Sunday, April 30, 2017

நாட்டின் யதார்த்த நிலை.

நாட்டில் கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பவர்களை விட்டு விடுகிறீர்கள்; அவர்கள் எல்லாம் சுகபோகமாக வாழ்கிறார்கள். ஆனால் சேலை திருடியவரை பிடித்து சிறைக்குள் போடுகிறார்கள்," என்று போலீசாரைப் பார்த்துக் கேட்டாராம் நமது நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
ஓர் நிறுவனம் ஜூலை 2015 முதல் ஜனவரி 2017 வரை 16 ஆசிய - பசிபிக் நாடுகளில் ஒரு ஆய்வை நடத்தியது. அது இலஞ்சம் கொடுத்து, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வது பற்றிய ஆய்வு. இந்தியாவில் 69% மக்கள் இலஞ்சம் கொடுத்துத்தான் தங்கள் காரியங்களை சாதிக்க முடிகிறது என அந்த ஆய்வு கூறுகிறது. ஆசிய பசிபிக் நாடுகளில் இலஞ்ச ஊழலில் முதலிடம் பெறுவது நமது நாடுதானாம்! இலஞ்சம் பெறுவதில் முதலிடம் பெறுவது காவல் துறை; இரண்டாம் இடம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு; மூன்றாமிடத்தைப் பிடிப்பவர்கள் அரசு அதிகாரிகள்.
ஐக்கிய நாடுகளின் சபை மனிதவள மேம்பாட்டுக் குறியீடு" பற்றி 188 நாடுகளிடையே ஒரு ஆய்வை நடத்தியது. ஏற்கனவே 130வது இடத்திலிருந்த இந்தியா தற்போதைய ஆய்வில் 131வது இடத்திற்கு சரிந்துள்ளது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவுகளைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது நமது நாடு.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடததி வருவதாகவும், நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருப்பதாகவும் மேடைகள் தோறும் முழங்கிக் கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்களுக்கு மேற்கண்ட கூற்றுக்கள் சமர்ப்பணம். இவற்றைவிட அதிர்ச்சி தரக்கூடிய இலஞ்ச லாவண்யங்களும் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
‘தி இந்து’ ஆங்கில நாளேடு சில செய்திகளை வெளியிட்டு வருகிறது. பிரிட்டன் நாட்டு உச்ச நீதிமன்றம், அந்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ என்ற எஞ்ஜினியரிங் நிறுவனத்திற்கு 809 மில்லியன் பவுண்ட் (ரூ. 5500 கோடி) அபராதம் விதித்தது. எதற்கு தெரியுமா? அந்நிறுவனம் எஞ்ஜினியரிங் தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இடைத் தரகர்கள் மூலம் இலஞ்சம் கொடுத்ததாம். இந்தியாவில் விமானப் படை மற்றும் கப்பல் படையில் இஞ்ஜினியரிங் தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இடைத்தரகர்கள் மூலம் மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கும், மத்திய ஆட்சியாளர்களுக்கும் பெருத்த தொகைகள் கொடுத்ததாம்.
இதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த ‘மோண்டெலஸ் இண்டர்னேசனல்’ என்ற நிறுவனத்திற்கு 1 கோடியே, 30 லட்சம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஏன்? இந்நிறுவனம் இந்தியாவிலுள்ள இமாசலப் பிரதேஷ் மாநிலத்தில் சாக்லேட் தயாரிக்க லைசன்ஸ்கள் பெறுவதற்காக அரசின் உயர் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கோடிக் கணக்கில் இலஞ்சம் கொடுத்தது. இதே காரணங்களுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ‘காக்னிசண்ட்’ நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தின் அளவே பல ஆயிரம் கோடிகள் எனில், அவர்கள் கொடுத்த இலஞ்சத்தின் அளவு பல லட்சம் கோடிகளாக இருக்கும்! இலஞ்சம் கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டனர். இலஞ்சம் வாங்கியவர்கள் தண்டிக்கப்படுவது எப்போது?
இன்றைய இந்தியாவின் சமூக, அரசியல் சூழ்நிலைகளில் ஒரு உயர்ந்த தத்துவத்தை சுவீகரித்துக் கொண்டு, மக்களுக்கு சேவை செய்பவர்கள் ஏமாளிகள் என ஏளனம் செய்யப்படுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மக்களை கொள்ளையடித்து சம்பாதிப்பவர்கள் கெட்டிக்காரர்கள் என்று பாராட்டப்படுகிறார்கள். சாதி, மத வேற்றுமைகளைக் களைந்து, மக்களின் ஒற்றுமைக்காகப் போராடுபவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என தூற்றப்படுகிறார்கள். சாதி, மத வெறியூட்டி மக்களைப் பிரித்து, அதன் மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்பவர்கள் சாணக்கியர்கள் எனப் புகழப்படுகிறார்கள்! மனிதனின் வரலாற்றில் காலச்சக்கரம் ஒருபோதும் பின்னோக்கிச் சுழல்வதில்லை. ‘ஹிட்லர் போன்ற சர்வாதிகாரர்களால் காலச்சக்கரம் கொஞ்சம் பின்னோக்கித் தடுமாறக்கூடும் அல்லது சிறிது காலம் தேங்கி நிற்கக் கூடும். அதன் முன்னோக்கிய பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. இம்முன்னேற்றம் தானாக நிகழாது. உழைக்கும் வர்க்கத்தின் இடைவிடாத போராட்டங்களால்தான் இம்முன்னேற்றப் பயணம் சாத்தியம். இப்போராட்டங்களில் நம் ஒவ்வொருவர் பங்கும் அவசியம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-04-2017

Saturday, April 29, 2017

Tamil Nadu’s water crisis is in alarming situation.

This map shows just how alarming Tamil Nadu’s water crisis is
No automatic alt text available.No automatic alt text available.

The state barely has any water left in its reservoirs.
Shoaib Daniyal-Scroll
This map shows just how alarming #TamilNaduswatercrisis is
As the recent desperate protest by Tamil Nadu farmers at Delhi’s Jantar Mantar attempted to highlight, the southern state is in the grip of severe drought. To draw attention to their terrible plight, the protesters stuffed live rats into their mouths, stripped naked outside Prime Minister Narendra Modi’s home and drank their own urine. Tamil Nadu’s agrarian crisis has been exacerbated by the fact that the 2016 retreating Northeast monsoon, when the state receives most of its rainfall, was the worst in 140 years. The situation is so bad that more than 250 Tamil farmers have either died or committed suicide.
The theatrics of the protest might seem odd but were driven by a disastrous situation in Tamil Nadu. This map of water reservoir levels all across India gives a clear picture of just how bad things are in the southern state.
As can be seen, Tamil Nadu is facing acute water shortage, with 81% less water in its reservoirs than it’s 10-year average. The water level in its major reservoirs is at just 6% of their total capacity. And it is unlikely that the situation will improve soon. Already, Karnataka has refused to release water from the Cauvery river, which the two states share, to Tamil Nadu, saying that it has barely enough to meet its own needs. Last year, the tussle over the Cauvery river had led to protests, bandhs and violence in both states.
The #drought has also led to a political ferment in Tamil Nadu, with Opposition parties observing a state-wide strike on Tuesday even as the ruling party is yet to get its house in order.
In all of this, there is a curious silence from the Union government. It is more than a bit ironic that Prime Minister Modi has done more publicly to try and give Bangladesh a stake in India’s river waters than to fix pressing the water problems of an Indian state.
As is clear from the data, Tamil Nadu’s #watercrisis needs immediate attention.

#Ksrpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-04-2017

ஆதிச்சநல்லூர் அகழாய்வு.

"ஆதிச்சநல்லூர், மறைந்து கிடக்கும் தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம்," -
-மானிடவியல் மற்றும் உயிர் படிவயியல் துறை அறிஞர், ப. ராகவன்
------------------------------------
திருநெல்வேலியில் இருந்து, 24 கி.மீ., தொலைவில், தாமிரபரணி ஆற்றின் வலத கரையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் இடுகாடு, அங்கு, 1904ல், அலெக்சாண்டர் ரியா என்பவராலும், 2004ல், இந்திய தொல்லியல் துறையின் சார்பில், சத்தியமூர்த்தி என்பவராலும், இரண்டு முறை அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன.

180 தாழிகள்
அலெக்சாண்டர் ரியாவின் ஆய்வு முடிவுகளும், தொல்பொருட்களும், சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 2004ல், ஆதிச்சநல்லூரில், 16 சதுர மீட்டர் பரப்பளவில் செய்யப்பட்ட அகழாய்வில், 180 தாழிகள் கிடைத்தன.
அவற்றில், இறந்த உடல்களின் முழு எலும்பு சட்டகங்களும், சில பாகங்களின் எலும்புகளும் வைக்கப்பட்டிருந்தன. அந்த தாழிகளில் இருந்த எலும்புக் கூடுகள், 2,500 ஆண்டுகளுக்கு முன், இறந்த தமிழர்களுடையதாக இருக்கலாம் என கருதப்பட்டது.
இந்நிலையில், எலும்புகளை பல்வேறு அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்திய, மானிடவியல் அறிஞர் ராகவனின் முதல் கட்ட முடிவுகள், வேறு மாதிரியாக உள்ளன.
அவர் கூறியதாவது:
கடந்த, 2,300 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் கடல் வணிகத்தில் மிகச் சிறந்து விளங்கினர் என்பதை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த எலும்புகள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.
ஆதிச்சநல்லூரின் நிலப்பரப்பு மிகப் பெரியது. அதில், அகழாய்வு செய்யப்பட்ட இடம், வெறும், 3 சதவீதத்திற்கும் குறைவு தான்.
தாமிரபரணி ஆற்றின் கரையில், பல நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள், மாலுமிகள், பயணிகள் இருந்துள்ளனர். அவர்களுக்காகவும், அவர்களுடன் திருமண உறவு வைத்த தமிழர்களுக்காகவும், தனி இடுகாடு இருந்துள்ளது. தொல்லியல் துறை அகழாய்வு செய்த இடம், வெளிநாட்டவர்களுக்கான இடுகாட்டுப் பகுதி என்பதை, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அங்கு கிடைத்த மண்டை ஒடுகள் மற்றும் பற்களின் அமைப்பு, ‘கொக்க சாய்டு’ என்ற வெள்ளை நிறமுடைய ஐரோப்பியர் மற்றும் மத்திய ஆசிரியர்களுடையது. ‘நீக்ராய்டு’ என்ற கறுப்பு நிறமுடைய ஆப்ரிக்கர்; ‘மங்கோலாய்டு’ என்ற, மஞ்சள் நிறமுடைய சீனா, ஜப்பான், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர், ‘ஆஸ்ட்ராலாய்டு’ எனும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களுடையதாகவும் உள்ளன. மிகக் குறைந்த அளவில், கலப்பினத்தவர் உள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாடு
கொக்கசாய்டு, 35 சதவீதம்; நீக்ராய்டு, 15; மங்கோலாய்டு, ஆஸ்ட்ராலாய்டு, 6; கலப்பினம் 2 சதவீதம் பேரின் மண்டை ஓடுகள் கிடைத்தன. அவர்களில், பெண்களை விட ஆண்களே அதிகம். ஒரே தாழியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஆண், பெண், குழந்தையின் உடல்களும் புதைக்கப்பட்டுள்ளன. சில கர்ப்பிணிகளும், குறைமாத குழந்தைகளும் புதைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவற்றில், கருவாக 2 சதவீதம்; குழந்தைகளாக, 3; வளரிளம் பருவத்தினர், 7; வயது வந்தோர், 20; முதியோர், 37 சதவீதம் உள்ளனர். ஆக, சிறு வயது மரணம் குறைவாகவே இருந்துள்ளது. இறந்தவர்களில், 40 சதவீதம் பேர் நோயால் இறந்துள்ளது தெரிகிறது. அதிலும், தொற்றுநோயால், 50 சதவீதம், மரபியல் நோய்களால், 30; ஊட்டச்சத்து பற்றாக்குறையால், 20 சதவீதம் பேர் இறந்துள்ளனர்.
அந்த இடங்களில், வீரர்களின் ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களும், வெளிநாட்டில் மட்டுமே வாழக்கூடிய உயிரினங்களின் எலும்புகளும், தாவர பாகங்களும் புதை படிவங்களாக கிடைத்துள்ளன.
ஆதிச்சநல்லூர், தாமிரபரணியின் நன்னீர் பகுதி. அந்த நதி கடலில் கலக்கும் புன்னைக்காயல் பகுதியில், 3 கி.மீ., வரை கடல் உள்வாங்கியதை, கடலுக்கடியில் கிடைக்கும் புதைபடிவங்கள் நிரூபிக்கின்றன. பாண்டியர்களின் கொற்கை, மிகச் சிறந்த துறைமுகமாக இருந்திருக்கிறது.
வரலாற்று பொக்கிஷம்
தாமிரபரணி கரை, புன்னைக்காயல், ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு செய்து, ஒப்பீட்டு முடிவுகளை ஆராய்ந்தால், தமிழர்களின் மிக முக்கியமான அயல்நாட்டு வணிக, அரசியல் தொடர்புகள், சமூக அமைப்பு உள்ளிட்டவற்றுக்கான விளக்கம் கிடைக்கும்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், தமிழகத்தில் கிடைத்த பட்டு, வாசனை திரவியங்கள், பவளம், முத்து, மூலிகைகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றுள்ளனர். அவர்களும், பல பொருட்களை விற்றுள்ளனர். அந்த வகையில், ஆதிச்சநல்லூர் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டிய இடம். அது, அகழாய்வு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய, தமிழர்களின் தனித்துவமான வரலாற்று பொக்கிஷம்.
#ஆதிச்சநல்லூர்
#adichanallur
#Ksrpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-04-2017

Friday, April 28, 2017

இருக்கன்குடிஅணை.

சமீபத்தில் சாத்தூர் - இருக்கன்குடி வழியாக தூத்துக்குடி -அருப்புக்கோட்டை சாலைக்கு செல்லும்போது அரசு பணத்தில் கட்டப்பட்ட தடுப்பணையும், வாய்க்காலும் பயனற்றுப் போன நிலையை கண்டேன். 30 ஆண்டுகளுக்கு மேலாக திட்டமிட்டும் இருக்கன்குடி அணைத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. அரசு பணம் விரையமாகி நடுத்தரகர்கள் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டனர் என்பது வேதனையான விடையம்.
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இதன் நோக்கமே தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தலாபுரம் முதல் விளாத்திகுளம் வரை பாசனம் நடக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அணை கட்டியதிலிருந்து ஒரு நாள்கூட இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. கோரிக்கை வைக்காத நாளே இல்லை, நடத்தாத போராட்டமும் இல்லை. எனினும், நடவடிக்கை இல்லை.

போரி நேரு (Fori Nehru).

போரி நேரு (Fori Nehru).

நேரு குடும்பத்தின் முதல் வெளிநாட்டு வரவும் உறவும் இவர் தான் போரிநேரு(Fori Nehru). நேருவின் நெருங்கிய உறவினரான பி.கே.நேரு வின் மனைவி ஆவார். பி.கே.நேரு அசாம் மாநிலத்தின் கவர்னராகவும், அமெரிக்க தூதராகவும் பணியாற்றினார். பங்களாதேஷ் பிரிவினையின் போது அங்கு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பி.கே.நேருவை , போரிநேரு திருமணம் செய்துக் கொண்ட பின்னர் தனது பெயரை ஷோபா நேரு என மாற்றிக் கொண்டார். பிறப்பால் இவர் ஹங்கேரியில் பிறந்த யூதப் பெண்மணி. தனது 109வது வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்தேன். நான்கு முறை நேரில் சந்தித்து பேசி இருக்கின்றேன். ஒருமுறை நடராஜர் சிலை ஒன்று வாங்கி வரமுடியுமா என கேட்டார். நானும் வாங்கி கொடுத்த போது அதற்கான பணத்தை திருப்பி செலுத்தினார். நான் வாங்க மறுத்து பணத்திற்கு பதிலாக புத்தகம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். அதனை ஏற்றுக்கொண்டு புத்தகம் வழங்கினார். யூத மக்களின் நலன் குறித்து பேசுவார்.
எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தி குடும்பக்கட்டுபாடு திட்ட நடவடிக்கைகளில் அதிக அக்கறை காட்டினார். அதற்கு மக்களிடம் எதிர்ப்புக் குரல் எழுந்தது. இதனை அது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்திராகாந்தி அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. ஆனால் இந்திராகாந்தியின் முகத்திற்கு நேராகவே மக்களின் கருத்து அழுத்தமாக எடுத்துரைத்தவர் போரிநேரு.
#Forinehru
#Ksrpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-04-2017

Thursday, April 27, 2017

சர் பிட்டி தியாகராயர்

#தியாகராயர் பிறந்தநாள்,
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான பிட்டி தியாகராயர் பிறந்ததினம் இன்று 165 ஆம் ஆண்டு(27-4-1852).அவரின் பெயராலே சென்னையில் தி நகர் அழைக்கப்படுகிறது .ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார் .காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடந்தபொழுது அதை சிறப்பாக நடத்திய பெருமை இவருக்கே உரியது .காந்தியடிகள் சென்னை வந்த பொழுது அவரை கோலாகலமாக வரவேற்றார்

அதற்கு முன்னரே சென்னை மகாஜன சபையை நிறுவி ஆங்கிலேய அரசிடம் கோரிக்கைகள் வைக்கும் பணியை செய்து வந்தார் .முக்கியமான அரசு பொறுப்புகளில், நிர்வாகத்தில் பிராமணர்களே பெரும்பாலும் நிறைந்து இருந்தார்கள். பிராமணர் அல்லாதவர்களுக்கு ஒரு அமைப்பு தேவை என யோசித்தார்கள். 1913 இல் #திராவிட சங்கம் உருவானது .மூன்றாண்டுகள் கழித்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் டி.எம். நாயர், பனகல் அரசர், இராம நியங்கர், தியாகராயர் என பிராமணர் அல்லாத எல்லா தலைவர்களும் தோற்று இருந்தார்கள். நவம்பர் 20 ல் எத்திராசு இல்லத்தில் “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்' எனும் அமைப்பை உண்டு செய்வது என முடிவு செய்தார்கள் .அந்த சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டதுதான் 'ஜஸ்டிஸ்' எனும் இதழ். அதனால் 'நீதிக்கட்சி' என பெயர் பெற்றது அமைப்பு .
சென்னை மாநகராட்சியின் தலைவராக நீதிக்கட்சி முன்னோடி சர். பி.டி.தியாகராயர் இருந்தபோது வேல்ஸ் நாட்டின் இளவரசர் சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் லார்டு வெல்லிங்டன்.தியாகராயரிடம்,சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் வேல்ஸ் இளவரசரை நீங்கள்தான் வரவேற்க வேண்டும். வரவேற்பின்போது நாங்கள் குறிப்பிடும் முறையில் ஆடை அணிந்து வரவேண்டும் என்று சொன்னார் ஆளுநர்.
தியாகராயர் கம்பீரமாக,"எங்களின் அடையாளத்தை விடுத்து ஆடை அணிய முடியாது .எப்பொழுதும் போல வெள்ளை ஆடை தான் அணிந்து வருவேன் .விருப்பம் இல்லாவிட்டால் நான் வரவேற்க வரவில்லை" என சொல்ல, வெள்ளை ஆடையுடன் வந்து வரவேற்க அனுமதி தரப்பட்டது .அதனால் வெள்ளுடை வேந்தர் என அறியப்பட்டார்
அடுத்து 1920 இல் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தின் படி நடைபெற்ற நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல்மேயர் என்கிற பெருமையை தியாகராயர் பெற்றார் .அப்பொழுது சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் அவர் கொண்டு வந்ததே இந்தியாவின் முதல்மதியஉணவுதிட்டம். அடுத்த வருடம் நடைபெற்ற மாகாணத்தேர்தலை காங்கிரஸ் புறக்கணிக்க, நீதிகட்சி வென்றது .முதல்வ பதவி இவரைத்தேடி வந்தபொழுது அதை சுப்பராயலு ரெட்டியாருக்கு விட்டுக்கொடுத்தார்.
மிகப்பெரிய செல்வந்தர் இவர் .#தியாகராயருக்கு நெசவுத் தொழிலைத் தவிர தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாசல் போன்ற தொழில்களும் இருந்தன. எளிய மக்களுக்காக உழைக்க வேண்டும் என அரசியல் களம் புகுந்தார்.

#தியாகராயர்
#KSRadhakrishnanpostings
#ksrpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-04-2017

Wednesday, April 26, 2017

தொலைக்காட்சி விவாதங்களில் நடைபெறுவது சம்பாஷனையா? அரட்டைக் கச்சேரியா? வெட்டிப்பேச்சுக்களா?

தொலைக்காட்சி விவாதங்களில் நடைபெறுவது சம்பாஷனையா? அரட்டைக் கச்சேரியா? வெட்டிப்பேச்சுக்களா?
----------------------------------------------------------------

தற்போது நடக்கும் தொலைக்காட்சி விவாதங்கள் கடமைக்கு நடப்பது போல தோன்றுகின்றது. சில நண்பர்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஆர்வமுடன் பார்த்த இந்த விவாதங்களை இப்போது தவிர்த்துவிடுகின்றன. ஏனெனில் விவாதங்களின் கருப்பொருள்களில் உயிரோட்டமற்று போய்விட்டது.

நான் தூர்தர்ஷன் காலத்தில் (1986) இருந்தே தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துக் கொள்கின்றேன். நிகழ்காலத்தில் உள்ளது போல் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் அப்போது இல்லை. யாரவாது விவாதத்திற்கு வரவில்லை என்றால் இன்ஸ்டட்ட இடியாப்பம் போல் "சார், வரமுடியுங்களா" என அழைத்து சிக்கலில் மாட்டி விடுவதெல்லாம் கிடையாது.

இரா.செழியன், முரசொலி மாறன், வேலூர் அமைச்சர் விஸ்வநாதன், செ. மாதவன், குமரி அனந்தன், வாழப்பாடி இராமமுர்த்தி மற்றும் பலர் விவாதத்தில் கலந்துக் கொள்வோம். விவாதங்கள் ஏறத்தாழ ஒருநாள் முழுவதும் கூட நடந்துள்ளது. ஏன் ஒரு நாள்? என நீங்கள் யோசிக்கலாம். ஏனெனில் அரைமணி நேரம் குளிர்சாதனம் இன்றி வியர்த்து விறுவிறுக்க தொலைக்காட்சி படப்பதிவு நடக்கும். இதற்காகவே இரண்டு மாற்று உடைகளும் எடுத்துச் செல்வது வழக்கம்.

நாங்கள் விவாதத்திற்கு செல்லும் போது செய்திதாள் குறிப்புகள், அரசாணை பிரதிகள், பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் போல் புத்தகம் கூட எடுத்து சென்றது உண்டு. இவற்றை எல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் விவாதத்தில் கூறப்படும் வரலாறுகள், புள்ளிவிவரங்கள் எதுவாக இருந்தாலும் சரியாக இருக்கும். காண்பவர்களுக்கு சரியான விவரங்கள் கிடைக்கும். தவறான தகவலை ஒருபோதும் கடந்த காலத்தில் அளிக்க மாட்டோம்.

சமீபத்தில் நடந்த விவாதங்களில் விவசாயிகள் துப்பாக்கி சூடு குறித்தும், காவேரி நதிநீர் பங்கீடு குறித்தும், முல்லை பெரியாறு, கச்சத்தீவு போன்ற பல தமிழக உரிமைப் பிரச்சனைகளில் தவறாக ஆண்டுகள், தரவுகள், தகவல்கள், ஒப்பந்தங்களின் விவரங்களை குறித்து விவாத விருந்தினர்கள் தவறாக விவாதித்தனர். அவர்கள் தான் தவறாக சொல்கின்றார்கள் என்றால் சில நெறியாளர்களும் அந்த தவறை திருத்தவில்லை.

இவற்றால் தமிழகத்தின் உரிமைகள் என்ன என்பதில் ஐயமும் பின்னடைவுமே ஏற்படுகிறது. இதில் கவனமாகவும் கண்டிப்போடும் இல்லாமலிருப்பது வேதனையை தருகின்றது.

இவற்றின் காரணமாகவே நான் விவாதங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றேன்.

என்ன விவாதமோ??? தரமற்ற தவறான இந்த வெட்டிப் பேச்சுகளால் எந்த பலாபலனும் இல்லை. இதை திருத்துவோர்  யாரோ? தலையில் தான் அடித்துக் கொள்ள வேண்டும்.

#KSRpostings
#KSradhakrishnanpostings
#தொலைக்காட்சிவிவாதங்கள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-04-2017

இன்று இசையின் பிதாமகன் விளாத்திகுளம் சுவாமிகளின் நினைவுநாள்.

இன்று இசையின் பிதாமகன் விளாத்திகுளம் சுவாமிகளின் நினைவுநாள்.
------------------------------------

இவரைக் குறித்து 'நிமிர வைக்கும் நெல்லை'என்ற 2004ல் வெளியான  எனது நூலில் நான் எழுதிய பதிவுகள் வருமாறு :

விளாத்திகுளம் சுவாமிகள்
இவரது முழுப் பெயர் நல்லப்பசாமி ஆகும். #வீரபாண்டியகட்டபொம்மனின் உறவினர். ராஜகம்பளம் வகையைச் சேர்ந்தவர். #காடல்குடி ஜமீன்தார் வழித்தோன்றல். விளாத்திகுளத்தில் வந்து குடியேறி, கூரை வீட்டில்தான் துறவி போல வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். கருத்த மேனி; ராஜ களையான முகம்; நெற்றியில் வாடாத திருநீற்றுப் பூச்சு, வெள்ளையான அடர்த்தி மீசை. பழுத்த ஆன்மிகவாதி. வெள்ளை வேஷ்டி, மஞ்சள் நிறத் துண்டு, சில நேரங்களில் பச்சை நிறத்தில் பீதாம்பரம். திருநீற்றுப் பை எப்பொழுதும் மடியில் இருக்கும். அப்பையில்தான் அனைத்தையும் வைத்துக்கொள்வார். பாதுகாப்புக்குப் பெட்டியோ, பீரோவோ எதுவும் கிடையாது. கோபமோ, ஆத்திரமோ வந்தது கிடையாது. #கச்சேரியில் #ராகதாளத்தில் யாராவது தவறு செய்துவிட்டால் கை ஜாடை மூலம் உணர்த்துவார்.
யாராவது இவரைச் சந்திக்க வந்தால் ‘சாப்பிட்டாயா?’ என்றுதான் முதலில் கேட்பார். அப்படிச் சாப்பிடவில்லையென்றால், உடனே கையிலுள்ள விபூதிப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துச் ‘சாப்பிட்டு வா’ என்று அனுப்புவார். கச்சேரிக்கு யாராவது தொகை என்ன? என்று கேட்டால், "கொடுப்பதைக் கொடுங்கள்; என்னுடன் வருவோர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்" என்பதை மட்டும் சொல்வார்.
இவருக்கு மிகவும் நெருக்கமாகக் கட்டப்பூச்சி முதுலியார் உடன் இருப்பார். ஒரு தடவை மைசூர் மகாராஜா, சுவாமிகளை மைசூர் அரண்மனைக்குத் தசரா விழாவையொட்டி அழைத்த பொழுது, இந்தக் கட்டப்பூச்சி முதலியார்,மைசூர் அரசரிடம் "விளாத்திக்குளம் சுவாமிகள் ஜமீன் பரம்பரையைச் சார்ந்தவர். அவர் தங்களைத் தலை தாழ்ததி வணங்க மாட்டார்" என்று சொல்ல, விளாத்திகுளம் சுவாமிகளுடைய பாட்டை முழுமையாக இருந்து கேட்டு,மைசூர் அரசர் தங்க மெடல் ஒன்றைச் சன்மானமாகக் கொடுத்துவிட்டார். அதை மிகவும் வறுமையில் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுத்துவிட்டார். இதைக் கண்ட முதலியார், "வீட்டில் செலவுக்குக் கஷ்டப்படும்போது, சுவாமிகள் இப்படித் தானம் செய்கிறாரே" என்று புலம்பினாராம். அது போலவே சங்கரன் பிள்ளையும் சுவாமிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்.
சுவாமிகளிடம் குருமலை லட்சியம்மாள் இணைந்து பயின்றார். இவர், கே.பி. சுந்தராம்பாள் மாதிரி பாடக்கூடியவர். சுவாமிகளுக்குத் தமிழகமெங்கும் ரசிகர்கள் உண்டு. சுவாமிகளின் இசையில் சொற்கள் கிடையாது. ராகங்கள்தான் இருக்கும். உச்சத்தில் 5 கட்டத்திற்கு மேலேயே பாடுவார். ஒலிபெருக்கி, மின்சாரம் இல்லாத நேரத்தில் இவருடைய பாட்டு ஒரு மைல் தொலைவுக்குக் கேட்கும். கே.பி. சுந்தராம்பாள், டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்கள் சுவாமிகளைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெறுவதுண்டு.
ஒருமுறை தியாகராஜ பாகவதர் பரமக்குடியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காரில் விளாத்திகுளம் வழியாக வந்தபொழுது, விளாத்திகுளத்தில் காரை விட்டு இறங்கி நடந்து வந்தாராம். ஏனென்றால், விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் இருந்த இடம். அதில் மரியாதை நிமித்தம் நடந்து வர வேண்டும் என்பதற்காக நடந்து சென்றார்.
விளாத்திகுளத்தில் கனமழை. சுவாமிகளுடைய குடிசை வீடு முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருந்தது. ஊர் மக்கள் சுவாமியைக் காணோமே என்று தேடியபொழுது, குளக்கரையில் தவளை கத்தும் சத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தார் சுவாமிகள். அதுபோன்று மதுரை வைகையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, நாதசுவரக் கலைஞர் பொன்னுசாமியின் தகப்பனாருடைய நாதசுவர இசைக்கு ஏற்றவாறு தன்னுடைய வேட்டி துண்டுகளை அடித்துத் துவைத்தார். திடீரென்று இசை நின்று போனபொழுது மிகவும் வருத்தப்பட்டார். "நயமான தாளம் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தேன். இசை நின்றவுடன் விட்டுவிட்டேனே; போச்சு போச்சு" என்றாராம்.
இறுதிக் காலத்தில் சிவகிரி அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆசிரமம் கட்டி வாழ வேண்டுமென்று விரும்பினார். பொருளாதாரச் சிக்கலால் அப்பணியைத் தொடர முடியாமல் வேதனையடைந்தார்.
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், ராஜரத்தினம் பிள்ளையின் மைத்துனர் திருவெண்காடு சுப்பிரமணியம் ஆகியோர் சுவாமிகள் மீது பக்தியோடு கூடிய மரியாதையை வைத்திருந்தனர். விளாத்திகுளம் சுவாமிகளின் மணிவிழாவைக் காருகுறிச்சி அருணாசலம் ஏற்பாடு செய்தார். புதூர் ஆசிரியர் முருகையா இந்நிகழ்ச்சிகளின் அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொண்டார். மணிவிழா நிகழ்ச்சியில் ம.பொ.சி., சிவாஜி கணேசன், ஏ.பி. நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விளாத்திகுளத்தில் சுவாமிகளின் சமாதி பராமரிப்பு இல்லாமல் பஸ் நிலையம் அருகே இருக்கின்றது. இந்த நினைவிடத்தைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை பல சமயங்களில் எழுந்தும் பாராமுகமாகவே அரசு நிர்வாகம் இருக்கின்றது.
சேத்தூர் ஜமீன்
"சோத்துக்கு அலைந்தவன் சேத்தூருக்குப் போ; சோறு மணக்கும் சேத்தூர்" என்ற பெருமைக்குரிய சேத்தூர் ஜமீன், இன்றைக்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்தாலும், இந்த ஜமீன் ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முக்கிய ஜமீனாகத் திகழ்ந்தது. அந்த ஜமீனில் கிஸ்தி வசூலிக்க வந்த வெள்ளையரை எதிர்த்துப் பெண்களே போராட்டம் நடத்தியது அக்காலத்தில் பெருமையாகப் பேசப்பட்டது. இந்த ஜமீனைச் சேர்ந்த ஜமீன்தார் சேவுகப் பாண்டியத் தேவர் பிற்காலத்தில் செம்மை, சித்தார் போன்ற பக்கவாத்தியங்களை வாசிக்கக்கூடிய அளவுக்குப் புகழ்பெற்றார்.
அதிசய சாதனை புரிந்த வித்துவானுக்கு மகாராஜா பண முடிப்பும் வைரக்கல் பதித்த தங்க மோதிரமும் பரிசாக அளித்தார். பரிசைப் பெற்றுக்கொண்ட வித்துவான், என்னைப் போல் யாராவது ஒரே ராகத்தை மூன்று நாட்கள் ஆலாபனை செய்து பாடினால், அவருக்குத் தான் பெற்ற பரிசுகளைத் திருப்பி அளித்துவிடுவதாகக் கூறினார். இதைக் கேட்ட விளாத்திகுளம் சுவாமிகள் மேடையேறி ‘கரகரப் பிரியா’ ராகத்தை ஐந்து நாட்கள் வரை பாடினார். சவால்விட்ட வித்துவான் மெய்ம்மறந்து சுவாமிகளின் காலடியில் விழுந்து வணங்கி, தான் பெற்ற பரிசுகளை சுவாமிகளுக்குத் திருப்பி அளித்தார். மகாராஜா சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, நல்லப்பரை அணைத்துப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, சன்மானமும் தங்கப்பா பதக்கமும் அணிவித்துச் சிறப்பித்தார்.
"கோவில்பட்டிக்கும் விளாத்திகுளத்துக்கும் இடையில் 32 கி.மீ. தொலைவு. சப்த நெரிசல் இல்லாத காலம். கோவில்பட்டி ஆலைகளில் சங்கு ஊதினால், விளாத்திகுளம் மந்தைக்குக் கேட்கும். உள்ளே இருக்கும் தொழிலாளிகளை வெளியே அனுப்பவும், வெளியிலிருப்பவர்களை உள்ளே அழைக்கவுமான சங்கு ஊதல் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும். சங்கொலி மெல்ல மெல்ல ஏறி உச்சிக்குப்போய் ஒரு பாட்டம் அந்தரத்தில் நிற்கும், ஆகாயத்தில் நின்று ‘எல்லாம் சரியா இருக்கா’ என்று பார்ப்பதுபோல் தோன்றும். வழுக்கு மரம் ஏறியவன் தானே கீழிறங்குவதுபோல், மெதுமெதுவாக வழுக்கிக்கொண்டே வரும். விளாத்திகுளம் மேற்கில் வடகயிறு போல் கிடக்கும் வைப்பாற்றின் வெட்டவெளியில் நின்று சங்கொலிக்கு இணையாக நல்லப்பர் குரல் பிடிப்பார். மேலே மேலே ஏறி ‘கும்’மென்று உச்சியில் நிறுத்திக் கீழே கொண்டுவருவார்" என தகவல்கள் .......

 #விளாத்திகுளம்சுவாமிகள்
 #நல்லப்பசாமி
#Vilathikulam

#KSRpostings #KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-04-2017

சட்டைப்பை அரசியலும்,சாதுர்யமும்

சட்டைப்பை அரசியலும்,சாதுர்யமும்
-------------------------------------

நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்தின் ( Bar association) தேர்தல் நடைபெற்றது. நானும் வாக்களிக்க  சென்றிருந்தேன். அப்போது அங்கு உறுப்பினராக இருக்கும் ஒரு வழக்கறிஞரை காண நேர்ந்தது. இன்று நேற்றல்ல பலகாலமாக அவரை பார்த்து வருகின்றேன். ஆனால் அவரை பார்க்கும் போதெல்லாம் அவரது சட்டைப் பாக்கெட்டை பார்க்க தூண்டும்.

ஆரம்பத்தில் ஜெயலலிதா படத்தை வைத்திருந்தார், பின்னர் பன்னீர்செல்வம் படத்தை பையில் வைத்திருந்தார்.  அதன் பின்னர் சசிகலா-ஜெயலலிதா படத்தை வைத்திருந்தார். பின்னர் தினகரன் படத்தை வைத்திருந்தார். நேற்று பார்த்தேன் எடப்பாடி படத்தை வைத்திருந்தார்.

தலைவர்கள் என்பவர்கள் கொள்கை பிடிப்பால் மனதை தொட்டவர்கள் என்ற நிலை மாறி , கொள்ளையடித்து சட்டைப்பையை நிரப்பும் வியபார யுக்தியாக இருக்கின்றார்கள் என புரிந்துக் கொண்டேன்.
பெட்டி அரசியலுக்கு இப்படி பிழைக்கத் தெரிந்தவர்கள் தான் சாணக்கியர்கள்.

முன்னாள் அட்டார்னி ஜெனரல் டி.கே.டி ( வி.கே.திருவேங்கடாச்சாரி) அவர்களை தன்னை சந்திக்குமாறு காமராசர் தகவல் அனுப்புகின்றார். அதற்கு வி.கே.திருவேங்கடாச்சாரி  ," வேண்டுமானால் காமராசரை என்னை வந்து பார்க்க சொல்லுங்கள்" என தலைமை செயலாளர் மூலமாக பதில் கூறினார். காமராசரும் வருத்தம் தெரிவித்து வி.கே.திருவேங்கடாச்சாரி யை சந்தித்து பேசினார்.

வழக்குரைஞர் தொழிலை "நோபல் புரொபஷன்( உன்னதமான தொழில்)' என்று ஆங்கிலத்தில் சொல்வதோடு, வழக்குரைஞர்களை "லேனர்ட் ஃபிரெண்ட்' என்றும் அழைப்பதுண்டு. இப்படியான கீர்த்தி வாய்ந்த தொழிலுக்கு இப்படிப்பட்டவர்களால்  தான் சவாலாக விளங்குகின்றார்கள்.
வழக்குரைஞர் தொழில் செய்பவர்கள் கண்ணியத்துடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். இது தான் இந்த உன்னதமான வழக்குரைஞர் பணிக்கு இலக்கனமாகும்.

#KSRadhakrishnanpostings
#ksrpostings
#பச்சோந்திஅரசியல்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-04-2017

Tuesday, April 25, 2017

To understand what goes behind the curtains of red corridor it’s important to know about the history of Naxals. Who are these Naxals and what do they want?

“Naxal” got its name from a small village in West Bengal called Naxalbari.



1967 saw the peasant uprising here in Naxalbari which eventually gave the followers of this far-left radical communist ideology, the name- Naxal. This movement was founded by Kanu Sanyal, Jangal Santhal and Charu Majundar, whose “Historic Eight Documents” eventually became the guideline for “Red Revolution”. This ideology slowly started spreading into undeveloped areas, mostly the tribal parts of Bihar, Chhattisgarh, Jharkhand, Odisha, Maharashtra, Andhra Pradesh and Telangana. As per R&AW data, by the end of 2008, Naxalites were active in as many as 200 districts across 10 states of India. July 2011 the number of Naxal infested districts were reduced to 83 across 9 states, but this list had 20 additional districts.

Now, coming back to “what do they want”, there are numerous articles written about oppression of tribals by Landlords leading to the uprising and revolt, so on and so forth. But rarely have we seen someone talk about the nexus that works behind closed doors, and to understand that nexus it’s important to know the natural resources available in these naxal infested lands or the Red Corridor. This nexus not only involves the landlords and politicians but also the “naxal” leaders, Christian missionaries and foreign funded NGO’s. Roots of this nexus run very deep and dates back to British era, when British supported “zamindars” against tribals because they needed good quality wood from forests for building ships. Eventually it was not just wood but also “tendu patta” which is used in making beedis, and then came the mining part which became bigger reason than all of these.



Let’s have a quick look at Bauxite mining that happens in India.

Bauxite mining isn’t easy for many reasons and most important being that it’s an open mining also known as strip mining. For bauxite mining, the land is first cleared of all the vegetation and stripped naked. Then almost 4-5 meters of top soil is removed to get through the red bauxite ore underneath. Ideally the mining company can store this top soil and can later fill the land once bauxite is extracted, thus making the land more or less fertile once again. But sadly this doesn’t happen as the whole process gets expensive. Hence what actually happens is, the land Mafia steps in and squires this land to convert into commercial land, yielding high profit. This is the nexus between mining company, politicians, local administration and land Mafia.

Now let’s see where Naxals fit in this unholy nexus.

Because the mining company has to acquire land which belongs to tribals, and because this land will eventually be completely useless for these tribals, protests start to happen. Tribal protests brings in picture the “naxal leaders” who play a double role here. They lead these tribals for protests against mining companies. They even instigate armed and violent protests to get on the advantage side of the bargain. Once the protests turn extremely violent the naxal leader sits on the bargain table with the mining company deciding compensation, and death of few tribals during violence makes the position of naxal leader even more profitable.

The compensation decided gets distributed amongst politicians, local authorities and naxal leader. The tribal who lost his land gets either pushed to some other patch of land or is forced to leave for nearby town in search of labour work. He still believes his leader is fighting for his rights and land. This whole game keeps playing till mining is over and land gets grabbed by land Mafia and eventually some commercial venture gets erected.

Have we ever thought who provides arms and ammunition to these tribals? How come these naxal leaders have money to provide and sustain an armed protest?



In 2007, there was a report that had come out, which claimed that the Naxalites were negotiating with an Austrian company for the purchase of arms and ammunition. Our governments have always failed to block the routes funding these Naxalite and from where these arms are procured. Why hasn’t any government yet published the list of corporates that provide direct or indirect funds to these Naxals? 17th April 2010, police confiscated the laptop belonging to Maoist leader Kishanji, and from this laptop they got to know that Naxals had received 12 crore from Jharkhand in 2010 itself. The total money collected by Maoists over 3 years is somewhere above 100 crore. There was also this media report some time back which described how Naxals divert a big chunk of government grant that is being allotted for developmental projects in Maoist affected areas, into their kitty, and it’s done mostly through government staff and sarpanches.



Talking of funds, a very important source of funding has been foreign NGO’s and missionaries, the last point finishing the full circle of this unholy nexus. Let’s see the role played by these NGO’s and their reason for providing funds to these Naxals.

In the Year 2013, govt identified almost 128 NGO’s who were operating on behalf of various Naxal groups. These NGO’s are spread across 16 states and some being in states with no apparent naxal insurgency whatsoever.




Have we ever thought why only Christian missionaries are present in these naxal infested areas? Why do naxals prefer converting to Christianity and not to any other religion? Remember the huge conversion drive in Andhra Pradesh and Orissa? Both being highly naxal infested states. Christian missionaries get huge funds from the west to carry on their conversion game and tribals from naxal area are the easiest prey. These tribals have been leading a life devoid of basic amenities for ages and Christian missionaries bring them that promise of a civilized life providing medical facilities, schools, toilets and basic lessons on cleanliness. All of this comes with a price tag which is called conversion. Though many Hindu organizations are working towards tribal welfare but a) this awakening came pretty late, and b) Hindu outfits can never match up to the Christian NGO's funded by west. These Christian missionaries keep the deep pockets of naxal-tribal leaders full and in return get full cooperation to operate amongst tribals. The Joshua project's modus operandi is- make life miserable for the tribals and then lead them to conversion giving them the dream of "promised land".

There were few reports that revealed how George Bush had given 20 Billion dollars into the conversion project which is popularly known as the "soul harvesting". The money was used to prepare world database of ethnographic data to make it easy to identify target. The exercise also included a lot of intelligence gathering. Christian organizations like International Mission Board, Christian Aid and Southern Baptist Convention are multi billion organizations and have been investing in conversion projects of tribals in India. Is there any religious organization that buys mines? Why did Church of England invest in mining in India? This 3.8 million pound investment was routed through Vedanta which was one of the biggest mining groups in India till 2010. Vedanta is apparently controlled by Rothschild through funding by some big financial players like HSBC, Deutsch Bank, Citigroup etc. Interestingly Vedanta is also blackened by the infamous Coal Scam of UPA.

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. MyIndMakers is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of MyindMakers and it does not assume any responsibility or liability for the same

விவசாயிகளின் பாடு.

இன்று விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அனைத்துக் கட்சி கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுவிக்கப்ப பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுடன் பணியாற்றியும், விவசாய அமைப்புக்களின் நம்பிக்கைக்கு உரியவனாகவும், 1975 ல் விவசாய கடன்களை அடைக்க தவறியதின் விளைவாக எடுக்கப்பட்ட ஜப்தி நடவடுக்கைகளை தள்ளூபடி செய்வதற்காக சட்டப் போராட்டம் செய்தவன் என்ற முறையிலும் போராட்டம் முழு வெற்றியடைய வேண்டும் என விரும்புகின்றேன்

தமிழகத்தில் விவசாயிகள் உரிமைகளுக்காக போராடியவர்களை இதுவரை தமிழக அரசின் காவல் துறை 70 விவசாயிகளை சுட்டுக் கொன்றுள்ளது.
200 விவசாயிகளுக்கு மேல் தற்கொலையாலும், வேதனையாலும் மடிந்துள்ளனர். என்னுடைய கிராமத்திலே 30.12.1980ல் அன்று நடந்த விவசாயிகள் வேலை நிறுத்தத்தில் 8 விவசாயிகளை போலீஸார் துப்பாக்கி சூட்டில் சாகடித்தனர். எங்களுடைய வட்டாரத்தில் இதுவரை 20 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 இதற்கு பிறகும் விவசாயிகள் தங்களை உயிரை விதைத்து எதனை அறுவடை செய்ய முடியும். அவர்களின் கையிருப்பு இன்றைய போராட்டமும், நாம் அளிக்கும் நம்பிக்கையும் தான்.

ஆகாசம்பட்டு சேஷாசலம் என்று நாங்கள் அழைப்போம். ஆகாசம்பட்டு, உலக நகரமான ஆரோவில்லின் அருகே உள்ள பேரூர். இயல்பான எதார்த்தமான வெண்பாக்களை எழுதுவதில் வல்லவர் நண்பர். ‘நக்கல்’ அடிப்பதிலும் வல்லவர். அவருடைய வேதனையை பாருங்கள். விவசாயிகளின் சோகம் புரியும்.

விவசாயம்
என்ன விவசாயம்! எழவு விவசாயம்!
பொன்னு வெளையற பூமியாம்ல! – இண்ணைக்கும்
போர்வையில் பாதியே சோமனாச்சி! அன்னாச்சி!
வேர்வையில பாதி மழை!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவரா? – அழுதுண்டே
ஏக்கருக்கு நூத்தியஞ்சை எண்ணிப்பார்த் தா தெரியும் வள்ளுவனாரே!


#விவசாயம்
#விவசாயிகள்போராட்டம்
#Savefamers #saveTamailnadufarmers
#KSRpostings #KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-04-2017

ஐ.நா பொதுக்குழுவின் ஆண்டறிக்கை;அணிலாக இருந்திருக்கின்றேன்

ஐ.நா பொதுக்குழுவின் ஆண்டறிக்கை;அணிலாக இருந்திருக்கின்றேன்
---------------------------
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற  டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா சபையில் தாக்கல் செய்தோம். அதன் தொடர்ச்சியாக இருமுறை நேரடியாக சென்று தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி  மனு அளித்தேன். அத்துடன் நிற்காமல் பழைய தீர்மான நகலுடன் இலங்கை தமிழர்களின் நிலையையும் அங்கு நிலவும் சூழ்நிலைகளை விளக்கியும் மாதம் தோறும் மின்னஞ்சல் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தேன். முயற்சிகளின் பலனாக  எங்களது கோரிக்கைகள் குறித்து ஐ.நா பொதுக்குழுவின் ஆண்டறிக்கையில்  செய்தியாக வெளியிட்டுள்ளது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழ் மண்ணுக்கும் இனத்திற்கும் கடமையை செய்ய அனிலாக இருந்திருக்கின்றேன் என்பதில்  திருப்தி அடைகின்றேன்.  நல்ல வாய்ப்பை நல்கிய  தலைவர் கலைஞருக்கும் நன்றிகள்.






















#KSRadhakrishnanpostings
#ksrpostings 
#unitednationcouncil 
#Teso 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-04-2017

இந்த மனித இருப்பு விருந்தினர் இல்லம்

இந்த மனித இருப்பு
விருந்தினர் இல்லம்
 ---------------------------
இந்த மனித இருப்பு
ஒரு விருந்தினர் இல்லம்.
ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு
 
ஓர் ஆனந்தம்
சற்று மனச்சோர்வு
சிறிது அற்பத்தனம்
நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு-
எதிர்பாராத விருந்தாளிகளாக
அவ்வப்போது வந்துசெல்லும்.
 
எல்லாவற்றையும் வரவேற்று விருந்தோம்பு!
துக்கங்களின் கூட்டமாக அவை இருந்து
உனது வீட்டைத் துப்புரவாக
வெறுமைப்படுத்தும் போதும்,
ஒவ்வொரு விருந்தினரையும்
கௌரவமாக நடத்து,
புதியதோர் உவகைக்காக
அவை உன்னை
தூசிதட்டித் தயார்படுத்தக்கூடும்.
 
வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
 -ரூமி
 
தமிழில் என். சத்தியமூர்த்தி

தகுதி இல்லாதவர்களும்,,,ஆசை படுபவர்களுக்கும்

தகுதி இல்லாதவர்களும்,,,ஆசை படுபவர்களுக்கும் இடையே நாடு சிக்கும் போது மக்கள் சின்னாபின்னாமாக்கப் படுகிறார்கள்.
இதற்க்கு காரணம் மக்கள்தான் ...
ஓட்டுக்கு பணம் என்றால் இப்படித்தான் .....

தமிழகமனிதஉரிமைஆணையம்

தமிழகமனிதஉரிமைஆணையம்:
---------------------------
தமிழக மனித உரிமைகள் ஆணையத்திற்கு நீண்ட காலத்திற்கு பின்னர் இன்று சென்றிருந்தேன்.. மனித உரிமைகள் ஆணையத்தின் நிலை சற்று  பரிதாபமாக இருந்தது.  மக்களின் உரிமைகளை  நிலைநாட்ட வேண்டிய ஆணையம் அதன் உரிமைகளுக்காக அவர்களே போராடிக் கொண்டு இருப்பார்களோ என்ற ஐய்யப்பாடு எழுந்தது. 

தேசிய மற்றும் மாநிலங்களில் மனித உரிமை ஆணையம் அமைக்க அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் சட்டம் கொண்டு வந்தார். அந்த  உத்தரவை 1993ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கியது. ஆனால் அவர் செவி சாய்க்கவில்லை. அவர் மனித உரிமை ஆணையம் அமைக்க விரும்பவும் இல்லை.தொடர்ந்து உத்தரவு கடிதங்களும் வந்தனை. அவையாவும் காகித அம்புகளைப் போல் இலக்கினை எட்டவில்லை. அதன் பின்னர் 1996ல் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தில் மனித உரிமை ஆணையத்தை அமைத்தார். அப்போது சென்னை ராயப்பேட்டை  சாலையில் ymia கட்டிடத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்பட தொடங்கியது.  

ஜெயலலிதா அமைக்க விரும்பாத மனித உரிமை ஆணையத்தை தலைவர் கலைஞர் அவர்கள் அமைத்ததின் பலனை அவரும், கழக உடன்பிறப்புகளும் பெற்றனர். 
ஜுன் 30, 2001 ஆண்டு உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில், தமிழக முதல்வர் தலைவர் கலைஞர்  அவர்களை மனித நேயமற்ற வகையில் நடு இரவில் வீடு புகுந்து தாக்கி கைது செய்தது ஜெயலலித்தவின் ஏவல்துறை. 

தலைவர் கலைஞர் நள்ளிரவில் கைது செய்யபட்ட போது  தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சம்  பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்ட் உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. எனினும் அடியேன் தான் மனித உரிமைகள் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்து ஜூலை முதல் நாள் மதியம்  இரண்டு மணி அளவில்  ஆணையத்தின் கதவை தட்டினேன்.
முன்னாள் சடட அமைச்சர் ஆலடி அருணா அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்களும்  உடன் வந்தனர்.  ஒரு லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டு கழிவறை வசதி இல்லாமலும், உணவு , குடினீர்  வழங்கப்படாமலும்  துன்புறுத்தப்படுவதாக புகார் அளித்தோம். 
அடுத்த நாள் அனைத்து செய்தி தாள்களிலும் படத்துடன் செய்தி வந்தது. நீதிபதி சமிதுரை கடலூர்,சென்னைசிறைச்சாலைகள்-சென்று ஆய்வு செய்து நாங்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பதறிந்து   15 நாட்கள் ரிமாண்ட் உத்தரவை ரத்து செய்து 48மணி நேரத்தில் ஒரு லட்சம் பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.  என்  வாழ்நாளில் மிகப்பெரிய கடமையை நிறைவேற்றிய திருப்தி அளித்த நிகழ்வு இது என்றால் மிகையல்ல.  இந்த உத்தரவை நான் பெறும் வரை மனித ஆணையம் என ஒரு அமைப்பு இருப்பதும், அதன் செயல்பாடு குறித்தும் பல அரசியல் கட்சிகளோ, பொதுமக்களோ அறிந்திடவில்லை என்பது உண்மை. ஆனால் இன்று  பெருமைமிகு  பி.எஸ்.குமாரசாமி சாலையில் அமைந்திருந்தாலும்  செயல்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. எனக்கென்னவோ மனித உரிமை ஆணையம் அதன் உரிமைகளுக்காகவே ஒரு பனிப்போராட்டம் செய்து கொண்டிருக்கின்றதோ என்ற கேள்வியுடன் என் பணிகளை செய்துவிட்டு வந்திருக்கின்றேன்.

#ksradhakrishnanpostings
#ksrpostings 
#தமிழகமனிதஉரிமைஆணையம் 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
19-04-2017

மனச்சோர்வு வீரனையும் வாழாதிருக்க வைத்துவிடும்!

உடலில் எத்தனை வலிமை இருந்தாலும் மனதில் அடிபட்டால் எல்லாமே தளர்ந்து போகும். பாரதத்தில் துரோணாசார்யரை ‘அசுவத்தாமன் இறந்தான்‘ என்று சொல்லி மனக்கலக்கம் அடையச் செய்து வென்றான் அர்ச்சுனன். 
மனச்சோர்வு வீரனையும் வாழாதிருக்க வைத்துவிடும்!

Monday, April 24, 2017

ஜெயகாந்தன் அவர்களின் இரு நூல்கள்

கலைஞன் பதிப்பகம் நந்தா அவர்கள் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய இதுவரை வெளிவராத கதைகளும், ஜெயகாந்தனின் வாதம் பிரதிவாதம் என்ற இரண்டு நூல்களை அவருடைய புதல்வர் ஜெயஸிம்ஹன் தொகுத்து வெளியிட்டுள்ளார். படித்தேன்,நல்ல பணி. பாராட்டுக்கள்
ஜெயகாந்தன் மீது பற்றுள்ளவர்கள், இதுவரை வெளிவராத அவருடைய இந்தப் படைப்புகளை படிக்க வேண்டும்.
#ஜெயகாந்தன்
கே.எஸ். இராதாகிருஷ்ஷன்
24.04.2017
#K_S_R_Post
#KSRadhakrishnanpost

Saturday, April 22, 2017

மதிப்பிற்குரிய ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் நெருக்கடி நிலை பேச்சு (1975)

மதிப்பிற்குரிய ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் நெருக்கடி நிலை( 1975) காலத்தில் பேசிய பேச்சு ஒன்றினை இன்று வாசிக்க நேர்ந்தது.

 " அறிவற்றவர்களும், ஆற்றலற்றவர்களும், நேர்மை அற்றவர்களும்  நமக்கு அமைச்சர்களாக,அரசியல் தலைவர்கள் ஆக வருவார்கள்". என்பது தான் அந்த பேச்சின் சிறுபகுதி. இன்றைய காலகட்டத்திற்கும் சரியாக பொருந்தி வருகின்றது.
'இம்பூட்டு அறிவு கொண்ட அமைச்சர்கள் ஆளும் மாநிலத்துல நாமளும் இருக்கோங்கறத நினைச்சா பெருமிதத்துல கண்ணு வேர்க்குது'

அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாக்கோல் கொண்டு நீர் ஆவியாதலை தடுக்க முயற்சி செய்வதும், நாற்பதாண்டு கால அரசியல் வரலாறு கொண்ட பன்னீர்செல்வம் நிபந்தனை வைத்து செய்வதும், அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறையின் விசாரணைக்கு படியேறுவதும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் 1975ஆம் ஆண்டு  பேச்சுக்கு இன்றைய உதாரணங்கள்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
#ஜெயப்பிரகாஷ்நாராயணன்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-04-2017

நகசல் பாரி இயக்கம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன, நினைவூட்டல் பதிவு.


நகசல் பாரி இயக்கம் தொடங்கப்பட்டு இன்றுடன்  ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன,  நினைவூட்டல் பதிவு.
---------------------------
1967 நக்சல் பாரி எனும் கிராமத்தில் விமல் கேசன் எனும் ஆதிவாசி நிலத்தை உழுவதற்கு சட்டத்துறை அனுமதி வழங்கியது. ஆனால் அங்கு வசித்து வந்த நிலக்கிழார்கள் அவரை துன்புறுத்தி சித்ரவதை செய்தனர். இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த காரணத்தால் தான் அந்த குழுவிற்கு நக்சல் பாரி இயக்கம் என பெயர் பெற்றது.

நக்சல் பாரி இயக்கத்தின் பொதுசெயலாளர் சாரு மஜூம்தார்.  கம்யூனிச தோழர்கள் , புத்தக வாசிப்பு பழகம்மற்ற பலருக்கும்  பலருக்கும் இப்பெயர்  புதிதாக இருக்கும்.  சுதந்திர இந்தியாவில் அரசுக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்டவர் எனலாம்.  நக்சல் பாரி இயக்கத்தின் பொது செயலாளர்.  இதனை பதிவு செய்வதின் நோக்கம் சாரு மஜூம்தாரின், அல்லது நக்சல் பாரி இயக்கத்தின் சித்தாந்தத்தை நியாயப் படுத்தவில்லை.  ஆனால் அந்த இயக்கம் ஏற்படுத்திய எழுச்சியும் , புரட்சியும்  வரலாற்றில் அழியாத தழும்புகளை மறுக்கவோ மறைக்கவோ இயலாது.  இயக்கத்தை சார்ந்த குழுவினருக்கு ஒரு வேலையை அளிப்பார்கள். அந்த பணியில் உயிரிழந்தால் அதற்கு இழப்பீடு வழங்கமாட்டார்கள்..அவ்வாறு வழங்கினால் அது கூலிப்படை என்று  கூறப்பட்டு வரலாற்றில் தியாகங்களாக நிலைத்து இருக்காது. ஓரிடத்தில் பணியை நிறைவேற்ற வேண்டுமெனில் அந்த இடத்தில் கூலி வேலையை தேடி தங்களது அத்தியாவசிய தேவைகளை அவர்கள் தான் தேடிக் கொள்ள வேண்டும்..

ரஷ்ய புரட்சியாளரான லெனின் பிறந்தநாளன்று ஏப்ரல் 22-1967 அன்று  கல்கத்தாவில்  பொதுக்கூட்டத்தில் புரட்சி உரையாற்றி " அழித்தொழிப்பு " முழக்கதை முழங்கி ஐம்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில்  தொழிற்சங்கங்கள் தொடங்கி இடது, வலது கம்யூனிஸ்ட்டுகளாக வளர்ந்து கட்டெரும்பாக தேய்ந்துவிட்டன.
#naxalbari#maoist
#நக்சல்பாரிஇயக்கம்
#சாருமஜூம்தார்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-04-1967
22-04-2017

Friday, April 21, 2017

ஐ.நா பொதுக்குழுவின் ஆண்டறிக்கை; அணிலாக இருந்திருக்கின்றேன்

ஐ.நா பொதுக்குழுவின் ஆண்டறிக்கை; அணிலாக இருந்திருக்கின்றேன்
---------------------------
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற  டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா சபையில் தாக்கல் செய்தோம். அதன் தொடர்ச்சியாக இருமுறை நேரடியாக சென்று தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி  மனு அளித்தேன். அத்துடன் நிற்காமல் பழைய தீர்மான நகலுடன் இலங்கை தமிழர்களின் நிலையையும் அங்கு நிலவும் சூழ்நிலைகளை விளக்கியும் மாதம் தோறும் மின்னஞ்சல் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தேன். முயற்சிகளின் பலனாக  எங்களது கோரிக்கைகள் குறித்து ஐ.நா பொதுக்குழுவின் ஆண்டறிக்கையில்  செய்தியாக வெளியிட்டுள்ளது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழ் மண்ணுக்கும் இனத்திற்கும் கடமையை செய்ய அனிலாக இருந்திருக்கின்றேன் என்பதில்  திருப்தி அடைகின்றேன்.  நல்ல வாய்ப்பை நல்கிய  தலைவர் கலைஞருக்கும் நன்றிகள்.

#KSRadhakrishnanpostings
#ksrpostings
#unitednationcouncil
#Teso
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-04-2017

Thursday, April 20, 2017

நவீன தமிழிலக்கியத்தின் அடையாளம்

நவீன தமிழிலக்கியத்தின் அடையாளம், ஹைபிரிட் (hybrid)படைப்புகளின் முன்னோடியான  நகுலன் ஆராதித்த சுசிலாவை கடந்த வாரம்  நாலந்தா
சர்வகலாசாலை வளாகத்தில் பார்த்தேன். நகுலன் உணர்வுகளுக்கு உடை அணிவித்ததை போல் இருந்தார். அவர் பாஞ்சாலமா?வங்கமா?பீகாரா?கலிங்கமா?மலையாளமா? தமிழகமா? என யூகிக்க முடியவில்லை.

நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால்,
என்னால் வர முடியாது!’

A life without dreaming is a life without meaning.

Tears are unspoken feelings.

இப்படியும் இனி ஒருவரால் எழுத முடியுமா என்பது என் அய்யம்.

#KSRadhakrishnanpostings
#Ksrpostings
#நகுலன் #சுசீலா
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-4-2017

இதுவா தர்ம யுத்தம்

தர்மயுத்தத்தின் முதல் வெற்றி என ஓ.பன்னீர்செல்வத்தின் கொக்கரிப்பை ஊடகங்கள் வாயிலாக  காண நேர்ந்தது. அத்தனை அநியாயத்தையும் அக்கிரமங்களையும் செய்த  ஜெயலலிதா,  சட்டத்தின் பிடியில்  மாட்டிக் கொண்ட போதெல்லாம் " தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,  முடிவில் தர்மமே வெல்லும் "என்பார்.  அவரின் அடிவருடி பன்னீர்செல்வத்திற்கு தர்மம் என்றால் என்னவென்று  எப்படி தெரியும்? ஆங்கிலத்தில் சைலண்ட் ப்ரொனவுன்ஷேஷன் என்பார்களே அப்படித்தான் அவர்கள்  அதர்மத்தை, தர்மம்   என உச்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நீதிமன்றத்தில்  இரட்டை இலையை மீட்டு விட்டு தர்மத்தின் வெற்றி என்கிறாரா?
கச்சத்தீவை மீட்டுவிட்டு தர்மயுத்தத்தின்  வெற்றி என்கின்றாரா?
விவசாயிகளின் பிரச்சனையை கையில் எடுத்து உச்சநீதி மன்றத்தில் வென்றுவிட்டு தர்மயுத்தத்தின் வெற்றி என்கின்றாரா?
மத்திய அரசு நீட் தேர்வை, இந்தியை  திணிக்கின்றதே, அதனை தடுத்து சமூகநீதி நிலைநாட்டி விட்டு  தர்மயுத்தத்தின் வெற்றி என்கின்றாரா?

ஒரு களவானி இன்னொரு களவானியை வென்றது எப்படி தர்மயுத்தத்தின் வெற்றியாகும்?  காப்பியங்களிலும், புராணங்களிலும் புனிதமாக உச்சரிக்கப்பட்ட  #தர்மம் என்ற சொல் இவர்களால் களங்கப்பட்டுள்ளது.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
#தர்மயுத்தம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-04-2017

Wednesday, April 19, 2017

தமிழக மனித உரிமை ஆணையம்:


தமிழக மனித உரிமைகள் ஆணையத்திற்கு நீண்ட காலத்திற்கு பின்னர் இன்று சென்றிருந்தேன்.. மனித உரிமைகள் ஆணையத்தின் நிலை சற்று  பரிதாபமாக இருந்தது.  மக்களின் உரிமைகளை  நிலைநாட்ட வேண்டிய ஆணையம் அதன் உரிமைகளுக்காக அவர்களே போராடிக் கொண்டு இருப்பார்களோ என்ற ஐய்யப்பாடு எழுந்தது.

தேசிய மற்றும் மாநிலங்களில் மனித உரிமை ஆணையம் அமைக்க அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் சட்டம் கொண்டு வந்தார். அந்த  உத்தரவை 1993ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கியது. ஆனால் அவர் செவி சாய்க்கவில்லை. அவர் மனித உரிமை ஆணையம் அமைக்க விரும்பவும் இல்லை.தொடர்ந்து உத்தரவு கடிதங்களும் வந்தனை. அவையாவும் காகித அம்புகளைப் போல் இலக்கினை எட்டவில்லை. அதன் பின்னர் 1996ல் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தில் மனித உரிமை ஆணையத்தை அமைத்தார். அப்போது சென்னை ராயப்பேட்டை  சாலையில் ymia கட்டிடத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்பட தொடங்கியது.

ஜெயலலிதா அமைக்க விரும்பாத மனித உரிமை ஆணையத்தை தலைவர் கலைஞர் அவர்கள் அமைத்ததின் பலனை அவரும், கழக உடன்பிறப்புகளும் பெற்றனர்.
ஜுன் 30, 2001 ஆண்டு உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில், தமிழக முதல்வர் தலைவர் கலைஞர்  அவர்களை மனித நேயமற்ற வகையில் நடு இரவில் வீடு புகுந்து தாக்கி கைது செய்தது ஜெயலலித்தவின் ஏவல்துறை.

தலைவர் கலைஞர் நள்ளிரவில் கைது செய்யபட்ட போது  தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சம்  பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்ட் உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. எனினும் அடியேன் தான் மனித உரிமைகள் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்து ஜூலை முதல் நாள் மதியம்  இரண்டு மணி அளவில்  ஆணையத்தின் கதவை தட்டினேன்.
முன்னாள் சடட அமைச்சர் ஆலடி அருணா அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்களும்  உடன் வந்தனர்.  ஒரு லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டு கழிவறை வசதி இல்லாமலும், உணவு , குடினீர்  வழங்கப்படாமலும்  துன்புறுத்தப்படுவதாக புகார் அளித்தோம்.
அடுத்த நாள் அனைத்து செய்தி தாள்களிலும் படத்துடன் செய்தி வந்தது. நீதிபதி சமிதுரை கடலூர்,சென்னைசிறைச்சாலைகள்-சென்று ஆய்வு செய்து நாங்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பதறிந்து   15 நாட்கள் ரிமாண்ட் உத்தரவை ரத்து செய்து 48மணி நேரத்தில் ஒரு லட்சம் பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.  என்  வாழ்நாளில் மிகப்பெரிய கடமையை நிறைவேற்றிய திருப்தி அளித்த நிகழ்வு இது என்றால் மிகையல்ல.  இந்த உத்தரவை நான் பெறும் வரை மனித ஆணையம் என ஒரு அமைப்பு இருப்பதும், அதன் செயல்பாடு குறித்தும் பல அரசியல் கட்சிகளோ, பொதுமக்களோ அறிந்திடவில்லை என்பது உண்மை. ஆனால் இன்று  பெருமைமிகு  பி.எஸ்.குமாரசாமி சாலையில் அமைந்திருந்தாலும்  செயல்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. எனக்கென்னவோ மனித உரிமை ஆணையம் அதன் உரிமைகளுக்காகவே ஒரு பனிப்போராட்டம் செய்து கொண்டிருக்கின்றதோ என்ற கேள்வியுடன் என் பணிகளை செய்துவிட்டு வந்திருக்கின்றேன்.

#ksradhakrishnanpostings
#ksrpostings
#தமிழகமனிதஉரிமைஆணையம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-04-2017

Tuesday, April 18, 2017

மிண்ட் ஏட்டில் தமிழக விவசாயிகள் குறித்து வந்த செய்தி

இன்றைய(18.04.2017)
ஆங்கில மின்ட் ஏட்டில் (Mint )தமிழக விவசாயிகளைப் பற்றி செய்தி பத்தியாக வந்துள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழக விவசாயிகள்தான் அதிக வேதனையிலும், பிரச்சனையிலும், சிக்கலிலும் உள்ளனர்.
தமிழகத்தில் நீராதாரங்களும் குறைவு. அடிக்கடி வறட்சியும் ஏற்படுகின்றன. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக உரிமைக்காக போராடிய விவசாயிகள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 70 விவசாயிகள் கொல்லப்பட்டனர். கடந்த 2012-லிருந்து கடன்தொல்லையாலும், விவசாயம் பொய்த்து போனதாலும் தற்கொலை மற்றும் வேதனையால் மாரடைப்பால் இறந்தவர்கள் 200 விவசாயிகள் ஆவார்கள்.
1972-லிருந்து விவசாய சங்கப் போராட்டங்களில் கலந்துகொண்டவன் என்ற முறையில் விவசாயிகளிடம் போர் குணமும் ஒற்றுமையான ஒன்றுபட்ட இயக்கமாக இருந்தது. இன்றைக்கு பல சங்கங்கள் பல பெயர்களில் இருப்பதால் போராட்டங்கள் வெற்றிபெற முடியவில்லை. மின்ட் இதழில் வெளிவந்த ஆங்கில கட்டுரை இதோ.

Last Modified: Tue, Apr 18 2017. 01 48 PM IST
Tamil Nadu’s farmers are the most distress-ridden in India
Mint’s rural distress index is below its median value, but it conceals varying distress levels across states




Subscribe to our newsletter.
Roshan Kishore
Protesting Tamil Nadu farmers dress as women as they continue with their demand seeking compensation for drought in the state on Saturday in New Delhi. Photo: PTI
Protesting Tamil Nadu farmers dress as women as they continue with their demand seeking compensation for drought in the state on Saturday in New Delhi. Photo: PTI
Uttar Pradesh chief minister Yogi Adityanath’s announcement of farm loan waiver has given credence to similar demands from across the country. Those making these demands include political parties, protesting farmers and even the judiciary. An earlier Plainfacts column had pointed out how farm loan waivers can be counter-productive in the long run, a fact which is often overlooked while seeking temporary relief, which loan waivers bring. This larger point, however, does not undermine the need for providing relief to India’s distress-ridden rural economy.

In April 2015, Mint had developed a quarterly index of rural distress to measure the relative well-being of India’s rural economy. The index seemed to peak during drought years, which underlines the importance of monsoon for India’s farming and rural economy. Updating the index for latest available data, we find that rural distress index, which had reached its second-highest level in March 2015, has been falling since then and was less than its median value in December 2016, the latest quarter for which data is available.

Mint’s index of rural distress is based on year-on-year growth of agricultural GDP, rural wages and domestic tractor sales (due to lack of export data, sales till September 2003 include exports). The index is a simple average of normalised (on a scale of 0 to 1) values of three items in such a way that higher values signify increased distress, with 0 and 1 signifying minimum and maximum distress.


The trend is expected given normal rainfall last year after two back-to-back weak monsoon years. A look at trends in individual constituents of the index shows that a pick-up in agricultural GDP growth and improvement in tractors sales has a greater role in recovery than rural wage growth. It is to be noted that rural wages include wages in the non-farm sector as well. This is in keeping with the logic that a normal monsoon after two back-to-back rainfall deficient years has led to a rejuvenation of cultivation activity, even as non-farm rural activity is still in recovery mode, partly due to demonetisation which is expected to have led to a bigger deflationary impact on the non-farm sector, as was argued in an earlier Plainfacts column.

How does one explain this macro picture with growing demands for farm-loan waivers? Does this mean that the ongoing protest by Tamil Nadu’s farmers does not reflect the ground reality?

Here’s one statistic. India’s total rainfall from south-west monsoon and in the post-monsoon period (from 30 September 2016 to 31 December 2016) was 8.2% less than its long-period average. For Tamil Nadu, the value is 43.7% less than the long-period average value. Unlike northern and eastern states, Tamil Nadu receives majority of its rainfall in the post-monsoon period.

To be sure, rainfall is just one cause of rural distress. Farmer suicide statistics from the National Crime Records Bureau show that bankruptcy or indebtedness were bigger reasons for suicides than crop failure due to natural causes. The financial well-being of a farmer would also depend on the overall situation of the rural economy and her own financial condition. These conditions, like rainfall, can vary significantly across states.

Mint has taken year-on-year growth in monthly average of rural wages for December 2016 (latest available figures) and total income of agricultural households from the National Sample Survey Office’s (NSSO) situation assessment survey, which was carried out in 2013, to capture these two indicators.

We take NSSO figures instead of per capita agricultural GDP values due to two reasons. One, we do not have quarterly GSDP growth rate figures for states, like the all-India GDP numbers. Two, agricultural household income estimates give a better idea about the income of farmers unlike agricultural GDP, which would include the income of non-farming community engaged in agricultural and allied activities. It is unlikely that structural factors facing an agricultural household would have changed drastically in a short span of three-four years.

Putting normalised values of these three indicators (with distress increasing from 0 to 1) together shows that Tamil Nadu’s farmers might indeed be the most distress-ridden among India’s major states. The normalisation process assigns higher scores to distress and lower scores to prosperity, and hence states with relatively high agricultural household incomes and high rural wage growth have relatively lower scores, while states with higher rainfall deficit have higher scores signifying higher distress. Also, the normalisation process has been done across states and not across time (like the national rural distress index).


Instead of taking an average of the three indicators (as in the case of the national rural distress index), it may be more useful to look at the levels of each individual indicator to understand the different causes of distress in different states. For example, Bihar fares high on the sum total of the three normalised indices despite having received much better rainfall than most states due to its low agricultural household income levels. West Bengal figures among the worst on account of agricultural household incomes, but it has lower distress due to its highest growth of rural wages among all states.

The short point is, rainfall deficiency is to farm distress what stubble is to a harvested field. If our policy makers are interested in eradicating rural distress they must go to the root of the matter which lies in overall rejuvenation of the rural economy and thinking of ways to augment rural incomes.

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
18/4/2017
#ksrposting
#ksradhakrishnanposting

Monday, April 17, 2017

அரசியலில் தியாக செம்மல்கள்

அரசியலில் தியாக செம்மல்களும், திருட்டு தினகரன்களும். ஓ.பி.ஆரும், ஓபிnஎஸ்ஸும்.
---------------------------
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையின் சோதனைகள் நடந்து , விசாரனைகள் நடந்துக் கொண்டிருப்பதாகவும் அதன் பின்னணியில் தினகரன் ஆதரவாளர்கள் என்ற உள்நோக்கத்தில் சோதனை செய்யப்பட்டதாக சோதனைக்கு உள்ளான தரப்பினர் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி வருகின்றனர். அரசியலில் இதுபோன்ற நாடகங்கள் இன்று மட்டுமல்ல பல்வேறு காலக்கட்டத்திலும் அரங்கேறி உள்ளது.  சுயமரியாதைகாரர்கள் பதவியை உதறிவிட்டு பழியை தூள்தூளாகக முன் வந்தனர். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஓபிஆர் அவர்கள்.  கொஞ்சம் நிதானமாக வாசியுங்கள். ஓ.பி என முதல் இரு எழுத்துக்களை வாசித்த மட்டில் ஊழல் பேர்வழி பன்னீர்செல்வமா? என நினைத்து விடக் கூடாது என்பது என் வேண்டுகோள். 

இவர் ஓ.பி.ஆர் என அழைக்கப்பட்ட ஓமந்தூரார் பி.ராமசாமி ரெட்டியார் ஆவார்.  சென்னை ராஜதானியின் முதல் பிரதமர்(ப்ரிமியர்) ஆவர். அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில்  தூய்மை என்பதெற்கெல்லாம் சமாதானம் செய்துக் கொள்ள முடியாத அடையாளம் இவர். விவசாயிகளின் முதல்வர்.  ரத்தமும் சதையுமாக இப்படி ஒருத்தர் தமிழகத்தில் வாழ்ந்தார் என்றால் எதிர்கால தலைமுறை நம்புமா என்ற ஐய்யபாடுக்கு நடுவில் வாழ்ந்த சமூக நீதி காத்த தலைவர்.   பாரதியார் பாடல்களுக்கு தடை விதிக்கப்பட்ட  போது அதனை நீக்கியவர் ஓமந்தூரார் சுதந்திர இந்தியாவில்,தமிழகத்தில் கட்டப்பட்ட அணைகளுக்கு அடிகோலியவர். 

பிரதமர் ( ப்ரீமியர்) பதவியில் 1947-1949 என இரண்டாண்டு காலம் மட்டுமே இருந்தாலும் துறவு கோலத்தில் அந்த பதவியை அலங்கரித்தவர் இவர். இவரது வளர்ச்சியையும் , பெருகி வரும் மக்கள் செல்வாக்கையும் பிடிக்காத சிலர் இவர் மீது தொடர்ந்து மொட்டைக் கடுதாசிகளை பாரத பிரதமர் நேருவுக்கு அனுப்பினர்கள். அதில் ஒன்று  தான் " ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தை சென்னை ராஜதானியின் அடையாளமாக தேர்வு செய்யப்பட்டதில் சமய உள்நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது". விசாரணைக்கு அழைத்தார் நேரு. அதற்கு பதில் அளிக்கையில் அது சமயம் சார்ந்தது அல்ல. தமிழ்மக்களின் கலாச்சாரமும்,  திராவிட கட்டிடக் கலையின் அடையாளமும் கொண்டது " என்றார். நேருவால் மேலும் கேள்வி எழுப்ப முடியவில்லை. அடுத்து ஊழல் புகார் ஒன்றும் பிரதமர் நேருவிற்கு அனுப்பப்பட்டது.  அதற்கு பதில் அளிக்க நேரு,  ஓமந்தூராரை டெல்லிக்கு அழைத்தார். ஆனால் ஓமந்தூரார் டெல்லிக்கு செல்லவில்லை.  மக்களுக்கு பணி ஆற்றுவதா, இவர்களுக்கு பதில் அளிப்பதா?  இவர்களுக்கு இந்த பதவி தானே வேண்டும் என அந்த நிமிடமே ராஜினாமா கடிதத்தை டெலக்ஸ் வழி அனுப்பிவிட்டு பதவியை விட்டு கீழிறங்கினார். அப்போது அவர்க்கு தங்க அனுமதிக்கப்பட்ட இடம் தான் கூவம் ஹவுஸ் ( தலைவர் கலைஞர் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியாக கட்டப்பட்டு, ஓமந்தூரார் மாளிகை என பெயரிடப்பட்டது) நோக்கி விரைகின்றார். தனது பெட்டிப் படுக்கை, வேட்டி ,சட்டைகள் ஆகியவற்றை தானே சுமந்துக் கொண்டு  தர்பார் ஹோட்டல் பகுதி அதாவது டாக்ஸி ஸ்டான்ட்க்கு சென்று வாடகை கார் எடுத்து தனது சொந்த ஊரை நோக்கி சென்றார்.  பின்னாளில் வடலூர் ராமலிங்க அடிகளார் மடத்தில் குடியேறினார்.  இவர் பொறுப்பு வகித்த பிரிமியர் பதவியின் எல்லைகளாவது வடக்கே ஒரிசா, மேற்கே காலிகட், தெற்கில் தோவாளை என  கர்நாடகவின் மங்களூர் வரை பரந்து விரிந்த பகுதியின் ஆளுமையை " போங்கடா உங்க அரசியலும் நீங்களும்"  என உதறிவிட்டு சென்றார். 

இங்கே இன்னொருவரை பற்றி குறிப்பிட வேண்டும். அவர் தான் திரு. வரதராஜலு நாயுடு.  அவரை பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் காந்தி அவர்கள் கூறியதை குறிப்பிட்டல் பொருத்தமாக இருக்கும்.
ஒருமுறை காந்தியிடம்  தமிழகத்தில் சுதந்திர போராட்டம் எப்படி நடக்கின்றது எனக் கேட்டபோது " நாயக்கர், நாயுடு, முதலியார் " பார்த்துக் கொள்கின்றார்கள் என்றாராம். அதாவது பெரியார் , வரதராஜலு நாயுடு, திரு.வி.க ஆகியோரை தான் காந்தி அவ்வாறாக  குறிப்பிட்டார்.  அந்த சேலம் வரதராஜலு நாயுடு பெரும் பணக்காரர். பெரியாரின் அணுக்கத்தோழர்.
காமராஜர் போன்றோரை உருவாக்கியவர் ஆவார். வஉசி  திருநெல்வேலி சதி வழக்கில் சிறையில் இருந்த போது அவரை மீட்க வழக்கை நடத்தியவர்.  பிறகாலத்தில் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இந்து மகாஜன சபையில் தங்கி காலம் கழித்தார்.  அவரது குடும்பத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் வீடு வழங்கினார். முத்துராமலிங்க தேவர் பொருளாதார உதவிகள் செய்தார்.

கப்பலோட்டிய தமிழர் என போற்றப்பட்ட வ.உ.சி அவர்கள் தனது கடைசி காலத்தில் உணவிற்கு வழியின்றி எண்ணெயும், புண்ணாக்கும் விற்று வயிற்றைக் கழுவினார். 

இந்த தியாக செம்மல்களை எல்லாம் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் தனது கட்சிக்கு அடையாள சின்னம் வேண்டும் என்பதற்காக அரசு இயந்திரத்துக்கு கோடிகளை  லஞ்சமாக கொட்டிக் கொடுப்பவர்கள் அரசியலில் காண வேண்டிய காட்சிக் கொடுமைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.  கொஞ்சம் ஒப்புமை படுத்திப் பார்க்கின்றேன். பொய்யான புகார்கள் அளிக்கப்பட்ட ஓமந்தூரார் பதவியை விட்டெரிந்தார். உண்மைக் குற்றவாளிகளோ பதவியில் ஒட்டிக் கொள்கின்றனர்.

கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ? என கருதிய தியாக செம்மல்கள் வரலாற்றில் இன்று நிலைத்து நிற்கின்றனர். 

#ஓமந்தூர்ராமாசாமி
#சேலம் வரதராஜலு நாயுடு
#KSRadhakrishnanpostings 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்  17-04-2017

Sunday, April 16, 2017

Democracy Versus More Of Erdogan: Turkey To Decide Its Fate In Historic Referendum

Democracy Versus More Of Erdogan: Turkey To Decide Its Fate In Historic Referendum ...
---------------------------
Democracy Versus More Of Erdogan: Turkey To Decide Its  Fate In Historic Referendum 
What Turkish citizens do today at the referendum on the presidential system will decide not just the nation’s systemic fate but also rewrite its equations with the European Union. The referendum is on a set of amendments which would abolish the office of the prime minister and would accord wide-ranging powers to the President. The current president of Turkey is Recep Tayyip Erdogan.

Voting in favour of the amendments is being touted as the most radical change to the political system of the country in recent times, as it will replace Turkey’s parliamentary democracy with an all-powerful presidency. Voting against them is being publicised by the ruling party and President Tayyip Erdogan as “support for terrorism”.

The secular main opposition Republican People's Party (CHP) leader Kemal Kilicdaroglu, has in turn accused Erdogan of seeking a "one-man regime", and said the proposed changes would put the country in danger.

Erdogan and the ruling AK Party, led by Prime Minister Binali Yildirim, as reports Tyler Durden of Zero Hedge, have enjoyed a disproportionate share of media coverage in the buildup to the vote, overshadowing CHP and pro-Kurdish People's Democratic Party (HDP).

While recent polls suggest a pick-up in momentum for “yes”, they remain close, and the large share of “undecided” voters is adding to the uncertainty. Around 55 million people are eligible to vote. The voting will take place at 167,140 polling stations across the country, the outcomes of which will not just redefine the country’s political fabric but also shape its strained relations with the European Union (EU).

The NATO member state has curbed the flow of migrants form Syria and Iraq into the bloc but Erdogan says he may review the deal after the vote. Relations between Turkey and Europe hit a low during the referendum campaign when EU countries, including Germany and the Netherlands, barred Turkish ministers from holding rallies in support of the changes. Erdogan called the moves "Nazi acts" and said Turkey could reconsider ties with the European Union after many years of seeking EU membership.

On the eve of the vote, Erdogan held four separate rallies in Istanbul, urging supporters to turn out in large numbers. "April 16 will be a turning point for Turkey's political history... Every vote you cast tomorrow will be a cornerstone of our revival," he is quoted as telling a crowd of flag-waving supporters.
Democracy Versus More Of Erdogan: Turkey To Decide Its  Fate In Historic Referendum 
What Turkish citizens do today at the referendum on the presidential system will decide not just the nation’s systemic fate but also rewrite its equations with the European Union. The referendum is on a set of amendments which would abolish the office of the prime minister and would accord wide-ranging powers to the President. The current president of Turkey is Recep Tayyip Erdogan.

Voting in favour of the amendments is being touted as the most radical change to the political system of the country in recent times, as it will replace Turkey’s parliamentary democracy with an all-powerful presidency. Voting against them is being publicised by the ruling party and President Tayyip Erdogan as “support for terrorism”.

The secular main opposition Republican People's Party (CHP) leader Kemal Kilicdaroglu, has in turn accused Erdogan of seeking a "one-man regime", and said the proposed changes would put the country in danger.

Erdogan and the ruling AK Party, led by Prime Minister Binali Yildirim, as reports Tyler Durden of Zero Hedge, have enjoyed a disproportionate share of media coverage in the buildup to the vote, overshadowing CHP and pro-Kurdish People's Democratic Party (HDP).

While recent polls suggest a pick-up in momentum for “yes”, they remain close, and the large share of “undecided” voters is adding to the uncertainty. Around 55 million people are eligible to vote. The voting will take place at 167,140 polling stations across the country, the outcomes of which will not just redefine the country’s political fabric but also shape its strained relations with the European Union (EU).

The NATO member state has curbed the flow of migrants form Syria and Iraq into the bloc but Erdogan says he may review the deal after the vote. Relations between Turkey and Europe hit a low during the referendum campaign when EU countries, including Germany and the Netherlands, barred Turkish ministers from holding rallies in support of the changes. Erdogan called the moves "Nazi acts" and said Turkey could reconsider ties with the European Union after many years of seeking EU membership.

On the eve of the vote, Erdogan held four separate rallies in Istanbul, urging supporters to turn out in large numbers. "April 16 will be a turning point for Turkey's political history... Every vote you cast tomorrow will be a cornerstone of our revival," he is quoted as telling a crowd of flag-waving supporters.

காளான் கட்சிகளையும், உப்புமா பார்ட்டிகளையும்:தேர்தல்சீர்திருத்தம்...

காளான் கட்சிகளையும், உப்புமா பார்ட்டிகளையும்:
------------------------------------------

தேர்தல் ஆணையம் காளான் கட்சிகளையும், உப்புமா பார்ட்டிகளையும் காலி செய்ய தயாராகிவிட்டது. ஏற்கெனவே கடந்த வருடம் தேர்தலிலே போட்டியிடாத 150 கட்சிகளை அங்கீகாரமின்றி அப்புறப்படுத்தியது. இன்றைய சுயநல, வணிக, ஆதாய அரசியல் களத்தில் தேர்தல் கமிஷனின் இந்த முடிவை பாராட்ட வேண்டும்.
புதுடெல்லி வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகள் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டாத கட்சிகளை அரசியலை விட்டு வெளியேற்ற வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரைந்துள்ளது.
தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் என பட்டியலிடப்பட்ட 255 அரசியல் கட்சிகளின் நிதி விவகாரத்தை ஆராயும்படி வருமான வரித்துறைக்கு அண்மையில் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற குழு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2005 முதல் தேர்தலில் போட்டியிடாத பல்வேறு அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டது. அதில் 255 கட்சிகள் போட்டியிடாதவை என பட்டியலிட்டிருந்தது. கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிக்காகவே அந்த கட்சிகள் இயங்கி வருவதாக தேர்தல் ஆணையம் நம்புகிறது. ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருந்தாலும், எந்தவொரு கட்சியின் பதிவையும் ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை.
இதை கருத்தில் கொண்டே வெறும் சலுகைகளை பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து சட்ட துறைக்கான நாடாளுமன்ற நிலை குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், அரசியல் கட்சிகளின் பதிவு விவகாரங்களை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். வருமான வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை மட்டும் அனுபவிக்கும், லெட்டர்பேடு கட்சிகளின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.
பா.ஜ.,  காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமுல் காங்., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய, ஏழு தேசிய கட்சிகள் மற்றும் 58 மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இதைத் தவிர, அங்கீகாரம் பெறாத 1,780 கட்சிகள், தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், பதிவை ரத்து செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை.
இதனிடையில், பதிவு செய்துள்ள, 255 கட்சிகள், கடந்த, 2005ல் இருந்து எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதே நேரத்தில் வருமான வரிச் சலுகை போன்றவற்றை பெற்று வருகின்றன. இந்தக் கட்சிகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளோம்.
அவர்களுக்கான நிதி ஆதாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என, வருமான வரித் துறைக்கு, தேர்தல் கமிஷன் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.
இந்த நிலையில், இந்த பிரச்னை குறித்து ஆராய்ந்த, சட்டத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு, தன் பரிந்துரையை அளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது
* அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், பெயரளவுக்கு மட்டும் சிலர் கட்சியை நடத்தி வருகின்றனர், தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படுகின்றனர்.
* இதனால், அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.
* வருமான வரிச் சலுகை உட்பட பல்வேறு வசதிகளை பெறுவதற்காகவே சில கட்சிகள் உள்ளன.
* இது போன்ற மோசடிகளை தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கான நடைமுறையை கடுமையாக்க வேண்டும்.
 
 #தேர்தல்சீர்திருத்தம்
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
16/4/2017
#ksrposting
#ksradhakrishnanposting

நேற்று தென்காசி நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட குருஞ்சாக்குளம் கிராமத்தில் நேற்றைய நாளில் கருப்பு துணி கட்டியும், கருப்பு கொடி கட்டியும், பொதுமக்கள் கருப்பு பட்டை அணிந்தும் கிராபைட் திட்டத்தை எதிர்த்தார்கள்.

நேற்று தென்காசி நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட குருஞ்சாக்குளம் கிராமத்தில் நேற்றைய நாளில் கருப்பு துணி கட்டியும், கருப்பு கொடி கட்டியும், பொதுமக...