Monday, December 12, 2016

புயல் கூண்டுகளும்.குறியீடுகள்

எச்சரிக்கை புயல் கூண்டுகளும்... அதன் குறியீடுகளின் விவரங்களும்..

பொது மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் அதன் குறியீடுகள் குறித்த விளக்கங்களை பற்றிய தகவல்களை காண்போம்.

எண் 1 - வெகு தூரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது.

எண் 2 - தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கிறது, துறைமுகத்தில் இருந்து வெளியேறும் கலன்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

எண் 3 - மோசமான வானிலை, காற்றின் வேகம் அதிகம்.

எண் 4 - புயல் பின்னர் துறைமுகப் பகுதியை தாக்கலாம்.

எண் 5 - புயல் துறைமுகத்தின் வலதுபக்கக் கரையைக் கடக்கும்.

எண் 6 - புயல் துறைமுகத்தின் இடது பக்கமாகக் கரையைக் கடக்கும்.

எண் 7 - புயல் துறைமுகம் இருக்கும் பகுதி வழியாக அல்லது மிக அருகே கரையைக் கடக்கும்.

எண் 8 - வலிமை நிறைந்த புயலானது துறைமுகத்தின் வலதுபக்கக் கரையைக் கடக்கும்.

எண் 9 - வலிமை நிறைந்த புயலானது துறைமுகத்தின் இடது பக்கக் கரையைக் கடக்கும்.

எண் 10 - மிகக் கடுமையான புயல் துறைமுகம் இருக்கும் பகுதி வழியாகவோ மிக அருகிலோ கரையைக் கடக்கும்.

எண் 11 -புயல் எச்சரிக்கை மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு மற்றும் நாகை, காரைக்கால், புதுச்சேரி, கடலூரில் 8 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


"அலைகடல் கொந் தளிக்கையிலே
          அகக்கடல்தான் களிப்பதுமேன்?
     நிலமகளும் துடிக்கையிலே
          நெஞ்சகந்தான் துள்ளுவதேன்?
     இடி இடித்து எண்திசையும்
          வெடிபடும் அவ்வேளையிலே
     நடனக் கலைவல்லவர்போல்
          நாட்டியந்தான் ஆடுவதேன்?"

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...