Showing posts with label Southern Railway. Show all posts
Showing posts with label Southern Railway. Show all posts

Friday, February 27, 2015

இரயில்வே நிதிஅறிக்கையில் (2015-16) புறக்கணிக்கப்பட்ட தமிழக திட்டங்கள்.



இரயில்வே நிதிஅறிக்கையில் (2015-16) புறக்கணிக்கப்பட்ட தமிழக திட்டங்கள்.

1. சென்னை –திருப்பெரும்புதூர் (வழி-பூந்தமல்லி).
2. ஆவடி- திருப்பெரும்புதூர்.
3. இராமேஸ்வரம் – தனுஷ்கோடி.
4. தஞ்சாவூர் –அரியலூர் – சென்னை எழும்பூர்.
5. திண்டிவனம் – கடலூர் (வழி – புதுச்சேரி).
6. மயிலாடுதுறை –திருக்கடையூர் – திருநள்ளாறு- காரைக்கால்.
7. ஜோலார்பேட்டை –ஓசூர் (வழி- கிருஷ்ணகிரி).
8. சத்தியமங்கலம் –மேட்டூர்.
9. ஈரோடு – சத்தியமங்கலம்.
10. சத்தியமங்கலம் – பெங்களூரு.
11. மொரப்பூர் – தருமபுரி ( வழி – மூக்கனூர்).
12. மதுரை – காரைக்குடி(வழி-திருப்பத்தூர்).
13. வில்லிவாக்கம் – காட்பாடி.
14. திருவண்ணாமலை – ஜோலார்பேட்டை.
15. மதுரை – கோட்டயம்.
16. அரக்கோணம் – திண்டிவனம் (வழி – வாலாஜாபேட்டை).
17. சிதம்பரம் – ஆத்தூர் (வழி- அரியலூர்).
18. திண்டுக்கல் –கூடலூர்.
19. திண்டுக்கல் – குமுளி.
20. காட்பாடி – சென்னை (வழி-பூந்தமல்லி).
21. கும்பகோணம் – நாமக்கல்.
22. மானாமதுரை – தூத்துக்குடி.
23. நீடாமங்கலம் – பட்டுக்கோட்டை (வழி-மன்னார்குடி).
24. தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை.

நிலுவையிலிருக்கும் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காமல் கைவிரிக்கப்பட்டவை.
1. சென்னை- கடலூர்.
2. பழநி - ஈரோடு.
3. திண்டிவனம் – செஞ்சி- திருவண்ணாமலை.
4. திண்டிவனம்- வாலாஜா – நகரி
                             (திண்டிவனம் வாலாஜா வரை கைவிடப்படுகிறது)
5. திருப்பெரும்புதூர் – கூடுவாஞ்சேரி அகலப்பாதை பணி.
6. மதுரை – போடி.
7. திண்டுக்கல் – கோவை

இருவழிப்பாதை பணிகளுக்கும் நிதி ஒதுக்காமல் கைவிடப்பட்டவை.

1. திருச்சி – தஞ்சாவூர்.
2. இருகூர் – போத்தனூர்.

     சென்னை – கன்னியாகுமரி இருவழிப்பாதை திட்டம் , இராயபுரம் மற்றும் தாம்பரம் தொடர்வண்டி முனையம், நீண்டகால கோரிக்கையான ஈரோடு தாராபுரம் வழியாக பழநி இரயில்வே திட்டம் , செங்கோட்டை - கொல்லைம் இரயில்பாதை அகலப்பாதையாக மாற்றியமைக்கும் திட்டம்  என தமிழகம் எதிர்பார்த்த பல திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, குமரி மாவட்டத்தின் பகுதிகளை திருவனந்தபுரம் கோட்டத்திலிருந்து மதுரை கோட்டப் பகுதிகளுக்கு மாற்றியமைத்திருக்கவேண்டும். அல்லது திருநெல்வேலியை தனிக் கோட்டமாக அறிவித்திருக்கலாம்.

பா.ஜ.க அரசு இரயில்வே திட்ட வளர்ச்சியில் தமிழகத்தை புறக்கணித்துவிட்டது.

-KSR

Thursday, February 26, 2015

இரயில்வே நிதி அறிக்கையில் தமிழகத்தை வஞ்சித்துவிட்டது மத்திய அரசு.





2015-16ம் ஆண்டிற்கான இரயில்வே இரயில்வே நிதி அறிக்கை தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. பெருந்திட்டங்களும், புதிய அறிவிப்புகளும் தமிழகத்துக்கு  இந்த இரயில்வே நிதி அறிக்கையில் இல்லை.

செங்கோட்டை-கொல்லம், மதுரை-போடிநாயக்கனூர், பழநி மார்க்கம் போன்ற பல நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கும் கூட போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை.

சென்னைப் பெருநகர் சர்க்குலார் ரயில் திட்ட்த்துக்கான அறிவுப்புகளும் , நிதி ஒதுக்கீடுகளும் இல்லை. மொத்த்த்தில் சுரேஷ் பிரபுவின் இரயில்வே நிதி அறிக்கை தமிழகம் இந்தியாவில் தான் இருக்கின்றதா என்று சிந்திக்க வைத்துவிட்டது.

மாற்றாந்தாய் மனப்போக்கில் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகின்றது என்பதற்கு இதுவே உதாரணம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

#காவிரி....

  #காவிரி .... #ஆடிப்பெருக்கு நீராடையின்றி நிர்வாணமாய்க் காவிரி தாயின் ரணங்கள் ; மேலாடைத் தருவாளா மேகத்தாய்?