Monday, July 31, 2023

You shall begin it well and serenely, and with too high a spirit to be cumbered with your old nonsense-KSR Post…

‘’*Finish every day, and be done with it. You have done what you could — some blunders and absurdities no doubt crept in, forget them as fast as you can, tomorrow is a new day. You shall begin it well and serenely, and with too high a spirit to be cumbered with your old nonsense*’’.

#KSR_Posts 
31-7-2023.
Tomorrow August month


#எனது சுவடு பகுதி-33 KSR-#கேஎஸ்ஆர்போஸ்ட்

#எனது சுவடு பகுதி-33  
கே.எஸ். இராதாகிருஷ்ணன் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.  #ksr, #ksrvoice, #k_s_radhakrishnan, #yenadhusuvadu, #kamarajar #kamaraj #radhakrishnan #congress_o
#kamarajar #kamaraj #radhakrishnan 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-7-2023.

youtu.be/lpL1rAyBJ_A

Sunday, July 30, 2023

#தமிழகவிடுதலை பெண்மனி நேத்தாஜியின் ஐஎன்ஏ படைவீரர்காமாட்சி அம்மாள் டெல்லியில் மறைவு. நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரத்தின் சாட்சி…. Freedom Fighter Kamatchi Ammal (Azad Hind Fauz - Rani Jhansi Regiment)

#தமிழகவிடுதலை பெண்மனி நேத்தாஜியின் ஐஎன்ஏ படைவீரர்காமாட்சி அம்மாள்
டெல்லியில் மறைவு. நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரத்தின் சாட்சி….
Freedom Fighter Kamatchi Ammal (Azad Hind Fauz - Rani Jhansi Regiment) is no more. She breathed her last today at 5 am. She was undergoing treatment of her lungs and spine; under ventilator the last six days.

Meenakshi Ammal Maaji joined Azad Hind Fauz at the age of 18. Her father worked at a jewelry shop in Rangoon. She used to bring meals for her father everyday. Inspired by Netaji's speech 'Give me blood, I will give you freedom', she joined Bose for the freedom of India. Her ancestral base is Tamil Nadu.

When I met her few months ago, she could hardly move on her own. But as soon as she heard me utter Netaji Subhas Bose's name, she raised her hand, saluting, in his honor.

Dr Raj Kapoor had provided her a room in Delhi and she was under the care of family of Azad Hind Fauz veteran Sri Rangaswamy Madhvan Pillai.

Her cremation will be done with honor by the Delhi Police tomorrow (31-7-2023)at Green Park.

#INA_FreedomFighter_Kamatchi_Ammal 

#Netaji_Subhas_Bose_INA


#*கோ.வெங்கடசலபதி* #*டிகல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமம்*

#*கோ.வெங்கடசலபதி*
#*டிகல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமம்* 


—————————————
நாடு விடுதலை பெற்று, 1947க்கு பின் கிராமங்களில் பள்ளிகள் நிறுவி கிராமம் தோறும் கல்வி கொண்டு வந்தவர் கோ. வெங்கடசலபதி. இவரின முயற்சியில் விளைந்த அனைத்து கிராமங்களில் 1950 களில் கட்டப்பட்ட ஓட்டு பள்ளிகூடங்கள் இன்று அவை நம் பார்வையில் படுகிறது. அன்றைய முதலமைச்சர் ஓமந்தூரர் இந்த அரியபணியைஇவரிடம்ஒப்படைத்தார்.
காந்தியின் செயலாளர் குமரப்பாவின் உற்ற தோழர்.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தை நிறுவியவர். எனக்கு உறவினர் கூட.இன்று மதுரை மாவட்டதின் ஏன் தமிழகத்தின் அடையாளமாக வளர்ந்த ஆலய விருட்சம் போல் இன்றும் டி.கல்லுப்பட்டியில் உள்ளது.சர்வோயம், விவசாயம் மற்றும் கிராம ஆதாரப்பணிகள் என ஆக்க பூர்வமாக இவர் முன் எடுத்தார்.

காந்தி, நேரு, ஜெயபிரகாஷ் நாராயணன்,வினேபா, கிருபளாணி, ராஜாஜி,குமாரசாமி ராஜா,காமராஜர் என முக்கிய தலைவர்களின் அன்பை பெற்றவர்.
திமுக தலைவர் அண்ணா இவரின் பணி சிறக்க நேரில் வந்து 1950 களில் வாழ்த்தினார்.

திரு வெங்கடாசலபதி அவர்களை 1960 களில் தொடங்கப்பட்ட உள்ளாட்சி துறைக்கு ',காதி அமைப்பிற்கும்  commissioner ' ஆக நியமிக்க பட,அது I AS அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது,குறிப்பாக TN சேஷன்.திரு வெங்கடாசலபதி காதி,உள் ஆட்சி அமைப்புக்களில் அன்று ஆயிரக்கணக்கான வர்களுக்கு அரசு பணிக்கு வாய்ப்பு அளித்து நியமித்தார்.ஆகயால் முந்தைய தலைமுறை அரசு ஊழியர்கள் பலர் இவரால் வாழ்வு பெற்றனர்.காந்திய கொள்கைப்படி ஒரு கைம் பெண்ணை மணந்தார்.

இப்படியான மா மனிதரை இன்று பலருக்கும்
தெரியவில்லை என்பத வேதனையான சூழல்…

#கோ_வெங்கடசலபதி
#கல்லுப்பட்டி_காந்திநிகேதன்_ஆசிரமம்
#G_Venkatachalapathi

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost
30-7-2023


கவிஞர் நிர்மலா சுரேஷ் #நடிகை ஶ்ரீவித்யா

#கவிஞர்நிர்மலாசுரேஷ் 
#நடிகை ஶ்ரீவித்யா 






—————————————————————
இன்றைய தினமணியில், தமிழ்மணி கலாரசிகன் பகுதியில் ஆசிரியர்,  நண்பர் கே. வைத்தியநாதன் எனது நீண்டகால நண்பர்  கவிஞர் நிர்மலா சுரேஷின் கவிதை
பற்றி சிலேகித்து இருந்தார்.

நிமிர்ந்த தோற்றமும் - 
நேர்கொண்ட பார்வையும் - 
திமிர்ந்த கல்வித்தெரிவும் 
கொண்ட நிர்மலா சென்னைக்கு (சூன் 18, 1950 - மே 27, 2021)  வந்ததும் கம்பர் கழக விழாவில் தான் முதலில் பேசினார் .பட்டிமண்டபக் கொடி பட்டொளி வீசிப் பறந்த அந்த ஆண்டுகளில் அவர் பங்கு கொண்டார் .ஹைகூ கவிதையை முதலில் ஆராய்ந்த புலமையாளர் .மொழியும் வாழ்வும் அவர் எழுதிய அரிய நூலாகும் . திருச்சி ஹோலி கிராசு கல்லூரியில் பயின்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நிர்மலா சுரேஷை் 1979 முதல் சென்னை கேந்திர தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் 

பேரறிஞர் அண்ணாவின் திருச்சி நண்பராகப் பேராசிரியர் இருதயராஜ் திகழ்ந்தார் ,அவர் திருமகளாரான   நிர்மலா சுரேஷுக்கு இயல்பான இனப்பற்றும் எழுச்சியும் மிளிர்ந்ததால் சென்னைக்கு வந்து  அரசியலில் தலைப்பட்டார் . ஈழப்பிரச்சனையில் என்னோடு பயணித்தவர்.
பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்தேன். திருவான்மீயூரில் 17 வது கிழக்கு தெரு என் வீட்டு அருகே சவூத் அவின்யூ அடுக்கு மாடி இல்லத்தில் இருந்தார். பின்இசிஆருக்கு சென்றார்.

மயிலை தொகுதியில் 1991 சட்டமன்றத்தேர்தலிலும் திமுக சார்பில் நின்றார் . வென்றாரில்லை .வாழ்வில் அவர் தொட்ட துறைகளில்   எழுவதும் விழுவதுமாக இருந்தார் !

பிறகு கனடாவில் குடியுரிமை பெற்றுச் சென்றார் .கனடாவில்  நிர்மலா சுரேஷ் மறைந்தார். மருத்துவ உதவிகளை ஜெயலலிதா செய்தார்.

எனக்கு பிரச்சனைகளை வரும்போது ஜெபம்
செய்து என்னை ஆதரிப்பார். இவையாவும் சுகமான சுமைகள் என தைரியம்  வார்த்தைகளில்  அன்பு காட்டுவார். எனது இரு நட்பு தோழிகள் நடிகை ஶ்ரீவித்யா, கவிஞர் நிர்மலா சுரேஷ் இன்னு வாழ்ந்து இருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் சென்று விட்டார்கள் என்ற துயரம் இப்பவும் நெஞ்சில்
உள்ளது.

#நடிகைஶ்ரீவித்யா
 #கவிஞர்_நிர்மலாசுரேஷ் 
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-7-2023

#தமிழ்நாட்டில் நடைபயணங்கள் )(பாத யாத்திரை) சென்று அரசியல் களம் கண்டவர்கள்

#தமிழ்நாட்டில் நடைபயணங்கள் )(பாத யாத்திரை) சென்று அரசியல் களம் கண்டவர்கள்


—————————————
•வினோபா பாவே
(நடை பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக 1950 களில் பிரச்சாரம் செய்தார்.)
•குமரி அனந்தன்  
(மூன்று முறை; முதலில் 1965 குமரி முதல் சென்னை வரை, இளைஞர் காங்கிரஸ் நடை பயணம்)
•முன்னாள் பிரதமர் சந்திரசேகர்.
(கன்னியாகுமரி- டில்லி வரை)
• கலைஞர்
(மதுரை -திருச்செந்தூர் வரை. திருச்செந்தூர் முருகனின் வேல் காணாமல் போன பிரச்சனை)
• பழ. நெடுமாறன்.
(தியாகப்பயணம். மதுரை- இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து ஈழ பயண திட்டம். ஈழ தமிழர் பிரச்சனை,1983.  இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டார், தர்மபுரி மாவட்டத்தில் நக்சல் இயக்க இளைஞர்களை சரி படுத்த-1981.அப்போது அதிமுக முனுசாமி அதற்கு ஆதரவாக இருந்தார் ) •குமரியிலிருந்து அத்வானி யாத்திரை
•முரளி மனோகர் ஜோஷி
(கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நீண்ட பயணத்தில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, 1991 டிசம்பர் முதல் 1992 ஜனவரி 26 வரை ஏக்தா யாத்திரை) 
• வைகோ
(முதலில் ஜெயல்லிதா ஊழல் குறித்து குமரி முதல் சென்னை வரை
2004 மற்றும்  நான்கு முறை)
• ராகுல் காந்தி.
(குமரி - காஷ்மீர் வரை யாத்திரை -2022)

(நெடுமாறன்,வைகோ நடை பயணங்களில் சில சமயங்களில் பங்கு கொண்டேன்)

#தமிழ்நாட்டில்_நடைபயணங்கள்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-7-2023.

Saturday, July 29, 2023

அரசியல்- குலத்தொழிலா…?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன், அரசியலாளர்.
#ksr ,#ksrvoice,#radhakrishnan,#கேஎஸ்ஆர்,#அரசியல்சிந்தனை,
#இராதாகிருஷ்ணன், #udhayanidhi #stalin #dayalu #karunanidhi #cmstalin,#government,#tamilnadu,#mkstalin #dmk,#mkstalininterview #udhayanidhistalin,#stalin,#mkstalinnews 
#kalaignar,#farooqabdullah, #thenaraivijayan,#RahulGandhi,#rajivgandhi 
https://youtu.be/3KTJ07Wfu1A

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
29-7-2023.

அரசியல் ஆபத்துக்கள், பிழைகள்

அரசியல்ஆபத்துக்கள், பிழைகள்;

•புகுத்தப்படும் வாரிசு அரசியல்.
Dynasty Politics by family’s systematic syntactic plan.
•காசுக்கு விற்கப்படும் ஓட்டுகள்-Vote for sale
 • கொடுமையான குற்றவாளிகள் அமைச்சர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள்.Criminals in politics.

அவரவர் பேச்சும் கருத்தும்
அவரவர் ( சொந்த)அரசியல் இருப்பு வசதிக்கு…. இதில் பொது வாழ்வு ஒன்றும் இல்லை…

இங்கே #தகுதியேதடை

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
29-7-2023. ஆபத்துக்கள், பிழைகள்;
•புகுத்தப்படும் வாரிசு அரசியல்.
Dynasty Politics by family’s systematic syntactic plan.
•காசுக்கு விற்கப்படும் ஓட்டுகள்-Vote for sale
 • கொடுமையான குற்றவாளிகள் அமைச்சர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள்.Criminals in politics.

அவரவர் பேச்சும் கருத்தும்
அவரவர் ( சொந்த)அரசியல் இருப்பு வசதிக்கு…. இதில் பொது வாழ்வு ஒன்றும் இல்லை…

இங்கே #தகுதியேதடை

#ஜெயலலிதாவின் குடும்ப புகைப்படம்

#ஜெயலலிதாவின் குடும்ப புகைப்படம்

இடமிருந்து வலம்.
கீழே அமர்ந்திருப்போர்.
ஜெயலலிதா
ஜெயலலிதாவின் சித்தி வித்யாவதி
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார்.
நடுவில் அமர்ந்திருப்போர்
தாய் வழி பாட்டி கமலாம்மா
நடுவில் ஜெயலலிதாவின் சித்தி பத்மாசினி.
பாட்டனார்.ரங்கசாமி ஐயங்கார்.
மேலே
தாய் மாமாவின் மனைவி.
தாய்மாமா ஸ்ரீனிவாசன்.
ஜெயலலிதாவின் அம்மா சந்தியா.


India 1903

*Map of India, 1903.  Produced by Dodd, Mead & Company. Dodd, Mead and Company was founded by Moses Woodruff Dodd in 1839 in New York City. It continued to be in operation till 1990. Notice the clearly marked northern boundaries*. 
*In 1948, when Pandit Jawaharlal Nehru was the primeminister of India, 14,139 km² of it was forcibly occupied by Pakistan. Later Pakistan ceded 1,942 km² of this area to China in 1963. During Pandit Jawaharlal Nehru's prime ministership yet another 38000 km² area was forcibly occupied by China in 1962*. 

*After Jawaharlal Nehru's death, China tried to occupy more area in 1967 but was pushed back. It made another effort in 2020 but was stopped. Pakistan too tried to occupy some more area in 1999 but was militarily pushed back*.

*The map also shows Sikkim as part of India and clearly marks out Nepal and Bhutan as independent states*. 

*This map is currently in the collection of the Library of Congress*

#ksrpost
29-7-2023.


இன்றைய அரசியல் களத்தில்….

அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடி கிளியே
ஊமை ஜனங்களடி கிளியே
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி…
****

இவனுங்களுக்கு அறிதல் புரிதல் அற்ற நிலையில் கருத்தா பேசவும் தெரியாது, யாராவது கருத்தா பேசுனா அவுங்கள மட்டும்தான் தாழ்த்தி பேச தெரியும். அவ்ளோதான் இவங்களுக்கு தெரிஞ்ச உலகம், நாடு, அரசியல்…

Friday, July 28, 2023

*செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக அதிமுக தொடர்ந்த கோவாரண்டோ வழக்கு!* *ஆளுநர் தரப்பு மற்றும் திமுகஅரசு தரப்பு என ஆகிய இருதரப்புக்கும் அட்வகேட்ஜெனரல் ஒருவரே வாதிடுவது வேடிக்கை* #*Highcourt of judicature,Madras*. #*quowarranto*



—————————————
சிறை கைதியாக உள்ள செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் அமைச்சராக பதவி வகிக்கிறார் என நீதிமன்றம் விளக்கம் கேட்டு அவர் பதவி வகிக்க தடைவிதிக்க வேண்டும்.இந்த வழக்கு இன்று  தலைமை நீதிபதி அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாம் என்பதற்கான தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார்.

சிறையிலிருப்பவர் அமைச்சராக நீடிக்க முடியுமா? என்பது குறித்த முதல் வழக்கு இது. அவர் அமைச்சராக சம்பளம் மட்டுமல்ல பல சலுகைகளையும்  அலவன்ஸ்களையும் பெறுகிறார். துறையே இல்லாத அமைச்சருக்கு எதற்காக பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக செலவிட வேண்டும்? அமைச்சரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என  நீதிமன்றம் தலையிடலாம் என்பதற்கு ஏராளமான முன்உதாரண தீர்ப்புகள் உள்ளது.

ஆளுநர் தரப்பு மற்றும் திமுக அரசு தரப்பு என ஆகிய இருதரப்புக்கும்  அட்வகேட்ஜெனரல் ஒருவரே வாதிடுவது வேடிக்கை. சட்டமுரண்..

முல்லை பெரியாறு, செண்பகவல்லி அணைக்கட்டு மற்றும் நதி நீர் வழக்கில்;
எனது வழக்கில் தமிழக அரசு- கேரள அரசுக்கு இடையே சிக்கல். 1984 இரு அரசுக்கு தமிழக அட்வகேட்ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி ஆஜார் ஆன போது சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி நயினார்
சுந்தரம் இதை ஏற்றுகொள்ள முடியாது என
உத்தரவுவிட்டார். பின் நிலைமை மறியது.
@mkstalin @CMOTamilnadu 

#செந்தில்பாலாஜி_கோவாரண்டோ
#Highcourt of judicature Madras.
#*quowarranto*

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-7-2023

இன்றைய திமுக DMK

என்ன சொல்ல…
உங்கள் பரிவாரத்தில் அதிமுக, தேதிமுக நேற்று வரை திட்டியவர்களுக்கு இடம்.
#இன்றைய_உங்கள்_திமுகவில்_தகுதியேதடை
நல்லா சிறப்பா இருங்க சார்…


#*அம்பிகா கஃபே*




" உங்க அம்மா பெயர் அம்பிகாவா?" இந்தக் கேள்வியை பலர், பலமுறை என்னை கேட்டிருக்கிறார்கள். அம்பிகா என்ற பெயருக்கும், எங்கள் குடும்ப அங்கத்தினர்கள் யாவருக்கும் தொடர்பே இல்லை.

" அம்பிகா கஃபே" பெயர்க்காரணம் பற்றி அப்பா சொன்னது. வயிற்றுப் பிழைப்புக்காக சீர்காழியிலிருந்து இடம் பெயர்ந்து, சென்னை மா நகரத்தில் குடியேறி, ஒரு வழியாக ஹோட்டல் வைக்க ஏற்பாடுகள் செய்தவருக்கு, அதற்கு ஒரு போர்டு மாட்ட கையில் காசில்லை. அதற்கு முன்பு அதே இடத்தில் இருந்த நொடித்துப்போன ஹோட்டலின் பெயர்ப்பலகையே, புது ஹோட்டலுக்கும் மாட்டப்பட்டது.

அப்பாவின் வாழ்வையே திசை திருப்பி எங்கெங்கோ கொண்டு சென்ற "அம்பிகா கேப்" உதயம்.
 Cafe என்ற ஆங்கில வார்த்தையை கஃபே என்று உச்சரிக்க வேண்டும் என்று எனக்கும் ரொம்ப நாள் கழித்து தான் தெரியும்.

ராமர் கோவில் தேரடி எதிரில், மாம்பலம் வாசிகள் எல்லோரும் அறியும் வண்ணம் கம்பீரமாக காட்சி அளித்தது..அந்த சிறிய ஹோட்டல். நடுவில் ஒரு கொல்லாப்ஸிபிள் கேட், இரு புறமும் சிறிய ஜன்னல்கள். இதுதான் கடையின் முகப்பு. இடது பக்க ஜன்னல் அருகில், ஒரு சிறிய மேடை மேலே போடப்பட்ட ஒரு கல்லா டேபிள், மேற்புறம் சலவைக்கல் மூடிய 6 டேபிள்கள், 24 நாற்காலிகள், ஒரு ஸ்வீட் ஸ்டால், கொஞ்சம் பித்தளை காபி டபரா செட்டுகள், எவர்சில்வர் தட்டுகள், சட்னி சாம்பார் கிண்ணங்கள், இட்லி பானை, வாணலி, ஜார்ணி போன்ற பழைய கடையிலிருந்து வாங்கிய சமையல் பாத்திரங்கள்.... இவையே எங்கள் கடையின், ஆரம்ப கால அசையும் சொத்து.

தினமும் காலை 5 மணிக்கு, ஹோட்டல் திறக்கப்பட்டு, காபி தயாராகி விடும். அந்த 5 மணி காபிக்கென்றே சில ரெகுலர் கஸ்டமர்கள் உண்டு. என்றாவது ஒரு நாள் சற்று தாமதித்தாலும், பொறுமையுடன் காத்திருந்து காபி குடித்துவிட்டே போவார்கள்.

ஒரு குண்டு ஐயர் மாமா தான் சரக்கு மாஸ்டர். கடைசி வரையில் அவரை மனம் கோணாமல் வைத்திருந்தார் அப்பா. காலை 6 மணிக்கே, ஆவி பறக்கும் இட்லி, வடை, பொங்கல், உப்புமா நான்கும் வெளியே ஸ்டாலுக்கு வந்துவிடும். 20 நாற்காலிகளும் நிரம்பி, சிலர் காத்திருக்க வேண்டி வரும்.

நான் படித்த சாரதா ஸ்கூல் வாத்தியார்களில், அநேகமாக அனைவருமே மாதாந்திர கஸ்டமர்கள். ஒரு 80 பக்க லெட்ஜர் நோட்டு, அகலம் குறைந்தது, நீளம் உள்ளது எப்பொழுதும், கேஷ் டேபிளில் இருக்கும். தினமும் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, பில் தொகையை எழுதி விட்டு போவார்கள். பிரதி மாதம் 5ம் தேதிக்குள் பணம் கொடுத்துவிட வேண்டும்.

மாலை நேரத்தில், கோதுமை ஹல்வா, வெங்காய பகோடா, மெது பகோடா, மைசூர் போண்டா. இவைகளுக்கென்றே பிரத்யேக வாடிக்கையாளர்கள் உண்டு. ராவுஜீ என்ற பரிசாரகர்....கடைக்கு வரும் கஸ்டமர்களில் யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை அறிந்து வைத்திருப்பவர். அவர்கள் வந்து, நாற்காலியில் உட்கார்ந்த அடுத்த நிமிடம், டேபிளில், சுடச்சுட ஐட்டங்கள் வந்து விடும்.

இதை விட, வியாபார அபிவிருத்திக்கு வேறென்ன வேண்டும். 
Ambika Cafe கொடி கட்டிப் பறந்தது. மாம்பலத்தில், எங்கள் கடையில் சாப்பிடாத ஜனங்களே இல்லை என்று சொல்லலாம்.
வீட்டில் செல்வம் கொழித்தது. ஒரு சிறிய மர பீரோவில், கீழ் டிராயரில், முழுவதும் நாணயங்கள் நிரம்பி இருக்கும். அதை கையால் அளைந்து விளையாடிய ஞாபகம் இருக்கிறது.

எங்கள் ஹோட்டலுக்கு பால் சப்ளை செய்தவர் யார் தெரியுமா..
நடிக வேள் எம்.ஆர்.ராதா. அவரின் நந்தம்பாக்கம் தோட்டத்திலிருந்து தினமும் ஒருவர் இரண்டு மூன்று பாத்திரங்கள்….அதற்கு ஜோடு தவலை என்ற பெயர்….அதில் பால் கொண்டு வருவார். ஒரு நாள் திடீரென ஒரு கார் வந்து நின்றது. அந்த காரின் டிக்கி முழுவதும் வைக்கோல் அடைக்கப்பட்டு நிரம்பி வழிந்தது. காரிலிருந்து இறங்கியவர் வேறு யாருமல்ல...எம் ஆர் ராதாவே தான்.
"என்ன அய்யிரே….பசங்க பால் ஒழுங்கா ஊத்தரானுங்களா….தண்ணி கிண்ணி கலந்துடப்போறாங்க...சொல்லி வச்சிருக்கேன்….டேய் நல்ல பாலா ஊத்துங்கடா...அய்யர் பேரை கெடுத்துடாதீங்கடான்னு...எப்டி யாவாரமெல்லாம் நல்லா நடக்குதா ன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்.." என்று விசாரித்திருக்கிறார்.
அதுவரை யாரோ பால் சப்ளை செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த அப்பாவுக்கு அன்று தான் விஷயம் புரிந்ததாம். அப்பா சொல்லி கேட்டிருக்கிறேன்.

அய்யர் என்றதும் நினைவுக்கு வருகிறது. நாங்கள் கன்னட மாத்வ வகுப்பை சேர்ந்தவர்கள் ஆயினும், எங்கள் கடை மேற்கு மாம்பலத்தில் ராயர் ஹோட்டல் என்ற பெயர் இல்லாமல் அய்யர் ஹோட்டல் என்றே அறியப்பட்டது. அதற்கு காரணம் என் அப்பாவின் தோற்றம். ஆஜானு பாக உடல் கட்டு கொண்டிருந்த அவர் வெள்ளை வேட்டியும், வெள்ளை ஜிப்பாவும் அணிந்து, நெற்றி நிறைய திருநீறும், குங்குமமும் இட்டு கல்லாப்பெட்டியின் முன்பு அமர்ந்து கடையை நிர்வகித்தது இன்று வரை பலரால் பேசப்படுகிறது. இந்த தோற்றமே கடைக்கு அய்யர் கடை என்று பெயரும் வாங்கி கொடுத்தது.

ஜாதி மத பேதமின்றி நட்பை வளர்த்தவர் என் தந்தை. சிட்டிபாபு ரெட்டி, மணவாள பிள்ளை, பிஸ்கட் கடை பாய் (பாய்), சந்தனப் பொட்டு சுப்ரமணிய நாயக்கர், ராமர் கோவில் பட்டாச்சாரியார், காசி விஸ்வநாதர் கோவில் மணி குருக்கள், பழனி ஆயில் மில் முதலியார் எல்லோருமே அப்பாவின் நண்பர்கள். அவர் வாழ்வின் மூலம் அதே ரத்தம் தான் என் உடம்பிலும் ஓடுகிறது.

மணவாள பிள்ளை ரொட்டிக்கடை அருகில்,கற்பக விலாஸ் என்று ஒரு ஹோட்டல் இருந்தது. அதில் சாப்பாடு மாத்திரம் தான். வைத்தியநாத ஐயர் அதன் உரிமையாளர். அவருக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, அவரால் அந்த ஹோட்டலை நடத்த முடிய வில்லை. அப்பா அதை வாங்கினார். அந்த சமயம் தான் என் தங்கை பத்மா பிறந்திருந்தாள். எனவே புதிய கடைக்கு பெயர் " பத்ம விலாஸ்". சாப்பாட்டின் விலை 50 பைசா. அளவற்ற முழு சாப்பாடு. அதை நடத்தியது அப்பாவால், தன் முதல் மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, என் உடன் பிறவா வேணு அண்ணா.

எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருந்த சமயத்தில், அப்பா, வேறு கடை வைத்தார்...மாம்பலம் ஸ்டேஷனுக்கு மிக அருகில். பெயர் "ஹோட்டல் அம்பிகா".
இதுவும் நன்றாகவே நடந்தது.

ஆனால் ஏதோ காரணங்களால் எல்லாம் நொடித்து போனது. சீர்காழியிலிருந்து பிழைப்பை தேடி சென்னைக்கு வந்த நிலைக்கே தள்ளப்பட்டார் என் அப்பா.
இரும்பு மனிதர்...எல்லாவற்றையும் பொறுத்தார்.

எனக்கு தெரிந்து அவர் செய்த தவறு...கடவுள் மேல் அசையா நம்பிக்கை வைத்தது போல், மனிதர்கள் மேலும் நம்பிக்கை வைத்தார்.

மனிதர்கள் காக்க வில்லை. அவர் கடவுள் மேல் வைத்த நம்பிக்கை எங்கள் குடும்பத்தை காத்தது. அளவற்ற செல்வத்துக்கு எங்கள் குடும்பத்தினர் யாரும் அடிமை இல்லை.

தொடர் கதையாக இருந்தால் 300 பக்கங்களுக்கு குறைவில்லாமல் எழுதலாம். பாலசந்தர் படமாக எடுத்திருந்தால் வெள்ளி விழா நிச்சயம். மெகா சீரியலாக எடுத்தால் ரெண்டு வருஷம் ஓடும்.

சமீபத்தில் ஒரு நாள் மேற்கு மாம்பலத்தில் நடந்து கொண்டிருந்தேன். என் வயதை ஒத்த யாரோ ஒருவர், "யாரு ஹோட்டல் அய்யர் பையனா நீங்க?" என்றார். ஆமாம் என்றேன். என் கைகளை பிடித்துக்கொண்டார். அவர் கண்களில் நீர்த்துளிகள்.
 
இது போதும் எனக்கு...உயிர் உள்ள வரை….

Vijayendran Gopalakrishnan in #MADHYAMAR

முயற்சிக்கு முன்னால் கேலிகள், கிண்டல்கள், துரோகங்கள், சோகங்கள், காயங்கள், சோதனைகள், தோல்விகள் யாவும் தோற்று ஒரு நாள் மாய்ந்து மடியும்..!

முயற்சிக்கு முன்னால்
கேலிகள், கிண்டல்கள்,
துரோகங்கள், சோகங்கள்,
காயங்கள், சோதனைகள்,
தோல்விகள் யாவும்
தோற்று ஒரு நாள்
மாய்ந்து மடியும்..! 



Thursday, July 27, 2023

இலங்கை மலையக தேயிலை பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற்காக இருநூறு ஆண்டுகளுக்கு, 1823 முன்பு சென்ற இந்திய தமிழ் வம்சாவழியினர்.

இலங்கை மலையக தேயிலை பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற்காக இருநூறு ஆண்டுகளுக்கு, 1823 முன்பு அழைத்துவரப்பட்ட மக்களின் தடங்களை நினைவுகூருவதற்கும் வேர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் “வேர்களை மீட்டு உரிமை வென்றிட…” என்ற தொனிப்பொருளில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை ஜூலை 28 இலிருந்து ஆகஸ்ட் 12 வரை நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#Malaiyaham200 #MaanbumiguMalaiyaham #MMM #MalaiyahaTamil


Wednesday, July 26, 2023

Being humble doesn't mean you forget your worth...

Being humble doesn't mean you forget your worth...



#அன்றைய திமுகவில் இப்படி பலர்… உடுமலை நாராயணன்இன்று….?*

#*அன்றைய திமுகவில் இப்படி பலர்*…
#*உடுமலை நாராயணன்*
*இன்று….?*

—————————————
உடுமலை ப.நாராயணன் உடுமலைப்பேட்டை சேர்ந்தவர், உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி தொகுதியில் இல்லாத போதும்,  இருந்த போதும்   பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்.திமுக களப்பணியாளர். அன்றைய ஒன்றுபட்ட ஈரோடு, திருப்பூர் அடங்கிய கோவை மாவட்ட திமுக மாவட்டசெயலாளர்.
எஸ்.ஜே.சாதிக்பாடசா இவரின் வழியில் திமுகவில் செயல் பட்டவர்.

இவருக்காக 1971 ல்  புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் ஒரு ஜீப்பை தேர்தல் பிரச்சாரத்திற்காக  வழங்கினார்.  அப்பொழுது  இந்தியாவில் யாரும் வெற்றி பெறாத மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடைசி வரை உடுமலைபேட்டையில்  சீனிவாச நாயக்கர் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். மிதிவண்டியில் தான் உள்ளுரில் பயணம் செய்துள்ளார். யாராவது காரில் வந்து அழைத்துச்சென்றால்தான் உண்டு. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகும் சொந்தமாக வாகனம் வைத்துக்கொள்ளவும் இல்லை. வாங்கவும் இல்லை.

அண்ணா,சம்பத் ,நாவலர்,சி.பி.சிற்றரசு, கலைஞர்,எம்ஜிஆர் போன்ற பெரும் ஆளுமைகளின் தொடர்பில் இருந்தவர். 

இத்தனைக்கும் அவர் வட புலத்து
ராஜபுத்திர இனத்தைச் சார்ந்தவர்.

அவரின் பெயரில் உடுமலை நகரில் நாராயணன் காலனி இருந்தது. பெயர்ப்பலகை கூட இல்லை. ஆனால் பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில்  உடுமலை நாராயணன் பெயரில் ஒரு வீதிக்குப் பெயர் வைத்துள்ளனர். ஆனால் இன்றைய திமுகவில்…..?!

இன்று அவரின் நினைவு நாள் .
26-7-1971.

#இன்று……
கோவை சிங்காநல்லூர் முன்னாள் MLA மனம்விட்டு பேசியதாக பரவும் ஆடியோ, அதில் முதல்வர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சில ! 

✅முதல்வராக எந்த முடிவும் எடுப்பதில்லை, 10 அதிகார மையங்கள் உள்ளது 
✅அண்ணாநகர் கார்த்திக் டென்டர்களை கவனிக்கிறார், அவர் வீட்டில் தினசரி 200 பேர் காத்திருக்கிறார்கள்
✅ கோவைக்கு ஆண் மேயர் போட்டிருக்க வேண்டும், ஒருவேளை நான் மேயராகி விடுவேன என செந்தில் பாலாஜியின் பேச்சை கேட்டு பெண் மேயர் போட்டு விட்டார்கள். கவுன்சிலரை வைத்து அரசியல் செய்ய முடியாது, எம்எல்ஏ, எம்பி இல்லாத சூழ்நிலையில் வலுவான ஆண் மேயர் தேவை
✅அன்பில் மகேஷ் இன்னொரு அதிகார மையம், திருச்சியில் 2-3 வீடுகள் இருக்கிறது, தொண்டர்கள் யாரும் பார்க்க முடியாது
✅நேரு எதையும் புரிந்து கொள்ள மாட்டார் நுனிப்புல் மேய்வார்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
26-7-2023.


Tuesday, July 25, 2023

சுகமான சுமைகள் நாம் கற்றக வேண்டிய பாடங்கள். துன்பத்திற்குத் துன்பம் கொடுக்க வேண்டும்.

#துன்பத்திற்குத்துன்பம்கொடுக்க வேண்டும். 

வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும். 

துவக்கத்தில் வீட்டை விட்டு வந்து கல்லூரி விடுதியில் தங்கி படித்த காலத்தில் ஊருக்கு போக வேண்டும் என்பது எப்போதும் ஒரு தாகம் போல் இருந்தது.முன்பு வீட்டிற்கு போன உடன் அம்மா அப்பா மட்டும் அல்ல... வீட்டின் சுவர்களும் தோட்டமும் துரவுகள், மோட்டர் பம்பு செட் கிணர்கள் , விவசாய பயிர்கள் ஏதோ எனக்காகவே காத்துக் கொண்டு இருந்தது போல் தோன்றும்.
ஆனால் மனம் ஏற்காமல் அடம் பிடிக்கிறது.
பிறந்து வளர்ந்த ஊரின் மீது இருப்பது வெறும் விருப்பம் இல்லை...!
அதன் பேரன்பும் உயிரோட்டமான ஈர்ப்பு என்பது இப்போது மிகத் தெளிவாய் புரிகிறது!

திட்டமிட்ட கடும் உழைப்பு, பணிகள் இருந்தாலும் சிலரின் தடையால் நமது இலக்கை எட்ட முடியவில்லை…..
இப்படி பல விடயங்கள…..
*****

சில நாட்களாகவே.. இல்லை சில மாதங்கள் என்று கூட சொல்லலாம். மனதை ஒரு நிலைப்படுத்தி எந்தவொரு செயலிலும் ஈடுபடுத்தமுடியவில்லை. ஆழ்மனதில் படுத்துறங்கும் ஏதோவொன்றை துரத்தும் முயற்சிகள் தோற்றுப்போகின்றன., சில பணிகள் - காலங்கள் காலாவதியாகி
விட்டன. “ முன்புபோல் ஏன் ஆக்டிவ்வாக இல்லை” என்று  கேட்பவர்களுக்கு பதிலே எழுதுவதில்லை.இனி மெல்ல மீள்வேன்..

ஏதாவது ஒன்று  முடியும்  போது தான் இன்னொன்று ஆரம்பிக்க முடியும். ஏதாவது ஒன்று என்பது சோம்பலும், மற்றவர்களின் மூலம் நாம் அடையும் பாடுகள்,ரணங்கள் ….
எல்லாமே சிறிது காலம் தான்.
விரைவில் மீண்டு தெம்புடன் வர... 
நாம சந்தோஷமாக இருக்கிறது மட்டும் தான் நம்மை வழிநடத்தும். 
எதைப்பற்றியும் நினைத்து கவலைப்பட கூடாது. 

கவலைப்பட்டு எதுவுமே ஆகப்போவதில்லை. 
பிறகு எதுக்கு கவலைப்படுவான். 
எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு நிம்மதியாக இருங்க. 
படிக்கவும், நல்லா தூங்கவும். எல்லாம் சரியாகும். சுகமான சுமைகள் நாம் கற்றக வேண்டிய பாடங்கள்.
துன்பத்திற்குத் துன்பம் கொடுக்க வேண்டும்.
- அரசியலார்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#K_S_Radhakrishnan
25-7-2023


துணை_பிரதமர் #துணைமுதல்வர் #Deputy PrimeMinister #Deputy ChiefMinister #துணை என்பது இணையானது அல்ல

#துணை_பிரதமர் #துணைமுதல்வர்
#Deputy PrimeMinister
#Deputy ChiefMinister 
#துணை என்பது இணையானது_அல்ல
—————————————————————
இன்றைய 25-7-2023,தினமணியில் எனது பத்தி….
(துணை முதல்வர் பதவி குறித்து அரசமைப்பு சாசனம் ஒன்றும்சொல்லவில்லை
-கே.எஸ். இராதா கிருஷ்ணன்.)

மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார்பதவியேற்றுள்ளார் என்ற செய்தி உண்மையில் அரசமைப்புச்சாசன ரீதியாக செல்லுபடியாகுமா என்ற கேள்வியைஎழுப்பியுள்ளது.
துணை முதல்வர் பதவிக்கு சட்டத்தில் இடமிருக்கிறதோஇல்லையோ, நாட்டில் தற்போது 12 மாநிலங்களில் துணைமுதல்வர்கள் உள்ளனர்: கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார், சத்தீஸ்கரில் டி.எஸ்.சிங்தியோ, பீகார் மற்றும் ஹரியானாவில்முறையே தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் துஷ்யந்த் சவுதாலா, உ.பி.யில் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், இமாச்சல பிரதேசத்தில் முகேஷ் அக்னிஹோத்ரி. வடகிழக்கில்நான்கு மாநிலங்களில் துணை முதல்வர்கள் ஆகியோர்உள்ளனர். ஆந்திரா முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன்ரெட்டிக்கு ஐந்து துணை முதல்வர்கள் உள்ளனர்.
ஒரு மாநிலத்தில் துணை முதல்வர் தேவையைஉருவாக்குகின்ற அரசியல் சூழல்கள் என்ன?
உண்மையில், துணை முதல்வர் நியமனம் என்பது ஒருவகையான அரசியல் சமரசம்.  கூட்டணி ஆட்சிஇருக்கும்போதோ அல்லது மிகப்பெரிய தேர்தல் வெற்றியைப்பெற்ற தலைவர் இல்லாதபோதோ, கூட்டணிக் கட்சிகளின்ஆதரவுக்கு ஈடாக வழங்கும் சலுகை துணைமுதல்வர் பதவி.அதிருப்திக் குரல்களை அடக்குவதற்காக கூட்டணிக் கட்சிஅல்லது ஆளும் கட்சியின் தலைவர் ஒருவருக்குதுணைமுதல்வர் பதவி வழங்கப்படுகிறது. 
சமீபத்தில், சத்தீஸ்கர் மாநில அமைச்சர் டி.எஸ்.சிங்தியோ, முதல்வர் பூபேஷ் பாகெலுடனான கருத்து வேறுபாடுகளைகளைய, சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களேஉள்ள நிலையில், அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
சட்டம் என்ன சொல்கிறது?
அரசியலமைப்புச் சட்டத்தின் 163(1) பிரிவின்படி, "ஆளுநரின்செயல்பாடுகளை செயல்படுத்துவதில் அவருக்கு உதவவும்ஆலோசனை வழங்கவும் முதலமைச்சரைத் தலைவராகக்கொண்ட அமைச்சரவை இருக்க வேண்டும்". பிரிவு 163 அல்லது பிரிவு 164 ("அமைச்சர்கள் தொடர்பான பிறவிதிகள்"), அதன் உட்பிரிவு (1) "முதலமைச்சர் ஆளுநரால்நியமிக்கப்பட வேண்டும், மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின்ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்" என்று மட்டுமே சொல்கிறது. ஆனால் அது துணைமுதலமைச்சர் பதவி பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
நடைமுறையில், ஒரு துணை முதல்வர் கேபினட்அமைச்சருக்கு (மாநிலத்தில்) சமமான நிலையில்கருதப்படுகிறார். ஒரு கேபினட் அமைச்சருக்கு இணையானசம்பளம் மற்றும் சலுகைகளை துணை முதல்வர்அனுபவிக்கிறார்.
துணை முதல்வர் பதவி வரலாறு
இந்தியாவின் முதல் துணை முதல்வர் அவுரங்காபாத்தைச்சேர்ந்த உயர்சாதி ராஜபுத்திர தலைவரான அனுக்ரா நாராயண்சின்ஹா. மாநிலத்தின் முதல் முதல்வர் டாக்டர் ஸ்ரீகிருஷ்ணசிங்கிற்குப் (சின்ஹா) பிறகு பீகாரில் மிக முக்கியமானகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
1967-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் மீதான காங்கிரஸின்ஏகபோகப் பிடி சரியத் தொடங்கிய பிறகு தேசிய அரசியலில்மேலும் பல துணை முதல்வர்கள் முளைத்தனர்.
பீகார்
பீகார் துணை முதல்வர் அனுக்ரா நாராயண் சின்ஹா 1957 ஆம்ஆண்டில் இறக்கும் வரை அப்பதவியில் இருந்தார். 1967 ஆம்ஆண்டில் மகாமாயா பிரசாத் சின்ஹா தலைமையிலானமாநிலத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தில் கர்பூரிதாக்கூர் பீகாரின் இரண்டாவது துணை முதல்வரானார்.இதையடுத்து, ஜக்தியோ பிரசாத், ராம் ஜெய்பால் சிங் யாதவ்ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர்.
பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, 2005ல் துணைமுதல்வராக பதவியேற்று, 13 ஆண்டுகள் பதவி வகித்தார்.அவரைத் தொடர்ந்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வியாதவ் (இரண்டு முறை), பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் மற்றும்ரேணு தேவி ஆகியோர் இருந்தனர். தற்போது துணைமுதல்வராக தேஜஸ்வி யாதவ் இருக்கிறார்.
உத்தரப் பிரதேசம்
1967 ஆம் ஆண்டில் சவுத்ரி சரண் சிங்கை முதல்வராகக்கொண்டு ஆட்சிக்கு வந்த சம்யுக்தா விதாயக் தளம் (எஸ்.வி.டி) அரசாங்கத்தில் பாரதிய ஜன சங்கத்தைச் (பி.ஜே.எஸ்) சேர்ந்தராம் பிரகாஷ் குப்தா துணை முதல்வரானார்.
காங்கிரசின் முதல்வர் சந்திர பானு குப்தா தலைமையிலானஅரசாங்கத்தில் 1969 பிப்ரவரியில் கமலாபதி திரிபாதி துணைமுதல்வராக பதவியேற்றார். பின்னர் ராம் பிரகாஷ் குப்தாமற்றும் திரிபாதி இருவரும் தாங்களாகவேமுதல்வர்களானார்கள்.
பின்னர், 1979 ஆம் ஆண்டில் முதல்வர் பதவியை ராஜினாமாசெய்ய நிர்பந்திக்கப்பட்ட ராம் நரேஷ் யாதவ், பனாரசி தாஸின்கீழ் துணை முதல்வரானார். அவரோடு நரேன் சிங் என்றமற்றொரு துணை முதல்வரும் இருந்தார்.
2017-ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில், கேசவ்மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் துணைமுதல்வர்களாக பதவியேற்றனர். 2022-ஆம் ஆண்டு யோகிஅரசாங்கத்தில் மவுரியா துணைமுதல்வர் பதவியில்தொடர்ந்தார். பிரஜேஷ் பதக் இரண்டாவது துணை முதல்வராகஇருக்கிறார்.
மத்தியப் பிரதேசம்
ஜூலை 1967 இல் ஆட்சிக்கு வந்த கோவிந்த் நாராயண் சிங்தலைமையிலான எஸ்விடி அரசாங்கத்தில் பிஜேஎஸ்கட்சியைச் சேர்ந்த வீரேந்திர குமார் சக்லேச்சா துணைமுதல்வரானார்.
பின்னர் 1980 ஆம் ஆண்டில், பானு சோலங்கி முதல்வர்அர்ஜூன் சிங்கின் அரசாங்கத்தில் துணை முதல்வரானார்.திக்விஜய் சிங் முதல்வராக இருந்தபோது சுபாஷ் யாதவ் மற்றும்ஜமுனா தேவி ஆகியோர் அப்பதவியில் இருந்தனர்.
ஹரியானா
ஹரியானாவில் துணை முதல்வர்களின் பாரம்பரியம் ஒன்றுஉள்ளது. ரோத்தக்கைச் சேர்ந்த ஜாட் தலைவரான சவுத்ரி சந்த்ராம், ராவ் பிரேந்தர் சிங் தலைமையிலான குறுகிய காலஅரசாங்கத்தில் துணைமுதல்வர் பதவியை முதன்முதலில்வகித்தார்.
முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகன் சந்தர் மோகன் 2005 முதல் 2008 வரை பூபிந்தர் சிங் ஹூடாவின் காங்கிரஸ்அரசாங்கத்திலும், ஜனநாயக் ஜனதா கட்சித் தலைவர்துஷ்யந்த் சவுதாலா 2019 முதல் முதல்வர் மனோகர் லால்கட்டாரின் துணைத் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
பஞ்சாப்
சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் 2009 முதல் 2017 வரை தனது தந்தை பிரகாஷ் சிங் பாதலின் துணைமுதல்வராக இருந்தார். சுக்ஜிந்தர் சிங் ரந்தவா மற்றும் ஓம்பிரகாஷ் சோனி ஆகியோர் சரண்ஜித் சிங் சானியின் ஆறு மாதஅரசாங்கத்தில் துணை முதல்வர்களாக இருந்தனர்.
தமிழ்நாடு
தற்போதைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் 2009 ஆம்ஆண்டு மே 29 ஆம் தேதி தனது தந்தையும் திமுகதலைவருமான கருணாநிதியின் துணை முதல்வராகபதவியேற்றபோது தமிழகம் தனது முதல் துணைமுதலமைச்சரைக் கண்டது.  அப்போது உள்ளாட்சித் துறைஅமைச்சராக இருந்தவர் ஸ்டாலின்.  
முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை சரியத்தொடங்கியதால், அவரது பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்ளவேண்டி ஸ்டாலின் துணைமுதல்வராக நியமிக்கப்பட்டார்.
துணை பிரதமர்
இந்தியா பல துணைபிரதமர்களையும் கண்டுள்ளது.   சர்தார்வல்லபாய் படேல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால்நேருவுக்கு அடுத்த படியில் இருந்தார். நேருவும் படேலும்அப்போது காங்கிரஸின் மிக உயர்ந்த தலைவர்களாகஇருந்தனர், மேலும் அவர்கள் கட்சிக்குள் இரண்டு வெவ்வேறுசிந்தனை ஓட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும்பார்க்கப்பட்டனர்.
மொரார்ஜி தேசாய், சரண் சிங், சவுத்ரி தேவி லால் மற்றும் லால்கிருஷ்ண அத்வானி ஆகியோர் துணைப்பிரதமர்களாகஇருந்தனர்.
1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங்கின் அரசாங்கத்தில் தேவிலால்துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டதை எதிர்த்துநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கே.எம்.சர்மா வெர்சஸ் தேவிலால் (1990) வழக்கில், உச்சநீதிமன்றம் தேவிலாலின் நியமனத்தை உறுதி செய்தது/ “எதிர்மனுதாரர் எண் 1 (லால்) அமைச்சரவையின் மற்றஉறுப்பினர்களைப் போலவே ஒரு அமைச்சர் மட்டுமே என்றுகற்றறிந்த அட்டர்னி ஜெனரல் கூறிய தெளிவானஅறிக்கையைக் கருத்தில் கொண்டு... அவரை துணைப்பிரதமராகக் கொள்வதால் அவருக்குப் பிரதமரின்அதிகாரத்தையும் வழங்கப்படவில்லை".
மொத்தத்தில், துணை முதல்வர் பதவி குறித்துஅரசியலமைப்பில் தெளிவான விதிகள் இல்லை என்றாலும், அரசியல் சூழ்நிலைகள் துணை முதல்வர் தேவையைதீர்மானிக்கின்றன.  இதுதான் இந்திய அரசில் நடைமுறையில்இருந்து வருகிறது.
இங்கிலாந்து, இஸ்ரேல், நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளில்அரசியல் சாசனம் இல்லை. இருப்பினும் அவற்றின் சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை அமைப்புகள் வழிவழியானமரபுகளாலும் மற்றும் நடைமுறைகளாலும்நிர்வகிக்கப்படுகின்றன.  
இந்தியர்களாகிய நாம் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்றஜனநாயகத்தைப் பின்பற்றி வருகிறோம். எனவே, துணைமுதல்வர் பதவி குறித்து அரசியலமைப்பில் தெளிவான விதிகள்இல்லை என்றாலும், துணை முதல்வர் மற்றும் துணைபிரதமரின் தேவையை அரசியல் சூழ்நிலைகள்தீர்மானிக்கின்றன.   அந்த வகையில், நம் நாட்டின் சட்டம், இங்கிலாந்து மாதிரியை ஒத்திருக்கிறது.
நேரு- படேல் காலத்திலிருந்தே, 'துணை'யை நியமிக்கும்நடைமுறை நடைமுறையில் இருந்து வருகிறது.

- அரசியலார்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#K_S_Radhakrishnan
25-7-2023


Monday, July 24, 2023

#ஸ்ரீவித்யா #srividya

#*ஶ்ரீவித்யாவின் வழக்கறிஞர் என்ற என் நினைவுகள்*…

—————————————
‘‘இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்’’ 
••
*ஸ்ரீவித்யா* 24 ஜீலை 1953  பிறந்ததார்,கர்நாடக இசைப் பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகளான இவர், தமிழ்,மலையாளம்,  தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் 40 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இவர் 800 இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முக லட்சண சாஸ்திரம். ஒரு சிலரைப் பார்த்தவுடனேயே காரணம் தெரியாமலேயே அவர்களைப் பிடித்துவிடுகின்றது.
மரியாதையுடன் சிலரிடம் வலியச் சென்று நாமே பேசத் தொடங்குகிறோம். உங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று நம்மையறியாமலேயே கேள்விக் கனைகளைத் தொடுக்கத் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் தோற்றப் பொலிவுதான் காரணம் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். 
அப்படிமுக லட்சணம்,கண் கொண்டவர் ஶ்ரீ வித்யா.தனது மலையாள திரைப்படமான தீக்கனலில் உதவி இயக்குநரான ஜார்ஜ் தாமஸை காதலித்தார். இவரது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி 1976 சனவரி 9 அன்று அவரை மணந்தார். ஜார்ஜ் விரும்பியபடி, திருமணத்திற்கு முன்பு ஞானஸ்நானம் பெற்றார். இவர் ஒரு இல்லத்தரசியாக இருக்க விரும்பினார், ஆனால் நிதி சிக்கல்களை மேற்கோள் காட்டி ஜார்ஜ் இவரை கட்டாயப்படுத்தியபோது, நடிப்புக்கு திரும்ப வேண்டியிருந்தது. அவரை திருமணம் செய்வதில் இவர் ஒரு தவறான முடிவை எடுத்தார் என்பதை விரைவில் உணர்ந்தார். இவரது வாழ்க்கை பரிதாபமாக மாறியது. மேலும், திருமணம் 1980இல் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்துக்குப் பிறகு இவர் திரைப்படங்களில் (முக்கியமாக மலையாளம்) தொடர்ந்து நடித்தார். இந்த காலகட்டத்தில் இவரை வைத்து இயக்குனராக பல படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் பரதனைக் காதலித்தார். ஆனால் அவர்களால் அந்த உறவைத் தொடர முடியவில்லை, இறுதியில் பரதன் கே.பி.ஏ.சி லலிதாவை மணந்தார். ஜார்ஜ் தாமஸுடனான விவாகரத்து, இருவருக்கும் இடையிலான நிதி சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நீண்டகால நீதிமன்றம், வழக்கு என தொடர்ந்து. சென்னையை விட்டு வெளியேறி திருவனந்தபுரத்தில் குடியேறினார்.

முதுகெலும்பு புற்றுநோய் இவருக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக இவர் மூன்று ஆண்டுகள் சிகிச்சை பெற்றார். 2006 ஆகஸ்ட்  17, அன்று இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஶ்ரீவித்யா ஒரு விருப்பத்தை நிறைவேற்றி, திரைப்பட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கணேஷ் குமாரிடம் மூலம் ஒரு தொண்டு அமைப்பை பதிவு செய்ய கேட்டுக்கொண்டார். ஏழை மாணவர்களுக்கு படிப்பைத் தொடர உதவித்தொகையை வழங்குவதற்கும், தகுதியுள்ள கலைஞர்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்காக இது அமைக்கப்பட்டது.சீனியர் வழக்கறிஞர் பிச்சை, நானும் வழக்கு ரீதியாக எடுத்த நடவடிக்கைகள் அதிகம். அப்போது நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை பிறப்பிடமாக கொண்ட காவல் துறை உயர்அலுவலர் கொடுத்த தொல்லைகளை முறையடித்தவன் என்ற நிலையில் என் மீது மதிப்பு வைத்திருந்தார்.அவரை 1985 முதல் அறிவேன்.என்னை வக்கீல் சார் என அழைப்பார். அவர் கண்ட பாடுகள், ரணங்கள் அதிகம். அதை வெளி காட்டாமல் அமைதியாக வெள்ளந்தி சிரித்த முகத்தோடு 
இருப்பார். நான் #கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட இரு முறையும் முதலில் இவருடைய  நன்கொடையை நேரில் கொடுத்து வாழ்த்தியவர் என்பதை மறக்க முடியாது.
அம்மா வித்யா உன் நினைவுகள் என்றும் மனதில்…..

1953 ம் ஆண்டு பிறந்து 53 
வயதில் மறைந்த நடிகை! 

நடிகையில் அம்மா நடிகை என்ன, ஹீரோயின் வேஷம் என்ன... ‘நடிப்பே விருப்பம், நடிப்பதே தொழில்’ என்றிருக்க எத்தனைபேரால் முடியும்? அந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் போது இருவருக்கும் ஐந்து வயதுதான் வித்தியாசம். அப்போது அம்மாவாக நடிக்கும்போது அந்த நடிகைக்கு 22 வயதுதான். ஆனாலும் அம்மாவாக நடித்தார். ‘இந்தக் கேரக்டரை இவரைத் தவிர யாருமே பண்ணமுடியாதுப்பா’ என்று சொல்லும் அளவுக்கு நடித்துப் 
புகழ் பெற்றார்.

அவர்... ஸ்ரீவித்யா.  படம்... ‘அபூர்வ ராகங்கள்.

அம்மாவின் அன்பு கிடைக்கவேண்டிய தருணத்தில், அம்மா கச்சேரி கச்சேரியாக மேடையேறினார், அப்பாவின் அரவணைப்பும் பார்க்கவில்லை. இறந்தார். பாட்டு ஈர்க்கவில்லை. நடனம் இழுத்தது. நாட்டிய சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி வீட்டுக்குப் பக்கத்துவீடு என்பதுதான் காரணமோ என்னவோ. அவர்களின் பாராட்டும் ஊக்கமும் முயற்சியும் பயிற்சியும் ஸ்ரீவித்யாவை மெருகேற்றின.

பிறகுதான், ‘திருவருட்செல்வர்’, ‘காரைக்கால் அம்மையார்’ என்றெல்லாம் படங்கள் கிடைத்தன. ‘ ஆனாலும் அடுத்தடுத்த கட்டத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் ஸ்ரீவித்யாவையும் அவர் லொட்டுலொட்டு என்று தட்டுகிற கரண்டியையும் எவராலும் மறக்கவே முடியாது. கே.பாலசந்தர், ஸ்ரீவித்யாவுக்குக் கொடுத்த அருமையான கதாபாத்திரம். ஒரே நாயகனை, மூன்று சகோதரிகளும் காதலிக்க, அதில் தோற்று நொந்துபோகிற பாத்திரத்தை, அத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார் ஸ்ரீவித்யா.

அநேகமாக, டி.ஆர்.ராஜகுமாரியின் கண்களுக்குப் பிறகு, பேசும் கண்களாக ஸ்ரீவித்யாவின் கண்கள் திகழ்ந்தன. அந்தக் கண்களைக் கொண்டும் ஆகச்சிறந்த நடிப்பைக் கொண்டும், பைரவி எனும் கதாபாத்திரத்தை அப்படியே தாங்கிப் பிடித்தார் ஸ்ரீவித்யா. பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ பைரவியை யாரால்தான் மறக்கமுடியும்? நிஜத்தில் தன்னைவிட ஐந்து வயது அதிகம் கொண்ட ஜெயசுதாவுக்கு அன்னை. படத்தில், தன்னை விட வயது குறைந்த கமலின் விருப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கும் மிகப்பெரிய பாடகி. கைவிட்ட காதலன் ரஜினியால் உண்டான குழந்தையை, அனாதைக் குழந்தை என்று வளர்க்கும் கொடுமை... என நடிப்பில் புதியதொரு பரிணாமும் உயரமும் அவதாரமும் காட்டினார் ஸ்ரீவித்யா.

வெள்ளிவிழா’, ‘நூற்றூக்கு நூறு’, ’உணர்ச்சிகள்’, ‘ஆறு புஷ்பங்கள்’ என நடித்த படங்களிலெல்லாம் தனித்துத் தெரிந்தாலும் ஒருகட்டத்தில், ‘இந்தாங்க அம்மா வேஷம்’ என்றது தமிழ்த் திரையுலகம். அதேசமயம், கேரளத் திரையுலகம் விதம்விதமான கதாபாத்திரங்களை வாரி வாரி வழங்கியது. இருநூற்றம்பது படங்களுக்கும் மேல் அங்கே நடித்தார்.

இங்கே... எந்த கமலுடன் நடித்தாரோ அவருக்கு அம்மாவாகவும் ரஜினியின் முதல் படத்து நாயகியான நிலையிலும் அவருக்கு அம்மா, அக்கா, மாமியார் என்றும் நடிக்கத் தொடங்கியதெல்லாம் தமிழ் சினிமாவில் இவருக்குக் கிடைத்த சோகப்பக்கங்கள். ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல், அட்டகாசமாக ஒளிர்ந்தார், குணச்சித்திர நாயகி என்று பேரெடுத்தார்.

‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலில் ஸ்ரீவித்யாவின் முகபாவங்கள் தனித்துவமிக்கவை. ஒவ்வொரு வரிகளையும் பாவங்களாலேயே சொல்லியிருப்பார். ‘கேள்வியின் நாயகனே, இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா’ பாடலிலும் அப்படித்தான். படத்தின் க்ளைமாக்ஸை பாடலைக் கொண்டே முடித்திருப்பார் கே.பி. அதை ஆரம்பித்து முடித்து வைப்பார் ஸ்ரீவித்யா.

‘நூற்றுக்கு நூறு’ படத்தில், ஆசிரியரையே காதலிக்கும் கேரக்டர். ஒருபக்கம் குற்ற உணர்ச்சியை ஒரு கண்ணும், இன்னொரு பக்கம் குறுகுறுப்பை இன்னொரு கண்ணும் கேரக்டராக மாறி எடுத்துச் சொல்லும்

1953ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி 
பிறந்த ஸ்ரீவித்யா. , 53ம் வயதில் இறந்தார். ஆனாலும் ஸ்ரீவித்யாவும் அவரின் கண்களும் ரசிகர்களால் மறக்கவே மறக்கமுடியாது. ‘ஸ்ரீவித்யா...’ என்று சொல்லும்போதே ஏதொவொரு மென்சோகம் நமக்குள் சட்டென்று எழும். ஆனால் வாழ்க்கை முழுக்க சந்தோஷத்தையும் நிம்மதியையும் அனுபவிக்காமலே இறந்துவிட்டார் ஸ்ரீவித்யா.

.




#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
24-7-2023.

What happened in court halls….

High Court steps in to prevent installation of images of divisive figures.

Observing that there have been incidents inwhich damage has been caused to the statutes of national leaders, resulting in friction as well as law and order situation in different places… the full court resolved not to permit erection of any more statues on court campuses. 
Similarly, on April 27, 2013, the full court directed the Kancheepuram principal district judge to persuade the Alandur Court Lawyers Association to remove the portrait of Ambedkar and rejected the request of Cuddalore Bar to display his picture in the newly-constituted special courts, the circular said. 
“Very recently, on April 11 the full court considered a similar request and reiterated all the earlier resolutions and unanimously resolved that except the statues and portraits of Gandhi and Thiruvalluvar, no other portraits and pictures shall be displayed anywhere inside the court premises,” the circular added. 
The registrar-general directed that in case of any deviation, action shall be taken by giving suitable complaint to the Bar Council of Tamil Nadu and Puducherry.


#*கறுப்புஜீலை* #*ஈழத்தில்* #*தமிழ் இன அழிப்பை23.7.1983 அன்று இரவு 11.30மணிக்கு் துவங்கி 24 -7-1983பகல் என தொடர்ந்தது*… *இந்த கொடுமைகள் நடந்து இன்று 40ஆண்டுகள்*… *24-7-1983. #*Black July*

#கறுப்புஜீலை 
#Black_July



—————————————
*மறக்க முடியுமா*? *வெளிக்கடைசிறையில் 53 பேர் என 5000க்கு* *மேற்பட்டோர் இலங்கையில்*
 *கொல்லப்பட்டது*….

*July 24, 1983, is a day of infamy—9/11 if you will for #Sri Lankas Tamils. Government orchestrated mobs fuelled by a macabre and radical anti-Tamil ethos diametrically opposed to the very foundations of basic decency and humanity—stole the lives of thousands. Forty years later, not a single person has been charged for committing this horrific crime perpetrated on innocent Tamils.  Their lust to spill blood in a barbaric frenzy of ethnic fanaticism was unconscionable*. 
*Memory, however, often has a peculiar way of finding hope*.

#கறுப்புஜீலை 
#Black_July
#இலங்கை
*இது குறித்து இன்றைய* (*24-7-2023*) *இந்து *தமிழ் திசையில்*
*எனது சிறப்பு பேட்டி*….
https://www.facebook.com/100064905901475/posts/pfbid02jrp3LfPf5Lt54Cf2oLdVUZjWHCK8asouxMjbziZ5Y9or1UL4yatbdck8Y7sf5613l/?app=fbl

#ksrpost
23-7-2023.

Sunday, July 23, 2023

#*கறுப்புஜீலை* #*ஈழத்தில்* #*தமிழ் இன அழிப்பை23.7.1983 அன்று இரவு 11.30மணிக்கு் துவங்கி 24 -7-1983பகல் என தொடர்ந்தது*… # *இந்த கொடுமைகள் நடந்து இன்று 40ஆண்டுகள்*… *24-7-1983. #*Black July*

#*கறுப்புஜீலை* 
#*ஈழத்தில்*  #*தமிழ் இன அழிப்பை23.7.1983 அன்று இரவு 11.30மணிக்கு் துவங்கி 24 -7-1983பகல் என தொடர்ந்தது*… #
*இந்த கொடுமைகள் நடந்து இன்று 40ஆண்டுகள்*… *24-7-1983. #*Black July* 
—————————————
*மறக்க முடியுமா*? *வெளிக்கடைசிறையில் 53 பேர் என 5000க்கு* *மேற்பட்டோர் இலங்கையில்*
 *கொல்லப்பட்டது*….

*July 24, 1983, is a day of infamy—9/11 if you will for #Sri Lankas Tamils. Government orchestrated mobs fuelled by a macabre and radical anti-Tamil ethos diametrically opposed to the very foundations of basic decency and humanity—stole the lives of thousands. Forty years later, not a single person has been charged for committing this horrific crime perpetrated on innocent Tamils.  Their lust to spill blood in a barbaric frenzy of ethnic fanaticism was unconscionable*. 




Memory, however, often has a peculiar way of finding hope. And what stands apart the most amid so much devastation and loss is how we, as Tamils, came together, regardless of differences, to stand in defiant unity against those wicked ones who tried to destroy us with mayhem and madness. Sri Lanka can kill Tamils, but it  can never conquer the Tamil people. The best revenge is living well. Diasporic Tamils are a living testament to this.

Eventually, as the Tamil slaughter in Sri Lanka slips from living experience, its historical understanding must be preserved, advanced and remembered. Diaspora Tamils of this and future generations to come must make sure neither our history nor the passage of time will deny them their honourable due nor will they be forgotten as footnotes to Tamil history. We must not allow splattered blood from Tamil victims of Sri Lankan tyranny to stain our conscience forever.

#கறுப்புஜீலை 
#Black_July
#இலங்கை

#ksrpost
23-7-2023.

#*எனதுசுவடு பகுதி-32* *காமராஜர் காலத்தில் மாணவ காங்கிரஸின் செயல்பாடுகள்* I KSRVOICE I எனது சுவடு

#*எனதுசுவடு பகுதி-32* 
*காமராஜர் காலத்தில் மாணவ காங்கிரஸின் செயல்பாடுகள்* I KSRVOICE I எனது சுவடு

*கே. எஸ். இராதாகிருஷ்ணன் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்*. 
#ksr, #ksrvoice, #radhakrishnan, #yenadhusuvadu, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #எனதுசுவடு, #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #radhakrishnan, #ksradhakrishnan,  #kamarajar,  #tamilnadu, #kingmaker, #tamiL,  #kamaraj, #tamilanda,  #மாணவகாங்கிரஸ், #இளைஞர்காங்கிரஸ், #மொரார்ஜி, #இந்திஎதிர்ப்பு, #காமராஜர்

https://youtu.be/7XGopH6ofnA

#ksrpost
#K.S.Radhakrishnan
23-7-2023.

Thursday, July 20, 2023

#Manipur Violence #Manipur Burning #மணிப்பூர்

கட்சிகள், கட்சிக்கொடிகளுக்கா நம்நாட்டில் பஞ்சமா? இல்லையே..
அதில் ஒன்று கூடவா இல்லை அந்த அபலைகளின் அம்மணத்தை மறைக்க?

நெஞ்சில் உரமுமின்றி 
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி-கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.….

வேறு என்ன முடியப் போகிறது நம்மால்....

#Manipur_Violence #ManipurBurning #மணிப்பூர்

*வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு படிநிலையிலும், மக்கள் இணைந்து கொண்டே இருப்பார்கள். இதிலிருக்கும் மறுக்கக்கூடாத உண்மை இணைந்தவர்கள் அத்தனை பேரும் தொடர்ந்து உடன் வருவதில்லை. சிலர் தொடர்வதும், பலர் விலகுவதுமாகத்தான் மனிதர்களின் பிணைப்பு இருக்கும்*.




உடனிருப்பவர்களைவிட, விலகிப் போனவர்களில் சிலர் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாக இருப்பார்கள். தொடர்ந்து நினைவில் நின்றிருப்பார்கள். அதனாலோ என்னவோ, அவர்களுடைய விலகல் தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டேயிருக்கும். எத்தனையோ உடனிருந்தாலும், இல்லாத ஒன்றுக்கு ஏங்கும் வகையிலானதுதானே மனித மனம்.

ஒரு உண்மையை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும், விலகிச் சென்றதால் அழுத்தம் கொடுக்கும் வகையினர் எவரும், உங்களுக்காக உங்களோடு இணையவில்லை. தமக்காக உங்களோடு இணைந்தவர்கள். இந்த உண்மை ஆழ்ந்து புரிந்து விட்டால், இல்லாதவர்களை விடுத்து, உங்களுக்காக உங்களோடு இருக்கும் ஒருவரைக் கொண்டாடுவீர்கள்.

நதியின் நோக்கம் பயணிப்பது, ஒதுங்குகின்றவைகளை கழித்துவிட்டு, இணைகின்றவற்றை மட்டும் உடன் எடுத்துச் செல்லும். அணையில் சிறை பிடித்தால் மட்டுமே தேங்கும். தானாகத் தேங்கும் பழக்கம் மனிதர்களைப் போன்று நதிகளுக்கு இல்லை.

You start dying slowly ;

 if you do not travel,
 if you do not read,
 If you do not listen to the sounds of life,
 If you do not appreciate yourself.

 You start dying slowly :
 When you kill your self-esteem,
 When you do not let others help you.

 You start dying slowly ;
 If you become a slave of your habits,
 Walking everyday on the same paths…
 If you do not change your routine,
 If you do not wear different colours
 Or you do not speak to those you don’t know.

 You start dying slowly :
 If you avoid to feel passion
 And their turbulent emotions;
 Those which make your eyes glisten
 And your heart beat fast.

 You start dying slowly :
 If you do not risk what is safe for the uncertain
 If you do not go after a dream
 If you do not allow yourself
 At least once in your lifetime
 To run away from sensible advice

 Don't let yourself die slowly
 Do not forget to be happy!

- #Pablo_Neruda 

சில சமயங்களில்
எனக்கு ஒன்றுமே தோன்றுவது கிடையாது
என்ன செய்வோம் என்று எந்த ப்ளேனும் இருக்காது
யாருடனும் பேசத்தோன்றாது
இறைவனிடம் போய் கையேந்தவும் தோன்றாது
எப்படிப்பட்ட உணவையும் ருசித்துண்ணத்தோன்றாது
எந்தப்பாடலையும் கேட்க முடியாது
எந்தப்படத்தையும் பார்க்க முடியாது
எங்கேயும் போய்வரப்பிடிக்காது
அழ முடியாது 
சிரிக்க முடியாது

இப்படித்தான்
நான் மெல்லம் மெல்லமாய்
தவண்டு தவண்டு
ஏறிக்கொண்டிருக்கின்றேன்
அந்தப்பெரும்மலையின் மேல்

நான் நாடாமலேயே
இத்தனை இத்தனை வலிகளை
என்னில்
ஏன் சுமந்துகொண்டிருக்கவேண்டும்
என்றறிந்துவிட…

#ksrpost
20-7-2023.

கருக்கல் என்னவோ இருள் தான் ஆனால் விடியலுக்கு மிக அருகில்…



எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே…

(Photo-Adyar River)

*ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்-டி.ஆர்.பாலு* *சரி, பல முறை திமுக மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போது இதில் ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கலாமே…. ஏன் எடுக்க வில்லை*? #*பி.வி.ராஜமன்னார் குழு*

#*ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்-டி.ஆர்.பாலு* 
*சரி, பல முறை திமுக மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில்  இருந்த போது இதில் ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கலாமே…. ஏன் எடுக்க வில்லை*? #*பி.வி.ராஜமன்னார் குழு*

•••
அண்ணா கூறிய படி ஆளுநர் வேண்டாம் என உரத்த குரலில் திமுக சொல்ல வேண்டும். உங்களின் தேவை எனில்ராஜ் பவன் செல்லும்வாடிக்கையை கை விடுங்கள். 
கர்நாடக முன்னாள் முதல்வர் மறைந்த இராமகிருஷ்ண ஹெக்டே  கவர்னர் வேண்டாம் என தெளிவாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதுபோலவே வெளியிடுங்கள்.

பி.வி.ராஜமன்னார் குழு மாநில உறவுகளை ஆராய 1969இல் அன்றைய முதல்வர் கலைஞரால் மே 27, 1971 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இதன் உறுப்பினர்கள் லட்சுமணசாமி முதலியார், நீதிபதி சந்திரா ரெட்டி
இதன் முக்கிய பரிந்துரைகள்
நிதி ஆணையத்தை நிரந்தர அமைப்பாக மாற்றுதல்
திட்ட குழுவினை கலைத்தல்
அனைத்திந்திய பணிகள் கலைப்பு
சரத்து 356 மற்றும் 365 நீக்கம்
மத்திய பட்டியலில் உள்ள சில பகுதிகள் மாநில பட்டியலில் மாற்றம்
எஞ்சிய அதிகாரங்கள் மாநில பட்டியலில் சேர்ப்பு
கவர்னரின் விருப்பம் உள்ளவரை மாநில அமைச்சரவை பதவி வகிக்கலாம்  என்ற வாக்கியம் நீக்கம் என மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக. இக்குழுவின் பரிந்துரைகள் இருந்தது. இவை நடைமுறைக்கு வர; பல முறை திமுக மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில்  இருந்த போது ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கலாமே…. ஏன் எடுக்க வில்லை?@mkstalin @CMOTamilnadu @TRBaaluMP @tiruchisiva @DuraimuruganDmk 
@KanimozhiDMK 

#ஆளுநரை_டிஸ்மிஸ்_செய்ய
#பி_வி_ராஜமன்னார்_குழு
#திமுக #பிரிவு356
#KSRPost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
20-7-2023.

#*தமிழகத்தில் திமுகஆட்சியில் காவல் மரணங்கள்*… *அன்று கடுமையாக குரல் கொடுத்தவர்கள இன்று எங்கே*?



—————————————
இதுவரை 26 மாத திமுக ஆட்சியில்சுமார் 20 பேர் காவல் நிலையங்களில்சந்தேகமான முறையில் மரணமடைந்திருக்கிறார்கள். 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தாண்டவன்குளத்தைச் சேர்ந்த
சத்தியவாணன் மரணம் ; (24.8.2021)

முதுகுளத்தூர் நீர்கோழியேந்தல் மணிகண்டன் காவல் மரணம்.
(6.10.2021)

தருமபுரி,அரூர் வட்டம், கோட்டப்பட்டி மாற்றுத் திறனாளி பிரபாகரன்
மரணம்; (12.1.2022)

திருநெல்வேலி, மேலப்பாளையம், ஆமீன்புரம் சுலைமான் காவல் மரணம்(5.2.2022)

சென்னை, பட்டினப்பாக்கம் விக்னேஷ் மரணம்; (10.42022)

திருவண்ணாமலை, தட்டரணை தங்கமணி மரணம்; (26.4.2022)

சென்னை கொடுங்கையூர், அலமாதி ராஜசேகர்  மரணம்; (13.6.2022) -

சென்னை, ஆலப்பாக்கம் பாபு குறைவால் மரணம் (15.12.2022) 

தொடர்ந்து, 15.07.2023 அன்று, மதுரை மாவட்டம், எம் கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன் என்பவரை சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். விசாரணைக்குப் பிறகு அதிகாலை வீடு திரும்பியவர் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். போலீசார் தாக்கியதால்தான் வேடன் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள். இப்படி பட்டியல் உண்டு.

கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை முதலில், சி.பி.சி.ஐ.டி விசாரித்து, தற்போது சி.பி.ஐ விசாரித்தும வருகிறது. இதற்கு ஓடி சென்று குரல் கொடுத்த போராளிகள், திமுவினர் இன்று எங்கே?
#custodialdeaths_tamilnadu
#காவல்மரணங்கள்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost
20-7-2023.

Wednesday, July 19, 2023

"#PseudoSecularism வேண்டாம் வேஷம்போடாதீர்கள்

"#PseudoSecularism வேண்டாம்_ வேஷம்போடாதீர்கள்" கே.எஸ்.இராதாகிருஷ்ணன், அரசியலாளர்.
#ksr ,#ksrvoice,#radhakrishnan,#கேஎஸ்ஆர்,#அரசியல்சிந்தனை,#இராதாகிருஷ்ணன்,#tamilnadu  
#kalaignar https://youtu.be/p1BztC4-sn0 https://youtu.be/p1BztC4-sn0

கடந்த 1970களில் நாங்கள் நடத்திய கூட்ட செலவு ரூ300தான்… இன்று லட்சங்களில் கூட்டங்கள்.

கடந்த 1970களில் நாங்கள் நடத்திய கூட்ட செலவு ரூ300தான்… இன்று லட்சங்களில்
கூட்டங்கள்.
—————————————————————
இன்று பழைய கோப்புக்களை தேடுயும் போது 1970களில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அண்ணன் குடந்தை ராமலிங்கம் அவர்களின் கூட்டத்தை மதுரையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் நாங்கள் நடத்திய செலவு ரூ 300தான். மேடை, போஸ்டர், மைக்செட், அவர் காலேஜ் ஹவுஸ் விடுதியில் தங்கிய ரூம் வாடகை என எல்லா செலவுகள் இதில் அடங்கும்.

இன்று குவாட்டர், பிரியாணி, போக்குவரத்து வசதி,200 -500 ரூபாய்: வரை கொடுத்து  கூட்டத்திற்க்கு  வர கூவிக்கூவி அழைக்கும் கட்சிகள ...அன்று விளம்பரத்தை பார்த்து மக்கள் வந்து கூட்டம்.அன்று இரவு 12.00 மணி வரை இருப்பார்கள,




தமிழ்நாட்டின் ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்ற போது தலைவர் கலைஞரை எதிர்த்து அண்ணன் குடந்தை ராமலிங்கம் காமராஜர் ஆசியை பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராக  சைதாப்பேட்டை சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டார்...

கே.எஸ். இராதகிருஷ்ணன்.
K.S.Radha Krishnan 
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
19-7-2023.


ஒன்றியம் என சொல்வோம் எனபவர்களை இந்தியா என சொல்ல வைத்து விட்டது கால தேச வர்த்தமானம்..

ஒன்றியம் என சொல்வோம் எனபவர்களை இந்தியா என சொல்ல வைத்து விட்டது கால தேச வர்த்தமானம்..

பொன் பொருளை கண்டவுடன் வந்தவழி மறந்துவிட்டு கண்மூடிப்போகிறவர் போகட்டுமே என் மனதை நானரிவேன் என் உறவை நான் மறவேன் எதுவான போதிலும் ஆகட்டுமே….

பொன் பொருளை கண்டவுடன் வந்தவழி மறந்துவிட்டு கண்மூடிப்போகிறவர் போகட்டுமே என் மனதை நானரிவேன் என் உறவை நான் மறவேன் எதுவான போதிலும் ஆகட்டுமே….

Tuesday, July 18, 2023

தமிழ் அறிஞர் இளம்பாரதி அவர்களின் ( ருதர துளசிதாஸ், இளையரசநேந்தல்) 90 பிறந்த நாள்

மொழிகளின் சிநேகிதர், சாகித்திய அகாதமி விருது பெற்ற பேராசிரியர்,
அ.கி. பரந்தாமனாரின் மாணவர், எனது உறவினர், 

ன் போது….
அவரிடம் பல விடயங்களை விவாதிக்க இன்றைய மாலை பயனாக அமைந்தது.

#இளம்பாரதி

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-7-2023.

முன் மாதிரியான மதிய உணவு திட்டத்தை பாரதியின் எட்டையாபுரத்தில் 66 வருடங்களுக்கு முன்பாக காமராஜர் தலைமையிலான சென்னை மாநில அரசு திட்டத்தை துவக்கிய நாள். (*18-07-1956*)

முன் மாதிரியான மதிய உணவு திட்டத்தை பாரதியின்
எட்டையாபுரத்தில் 66 வருடங்களுக்கு முன்பாக காமராஜர் தலைமையிலான சென்னை மாநில அரசு திட்டத்தை  துவக்கிய நாள். (*18-07-1956*)
—————————————
மதிய உணவுத் திட்டம், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என பாடிய பாரதியின்
எட்டையாபுரம், பாரதி மகாலில். ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்று (18-07-1956).இதே நாளில் அதாவது 66 வருடங்களுக்கு முன்பாக எட்டாயபுரத்தில் காமராஜர் தலைமையிலான சென்னை மாநில அரசு முன் மாதிரியான மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய சிறப்பான நாள்.

 18-07-1956 ம் ஆண்டு எட்டாயபுரம் மகாராஜா தலைமையில்  கல்வித்துறை நெறியாளர்( Director of public instructions) நெ.து.சுந்தரவடிவேலு முன்னிலையில் காமராஜர் துவக்கி வைத்து   நெ.து.சுந்தரவடிவேலுவின் மகனாகிய வள்ளுவன் மதிய உணவு சாப்பிடதை தொடங்கி வைக்கப்பட்ட நாள் இன்று.
 
எனது ‘#நிமிர_வைக்கும்_நெல்லை’நூல் பதிவு
(ஆசிரியர் : இராதாகிருஷ்ணன், கே.எஸ் ; பதிப்பகம் : பொதிகை-பொருநை-கரிசல்.)

#KSR_Post
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்.
18-7-2023


#ஜூலை-18: #தமிழ்நாடு நாள் சரி மகிழ்ச்சி. ஆனா,நவம்பர் 1(*1956*)



—————————————

ஜூலை 18: தமிழ்நாடு நாள். சரி , மகிழ்ச்சி.
ஆனா;

’’நவம்பர் 1, தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று அறிவித்து உள்ளது மிக்க மகிழ்ச்சிதான். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைய எல்லை களோடு அமைந்த தமிழகம் 1956 நவம்பர் 1 ஆம் தேதி சென்னை மாகாணமாக என்று அமைந்தது. மெட்ராஸ் ராஜ்தானி (madras presidency) துவக்கத்தில் அழைக்கப்பட்டது. ஆந்திரா, ஒரிசா எல்லை வரை தெற்கே திருநெல்வேலி மாவட்டம் வரை அமைந்தத்து அன்றைக்கு அமைந்திருந்தது மெட்ராஸ் ராஜ்தானி. மொழிவாரியாக மாநிலங்கள் அதன் எல்லைகளை வரையறுக்க அன்றைய பிரதமர் நேரு குழு ஒன்றை அமைத்தார். அதன் அறிக்கைகளை பெற்று கேரளத்தில் தேவிகுளம், பீர்மேடு போன்ற சில பகுதிகளும், இன்றைய கர்நாடகத்தில் கொல்லேகால் போன்ற சில பகுதிகளும், ஆந்திரா வில் திருப்பதி, சித்தூர், நெல்லூர், காளஹஸ்தி போன்ற பகுதிகளும் நாம் இழந்து இன்றைய எல்லைகள் அமைந்த தமிழகம் நவம்பர் 1 1956ல் அமைந்தது.
தியாகசீலர் ம.பொ.சி., மங்களக்கிழார், விநாயகம் போன்றோர் பலரின் போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம். தென்முனை குமரியை பி.எஸ்.மணி, நேசமணி, குஞ்சன் நாடார், ரசாக் போன்றோருடைய தியாகமும், மார்த்தாண்டம் புதுக்கடையில் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 11 தியாகிகளின் ரத்தத்தில் தமிழகத்தோடு இணைந்ததுதான் குமரி மாவட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் தியாகி கரையாளருடைய மாசற்ற தியாகத் தால் செங்கோட்டை கிடைத்தது. ஆனால் நம்மோடு இணையவேண்டிய தென்மலை,நெடு மாங்காடு, நெய்யாற்றங்கரை ஆகியப் பகுதிகளை தர மறுத்தனர். தமிழர்கள் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு சென்றுவிட்டன. 1956 நவம்பர் 1ம் தேதி உதயமான கேரளம் “நவ கேரளம்” என்று கொண்டாடுகிறது.
கர்நாடகம் “அகண்ட கர்நாடகம்” என்று விழா எடுக்கிறது. ஆந்திரம் “விசால ஆந்திரம்” என்று ராஜ்ய விழாவாக கொண்டாடுகின்றது. மகாராஷ்டிரம் “சம்யுக்த மகாராஷ்டிரம்”, குஜராத் “மகா குஜராத்” என்று நவம்பர் 1ம் தேதியை மகிழ்ச்சிப் பெறுக்கோடு வரவேற்கின்றது. ஆனால் நாம் இந்நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதா? அல்லது இழந்த பகுதிகளுக்காக வருந்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? என்று சொல்ல முடியவில்லை.

#TamilNaduDay | #TamilNadu
#தமிழகம்
#KSR_Post
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்.
18-7-2023

Monday, July 17, 2023

On this day in 1945, Truman, Stalin and Churchill assemble near Berlin at Potsdam, Germany to map out the post-war world. Behind the scenes, relations between the Western Allies and Moscow are beginning to unravel.

On this day in 1945, Truman, Stalin and Churchill assemble near Berlin at Potsdam, Germany to map out the post-war world. Behind the scenes, relations between the Western Allies and Moscow are beginning to unravel.

Sunday, July 16, 2023

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்.

||தங்களுடைய நூல்களை இன்று மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் பார்தேன்|| என பலர் செய்தியை முகநூல் மற்றும் கைபேசில் இன்று 16-7-2023 கூறினர்..

#Cauveri #காவேரி

வேகமாக சரியும் மேட்டூர் அணையின் நீர்மட்டம். குறுவை சாகுபடியை சமாளிக்க முடியுமா?மாதாந்திர நீர் பங்கீடு வரத்தை கார்நாடக காங்கிரஸ் அரசு வழங்காத்தால் சிக்கல்.

திராவிட பெருவெளியில் திமுக விடியல் அரசு தனது தோழமை காங்கிரஸ் தலைவர், (முதல்வர் ஸ்டாலினின் சகோதரர்) ராகுலிடம் பேசி எளிதில் தீர்க்கலமே? நாளை பெங்களூரில் எதிர் கட்சிகள் கூட்டம் நடக்கிறது. மிக லகுவாக ஸ்டாலின் தீர்க்கும் சர்வ சக்தி கொண்டவர். எனவே தீர்ப்பார்….
#Cauveri
#காவேரி

மதுரை கலைஞர் நூலகம்.

மதுரையில் 200 கோடிக்கு நூலகம் கட்டி, தலைவர்னு எழுதுறதுக்கு பதிலா தலைர்னு எழுதி இவர்தான் தமிழை வளர்க்க போறாராம். வாழ்க! கலைஞர்! -இந்த தமிழ்நடை சரியா?

தமிழ் சங்க காலத்துக்கு முன் இருந்தே சீர்மிகு மறையா புகழ் கொண்டது . கன்னல் தமிழின் கீர்த்தியை இப்படி எழுதியும் அழிக்க முடியாது. It is a heritage…. It will lead in all times. வாழ்க தமிழ்…





*சமீப காலமாக, அமெரிக்காவிலும் கனடாவிலும் காலிஸ்தானுக்கு ஆதரவாகச் சிலர் தங்கள் சுய விளம்பரம் பெறவே எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்*.

*சமீப காலமாக, அமெரிக்காவிலும் கனடாவிலும் காலிஸ்தானுக்கு ஆதரவாகச் சிலர் தங்கள் சுய விளம்பரம் பெறவே எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்*. 
—————————————
சமீப காலமாக, அமெரிக்காவிலும் கனடாவிலும் காலிஸ்தானுக்கு ஆதரவாகச் சீக்கியர்கள் நடத்தும் போராட்டங்கள் கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது. அத்தகைய இயக்கம் தேவையற்றது மற்றும் உறுதியான அடித்தளம் இல்லை என்பது தான் எனது கருத்து. இதற்குப் பதிலடியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் சான்பிரான்சிஸ்கோவில் பேரணி நடத்தியுள்ளனர். 

நான் ஏன் தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறேன் ஆனால் காலிஸ்தானை ஆதரிக்கவில்லை என்று எனது நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இவை இரண்டும் வெவ்வேறு பிரச்சினைகள் என்பதில் பதில் இருக்கிறது. இந்தியாவில் சீக்கியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படவில்லை. ஒவ்வொரு சூழ்நிலையின் சூழலையும் நுணுக்கங்களையும் புரிந்துகொள்வது முக்கியம். தமிழ் ஈழத்திற்கான ஆதரவு நியாயமானதாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் ஈழ தமிழர்களைப் போலப் பிரச்சனைகளை எதிர்கொள்ளாததால் காலிஸ்தான் இயக்கத்திற்கு வலுவான ஏற்றுக் கொள்ளும் படியான காரணங்கள் இல்லை என்பதே நிதர்சனம். சீக்கியர்கள் எல்லோரும் இப்படி
தேவையற்ற இந்த பிரச்சனையை கிளப்பவில்லை. சீக்கியர்கள் சகல உரிமைகளை கொண்ட மக்களாக உள்ளனர் . திட்டமிட்டு சிலர் தங்களின் சுய விளம்பரம் பெறவே இதை எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

In recent times, protests led by Sikhs advocating for Khalistan have gained attention in America and Canada. However, it is important to recognize that such a movement is unnecessary and lacks a solid foundation. In response, individuals of Indian origin organized a rally in San Francisco to provide a fitting reply. A few of my friends questioned why I support Tamil Elam but not Khalistan? 

The answer lies in the fact that these are two distinct issues. Unlike the Tamil Elam movement, Sikhs in India have not been treated as second-grade citizens. It is crucial to understand the context and nuances of each situation. While support for Tamil Elam may stem from legitimate concerns, the Khalistan movement lacks a strong basis as Sikhs in India do not face systemic problems. They are equals enjoying all due rights here.

#கேஎஸ்ஆர்பேஸ்ட்
#ksrpost
16-7-2023.

எனது சுவடு- பகுதி 31 திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

எனது சுவடு- பகுதி  31
திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார். 
#ksr, #ksrvoice, #radhakrishnan, #yenadhusuvadu, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #எனதுசுவடு, #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #K_S_Radhakrishnan, #ksradhakrishnan,  #kamarajar #kamarajar  #tamilnadu #kingmaker #tamiL  #kamaraj #tamiland https://youtu.be/jd2Nsi7SN2g

#கேஎஸ்ஆர்பேஸ்ட்
#ksrpost
16-7-2023.

*அன்றும் இன்றும் திமுக* #*தலைவர் கலைஞர்காலம்* #*செந்தில்பாலாஜி வழக்கு* #*ஹேபியஸ்கார்பஸ்+ #*HabeasCorpus* அன்று நான் சொன்னது இன்று நடந்தேறிவிட்டது.

#*அன்றும் இன்றும் திமுக* #*தலைவர் கலைஞர்காலம்*
#*செந்தில்பாலாஜி வழக்கு*
#*ஹேபியஸ்கார்பஸ்+  #*HabeasCorpus*

அன்று நான் சொன்னது இன்று நடந்தேறிவிட்டது.
—————————————
 திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று தீர்ப்பளித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே  அமைச்சரின் மனைவி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அது சட்டப்படி தவறு என்று யோசித்தேன். அந்த மனு நிராகரிக்கப்படும் என்று தொடர்ந்து கூறி வந்தேன். 

அன்று நான் கணித்தது இன்று நடந்து விட்டது. 

தங்கள் தலைவருக்கும், முதல்வருக்கும் சரியாக ஆலோசனை வழங்க முடியாத அரைவேக்காட்டு சட்ட ஆலோசகர்களுக்கு மத்தியில் திமுக இப்போது தலையைத் தொங்கப் போட்டு நிற்கிறது.   சுயநலம் கொண்ட உங்கள் அடியாட்கள் மற்றும்  கைக்கூலிகள் பேச்சுக்குச்  செவிசாய்த்தால் இதுதான் நடக்கும்.

2001-ல் ஆலிவர் சாலையில் உள்ள அவரது வீட்டில் திடீரென கைது செய்யப்பட்ட நமது அன்புத் தலைவர் கருணாநிதிக்காக கட்சியின் முக்கிய தலைவர்களான சண்முக சுந்தரம், ஆர்.எஸ்.பாரதி  ஆகியோருடன் நான் சேர்ந்து நாங்கள் 2001 செய்த  அரும்பெரும் முயற்சிகளை இப்போது நினைவு கூர்கிறேன்.  தேசிய மனித உரிமை ஆணையத்தையும், ,மாநில மனித உரிமை ஆணையத்தையும் நீதிமன்றங்களையும் அணுகி சட்டப்படி நடவடிக்கை எடுத்து வந்தோம். கட்சி மேலிடமும் சட்டரீதியான எங்கள் திட்டங்களுக்குத்  தலையாட்டியது.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக வாஜ்பாயி தலைமையிலான அன்றைய மத்திய அரசு கலைஞரை பெயில் இல்லாமல் விடுதலை செய்தது.

அதைப் போல இன்னொரு சமயத்தில் இன்றைய முதல்வர் ஸ்டாலினை அவரது வேளச்சேரி வீட்டில் போலீஸ் கைது செய்தது. அப்போது மாநில மனித உரிமைகள் ஆணையத்தை அணுகி வழக்கை நான் எடுத்துரைத்த பின்பு, ஸ்டாலின் கைது மனித உரிமை மீறல் என்று ஆணையம் ஆணையிட்டது. அவரை உடனடியாக விடுதலை செய்ய பரிந்துரைத்தது. இதற்கு ஸ்டாலின் துணைவியர் திருமதி துர்க்காவதி ஸ்டாலின்
அவர்களை மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கம் அழைத்து சென்றேன்.
இதன் ஆவணங்கள் யாவும் எனது சமூக ஊடகங்களில் பதிவும் செய்துள்ளேன். அது மட்டுமல்ல ஜெயல்லிதா ஊழல் வழக்கை கர்நாடகத்துக்கு மாற்ற நானும், டெல்லி சம்பத்தும் முரசொலி மாறன் எங்களிடம் சொன்ன படி ஆற்றிய பணியை திமுக பொதுக்குழுவில் மாறன் பாராட்டி செய்திதாட்கள் செய்தி வந்ததும் உண்டு.இதற்கு சாட்சி அன்றைய சுகாதார  மத்திய ராஜாங்க அமைச்சர் ஆ.ராஜா, அவரின் செயலார் அகிலன் ராமநாதன்.இப்படி பல பணிகள் …

இப்படியெல்லாம் கட்சிக்காக புத்திசாலித்தனத்தோடும், சட்ட அறிவோடும் இயங்கியவர்கள் எல்லாம் ஒருகாலத்தில் திமுகவில் இருந்தார்கள். அவர்கள்  கட்சியால் மதிக்கப்பட்டு உயர்வாக மதிக்கப்பட்ட நாட்கள் அவை.

இப்போது……..?

What I predicted has happened now

Now I stand vindicated.  Justice  C. V. Karthikeyan, judge of the Madras High Court, today ruled that the habeas corpus petition filed in the case involving the ED’s arrest of DMK minister Senthil Balaji cannot be allowed.

Right from the word go, I have been wondering at the need for the minister’s wife to file the HCP and saying bluntly that the petition would be rejected. It was legally not liable.

Today what I have predicted has happened. 

The DMK now has to stand crest-fallen amid its half-baked legal advisors who could not advise their leader and Chief Minister M K Stalin properly.  This is  what normally happens when you heed the advices of your minions,  sycophants and snobs who are selfish and self-centered at heart, paying just lip service to party ideology.

Now I recall with a sense of nostalgia how along with party stalwarts - Advocate General Shanmuga Sundaram and R. S. Bharathi – and I  moved the heaven and earth when our beloved leader M Karunanidhi was suddenly arrested in a pre-dawn crackdown at  his house on Oliver Road. I was very keenly taking our steps in letter and spirit of law, approaching the National Human Rights Commission, the State Human  Rights Commission and the courts during Kalignar’s and CM Stalin’s midnight arrests 2001.

Luckily our leader was released without bail thanks to the intervention of the then BJP government led by Vajpayee.

And later, on a different occasion when Stalin was arrested at his Velachery residence, I moved the State Human Rights Commission which passed strictures against the arrest which it termed as a violation of rights and took his  wife Thirumathi Durgawathi Stalin SHRC. Initiative task to transfer of corruption charges case against Jayalatha from Tamilnadu given to me and Delhi Sampath by Mursoli Maran.

Those were the days when a clean sanity and dynamism of functionaries prevailed over the half-baked ideas and when the party functionaries worth their salt were respected and held in high esteem. No more they are now in the present DMK.

#செந்தில்பாலாஜி_வழக்கு
#SenthilBalajiArrest
#ஹேபியஸ்கார்பஸ் #HabeasCorpus  

#கேஎஸ்ஆர்பேஸ்ட்
#ksrpost
16-7-2023.

Friday, July 14, 2023

ksradhakrishnan.in

My website, fresh look..
With heavy info like my newspapers column, news letters etc



ksradhakrishnan.in


#மந்திரி இனி எந்திரி

#மந்திரி  இன எந்திரி.. 
—————————————————————

முன்னாள் சாராய மந்திரி 
செந்தில் பாலாஜி யை அமலாக்க துறை காவலில் எடுத்து விசாரிக்க 3 வது நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என்று உறுதி செய்தார் நீதிபதி கார்த்திகேயன். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என நீதிபதி கார்த்திகேயன்.
செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி. லஞ்சம் கொடுத்தவன் குற்றம் என தெரிந்தே கொடுத்திருந்தாலும் அவன் மனைவி நகை உட்பட எல்லாவற்றையும் விற்று, அடகு வைத்துக் கொடுக்கிறான் அதை பிடுங்கித் திங்கறீங்களே என்று செந்தில் பாலாஜி வழக்கில் கேட்டார் நீதிபதி. இன்னும் இலாகா இல்லா மந்திரி என நீடிக்க முடியாது. கண்ணியம், தார்மீகப் பொறுப்பு உள்ளது . மந்திரி  இனி எந்திரி..

 உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான் பின் கண்ணீர் வடிப்பான்.
இங்கு #தகுதியேதடை. கெட்டவன்கள் எளிதாக மந்திரி, எம்பி, எம்எல்ஏ என காசுக்கு ஓட்டு வாங்கி இங்கு ஜெயிப்பது எளிதாகி விட்டது.Now politics is just like trade and commerce & industry. Political surface is majorities occupied by #political_brokers_and_traders.

#கேஎஸ்ஆர்பேஸ்ட்
#ksrpost
14-7-2024

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது #சந்திரயான்_3 #Chandrayaan3



இன்று (14-7-2023)      
விண்ணில் பாய்ந்தது #சந்திரயான்-3



#Chandrayaan3




Single man army is paved way for independence, tranquility, freedom, peace,pleasure, freethinking……

Single man army is paved way for independence, tranquility, freedom, peace,pleasure, freethinking……

“But I have promises to keep, / And miles to go before I sleep, / And miles to go before I sleep.” 

This phrase is used in almost every walk of life, including literature, business, politics, and everyday life.

#ksrpost
14-7-2023.


Thursday, July 13, 2023

#Wren and Martin.

Cleared out all of our many village house book shelves, cupboards, lofts last week . 

Decided that there is very little that we actually want to give away. And NOTHING we want to discard. That having multiple copies of the same series of books is perfectly normal. That a hugely outdated Reader’s digest World Atlas and collector's items etc .

Also found my old, beloved Wren & Martin. The 1968edition. 

#Wren_and_Martin.

#ksrpost
13-7-2023


*Understanding a question is half an answer!*

*Understanding  a question is half an answer!*

#ksrpost
13-7-2023.


இந்திய சமுதாயம், 1000 ற்கு மேற்பட்ட வருடங்களாக சாதி வரிசையாக மொகலாயர்,ஐரோப்பியர் என அடிமைகளாகத்தானே வாழ வைத்தனர் . இப்போது அதையே வேறு விதமாக அரசியல் கட்சிகள் செய்கின்றன.வேறு வேஷம்,வேறு தொனி அவ்வளவுதான்.

இந்திய சமுதாயம், 1000 ற்கு மேற்பட்ட வருடங்களாக சாதி வரிசையாக மொகலாயர்,ஐரோப்பியர் என அடிமைகளாகத்தானே வாழ வைத்தனர் . இப்போது அதையே வேறு விதமாக அரசியல் கட்சிகள் செய்கின்றன.வேறு வேஷம்,வேறு தொனி அவ்வளவுதான். 
https://youtu.be/wrIVHBwI6kU

Wednesday, July 12, 2023

Senthil Balaji is not just corrupt. He ran a big well established system of corruption.

#செந்தில்பாலாஜி_கைது_குறித்து:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்.

மேத்தா/  

கைதாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜியை நீதிபதி நேரில் சென்று உடல்நிலை உடல்நிலை குறித்து விசாரித்து  அதன் பிறகு தான் அவரை நீதிமன்ற காலில் வைக்க உத்தரவிட்டார் கைது செய்து 24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் அதன்படி ஆஜர் படுத்தி நீதிமன்ற காலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைதாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜியை நீதிபதி நேரில் சென்று உடல்நிலை உடல்நிலை குறித்து விசாரித்து  அதன் பிறகு தான் அவரை நீதிமன்ற காலில் வைக்க உத்தரவிட்டார் கைது செய்து 24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் அதன்படி ஆஜர் படுத்தி நீதிமன்ற காலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

யாருடைய நிர்பந்தினாலும் அப்பாவிகளை கைது செய்ய மாட்டோம் என வாதிட்டார் மேத்தா.

 1.ரிமாண்ட் உத்தரவை எதிர்த்து செ. பா. தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. 
மாறாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட டி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் மனுதாரர் Habeas  corpus writ எப்படி போட முடியும் ?

ஒரு நீதிபதி ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் கொடுத்துவிட்டார்.

2. நீதிமன்ற காவலில் இருக்கும் செ. பா.க்கு ஜாமீன் மனு கேட்டு இவர்கள் மனு தாக்கல் செய்துவிட்டனர்.
 மனுதாரர் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, ​​அவர் காவலை ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம். 
அவர் காவலை ஏற்றுக்கொண்ட நிலையில் எப்படி இப்போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்.

3. ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முகாந்திரம் எங்கே உள்ளது. 
காவலில் வைத்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோர முடியாது என்பதால் விசாரணை நீதிமன்றத்தை அதிகாரிகள் நாடினர்.
 மருத்துவமனை மாற்றம் தொடர்பாக இடைக்கால உத்தரவை நாங்கள் பிறப்பித்தபோது ஏன் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென கேட்கவில்லை

4. கைது செய்து ஆஜர்படுத்திய நீதிமன்றத்தில் தான் முதலில் கேட்க முடியும். 
அதனால் அங்கு கேட்டோம், 8 நாட்கள் எங்களுக்கு காவல் வழங்கப்பட்டன.
 ஆனால் அந்த நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி விசாரிக்க முடியவில்லை.

5. காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது.
 அதனால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை நாடியது....

சென்னை உயர் நீதிமன்றம் செ. பா. தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவில் அவர் நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்படும்.
 முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியும். 
அந்த அடிபடையில் காவலில் வைத்து விசாரிக்க கோரினோம். 
இல்லாவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்ய தவறியதாகி விடும்.

7. நாங்கள் ஆதாரம் எல்லாம் இல்லாமல் கைது செய்யவில்லை. 
உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

செ. பா. வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது.
 அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார்.

8. கைது செய்த 10 மணி நேரத்துக்குள் கைது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது; 
கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது; 
ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார்.

9. கைது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கும், கைதுக்கான காரணங்களை தெரிவித்த ஆவணத்தை செந்தில் பாலாஜிப்பெற மறுத்ததற்கான ஆதாரங்களும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 
கைதின் போது செந்தில் பாலாஜிக்கு சட்ட உதவிகள் கிடைத்தன.

Tuesday, July 11, 2023

*India's Coast* .




The 7516.6 km long Indian coastline covers nearly 6100 km of the continent’s land area, along with the islands of Andaman, Nicobar, and Lakshadweep. 13 states and Union Territories are located along India’s coastline.

The eastern coastal plains are situated along the Bay of Bengal, whereas the western coastal plains are along the Arabian Sea.

Kutch and Kathiawar coast: The coasts of Kutch and Kathiawar were created by the sediments deposited by the Indus River. Kutch was formerly a gulf. During the monsoons, the Kutch region is separated into the Great Rann in the north and the Little Rann in the east by shallow water. Kathiawar, on the other hand, is located south of Kutch.

Konkan coast: It stretches from Goa in the south to Daman in the north. The two main crops in this area are cashews and rice.

Kannada coast: It stretches between Marmagaon and Mangalore and is known as the Kannada coast.

Malabar coast: The comparatively broad Malabar coast stretches from Mangalore to Kanyakumari.

நிலவில் 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளின் வாக்கில் கால் பதித்த 12 விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் இன்னும் அழியவில்லை.



அந்த கால்தடங்களை அழிப்பதற்கு அங்கு காற்றோ மழையோ இல்லை; எனவே மேலும் பலநூறு ஆண்டுகளுக்குக்கூட அந்த கால்தடம் அழியாமல் இருக்கலாம் .*அப்படியா*? *உண்மையா..?*




#ksrpost
11-7-2023.

இன்றைய அரசியல்

*விவசாயம் போன்று அரசியல்  குலத்தொழில் அல்ல*…
*ஜனநாயக மாண்பை நிலை நாட்டவும் நேர்மையான மக்கள் நல அரசை விலையற்ற வாக்குகள் பெற்று அமைப்பு அமையவே அரசியல் ஆகும். இன்றைய சூழலில் அரசியல் இங்கு இல்லை. அரசியல் என்ற பெயரில் வியாபாரம்*….
#ksrpost
11-7-2023

Monday, July 10, 2023

#*Indian old Parliament House*. #*இந்திய பழைய நாடாளுமன்றம் கட்டிடம்* #*Chambal Ravines*, #*Mitawali Temple*

#*Indian old Parliament House*. 
#*இந்திய பழைய நாடாளுமன்றம் கட்டிடம்*
#*Chambal Ravines*, 
#*Mitawali Temple*.
—————————————
Elderly locales say "Best kept secret, 64 Yogini Mitawali Temple Offbeat Wonder in Chambal Ravines, Mitawali Temple that inspired the design of Indian old Parliament House. 
சாம்பல் ரவீன்ஸ், மிடாவாலி கோயில் இந்திய பழைய நாடாளுமன்ற மாளிகை வடிவமைப்பை ஊக்குவித்த ஆஃப்பீட் அதிசயம்.
"வெள்ளையர்கள் பீரங்கியுடன் இந்த கோயிலை உடைக்க வந்தார்கள் ஆனால் பீரங்கியின் ஓடுகள் உச்சத்தை அடையவில்லை" என்று இங்குள்ள முதியவர்கள் கூறுகிறார்கள். 64 - யோகினி மிடாவாலி கோயில்




#*லா‌க்‌மி*#*LAKME* #*நேரு* #*Nehru* #*இந்திரா காந்தி* #*Indira gandhi* #*டாடா* #*Tata*

#*லா‌க்‌மி*#*LAKME* 
#*நேரு* #*Nehru*
#*இந்திரா காந்தி* #*Indira gandhi*
#*டாடா* #*Tata*
————————————
கடந்த 1949-ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் டாடா குழுமத்திடம் இருந்து 49 சதவீத பங்குகளை அரசு கையகப்படுத்தியது. ஜே.ஆர்.டி. டாடா விமானப் போக்குவரத்து துறையை மிகவும் நேசித்தார். அவரே ஒரு உரிமம் பெற்ற விமானி ஆவார். அதனால், அரசின் தலையீட்டிற்கு எதிரான தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தினார்.

டாடா ஏர் இந்தியாவை ஒரு சர்வதேச பிராண்டாக மாற்ற ஜே.ஆர்.டி. டாடா விரும்பினார். ஆனால், அன்றைய அரசு நிர்வாகத்தின் கீழ் அது முடியாத ஒன்றாகிவிட்டது. ஏர் இந்தியா பங்குதாரர்களும், மற்ற பயனாளிகளும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று அவர் கருதினார். முடிவில், 1953-ம் ஆண்டு ஏர் இந்தியா நாட்டுமையாக்கப்பட்டது. இது ஜே.ஆர்.டி. டாடாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

அந்த நேரத்தில், இந்தியா அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சர்வதேச அளவில் மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா கொடுத்திருந்த கடனின் அளவு உச்சம் தொட்டது. இதனால், டாலரின் மதிப்பும் அதிகரித்தது. அதனால், அந்நிய செலாவணியை கட்டுக்குள் வைத்திருக்க, அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதிக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஏனெனில், பெரும்பாலான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தியோர் பெண்களாகவே இருந்தனர்.
பிரதமரின் இல்லத்திற்கே சென்று பெண்கள் அமைப்பினர் பலரும் தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். 

நேருவின் மகளான இந்திராகாந்தி அதனை செவிமடுத்தார். அவரே தனது தந்தையிடம் சென்று இதுவிஷயத்தில் ஏதாவது செய்யுமாறு வலியுறுத்தினார்.
ஒருமுறை, பிரதமர் நேரு அவரது அலுவலகத்திற்குச் செல்லும் போது வழிமறித்த பெண்கள் சிலர், இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்களால் உங்களுக்கு என்ன பிரச்னை? என்று கேள்வி எழுப்பினர்.
நேருவின் தனிச் செயலாளர் எம்.ஓ.மாத்தாயிடம் இந்த பிரச்னையை கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மாத்தாய் அந்த பெண்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்திரா அதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, 'அது விஷயத்தில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?' என்றார் மாத்தாய். அதற்கு இந்திரா, அதுபோன்ற பொருட்களை இந்திய நிறுவனங்கள் எதுவும் தயாரிக்கவில்லை என்று பதில் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, டாடா நிறுவனத்தின் டெல்லி பிரதிநிதியை அணுகிய மாத்தாய், அழகுசாதன நிறுவனம் ஒன்றை தொடங்க டாடா குழுமம் பரிசீலிக்க வேண்டும் என்றும், அதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.

(Picture-Jawaharlal Nehru and his daughter Indira Priyadarshini on board the British navy ship HMS Albion to watch a display of flying air craft.)



Sunday, July 9, 2023

#Rains slightly in Chennai -Robert Frost lines

#Rains slightly in Chennai


"Come over the hills and far with me,
And be my love in the rain.

Come, be my love in the wet woods; 
come, Where the boughs rain when it blows.

Oh, come forth into the storm and rout
And be my love in the rain."
-#Robert Frost 


எனது சுவடு-30 #காமராஜர் சென்னைகடற்கரை சிலை #ஸ்தாபனகாங்கிரஸ்_ஆளும் இந்திரா காங்கிரஸ் இணைப்பு #congress(o)ruling congress merger tamilnadu.

#எனது_சுவடு_பகுதி 30
கே. எஸ். இராதாகிருஷ்ணன் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார். 
#ksr, #ksrvoice, #radhakrishnan, #yenadhusuvadu, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #எனதுசுவடு, #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #K_S_Radhakrishnan, #ksradhakrishnan,  #kamarajar #kamarajar  #tamilnadu #kingmaker #tamiL  #kamaraj #tamilanda #chennaikamarajarstatue #காமராஜர்_சென்னைகடற்கரை_சிலை
#ஸ்தாபனகாங்கிரஸ்_ஆளும்_இந்திரா_காங்கிரஸ்_இணைப்பு #congress_o_ruling_congress_merger_tamilnadu.

youtu.be/spSYm9Xgdjk

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
9-7-2023.

இன்றைய அரசியல் × அறம்

#இன்றையஅரசியல் × #அறம் 
———————————————
அறமற்ற தற்போதைய அரசியலின் போக்கை தங்கள் நேர்காணல் தலைகீழாக மாற்றப்போகிறது என்று கனவு காணும் நபர்கள் மற்றும் அனைவருக்கும் புரிதல் வேண்டும். இன்றைய அரசியல் தன் குடும்பம் ரீதியான நலன், மதம்,சாதி, பணம், ஓட்டு காசுக்கு விற்பனை ஆகி விட்ட நிலையில், கொள்கை சார்ந்த நேர்மையான  மக்கள் நல களப்பணி அரசியல் தேவை இல்லை ஆகிவிட்டது.

அறம் சார்ந்த தமிழ் உலகு சசிகலா போன்ற ஊழல் குற்றவாளிகளை (குற்றம் உறுதி செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற) மையமாக வைத்து அரசியல் பேசுவதும், அரசியல் நடத்துவதும் சகிக்க முடியாத வண்ணம் இருக்கிறதே? என்ற போது, 90 வயது எட்டிய அனுபவமிக்க ஒரு தமிழக தலைவர் சொன்னது, 
ஆவேசம் வந்தவரைப் போல"எந்தக் காலத்துல நீங்க இருக்கீங்க? அறமாவது மண்ணாங்கட்டியாவது, எல்லாமே காசும், பணமும், தன் குடும்பம்,அதிகாரமும் தான் இங்கே. அரசியலில் அறத்தைத் தேடுவது முட்டாள்தனமானது" என்று சொன்னார்.
ஆமாம், உண்மைதான் உத்தமர் தேர்தலில்
போட்டியிட்டலாம் அவர் படம் போட்ட பெரிய ரூபா நோட்டு வந்தால்தான் காந்தியாரே வெற்றி பெற இங்கே முடியும் என்ற நிலை இன்று….

So,
Good people will leave in droves when self promotion is the only agenda put forward.

#இன்றையரசியல்
#PoliticsToday
#voteforsales
#Dynastypolitics 
#குடும்பஅரசியல்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
9-7-2023

Saturday, July 8, 2023

#*இன்றையரசியல்* #*Politics Today* *மனிதர்கள் வருவார்கள்; மனிதர்கள் போவார்கள்! ஆனால் தேம்ஸ் நதி ஓடிக் கொண்டே இருக்கிறது*…. *Thames goes on while men may and men go…*

#*இன்றையரசியல்* #*Politics Today* 
*மனிதர்கள் வருவார்கள்; மனிதர்கள் போவார்கள்! ஆனால் தேம்ஸ் நதி   ஓடிக் கொண்டே இருக்கிறது*…. 
*Thames goes on while men may and men go…*
—————————————
நீங்கள் இப்போது இதய வலியில் இருக்கலாம்!
ஆனால் அரசியல் அதிகாரத்தைப் பொறுத்தவரை நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். யாரால்? உங்கள் அற நெறி அற்ற இயல்பால்…..

நீங்கள் அடைய நடத்திய தந்திரப் போராட்டத்தில்   உங்களால் எத்தனை பேர் இதய வலியோடு போராடினார்கள் தெரியுமா? ஈவிரக்கமற்ற இதயமற்ற அரசியல் சூழ்ச்சியில் உங்களால் ஏமாற்றப்பட்ட திறமைசாலிகள்,ஆற்றல்படைத்தவர்கள பரிதாபகரமானவர்கள் எத்தனைபேர் திக்குத் திசையின்றி வழிதவறி விழுந்துவிட்டார்கள் தெரியுமா? இவர்களின் பாவம் உங்களை சும்மா விடாது…  உங்கள் தொழில் நடக்கின்றது…நீங்கள. உங்கள் குடும்பம் வாழ தூய்மையான பொது வாழ்வு,அரசியல்,மக்கள் பணி என சொல்லி கொள்வீர்கள்!?… வாழ்க உங்கள் ரத்த சொந்தங்கள்…..அதற்குத்தனோ உங்களுக்கு அரசியல்…

ஆனால்,
மனிதர்கள் வருவார்கள்; மனிதர்கள் போவார்கள்! ஆனால் தேம்ஸ் நதி   ஓடிக் கொண்டே இருக்கிறது என்று ஓர் ஆங்கிலக் கவிஞன் எழுதினான். ஆம். !அதைப்போலத்தான் காலத்தின் சமநீதியும்! 

You are now  in heart pain due to your own commissions and omissions….
But think of the way you have come to be what you are now in terms of political power.  On the way to attainment of power politics , how many people you have taken for a ride have fallen victim to heartburns. The hapless and the miserable have fallen by the wayside in your heartless  political craft.  Disease is a great leveler indeed. 

But,
As the Thames goes on while men may and men go, the poetic justice goes on forever.

#இன்றையரசியல் #PoliticsToday
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
8-7-2023.


கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...