதவிகளை அள்ளித் தந்து கௌரவிப்பீர்கள். தி.மு.கவுக்காக உண்மையிலேயே உழைத்தவர்களைத் தள்ளி வைப்பீர்கள்; நீக்குவீர்கள். நன்றாக இருக்கிறது, உங்கள் அரசியலும் உங்களுடைய அறம் சார்ந்த அணுகுமுறைகளும்! வாழ்க தி.மு.க! வேறு என்ன சொல்ல முடியும்? 
 
கலைஞர் ஐம்பது ஆண்டு காலம் கடுமையான சோதனை காலங்களிலும் தி.மு.க வைக் கட்டியமைத்து, வளர்த்துச் சென்றார். இப்போது என்ன சொல்ல?

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-4-2023.

#நடிகை தேவிகா-80

#நடிகை தேவிகா-80
———————————
நான் இப்போது சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் (ECR) வசிக்கும் வீட்டு மனை நடிகை தேவிகாவின் குடும்பத்தினரிடம் இருந்து  வாங்கியது. தேவிகாவுக்கு  இன்றைக்கு வயது 80. கவிஞர் கண்ணதாசனுக்கு உற்ற சகோதரியாக இருந்தார். கவிஞர் மூலம் எனக்கு அறிமுகம் ஆனார். 

அவர் என்னை ‘தம்பு-தம்பி’ என்று அழைப்பதும் உண்டு. அவர் வீட்டுக்கு பலமுறை என்னை அழைத்து, எனக்கு விருந்து அளித்ததும் உண்டு. அரசியலில் நான் முக்கிய இடத்துக்கு வர வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பியவர்களில் சகோதரி தேவிகாவும் ஒருவர். அவருக்கு இன்றைக்கு பிறந்த நாள். சகோதர பாசத்தோடு அவரோடு பழகிய நினைவுகள் இன்றைக்கும் மனதில் நிழலாடுகின்றன.




நடிகை தேவிகா அவர்களின் 80 வது பிறந்த தினம். (ஏப்ரல்-25--1943--மே 2--2002)

தென்னிந்திய திரைப்பட நடிகையாகிய இவர் தமிழ், தெலுங்கு உட்பட ஏறத்தாழ 150 படங்களில் நடித்துள்ளார்.

இவரது பூர்வீகம் ஆந்திரா, இயற்பெயர் பிரமீளா. இவர் அன்றைய முன்னணி கதாநாயர்கள், எம். ஜி ஆர்., சிவாஜி ஜெமினி ஆகியோருடனும், மற்று முத்துராமன், எஸ். எஸ் ராஜேந்திரன் போன்ற நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இவர் முதல் முதலாக எஸ். எஸ். ராஜேந்திரனுடன் இணைந்து முதலாளி என்ற படத்தில்கதாநாயகியாக நடித்தார். எம் .ஜி ஆர் அவர்களுடன் ஒரே ஒரு படத்தில் ஆனந்த ஜோதியில் மட்டும் நடித்தார். சிவாஜீயுடன் நடித்த வரலாற்று படமான கர்ணன் மிகவும் பேசப்பட்டது., குலமகள் ராதை, பலே பாண்டியா, ஆண்டவன் கட்டளை, ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினியுடன் சுமைதாங்கி, ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த வெற்றிப்படமாகும். இதயத்தில் நீ, வாழ்க்கைப்படகு, முத்துராமனுடன் நெஞ்சில் ஓர் ஆலயம், மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை, வானம்பாடி, மிக சிறந்த படங்களாகும்.. 1975 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படியும் ஒரு பெண் இவர் நடித்த கடைசி படமாகும்.

இவர் நடித்த பட
பிரபலமான பாடல்கள்

அமைதியான நதியிலே

கங்கைக்கரை தோட்டம்

சொன்னது நீதானா

நினைக்க தெரிந்த மனமே

நெஞ்சம் மறப்பதில்லை

உறவு என்றொரு சொல் இருந்தால்

முத்தான முத்தல்லவோ

கண்கள் எங்கே

அழகே வா

வாழ நினைத்தால் வாழலாம்

அத்திக்காய் காய்
என பல….

****
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன் குமுதம் பத்திரிகையில்
'இந்த வாரம் சந்தித்தேன் ' என்ற கட்டுரையிருந்தது.
தேவிகா...
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு; கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு.
இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா.
அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட, நன்றாகவே நடித்தார்; அழகாகவே இருந்தார். வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
என்ன உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.
எந்தக் குடை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத் தானே நான் தேர்ந்தெடுக்க முடியும், என்பேன் நான்.
படப்பிடிப்பிற்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யமாட்டார்.
தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுதுவிடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.
தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான இவர், தெலுங்கைவிடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.
குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று.
இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.
குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர்.
எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.
“பாவி” என்றொரு சொல் தமிழில் உண்டு. இது ‘பாவி’ என்பதன் எதிர்மறை. ‘பிரதட்சிணம் அப்ரதட்சிணம்’ என்பது போல ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.
மனமறிந்து - அல்ல, தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.
‘ஆண்டவன் நல்லவர்களையே சோதிப்பான்’ என்றபடி அவருக்கும் சில சோதனைகள் வந்தன.
ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.
‘நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி என்பார்கள் என் தாயார்.
அதுபோல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.
அதனை எண்ணி, தேவிகா துன்புறவில்லை.
எப்போது அவருக்கு என்ன துன்பம் வந்தாலும் எனக்குத்தான் டெலிபோன் செய்வார்.
என்னவோ ஆண்டவன், அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே அவருக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.
சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.
துரதிருஷ்டவசமாக எனது ‘மங்கல மங்கை’ப் படம் பாதியிலேயே நின்று விட்டது.
அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல, அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.
லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகை நடிகர்கள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுமையும் சுற்றுப் பயணம் செய்தேன்.
இரண்டு விமானப் படை விமானங்களில் தான் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும். எல்லோரும் மள மளவென்று ஏறிவிடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். எனக்குக் கை கொடுத்து விமானத்திற்குள், இழுத்துக் கொள்வது தேவிகாவே.
ஒரு படத்தில் அவருக்காக, “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடலை எழுதினேன்.
என்னிடம் செல்லமாகப் பாட வேண்டும் போல் தேவிகாவுக்குத் தோன்றினால் அந்தப் பாடலைத்தான் பாடுவார்.
வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடிவிடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.
சினிமாப் படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
கதை, வசனம், பாட்டு டைரக் ஷன், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.
சமயங்களில், தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.
சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். - தேவிகா...
ஒருநாள் கூடப் படப் பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.
என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘ அண்ணனுக்கு என்ன கவலை? என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கிவிடும் தேவிகா.
அவர் ஒரு சினிமா நடிகைதான். ஆனால் பல குடும்பப் பெண்களைவிட உயர்ந்த குணம் படைத்தவர்.
“பிரமிளா” என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள்.

****

ஆள் அரவமற்ற ரோட்டில் அம்மாவும் மகளும் காருக்குள்ளே!  .அது நடுநிசி நேரம் இரவு பனிரெண்டைத் தாண்டிவிட்டது.சுற்றிலும் கும்மிருட்டு.சேலம் ஷூட்டிங் முடிந்து வரும் வழியில் கார் உளுந்தூர் பேட்டை அருகே  பிரேக் டவுன்.டிரைவரும் புரடக்ஷன் மேனேஜரும் அலை பாய்கிறார்கள். அம்மாவும் மகளும் உள்ளே போரடிக்காமல் இருக்க  ஏதேதோ பேசுகிறார்கள்.சட்டென மௌனம்.நடிகை யோசனையில் மூழ்கிப்போகிறார்.என்ன செய்கிறோம்?. எதுக்கு இந்த வாழ்க்கை?. அவரது  உள்ளத்தில் எழுகிறது கேள்வி.சினிமாவில் நுழையணும்னு நானா கேட்டேன்?. விதி இழுத்துக்கொண்டு வந்து இப்போது அத்துவானக் காட்டில்  விட்டிருக்கிறது.சிலரது வாழ்க்கை இப்படித் தான்.நாமாக எதையும் முடிவு செய்வதில்லை.எல்லாம் இந்த  பாட்டி செய்த வேலை!.. அம்மா சமாதானப்படுத்த மகளின் நினைவுகள் மெல்ல மெல்ல  பின்னோக்கிப் போகிறது.நாமும் அந்த நடுநிசியில் நடிகையை கொஞ்சம் நெருங்கி கவனிக்க!.. அட! .. நம்ம தேவிகா!.. அவருக்கு இன்று  பிறந்த நாள் என்கிறது நமது இசைக் குழு!..

காரணம் தெரியாது!..சில முகங்களை பார்த்த மாத்திரத்திலேயே நமக்குப் பிடித்துப் போய்விடும்.அதிலொரு முகம் தேவிகா!.. விரிந்த திரையில் அந்த பரந்த முகத்தைப் பார்க்கும்போதே ஒரு பரவசம்.!.. பட்டாம் பூச்சியாய் சதா படபடக்கும் கண்கள்.எப்போதும் ஈரமாகவே செதுக்கி வைத்த அதரங்கள்.எடுப்பான நாசி துடுக்கான பேச்சில் சட்டென நம்மை கட்டிப்போடும் அற்புதமான நடிகை.அறுபதுகளின் இளம் வாலிபர்களை தூங்கவிடாமல் செய்த பாவத்துக்குச் சொந்தக்காரர்.சோகமானாலும் சுகமானாலும் தனக்கென அதிலொரு தனி முத்திரை!..இந்த ஆந்திரப் பொண்ணு எப்படி கோடம்பாக்கத்திற்கு வந்து கோலோச்சியது?. நடுநிசியில் நடு ரோட்டில் யோசிக்கும் நாயகியோடு நாமும் கொஞ்சம் இணையலாம்.கண்ணை மூடி கனவில் போகும் நாயகி!..

ஸ்கூல் ட்ராமாவில தான் அந்த கலையார்வம்.பாழாய் போன கூச்சம் தான் படுத்தியெடுக்கும்.சக மாணவிகளோடு அரட்டையில் ஆர்வமில்லை.அடியே!.. பிரமிளா!.. உனக்கு ஹீரோ வேஷம்.டீச்சரா எடுத்த முடிவு!.. வாடீ!.. ஹீரோ!.. தோழிகள் மேடையேற்றியது தான் முதல் அனுபவம்.படிக்கும்போதே பாட்டியிடம் பலர் வந்து நடிக்க கேட்டார்கள்.காலஞ்சென்ற இயக்குநர்  ஆர்.பிரகாஷ் பாட்டிக்கு உறவு.பல படக் கம்பெனிகள் அவருக்குத் தெரியும்.அப்படித் தான் பிருதிவி பிலிம்ஸ் பாட்டியை நச்சரித்தார்கள்.பாப்பா சினிமாவுக்கு வந்தா எங்கேயோ போயிடும்! ..பாட்டி கரைந்தார்
புட்டிலு சான்ஸ் இப்படித்தான் கிடைத்தது.படித்துக்கொண்டே படப்பிடிப்பு. தோழிகளிடம் மூச்சு விடவில்லை.கேலி செய்வார்கள்.சின்ன வேஷம் தான்.இதைப் பார்த்துத் தான் புல்லைய்யா என்னை பக்க இண்டி அம்மாயிக்கு அழைத்தார்.தனது சொந்த மகளைப் போல பாவித்தார்.சினிமா மீது ஆர்வம் வந்தது அப்போது தான்!.... ஜாலியா கல்கத்தா பயணம்.அவ்வளவு பெரிய சிட்டியை அப்போது தான் பார்க்கிறேன்.பள்ளி படிப்பு அம்பேல் ஆனது!..பாட்டி பரபரப்பானார்.அப்பா கஜபதி நாயுடு அமைதியாக பானுமதியம்மா அழைத்தார்.

மணமகன் தேவையில் முழு சினிமா உள்ளே இறங்கியது.பானுமதியம்மாவும் தனது பெண்ணாகவே பார்த்துக்கொண்டார்.லலிதாங்கியில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது.ஆனால் எம்.ஏ.வேணு தான் என்னை ஊரறிய வைத்தவர்.ஆரம்பத்தில் முதலாளி படத்திற்கு வில்லி வேஷம் தான் என்பது நிறைய பேருக்குத் தெரியாது.பத்மினி தான் ஹீரோயின்.அவர் ரஷ்யா போனதால் நான் தப்பித்தேன்.வில்லிக்கான போர்ஷன் மனப்பாடம் செய்துகொண்டிருந்தபோது தான் பையன் வந்து ஹீரோயின் போர்ஷனை தந்துவிட்டுப் போனான்.எனக்கே ஆச்சரியம். வள்ளி கேரக்டருக்கு நானா?.ஏரிக் கரையின் மேலே போகும் பெண் மயிலை சினிமா ரசிகனுக்கு பிடித்துப்போனது. இன்னும் நடிப்பை மெருகேற்ற சேவா ஸ்டேஜில் இணைந்தேன்.அவங்க தான் கூப்பிட்டாங்க.சிவாஜியெல்லாம் ஸ்டேஜில் நடிக்கும்போது உனக்கென்ன?. என்னை மெருகேற்றியதில் பெரும் பங்கு ஐயா சகஸ்ரநாமத்தையே சேரும்.சினிமாவை எந்த அளவுக்கு வெறுத்தேனோ அதை விட இரு மடங்கு நாடகத்தை வெறுத்தேன்.ஆனா பாருங்க!.. திரையில் என்னைப் பார்த்து எனக்கே ஆச்சரியம். நானா இவ்வளவு பாவனையோடு நடித்தேன்.?. அம்மா கார் ரெடி!..சட்டென கண் திறந்த தேவிகா சீக்கிரம் போலாம்பா!.. காலைல வாஹினியில் முக்கியமான கால்ஷீட் என்கிறார்.பாஞ்சாலி படப்பிடிப்பில் தான் இந்த பிரேக் டவுன்.அதன் பிறகு எவ்வளவு பாத்திரங்கள்!..நாமும் கொஞ்சம் ஓட்டிப் பார்க்கலாம்.

பிரமிளா தேவியை தேவிகாவாக மாற்றியது எம்.ஏ.வேணு. ஐம்பதுகளின் இறுதியில் அமைதியாக நுழைந்த தேவிகா அதிரடி காட்டியது அறுபதுகளில் தான்.ரசிக ரஞ்சனி சபாவில்  அவரது பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம் பார்த்த ஏ.வி.எம்.தொடர்ந்து மூன்று படங்களுக்கு அட்வான்ஸ் தந்தது அவரே எதிர்பார்க்காதது.சகோதரிக்கு இரண்டாயிரத்து ஐநூறு. களத்தூர் கண்ணம்மா பாவ மன்னிப்பு என ஆயிரம் கூடியது.மொத்தமாக ஏ.வி.எம்.குத்தகைக்கு எடுக்க அன்றைய ஹீரோயின்களுக்கு சரியான போட்டியாக வரப்போகிறார் என்பது அன்று அவர்களுக்குத் தெரியாது.இரண்டாவது நாயகிகளுக்கு கிடைக்கும் மரியாதை தனி தான்.செட்டில் அவ்வளவாக கண்டுகொள்ளமாட்டார்கள்.ஆனால் தேவிகா பள்ளி நாட்களில் இருந்த தேவிகா அல்ல.தான் இருக்குமிடத்தை கலகலக்க வைப்பது அவரது இயல்பாகிப் போனது.சட்டென அனைவரிடமும் ஒட்டிக்கொள்வார்.லைட் பாய் வரை தோளில் கை போடுவார்.புல்லைய்யா பந்துலு தொடங்கி பானுமதி வரை எம் பொண்ணு என வாயார வாழ்த்த தேவிகா எவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும்.வாழ்க்கைப் படகு காலத்தில் வாசனின் மனைவி எம் பொண்ணு என்றது மிகப் பெரிய விஷயம்.இயக்குநர்கள் பக்கத்திலிருந்தும் நல்ல பெயர் கிடைத்தது.நடித்தெல்லாம் காட்ட வேண்டிய அவசியமில்லை.இது தாம்மா உன் கேரக்டர்.!.. நீயா டெவலப் பண்ணிக்கோ!..ஆச்சர்யமா இருக்கும்.நினைத்ததை விட பெட்டரா நடித்துத் தருவார். திறமையான இயக்குநர்கள் தேவிகாவின் நடிப்பைப் பார்த்து முகம் சுழித்த வரலாரே இல்லை!..இந்தப் பொண்ணை வேறு புக் பண்ணீட்டேன் !.. என்ன பண்ணப் போகுதோ?. ஆடிப் பெருக்கில் சங்கர் உண்மையாகவே சங்கடத்தோடு தான் படத்தை ஆரம்பித்தார்.ஆனால் ரஷ் பார்த்ததும் அடடா!.. என்னமா நடிச்சிருக்கா!..தேவிகா வரும் ஃபிரேம்களில் அசத்தியிருப்பார்.இதில் சந்திரபாபு பிஸ்கோத்து பாத்திரத்தில் வருவார்.அவரது பெர்ஃபாமன்ஸை தூக்கி நிறுத்தியது தேவிகா தான்.ஆன் த ஸ்பாட்டில் சந்திரபாபு ஆக்டிங் தர தேவிகா முகத்தைப் பார்க்க வேண்டுமே!..சக நடிகருக்குத் தோதாக தன்னை மாற்றிக்கொள்ளும் லாவகம் சில பேருக்கு மட்டுமே வரும்.காட்சிகள் வரும்போது தேவிகாவையே பாருங்க.காட்சியை அவ்வளவு அழகாக மெருகேற்றியிருப்பார்.ஆனந்த ஜோதியில் மக்கள் திலகத்தோடு இணையும் தேவிகா இன்னும் கொஞ்சம் படங்களில் தலைகாட்டியிருக்கலாமோ என ஏங்க வைத்திருப்பார்.ஆனால் தெலுங்கு சினிமாவில் வட்டியும் முதலுமாக என்.டி.ஆரின் அநேக படங்களில் தேவிகாவைப் பார்க்கலாம்.ஜெமினியோடு அசத்தலாக செட்டாவார்.பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போட வா என இதயத்தில் நீ படப் பாடல் கவிஞர் வாலியின் ஆரம்ப கால ஹிட்டில் தேவிகாவிற்காக மெனக்கெட்டிருப்பார் வாலி.

நடிப்பைத் தவிர பாடல்களில் வேறொரு தேவிகா!.. இசையரசி குரலுக்கு அசத்தலாக உயிர் கொடுப்பார்.நினைக்கத் தெரிந்த மனமே கொதிக்கத் தெரிந்த நிலவே போன்ற  எத்தனை எத்தனை பாடல்கள்.கவிஞர் இவருக்காகவே மெனக்கெடுவார்.கஷ்டமான நேரத்தில் வானம்பாடிக்கு கால்ஷீட் தந்து அவரது மானத்தைக் காப்பாற்றியவர்.ஆரம்ப கால பாவ மன்னிப்பு மேரியை நம்மால்  மறக்கவே முடியாது.நடிப்பில் வெளுத்து வாங்கும் சாவித்திரியை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விட்டிருப்பார்.பரபரப்பாக இருந்த சரோஜாவை குலமகள் ராதையில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளியிருப்பார்.அவர் ஏற்ற லீலா பாத்திரம் வேறு யார் செய்திருந்தாலும் இவ்வளவு பேசப்பட்டிருக்காது.சிவாஜியை காதலில் வீழ்த்த அவர் வீசும் அஸ்திரங்கள் நடிகர் திலகத்தையே திக்கு முக்காட வைக்கும்!.. அப்படிப் பார்க்காதே!.. அப்படிப் பார்க்காதே!.. ஆண்டவன் கட்டளையில் அந்த புரபஸரை அலறவிட்டிருப்பார்.அன்னை இல்லத்து கீதா முரடன் முத்து சீதா ஆண்டவன் கட்டளை ராதா என்ன ஒரு வெறைட்டி!..1963 ல் தான் அதிரடி காட்டியிருப்பார்.நெஞ்சம் மறப்பதில்லை இதயத்தில் நீ குலமகள் ராதை ஆனந்த ஜோதி வானம்பாடி அன்னை இல்லம் என எங்கு திரும்பினாலும் தேவிகா இருப்பார்.ஸ்ரீதரின் பாத்திரங்களுக்கு மேலும் மெருகூட்டிய தேவிகா.நெஞ்சில் ஓர் ஆலயத்தில் எதிர்பாராத சான்ஸ்.போலீஸ்காரன் மகளின் விஜயகுமாரியை மனதில் வைத்தே அந்த சீதா கேரக்டரை படைத்தார் ஸ்ரீதர்.எஸ்.எஸ்.ஆர்.முழு ஸ்கிரிப்ட்டையும் படிச்சுப் பார்க்கணும் என்றதும் ஸ்ரீதர் கடுப்பாகிவிட்டார்.அப்படியெல்லாம் உங்க வீட்டுக்காரம்மா எனக்குத் தேவையில்லை.விஜயகுமாரி கடைசி வரை புலம்பினார்.தேவிகா இரு ஆண்களுக்கு இடையே வெளுத்து வாங்கினார்.படத்தைப் பார்த்த மீனா குமாரியே அசந்துவிட்டார்.அந்த சொன்னது நீ தானா?. சொல்!.. சொல்!..சான்ஸே இல்லை.கர்ணனின் தர்ம பத்தினி சுபாங்கியாக தேவிகா.கண்ணுக்கு குலமேது?. கண்ணா என ஆறுதல் படுத்தும் அசத்தலான பாத்திரம்.கணவனா தந்தையா?. என கலங்கி நிற்கும் சுபாவை போய் வா மகளே என வழியனுப்பும் சாவித்திரி.மகனைச் சுமந்து நிற்கும் வெட்கம்.தந்தையை நினைத்து தயக்கம்!.. இரு வேறு நிலையில் நிற்கும் தேவிகா நம் மனதில் என்றும் நிற்கிறார்.அதே போல் பாண்டியன் மார்பில் துயிலும் பட்டத்து மகிஷியாக திருவிளையாடல் கேரக்டர்.பக்குவமான நடிப்பு.மாதவனின் நீல வானத்தை தேவிகாவிற்கே பார்க்கலாம். மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா!.. நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அந்த  நாயகியின் ஆசை!.அசத்தும்.இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் ஏய்யா அங்கேயே நிக்கிறே? . அழகே வா!..அருகே வா!.. உதட்டைக் கடித்து ஒரு பக்கமாக விழியைச் சுழற்றி விருந்துக்கும் அழைக்கும் அழகான  தேவிகாவை திரை ரசிகன் எப்படி மறப்பான்?.
••••
மெட்ராஸ் மேயர்- பாசுதேவ் நாயுடு வின் நெருங்கிய உறவுக்காரப்பெண் என்று புதுமுகமாக அறிமுகமான காலத்தில் அடையாளம். ஊமைப்படக் காலத்து சினிமாக்காரர் ரகுபதி வெங்கையா நாயுடுவின் பேத்தியாம். ரொம்பப்பாரம்பரியமான குடும்பம்.
இயற்பெயர் பிரமீளா!
சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரின் பங்களிப்பு தமிழ்ப்பட கறுப்பு வெள்ளை காலத்துக்கு அதிகம்.
அழகு நளினம் என்று தேவிகாவை சொல்லவேண்டும்.

 
தேவிகா சிவாஜியுடன் ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் 13 படங்களில் கமிட் ஆகியிருந்தார். இது ஒரு அபூர்வ நிகழ்வு.

ராணி பத்திரிக்கையில் அந்த 1960களின் பின்பகுதியில் ஒரு சுவாரசியமான பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரு அழகி தனக்குப்பிடித்த மற்றொரு அழகி பற்றி சொல்லவேண்டும்! அந்த அழகி மறுவாரம் தனக்குப்பிடித்த மற்றொரு அழகியைக்குறிப்பிடவேண்டும். இதில் சுலபமாக தேவிகா இடம்பிடித்தபோது தனக்குப்பிடித்த அழகியாக திருவிளையாடலில் முருகனாக நடித்த சிறுமியைக்குறிப்பிட்டார். அந்த சிறுமி சினிமாவில் பிரபலமாகவேயில்லை.

சினிமா பார்க்க தேவிகா தியேட்டருக்குப் போனால் முந்திரிப்பருப்பு சாப்பிட்டுக்கொண்டே படம் பார்ப்பார்.

சௌராஷ்ட்ராவான தேவதாஸ் அப்போது பீம்சிங்கிடம் உதவி இயக்குனர். அவரை தேவிகா திருமணம் செய்துகொண்டார்.

வாழ்க்கைத்துணையைத்தேர்ந்தெடுப்பதில் தேவிகா பெரிய தவறு செய்து விட்டதாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.


#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-4-2023.


#ஜாலியன்வாலாபாக் #உத்தமர்காந்தி.தாகூர், சி.ஆர்.தாஸ் குறித்து….

https://youtu.be/tBbgLm4DFOo

#ஜாலியன்வாலாபாக் 
#உத்தமர்காந்தி.தாகூர்,
சி.ஆர்.தாஸ் குறித்து…. 
—————————————
https://indianexpress.com/article/opinion/columns/rabindranath-tagore-congress-moral-charge-jallianwala-bagh-8560912/?utm_source=whatsapp&utm_medium=social&utm_campaign=WhatsappShare (https://indianexpress.com/article/opinion/columns/rabindranath-tagore-congress-moral-charge-jallianwala-bagh-8560912/?utm_source=whatsapp&utm_medium=social&utm_campaign=WhatsappShare)

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், 1919, ஏப்ரல் 13 அன்று, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், நிராயுதபாணியான இந்திய மக்கள் மீது  பிரிட்டிஷ் காலனித்துவ அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 379 பேர் கொல்லப்பட்டார்கள்;
 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஜாலியன்வாலபாக் படுகொலையானது, இளம் பகத்சிங்கின் இதயத்தில் புரட்சி நெருப்பை பற்ற வைத்தது. சக்திவாய்ந்த அந்த மரபை நாம் பின்பற்றுவோம்! உத்தமர் 
காந்தி-தாகூர்-சிஆர்.தாஸ் குறித்து….

#KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #அரசியல்,

#ksrpost
25-4-2023.

Monday, April 24, 2023

Shakespeare: உலகப் புத்தக நாள்!

Book: Coined by Shakespeare: Words and Meanings First Penned by the Bard
Available at : https://amzn.to/3L5loRb )

உலகப் புத்தக நாள்!
முதன்முதலாக  ஐரோப்பாவில்  ஸ்பானிய மொழியில் மிகையில்  டி செர்வெண்டோவின் டான் குவிக்ஸாட் என்ற ஸ்பானிய புதினம் வந்தது. அவரைக் கெளரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 7  ஆம் தேதி முதல் முறையாக உலகப் புத்தக நாள்  கொண்டாடப்பட்டது. அதற்குப் பிறகு  அவரது மறைந்த நாளான  1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக நாளானது. வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்றைய பெரு நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் இன்கா காரிசிலாசோ டி ல வேகா ஆகியோரின் நினைவு நாளும் இந்த  ஏப்ரல் 23 தான். 
 ஏதேனும் ஓர் உலக நகரத்தை  ஒவ்வோர் ஆண்டும் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்கு உகந்த நகரமாகத் தேர்ந்தெடுத்து, அதை  உலகப் புத்தகத் தலைநகரம் என்று யுனெஸ்ஸோ அடையாளப்படுத்துகிறது. 2023 ஆம் ஆண்டின் உலகப் புத்தகத் தலைநகரமாக கானா நாட்டின் தலைநகர் அக்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.



*This April 24th marks the 50th anniversary of the Kesavananda Bharati judgment which expounded the basic structure doctrin

*This April 24th marks the 50th anniversary of the Kesavananda Bharati judgment which expounded the basic structure doctrine. It is the most celebrated constitutional case of the country*. 
Read more: lnkd.in/g2EC-8Fi
#SupremeCourt  #Constitution


Sunday, April 23, 2023

சிறிலங்கா இராணுவத்தின் ஈழத்தில் படுகொலைகள்..

சிறிலங்கா இராணுவத்தின் படுகொலைகள்

1.சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆம் ஆண்டு நினைவுகளுடன் (1990.09.09 – 2021.09.09) 
2.சத்துருக்கொண்டான் படுகொலை – 09.09.1990 
3.நெல்லியடிச் சந்தைப் படுகொலை – 29.08.1990
4.கோராவெளி, ஈச்சையடித்தீவுப் படுகொலை – 14.08.1990
5.ஏறாவூர் வைத்தியசாலைப் படுகொலை – 12.08.1990
6.துறைநீலாவணைப் படுகொலை – 12.08.1990
7.திராய்க்கேணிப் படுகொலை – 06.08.1990
8.பொத்துவில் படுகொலை – 30.07.1990.
9.பரந்தன் சந்திப் படுகொலை – 24.07.1990
10.சித்தாண்டிப் படுகொலை – 20,27.07.1990
11.சம்மாந்துறைப் படுகொலை – 10.06.1990
12.கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை – 23.05.1990
13.அல்வாய் ஆலயம் மீதான எறிகணை வீச்சு – 29.05.1987
14.தோணிதட்டாமடுப் படுகொலை – 27.05.1987
15.பட்டித்திடல் படுகொலை – 26.04.1987
16.கொக்கட்டிச்சோலைப் படுகொலை – 28.01.1987
17.பெரியபண்டிவிரிச்சான் படுகொலை – 15.10.1986
18.அடம்பன் படுகொலை – 12.10.1986
19.மூதூர் – மணற்சேனைப் படுகொலை 18.07.1986
20.தண்டுவான் படுகொலை – 17.07.1986
21.பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை – 15.07.1986 திருகோணமலை
22.பரந்தன் விவசாயிகள் படுகொலை – 28.06.1986
23.தம்பலகாமம் படுகொலை – 20.06.1986
24.சேருவிற் படுகொலை – 12.06.1986
25.மண்டைதீவுக் கடலில் நிகழ்ந்த படுகொலை – 10.06.1986
26.கந்தளாய் படுகொலை – 05.06.1986
27.ஆனந்தபுரம் படுகொலை – 04.06.1986
28.ஈட்டிமுறிஞ்சான் படுகொலை – 19,20.03.1986
29.வயலூர்ப் படுகொலை – 24.08.1985
30.உடும்பன்குளம் படுகொலை – 19.02.1986
31.கிளிநொச்சி தொடருந்து நிலையப் படுகொலை – 25.01.1986
32.பெரியபுல்லுமலைக் கிராமப் படுகொலை – 1986
33.மூதூர் கடற்கரைச்சேனைப் படுகொலை – 1985
34.கந்தளாய் படுகொலை 09.11.1985
35.பிரமந்தனாற்றுப் படுகொலை – 02.10.1985
36.நிலாவெளி படுகொலை – 16.09.1985
37.சம்பல்தீவு படுகொலை 04 முதல் 09.08.1985 வரை
38.திரியாய்த் தாக்குதல்கள் – 1985 
39.நற்பிட்டிமுனை படுகொலை – 17.05.1985
40.கிளிவேட்டி படுகொலை 1985 இல்
41.குமுதினிப் படுகொலைகள் – 15.05.1985
42.வால்வை இனப்படுகொலை 10.05.1985
43.1985 இல் திருகோணமலை படுகொலைகள்
44.புதுக்குடியிருப்பு ஐயன் கோயிலடிப் படுகொலை – 21.04.1985
45.வட்டக்கண்டல் படுகொலை – 30.01.1985
46.முள்ளியவளைப் படுகொலை – 16.01.1985
47.வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா பொதுமக்களின் படுகொலை 06.01.1985.
48.கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் படுகொலை – 15.12.1984
49.மன்னார், முருங்கன் வீதிப் படுகொலை – 04.12.1984
50.மணலாறு – தென்னமரவடி படுகொலை – 03.12.1984.
51.செட்டிக்குளம் படுகொலை – 02.12.1984
52.ஒதியமலை படுகொலை – 02.12.1984.
53.மதவாச்சி – ரம்பாவ படுகொலை – 1984 செப்ரெம்பர்
54.திருநெல்வேலிப் படுகொலை – 24,25 யூலை 1983
55.1983ஆம் ஆண்டு இனப்படுகொலை
56.1981ஆம் ஆண்டு இனப்படுகொலை
57.1979ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள்.
58.தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை – 10.01.1974
59.1958ஆம் ஆண்டு இனக்கொலை
60.இங்கினியாகலை இனப்படுகொலை – 05.06.1956
61.கிளாலிப் படுகொலைகள் 02.01.1993 – 29.07.1993
62.தீபாவளிப் படுகொலை. ஒக்ரோபர் 21, 22 1987.
63.நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது 22.09.1995
64.போர்நிறுத்தத்தின் போதும் வன்னியில் -தாக்குதல்கள்
65.வீரமுனைப் படுகொலைகள்
66.அல்லைப்பிட்டிப் படுகொலை 2006
67.செஞ்சோலை வளாகப் படுகொலை – (14.08.2006)
68.வவுனியா பூந்தோட்டச் சந்திப் படுகொலை – 10.08.1985

The Terrible Story Of An Actress Snehalatha Reddy Who Was Tortured Till Death

Emergency: A dark chapter in the history of India. 

(The Terrible Story Of An Actress Snehalatha Reddy Who Was Tortured Till Death).

On the night of 25th June 1975, the then Prime Minister Indira Gandhi declared the Emergency,


Fifty Of Shakespeare’s Most Famous Quotes

50 Of Shakespeare’s Most Famous Quotes

1. ‘To be, or not to be: that is the question’

(Hamlet Act 3, Scene 1)

2. ‘All the world ‘s a stage, and all the men and women merely players. They have their exits and their entrances; And one man in his time plays many parts.’

(As You Like it Act 2, Scene 7)

3. ‘Romeo, Romeo! wherefore art thou Romeo?’



(Romeo and Juliet Act 2, Scene 2)

4. ‘Now is the winter of our discontent’

(Richard III Act 1, Scene 1)



5. ‘Is this a dagger which I see before me, the handle toward my hand?’

(Macbeth Act 2, Scene 1)

6. ‘Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them.’

(Twelfth Night Act 2, Scene 5)

7. ‘Cowards die many times before their deaths; the valiant never taste of death but once.’

(Julius Caesar Act 2, Scene 2)

8. ‘Full fathom five thy father lies, of his bones are coral made. Those are pearls that were his eyes. Nothing of him that doth fade, but doth suffer a sea-change into something rich and strange.’

(The Tempest Act 1, Scene 2)

9. ‘A man can die but once.’

(Henry IV, Part 2 Act 3, Part 2)

10. ‘How sharper than a serpent’s tooth it is to have a thankless child!’

(King Lear Act 1, Scene 4)

11. ‘Frailty, thy name is woman.’

(Hamlet Act 1, Scene 2)

12. ‘If you prick us, do we not bleed? If you tickle us, do we not laugh? If you poison us, do we not die? And if you wrong us, shall we not revenge?’

(The Merchant of Venice Act 3, Scene 1)

13. ‘I am one who loved not wisely but too well.’

(Othello Act 5, Scene 2)

14. ‘The lady doth protest too much, methinks’

(Hamlet Act 3, Scene 2)

15. ‘We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.’

(The Tempest Act 4, Scene 1)

16. ‘Life’s but a walking shadow, a poor player, that struts and frets his hour upon the stage, and then is heard no more; it is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing.’

(Macbeth Act 5, Scene 5)

17. ‘Beware the Ides of March.‘

(Julius Caesar Act 1, Scene 2)

18. ‘Get thee to a nunnery.’

(Hamlet Act 3, Scene 1)

19. ‘If music be the food of love play on.‘

(Twelfth Night Act 1, Scene 1)

20. ‘What’s in a name? A rose by any name would smell as sweet.’

(Romeo and Juliet Act 2, Scene 2)

21. ‘The better part of valor is discretion’

(Henry IV, Part 1 Act 5, Scene 4)

22. ‘To thine own self be true.‘

(Hamlet Act 1, Scene 3)

23. ‘All that glisters is not gold.’

(The Merchant of Venice Act 2, Scene 7)

24. ‘Friends, Romans, countrymen, lend me your ears: I come to bury Caesar, not to praise him.’

(Julius Caesar Act 3, Scene 2)

25. ‘Nothing will come of nothing.’

(King Lear Act 1, Scene 1)

26. ‘The course of true love never did run smooth.’

(A Midsummer Night’s Dream Act 1, Scene 1)

27. ‘Lord, what fools these mortals be!’

(A Midsummer Night’s Dream Act 1, Scene 1)

28. ‘Cry “havoc!” and let slip the dogs of war‘

(Julius Caesar Act 3, Scene 1)

29. ‘There is nothing either good or bad, but thinking makes it so.’

(Hamlet Act 2, Scene 2)

30. ‘A horse! a horse! my kingdom for a horse!‘

(Richard III Act 5, Scene 4)

31. ‘There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.’

(Hamlet Act 1, Scene 5)

32. ‘Love looks not with the eyes, but with the mind; and therefore is winged Cupid painted blind.’

(A Midsummer Night’s Dream Act 1, Scene 1)

33. ‘The fault, dear Brutus, lies not within the stars, but in ourselves, that we are underlings.’

(Julius Caesar Act 1, Scene 2)

34. ‘Shall I compare thee to a summer’s day?’

(Sonnet 18)

35. ‘Let me not to the marriage of true minds admit impediments.’

(Sonnet 116)

36. ‘The evil that men do lives after them; The good is oft interrèd with their bones.’

(Julius Caesar Act 3, Scene 2)

37. ‘But, for my own part, it was Greek to me.’

(Julius Caesar Act 1, Scene 2)

38. ‘Neither a borrower nor a lender be; for loan oft loses both itself and friend, and borrowing dulls the edge of husbandry.’

(Hamlet Act 1, Scene 3)

39. ‘We know what we are, but know not what we may be.’

(Hamlet Act 4, Scene 5)

40. ‘Off with his head!’

(Richard III Act 3, Scene 4)

41. ‘Uneasy lies the head that wears the crown.’

(Henry IV, Part 2 Act 3, Scene 1)

42. ‘Misery acquaints a man with strange bedfellows.’

(The Tempest Act 2, Scene 2)

43. ‘This is very midsummer madness.’

(Twelfth Night Act 3, Scene 4)

44. ‘Some Cupid kills with arrows, some with traps.’

(Much Ado about Nothing Act 3, Scene 1)

45. ‘I cannot tell what the dickens his name is.’

(The Merry Wives of Windsor Act 3, Scene 2)

46. ‘We have seen better days.’

(Timon of Athens Act 4, Scene 2)

47. ‘I  am a man more sinned against than sinning.’

(King Lear Act 3, Scene 2)

48. ‘Brevity is the soul of wit.‘

(Hamlet Act 2, Scene 2)

49. ‘This royal throne of kings, this sceptred isle… This blessed plot, this earth, this realm, this England.’

(Richard II Act 2, Scene 1)

50. ‘What light through yonder window breaks.’

Romeo and Juliet Act 2, Scene 2)

#WilliamShakespeare English Literature

இன்றைய….அரசியல்… இதுதான் அரசியல்… இப்படிதான அரசியல்…



————————————————————-

 தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருடைய சொத்தைப் பற்றி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசியது, இன்றைக்கு தினமலரில் 21.04.2023 அன்று செய்தியாகவும் வெளிவந்துள்ளது.
 தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் தொடர்பாக 
20.04.2023  அன்றுசட்டமன்றத்தில் பேசப்பட்டபோது, அமைச்சர் துரைமுருகன், “இது ஒரு முக்கியமான கேள்வி, மாதவரத்தில் ஐ.டி பார்க் வைக்க வேண்டியது முக்கியமான ஒன்று. ஆனால் அதற்கான நிலம் இல்லை என்று அமைச்சர் கூறுகிறார். மாதவரம் சுதர்சனம் என்னிடம் சொல்லி உள்ளார். அவருக்கு ஆயிரம் ஏக்கரில் மாந்தோப்பு உள்ளது என்று. அதில் 200 ஏக்கர் தருகிறேன் என்கிறார். அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக சு.சுதர்சனம் சட்டமன்றத்தில் எதையும் பேசவில்லை.
 
தனது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள சொத்து தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்திலேயே பேசுகிறார் என்றால், அதைக் கேட்க சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சுதர்சனத்துக்கு தற்போது எவ்வளவு சொத்துகள் இருக்கக் கூடும் என்பதைப் பற்றி யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. 
  
மதிமுக தொடங்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் சாதாரணமாக வழக்கறிஞர் அணியில் சுதர்சனம் நிர்வாகியாகச் சேர்க்கப்பட்டார். அதுமட்டுமல்ல, மதிமுகவுக்கும் திமுகவுக்கும் சென்னை உயர்நீதி மன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் வழக்கு நடந்தபோது, மதுராங்கம் ஆறுமுகத்தின் வழக்கறிஞராகவும் நீதிமன்றத்தில் சுதர்சனம் ஆஜரானதும் உண்டு. மதிமுகவில் கடை கோடியில் இருந்தவர்களை எல்லாம் இப்படி தூக்கிச் சுமக்கும் ஸ்டாலினின் கண்களில் மதிமுக நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட என் போன்ற ஆளுமைகள் தெரியமாட்டார்கள். என் போன்றவர்களைப் பற்றிய  புரிதலும் அவருக்குக் கிடையாது. 
 மதிமுகவுக்கும் திமுகவுக்கும் கலைஞருக்கும் வைகோவுக்கும் பிரச்னைகள் ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் கண்ணுக்குத் தெரியாத இந்த  சுதர்சனங்கள் எல்லாம் அப்படி என்ன பணி திமுகவில் செய்துவிட்டார்கள்? 
 
மதிமுகவில் சாதாரண நிலையில் கடைக்கோடியில் இருந்தவர்களை எல்லாம் ஸ்டாலின் தூக்கிச் சுமக்கிறாரே, அதற்கான நீண்ட பட்டியலை என்னால் தர முடியும். ஸ்டாலினுக்கு, எங்களைப் போன்று மதிமுகவில் அதிர்வை ஏற்படுத்தியவர்கள் எல்லாம் சாதாரணமாகப்படுகிறார்கள். எங்களைப் போன்றவர்களைக் கண்டால் முதல்வர் ஸ்டாலினுக்குக் கசக்கின்றது. எல்லாருக்கும் ஏற்றங்கள் மட்டுமல்ல; இறக்கங்களும் உண்டு.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-4-2023.

விவசாயிகளின் போராட்டத்தை நினைவு கூறும் நாள்-ஏப்ரல் 23

விவசாயிகளின் போராட்டத்தை நினைவு கூறும் நாள்-ஏப்ரல் 23

உடுமலை வரலாற்றில்  விடுதலைப்போராட்ட வரலாற்றினையும், மொழிப்போராட்ட வரலாற்றினையும், அதோடு விவசாயிகள் போராட்ட வரலாற்றினையம்  பதிவு செய்துள்ளோம்.

ஏப்ரல் 23 , 1979 ல் உடுமலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்  தாந்தோணி மகாலிங்கம், கணபதிபாளையம் வேலுச்சாமி ஆகிய இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்.

#எனது சுவடு-19 KSR கேஎஸ்ஆர்



—————————————
வாழ்வில் தன்னிச்சையாக நீங்கள் எடுத்த முடிவு தவறாகிப் போன சூழல் அமைந்தாலும், அந்த முடிவு சரி என்பதில்  உறுதியாக இருங்கள். காரணம்  அதனைக் குறை சொல்பவர்கள் அதன் பாதிப்பின் சுமையை சுமக்க வரப்போவதில்லை. நீங்களே சுமந்தாக வேண்டும் எனும் போது குற்றவுணர்வும், வேதனையும் தவிர்க்க உங்கள் முடிவுப் பக்கமே நின்று அதனை சமாளிப்பதே, எந்தவொரு நொடியும் யாருக்காகவும் நிற்கப் போவதில்லை. இயக்கம் எங்கும் ஏதோ வழியில் உள்ளது.

ஆற்றுப்படுத்திக்கொள்ள
ஒவ்வொருக்கும் கடைசிப் பேராயுதம் 
ஏதோ ஒன்று இருந்துவிடுகிறது…

https://youtu.be/KQbubxxD-Uw

 #KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #அரசியல்,

#ksrpost
23-4-2023.

Saturday, April 22, 2023

தடங்களின் தெளிவு நகர்விலும்தான் இருக்கிறது!

ஒளியுடன் ஒளி சேர்வதில்
எந்த அற்புதமுமில்லை
இருளுடன் இணையும் போதே
பல விதமாக அமைதியும், சுகமும் 
நிகழ்கின்றன,
உணர்தலின் இருப்புக்கு
எவ்வித தடைகளுமில்லை..
தடங்களின் தெளிவு
நகர்விலும்தான் இருக்கிறது!


தினமலரில் கிராநூறு தொகுதி இரண்டு குறித்து நூல் விமர்சனம்

இன்றைய (22-4-2023) தினமலரில் கிராநூறு தொகுதி இரண்டு குறித்து நூல் விமர்சனம்…
#ksrpost
22-4-2023.


திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பின்னர் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களின் பட்டியல்:

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.04.2023) சட்டமன்றத்தில் பேசியபோது, தமிழகம் அமைதியான மாநிலம் அமைந்திருக்கிறது என்று கூறியிருந்தார். 

“தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு  என்ற நற்பெயர் வருகிறது’’ என்று பேசியிருக்கிறார். 

முதல்வர் கூறியபடியே அமைதியான மாநிலமாக தமிழ்நாடு இருந்தால் நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் செய்தித்தாள்களில் இதற்கு மாறாக ஏற்கெனவே வெளி வந்த பல செய்திகள் நம்மை யோசிக்க வைக்கின்றன என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

இதுதான் அமைதிப் பூங்கா... திராவிட மாடல்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் அவருடைய மகன் பென்னிக்சும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களாலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினராலும் தாக்கப்பட்டனர். 
2020 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இரவு 9 மணிக்கு பென்னிக்ஸ் மரணமடைந்தார். நுரையீரலில் ஏற்பட்ட காயத்தால் ஜூன் 23ஆம் தேதி காலை 5.40 மணிக்கு ஜெயராஜும் மரணமடைந்தார்.
இதுதொடர்பாக அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் சந்தேகத்திற்குரிய வகையில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘லாக்அப்’ மர்ம மரணங்கள், நீதிமன்றக் காவலிலும் நடக்கின்றன எனில், அதற்கு உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
“மிக மோசமாக, மனித தன்மையே இல்லாமல் தாக்கப்பட்டு இருவர் இறந்துள்ளனர். இந்த நிலை இனிமேல் வேறு எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதனை கொலையாகவே கருத வேண்டும். காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்’’ என்றார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
அதிமுக ஆட்சி நடக்கும்போது இப்படி நியாயம் பேசிய இவர்களின் ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும், இவர்களுடைய ஆட்சியில் காவல்துறையினரால் மக்கள் தாக்கப்படுவதில்‌லை; மக்களுக்கு எந்தப் பாதிப்புமே இல்லை என்பதைப் போலத்தான்  தமிழக முதல் அமைச்சர் சட்டசபையில் இன்று (21.04.2023) பேசிய பேச்சு அமைந்திருக்கிறது.
“ தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.
புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் வருகிறது’’பேசியிருக்கிறார். ஆனால் உண்மை நிலை என்ன என்பதை சற்று ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பின்னர் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களின் பட்டியல்:
• கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் 45 வயதுடைய சட்டி இந்திர பிரசாத் 2021 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி உயிரிழந்தார்.
• தஞ்சாவூர் மாவட்டம் மேற்கு காவல்நிலையத்தில் 35 வயதுடைய சத்யவாணன் என்பவர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி உயிரிழந்தார்.
• நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் 42 வயதுடைய மணிகண்டன் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி உயிரிழந்தார்.
• ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலையத்தில் 19 வயதுடைய மணிகண்டன் 2021 டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி உயிரிழந்தார்.
• நாமக்கல் மாவட்டம் கிளைச்சிறை காவல்நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி45 வயதுடைய பிரபாகரன் உயிரிழந்தார்.
• திருநெல்வேலி மாவட்டம் ஹை கிரவுண்ட் காவல்நிலையத்தில் 44 வயதுடைய சுலைமான் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி உயிரிழந்தார்.
• திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல்நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி 38 வயதுடைய தடிவீரன் என்பவர் உயிரிழந்தார்.
• சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் 25 வயதுடைய விக்னேஷ் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.
• திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி மரணமடைந்தார்.
அமைதிப் பூங்கா என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிற தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌ இருக்கை கிராமத்தைச்‌ சேர்ந்த முபாரக்‌ கழுத்தை அறுத்துக்‌ கொலை செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ எருக்கம்பட்டு மலை கிராமத்தைச்‌ சேர்ந்த ராஜா கடத்திக்‌ கொலை செய்யப்பட்டார்.

வாணியம்பாடியில்‌ மனிதநேய ஜனநாயகக்‌ கட்சியின்‌ மாநிலச்‌ செயலாளரும்‌, சமூக ஆர்வலருமான வசீம்‌ அக்ரம்‌ நடுரோட்டில்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார். 
சேலம்‌ மாவட்டம்‌, ஆத்தூரைச்‌ சேர்ந்த காட்டுராஜா மற்றும்‌ அவரது மனைவி காசியம்மாள்‌ எரித்துக்‌ கொலை செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம்‌, கீழச்செவலைச் சேர்ந்த சங்கரசுப்ரமணியன்‌ தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம்‌, கோபாலசமுத்திரம்‌ அருகே மாரியப்பன்‌ என்பவர்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார்.

கலவரங்களும் சாதிமோதல்களும் நடந்திருக்கின்றன. 

கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் கலவரம் வெடித்தது. சம்பந்தப்பட்ட பள்ளியின் கட்டடங்கள் தாக்கப்பட்டன. சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். 
அதுமட்டுமல்ல, வேங்கைவயல் தொடங்கி கடலூர் வரை பல சாதி மோதல்களும் அரங்கேறியுள்ளன.
சமீபத்தில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களின் பற்களை கட்டிங் பிளேயரால் பிடுங்குவது, வாய்க்குள் ஜல்லி கற்களை கொட்டி பல்லை உடைப்பது, அவர்களின் விதைப்பையை நசுக்குவது உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவர் தற்போது சஸ்பெண்ட செய்யப்பட்டு இருக்கிறார்.
முதல்வர் சொல்வதை மீண்டும் படியுங்கள்:
“ தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.
புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் வருகிறது’’
நடந்த உண்மைகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல பேசுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முதல்வர் ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.04.2023) சட்டமன்றத்தில் பேசியபோது, தமிழகம் அமைதியான மாநிலம் அமைந்திருக்கிறது என்று கூறியிருந்தார். 

“தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு  என்ற நற்பெயர் வருகிறது’’ என்று பேசியிருக்கிறார். 

முதல்வர் கூறியபடியே அமைதியான மாநிலமாக தமிழ்நாடு இருந்தால் நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் செய்தித்தாள்களில் இதற்கு மாறாக ஏற்கெனவே வெளி வந்த பல செய்திகள் நம்மை யோசிக்க வைக்கின்றன என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

இதுதான் அமைதிப் பூங்கா... திராவிட மாடல்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் அவருடைய மகன் பென்னிக்சும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களாலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினராலும் தாக்கப்பட்டனர். 
2020 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இரவு 9 மணிக்கு பென்னிக்ஸ் மரணமடைந்தார். நுரையீரலில் ஏற்பட்ட காயத்தால் ஜூன் 23ஆம் தேதி காலை 5.40 மணிக்கு ஜெயராஜும் மரணமடைந்தார்.
இதுதொடர்பாக அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் சந்தேகத்திற்குரிய வகையில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘லாக்அப்’ மர்ம மரணங்கள், நீதிமன்றக் காவலிலும் நடக்கின்றன எனில், அதற்கு உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
“மிக மோசமாக, மனித தன்மையே இல்லாமல் தாக்கப்பட்டு இருவர் இறந்துள்ளனர். இந்த நிலை இனிமேல் வேறு எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதனை கொலையாகவே கருத வேண்டும். காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்’’ என்றார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
அதிமுக ஆட்சி நடக்கும்போது இப்படி நியாயம் பேசிய இவர்களின் ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும், இவர்களுடைய ஆட்சியில் காவல்துறையினரால் மக்கள் தாக்கப்படுவதில்‌லை; மக்களுக்கு எந்தப் பாதிப்புமே இல்லை என்பதைப் போலத்தான்  தமிழக முதல் அமைச்சர் சட்டசபையில் இன்று (21.04.2023) பேசிய பேச்சு அமைந்திருக்கிறது.
“ தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.
புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் வருகிறது’’பேசியிருக்கிறார். ஆனால் உண்மை நிலை என்ன என்பதை சற்று ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பின்னர் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களின் பட்டியல்:
• கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் 45 வயதுடைய சட்டி இந்திர பிரசாத் 2021 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி உயிரிழந்தார்.
• தஞ்சாவூர் மாவட்டம் மேற்கு காவல்நிலையத்தில் 35 வயதுடைய சத்யவாணன் என்பவர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி உயிரிழந்தார்.
• நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் 42 வயதுடைய மணிகண்டன் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி உயிரிழந்தார்.
• ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலையத்தில் 19 வயதுடைய மணிகண்டன் 2021 டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி உயிரிழந்தார்.
• நாமக்கல் மாவட்டம் கிளைச்சிறை காவல்நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி45 வயதுடைய பிரபாகரன் உயிரிழந்தார்.
• திருநெல்வேலி மாவட்டம் ஹை கிரவுண்ட் காவல்நிலையத்தில் 44 வயதுடைய சுலைமான் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி உயிரிழந்தார்.
• திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல்நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி 38 வயதுடைய தடிவீரன் என்பவர் உயிரிழந்தார்.
• சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் 25 வயதுடைய விக்னேஷ் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.
• திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி மரணமடைந்தார்.
அமைதிப் பூங்கா என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிற தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌ இருக்கை கிராமத்தைச்‌ சேர்ந்த முபாரக்‌ கழுத்தை அறுத்துக்‌ கொலை செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ எருக்கம்பட்டு மலை கிராமத்தைச்‌ சேர்ந்த ராஜா கடத்திக்‌ கொலை செய்யப்பட்டார்.

வாணியம்பாடியில்‌ மனிதநேய ஜனநாயகக்‌ கட்சியின்‌ மாநிலச்‌ செயலாளரும்‌, சமூக ஆர்வலருமான வசீம்‌ அக்ரம்‌ நடுரோட்டில்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார். 
சேலம்‌ மாவட்டம்‌, ஆத்தூரைச்‌ சேர்ந்த காட்டுராஜா மற்றும்‌ அவரது மனைவி காசியம்மாள்‌ எரித்துக்‌ கொலை செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம்‌, கீழச்செவலைச் சேர்ந்த சங்கரசுப்ரமணியன்‌ தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம்‌, கோபாலசமுத்திரம்‌ அருகே மாரியப்பன்‌ என்பவர்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார்.

கலவரங்களும் சாதிமோதல்களும் நடந்திருக்கின்றன. 

கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் கலவரம் வெடித்தது. சம்பந்தப்பட்ட பள்ளியின் கட்டடங்கள் தாக்கப்பட்டன. சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். 
அதுமட்டுமல்ல, வேங்கைவயல் தொடங்கி கடலூர் வரை பல சாதி மோதல்களும் அரங்கேறியுள்ளன.
சமீபத்தில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களின் பற்களை கட்டிங் பிளேயரால் பிடுங்குவது, வாய்க்குள் ஜல்லி கற்களை கொட்டி பல்லை உடைப்பது, அவர்களின் விதைப்பையை நசுக்குவது உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவர் தற்போது சஸ்பெண்ட செய்யப்பட்டு இருக்கிறார்.
முதல்வர் சொல்வதை மீண்டும் படியுங்கள்:
“ தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.
புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் வருகிறது’’
நடந்த உண்மைகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல பேசுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முதல்வர் ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.04.2023) சட்டமன்றத்தில் பேசியபோது, தமிழகம் அமைதியான மாநிலம் அமைந்திருக்கிறது என்று கூறியிருந்தார். 

“தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு  என்ற நற்பெயர் வருகிறது’’ என்று பேசியிருக்கிறார். 

முதல்வர் கூறியபடியே அமைதியான மாநிலமாக தமிழ்நாடு இருந்தால் நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் செய்தித்தாள்களில் இதற்கு மாறாக ஏற்கெனவே வெளி வந்த பல செய்திகள் நம்மை யோசிக்க வைக்கின்றன என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

இதுதான் அமைதிப் பூங்கா... திராவிட மாடல்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் அவருடைய மகன் பென்னிக்சும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களாலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினராலும் தாக்கப்பட்டனர். 
2020 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இரவு 9 மணிக்கு பென்னிக்ஸ் மரணமடைந்தார். நுரையீரலில் ஏற்பட்ட காயத்தால் ஜூன் 23ஆம் தேதி காலை 5.40 மணிக்கு ஜெயராஜும் மரணமடைந்தார்.
இதுதொடர்பாக அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் சந்தேகத்திற்குரிய வகையில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘லாக்அப்’ மர்ம மரணங்கள், நீதிமன்றக் காவலிலும் நடக்கின்றன எனில், அதற்கு உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
“மிக மோசமாக, மனித தன்மையே இல்லாமல் தாக்கப்பட்டு இருவர் இறந்துள்ளனர். இந்த நிலை இனிமேல் வேறு எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதனை கொலையாகவே கருத வேண்டும். காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்’’ என்றார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
அதிமுக ஆட்சி நடக்கும்போது இப்படி நியாயம் பேசிய இவர்களின் ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும், இவர்களுடைய ஆட்சியில் காவல்துறையினரால் மக்கள் தாக்கப்படுவதில்‌லை; மக்களுக்கு எந்தப் பாதிப்புமே இல்லை என்பதைப் போலத்தான்  தமிழக முதல் அமைச்சர் சட்டசபையில் இன்று (21.04.2023) பேசிய பேச்சு அமைந்திருக்கிறது.
“ தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.
புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் வருகிறது’’பேசியிருக்கிறார். ஆனால் உண்மை நிலை என்ன என்பதை சற்று ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பின்னர் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களின் பட்டியல்:
• கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் 45 வயதுடைய சட்டி இந்திர பிரசாத் 2021 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி உயிரிழந்தார்.
• தஞ்சாவூர் மாவட்டம் மேற்கு காவல்நிலையத்தில் 35 வயதுடைய சத்யவாணன் என்பவர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி உயிரிழந்தார்.
• நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் 42 வயதுடைய மணிகண்டன் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி உயிரிழந்தார்.
• ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலையத்தில் 19 வயதுடைய மணிகண்டன் 2021 டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி உயிரிழந்தார்.
• நாமக்கல் மாவட்டம் கிளைச்சிறை காவல்நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி45 வயதுடைய பிரபாகரன் உயிரிழந்தார்.
• திருநெல்வேலி மாவட்டம் ஹை கிரவுண்ட் காவல்நிலையத்தில் 44 வயதுடைய சுலைமான் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி உயிரிழந்தார்.
• திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல்நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி 38 வயதுடைய தடிவீரன் என்பவர் உயிரிழந்தார்.
• சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் 25 வயதுடைய விக்னேஷ் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.
• திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி மரணமடைந்தார்.
அமைதிப் பூங்கா என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிற தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌ இருக்கை கிராமத்தைச்‌ சேர்ந்த முபாரக்‌ கழுத்தை அறுத்துக்‌ கொலை செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ எருக்கம்பட்டு மலை கிராமத்தைச்‌ சேர்ந்த ராஜா கடத்திக்‌ கொலை செய்யப்பட்டார்.

வாணியம்பாடியில்‌ மனிதநேய ஜனநாயகக்‌ கட்சியின்‌ மாநிலச்‌ செயலாளரும்‌, சமூக ஆர்வலருமான வசீம்‌ அக்ரம்‌ நடுரோட்டில்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார். 
சேலம்‌ மாவட்டம்‌, ஆத்தூரைச்‌ சேர்ந்த காட்டுராஜா மற்றும்‌ அவரது மனைவி காசியம்மாள்‌ எரித்துக்‌ கொலை செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம்‌, கீழச்செவலைச் சேர்ந்த சங்கரசுப்ரமணியன்‌ தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம்‌, கோபாலசமுத்திரம்‌ அருகே மாரியப்பன்‌ என்பவர்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார்.

கலவரங்களும் சாதிமோதல்களும் நடந்திருக்கின்றன. 

கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் கலவரம் வெடித்தது. சம்பந்தப்பட்ட பள்ளியின் கட்டடங்கள் தாக்கப்பட்டன. சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். 
அதுமட்டுமல்ல, வேங்கைவயல் தொடங்கி கடலூர் வரை பல சாதி மோதல்களும் அரங்கேறியுள்ளன.
சமீபத்தில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களின் பற்களை கட்டிங் பிளேயரால் பிடுங்குவது, வாய்க்குள் ஜல்லி கற்களை கொட்டி பல்லை உடைப்பது, அவர்களின் விதைப்பையை நசுக்குவது உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவர் தற்போது சஸ்பெண்ட செய்யப்பட்டு இருக்கிறார்.
முதல்வர் சொல்வதை மீண்டும் படியுங்கள்:
“ தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.
புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் வருகிறது’’
நடந்த உண்மைகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல பேசுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முதல்வர் ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.


#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-4-2023.


திமுக ஆட்சி

தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஓர் ஆடியோ சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது. அந்த ஆடியோவில் 28 நொடிகள் ஆங்கிலத்தில் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக உள்ளது. 
“உதயாவும் சபரியும் ஒரு வருடத்தில் அவர்களது மூதாதையர் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை விட அதிகமாகச் சம்பாதித்துவிட்டனர். இப்போது அது பிரச்னையாகி வருகிறது. இதை எப்படி ஹேண்டில் செய்வது ? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி 20 கோடி என குவித்து அது தோராயமாக 30 ஆயிரம் கோடியாக இருக்கும்’’ என்று பழனிவேல் தியாகராஜன் சொல்வது போல அந்த ஆடியோ உள்ளது.
 

 டெல்லியில் உள்ள ஒரு பத்திரிகையாளரிடம் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆடியோ நேற்று மாலையில் இருந்து சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சரின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான பழனிவேல் தியாகராஜன் இப்படிப்பட்ட கருத்தைச் சொல்லியிருப்பாரா என்ற பொதுவான சந்தேகம் இருந்தபோதிலும்,  இந்த ஆடியோவைக் குறித்து பழனிவேல் தியாகராஜன் தரப்பில் இருந்து ஆடியோ வெளிவந்து ஒருநாளுக்கு மேலாகியும் இதுவரை எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை. ஆடியோவில் உள்ள குரல் தன்னுடைய குரல் அல்ல என்று கூட அவர் இதுவரை சொல்லவில்லை. 
 இது குறித்து முதலமைச்சரோ, அவருடைய மகனோ, மருமகனோ கூட எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ உண்மை என்று கருதும்பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரோ, குடும்பத்தினரோ நினைக்க வாய்ப்பு உள்ளது. ஒருவேளை நடவடிக்கை எடுத்தால், மேலும் புதைந்து கிடக்கும் பல செய்திகள் வெளிவந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் பழனிவேல் தியாகராஜன் மட்டுமல்ல, வேறு சிலரும் கூட அவரைப் போல பேசுவதற்கு துணிந்துவிடுவார்கள். அதைத் தடுப்பதும் பிரச்னையாகிவிடும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கக் கூடும்.

இதே பழனிவேல் தியாகராஜன் தமிழக மதுக்கடைகளின் வருமானத்தைக் குறித்தும், ரேஷன் கடையைக் குறித்தும் ஏடாகூடமாகப் பேசியதெல்லாம் கடந்த நாட்களில் உண்டு. ரேஷன் கடையைக் குறித்து இவர் பேசியதற்கு அந்த நேரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி இவருக்குத் தக்க பதிலைக் கொடுத்ததெல்லாம் செய்திகளாக வெளிவந்தன.

#ksrpost
22-4-2023.

‘’நிலவு ஒருபெண்ணாகி உலவுகின்றஅழகோ’’ என்ற பாடல் கேட்டதும் (எப்போதும்) பல நினைவுகள் வரும்.. ‘’மலரே குறிஞ்சி மலரே ‘‘ என பல பாடல்கள் கேட்டால் கல்லூரி நாட்களின் ஞாபகம் வந்து விடும். ‘’#வாலி"பன் கவிதை உலகின் தாலிபன்.

தற்போது இரவு 12.35 வாசிப்புடன் ரேடியோவில் ‘’நிலவு ஒருபெண்ணாகி உலவுகின்றஅழகோ’’  என்ற பாடல் கேட்டதும் (எப்போதும்) பல நினைவுகள் வரும்..
‘’மலரே குறிஞ்சி மலரே ‘‘ என பல பாடல்கள்
கேட்டால் கல்லூரி நாட்களின்  ஞாபகம் வந்து விடும்.

‘’#வாலி"பன் கவிதை உலகின் தாலிபன். 

 நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ 
நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூ
போலே மலருகின்ற
இதழோ 
மான் இனமும் மீன்
இனமும் மயங்குகின்ற
விழியோ

புருவம் ஒரு
வில்லாக பார்வை
ஒரு கணையாக 
பருவம் ஒரு தளமாக
போர் தொடுக்க பிறந்தவளோ

குறுநகையின்
வண்ணத்தில் குழி
விழுந்த கன்னத்தில் 
தேன் சுவையை தான்
குழைத்து கொடுப்பதெல்லாம்
இவள் தானோ

பவளமென விரல்
நகமும் பசும் தளிர் போல்
வளைகரமும்

பவளமென விரல்
நகமும் பசும் தளிர் போல் ரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

தேன் கனிகள்
இரு புறமும் தாங்கி
வரும் பூங்கொடியோ

ஆழ்கடலின்
சங்காக நீள்கழுத்து
அமைந்தவளோ 
யாழிசையின் ஒலியாக
வாய்மொழி தான்
மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி
எடுத்து சந்தனத்தின்
குளிர் கொடுத்து

பொன்பகட்டில்
வார்த்துவைத்த
பெண்ணுடலை
என்னவென்பேன்

மடல்வாழை
தொடை இருக்க மச்சம்
ஒன்று அதில் இருக்க 
படைத்தவனின் திறமை
எல்லாம் முழுமை பெற்ற
அழகி என்பேன்

நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ..

-வாலிப கவிஞர் வாலியின் வரிகள்…

உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். 
எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படம்.

மாணவர் காங்கிரஸ் நிர்வாகி, அப்போது மாணவர்கள் போராட்டங்களில் திருநெல்வேலி St Xavier’s,திருச்சி St Joseph, அண்ணாமலை பல்கலைக்கழகம்,
கோவை,சென்னை என தமிழகம் முழுதும்
அலைந்து  திருந்த நாட்கள். எம். ஜி. ஆர் திமுகவில் இருந்து நீக்கபட்டு போது மதுரை முத்து உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மதுரையில் திரையிட முடியாது என சாவால் விட்டு தோற்ற மதுரை முத்து திமுகவை விட்டு விலகி அதிமுகவில் சேர்ந்தார் என்பது வேறு விடயம்.

அந்த நாட்களில் மாணவர்கள் விரும்பி கேட்கும் பாடல் இது.அந்த இளமை காலத்தில் குளியல் அறையில், தனிமையில் ரசித்து பாடும் பாடல். ஒரு முறை பழைய எம் எல் ஏ ஆஸ்டலில் பி.ஜி. கருத்திருமனை (தமிழக சட்டமன்ற எதிர் கட்சி தலைவராக இருந்தவர்) சந்திக்க சென்ற போது அவர் இல்லை  சந்திக்க சற்று காத்திருந்த போது
தனியாக இந்த பாடல் வரிகளை முனு முனுத்த போது  எங்கள் கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏ  சோ.அழகர்சாமி,
கே.டி.கே தங்கமணி பின்னால் நின்று கேட்டு விட்டு என்னை கிண்டல் செய்யது
நினைவில் உள்ளது.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
22-4-2023

23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few h...