Thursday, July 30, 2026

#மேகாதாட்

 #மேகாதாட்

மேகாதாட்வில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவற்கான திட்ட அறிக்கை (DPR) திருப்பி அனுப்பிவைப்பு!! தமிழகத்தின் ஒப்புதலின்றி இத்திட்டம் நடைபெறாது என்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளதையே இது காட்டுகின்றது!! உண்மை இவ்வாறு இருக்க, இரண்டு நாட்களுக்கு முன்னதாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய பாஜக அரசுக்கு எதிராக அறிக்கை விட்டவர்கள் இப்போது மன்னிப்பு கேட்பார்களா? தமிழகத்தை விட கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் அதிகமுண்டு எனும் நிலையிலும், தேர்தல் அரசியலை புறம்தள்ளி, தமிழக மக்களின் நலனே முக்கியம் எனச்செயல்படும் பாஜகவின் செயலை பாராட்டி அறிக்கை தான் விடுவார்களா? #makadat #BJP4IND #BJP4TN




புத்திர பாசத்தில் வாரிசு மகனை அரசியலுக்கு

 புத்திர பாசத்தில் வாரிசு மகனை அரசியலுக்கு

கொண்டு வந்தார். இப்போது படும் ரணங்கள் அதிகம். அனுபவிக்கட்டும். பலரின பாவங்கள். இது எங்களுடைய 30 ஆண்டு கணக்கு . இதுதான் எல்லா வாரிசு விரும்பி தலைவர்களின் இன்றைய நிலை. இவர்கள் வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டுகள். He brought his heir son into politics out of paternal affection. Now, the wounds he suffers are many. Let him experience them. The sins of many. This is our 30-year account. This is the current state of all those heir-preferring leaders today. May these people live for thousands and thousands of years. #dyanastypoltics

"ஆறு என்பது வெறும் தண்ணீரல்ல; அது தன் இரு கரைகளிலும் வரலாற்றையும், கலையையும், மனித நம்பிக்கைகளையும் சுமந்து வரும் ஒரு ஜீவநதி."

 "ஆறு என்பது வெறும் தண்ணீரல்ல; அது தன் இரு கரைகளிலும் வரலாற்றையும், கலையையும், மனித நம்பிக்கைகளையும் சுமந்து வரும் ஒரு ஜீவநதி."

- தி.ஜானகிராமன் •••• கொள்ளையடிக்கும் நோக்கில் எங்கள் நிலத்தை பாலைவனமாக ஆக்கிய பாவிகள் எங்களின் கல்லணை கால்வாய் என்கிற புது ஆறு என்பது சர் ஆர்தர் காட்டன் மற்றும் கர்னல் டபிள்யூ.எம். எல்லீஸ் அவர்களால் சேர்ந்து உருவாக்கப்பட்டது அது உருவாக்கப்படுவதற்கு முன் நூற்றுக்கணக்கான ஏரி மற்றும் குளங்கள் இருந்தன அதற்கான நீர் ஆதாரங்களாக பல்வேறு காட்டு வாரிகள் இருந்தன உதாரணமாக முதலைமுத்துவாரி செம்புடான் வாரி இப்படியாக பல்வேறு வாரிகள் இந்த ஏரிகளை நிரப்பின இவை வருடம் முழுவதும் நீர் ஆதாரத்தை கொடுத்துக் கொண்டே இருந்தன ஆடு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் நீர்பஞ்சம் என்று இருந்ததே இல்லை அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய கல்லணை கால்வாய் ஆறு திட்டத்தில் இந்த வாரிகளில் வரும் நீர் கல்லணை கால்வாய் கலக்காமல் நேரடியாக வெண்ணாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் கலந்து செல்வது போல் கல்லணை கால்வாய்க்கு கீழ் ஒரு வடிகால் வாய்க்காலை உருவாக்கி அதன் வழியாக வாரி நீரை #வெண்ணாறு மற்றும் #குடமுருட்டி ஆற்றில் கொண்டு சேர்த்தார்கள் வழக்கம்போல் வாரி ஏரிகளை நம்பி இருந்த விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு #கல்லணைகால்வாய் ஒரு தீர்வாக இருந்தது எனக்கு விவரம் தெரிந்து எவ்வளவு கோடையிலும் கல்லணை கால்வாயில் நீர் இருந்து கொண்டே இருந்தது அதுதான் எங்களுக்கு நீர் ஆதாரம் குடிப்பதற்கு குளிப்பதற்கு ஆடு மாடுகளுக்கு நீர் வற்றிய கோடையிலும் கூட மணலை நோண்டி நீர் எடுத்துக் கொண்டிருந்தோம் எங்களுக்கும் மாடுகளுக்கும் யாரோ ஒரு புண்ணியவான் ஒரு திட்டத்தை முன் வைத்து கொள்ளையடிப்பதற்கு எங்கள் கல்லணை கால்வாயை பயன்படுத்திக் கொண்டு விட்டான் கால்வாய் முழுக்க கான்கிரீட் போட்டுவிட்டு எங்கள் நிலம் இன்று பாலைவனமாக ஆகிவிட்டது. விரைவில் மக்கள் எழுச்சியோடு. கான்கிரீட் தளத்தை உடைத்து மணலை மேலே கொண்டு வந்து எங்களுக்கான நீரை நாங்கள் எடுத்துக் கொள்வோம் எங்கள் நிலம் எங்கள் நீர் !



உங்கள் கடின உழைப்பை உயர்த்துங்கள்,

 உங்கள் கடின உழைப்பை உயர்த்துங்கள்,

உங்கள் நேர்மையைக் காத்துக்கொள்ளுங்கள். பணம் உங்கள் மீது கவனத்தை ஈர்க்கலாம், ஆனால் உங்கள் குணமே உங்கள் அடையாளத்தை வரையறுக்கிறது!!!

நீட் க்கு முன் ஒருவருடத்தில் MBBS சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 30 பேர்தான்..

 நீட் க்கு முன் ஒருவருடத்தில் MBBS சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 30 பேர்தான்..

போன வருஷம் மட்டும் MBBS சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 500 க்கும் மேல.. இன்னுமாடா ஏமாத்தறீங்க..

எல்லாரிடமும் நேசக்கரம் நீட்டுங்கள்..

 எல்லாரிடமும் நேசக்கரம் நீட்டுங்கள்.. ஏற்றால் மகிழ்ச்சி.. ஏற்காதவர்கள் எந்த விதத்திலும் நம் வாழ்வை பாதிக்கப் போவதில்லை என்பதை மனதில் கொண்டு,.. அனாவசியமான கலக்கத்தை தூக்கி எறிந்தாலே மகிழ்ச்சியடைவீர்கள் வாழ்வில்..

உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,

 உற்றாரை யான் வேண்டேன்,

ஊர் வேண்டேன், பேர் வேண்டேன், கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும், குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா, உன் குரை கழற்கே கற்று ஆவின் மனம்போலக் ….கசிந்து உருக வேண்டுவனே!

நல்ல பணி … என்ன சொல்ல…

 நல்ல பணி … என்ன சொல்ல…

அரசியல் களத்தில் இவருக்காக உழைத்தவர்களை தெருவில் நிற்க வைத்தார்… 30 வருட கணக்கு பலரின் பாவம். வாழ்கையில் சந்திக்க கூடாதாத மனிதன் இவர். விஜயின் தவெக குறித்து வைகோ பேச்சு - அன்றும், திமுக கூட்டணியில்.. இன்றும்.. நாடு அறியும்.
Quote
News18 Tamil Nadu
@News18TamilNadu
ராணுவம் வருகிறபோது முன்னே சென்று கண்ணி வெடிகளை அகற்றும் SAPPERS AND MINERS தவெக அரசுக்கு மதிமுக இருக்கும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ #MDMK #Vaiko #TVKGovt #News18Tamilnadu | News18Tamil.com

#westerghats

 #westerghats




நீங்கள் அனைத்திற்கும் தடை கேட்கிறீர்கள் அதனால் தான் தமிழ்நாட்டிற்கு

 நீங்கள் அனைத்திற்கும் தடை கேட்கிறீர்கள் அதனால் தான் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் வருவதில்லை, அவை அனைத்தும் ஆந்திராவிற்கு வந்து விடுகிறது, இதை செய்து கொண்டே இருங்கள் நன்றி ...

தெலுங்கு தேச எம்பி - லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு



#Delhi #NEETProtest #CockroachJantaParty #DelhiPolice

 #Delhi #NEETProtest #CockroachJantaParty #DelhiPolice


Uploading: 111582 of 111582 bytes uploaded.


காவிரியில் 3,500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்ட காவிரி

 காவிரியில் 3,500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்ட காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு. மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்திய கர்நாடக முதல்வர். உச்சநீதிமன்றத்தில் கர்நாடக மேல்முறையீடு செய்யும். மோசமான கர்நாடகா…

#காவிரி #cauveri

யாரோ ஒருவன்

 யாரோ ஒருவன்

திடீரெனத் தலைவனாக விரும்புகிறான். வேறு யாரோ ஒருவன் அவன் கால்களில் சட்டென வீழ்கிறான். மனிதன் இன்னொரு மனிதனின் காலடியில் சுயமரியாதையைக் கழற்றி வைக்கும் அந்த நொடி, இப்பூமியின் ஆகப்பெரிய அசிங்கம் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. கேமரா வெளிச்சங்கள் கூச, ஒரு பிளாஸ்டிக் வாளிக்காகவோ அரிசிப் பைகளுக்காகவோ மேடையில் நடக்கும் இந்தத் தர்ம கூத்தில் கொடுப்பவனின் அகந்தையும் வாங்குபவனின் கூனும் மட்டுமே வெளியே தெரிகின்றன. நடிகர்களின் பிம்பங்களுக்கும் அரசியலின் வெற்று வாக்குறுதிகளுக்கும் இங்கே மனிதமானம் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. படித்தவர்கள் நிரம்பிய இந்தச் சபையில் யாரும் கூச்சப்படுவதில்லை. புத்தகங்கள் கற்றுக்கொடுத்த நிமிர்வை கைதட்டல்களுக்கு நடுவே அவர்கள் சத்தமில்லாமல் புதைத்து விடுகிறார்கள். ஒரு இலவசப் பொருளைப் பெறும் கையோடு அவன் இழந்துவிட்டது தன் கால்களை மட்டுமல்ல, தன் பிள்ளைகளின் எதிர்கால நிமிர்வையும்தான்! ••• எங்கோ கூட்டத்தில் கேட்டது இந்த அரசியல் கடந்த 1991 முதல் தமிழகத்தில்….. என்ன செய்ய ⁉️ Courtesy அர்சா #tamilnadupoltics #தமிழகஅரசியல்



#தமிழகநீர்வளம்

 #தமிழகநீர்வளம்

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள் மற்றும் பல நீர்த்தேக்கங்கள் உள்ளன! இவற்றின் ஒட்டுமொத்தக் கொள்ளளவு 224 டிஎம்சி ஆகும்! இதில் மேட்டூர் பவானிசாகர் பெரியாறு உள்ளிட்ட 35 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டிஎம்சி! இந்த அணைகள் பல்வேறு மாவட்டங்களில் பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் மட்டுமின்றி தொழிற்சாலைகளின் நீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன! தற்போது 20 அணைகளிலும் சேர்த்து 70.29 டிஎம்சி அதாவது 33.33% நீர் மட்டுமே உள்ளது! இதன் மூலம் மாநிலம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது! அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 36.47 டிஎம்சி, ஈரோடு பவானிசாகர் 6.25,கோவை பரம்பிக்குளத்தில் 3.65, சாத்தனூர் 2.12 டிஎம்சி, பேச்சிப்பாறை இரண்டு டிஎம்சி தண்ணீர் என்ற அளவில் அதிகபட்சம் இருப்பு உள்ளது! இப்படியாக “அணைகளில் சேமிக்கப்பட்டுள்ள நீர் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காகத் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகள் உள்ளன! அவற்றில் 419 ஏரிகள் 100% மும்,579 ஏரிகள் 76 முதல் 90% மும்,51% முதல் 75 சதவீதமும் நிரம்பியுள்ளன.! அதேபோல் 2476 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும் 6119 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பி இருக்கின்றன 3488 ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது! இதில் அதிகபட்சமாக மதுரையில் 1340 ஏரிகளில் 162 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன! அதேபோல் சிவகங்கை 1459-ல் 523 ஏரிகளும் திருவண்ணாமலையில் 697 -ல் 39 ஏரிகளிலும்,தஞ்சாவூரில் 641-ல் 156 ஏரிகளிலும் திருவள்ளூரில் 578-ல் 156 ஏரிகளிலும், திண்டுக்கல்லில் 190-ல்151 ஏரிகளிலும், நெல்லையில் 780-ல் 132 ஏரிகளிலும் தண்ணீர் இல்லை!! இதற்குத் தற்போது கடும் வெயில் கொளுத்துவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது! கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது! சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் பூண்டி ஏரிக்குத் திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் இப்போது 330 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது! சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்க் கண்டிகை, செம்பரம்பாக்கம், மற்றும் வீராணம் ஆகிய நீர் நிலைகளையும் சேர்த்து 5.77 டிஎம்சி மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதிலிருந்து சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக மாதம் ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் எடுக்கப்படுகிறது! ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8 டிஎம்சி கையிருப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது! தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில்தான் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்! அதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இடைவெளி இருக்கிறது! அதுவரை தமிழக அணை மற்றும் ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்துத் தான் நாம் சமாளிக்க வேண்டும்! ஆனால் இந்த ஏரிகள் வற்றிக் கிடப்பது ஆழ்ந்த கவலையாகவும் பற்றாக்குறை ஏற்படும் போது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்கள் என்றும் தோன்றுகிறது. என்னை பொறுத்தவரையில் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் நீண்ட மழைக்காலங்களில் இவ்வாறு நீரைச் சேமிப்பதற்கு வேறு என்ன வழிகள் இருக்கிறது என்பதைத் தமிழ்நாடு அரசு யோசிக்க வேண்டும்! ஏற்கனவே அது வறட்சி மாநிலம் என்று சொல்லப்பட்டிருப்பதால் வருங்காலத்தில் நீர் ஆதாரத்திற்கான தொலைநோக்குத் திட்டங்கள் தேவை என்பதையே மேற்கண்ட ஏரிகளின் வறட்சி ஒரு அபாயமாகச் சுட்டிக்காட்டுகின்றது.. இதற்கிடையே நிறைய ஊர்ப்பகுதிக்குளங்களையும் ஏரிகளையும் மண்ணள்ளிப் போட்டு மூடி அதை வீட்டடிகளாக மாற்றி விற்று விட்ட கொடுமை எல்லாம் இந்தத் தமிழகத்தில் நடந்திருக்கிறது! இவற்றை அடையாளம் காண்பது இனி மிகச் சிரமம்! #tamilnadu_waterresources #தமிழகநீர்நிலைகள் #dam #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost #KSRadhakrishnan



Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...