Thursday, February 26, 2015

இரயில்வே நிதி அறிக்கையில் தமிழகத்தை வஞ்சித்துவிட்டது மத்திய அரசு.





2015-16ம் ஆண்டிற்கான இரயில்வே இரயில்வே நிதி அறிக்கை தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. பெருந்திட்டங்களும், புதிய அறிவிப்புகளும் தமிழகத்துக்கு  இந்த இரயில்வே நிதி அறிக்கையில் இல்லை.

செங்கோட்டை-கொல்லம், மதுரை-போடிநாயக்கனூர், பழநி மார்க்கம் போன்ற பல நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கும் கூட போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை.

சென்னைப் பெருநகர் சர்க்குலார் ரயில் திட்ட்த்துக்கான அறிவுப்புகளும் , நிதி ஒதுக்கீடுகளும் இல்லை. மொத்த்த்தில் சுரேஷ் பிரபுவின் இரயில்வே நிதி அறிக்கை தமிழகம் இந்தியாவில் தான் இருக்கின்றதா என்று சிந்திக்க வைத்துவிட்டது.

மாற்றாந்தாய் மனப்போக்கில் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகின்றது என்பதற்கு இதுவே உதாரணம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

1 comment:

*Life is all about living in peace*.

*Life is all about living in peace*.Life is not about  ups and down, right and wrong, success and failure. Know that failure simply states t...