Tuesday, July 14, 2026

எப்படி மோடியை விமர்சித்த நூலை வெளியிடுவார்.

 எனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழா டெல்லியில் கான்ஸ்டியூசன் கிளப் ஹாலில் நடக்கிறது!துணை ஜனாதிபதி திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள் அதை வெளியிட வேண்டும் என்று வைகோ அழைத்த போது அவர் மறுத்துவிட்டார். அவர்

எப்படி மோடியை விமர்சித்த நூலை வெளியிடுவார். அதன் பிறகு என்ன வைகோ அவர்களே! நீங்கள் இந்திரா காந்தி சோனியா காந்தி ராஜீவ் காந்தி ராகுல் காந்தி போன்றவர்களை காறிப் துப்பி விமர்சனம் செய்தீர்கள்! அவர்களது குடும்பத்தைப் பற்றி கடுமையாக வசை பாடி உள்ளீர்கள்! போர்பஸ் ஊழல் இலங்கை தமிழர் பிரச்சினை முள்ளிவாய்க்கால் உட்பட அவ்வளவையும் பேசிவிட்டு உங்களது நூலை வெளியிட அவர்களை எந்த முகத்தை வைத்துக்கொண்டு அழைக்கிறீர்கள்?. உங்கள் நூலை ராகுல் காந்தியையும் ப.சிதம்பரத்தையும் வைத்து எப்படி வெளியிட முடியும்!? நீங்கள் குற்றம் சாட்டியவர்களே அந்த நூலை வெளியிட வேண்டும் என்று அழைத்தால் என்ன அர்த்தம்! தனக்கு வேண்டுமென்றால் நேரத்திற்கு ஒரு பேச்சு அங்கு ஒரு முகம் இங்கு ஒரு முகம் காட்டுதல் இது வேடிக்கையாகத் தெரியவில்லையா! இல்லை இதெல்லாம் அரசியல் சகஜம் என்கிறீர்களா? இரண்டு எம்எல்ஏக்களை நீங்கள் ராஜினாமா பண்ணினால் நான் வந்து உங்களுக்கு பிரச்சாரம் செய்து ஜெயிக்க வைக்கிறேன் என்று விஜய் சொன்னார் என்று சொல்கிறீர்களே !எங்கே வைத்துச் சொன்னார் எப்படி சொன்னார் என்று தெரிய வேண்டுமே! இப்படி மாற்றி மாற்றி பேசினால் என்ன அர்த்தம்! நேற்று வரை ஸ்டாலின் நல்லவர் வல்லவர் சத்தியசீலர் என்றீர்கள்! இன்று எனக்கு ஸ்டாலினைப் பிடிக்கவில்லை அவர் என்னைக் கேவலப்படுத்தி விட்டார் என்கிறீர்கள்! இன்றைக்கு விஜய் ஒரு ஒப்பற்ற தலைவர் அவர் ஒபாமாவைப் போன்றவர் என்றெல்லாம் அள்ளி விடுகிறீர்கள்! ஜெயலலிதாவைப் புரட்சித்தலைவி என்பீர்கள்! வாஜ்பாய் ஒரு அற்புதமான மனிதர் என்பீர்கள்! பாஜக ஒரு அருமையான கட்சி! அதே போல் மோடி ஒரு அற்புதமான மனிதர்! ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்.! என்றெல்லாம் சொன்னீர்கள். 2014 ல் மோடியை அணைத்துக் கொண்டு சால்வை எல்லாம் போர்த்தினீர்கள். ஒரு நாடகத்தில் தான் இத்தனை காட்சிகள் மாறும்!யதார்த்தத்தில் வாய்ப்பே இல்லை.



எப்போதும் நம் வாழ்க்கை நம்மைச் சார்ந்தவர்களுக்கு அமைதியும், நம்பிக்கையும் கொடுக்க கூடியதா அமையணும்.

 எப்போதும் நம் வாழ்க்கை நம்மைச் சார்ந்தவர்களுக்கு அமைதியும், நம்பிக்கையும் கொடுக்க கூடியதா அமையணும்.. எப்போதும் நாம் நேசிக்க மட்டுமே கத்துக்கணும்.. வெறுப்பு, பகை பொறாமைங்கற எந்த உணர்வும் நமக்குள்ளே வர வேண்டாம். ஈகோ பார்த்துகிட்டு வாழ்க்கையைத் தொலைச்சிட்டு வேதனையில் வாடறதை விட மறந்து மன்னிச்சுட்டு அன்பு காட்டுவோம். எது நடந்தாலும் அது நாம் அடுத்தவரை புரிஞ்சுகிற சந்தர்ப்பங்கள்ன்னு நினைச்சுக்கணும்.. அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கைன்னு, மற்றவங்க அங்கீகாரத்துக்காக ஏங்கி நிற்காம துணிச்சலாக, தன்னம்பிக்கையோடு நம் வாழ்க்கைப் பாதையில் நடந்து போவோம்.

மத்திய அரசின் (Publication division)

 மத்திய அரசின் நூல்கள் வெளியீட்டுத் துறையான (Publication division) ஐ என் பி யில் உயர் அதிகாரி நண்பர் சஞ்சய் கோஸ் அவர்களைச் சந்திக்கச் சென்னை படேல் பலன் சென்றேன் அவர் பல செய்திகளைச் சொன்னார் . மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சரிதத்தை சென்னை பெசன்ட் நகரில் உள்ள உ வே சாமிநாதர் நூலகம் விரிவாக வெளியிட்டுள்ளது.

அதிகப் பக்கங்கள் கொண்ட அந்த நூலை சுருக்கி எளிமையான மொழியில் சரியான முறையில் சிறப்பாக அச்சிட்டுக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆர்வம் கொண்டார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த நூல் முறையாக வெளிவந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் திரு கோஸ் என்னிடம் சொன்னார்.! மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சரிதம் அவர் வாழ்ந்த வரலாற்றுப் பின்னணிகள் அவர் செய்த தமிழ்த் தொண்டுகள் யாவும் கால வரிசைப் பிரகாரம் அச்சிடப்பட்டு அருமையாகக் கொண்டுவரப்பட்டுள்ளது! திருவாடுதுறை ஆதீனத்தில் அவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றியது அவருக்கும் சீடராக இருந்தத உ வே சாமிநாதருக்கும் உள்ள தொடர்புகள், அவர்கள் ஆற்றிய தமிழ் பணிகள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவர்கள் தொடர்ச்சியாக செய்த தமிழ் ஆய்வுகள் என கடந்த நூற்றாண்டில் செய்த தமிழ் அறிவுப் பெட்டகங்களை கல்விப்புலத்திற்கென பிள்ளையவர்கள் பற்றி சேகரித்தது அனைத்தையும் இணைத்து மத்திய அரசின் நூல் வெளியிட்டகம் சிறப்பான முறையில் இந்நூலை கொண்டு வந்திருக்கிறது. இங்கே சில தமிழ்ப் போலிகள் எதையாவது சொல்லி அல்லது தமிழை வைத்து வாழ்ந்த சிலர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழுக்கு என்ன தொண்டு செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டிப் பேசியிருந்தார்கள்! விட்டால் அவருக்குத் தமிழே தெரியாது என்று கூடச் சொல்வார்கள்! இந்த நூல் அவர்களுக்கு பதில் சொல்லும் முகமாக இல்லை. மாறாக நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ் மீது உள்ள தனது பற்றினாலும் சிறிய வயதில் இருந்து அவற்றை வாசித்து அதில் பெற்ற இலக்கிய விகாசத்தாலும் ஒரு மாபெரும் தமிழ் மனிதரின் சரித்திரம் நினைவு கூறப்பட வேண்டும் என்கிற இந்த விருப்பத்தை தன்னளவில் வெளிப்படுத்தி அதற்கான முயற்சிகளைச் செய்வதிலும் உறுதுணையாக இருந்திருக்கிறார்!. அவர் ஆங்கிலம் மட்டும் பேசும் பொருளாதார அறிவு உள்ளவர் மட்டும் அல்ல!தமிழ் வாசிப்பில் அதிகம் ஈடுபாடும் உள்ள தமிழ் மாணவி!அந்த வகையில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சரிதத்தை இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு கொண்டு வர அவர் ஆர்வம் காட்டியதும் சிறப்பானதொரு தமிழ் தொண்டு தான் என்பதில் ஐயமில்லை! திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் இதை ஊக்கப்படுத்தி இராவிட்டால் இந்தப் பணி சாத்தியமாகி இருக்காது என்று சஞ்சய் கோஸ் அவர்கள் மனமாரப் பாராட்டிச் சொன்னார். தமிழுக்கு தாங்கள் தான் அத்தாரிட்டி என்று நினைப்பவர்களுக்கு இந்த நன் செயலும் போய்ச் சேரட்டும்.




JULY 1

 


அதிமுக ஆட்சியில் ஜெயலிதாவைப்பற்றி சில அறிவு ஜீவிகளால் எழுதப்பட்டப் புத்தகங்கள் வந்தன!

 அதிமுக ஆட்சியில் ஜெயலிதாவைப்பற்றி சில அறிவு ஜீவிகளால் எழுதப்பட்டப் புத்தகங்கள் வந்தன! ஆனால் அவரைப் பற்றிய புத்தகங்கள் அதிகமாக வரவில்லை!. திமுக ஆட்சியில் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி பற்றி பல அறிவு ஜீவிகள் நிறையப் புத்தகங்களை எழுதித் தள்ளினார்கள். எல்லாப் புத்தக கடைகளிலும் அந்த நூல்கள் முன் வரிசையில் இருந்தன.!

இப்போது விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவரைப் பற்றி முந்திக்கொண்டு புத்தகங்கள் வெளிவர ஆரம்பித்து விட்டன. இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஸ்டாலின் புத்தகங்களும் உதயநிதி புத்தகங்களும் அந்தப் புத்தகக்கடைகளில் இப்போது காணாமல் போய்விட்டன! ஒன்று கூட இல்லை! ஒரு மாதத்திற்கு முன்பாகப் பார்த்த காட்சிகள் எல்லாம் இப்போது மறைந்து விட்டன! இப்படித்தான் இருக்கின்றன நமது எழுத்தாளர்களுடைய திருப்பணிகள்!! சில இடது சாரி எழுத்தாளர்களின் பங்களிப்பு இதில் உண்டு.





For over 50 years government in India has been collecting data on its citizens.

For over 50 years government in India has been collecting data on its citizens. This data is available in the form of driving licenses, ration cards, voter lists. Unfortunately, no effort has ever been made to clean up this data. Which is why there used to be so much leakage in social welfare activities in India. So much so that at one stage, Rajiv Gandhi who was then prime minister, even remarked that only 15 paise out of every rupee ever got to the beneficiary. This meant that there was an 85% loss in every scheme according to the government. Narendra Modi, after becoming prime minister, made a concerted effort to link every beneficiary with AADHAR numbers. This resulted in a saving of over Rs. 5 lakh crores, money which was being paid to non-existing beneficiaries. The AADHAR card was merely to establish the identity of the holder. But it was necessary that benefits be given only to genuine cases. This meant physically verifying every individual. The matter came to a head while cleaning up the electoral rolls. The cleaning up process was called SIR, which stands for Special Intensive Revision. In states like West Bengal it turned out that over a million people registered as voters in West Bengal were not even Indians. They had recently entered India from neighbouring Bangladesh. Once the benefits of SIR became evident, other governments have begun to use SIR verification to ensure that only genuine cases get the benefit of government welfare schemes. Karnataka, ruled by the Congress, is the latest government to link SIR verification to access to government social welfare schemes.




JULY 1


 

Greetings..

 Greetings..

@MVenkaiahNaidu



This legendary book by an esteemed poet and beloved professor

 This legendary book by an esteemed poet and beloved professor at Columbia University features a series of smart, witty, deeply perceptive essays about each of Shakespeare's plays, together with a further discussion of the poems. Writing with an incomparable knowledge of his subject but without a hint of pedantry, Van Doren elucidates both the astonishing boldness and myriad subtleties of Shakespeare's protean art. His Shakespeare is a book to be treasured by both new and longtime students of the Bard.

amzn.to/4gGwflF


வாழ்க்கை விசித்திரமானது.

 வாழ்க்கை விசித்திரமானது. எல்லாா் கதையும் வெற்றியாகவும் மகிழ்ச்சியாகவும் முடிவதில்லை.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற நியதி எல்லோருக்கும் அமைவதில்லை.. வாழ்க்கையின் பல முடிவுகளுக்கு காரணம் புரிவதே இல்லை.. ஒரு வேளை காரணம் புரிந்து விட்டால் வாழ்க்கையின் சுவராஸ்யம் குறைந்து விடுமல்லவா??..

"Nālandā: A Glorious Past deals with the Nālandā tradition.

 "Nālandā: A Glorious Past deals with the Nālandā tradition. The great Nālandā tradition emphasizes the use of logic and reasoning as part of the exploration of the nature of reality. I am a proud student of this Nālandā tradition."

— HH THE DALAI LAMA XIV 'Winner of the Professor Annapurna Chattopadhyaya Award for an outstanding book on Ancient Indian His-tory and Culture, Indian History Congress, 2025' The author, Anand Singh currently teaches history and archaeology in the Department of History, Babasaheb Bhimrao Ambedkar Central University, Lucknow. He previously served as a Professor and Dean in various institutions, including the Central University of South Bihar, Nalanda University, and Gautam Buddha University. He has been awarded for his writings by the Indian History Congress and other international organizations. His authored books include Water, Environmental and Corporeal Traditions in Buddhism (2025); Rethinking Buddhism: Text, Context, Contestation (2023); Planet, Plants, and Ani-mals: Ecological Paradigms in Buddhism (2019); Dāna Reciprocity and Patronage in Buddhism (2017); Buddhism at Sārnāth (2014); and Tourism in Ancient India (2005). Happy Reading!!


JUNE 30

 facebook.com/share/r/1BUoGy

இதுவரை பங்கு வாங்கி - அனுபவித்த திமுக

 இதுவரை பங்கு வாங்கி - அனுபவித்த போது திமுக இனித்தது : இப்போது கசக்குதா?

இவனை விட கேவலமான பிறவி ஏதும் உண்டா?

வைகோவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

வைகோவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்  

“நீங்கள் எந்த பத்திரிகை? உங்க கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” – செய்தியாளரின் கேள்விக்கு கடும் கோபமடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் வெளியே அனுப்பிய வைகோ! கூட்டணி தர்மமாம் அதனால் வாயை மூடிக்கிட்டு இருந்தாராம். அப்போ தவெக கட்சியினரும் தவறுகள் செய்தால் மூடிக்கிட்டு தான் இருப்பேன்னு சொல்றார். இவர் போற கூட்டணி எந்த கூட்டணி நல்லா இருந்துச்சு. தன் மேல தப்பு இல்லைன்னா ஏன் இவ்வளவு வைகோவுக்கு கோபம்….டெண்ஷன்……

 facebook.com/share/r/18uJ1F







JUNE 30


 

அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்குப் பதிவு

 அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது நல்ல முன்னெடுப்பு. இந்த abusive culture-க்கு பயந்தே கருத்துகளை முன்வைக்க அச்சப்படும் நபர்களுக்கு இது மிகுந்த பலத்தையும் தரும்.

பல கூட்டணி பரமசிவத்தின் இந்த இழிவான செயல் கண்டிக்கத்தக்கது..!


பல கூட்டணி பரமசிவத்தின் இந்த இழிவான செயல்
கண்டிக்கத்தக்கது..!

தன் பதவிக்கும், மகனின் பதவிக்கும் கட்சிகள் மாறி மாறி கூட்டணி வைத்து அரசியல் செய்த இன்று பத்திரிகையாளர்களிடம் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. கேள்வி எழுப்பும் பத்திரிகையாளருக்கும் வைகோவுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், மதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களைத் தாக்க முயன்றது ஏற்றுக்கொள்ளவே முடியாது.. அரசியல் கட்சி தலைவர்கள் ஊடகங்களை மதிக்க வேண்டும்...

எப்படி மோடியை விமர்சித்த நூலை வெளியிடுவார்.

  எனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழா டெல்லியில் கான்ஸ்டியூசன் கிளப் ஹாலில் நடக்கிறது!துணை ஜனாதிபதி திரு சி ப...