Saturday, April 1, 2017

ஐ.நா. பொதுச் சபைத் தேர்தலில் சீர்திருத்தம் ;இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பொதுச் சபைத் தேர்தலில் சீர்திருத்தம் ;இந்தியா வலியுறுத்தல்:
------------------------------------
ஐ.நா பொதுச் சபைக்கான தேர்தலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என 30-3-2017 ல் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து  ஐ.நா. செயல்பாடு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரி அஞ்சனி குமார் கூறியாவது. உலகம் முழுமைக்குமான ஒரு நாடாளுமன்றமாக ஐ.நா. பொதுச் சபை உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அந்தச் சபைக்கு நடைபெறும் தேர்தலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதுதான் ஐ.நா.வின் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அடிப்படையாக அமையும்.
ஐ.நா.வின் மாண்பை நிலைநாட்ட அதன் பொதுச் சபைத் தேர்தல்கள் முறையாக நடைபெற வேண்டும் என்பதை இந்தியாவும், பிற நாடுகளும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன.
தற்போது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நடைபெறும் அரசியல் சித்துவிளையாட்டு ஐ.நா. சபை தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தையே குலைப்பதாக உள்ளது.
ஐ.நா. பொதுச் சபையில் தேர்தல் நடைபெறும்போது, அந்த இடம் முழுவதும் பிரசார பதாகைகளாலும், பரிசுப் பொருள்களாலும் நிரம்பி வழிவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
உலகின் வேறு எங்கு நடைபெறும் தேர்களிலும் இது போன்ற நடைமுறைகள் அனுமதிக்கப்படுவதில்லை.
எனவே தேர்தல் முறையின் புனிதத்தன்மையைக் காக்க ஐ.நா. பொதுச்சபைத் தேர்தலின் போது பிரசாரப் பதாகைகளுக்கும் பரிசுப் பொருள்களுக்கும் தடைவிதிக்க வேண்டும்.
மேலும், வாக்குச் சீட்டில் வேட்பாளரின் பெயரை எழுவது எழுத்துப் பிழை போன்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும். அதற்குப் பதில் வேட்பாளர்களின் பெயர்களை அச்சிட்டு அந்தப் பெயர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்கும் முறையைப் பின்பற்றலாம்.
மேலும் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை தேர்தலில் பயன்படுத்துவது குறித்து ஐ.நா. பரிசீலிக்க வேண்டும் என்றார் அஞ்சனிகுமார்.

#ஐநா
#uno

#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
1/4/2017

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...