Friday, December 30, 2016

ரீகல் தியேட்டர்.

அறிஞர் அண்ணா , காமராசர் , ராஜாஜி , தலைவர் கலைஞர் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோர் திரைப்படம் பார்த்த டெல்லி ரீகல் தியேட்டர். மூடப்படுகிறது 
-------------------------------------
டெல்லியில் 84 ஆண்டுகள் பழமை வாய்ந்த கன்னாட் பிளேசில்  உள்ள ரீகல் தியேட்டர் மூடப்படுகிறது. (Hindustan Times 22/12/2016)இந்த திரை அரங்கத்தின் இன்றைய உரிமையாளர் விசால் சௌத்ரி," எங்களுடைய முன்னோர்கள் இந்த திரையரங்கை ஒரு லட்ச ரூபாய்க்கு  வாங்கினர். இன்று நஷ்டத்தில் ஓடுவதால் பெருமைக்காகவோ, பிடிவாதத்திற்கோ இந்த திரையரங்கை நடத்த முடியவில்லை. இந்த அரங்கத்தில் ஒரு காட்சிக்கு நாற்பது பேர் தான் வருகின்றனர். திரை அரங்கிறக்கான வரிகள்கூடகட்டமுடியவில்லைஆதலால்  இந்த அரங்கை மூட முடிவுசெய்துள்ளோம் "என்று கூறினார் .

ஒரு காலத்தில் இந்த அரங்கில்  ராஜ்கபூர் , நர்கீஸ் , அமிர்தாப் பச்சன், , தர்மேந்திரா, ஹேமமாலினி போன்ற பலர்  இந்த திரை அரங்கில் படம் பார்த்துள்ளனர். 2002 இல் மத்திய அமைச்சராக இருந்த அண்ணன் திரு.முரசொலி மாறன் அவர்கள் , டெல்லி சம்பத்தையும் என்னையும் உடனே டெல்லிக்கு வரச்சொன்னார்.

இருவரும் அவரை சந்திக்க டெல்லி சென்றோம். அங்கு அண்ணன் மாறன் அவர்கள் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தமிழகத்தில் நடப்பதால் நியாயமான தீர்ப்பு வராது, ஆதலால் வேறுமாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறினார்.  உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மோகனிடம் இதுக்குறித்து பேசி உள்ளேன், உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட வேண்டிய மனுவை தயாரிக்க வேண்டிய விவரங்களை கொடுத்து  அதற்கான மனுவை தயாரியுங்கள் என்று எங்களிடம் கூறினார். 

இன்று அண்ணன் முரசொலி மாறனும் இல்லை. டெல்லி சம்பத்தும் இல்லை. அன்றைக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த திரு.ஆ.ராசா அவர்கள் அனுப்பிய கார் தான் நாங்கள் பயன்படுத்தினோம் .  அவருக்கு செயலாளராக அகிலன் இராமாநாதன்  அவர்கள் தான் எங்களுக்கு வேண்டிய உதவிகளை அப்போது  செய்தார்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்ற வேண்டிய அடிப்படை பணிகளை டெல்லி சம்பத்தும்  நானும் செய்தோம் என்பதற்கு சாட்சி ஆ.ராசா வின் நேர்முக உதவியாளர் திரு.அகிலன்  இராமநாதன்க்கும் ஆ.ராசா க்கும் தெரியும். இதுக்குறித்து கழக பொதுக்குழுவில் என்னை பாராட்டி அண்ணன் முரசொலி மாறன் அவர்கள்  பேசியது விரிவான செய்தியாக தினமலரில் வந்தது .14 ஆண்டுகள் கடந்துவிட்டது காலசக்கரங்கள்  வேகமாக ஓடிக்கொண்டு இருகின்றது .

இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கி இருக்க வேண்டிய சூழலில்  ஒரு மாலை வேளையில் கன்னாட்(cannaught) பிளேஸில் உள்ள ரீகல் தியேட்டர்ககு நானும் டெல்லி சம்பத்தும் மாலை காட்சி பார்க்க சென்றோம். அப்போது சம்பத் குறிப்பிட்டார்,

பேரறிஞர் அண்ணா ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது என் வீட்டில் தங்கி இருந்த  போது சில நேரங்களில் இந்த திரைஅரங்கிற்கு அழைத்து வந்தது உண்டு . ராஜாஜியும் , காமராசரும் ,இந்த திரை அரங்கிற்கு வந்து படம் பார்த்தது உண்டு  எனவும் கூறினார் .

தலைவர் 1972 இல் முதல்வராக டெல்லி வந்து, இங்கு இரண்டு  நாள் தங்கிய போது இந்த திரையரங்கில் படம் பார்த்தார். அதற்கு சிறிது காலத்திற்கு முன்  எம்.ஜி.ஆரும்  ஜெயலலிதா வும், அடிமைப் பெண் படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் செல்வதற்கு முன் டெல்லியில்  தங்கிய போது  இந்த திரை அரங்கில் படம் பார்த்தனர். அவர்களுக்கு தேவையானவற்றை நான் தான் செய்துக்கொடுத்தேன் என்றார்.

டெல்லி சம்பத் நாகை பகுதியில் பிறந்து ஆலிகார்(aligarh) பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பேரறிஞர் அண்ணாவுக்கும் தலைவருக்கும் , அண்ணன் மாறனுக்கும்  நம்பிக்கையான அதிகாரியாக டெல்லியில் விளங்கினார் கிட்டதட்ட 35 ஆண்டுகள்  டெல்லி தமிழ்நாடு இல்லத்தினை  நிர்வகிக்கும் அதிகாரியாக இருந்தார். அவருக்கு டெல்லி அரசியல் அனைத்தும் அத்துப்படி.டெல்லியில் ஆட்சிகள் கவிழ்ம் போது எல்லாம் அங்கு என்ன நடக்கிறது என சம்பத்திடம் தான் தலைவர் கேட்டுத்தெரிந்துக்கொள்வார்.
டெல்லி சம்பத்தின் தில்லி நினைவுகளை புத்தகமாகவே எழுதினார் நானும் சிவபிரகாசம் அவர்களும். 2012 இல் வெளியிட முடிவு செய்து அந்நூலை திரு.மனுஷ்யபுத்திரன் வெளியிட்டார்.

திரும்பவும், ரீகல் தியேட்டர் பிரச்சனைக்கு வருகிறேன். 1950,60 களில் இங்கு திரைப்படம் பார்த்த பிரதமர்கள்,குடியரசு தலைவர்கள்,மத்திய மந்திரிகள்,வெளிநாட்டு தூதர்களும் என பட்டியல் நீளும். தில்லியின் அடையாளமாக திகழ்ந்த ரீகல் தியேட்டர் மூடப்படுகின்றது.இதன் பக்கத்தில் இருந்த கதர் அங்காடியும் , கன்னாட்பிளேஸில் இருந்த அடையாளங்கள்ஆகும்.அதன் அருகில் 1950,60களில் பிரசித்திபெற்ற மெட்ராஸ் ஹோட்டல் அமைந்து இருந்தது .  அந்த ஹோட்டலில் விற்பனையான சூடான சாம்பார் இட்லியின் சுவை டெல்லி வாசிகளை வெகுவாக ஈர்த்தது.ரீகல் தியேட்டரில் நானும் வாழப்பாடி ராமமூர்த்தி , தஞ்சை ராமமூர்த்தி , குடந்தை ராமலிங்கம ஆகியோர் பாபி திரைப்படத்தை பார்த்தோம் அப்படியான அந்த திரையரங்கு மூடப்படுகிறது என்பது வருத்தமாக உள்ளது .

#ரீகல்தியேட்டர் 

#டெல்லி 

#ஜெயலலிதாசொத்துகுவிப்புவழக்கு 

#முரசொலிமாறன் 

#KSRPost 

#KSRadhakirushnanpost 
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
28/12/2016


Wednesday, December 28, 2016

ARTICLE 370.

ARTICLE 370.
Article 370 is integral to J&K's accession. Without it there is no agreement. And what's the problem with the guarantees of Article 370? LK Advani has said several times, including to me, that he would like the autonomy guaranteed by Article 370 for all states. Local land ownership laws don't have anything to do with Article 370. Many Indian states and regions have similar laws. Only the ignorant keep making it an issue.

"Jammu and Kashmir's original accession, like all other princely states, was on three matters: defence, foreign affairs and communications. All the princely states were invited to send representatives to India's Constituent Assembly, which was formulating a Constitution for the whole of India. They were also encouraged to set up constituent assemblies for their own states. 

Most states were unable to set up assemblies in time, but a few states did, in particular Saurashtra Union, Travancore-Cochin and Mysore. In May 1949, the rulers and chief ministers of all the states agreed to accept the Constitution of India as their own constitution. The states that did elect constituent assemblies suggested a few amendments which were accepted. The position of all the states (or unions of states) thus became equivalent to that of regular Indian provinces. In particular, this meant that the subjects available for legislation by the Central and State governments was uniform across India.

In the case of #Kashmir, the representatives to the Constituent Assembly requested that only those provisions of the Indian Constitution that corresponded to the original Instrument of Accession should be applied to the State. Accordingly, the Article 370 was incorporated into the Indian Constitution, which stipulated that the other articles of the Constitution that gave powers to the Central Government would be applied to Jammu and Kashmir only with the concurrence of the State's constituent assembly. 

This was a "temporary provision" in that its applicability was intended to last till the formulation and adoption of the State's constitution. However, the State's constituent assembly dissolved itself on 25 January 1957 without recommending either abrogation or amendment of the #Article370. Thus the Article has become a permanent feature of the Indian Constitution, as confirmed by various rulings of the Supreme Court of India and the High Court of Jammu and Kashmir, the latest of which was in October 2015."
-Mohan Gurusamy

Tuesday, December 27, 2016

Democracy

10 things you should know about democracy in Ancient Greece
Alumnus Dr Paul Cartledge ponders how democracy has been constantly reconstituted and reinvented since Ancient Greece.

Trump  Popular – or populist – politics triumphed over more conventional political wisdom and practice over the course of 2016

By Dr Paul Cartledge

We are all ‘democrats’ today, are we not? Well, of course not, actually, as a matter of literal fact. But democracy in its multifarious guises has been all the rage, not only in the Western world but globally, at least since US President Woodrow Wilson was so very keen on making the world ‘safe for democracy’. Christian democracy, People’s Democracies, the Democratic Party of the USA – it’s everywhere, isn’t it. But this year, 2016, has been the most extraordinary year for the practice of democracy in my own personal political experience, which goes back to 1970 in formal, voting terms (I was born in 1947, and the voting age of majority for me was 21, so 1968). First, the Breferendum of June 23rd, then the Trumpery of November 8th. In both cases, opinion polls got it very seriously wrong, even up to the point of exit polling. In both cases, popular – or populist – politics triumphed over more conventional political wisdom and practice.

My ‘trade’ book Democracy: A Life was published by the Oxford University Press (New York) before both those manifestations – on March 24th 2016, coincidentally my 69th birthday. I am by profession an ancient historian, a cultural historian of ‘ancient Greece’ during mainly the last millennium BC(E), when democracy – the word as well as the thing – first emerged, anywhere. As such, therefore, I have a particular academic interest (in both senses) in bringing to light and spreading the word about what was so special in that world that it gave birth to such a devastatingly game-changing political phenomenon.  

But I am also a politically engaged public intellectual of a minor kind, so I care very much whether our contemporary democracy is properly understood and practised, and one of my preferred argumentative and pedagogical gambits (employed, for instance, at literary festivals from York to Hay to Edinburgh to Buxton to Folkestone) is to point out the seeming paradox that, although our word ‘democracy’ is ultimately a loan-word from ancient Greek demokratia, our democracy and the ancient Greeks’ have almost nothing directly in common. It was not therefore a natural extension of normal democratic politics to hold ancient Greek-style referendums in Scotland in 2014 and in the UK as a whole in 2016 – but a direct antithesis and contradiction of them. With predictably problematic results in 2016 and for the foreseeable future, as I have myself blogged and argued in podcasts, on radio (Start the Week), and in lectures and talks to the Leicester Literary and Philosophical Society, the Society for the Promotion of Hellenic Studies in London, Cottingley Village College School, etc etc. The recent High Court judgement – or rather certain reactions to it – offers a rather terrifying reminder (cf. the 1930s) of how complex, precious and tender a plant representative democracy is, requiring constant vigilant tendance.Abraham LincolnAbraham Lincoln, who spoke of  ‘government of the people by the people for the people’ 

The Decalogue that follows is naturally only a (personal, very) selection, from all the many things ‘you should know about democracy in ancient Greece’, but I venture to claim that at least they are ten of the most important things. As I go through them, it will I hope be noticed that a keynote of the list is difference: namely, the deep and wide difference in both thought and practice between what the ancient Greeks meant by the form – or rather, forms – of democracy that they practised and any contemporary ‘democracy’ of our 2016 world. That, I believe, is as it should be. Comparative history works most effectively to my mind when it highlights fundamentally important contrasts in the ideas and institutions of different human cultures. But it does so most effectively of all, I would add, when one of those cultures – our own – apparently draws directly from another – that of the ancient Greeks, and yet there is in actual fact no direct continuity let alone identity of the cultural artefact – in this case, democracy – that is in question and at issue.

1. Demokratia, the ultimate origin of our word ‘democracy’, is a portmanteau abstract noun (feminine) in ancient Greek, combining the two words Demos and Kratos. Kratos meant Power, Might, Strength, Grip. (In modern Greek it is the word for ‘state’, as in ‘the nation-state of Hellas’.) Demos is a very ancient Greek word, attested as far back as the second millennium BCE among the ‘Linear B’ archival clay tablets produced by the bureaucracy of the – very much not democratic - Late Bronze Age/Mycenaean kingdoms of mainland Greece and Crete. There it meant village, a local designation that persisted into classical Greek, but already in the epic poems of Homer (c. 700 BCE) it had come to mean also ‘people’.

2. However, demos in that sense of ‘people’ is ambiguous and therefore ambivalent, since it could be taken to mean either i. (All) the People or ii. the Masses (the majority, specifically the poor majority) of the People. So, to use deliberately anachronistic modern analogies,demokratia might be translated/interpreted as either i. ‘government of the people by the people for the people’ (Abraham Lincoln at Gettysburg, 1863) or ii. ‘dictatorship of the proletariat’ (Karl Marx followed by V.I. Ulyanov, a.k.a. Lenin). In that ambivalence lies the explanation for the class-conscious struggles in antiquity to define and implement (or oppose) demokratia: who is/are the demos that holds and wields the kratos, and over what or whom is the kratos being held and wielded?

AristotleMost known ancient Greek writers, historians and theorists were non- or even anti-democrats, including Plato (very hostile), Aristotle (much less hostile) 

3. Most of our political vocabulary is either ancient Greek-derived: politics (from polis), anarchy, aristocracy, monarchy, oligarchy, plutocracy, tyranny … democracy. Or Latin-derived: citizens, constitution, dictator, empire, liberal, republic, state - and power and people. But there is a fundamental difference of kind between our (‘liberal’, ‘Western’) systems of ‘democracy’, which are representative (indirect), and all ancient Greek systems (plural: there were several types/varieties of ancient demokratia), which were direct. To an ancient Greek democrat, our systems would all count as ‘oligarchy’ (rule by the few): even if – and because - elected by the many, They, our elected representatives, rule instead of - as well as for - Us.

4. There was no single ‘state’ of ‘ancient Greece’. Instead, there were about 1000 separate ancient Greek political states and communities (most were poleis, citizen-states), and only a minority ever practised any form of demokratia – most were most of the time more or less moderate or extreme oligarchies. Athens is the best-known and most extreme of the democracies – but there was no such single thing as ‘Athenian democracy’. Athens created at least three different versions over a roughly 200-year period (508/7-322 BCE), with two very significant interruptions – anti-democratic oligarchic counter-revolutions in 411-410 and 404-403 BCE respectively.

5. Most known ancient Greek writers, historians and theorists were non- or even anti-democrats: e.g., Plato (very hostile, chiefly on intellectual-moral grounds – democracy was the ignorant, fickle, stupid mob of the citizenry ruling over or dictating to their social and intellectual betters), and his best and most famous pupil Aristotle (much less hostile, and more careful to discriminate between different types and degrees of democracy, but still not an ideological democrat). Conversely, the number of known ancient Greek writers, historians and theorists who were certainly ideological and/or practising democrats can be counted on the fingers of one hand: Pericles, Demosthenes, Protagoras, Democritus, possibly Herodotus … Why so?

The statue in the foreground is an Early Greek Kouras (youth) Delphi, Greece, c 570 BCThe statue of an Early Greek Kouras (youth) from Delphi, Greece, c 570 BC at the Ashmolean

6. The earliest known extant example of developed political theory is to be found in the Histories (‘Enquiries’ or ‘Researches’) of Herodotus (c. 425 BCE), in Book 3 (chapters 80-82) of a nine-book behemoth trying to explain why Greeks and Persians came to blows at the beginning of the 5th century BCE, and why the resisting Greeks had won. Herodotus’s so-called ‘Persian Debate’ has a dramatic date of c. 522 BCE, but is quite un-historical! Its value lies in its exposition of Greek political theory, based on the perception that all forms of government are versions of just three basic types: Rule by All, Rule by Some, Rule by One. The word demokratia does not appear anywhere in the Debate, but elsewhere Herodotus makes it clear that democracy is crucially at stake throughout. The first of the three speakers, effectively a democrat, argues for a version of Rule by All, which he calls isonomia: ‘equality under the laws’, in his view the ‘fairest of names’. As he represents it, this stands for or embodies above all the following three uniquely choiceworthy characteristics: i. the selection of all officials is done by use of the lot (election was considered oligarchic, since it favoured the rich and famous); ii. all officials are at all times responsible to the people; and iii. all major public political decisions are taken by the people (all qualified citizens) by majority decision.

7. The other two speakers in Herodotus’s Persian debate are respectively for Rule by Some (pro-aristocracy) and Rule by One (pro-monarchy, in the form of legitimate autocracy), but they are both equally anti-Rule by All or in effect democracy, which for them was merely mob-ocracy, mob-rule. All Greeks believed in – or paid lip-service to - equality (e.g., isonomia), but they differed often radically and irreconcilably over who should count as relevantly, politically, equal. To a non- or anti-democrat, democracy was the world turned upside down: the poor (and therefore ignorant, stupid, fickle, uneducated) masses ruling over the rich (and – perhaps – well-informed, clever, sensible, educated) elite few.

8. Ancient Greek democrats were radical egalitarians: one citizen = one vote, regardless of birth, wealth, beauty, strength, intelligence etc. (We, in contrast, prefer weighted voting systems – except, obviously, in referendums.) Everyone should count for one, and no one for more than one – and votes were counted, sometimes but not always secretly, in mass jury-courts as well as in Assembly. (The ancient Greeks did not recognize our ‘separation of powers’ – between the deliberative, executive, and judicial branches of government: the People ruled equally in all three.) The Spartans, who were not democrats, voted not by ballot nor by raising their hands but by shouting – thus there was no strict one man/one vote egalitarianism in operation there.

9. But in one respect no ancient Greek democrat was (an) egalitarian: gender. The Greek city (polis) was a men’s club: only free, legitimate adult males could be citizens (politai) with political power. Which gave rise to a (no doubt apocryphal) Spartan joke: when asked by an Athenian democrat why the Spartans didn’t practise democracy, the Spartan allegedly replied – we’ll introduce democracy into our public decision-making when you Athenians introduce democracy into your own homes… Athenians were notoriously sexist and patriarchal.Alumnus Dr Paul Cartledge on how democracy has been constantly reconstituted and reinvented since Ancient Greece.

10. The changes over time in the valuation of ‘democracy’ – from depreciation of ancient, direct demokratia (the word as well as the thing) to upwards revaluation of indirect, representative ‘democracy’ today – tell a powerful story, as my Democracy: A Life tries to show: 

i. there was hardly any genuine demokratia (people-power) anywhere in the Greek world after 300 BCE.  

ii. demokratia came typically to mean ‘republic’, i.e. not-monarchy, or/and freedom from direct rule by either Greek autocrats or by Rome.

iii. Rome (first the Roman Republic, then the Empire) hated Greek-style direct democracy; the Latin for demokratia was democratia… The rule of the Roman People even under the ‘free’ Republic was variously mediated and in effect nullified by the power of the - aristocratic-oligarchic – Senate.

iv. the Byzantine Greeks, who called themselves ‘Romans’, were ruled autocratically by divinely authorised monarchs, and by the 6th century CE the term demokratia had been so devalued that it could be used to mean ‘riot’, a form of ‘mob-rule’.

v. Not before the 17th century did the word ‘democracy’ start creeping back into political discourse as a potentially viable system of governance, only to be firmly and overwhelmingly rejected – by both the American and the French revolutionaries -within the largely negative reception of ancient Greek direct democracy as little better than mob-rule.

Democracy: A Life was published by the Oxford University Pressvi. Only with the invention of representative, parliamentary democracy – since then variously morphed into ‘Western’, ‘liberal’ democracy, based on universal adult suffrage – did democracy become an accepted governmental norm. It remains a fragile achievement. 

 

Two ‘lessons’ may perhaps be drawn from this brief comparativist exercise.

First, the past, as L.P. Hartley (author of the novel The Go-Between) wrote, is a ‘foreign country’. They (in this case the ancient Greeks) organized political ideas and their reception quite differently there.

Second, a real puzzle remains as to why and how ‘democracy’ – the word as well as very various and disparate versions of the thing – so rose in estimation from its late 18th century disapproval to its generalized approbation (and too often mis-appreciation) today.

 

Paul Cartledge (A.G. Leventis Senior Research Fellow, Clare College, Cambridge; emeritus A.G. Leventis Professor of Greek Culture, Faculty of Classics, University of Cambridge)

 
Images: Shutterstock, Oxford University Images

Medea

Medea

In Greek mythology, Medea was an enchantress and witch who used her magic powers to help Jason and the Argonauts in their quest for the Golden Fleece. Later, after Jason betrayed her, she used her witchcraft to take revenge.

The daughter of Aeëtes, king of Colchis, Medea first saw Jason when he arrived at the king's palace to request the Golden Fleece. According to some accounts, Hera, queen of the gods, persuaded Aphrodite, the goddess of love, to make Medea fall in love with the young hero.

Aeëtes had no intention of handing over the Golden Fleece but pretended that he would do so if Jason successfully performed a series of tasks. He was to yoke fire-breathing bulls to a plow, sow a field with dragons' teeth, and then fight the armed warriors who grew from those teeth. In return for his promise to marry her, Medea gave Jason a magic ointment to protect him from the bulls' fiery breath and told him how to confuse the warriors so that they would fight among themselves. Following Medea's instructions, Jason completed the tasks he had been set.

Aeëtes promised to hand over the Golden Fleece, but Medea knew that he would not keep his word. She led Jason and the musician Orpheus into the sacred grove where the fleece was kept, guarded by a vicious serpent. Orpheus sang the serpent to sleep, enabling Jason to escape with the fleece. Medea then joined Jason and the Argonauts as they set sail in the Argo, pursued by her brother Apsyrtus. When Apsyrtus caught up with them, he promised to let Jason keep the Golden Fleece if he would give up Medea. Jason refused and killed Apsyrtus.

Eventually the Argonauts arrived back at Iolcus, which was ruled by Jason's uncle Pelias. Pelias had gained the throne by killing Jason's father, King Aeson. Medea brought Aeson back to life by boiling his remains in a pot with magical herbs. In this way, she tricked Pelias's daughters into thinking that they could restore their father to youth by cutting him up and boiling him in a pot. Pelias died a gruesome death, and the furious inhabitants of Iolcus drove out Medea and Jason.

The couple married and settled in Corinth, where they raised several children. Their happy days ended when Creon, the king of Corinth, offered Jason his daughter Glauce in marriage. Anxious to please the king, Jason abandoned Medea and prepared to marry Glauce. Medea took her revenge by sending Glauce a poisoned wedding gown that burned her alive. By some accounts, before fleeing to Athens, she also killed the children she had borne to Jason.

Aegeus, the king of Athens, agreed to protect Medea if she married him and bore him children. They produced a son, Medus (or Medeius), who stood to inherit the throne. However, Aegeus was unaware that he already had a son, Theseus, from a previous marriage. When Theseus came to Athens to claim the throne, Medea recognized him, persuaded Aegeus that Theseus planned to kill him, and prepared a cup of poisoned wine for the young man. Just as Theseus was about to drink the wine, Aegeus recognized the sword that Theseus carried, realized that Theseus was his son, and knocked the cup from the young man's hand. By some accounts, Medea then fled to a region in Asia that came to be known as Media in her honor and whose inhabitants became known as Medes.
Source:English literature

கீழடி

கீழடியை வஞ்சிக்கும் மத்திய அரசு 
------------------------------------
மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் அகழ் ஆய்வு செய்து சங்க கால தமிழ் நாகரீகம் கண்டறியப்பட்டது . உறைக்கின்று , ஊது உலை , கழிவுநீர் வடிகால் , போன்றசான்றுகள்கிடைத்தன.
நெருக்கமான அப்பகுதிகள் பண்டைய காலத்தில் நகரமாக இருந்திருக்க கூடும் . இந்த ஆய்வு பணிகளை மேலும் விரிவாக்கி அகழ் ஆய்வு செய்ய வேண்டும்  என்று கோரிக்கை எழுந்தது . இதற்கான ஐந்து பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது .ஆனால் மேலும் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல் கிடைக்கவில்லை . காபா என்ற மத்திய தொல்லியல் குழுவும் அமைதிக்காக்கின்றது .ஏற்கனவே தாமிரபரணி கரையில் கண்டறிப்பட்ட ஆதிச்நல்லூர் அகழ் ஆய்வு சத்திய மூர்த்தியின் அறிக்கையை 10 ஆண்டுகளாக மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது . காவிரிப்பூம்பட்டினம் , உறையூர் , கரூர் , இந்த படுக்கைகளில் அகழ்ஆய்வுகள் அதற்கான முழுமையான ஆய்வு அறிக்களைகளை முறைபடுத்தவில்லை .ஆனால் மத்திய அரசு குஜராத்தில் வாடுநகரில் , ராஜஸ்தானில் சிஞ்சூர் , பிகாரில் ஊரைன் ,ஆகிய இடங்களுக்கு அகழ் ஆய்வு பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது . ஆனால் தமிழக அகழ் ஆய்வு பணிகளுக்கு மட்டும் அனுமதி தராமல் அகழாராய்ச்சி பணிகள் அனைத்தையும் புறக்கணிக்கின்றது .

இந்திய வரலாற்றை தமிழகத்தில் இருந்து தான் எழுதப்படவேண்டும் .தமிழர்களின் தொண்மையையும் வரலாற்றையும் வடபுலம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது அதற்கு எடுத்துக்காட்டே கீழடி ஆகழய்வுக்கு அனுமதி வழங்காதது ஆகும் .இன்றைக்கு உள்ள தமிழக கொந்தளிக்காமல் ,இதைக்குறித்து யாரும் வய்திறக்காமல் இருப்பது வேதனையை தருகிறது .நமக்கே இதுகுறித்து அக்கரை இல்லையெனில் டெல்லி பாதுஷாக்களை குற்றம் சொல்லி என்ன நடக்கப்போகிறது 

#கீழடிஅகழ்ஆய்வு 
#ஆதிச்கநல்லூர் 
#தொல்பொருளியல்துறை
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
27/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

Monday, December 26, 2016

கிளாரிந்தா

#கோகிலா,  #கிளாரிந்தா ஆன கதை ! 

(இது ஒரு திருநெல்வேலி சமாச்சாரம்)
-------------------------------------------------
கோகிலா மராட்டிய ராஜ வம்சத்தை சேர்ந்த #பிராமணப்பெண். தஞ்சாவூரில்  1770 இல் மகாராஷ்டிர மன்னர்களின் ஆட்சி இருந்த காலம். கோகிலாவின் கணவன் தஞ்சை  அரண்மனையில் முக்கிய அதிகாரி. என்ன நேரமோ..அவன் திடுதிப்பென்று செத்துப் போனான்.  அக்கால வழக்கப்படி கோகிலாவை உடன்கட்டை ஏற செய்ய ஏற்பாடுகள் நடந்தன. கோகிலாவோ இளம் வயது.  சிதையில் தீமூட்டி அவளை உள்ளே தள்ளியபோது, நம்ம தமிழ்ப் பட கதாநாயகன் மாதிரி அவளை புயலென குதிரையில் வந்து காப்பாற்றி தூக்கி சென்றவன் ஹென்றி லிட்டில்டன் என்ற கிழக்கிந்தியக்கம்பெனி படையின் ராணுவ அதிகாரி.  
ஒரு இளம்பெண்ணை உயிரோடு எரிக்கிறார்களே என்ற மனிதாபிமானத்தோடு தான் அவன் காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்றான். கோகிலாவின் உறவினர்கள் கொதித்து எழுந்தார்கள். அவளை சமூக புறக்கணிப்பு செய்தார்கள்.
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. . ஆனால், அன்றைய பாதிரியார் ச்வார்ட்சு அவளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்தார்.
             பின்னாளில் பாளையங்கோட்டைக்கு லிட்டில்டன் மாற்றலாகி வந்தார். அவரோடு கிளாரிந்தாவும் வந்து சேர்ந்தார். இருவரும் வாழ்வில் இணைந்து விட்டார்கள். கொஞ்ச நாளில் லிட்டில்டன் இறந்து விட்டார். அதன்பிறகு கிளாரிந்தா கிருஸ்தவ இறைப்பணியை செய்ய தொடங்கி விட்டார். தான் வாழ்ந்த வீட்டருகே ஒரு தேவாலயத்தை தனது சொந்தப் பணத்தில் கட்டினார். அருகே பொதுமக்கள் பயன்படுத்த ஒரு கிணறு வெட்டினார். தென்னிந்தியாவில் இவர் கட்டிய இந்த தேவாலயமே தென்னிந்திய திருச்சபையின் முதல் தேவாலயம். 1783 இல் துவங்கி, 1785 இல் முடிந்தது. முன்னாளில் ஞானஸ்நானம் கொடுக்க மறுத்த அதே சுவார்ட்சு பாதிரியார் தான் இந்த தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது வினோதம் தான்.
        இந்த கிளாரிந்தா அம்மையார் நிறுவிய முதல் திருச்சபை பதிவேட்டில் 40 பேர் கொண்ட பட்டியல் இருக்கிறது. 1780 இல் எழுதப் பட்டது. கிளாரிந்தா வில் தொடங்கி அவரது சமையல்காரி சாராள், யோவான் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் 13 வகை சாதியினர். இந்தப் பட்டியலில் அக்காயி என்றொரு பிச்சைக்காரியின் பெயரும் அடங்கும்.
இந்த கோகிலா என்ற கிளாரிந்தா கட்டிய தேவாலயம் இன்றும் இருக்கிறது. இவர் வீட்டின் அருகே தோண்டிய கிணறு இன்றும் பாப்பாத்தி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் குப்பையைக் கொட்டி இப்போது பாழடித்து விட்டனர் மக்கள். 
இந்த கிளாரிந்தா தான் முதன்முதலில் குழந்தைகள் கல்வி பயில ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி, ஆசிரியர்களுக்கு தனது கையில் இருந்து சம்பளம் வழங்கினார். அக்கால நாவலாசிரியர் அ.மாதவையா கிளாரிந்தா என்ற ஆங்கில நாவல் எழுதி இருக்கிறார். அதில் கோகிலா பற்றிய பல விபரங்கள் உள்ளன.
15 வயதில் இறக்க வேண்டிய பெண்ணான கிளாரிந்தா, தனது 60 ஆவது வயதில் பாளையங்கோட்டையில் இறந்தார்.

சென்னை மாகாணத்தில் தென்னிந்திய திருச்சபை வரலாற்றை எழுத வேண்டும் எனில், கோகிலா என்ற கிளாரிந்தாவின் வாழ்க்கையில் இருந்து தான் தொடங்கவேண்டும்.
 
25.2.1796 இல் இவரது நினைவு நாள்

தகவல்: R Narumpu Nathan

Source: Radhakrishnan KS

பாதுகாப்போம் தாமிரபரணியை

உயிர்மை இந்த டிசம்பர் (2016)
இதழில் தாமிரபரணிபற்றி எனது பத்தி
..............................................................
பாதுகாப்போம் தாமிரபரணியை!

வழக்கறிஞர்கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

பொருநையாறு தவழும் அந்த மண்ணைச் சார்ந்தவன் என்ற வகையில் 21.11.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெற்கு சீமையின் அடையாளமான தாமிரபரணியில் தண்ணீரை கபளீகரம் செய்யக்கூடாது என்று பெப்சி, கோகோ கோலா ஆலைகளுக்கு இடைக்கால தடை வழங்கியது ஓரளவு நிம்மதியை தந்துள்ளது. எனது நிமிர வைக்கும் நெல்லை 2005ல் நெல்லை இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் நடந்தபோது நெல்லை பிரமுகர்கள் தி.க.சி., பொன்னீலன், மாலன், தோப்பில் மீரான், தொ. பரமசிவம், கழனியூரான், தீப. நடராஜன், சுப.கோ. நாராயணசாமி போன்றவர்கள் கலந்துகொண்டனர். அச்சமயம்தான் குளிர்பான நிறுவனத்துக்கு பொருநை ஆற்றுத் தண்ணீரை விலைக்கு விற்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதைச் சொல்லி விழாவிலும் மறைந்த தி.க.சி. கண்ணீர் விட்டு அழுதார். அவருடைய கோரிக்கை ஓரளவு நேற்று நிறைவேறியது. என்னை பார்க்கும்போதெல்லாம் இதற்கு எதாவது செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். 

தாமிரபரணியின் சுவை நீரை வெறும் ரூ. 3600 க்கு விலைபேசி குளிர்பான நிறுவனங்கள் கபளீகரம் செய்தன. இதற்கு மத்திய மாநில அரசுகளும் துணை போனது. நெல்லையின் உயிரோட்டமான பரணியாற்றை விலை பேசிய பேடிகளை சட்டம் தண்டிக்க வேண்டும். 

தென் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரும் பெப்சி கோலாவாக மாறியது. இதற்காக நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் ஆலை அமைக்கும் பணியை பெப்சி நிறுவனம் நிறுவியது. 

இந்நிலையில்  கங்கை கொண்டானில் பெப்சி ஆலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. 

கங்கை கொண்டானில் சிப்காட் வளாகத்தில்,  36 ஏக்கர் பரப்பளவில் பெப்சி ஆலை அமைந்த நிலத்தின் அரசு மதிப்பு ரூ. 5.40 கோடி ஆகும். சந்தை மதிப்புப்படி பார்த்தால், 15 கோடிக்கும் மேல். ஆனால் இந்த நிலத்துக்கு ஆண்டுக்கு 36 ரூபாய் மட்டும்தான் பெப்சி நிறுவனம் குத்தகையாக  அரசுக்கு செலுத்தும். அப்படியென்றால்  இவ்வளவு மதிப்புள்ள நிலத்துக்கு 99 ஆண்டுகளுக்கு  வெறும் 3,600 ரூபாய்க்கும் குறைவாகத்தான்,  குத்தகையாக பெப்சி நிறுவனம் அரசுக்கு செலுத்தியது. எவ்வளவு குறைவான சந்தை மதிப்பில் இந்த நிறுவனத்துக்கு கொள்ளையடிக்க வழங்கப்பட்டது.

அது மட்டுமல்ல, தாமிரபரணி நதியில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கவும், தமிழக அரசுடன் பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 37 ரூபாயை அரசுக்கு பெப்சி நிறுவனம் வழங்கும்.  அப்படி தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து அதனை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகவோ, கோலாவாகவோ மாற்றி  பெப்சி நிறுவனம் எத்தனை ரூபாய்க்கு நுகர்வோர்க்கு விற்கும்  என்று யோசித்து பார்த்தால் தலை சுற்றுகிறது.

தாமிரபரணியில் இருந்து பல லட்சம் லிட்டர் ஊற்றுநீர் உறியப்பட்டால், நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில்,விளை நிலங்கள் பாதிக்கப்படும் நிலை. இதனால் கங்கை கொண்டானில் பெப்சி நிறுவனம் அமைய எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த போராட்டத்தையெல்லாம் கண்டு கொள்ளாமல் குளிர்பான நிறுவனங்கள் இயங்கின. 

தமிழத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் இணையும் ஒரே நதி தாமிரபரணிதான். பாபாநாசம் மலையில் உற்பத்தியாகி தூத்தூக்குடி மாவட்டம், புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது தாமிரபரணி. இந்த இரு மாவட்டங்களின் ஒரே நீராதாரமும் கூட.

அத்தகைய பெருமை வாய்ந்த ஜீவ நதியும் பெப்சி கோலாவுக்கு தாரை வார்க்கப்படுவதை தடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை வழங்கியது நெல்லை மக்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி.
பொருநை ஆற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையுள்ள லட்சக்கணக்கானவர்களில் அடியேனும் ஒருவன். தாமிரபரணி தமிழ் கூறும் நல்லுலகத்தின் அடையாளம். தமிழ் பிறந்த பொதிகைதான் பரணியின் நதிமூலம். அப்படிப்பட்ட தொன்மையும், நாகரீகத்தின் அடையாளத்தை தொடர்ந்து பாதுகாக்கவேண்டியது அனைவரின் கடமையாகும். கங்கை-காவிரி இணைப்பு என்று சொல்கின்றனர்.  கங்கை – காவேரி - வைகை - தாமிரபரணி இணைத்து, கங்கையின் நீர் குமரியைத் தொட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்தவன்.  உச்சநீதிமன்றம் வரை இந்தக் கோரிக்கையை வைத்து, தீர்ப்பையும் பெற்றவன். நதிநீர் இணைப்பு மட்டுமல்லாமல் தாமிரபரணியின் மீது தெற்குச் சீமைக்காரர்களுக்கு என்றைக்கும் தனிப்பிரியம் உண்டு. 

அதைப் பற்றிய சுருக்கமான வரலாற்று பதிவு;

  “குளிர்நீர்ப் பொருநை
சுழி பலவாய்”  - சடகோபர் அந்தாதி.

ஊற்றெடுத்த மாவட்டத்திலேயே கடலில் கலக்கின்ற ‘தட்சிண கங்கை’என்ற சிறப்பினைப் பெற்ற தாமிரபரணிநதி, பாபநாசத்திலிருந்து புன்னைக்காயல் வரை 130 கி.மீ. நீளம் பாய்ந்து வருவது நெல்லைச் சீமையில்தான்! தென்மேற்கு, வடகிழக்குப் பருவக்காற்று மழைதான் இந்நதியின் நீராதாரமாக அமைந்துள்ளது.

பொருநை நதியில் கல்லிடைக்குறிச்சிக்கு அருகில் உள்ள கன்னடியன் அணைக்கட்டை அடுத்து மணிமுத்தாறு வந்து சேருகிறது. திருப்புடைமருதூரில் வராக நதியும், கடனா நதியும் இதில் கலக்கின்றன. பச்சையாறு முதலிய சிற்றாறுகளும் இதில் சேருகின்றன. இதன் துணை நதிகள் மணிமுத்தாறு, கருணை, வரநதி, சிற்றாறு ஆகும். பொதிகையிலிருந்து புறப்பட்டு ஐந்து தலைகளாகப் பிரிந்து, ஐந்தலைப் பொதிகையாகப் பிரிந்து பாய்ந்து வருகிறது. பொருநையாறு, மலையில் மட்டும் 26 கிலோ மீட்டர் பயணம் செய்யும் ஆறு. 121 கிலோ மீட்டர் என்று மொத்த நீளத்தில் 1,750 ச.கற்கள் பரப்பை வளப்படுத்திப் பாய்கிறது.

பொதியம், தென் பொதியம் என்றெல்லாம் போற்றப்படும் பொதிகை மலையில்தான் தமிழ் பிறந்தது என்பதனை ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே!’ எனத் தமிழன்னை போற்றப்படுகிறாள். அந்தப் பொதிய மலையில் தோன்றிக் கடலொடு கலக்கும் ‘தண்பொருநை ஆறு பற்றிய நாகரிகமே முதல் நாகரிகம்’ என்கிறார் நுண்கலை அறிஞர் சாத்தான்குளம் அ. இராகவன்.

உலகின் தொன்மையான நாகரிகங்கள் எனப்படும் சிந்துவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், எகிப்து நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், அசிரிய நாகரிகம், போனிசிய நாகரிகம், சீன நாகரிகம், ஜெர்மன் நாகரிகம், கிரேக்க நாகரிகம், உரோம நாகரிகம் என்றெல்லாம் போற்றப்படும் பதினைந்து நாகரிகங்களுள் சிந்துவெளி நாகரிகம் ஏறத்தாழ கி.மு. 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு போற்றினர்.  குமரிக் கண்டத்திலிருந்து முகிழ்த்த முதல் நாகரிகம். அதுவே பொருநை நாகரிகம் ஆகும்.  ஆதிச்சநல்லூர் இரும்புப் பயன்பாடு காலத்தில் தோன்றிய தென்னாட்டு நாகரிகம் என்கிறார் உ.வில்லியம் மெய்யர்.

‘தென்பாண்டி நாட்டின் செல்வி’, ‘பொதிகையின் குழந்தை’, ‘பொன் நிறத்துப் புனல் பெருகும் பொருநை’, ‘பாணதீர்த்தம்’ என்று பலவாறாக அழைக்கப்படும் தாமிரபரணி, சொரிமுத்து அய்யனார், முத்துப்பட்டன் கோயில்களைக் கடந்து வருகின்றது.

இன்றைக்கு இந்த மாவட்டத்தில் முத்துப்பட்டன் வீரசுவர்க்கம் அடைந்தது நாடோடிப் பாடல்களாகப் பாடப்பெறுகின்றது. அமரகவி பாரதியாரின் துணைவியார் செல்லம்மா பாரதி பாணதீர்த்தம் வந்தபோது சொரிமுத்துப் பட்டனின் மீது பாடப்பட்ட நாடோடிப் பாடல்களை மிகவும் ரசித்ததாகக் கூறப்படுகிறது.
பாபநாசத்தின் பாணதீர்த்தம் எனும் பகுதிதான் விடுதலை வேராகத் திகழ்ந்த வ.வே.சு. அய்யரின் உயிரைப் பறித்தது.

பாரதியின் வர்ணனைகள்
______________________

வரகவி பாரதி பொருநை பற்றிக் கீழ்க்குறிப்பிட்டவாறு வர்ணிக்கிறார்.
“எத்தனை வருஷங்களாக, எத்தனை யுகங்களாக இந்தக் குன்றங்களின் மீதும் சங்கீதக்காரியாகிய தாமிரபரணியின் மீதும் இங்ஙனம் அற்புதமான ஸுர்யோதயம் நிகழ்ச்சி பெற்று வருகிறதோ! எத்தனை யுகங்களாக இந்தத் தாமிரபரணி இங்கே இடைவிடாமல், ஓயாமல், தீராமல், ஒரே ரசமான பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாளோ!
தண்ணீரில் காலை வைத்தால் காலைச் சுற்றி மீன்கள்! பாபநாசத்து மீன்கள் அழகுக்கும், தைரியத்துக்கும் கீர்த்தி பெற்றவை.

அவை மனிதருக்கு அஞ்சுவதில்லை. அவற்றை இங்கு மீன் வலைஞனேனும் பிறரேனும் பிடிக்கக் கூடாதென்ற சம்பிரதாயமொன்று இருந்து வருகிறது. யாரோ ஓர் ஆங்கிலேயன் இங்கே மீன் பிடித்ததாகவும், அவனுக்கு கண் தெரியாமல் போய்விட்டதாகவும் ஒரு கட்டுக்கதை வழங்கி வருகிறது. இவற்றுள்ளே பெரும்பான்மையானவை பொன்னிறமுடையவை. இலேசான தங்கக் கம்பியினிõல் ஒரு சிறு வளையம் பண்ணி அதனிடையே நீலரத்னம் பதித்தது போல் இவற்றின் கண்கள் மிளிர்கின்றன. சோறு போடத் தொடங்கினால் நீரோட்டத்தை எதிர்த்து இந்த மீன்கள் அணியணியாக வந்து நிற்பதைப் பார்க்கும்போது, எதிரியின் குண்டுகளைக் கருதாமல் அணிவகுத்து நிற்கும் காலாட் படைகளைப் போன்ற தோற்றமுண்டாகின்றது.

பாபநாசத்து ஜலம் மிகவும் இன்பமானது. வாய்க்குத் தேன் போன்ற ருசியுடையது. பல்லாயிரம் கிளைகளாகத் தோன்றி, வரும் வழியிலேயே எண்ணற்ற ஔஷாதிகளைத் தீண்டி வருவதால், இந்த ஜலத்தில் ஸ்நான பானங்கள் செய்வதினின்றும் எல்லாவித நோய்களும் நீங்கிப் போய்விடுமென்று சொல்கிறார்கள்.
நான்கு புறமும் ஜலமேடை, நடுவே ஒரு பாறைத் திட்டின் மீது பளிங்கு போல் வழவழப்பான கல்லைக் கழுவி அதன் மேல் தோசை அல்லது அன்னத்தை வைத்துக் கொண்டு தின்றால் அது வாய்க்கு அமிர்தம் போலிருக்கிறது.”

- சுப்பிரமணிய பாரதியார், பாபநாசம் (1919)

வாலிமீகி இராமாயணத்தில், தாமிரபரணியை மகாநதி என்கிறார். வேதவியாசரும் பொருநையின் புனிதத்தை எடுத்துச் சொல்லியுள்ளார். தாமிரபரணியின் 149 புனித குளியல் கட்டங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. தாமிரபரணிக் கரையில் உள்ள குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில் பாறையில்தான், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமிகளின் விக்கிரகம் படைக்கப்பட்டது என்று வரலாறுகள் சொல்கின்றன.

எல்லா ஆறுகளும் கடலில் மீன்களையும், தவளைகளையும் கொண்டு சேர்க்கும். ஆனால், பொருநையாறு மணிகளையும், முத்துக்களையும் கொண்டு சேர்க்கிறது. தண்பொருநைக் கரையில் தான் தமிழுக்கு இலக்கணம் படைத்த அகத்தியரின் மாணாக்கர்களான அதங்கோட்டாசான், தொல்காப்பியர், செம்பூட்சேய், காக்கைப் பாடினியார், நத்தத்தனார், பனம்பாரனார், அவிநாயனார், வாய்ப்பியனார், வாமனார், வையாடிகளார் போன்ற தமிழ் ஆசான்கள் வாழ்ந்துள்ளார்கள்.சங்ககாலப் புலவர் மாறோக்கந்து நப்பசலையார் மாறமங்களத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். மாறமங்கலம் பின்னர் மாறோக்கம் என்றாகியிருக்கலாம். கொற்கையின் பக்கத்திலுள்ள பன்னம்பரையில்தான் பனம்பாரனார் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காளிதாசரின் ரகுவம்சத்தில்,
‘தாமிரபரணி மேதயை முக்தாசாரம் மகோததே’
எனப பாடப்பட்டுள்ளது.

‘தண் பொருநைப் புனல் நாடு’
- சேக்கிழர்

‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருந்தி’
- கம்பர்

செம்புச் சத்து கொண்ட பொருநை என்பது, பொரு என்ற வினைப் பகுதியினால் அழைக்கப்பட்டது என வரலாற்று பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகிறார்.

கல்கி ரா. கிருஷ்மூர்த்தி அவர்கள் இந்நதியைப் பற்றி, “திருநெல்வேலி மக்களின் முக்கால்வாசிப் பேரைத் தினம் அதிகாலையில் தாமிபரணி நதியில் குளித்துக் கொண்டிருக்கக் காணலாம். பொழுது விடிந் சூரியன் உதயமாவதே காலையில் தாமிரபரணியில் ஸ்நானம் செய்வதற்குத்தான் என்பது திருநெல்வேலியாரின் அசையா நம்பிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.

“திரைபடு பொருநை நீத்தம் செவிலி போல் வளர்க்கும்’ என்று பரஞ்சோதி முனிவர் கூறியது போல இவ்வாறு நெற்பயிரைச் செழிக்கச் செய்வதோடு இன்று வரை.. .. தமிழ் அறிஞர்களை அளித்து கல்விப் பயிரை வளர்த்து வற்றாத ஜீவநதியாக மக்களின் உயிரையும் உள்ளத்தையும் துளிர்க்கச் செய்து வருகிறது.”
. அ. ராகவன், ‘கோநகர் கொற்கை’ (1971)

‘தாமிரபரணி (அல்லது தாம்ரவரணி) திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடுகிற நதி. அது ஒரு ஜீவ நதி; இரு பருவ மழையுமே அதன் உற்பத்திக்கு மூலம். கோடை காலத்திலும், அது சிறிதாக, மெதுவாக மணலும் பாறையுமான படுகையில் பாய்கிறது. அதன் தலை, காடு அடர்ந்த பொதிகையடி; அகத்திய மாமுனிவரின் மலை; முத்துக்கள் குவிந்துள்ள கொற்கை வரை அது தன் பாதத்தை நீட்டுகிற. சங்கப் புலவர்கள் பொதிகையையும் கொற்கையையும் பாடியுள்ளனர்.”
- பேரறிஞர் பெ.நா. அப்புசாமி
பத்தமடை ராமசேஷையர் நினைவு மலர் (1977)

தாமிரபரணி ஆறானது தண்பொருநை என்று பெரிய புராணத்தாலும், ‘தண்பொருநல்’, ‘வண்பொருநல்’ என்று திருவாய்மொழியாலும் குறிப்பிடப் பட்டுள்ளது. கம்ப இராமாயணம் ‘பொன் திணிந்த புனல் பெருகும் ஆறு’ என்றும், திருச்செந்தூõ பிள்ளைத் தமிழ் ‘பொய்க்காத வளமை தரும் ஆறு’  என்றும் கூறுகின்றன. ‘தண்பொருத்தம்’ என்று பிங்கல நிகண்டும்,  ‘தண்பொருநை’யென்று நச்சினார்க்கினியமும், ‘பெண் ஆறு’ என்று புலவர் புராணமும் கூறுகின்றன. ‘பொதியமலைப் பெற்றெடுத்த பொற்கொடி’ என்று திருவிளையாடற் புராணம் விளக்குவது சிறப்பிற்குரியதாகும்.

இராமாயணத்தில், ‘ஆற்றல்மிக்க அகத்திய முனிவரது ஆன்மாவின் கருணையால் நீங்கள் முதலைகள் நிறைந்த பெரிய ஆறாம் தாமிரபரணியைக் கடப்பீர்களாக’, 1915-ம் ஆண்டு நிலவரப்படி அப்போதும் கன்னடியன்கால் அணைக்கட்டின் மேற்பகுதியிலே முதலைகள் இருந்ததாக ஆங்கில ஆட்சியாளர்கள்  கூறியுள்ளார்கள்.

தாமிரபரணி ஆறு தனது காதலனுடன் விளையாடும் ஒரு நங்கை போல் தனது தெளிந்த நீரோடும், சின்னஞ்சிறிய அழகிய தீவுகளோடும் கவர்ச்சியூட்டும் சந்தனக் காடுகளினூடே மறைந்து சென்று கடலாடுகிறாள். தாமிரபரணி ஆறு, சிவப்புச் சந்தன மரக் காடுகளின் ஊடே பாய்ந்து ஓடுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
பொருநை ஆற்றின் கரையில் உள்ள செப்பறையைச் சேர்ந்ததுதான் ராஜவல்லிபுரம். தமிழ்கூறும் நல்லுலகிற்கு எத்தனையோ அறிஞர் பெருமக்களை ஈன்ற ஊர்.

வடநாட்டில் திரிவேணி சங்கமத்திற்கு நிகராகத் தென்னாட்டில் முக்கூடலாகும். பொருநையும், குற்றாலத்திலிருந்து வரும் சிற்றாறும், கழுகுமலையின் அருகே உள்ள ஓர் ஊற்றிலிருந்து எழும் ஓடையும் (கோதண்டராம நதி) முக்கூடலில் கலக்கின்றன. முக்கூடலின் தொன்மையை முக்கூடற்பள்ளு கூறுகின்றது. ஸ்ரீவல்லபன் முக்கூடலில் ஒரு பெரிய ஏரியை வெட்டினான். அதை ஸ்ரீ வல்லவப் பேரேரி என அழைத்தனர். நாளடைவில் அது பேரேரி என்று அழைக்கப்பட்டு, சீவலப்பேரியாகச் சிதைந்தது. சீலவப்பேரி துர்க்கை கோயில் சனீஸ்வரன் சன்னதி சிறப்பு வாய்ந்ததாகும்.

செஞ்சிக்கும் கூடலுக்கும்
தஞ்சைக்கும் ஆனைசொல்லும்
செங்கோல் வடமலேந்திரன்
எங்கள் ஊரே.

இந்தத் தனிச் சிறப்புமிக்க தாமிரபரணி ஆற்றைத் தாண்டிய பிறகு, போர்க்கோலத்தில் படைவீடாக இருந்த பணப்படை வீடு, கேமளாபாத் என்ற ஊர் ஒரு வித்தியாசமான ஊராகத் தெரியும். கமாலி என்ற வெள்ளைய கலெக்டர் அமைத்த ஊர். இங்கு இஸ்லாமியப் பெருமக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். குரங்காணி பகுதியானது இராமர் தன் வானரச் சேனைகளை அணிவகுத்துக் கொண்ட இடம் என்று ஆன்மிகச் செய்திகள் சொல்கின்றன.

பாண்டி நாட்டின் தலைநகரினில் உள்ள கோட்டைகளிலே பொன்னாலாகிய வாயில்களைக் காணலாம். இங்கே பாண்டிய நாட்டுத் தலைநகர் எனப்படுவது கொற்கையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புத்த சமயத்தைத் தழுவிய பேரரசராகிய அசோகர் கிர்னர் என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டில் தான் தமது வெற்றி நினைவுத் துணைத் தாமிரபரணியில் நாட்டியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

 டாக்டர் கால்டுவெல், தாப்ரோபணி என்பது தாமிரபரணிதான் என்று ஆராய்ச்சி மூலம் விளக்கம் கொடுத்து இருக்கிறார். இயேசு பெருமானின் அவதாரத்திற்கு முன்பு இலங்கை தாப்ரோபணி என்று கிரேக்கர்களால் அழைக்கப்பட்டதாகவும், மேலும் அவர் தமது ஆராய்ச்சியில் கூறுகிறார். கி.மு.302-ல் மெகஸ்தனிஸும் இவ்வாறே கூறியிருக்கிறார். கி.பி.80-ல்  பெரிப்ளூஸின் ஆசிரியரும் இலங்கையின் அந்தக் காலத்துப் பெயர் தாப்ரோபணி என்று இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

இந்தப் பெயரை ஆங்கிலக் கவிஞர் மில்டனும் குறிப்பிட்டிருக்கிறார். இப்பெயர் தாமிரபரணி ஆற்றிற்கு வந்ததா அல்லது வைகைக்கு  சென்றதா? அல்லது இலங்கையில் இருந்து தாமிரபரணி ஆற்றிற்கு வந்ததா என்பது பற்றி டாக்டர் கால்டுவெல் விவாதித்துவிட்டு, இப்பெயர் இலங்கையில் இருந்து திருநெல்வேலி நாட்டிற்குக் குடியேறிய மக்களால் தாமிரபரணி ஆற்றுக்குச் சூட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்துக்கு அவர் உடன்படுகிறார். ஆனா, இக்கருத்து இறுதியானது அல்ல.

 “கோடும் குண்டும் பொருதரங்கக்
குமரித் துறையில் படுமுத்தும்
கொற்கைத் துறையில துரைவாணர்
குளிக்கும் லாபக் குவால்முறுத்தும் ….   ”

#பொருநையாறு
#தாமிரபரணி
#நெல்லை
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
25/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting


ஞானபீட விருது

ஞானபீட விருது பெறுவதில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது 
................................................................................ ...........................................

ஞானபீட விருது 1965 ல் இருந்து ஜெயின் ட்ரஸ்ட் என்ற தனியார் அமைப்பு இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உள்ள இலக்கியப்படைப்புகளில் ஒரு மொழியை தேர்ந்தெடுத்து அந்த மொழியில் உள்ள சிறந்த படைப்பாளிக்கு விருதினை வழங்கி வருகிறது .

தமிழ் படைப்பாளிகளான அகிலன் ,ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ் இலக்கியத்திற்கு ஞானபீடம் கிடைக்கவில்லை.1987 ல் நா . பார்த்சாரதிக்கு கிடைத்திருக்க வேண்டிய ஞானபீட விருதும்  அவர் மரணம் அடைந்து விட்டதால் அந்த வாய்ப்பும் தவறிவிட்டது . ஏனெனில் ஞான பீட விருது மறைந்தவர்களுக்கு கொடுப்பது இல்லை  .

வங்கமொழிக்கு 6 முறையும் , கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாள மொழிக்கு 5 முறையும் , தெலுங்கிற்கு 3 முறைக்கு மேலும் ஞானபீட விருதுகள் வழங்கபட்டுள்ளன. 
கடந்த 12 ஆண்டுகளில்,தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு ஒரு முறைகூட வழங்காமல் ஞானபீடம் புறக்கணித்து விட்டது . தமிழ் இலக்கிய கர்த்தாக்களுக்கு இந்த ஆண்டும் வழங்காமல் வங்க மொழி கவிஞர் ஷங்கா கோஷ்என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது 

இந்த முறை கிராவுக்கு கிடைக்கும்  என்ற எதிர்பார்ப்பு இருந்தது . . கிராவின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி , பிரஞ்சு ,தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன . எல்லாரும் எதிர்பார்த்த ஞானபீடம் தமிழுக்கு கிடைக்கவில்லை என்று அனைவரையும் வேதனைபடுத்தியுள்ளது .

தனிப்பட்ட முறையில் கி.ராவுக்கு ஞானபீட வருது  வழங்காதது  ஞானபீட விருதின் நோக்கத்தையும் அதன் பெருமைகளையும் பாழ்படுத்தி விட்டது என்று குற்றம்சாற்றுகிறேன் .

#ஞானபீடம் 
#கிரா

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
26/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

Sunday, December 25, 2016

வாஜ்பாய்

வாஜ்பாய்,4/5/1986 அன்று
மதுரையில் டெசோ மாநாட்டு
சமயத்தில் மீனாட்சி அம்மன் கோவில், கோபி அய்யங்கார் விடுதி,காலேஜ் ஹவுஸ்

என உடன் இருந்த நினைவுகள்நினைவுக்கு வருகிறது....
 நல்ல மனிதர். அவருக்கு பிறந்த நாள்.

போக்ரான் அணுகுண்டு சோதனை நிகழ்த்தி இந்தியா வல்லரசு என நிருபித்தவர்...

கார்கில் போரில் பாகிஸ்தான் படைகளை ஓட ஓட விரட்டி வெற்றியை குவித்தவர்...

சிறந்த பேச்சாளர். ஐக்கிய நாடுகள் உரையாற்றியுள்ளார். அதில் திருக்குறள் ஒன்றையும் கூறியுள்ளார். 

என் மக்கள்(தமிழ் மக்கள்) இலங்கையில் தாக்கப்பட்டால் இலங்கைக்கு எந்த வித உதவியோ,ஆயுதங்களோ கொடுக்க  முடியாது என்று சொன்னவர்....

வளர்ச்சி என்ற அடிப்படையில் அரசாங்கம் நடத்த வேண்டும் என்று முதலில் செயல்படுத்தியவர். 

நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்கள் 
தேசிய நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகளில் நாம் பயணிக்கும்போது அடல்ஜியை நினைவு கூற வேண்டும்.
தங்க நாற்கரச் சாலைகள், பிரமத மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டங்கள்.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது இந்திராவை விமர்சித்தவர்.

எமர்ஜென்சியை எதிர்த்தவர்.
#வாஜ்பாய்

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்25/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

உண்மையான புரட்சியாளர்கள்

தமிழ்மண்ணில் ஏன் ஒரு
காந்தி,
போஸ்,
லிங்கன்,
லெனின்,
சேகுவேரா, 
காஸ்ட்ரோ, 
மண்டலா,
பிரபாகரன் 
தோன்றவில்லை?

எவ்வித புரட்சியும் 
செய்யாமலே 
புரட்சித்தலைவர்.....
புரட்சித்தலைவியாகிற.....
ஆகிற தேசத்தில்..

ஒருநாளும்.. 
உண்மையான புரட்சியாளர்கள் 
தோன்ற மாட்டார்கள்.
நம்மை நாம் ஏமாற்றி கொள்கிறோம்.

ராஜீவ் கொலை

"ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்"-பா. ஏகலைவன்
-------------------------------------
அன்புக்குரிய பத்திரிகையாளர் பா. ஏகலைவன் "ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்" என்ற தலைப்பில் சிறைவாசி நளினியின் நூலை எழுத்தாக்கி தொகுத்துள்ளார். இது அற்புதமான வரலாற்றுப் பதிவாகும். சமகாலத்தில் ராஜீவ் படுகொலை அனைவராலும் கவனிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட துயர சம்பவமாகும். ராஜீவ் படுகொலையில் சம்பந்தமில்லாத நளினி 25 ஆண்டுகளாக சிறை கொட்டடியில் பூட்டப்பட்டு சித்திரவதையான கொடுமைகளை ஏகலைவன் தொகுத்துள்ளார். அவருடைய இந்த நூலை ஒரு பத்தியில் விரிவாக சொல்ல முடியாது. தன் கணவர் முருகனும் வேலூர் சிறையில் இருந்தும் தன்னுடைய குழந்தையை லண்டனுக்கு அனுப்பி குடும்ப அமைப்பு என்ற சிதைந்த வகையில் சித்திரவதைகளை அனுபவிக்கும் நளினிக்கு நாம் எப்படி ஆறுதல் சொல்லப் போகிறோம். உண்மைகளை உறுதியாக சொல்லப்பட்டும், நீதிமன்றங்களில் வாதங்கள் வைத்தும் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகை வரை கோரிக்கைகள் வைத்தும், எதுவும் நளினி விசயத்தில் ஈடேறாமல் போய்விட்டது என்பதுதான் ரணமான விசயம்.  அவரே சொல்கின்றார், "என்னுடைய மனத்துயரங்களை தோண்டிப் பார்க்கிறேன்" என்று. வேலூர் சிறையில் நளினியின் கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் அடைக்கப்பட்டு எண்ணற்ற வதைகள். இப்படியான நிலையில் அவர்கள் அனுபவித்த துயரங்களை படம்பிடித்து காட்டுகிறார் ஏகலைவன். நளினி சொல்கிறார், "இப்போது 26 ஆண்டுகாலம், நீண்ட நெடிய சிறைவாசத்தை அனுபவித்தபடி நிற்கின்றேன். இதில் பாதி காலம் நாளை என் உடல் தூக்கில் தொங்குமோ என்ற மிரட்சியில் கழிந்தது".

ஒன்றும் அறியாத அமைதியான வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த நளினிக்கு இப்படியா கொடுமை. இதுதான் நமக்கு சிந்திக்கத் தோன்றுகிறது. ஒரு வீட்டில் தலைமகளாகப் பிறந்த நளினி, ஆரம்பகட்டத்தில் பல பிரச்சினைகளை சந்திக்கிறார். 1964ல் நேரு இறந்த நாளில் பிறந்த நளினியின் குடும்பத்தினர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பாரம்பரியமும் உண்டு. முருகனை மானசீகமாக காதலித்து கணவராக ஏற்றுக்கொண்டார். இப்படியான வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கும்போதுதான் வாழ்க்கையில் எந்த காரணமும் இல்லாமல் ராஜீவ் கொலை வழக்கில் வெள்ளந்தியான நளினியை குற்றவாளியாக பதிவு செய்தனர். காவல்துறையினரின் அத்துமீறலும் கொடுமைகளும் வேறு எவரும் எதிர்கொள்ள முடியாத வகையில் தன்னுடைய வேதனைகளையும் வெளிகாட்டாத வகையில் தைரியமான மங்கையாக வேலூர் சிறையில் கழித்துவிட்டார். இந்த தியாகங்களை எல்லாம் வேறு எவரும் செய்யவும் முடியாது. நினைத்து பார்க்கவும் முடியாது. நளினி சொல்கிறார், "சிறை வளாகத்தில் என்னுடைய கணவர் முருகனிடம் கண்களால்தான் நலம் விசாரிக்க முடியும். சாப்பிட்டீர்களா என்று சைகையால்தான் கேட்க முடியும். அப்படி செய்யும்பொழுது, ஒரு காவலர் கவனித்துவிட்டு, என் தலை மேல் தாக்கினார். எனக்கு இடி போல இருந்தது" என்று சொல்லும்போது கண்களே குளமாகின்றன. "எனது மானசீகமான கணவரையே எனக்கு எதிராக திருப்பப்பார்த்தனர் காவல்துறையினர். நாங்கள் நிரபராதிகள் என்று சொல்ல முடியாமல், கட்டுக்கதைகளை சி.பி.ஐ.னர் உருவாக்கினர்.  மிரட்டல், பசப்பு வார்த்தைகள் என பல வகையில் எங்களை சீரழித்த கொடுமைகளை சொல்லி மாளாது. அது மட்டுமல்ல என்னுடைய அம்மா, தங்கை, தம்பி ஆகியோரை மிரட்டியுள்ளனர். இப்படியாக ஆண்டுகள் போகின்றன. வேலூர் சிறையில் நடந்த உளவியல் தாக்குதல், மன உளைச்சல்கள், நிர்பந்தங்கள், அதனால் ஏற்பட்ட ரணங்கள் என்பது பெரும் சோகம். விசாரணைகள் என்று இழுத்தடிப்பது என்ற சித்திரவதைகளில் மாட்டிக்கொண்டு எங்களுடைய வாழ்க்கையே நிர்மூலமாகிவிட்டது. அதுவும் சி.பி.ஐ. கண்காணிப்பில் இருந்தபோது அனுபவித்த சித்திரவதைகள் ஏராளம். கடைசி இருபது நாட்களில் கண்களை மூடி தூங்கக்கூட விடாமல் கொடுமை செய்தனர்." இப்படியெல்லாம் அவர் சொல்வதை ஏகலைவன் தன்னுடைய எழுத்தாக்கத்தில் விவரிக்கும்போது மனம் கனமாகிறது. என்னடா வாழ்க்கை என்று தோன்றுகிறது. ஒரு இடத்தில் சொல்கின்றார் நளினி. அப்போது சயனைடு குப்பி இருந்திருந்தால் அதை வைத்து தற்கொலையாவது செய்துகொண்டிருப்பேன் இவர்களுடைய சித்திரவதை தாங்கமுடியாமல் என்று குறிப்பிடுகிறார். என் வயிற்றில் உள்ள குழந்தைக்காகவும், தினமும் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு என் வாழ்க்கை சில காலம் கழிந்தது.

ஒரு கட்டத்தில் நளினியின் உறவுகளும் எதிரிகள் ஆகிவிட்டனர். கைதியாகி 6 மாத காலம் எங்களைப் பார்க்க உறவுகள் யாரும் வரவில்லை. உடல் உபாதைகள் வேறு. ஒப்புதல் வாக்குமூலங்களுக்குப் பிறகும், சட்டத்தை மீறி எங்களை சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சட்டங்கள் எதுவும் எடுபடவில்லை. ராஜீவ் படுகொலையில் ஒப்புதல் வாக்குமூலம் தரவேண்டும் என்று ரகோத்தமனின் நெருக்கடி ஒரு பக்கம். நாங்கள் விரும்பிக்கொடுத்த வாக்குமூலங்களில் பல முரண்பாடுகள். சி.பி.ஐ.யே தங்கள் விருப்பத்திற்கேற்றவாரு வாக்குமூலங்களை தயார் செய்துகொண்டது. 

ஒரு முறை நான் பெற்ற குழந்தையே சிறையில் என்னிடம் வர மறுத்தது ஒரு தாய்க்கு எப்படி இருக்கும் என்பதை சிந்தனை செய்து பாருங்கள். இதற்கிடையில் 19.3.2008 திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் வேலூர் சிறையே பதற்றமாக இருந்தது. இது ஒரு வித்தியாசமாகவும் பட்டது எனக்கு என்று சொல்கிறார் நளினி. திடீரென சிறை அதிகாரிகள் என்னை அழைக்கிறார்கள். அவர்கள் பின்னால் நடந்து செல்கின்றேன். ஏதாவது தப்பான செய்தி வந்துவிட்டதா, கொடுமை நேர்ந்துவிட்டதா என்ற சிந்தனையில் நடக்கின்றேன். அறையின் உள்ளே சென்று சிறை கண்காணிப்பாளரை பார்க்கின்றேன். அவர் பக்கத்தில் பச்சைக் கலர் புடவையில் ஒரு பெண் இருந்தார். முதலில் யார் என்று புரியவில்லை. அதன்பின் அவர் சோனியாவின் மகள் பிரியங்கா என்று தெரிய வந்தது. என்னை சந்திக்க வந்திருக்கிறார் என்று யூகித்துக் கொண்டேன். அப்போது ஒரு நீண்ட விவாதம் அவருக்கும் எனக்கும் நடந்தது. விவாதத்தின் இடையே பிரியங்காவின் முகம் மாறத் தொடங்கியது. அவர் பார்வையும் சிவந்து கொண்டிருந்த முகம் அதை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றையும் குறுக்குக் கேள்வி மூலம் மறுத்தபடி அதிருப்தியை வெளிப்படுத்தியபடி இருந்தார். எதிர்க்கேள்வியால் மறுத்தபடி, உன்னைப் பற்றி சொன்னாய், உன் கணவரைப் பற்றி சொன்னாய். அதில் ஒரு நியாயம் உண்டு. அவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? அவர்களைப் பற்றி நீங்கள் ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று காட்டமாக கேட்டார். அதற்குப் பிறகு அவருடன் பேச முடியாமல் தவித்தேன். சி.பி.ஐ. யினுடைய மிரட்டல்கள் தவறான போக்குகள்தான் இதற்கு காரணம் என்று சொல்லி மேற்கொண்டு என்னால் பேச முடியவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அவர் காட்டிய கோபமும் என்னை மிரள செய்தது என்றெல்லாம் நளினி சொல்கின்றார். இந்த சந்திப்பை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார்கள். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் எனக்கு கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது. இப்படியாக என்னுடைய வாழ்க்கை கழிந்துகொண்டே போகின்றது. இந்த துயரத்திற்கு எப்போது முடிவோ தெரியவில்லை என்று தன்னுடைய வாழ்க்கையை சொல்கிறார் நளினி.

ஏற்கனவே ராஜீவ் படுகொலை குறித்து அவிழ்க்கப்படாத முடிச்சுகள் என்ற ஒரு பத்தி 1991ல் எழுதியிருந்தேன். அதில் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு வந்து திருப்பெரும்புதூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு செல்லும் திட்டத்தில் விமானம் பழுதடைந்துவிட்டது என்று சொல்லி பயணம் தள்ளிப் போகும் என்று ராஜீவிடம் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென விமானம் சரியாகிவிட்டது. நீங்கள் புறப்படலாம் என்று கூறியதில் உள்ள மர்மங்கள் என்ன. அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்படி ராமமூர்த்தி திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்தும் இடம் பாதுகாப்பானது அல்ல என்று மறுத்தபோதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்குதான் கூட்டம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்தியதன் நோக்கம் என்ன? தனுவுக்கும், சிவராசனுக்கும் காங்கிரஸ் தலைவர்களோடு தொடர்பு இருந்ததா? பெங்களூருக்கு அவர்கள் எப்படி சென்றார்கள். அங்கு யார் யாரை சந்தித்தார்கள்? என்பதையெல்லாம் விசாரிக்கவேண்டும் என்று எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கும் ராஜீவ் படுகொலையில் உள்ள முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. நளினியைப் போல அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர். எந்த தவறும் இழைக்காதவர்களுக்கு இப்படியா ஒரு கொடுமை என்று எதிர்கால வரலாறு சொல்லக்கூடாது. அந்த வரலாற்றுப் பிழைக்கு நாம் சம்பந்தப்படாமல் நியாயங்கள் பக்கம் இருந்து நளினியைப் போன்ற அபலைகளின் உரிமைகளை பாதுகாக்க உறுதி எடுப்போம்.

நளினியின் ரணங்களை நண்பர் ஏகலைவன் ஒரு சிறு காப்பியமாக படைத்துவிட்டார் . 
இதிகாச காப்பியத்தில் கொடுமைகளை எதிர்த்து போராடி வெற்றி வாகை சூடுவதோடு , மட்டுமல்லாமல் மக்களுக்கு அறத்தையும் போதிப்பதும் உண்டு .
 இந்த நூலில் , கொடுமைகளில் வாடும் நளினிக்கு விடியல் கூடிய வசந்தகாலம் வரும். இருளுக்கு  பிறகு வைகறை வருவது போல இயற்கை சகோதரி  நளினிக்கு நீதி வழங்கும். மகாபாரதம் , ராமாயாணம் , மற்றும் தமிழ் இலக்கியத்தில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் அறம் வெற்றி பெற்று  , துயரப்பட்டோர் இறுதியில் துயரத்தில் இருந்து வெளிவருவர் . கொடுமைகள் புறந்தள்ளப்படும் ,அம்மாதிரியே ரணங்களும்  வேதனைகளும் அகலும் . வேலூர் சிறையில் வாழும் நளினி விடுதலை பெற்று மாதர் குல மங்கையாக கீர்த்தியோடு விடுதலை பெறவேண்டும் என்று இயற்க்கையை இறைஞ்சிகிறோம் .

அற்புதமான வரலாற்றுப் பதிவினை வெளிப்படையாக தமிழ் சமுதாயத்துக்கு வெளிகொண்டு வந்த சிறைவாசி நளினி முருகனுக்கும், இந்த தவப் பணியை அற்புதமாக கச்சிதமாக செய்து முடித்த நண்பர் பா. ஏகலைவனுக்கும் தமிழ் கூறும் நல் உலகம் பாராட்டவேண்டும். அவர் பணி தொடர வேண்டும்.

Saturday, December 24, 2016

சாகித்திய அகாடமி விருது

சாகித்திய அகாடமி விருதுகளை திரும்ப திரும்ப திருநெல்வேலியே அள்ளிக்கொண்டு வருகிறது . 
-------------------------------------
கன்னித் தமிழ் பிறந்த பொதிகையும் அதன் தென்றலும் , வீரத்தை ஊட்டிய பொருணை ஆற்றின் சுவை நீரும்,சலிக்காத உழைப்பை திணித்த வானம்பார்த்த கரிசல் மண்ணின் வேகாத வெயிலும் நெல்லை சீமையின் அடையாளங்கள் . நாகரீகத்தின் பிறப்பிடம்;பழைமையும் , தொண்மையும் , காட்டுகின்ற பூமி  நெல்லை பூமி . இலக்கியத்தில் எத்தனையோ கர்த்தாக்களை நெல்லை உருவாக்கியது . தமிழகத்தில் சாகித்திய அகாடமி விருதுகளை திரும்ப திரும்ப எங்கள் திருநெல்வேலியே அள்ளிக்கொண்டு வருகிறது . 

ரசிகமனி டிகேசி , ரா.பி .சேதுப்பிள்ளை , பி . ஸ்ரீ ஆச்சார்யா , அ . சீனிவாச ராகவன் , மீ.பொ .சோமு , கு.அழகிரிசாமி  , ஆதவன் ,தொ.மு.சி ரகுநாதன் . சமுத்திரம் , 
கி. ராஜநாராயணன் , வல்லிக்கண்ணன் ,  தோப்பில் முகமது மீரான் , தி.க .சிவசங்கரன், பூமணி,ருத்ர துளசிதாஸ் இவர்களை தொடர்ந்து தற்போது வண்ணதாசன் அவர்களும் சாகித்திய அகாடமி விருதினை பெற்றுள்ளார் . இப்படி ஒரு நீண்ட பட்டியலே உண்டு . தமிழ்பணிக்கு சுவடுகளை பதித்த அகத்தியர்லிருந்து இன்றைய களனியூரான் வரை ஆயிரத்திற்கு மேலான ஆளுமைகளும் நெல்லையின் அருட்கொடை . 

இதில் கவனிக்கத் தக்க செய்தி என்னவென்றால் ராஜவள்ளிபுரம்  ஊரை சேர்ந்த ரா .பிசேதுப்பிள்ளையும் ,வல்லிக்கண்ணனும்  இடைசெவல் என்ற குக்கிராமத்தை சார்ந்த 
கு . அழகிரிசாமியும் , ராஜநாரயணனும் இந்த விருதினை பெற்றுள்ளனர் 
ஒரே ஊரை சார்ந்தவர்கள் விருதுகள் பெறுவது என்பது தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள் மற்றும் ஏன் அகில இந்திய அளவிலும் வேறு எங்கும் இப்படி ஒரு பெருமை பெற்றது கிடையாது .

மேலாண்மை பொன்னுசாமி விருதுநகர் மாவட்டம் என்றாலும் அவருடைய கிராமம் மேலாண்மை மறைநாடு நெல்லை சீமையின் வடக்கு எல்லையில் தான் உள்ளது . இதற்காக பெருமை படுகின்றோம் .எதோ ஒன்று மனதிற்குள் மிகப்பெரிய காயமாக உள்ளது ;என்னவென்றால் ஞான பீட விருது மட்டும் நெல்லை மாவட்டத்திற்கு எட்டாக்கனியாகவே  உள்ளது  என்று வருத்தமாக உள்ளது  .

அகிலன் ,ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ் இலக்கியத்திற்கு ஞானபீடம் கிடைக்கவில்லை . 1987 ல் நா . பார்த்சாரதிக்கு கிடைத்திருக்க வேண்டிய ஞானபீட விருதும் தட்டிவிட்டது .ஞான பீட விருது நெல்லைக்கு கிடைக்கவேண்டும் என்று இயற்க்கையை இறைஞ்சுகிறோம்  !

#சாகித்தியஅகாடமி 
#நெல்லை 
#திருநெல்வேலி

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
24/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

கச்சத்தீவு

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் 23/12/2016 கச்சத்தீவு அந்தோணியார் கோவிலுக்கு தமிழக மீனவர்கள் செல்வது தொடர்பான என்னுடைய பத்தி வெளிவந்துள்ளது !
.................

கனவாகிப் போன
கச்சத்தீவு

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
email: rkkurunji@gmail.com

கச்சத்தீவில் கடந்த 7, 8ம் தேதி புதிய அந்தோணியார் கோவில் திறப்பு விழா நடக்க இருந்தது. இராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ள இந்த தீவிற்கு தமிழக மீனவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டபொழுது, இலங்கையிலிருந்து சரியான அழைப்புகள் வராதது தமிழக மீனவர்களை புண்படுத்தியது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடுக்கப்பட்டது.  யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜோசப் ஜெப ரத்தினம், மன்னார் மறை மாவட்ட ஆயர் ஆகியோர் இந்த திறப்பு விழாவை முன்னின்று நடத்துவதாக செய்திகள் வந்தன. இலங்கை அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய அந்தோணியார் கோவில் இலங்கை கடற்படை மேற்பார்வையில் கட்டப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதால் இந்த விழா எதிர்வரும் டிசம்பர் 24க்கு ஒத்திவைக்கப்பட்டது. துவக்கத்தில் மூன்று படகுகளுக்கு மேல் 200 பேராவது இராமேஸ்வரத்திலிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டபோது இலங்கை அரசு மறுத்துக்கொண்டே வந்தது. இராமேஸ்வரம் பங்கு தந்தை சகாயராஜும், சிவகங்கை பங்கு தந்தையும் சேர்ந்து தமிழக அரசுக்கு இது குறித்தான கோரிக்கை வைத்தபின், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இலங்கை அரசு தமிழக மீனவர்களை கச்சத்தீவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஒப்புதலை இழுத்தடித்தது. யாழ்ப்பாண ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அப்போது இந்த விழா எளிய விழா. இராமேஸ்வரம் பங்கு தந்தையோடு மூன்று பேரை அழைத்துவரலாம் என்று குறிப்பிட்டது தமிழக மீனவர்களை மிகவும் வேதனைப்படுத்தியது. 

ஆனால், இலங்கை அரசின் நிலைப்பாடு இன்னும் தமிழக மீனவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது. நிகழ்ச்சிக்கு தமிழக மீனவர்கள் 100 பேர் செல்வார்கள் என்று சொல்லப்பட்டாலும் அதற்கான உறுதியான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள 115 படகுகளையும் விடுவிக்க முடியாது என்றும் இலங்கை அரசு கூறிவிட்டது. அத்துடன், இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் படகுகளுக்கு 30 லட்சம் ரூபாய் முதல் பல கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் அந்நாட்டின் பன்னாட்டு மீன்பிடிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று இலங்கை அமைச்சர் மகிந்தா அமரவீரா மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய அரசு இதைத் தீர்க்கக் கூடிய வகையில் தீர்வுகளை அவசரமாக காணவேண்டும். 

இப்படியான சிக்கலான கச்சத்தீவு பிரச்சினையை 8.7.1974ல் முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசு அளித்தது சட்டத்துக்கு புறம்பானது. இது குறித்தான வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் உள்ளன. கச்சத்தீவிற்கு பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் செல்வது வாடிக்கை. ஒப்பந்தத்திற்குப் பிறகும் கச்சத்தீவிற்கு செல்வதும், மீனவர்கள் தங்களுடைய மீனவர்கள் மீன்பிடி வலைகளை உலர்த்துவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் உரிமை உண்டு என்று ஒப்பந்தத்தில் ஷரத்துக்கள் இருந்தாலும், தொடர்ந்து இலங்கை கப்பற்படை, இதை பொருட்படுத்தாமல் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளியது. 

அந்தோணியார் தேவாலய விழாவிற்கு இலங்கை தமிழர் பிரச்சினையால் 1983லிருந்து தமிழக மீனவர்கள் செல்ல முடியாமல் இலங்கை அரசு தடுத்தது. திரும்பவும் 2010ல் இந்த திருவிழாவிற்கு தமிழக மீனவர்கள் ஏறத்தாழ 28 வருடங்கள் செல்ல முடியாமல் தவித்தனர். கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்திற்கு சென்றால் ஆண்டு முழுவதும் மீன்பிடித் தொழிலில் வளமும் கடலில் தங்களுக்கு பாதுகாப்பும் இருக்கும் என்பது தமிழக மீனவர்களுடைய பெரும் நம்பிக்கை. 

கச்சத்தீவும் அந்தோணியார் திருவிழாவும் குறித்தான கடந்தகால நிகழ்வுகள். 

இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் பாம்பன் தீவு அருகில் 285.2 ஏக்கர் அளவும், பரப்பளவில் சுமார் 4 மைல் கொண்ட அமைதியான தீவே கச்சத்தீவு. கள்ளி, கத்தாழை, கருவேல மரங்கள், பனை மரங்கள், செடி, கொடிகள் படர்ந்த எந்த சலசலப்பும் இல்லாத நிர்சலமான பகுதியாக ஒரு காலத்தில் இத்தீவு இருந்தது. சங்குகளும், முத்துக்களும் இங்கே கிடைக்கின்றன. கால்சியம் கார்பனேட் கற்கள் இங்கு மிகுதி. கச்சத்தீவு என்பது பசுமை நிறம் வளத்தைக் கொண்டதால் பச்சைத் தீவு என்று வழங்கப்பட்டு, கச்சன் – கச்சம் என்ற ஆமைகள் அதிகமாக இத்தீவில் இருந்த காரணத்தினால் ‘கச்சத்தீவு’ என்று பெயர் பெற்றது. இத்தீவில் எண்ணெய் வளமும் உள்ளதாக ரஷ்ய ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவில் உள்ள இந்த தீவில் பறவைகளின் ஒலி, கடலலைகளின் ஒசை, மரங்கள் அசையும்போது எழும் சத்தம் போன்றவை தவிர வேறெந்த ஓசையும் இல்லாமல் அமைதி தீவாக இருந்தது. கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக துப்பாக்கி சத்தம் கேட்கும் அமைதியற்ற நிலை அங்கு ஏற்பட்டது.

சமீபத்தில், கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில், தமிழகத்தின் ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சார்ந்தவர்களும், இலங்கையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட 2,910 பேர்கள் 71 விசைப் படகு மற்றும் 40 நாட்டுப் படகுகளில் சென்றனர்; இலங்கையிலிருந்து 800 பேர்கள்; அனைவரும் கடந்த 2010 பிப்ரவரி 27ஆம் தேதி மதியம் கச்சத்தீவில் கூடினர். அங்கு இலங்கை நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ், தேவாலயத்தில் கொடியேற்றினார். இலங்கை நெடுந்தீவு அரசு அதிகாரி திரிலிங்கநாதன், இலங்கை கடற்படை கமாண்டர் வீரசேகரா, இராணுவ மகேந்திர மதுரசிங்கே, யாழ்ப்பாண மாவட்ட ஆட்சித் தலைவர் கணேசன் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் வந்திருந்து அந்த மண்ணை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்தனர். நற்செய்தி கூட்டமும், திருப்பலியும் அங்கு நடந்தேறியது. தமிழகத்தின் சார்பில் சிவகங்கை மறைவாட்ட முதன்மை குரு ஜோசப் லூர்து ராஜ் மற்றும் அமல்ராஜ், பாதிரிமார்கள் மைக்கேல் ராஜ், ஜேம்ஸ், வின்சென்ட் அமல்ராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.

பிப்ரவரி 28 அன்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தேறின. அப்பூஜையில் இரு நாட்டு உறவுகள் வலுக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில்கள் சிறக்கவும் ஜெபிக்கப்பட்டது. காலை பூஜை நடந்ததற்கு பின், ஒன்றரை மணி நேரத்திற்குள் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் வெளியேறவேண்டும் என இலங்கை கடற்படையினர் கடுமையாக எச்சரித்திருந்தனர். இதனால் இராண்டவது பூஜையில் இராமேஸ்வரத்திலிருந்து சென்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. பின் 8.30 மணிக்கு கொடி இறக்கப்பட்டது. திருப்பலி பூஜைகள் ஒரு பக்கம் நடைபெற்றாலும் இறுக்கமான சூழலே அங்கு நிலவியது. மக்களிடம் ஏதோ இழந்துவிட்ட மன அழுத்தம் இருந்ததாக அங்கிருந்து திரும்பியவர்கள் தெரிவித்தனர். அங்கு சென்றவர்கள், இரண்டு நாட்களும் இரண்டு நாட்டு தமிழ் உள்ளங்களும் நேசமுடன் பழகினர் என்றனர்.

இங்கு வந்து மெழுகு திரியை ஏற்றும் வழக்கம் இருந்தது. அங்குள்ள சூசையப்பருக்கும் பூஜைகள் செய்வதும் உண்டு. இடைக்காலத்தில் அந்த வேண்டுதல் நீண்டகாலம் நடக்காமல் போய்விட்டது. இரண்டு நாட்டு பாதிரிமார்கள், கன்னியாஸ்திரிகளும் மக்களிடையே சமாதானம் தழைக்க வேண்டுமென்பதற்காக தங்களுடைய பாணியில் பூஜைகளை, 28 ஆண்டுகளுக்குப் பின் நடத்தியது அனைவரையும் நெகிழச் செய்தது.

இவ்வளவு காலத்திற்குப் பின் அந்தோணியார் கோவிலுக்கு எவ்வித தடையும், தடங்கலும் இன்றி செல்லக் கூடிய பெரும்பேறு கிட்டியது என்ற மகிழ்ச்சியும் இருந்தது. அங்கு வந்த கடற்படை இராணுவத்தினர் நோ என்ட்ரி என்ற பகுதிக்குள் இலங்கையிலிருந்து வந்தவர்களை மட்டும் அனுமதித்தனர். தமிழகப் பயணிகள் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குறையையும் தெரிவித்தனர். கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்குக் கூட இந்த தீவை பார்வையிட நீண்டகாலத்திற்குப்பின் அப்போதுதான் அனுமதி கிடைத்தது. நெடுந்தீவை தவிர யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் குறைவாக இருந்தனர். இந்த தீவில் எங்கு பார்த்தாலும் சீன எழுத்துகள் எழுதிய படுதாக்களை கொண்டு குடில்கள் அமைத்திருந்தார்கள். இம்மாதிரி 30க்கும் மேற்பட்ட குடில்கள் இருந்தன. அதில் ஆட்கள் தங்கிய சுவடுகள் தென்பட்டன. ஏற்கனவே இந்தியாவை நோக்கி சீனாவின் கண்காணிப்பு கோபுரம் அங்கு இருந்ததாக குற்றச்சாட்டு கடந்த காலங்களில் எழுந்தது. எங்கும் சிங்கள கொடிகள் அப்போது பறந்தன. இதுகுறித்து தமிழக பயணிகளின் மனதில் ஆயிரம் உரிமைக் கேள்விகள் எழுந்தன.

அந்தோணியார் கோவிலை 1930இல் தொண்டி அருகே உள்ள நம்புதாலையில் பிறந்த இந்து மதத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் என்பவர் எழுப்பினார். அதற்கு இராமேஸ்வரம் ஓலைக்குடா மீனவர்கள், கள்ளிக்கோட்டிலிருந்து கொண்டு வந்த ஓடுகளை 1951இல் வேய்ந்தனர். இந்த தேவாலயத்தில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியே முன்பு திருப்பலிகளை நடத்துவார். இராமநாதபுரத்தைப் பற்றி 1964இல் சோமலே எழுதிய நூலில்கூட, இந்தியா வசம் இருந்த கச்சத்தீவுக்கு அந்தோணியார் திருவிழாவின்போது இலங்கை இராணுவம் மோட்டார் படகில் வந்து ரோந்து சுற்றுவார்கள் என்றும், இந்திய இராணுவம் அப்போது அங்கு செல்வது கிடையாது. அந்த வகையில் எப்போதும் இலங்கையின் பார்வை கச்சத்தீவின் மீது இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில், இராமேஸ்வரம், தங்கச்சிமடம் மீனவர்கள் மட்டுமல்லாமல் தெற்கே உள்ள ஆத்தங்கரை, பாம்பன், வேதாளை, மண்டபம், பெரியபட்டினம், கீழக்கரை, சேத்துப்பாறை மீனவர்களுடன், குமரி, ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட வேம்பாறு, தருவைக்குளம், தூத்துக்குடியிலிருந்து மணப்பாடு, உவரி, மதுரை நகர் கே.புதூரைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக ரோமன் கத்தோலிக்க பர்வதர்களும் அந்தோணியார் திருவிழாவுக்குச் சென்றனர். தூரத்தில் இருந்து வரும் பயணிகள், இராமேஸ்வரத்தில் இருக்கும் தங்களுடைய உறவினர்களிடம் திருவிழாவுக்கு வருகிறோம் என முன்கூட்டியே சொல்லி, அவர்களின் உதவியோடு படகுகளில் செல்வது உண்டு. அப்போது சமையலுக்கான பொருள்கள், ஆடுகள் போன்றவற்றை உடன் எடுத்துச் செல்வர். கொடியேற்றும் நாளுக்கு முன்னாடியே சென்று விடுவார்கள். தார் பாய்களை கொண்டு குடில்கள் போட்டு திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் தங்குவர். இரு நாட்டு மக்களும் ஒன்றாக சமைத்து, உண்டு, உறங்கி தங்கள் உறவுகளை புதுப்பித்தும், நேசமாக ஆர்பரித்து இருக்கும் காட்சியை காண கண் கொள்ளாது. கச்சத்தீவில் குடிதண்ணீர் கிடைப்பது அரிது. அதனால் தனுஷ்கோடியிலிருந்து குடிநீர் கொண்டு போவார்கள். அரை அணாவிற்கும், 1960களில் ஐந்து பைசாவுக்கும் தண்ணீர் விற்பனை ஆனது. கடலில் குளிப்பது, உண்பது இவை மட்டுமே பணியாக திருவிழா நாட்களை கழிப்பர்.

திருவிழாவின்போது சிறுவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள், இரு நாட்டு பெண்கள் அளவாவது, மீனவர்களின் நாட்டுப்புற தரவுகள், பாடல்கள் இனிமையாகக் கேட்க முடிந்தது. கிராமப்புற மீனவர்களின் பண்பாடுகளும் இத்திருவிழாவில் சிறப்புற விளங்கும். இவர்கள் படகுகளில் செல்லும்பொழுது கீழ்வரும் பாடலை பாடிக் கொண்டு செல்வர்.

“கொடும கொடும இது மதுர ஜெயிலு கொடும
ஒத்தக் கொட்டரையாம் ஓயா விசாரமாம்
வால் மொளைச்ச கொசுக்கள் ஏராளமாம்
சிறைக்குள் மூட்டைப் பூச்சிகளுடன் போராட்டமாம்
காஞ்ச களிக்கிம் தீஞ்ச ரொட்டிக்கிம்
கையேந்தி நிக்கிறோம் போதாமையால்
கைதிகள் கையேந்தி நிக்கிறோம் போதாமையால்
அச்சடிச்ச சோறுக்கும் அவுன்சு கொழம்புக்கும்
ஆலாப் பறக்குறோம் போதாமையால்
நாங்க ஆலாப் பறக்குறோம் போதாமையால்
கொடும கொடும இது மதுர ஜெயிலு கொடும”

இந்த மகிழ்ச்சியான சந்திப்பின்போது, இலங்கையிலிருந்து வந்திருந்தவர்களுக்கும், இந்தியாவிலிருந்து போனவர்களுக்கும் இடையில் பண்ட மாற்றங்கள் நடைபெற்றது. சங்கு மார்க் லுங்கிகள், பிளாஸ்டிக் வாலிகள், பட்டுச் சேலைகள், சொக்கலால் பீடி, சினிமா பிலிம்கள், அவற்றைப் பார்க்கின்ற லென்ஸ், பாய்கள், கை கடிகாரங்கள், டிரான்சிஸ்டர், ஹேர் பேண்ட், தோடுகள், செயின்கள், ஷாம்பு, மாசி மற்றும் சில கருவாடு வகைகள், மிளகாய் வத்தல் போன்ற பொருட்களை இராமேஸ்வரம் கரையிலிருந்து சென்றவர்கள் கொண்டு சென்று அவர்களிடம் கொடுத்து, இலங்கையிலிருந்து வருகின்ற ராணி சோப், தேங்காய் எண்ணெய், சீட்டித் துணி, பிஸ்கெட், துப்புக்கட்டை, ரப்பர் செருப்பு, கிராம்பு, ஏலக்காய், பாக்கு, தேயிலைத் தூள் குறிப்பாக ஈஸ்டன் டீ, ஜப்பானில் செய்யப்பட்ட பேனா போன்ற பொருட்கள், முகத்திற்கு போடும் பவுடர், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், டெர்லின் சட்டை, ஹார்லிக்ஸ் மற்றும் இலங்கை பெண்கள் உடுத்தும் துணிகள் போன்றவற்றை தமிழகத்தைச் சார்ந்தவர்கள் வாங்குவர். இவ்வாறு பொருட்களை வாங்கி வருவதை காண்பதற்கு களிப்பாக இருக்கும். இது எல்லாம் மலரும் நினைவுகளாக இன்றளவும் உள்ளன. ஆனால் 2010ல் அந்த மாதிரியான பண்டமாற்று வியாபாரம் நடைபெறவில்லை. போதை வஸ்துகள், மதுபானம் போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது.

இப்படி நீண்டகாலமாக போராடி, அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு தமிழக, இலங்கை பயணிகள் கூடினர். நெகிழ்வு, பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திப்பு சங்கமம் என்ற மகிழ்ச்சி இப்படியாக கச்சத்தீவில் 20 மணி நேரம் உறவாடி, அப்போது கலைந்தனர். ஆனால் துப்பாக்கி ரவைகளின் சத்தம் கேட்ட இடத்தில் அமைதியும், பரவசமுமாக இருந்தது அப்போது ஒரு மன ஆறுதல். தீவில் அமைதியும், சமாதானமும் அந்தோணியார் திருவிழா மூலம் ஏற்பட்ட மகிழ்ச்சி தற்போதுள்ள சூழ்நிலையில் மறைந்துவிடுமோ என்ற அச்சம் தமிழக மீனவர்களிடையே ஏற்பட்டுள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு என்று நம்பினோம். திரும்பவும் கச்சத்தீவில் சிக்கலை உருவாக்குகின்றது இலங்கை அரசு. எவ்வளவோ முன் உதாரணங்கள் இருந்தும், சர்வதேச சட்டங்களில் தமிழக மீனவர்களுக்கான நியாயங்கள் இருந்தும் கச்சத்தீவு பிரச்சினை தீராமல் இருப்பது ரணத்தை தருகின்து.
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
23/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting
#கச்சத்தீவு

"தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் - 23"

"தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் - 23"

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். உண்மைதான். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள்  உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகள் தொடர் உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருள்களை உற்பத்தி செய்து வருகிறார்கள் விவசாயிகள். இப்படி விவசாயத்தில் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயம் ஆட்சியாளர்களுக்கு முதன்மை துறையாக இல்லாதிருப்பது வருத்தத்தை அளித்து வருகிறது.

ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டம்!

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-க்கும் மேற்பட்ட பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் உண்டு.

பல அரசியல் நெருக்கடி சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங்

'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங். அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள்.

அதேசமயம் உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், நூர்பூர் என்ற ஊரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தவர். உத்தரபிரதேச அரசில் வேளாண்துறை, வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. உத்தர பிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது. இந்தியாவில் நெடுநாளைய பிரச்னையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.

'ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்து வந்தவர். 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இறந்தார். புது டில்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு, வட இந்திய விவசாய சமூகங்களின் அன்பின் காரணமாக 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.

தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயம் சம்பந்தமாக கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தப்பட்டு அவர் பெயருக்கு சிறப்பு சேர்க்கப்பட்டு வருகின்றன.
---------

விவசாயிகளின் துயரங்கள் இனியாவது மறைய வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

நாம் சோற்றில் கை வைக்க நித்தமும் சேற்றில் கை வைக்கும் விவசாயிகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகம் எங்கே போகிறது ?

தமிழகம் எங்கே போகிறது ?

அதிகம் ஊதியம் பெற்றும் பிச்சைக்காரர்கள் போல ஊரை அடித்து உலையில் போட்டு லஞ்சம் வாங்கிய மானங்கெட்ட அரசு உயரதிகாரிகள் , காசுகொடுத்து பிச்சைக்காரார்கள் போல ஓட்டை பொறுக்கி வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் மானங்கெட்ட மாண்புமிகுக்கள் , இயற்க்கைவளங்களைசுரண்டி ,
மானங்கெட்டமாண்புமிகுக்களையும்,
அரசு உயரதிகாரிகளின் காலை தங்கள் நாக்கால் நக்கும் சில சமுக விரோத கும்பல்கள் .இன்றைய  (22/12/2016)டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில ஏட்டில் for politicians , gold lies in sand என்று குறிப்பிட்டு உள்ளனர் . பலருக்கு  தங்கம் மணலில் விளைகின்றது என்று குறிப்பிட்டுள்ளது .  மக்களுக்கு விரோதமான இந்த முன்று பேர்களும் செய்கின்ற அடவாடித்தனங்களை  கேட்டால்வெட்டுகுத்து ,தாக்குதல் .
இதற்கு எல்லாம் காரணம் தகுதியானவர்களை தகுதியான இடத்தில் வைக்காதது தான் .

தகுதியே தடையென்று பொதுவாழ்க்கையில் விஷத்தனமான  நெறியாகிவிட்டது . இப்படி என்றால் மக்களாட்சி மக்கள் நல அரசு  என்பதற்கு முரணாக மக்கள் விரோத புஜபல பெற்ற ஆதிக்கவாதிகளின் ஆட்சியாகத்தான் இருக்கும் . இன்றைக்கு ஓட்டுக்கு பணம் வாங்கிகொண்டு புஜபலம்  , ஜாதி பலத்தின் மூலம் தேர்தலில் வெற்றிபெறுகின்ற தகுதியற்றவர்கள் வந்தால் இன்றைக்கு  நிலவும் தமிழகத்தின் நிலைமை தான் ஏற்படும் .

ஒருகாலத்தில் தேர்தல் வெற்றியை ஜாதி தீர்மானித்தது அல்ல ; சென்னையை சேர்ந்த அய்யங்கார் ,டி.டி.கே திருச்செந்தூர்  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார் . வடநாட்டை சேர்ந்த ராம்நாத் கோயங்கோ திருக்குறள்  முனுசாமியை எதிர்த்து திண்டிவனம் நாடாளுமன்ற தொகுதியில் போயட்டியிட்டார் . பொள்ளாச்சி நாடாளுமன்ற   தொகுதியில் கவுண்டர்  சமுதாயம்  மக்கள் அதிகமாக வாழும் நிலையில்  நாயுடு  சமுதாயத்தை  சேர்ந்த ஜி .ஆர். தாமோதரன் வெற்றிபெற்றார் . இப்படி எல்லாம் பல நிகழ்வுகள் நடந்துள்ளன . 
இன்று இதை நினைத்து தான் பார்க்க முடியுமா?

எம்.எல்.ஏ , எம்பிக்கள் , ஆக எந்தவித உழைப்பும் , கல்வி தகுதி ,அரசியல் களப்பணி,தியாகம்,அரசியல் கட்சியின்  அடிப்படை உறுப்பினர்  ஆகாமலேயே பணம் பலம் ஜாதிபலமும்  மட்டும்  இருந்தால் போதும்.எம்.எல்.ஏ , எம்.பி  ஏன் அமைச்சர்கள் கூட ஆகிவிடுலாம் . உலகத்தின்ஜனநாயகமுறைகளையும, அரசியலமைப்பு  முறைகளையும்  நன்கு படித்தவன் என்ற முறையில் இந்த கேடுகெட்ட நிலைமை இங்குதவிர எங்கும் இல்லை .

கேரளா அரசியலை பாருங்கள் எவ்வளவு எளிமை ,அங்கு தமிழகத்தை போல் சினிமா அரசியல் இல்லை . தமிழகத்தில் தான் சினிமா வெறி அதிகமாகி சினிமாக்காரர்களை அரசியலுக்கு  அழைத்துக்கொண்டு இருக்கின்றோம் .  சினிமா அரசியல் தமிழகத்தை தவிர்த்து  ஆந்திராவில் என்.டி ராமாராவ்க்கு பிறகு சினிமாக்காரர்களால்  வெற்றிபெறமுடியவில்லை .கர்நாடகத்திலும் ராஜ்குமாரின் ரசிகர்கள் எவ்வளவோ முயன்றும்  அங்கும் சினிமா அரசியல் எடுபடவில்லை . மிகவும் பின்தங்கிய பிகாரில் சத்ருகன் சிங்காவும் முயன்று பார்த்தார் அங்கும் மாநில மக்கள் அரசியலில் சினிமாவை புறக்கணித்துள்ளனர்  .

இன்று நாம் சினிமாவையும் கேடுகெட்ட தொலைக்காட்சி சீரியலையும் பார்த்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வருகிறோம் . நாம் என்று திருந்துவோம் என்று தெரியவில்லை ?  இந்திய துணைகண்டத்தில் முதன் முதலாக மாநில சுயாட்சி என்ற உரிமை குரலை முரசு கொட்டிய மாநிலத்தின் தலைமை செயலகத்திலேயே மத்திய அரசின் கை நீண்டுவிட்டது .இது தமிழர்களுடைய உணர்வுகளை உரசிபார்த்துவிட்ட வெட்கேடானநிலைஆகிவிட்டது.
இதற்கு காரணமான தமிழகத்தின் தலைமை செயலாளர் ராமமோகன் ராவால் ஒவ்வொரு தமிழனும் தலை குனிய வேண்டிய நிலைமையில் தளப்பட்டுள்ளோம் ! இதற்க்கு காரணமான அத்தனை  பேரையும் அரசியல் , அரசு நிர்வாக தளத்தில் இருந்து அப்புறபடுத்துவோம் !

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
21/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting
#தமிழகஅரசியல்

Wednesday, December 21, 2016

நாராயணசாமி நாயுடு

விவசாயிகளின் எழுச்சிதலைவர்
நாராயணசாமி நாயுடு நினைவு நாள் இன்று.......

21/12/1984

விவசாய போராட்டங்களை முன்னெடுத்து அவர் நடத்தியபோது,கல்லூரிகளில்  மாணவர் அமைப்புகளை   அடியேன் ஏற்படுத்தினேன் .சென்னைக்கு வந்தால் சுவாகத், Old woodlands ஹோட்டலில் தான் அவர்  தங்குவார் . மாலையில் என்னுடைய இருப்பிடமான 39 ,சாலைத்தெரு மயிலாப்பூர்க்கு வருவார் . அங்கு என்னொடு தங்கி இருந்த விடுதலை புலிகளின் தலைவர் #பிரபாகரனும் இவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொள்வார்கள. கொங்கு மண்டல  கிராமப்புற  மொழியில் இவர் பேசுவதை பிரபாகரன் ரசித்து கேட்ப்பார் .

தம்பி எனக்கு ஒரு நல்ல துப்பாக்கி ஒன்றை குடு  என்று பிரபாகரனை கேட்டுக்கொண்டே இருப்பார் . சில சமயங்களில் மறைந்தபத்திரிக்கையாளர் சோலையும்  அங்கு வருவார்  . 

என்னுடைய சமயல்காரர் சீனி செய்துகொடுக்கும் அடையும் வடையும் அவருக்கு பிடிக்கும் . அப்போது நான் பயண்படுத்தும் தொலைப்பேசி எண் 75159 STD வசதியோடு  இருந்தது . அதையும் அங்கே இருக்கும் போது அதை பயன்படுத்திக்கொள்ளவும் அவருக்கு வசதியாக  இருந்தது.  மூத்தபத்திரிக்கையாளர்கள் ஏ.என் . சிவராமன் , கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் ,விகடன் குழும தலைவர் பாலசுப்பிரமணியம் ,இந்து என் ராம் போன்றோர்களிடம் இவரை துவக்ககட்டத்தில்  அழைத்து சென்றதுண்டு , விவசாய சங்க போராட்டத்தின் காரண காரியங்களை அவர்களிடம் தெளிவாக எடுத்து சொன்னார் . 

விவசாயசங்க வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் கவனித்துக்கொண்டேன் .விவசாயிகள் மீது ஏவபட்ட #ஜப்தி நடவடிக்கைகளை தடுத்தும் , #விவசாயிகளின் கடன் நிவாரண சட்டங்களில்  உரிமைகள் கிடைக்க கூடிய வகையில் வாதாடி விவசாயிகளுக்கு நிவாரணம்  அடியேன் 1970,80களில் பெற்று தந்தேன் . கோவில்பட்டி பயணியர் விடுதியில் மாரடைப்பால் நாராயணசாமி நாயுடு  இறந்த காலத்தில் (1984)அங்கு அவரோடு இருந்தவன் .கோவில்பட்டி பயணியர் விடுதிக்கு செல்லும்போது எல்லாம் பின் பக்கம் உள்ள வடக்கு பார்த்த அறையை பார்த்தாலே நாராயணசாமி நாயுடு  நினைவு வரும் .

#கோவில்பட்டியில் அவர் மறைந்ததால் அங்கு அவரின் முழு உருவ சிலையை வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்  . அவர்குறித்தான முழு வாழ்க்கை குறிப்புகளை என் சமுகவளைதளத்தில் பலதடவை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் .
#விவசாயபோராட்டங்கள்
#நாராயணசாமிநாயுடு  
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
14/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

தமிழகத்தின் தலைகுணிவு..

தலைமை செயலகத்தில் ரெய்டு என்பது தமிழகத்தின் தலைகுணிவு!

இவுனுங்க நம்மளையும் சேர்த்து குணிய வெச்சுட்டாங்களே.
மணல் கொள்ளையர்களும், சமூக விரோதிகளும் ஆட்சியளர்களுடன் கைகோர்த்துக் கொண்டு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்கள். தங்களுக்கு வேண்டியவர்களை பதவியில் உட்கார வைத்து கொள்ளையைத் தடையின்றித் தொடர்கிறார்கள். இந்நிலையில், சாமானியனுக்கு எங்கே நீதி கிடைக்கும்?

Miss World

Reita Faria, then a student of medicine at Grant Medical College, Mumbai, went on to win the crown of Miss World in 1966. Her victory resulted in a foreign policy scandal in India and  the Indian Parliament got into a tizzy; demands were made to revoke her passport. All that she had done after victory was to visit  Vietnam as part of her duties as the new Miss World and cheered American soldiers. The government of India at that time supported the communists and opposed American intervention in Vietnam. 

On the day of the #MissWorld contest, the bookies placed her chance of winning at 1:66. Now 73, #Reita Faria recalls that there was one Indian who bet on her winning. And he was merely expressing his patriotism. With just £3 in her purse, she had come to London to contest against beautiful girls from across the world. The bathing suit that she wore was borrowed from a previous Miss India, Persis Khambata. It was too short and too ill-fitting. The sari in her ensemble had been borrowed too. 

Since her studies at GMC could not be resumed, she now joined King's College, London to finish her medical degree. In the meanwhile David Powell, then a junior doctor at Dublin, had begun to woo her. They would marry in 1971.

Flaws in the Indian legislative process

Flaws in the Indian legislative process
--------------------------------------
Political parties will have to introspect about their roles in our parliamentary system. The institution of Parliament will have to rethink its legislative processes. In the absence of these, Parliament will become a mere rubber stamp for government laws.
The winter session of Parliament which ended last week was a legislative washout. The government was hoping to secure Parliament’s approval for 19 Bills during the session. Out of these it could get two financial Bills, and the Rights of Persons with Disabilities Bill, passed. Not listed on Parliament’s legislative agenda was the Income Tax Amendment Bill. The government pushed through this Bill without any debate in the Lok Sabha. But this poor performance should not undermine Parliament’s legislative efforts this year. The highest law-making body was able to pass approximately 80 Bills in 2016.
-Chakshu Roy(Mint)

Mahmum Tughluq,

The Defeat by Timur of the Sultan of Delhi, Nasir Al-Din Mahmum Tughluq, in the winter of 1397-1398. The picture below is a forensic reconstruction of Timur's face by M Gerasimov in 1941.
.

Timurlang, Langda Taimur, Timur the Lame, raided India in September 1398. He maintained the bloody pattern of his raids by killing off all males in the towns and villages that he attacked. The first major massacre  was at Tulma, the city that had been in existence for 2500 years. Today this city is known as Tulamba. Then he occupied Multan in October and killed off the people. 

As he marched towards Delhi he camped at the fort at Aspandi.  He asked his soldiers to massacre all 'heretics' (i.e. Hindus) at Aspandi, Kaithal and Samana

From Aspandi, Taimur tells us,  he moved 'six leagues' to the village of Tughlaqpur. This was a village inhabited by 'Sanawis'. These were Zoroastrians, Yazadis,  whom Taimur hated because they worshipped fire and Ahriman. Tughlaqpur was ordered to be razed to the ground as also the fort here. 

The next day he marched towards Panipat. 

On reaching Panipat he found the town to be empty. Everyone had fled to Delhi. Taimur ordered the entire town and fort to be ransacked and anyone found to be killed. 

It was only when Taimur reached Loni  that the people chose to stand up to him and fight the raider. The defenders of the fort put all their women and children in one building and set the building on fire. Then they went forth to fight Taimur's army and were killed. Taimur now ordered that Muslims at Loni be separated from Hindus and the Hindus be killed. All the houses except those of the elite Muslims, were pulled down and or burnt.

After this, at Loni, on 18th December 1398, Taimur crossed the river Yamuna and planned his attack on Delhi. A reconnaissance  of the fort of Jahan Numa across the river gave Taimur ideas on how to tackle the Tughlaq forces.

It was only when he moved towards Delhi that the Sultan of Delhi decided to do something to stop Taimur. At that time Delhi was ruled by the Tughlaq Sultan, Nasiruddin Mahmud Shah.

By now, Taimur's soldiers had collected some 100,000 Hindus as prisoners. Just before the attack on Delhi, he ordered that all of them be put to death by the soldier who currently owned them. Anyone who hesitated in murdering the innocent prisoners was to be killed by others. This massacre took place on 13h December 1398. Taimur notes with some satisfaction the success of his orders to massacre: "Maulana Nasir-ad-din Omar, a counsellor and man of learning, who had never killed a sparrow in all his life, now, in execution of my order, killed fifteen idolatrous Hindus, who were his captives."

 Nasiruddin Mahmud's army, consisting of war elephants, was forced to flee by Taimur stampeding into it a herd of camels whose howdahs had been filled with wood and hay and set of fire. 

The Tughlaq Sultan Nasiruddin Mahmud Shah fled leaving Delhi at the mercy of Taimur. Delhi at that time was one of the richest cities in the world. When the people of Delhi protested against the exactions of Taimur, he had most of them killed and a hillock made of their heads. This happened on 14th December 1398.

Early the next day, 15th December 1398, Taimur and his forces crossed the Yamuna. After a short engagement the Tughlaq forces retreated and took refuge in the fort, Jahanpanah. Taimur set up his camp near Hauz Khas.

On December 17th, the Sultan Nasiruddin Mahmud and his generals secretly fled from the fort and passing through the gates at Hauz Rani, they escaped into the jungles. A large number of escapees, including Princes of Delhi, were caught after a chase and brought back.

By Decembr 17th, 1398, Wednesday, Taimur recounts, he had taken full control of Delhi and the bigwigs of the city had paid obeisance to him, accepted his sovereignty. 

On 26th of December, some of the Timur's soldiers misbehaved with the women of Delhi and looted some of shops. When the people objected, Timur ordered all the inhabitants of Delhi to be massacred. The killings took place in the area between Jahanpanah and the Siri Fort. The killings lasted three days. Then on the fourth day, Sunday, the remaining Hindu inhabitants were killed. 

With everyone dead, rotting carcasses poisoned the air and water of the city. It would take another 100 years for Delhi to become a normal town once again.

Taimur had stayed in the city of Delhi for a total of 15 days.

After having massacred almost a million people in India merely because they were 'hindus', before the end of the year Taimur had wandered off to attack the cities of the Ottoman empire.

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...