Thursday, April 30, 2015

கோவை. ஜி.ஆர்.டி - Dr G R Damodaran.




ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பிற்குரிய ஜி.ஆர்.தாமோதரன் அவர்களுடைய நினைவு வந்தது.

அவரோடு இதே சாலையில், 1978ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தபொழுது ,மாலை நேரங்களில் அவரோடு நடைபயிற்சி செய்த நிகழ்வுகள் மனதில் காட்சிகளாக எழுந்தன.

கோவை என்றால் நமக்கு மனதில் படுவது,  தொழிற்சாலைகளும், ஜி.டி.நாயுடு, பொள்ளாச்சி மகாலிங்கம், பி.எஸ்.ஜி கல்லூரி, அரசினர் கலைக்கல்லூரி போன்ற கல்லூரிகளும், டாக்டர். ஜி.ஆர். தாமோதரனும் அவருடைய கலைக்கதிரும் தான்.   1960லிருந்து கிட்டத்தட்ட 1980வரை இந்த ஆளுமைகளெல்லாம் கோவைக்குச் சிறப்பு சேர்த்தவர்கள்.

கல்வியாளர்.டாக்டர். ஜி.ஆர்.டி 1952லிருந்து 1957வரை பொள்ளாச்சி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர். 1958லிருந்து 1970வரை தமிழ்நாடு சட்ட மேலைவை உறுப்பினர். திரும்பவும் 1974லிருந்து 78வரை மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆற்றல் மிக்க துணைவேந்தராக 1978லிருந்து 1981வரை பதவியில் இருந்தார்.



பல பல்கலைக்கழகங்களுக்கு சிண்டிகேட் உறுப்பினராகவும் விளங்கினார். 1943ல் துவங்கப்பட்ட  பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியினை நிறுவி, அதன் துவக்ககாலம் முதல் 1986வரை  முதல்வராக இருந்தார்.



இப்படியான சிறந்த கல்வியாளரும், நூலாசிரியருமான ஜி.ஆர்.டி பற்றி அவருடைய  கல்லூரியில் பயிலும் மாணவரே சரியாக, விபரமாக தெரிந்திருக்கவில்லை என்பது வேதனைப்படுத்தியது.

கோவையில், திவான் பகதூர் பி.எஸ்.ஜி ரெங்கசாமி நாயுடு, கிருஷ்ணம்மாள் தம்பதியருக்கு, 1914ல் பிப்ரவரி 20ம் தேதி இவர் பிறந்தார். கோவை பீளமேட்டில் உள்ள சாதாரண ஆரம்பப் பள்ளியில் படித்து, சர்வஜனா உயர்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு பள்ளிப்படிப்பை முடித்து , கோவை அரசுக்கல்லூரியில் இண்டர்மீடியட் கணிதத்தைப் பாடமாகப் முடித்து, இங்கிலாந்து சென்று கிங்க்ஸ் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் பொறியியல் பட்டமும் பெற்றார்.

அவரின் சிறப்புகளில் ஒன்றான, “கலைக்கதிர்” இதழை 1948ல் துவங்கினார். இதழின் வடிவமைப்பு அந்தகாலத்தில் வெளிவந்த  “பேசும்படம்” சினிமா இதழைவிட சற்றுப் பெரிதாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் “கதைசொல்லி” இதழ் போன்ற அளவில் இருக்கும். அப்போதே கலைக்கதிர் இதழுக்குச் சந்தா செலுத்தி எங்கள் தந்தையார் அஞ்சல் மூலம் எங்கள் கிராமத்து வீட்டிற்கு வரவழைப்பார்.

வண்ணமயமான அறிவியல் சம்பந்தப்பட்ட அட்டைப்படம். அருமையான தமிழில் பௌதீகம், ரசாயனம், கணிதம், தாவரவியல், உயிரியல், மண்ணியல், வானியல் மற்றும் விஞ்ஞானம் குறித்த கட்டுரைகளை மிகத் தெளிவாகத் தமிழில் அச்சிட்டு அன்றைய நிலவரத்தோடு கலைகதிர் இதழ் வெளியாகும்.  

முதன்தலாக, இந்த இதழுக்காக அப்போதே கணிப்பொறியில் போட்டோ செட்டிங்குகள் செய்து அச்சடிக்கும் கருவியை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலே ஒரு இதழுக்குச் செய்தது ஜி.ஆர்.டி தான்.

எப்படி, ஊ.வே.சா-வை தமிழ்த்தாத்தா என்று சொல்கின்றோமோ, அதுபோல அறிவியல் தமிழுக்குத் தந்தையாக “ஜி.ஆர்.டி” விளங்கினார்.
இவருடைய வழிகாட்டுதலில் தான், பெ.நா.அப்புசாமி போன்ற அறிஞர்கள் தமிழில்  அறிவியல் கட்டுரைகளை எழுதத் தொடங்கினர்.

மிகவும் குறைந்த விலையில் தமிழில் அறிவியல் மக்களுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் ஜி.ஆர்.டி தன்னுடைய முழு கவனத்தின் கீழ் கொண்டு வந்தார். பிறகாலத்தில் இதன் முதன்மை ஆசிரியராக, முனைவர்.தா.பத்மனாபன், டாக்டர்.வி.ஆர்.அறிவழகன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.  கலைக்கதிர், ஜி.ஆர்.டி அறக்கட்டளை மூலம் வெளியிட்டப்பட்டது.

கலைக்கதிர் இதழ் மட்டுமல்லாமல் பல ஆங்கில அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்தும் கலைக்கதிர் பதிப்பகம் வெளியிட்டது. முதன் முதலாக, “தமிழ் அறிவியல் கலைச்சொல் அகராதியினை” கலைக்கதிர் பதிப்பகம் தான் வெளியிட்டது.



இன்றுவரை கோவை அவிநாசி சாலையில்,  கலைக்கதிர் அச்சகம், நவ இந்தியா, லெட்சுமி மில்ஸ் என்று பேரூந்து நிறுத்தங்களை நடத்துனர்கள் பயணிகளிடம் சப்தமிட்டுச் சொல்வதுண்டு.

ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள் தமிழில்  “எலக்ட்ரான்”  என்ற நூலினையும் மேலே சொன்ன  “தமிழ் அறிவியல் கலைச்சொல் அகராதியையும்” எழுதினார். அதுமட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில்  “Listen to a Leader in Education" போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

பீளமேடு அவிநாசி சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் காலை கல்லூரி துவங்கும்  போது, பொறியியல் மாணவர்கள் வருவதற்கு முன்னாலே ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள் கல்லூரிக்கு வந்து, வகுப்புகள் துவங்கும் வரை கல்லூரி முகப்பு வாயிலில் கைகளைக் மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு நின்று கொண்டிருப்பார். அவர் உடுத்தும் ஆடையும், அவர் அணியும் பூட்ஸ் காலணியும் கம்பீரத் தோற்றத்தைத்தை அவருக்குக் கொடுக்கும்.

கருப்பு வண்ணத்தில் பாலீஷ் செய்யப்பட்ட அவரது பூட்ஸில்  வெயில் பட்டு பளிச்சென்று மின்னும். பொறியியல் படிக்கும் மாணவர்களும் அவரைப் பார்த்ததும் மரியாதை கலந்த வணக்கத்தை தலைதாழ்ந்து தெரிவித்துவிட்டு வகுப்புக்குச் செல்லும் காட்சியை ஒருசில நாட்களில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுண்டு.

 மாணவர்கள் நலனில் அக்கரை கொள்வதோடு,  திடீரென்று விடுதியில் உணவு ஆரோக்கியமானதாகவும், சுவையாகவும் உள்ளதா என்றும், தங்கும் அறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்றும் அவர் ஆய்வுகளும் செய்வதுண்டு.

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதி பல பிளாக்குகளாக வட்ட வடிவில் வித்யாசமான, ஜி.ஆர்.டி அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது என்பதை இங்கே குறிப்பிடவேண்டிய முக்கியமான விடயமாகும். அந்த விடுதியில் பல முறை 1960-70காலகட்டங்களில் தங்கியுள்ளேன். சுவையான உணவு, ஆரோக்கியமான சுற்றுச் சூழல் அமைந்த வளாகம் அது.

 ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள், பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களைக் கோவையில் நிறுவியவர். தெற்கு மண்டல பொறியியல் கல்விகளைச் சீராயும் ஏ.ஐ.சி.டி.இ குழுவின் தலைவர். இந்திய அரசின் மேல்மட்ட தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தலைவர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர். சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்டில் 33 ஆண்டுகால உறுப்பினர்.

பொள்ளாச்சி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆசிரியர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்ட மேலவைக்கு எம்.எல்.சியாக 1958லிருந்து 1978வரை பணியாற்றினார். இதில் இடைக்காலத்தில் 1970லிருந்து 74ம் ஆண்டு வரை மட்டும் இடம்பெறவில்லை. தமிழ்நாடு மேலவையின் நீண்டகால உறுப்பினரும் ஆவார்.

இவருக்கு நெருங்கிய நண்பர்களாக தந்தை பெரியார், பெருந்தலைவர்.காமராஜர், பேரறிஞர் அண்ணா, அவிநாசிலிங்க செட்டியார், சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், டாக்டர். வி.கே.ஆர்.வி.ராவ், பேராசிரியர். என்.ஜி.ரங்கா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி. டாக்டர். திரிகுணசிங் ஆகியோர் இருந்தனர்.

இவர்களில் சிலர் மத்திய அமைச்சர்களாகவும், பண்டிதர் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும் நெருங்கின சகாக்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

1986ல் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற என்னுடைய  மணவிழாவுக்கு, ஜி.ஆர். தாமோதரன் அவர்களும் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அச்சமயம்  நோய் வாய்ப்பட்டு தன்னுடைய இறுதி நாட்களைச் சந்தித்து மறைந்தார்.

அறிவியலையும், தமிழையும் தன் இரு கண்களாக நேசித்தவர் ஜி.ஆர்.டி. கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கடமையாற்றிய உத்தம சீலரும், உண்மையான கல்வித்தந்தையும் இவர் தான். இவருடைய நூற்றாண்டு விழா கடந்த 2014ம் ஆண்டு (1914-2014) கோவையில் கொண்டாடப்பட்டது.

கல்வி வணிகமயமாகிவிட்ட இன்றைய  காலத்தில், இத்தனைப் பன்முகத் தன்மையும் சிறப்புகளும் நிரம்பிய , கல்விக்கும், அறிவியல் மேம்பாட்டிற்கும் உழைத்த ஜி.ஆர்.டி போன்ற உத்தமர்கள் யாரும் நம்மிடையே இல்லை என்பது சோர்வான செய்தியாகும்.




-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-04-2015


7 comments:

  1. Fortunate to study at this great institution PSG Tech(1974 79 ). Inspiring leader.

    ReplyDelete
  2. Good educatanist.I am so proud that I am studied in PSG.Also We have close contact with GRD thatsome of my classmate knows

    ReplyDelete
  3. I am alumi of psgtec.
    It's real world shown to rural boys
    About engineering and morals
    We saulte to him ,I met once 1978.





    ReplyDelete
  4. G R D is a great educationist whose contribution to engineering education and industrial as well as agricultural development of Kongu region is unconquerable. His name will live forever. Jaihind

    ReplyDelete
  5. அமரர் ஜி. ஆர். டி. அவர்களைப் பற்றி ,
    "ஜி.ஆர்.டி. என்றொரு மானுடன் " என்ற நூல். அவரது நூற்றாண்டு விழாவினில் வெளியிடப்பட்டது.தமிழில் அவரைப் பற்றி வெளி வந்த அந்த முதல் நூலினை எழுதியவன் அடியேன் தான். .என்பதிலே பெருமிதம் கொள்கிறேன். அ .வேலுப்பிள்ளை. 9790134379

    ReplyDelete
  6. அமரர் ஜி. ஆர். டி. அவர்களைப் பற்றி ,
    "ஜி.ஆர்.டி. என்றொரு மானுடன் " என்ற நூல். அவரது நூற்றாண்டு விழாவினில் வெளியிடப்பட்டது.தமிழில் அவரைப் பற்றி வெளி வந்த அந்த முதல் நூலினை எழுதியவன் அடியேன் தான். .என்பதிலே பெருமிதம் கொள்கிறேன். அ .வேலுப்பிள்ளை. 9790134379

    ReplyDelete

#செண்பகவல்லிதடுப்புஅணைசீர்அமைப்பு கோரிக்கை , தென்மலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் (இன்று , 10-7-2025 காலை முதல் நடக்கும்) பங்கேற்று உரையாற்றிகிறேன். அனைவரும் வருக! •••• ச.பென்னிகுயிக் பாலசிங்கத்தின் பதிவு (ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்) *செண்பகவல்லி கால்வாய்---தாகம் தீர்க்குமா...!!!* 60 ஆண்டு காலங்களுக்கு மேலாக செண்பகவல்லி கால்வாய் தண்ணீருக்காக காத்துக் கிடக்கிறது தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள். மானாவாரி காடுகளுக்கு பெயர் பெற்ற கரிசல் காடுகளினூடாக ஏழெட்டு தலைமுறைகளாக பாய்ந்தோடி வந்த செண்பகவல்லி கால்வாய்த் தண்ணீர்,வேறு வழியேயின்றி இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 1965 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட நாளில் தொடங்கிய,விவசாயிகளின் போராட்டங்கள் இன்று வரை ஓயல்லை. இயல்பாகவே உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல,அது எந்த நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்தாலும் அதை ஒருபோதும் மதித்து நடைமுறைப்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு கேரளாவின் மீது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வரக்கூடிய குற்றச்சாட்டாகும். அது முல்லைப் பெரியாறாக இருக்கட்டும், பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, மலம்புழா, நெய்யாற்றின்கரை அணை என எல்லாவற்றிலும் அவர்களுடைய ஆதிக்கம் சுதந்திரத்திற்கு பின்னால் கொடிகட்டிப் பறக்கிறது. 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, இன்னமும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்திலுள்ள பரணில் தூங்கிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். அந்த அடிப்படையில் தான் அது செண்பகவல்லி கால்வாயியையும் அணுகுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 40 ஆண்டு காலம் தொடர் சட்டப் போராட்டங்கள் நடத்தியும்கூட முல்லைப் பெரியாறு அணையில் அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறோம் ஐந்து மாவட்ட விவசாயிகள். ஒருவேளை செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழ்நாடு உரிமை கோருமோ என்கிற கவலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கோட்டமலை டிவிசன், மணலாறு டிவிஷன், மாவடி மற்றும் சுந்தரமலை டிவிஷன்களை பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிசனாக அறிவித்தது கேரள மாநில அரசு. சிவகிரியையொட்டி இருக்கும் இந்த சுந்தரமலை டிவிசன்தான், செண்பகவல்லி கால்வாயின் மையப் பகுதியாகும். அது இன்றைக்கு ஒரு புலிகள் காப்பகத்தின் அங்கமாக அறிவிப்பு செய்யப்பட்டு, வாசுதேவநல்லூர் அருகே இருக்கும் தரணி சர்க்கரை ஆலையிலிருந்து தலையணை செல்லும் வழியில் நிறுவனமயமாக்கப்பட்டிருப்பதும் நிதர்சனமான உண்மை. கிட்டத்தட்ட 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட பெரியார் புலிகள் காப்பகத்தில், செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கிழக்கு டிவிஷன் மட்டும் சுமார் 620 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. கொடுமை என்னவென்றால் இவையெல்லாம் முறையாக 1956 மொழிவழிப் பிரிவினையின் போது அளவீடு செய்யப்படாத பகுதிகளாகும். செண்பகவல்லி கால்வாய் இருக்கும் பகுதி தற்போது புலிகள் காப்பகத்தின் ஒரு அங்கம் என்கிற நிலையில் மறுபடியும் அதற்குள் சென்று நம்மால் கால்வாயை சீரமைக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. உலகமெல்லாம் நடக்கும் போர் அத்துமீறல்களால் கான்கிரீட் கட்டிடங்கள் எல்லாம் உடைந்து சிதறும் நிலையில், கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் பாசனப்பரப்புக்காக நாம் சீரமைக்கச் சொல்வது மொத்தமுள்ள 1603 மீட்டரில், வெறும் 400 மீட்டர் நீள கட்டுமானம் மட்டுமே. தென்காசி மாவட்டத்தில், மேற்குப் பகுதியில் மட்டும் செழித்துக் கிடக்கும் வாசுதேவநல்லூரை உள்ளடக்கிய சிவகிரி தாலுகா, எப்போதும் வறண்டு கிடக்கும் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகாக்கள்... விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சாத்தூர் தாலுகாக்கள்... எப்போதும் வறண்டு கிடக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்கள்... என செழித்து கிடக்கும் மக்கள் தொகையும், பரப்பளவும் எதிர்காலத்தை நினைத்து பயந்து கிடக்கிறது. நிலத்தடி நீரே குதிரைக் கொம்பாகியிருக்கும் காலகட்டத்தில், செண்பகவல்லி கால்வாய் தண்ணீர் மறுபடியும் பாய்ந்தோடி வந்தால் அத்தனை ஊரும் கூமாபட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கேரளா இந்த செண்பகவல்லி கால்வாய் உடைப்பை சரி செய்வதற்கு அனுமதிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நம்முன் எழுந்து நிற்கிறது. வருடத்திற்கு 2,700 டிஎம்சி தண்ணீரை கடலுக்குள் கொண்டு போய் சேர்க்கும் கேரளா, போகிறபோக்கில் இந்த தமிழகத்திற்கு 100 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது இந்த அப்பாவிகளுடைய இயலாக் குரல்கள். காது கொடுத்து கேட்கத்தான் கேரளாவில் யாரும் இல்லை. இந்த நிலையில் கால்வாய் அருகே ஒரு தங்குமிடத்தை அமைத்திருக்கும் பெரியார் புலிகள் காப்பகம்,அங்கு செல்வதற்கு கேரளாவின் வழியே பயண வழி இல்லாததால்,புலிகள் காப்பகத்தின் தலைமையகமான தேக்கடியில் இருந்து கம்பம் தேனி ஆண்டிபட்டி உசிலம்பட்டி பேரையூர் திருவல்லிபுத்தூர் ராஜபாளையம் சிவகிரி வாசுதேவநல்லூர் வழியாக வாகனங்களில் தன்னுடைய வனத்துறை பணியாளர்களை 10 நாட்களுக்கு ஒரு முறை அழைத்து வரும் பெரியார் புலிகள் காப்பகம், அவர்களை தலையணை முகாமில் தங்க வைத்த பிறகுதான், செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழக வனப் பகுதி வழியாக செல்ல அனுமதிக்கிறது. ஆனால் அந்த செண்பகவல்லி கால்வாய் இருக்கும் வனப்பகுதிக்குள், தமிழக வனத்துறையினர் செல்வதற்கு தடை இருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். ஆயுதங்களை தூக்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள தேனி மதுரை விருதுநகர் மாவட்டங்களின் வழியாக தென்காசி மாவட்டத்திற்குள் புகுந்து 5,000 அடி உயரத்தில் இருக்கும் செண்பகவல்லி கால்வாய்க்கு ஆயுதங்களை தாராளமாக கொண்டு செல்கிறார்கள் பெரியார் புலிகள் காப்பக வனத்துறை பணியாளர்கள். கேட்பதற்குத்தான் நாதிகளற்றுக் கிடக்கிறோம். இதுகுறித்து தமிழக அரசியல்வாதிகள் எந்த நிலையிலும் வாயே திறக்கவில்லை என்பது கசப்பான உண்மை.விதிவிலக்குகளும் இருக்கிறது. அரிதினும் அரிதானவராக வழக்கறிஞர் அண்ணன் கே. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் இதற்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த செண்பகவல்லி கால்வாய் பிரச்சனை மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுக்குமானால், அரசியல்வாதிகளால் ஊருக்குள் நடமாட முடியாது என்பதை இந்த விவசாய சமூகம் செய்து காட்ட வேண்டும். இந்த நிலையில் வரும் பத்தாம் தேதி சிவகிரி அருகே இருக்கும் தென்மலை கிராமத்தில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒரு மாநாடு போல செண்பகவல்லி கால்வாய் மீட்பு போராட்டம் நடக்கவிருககிறது. முன்னத்தி ஏர்களாக அந்த ஒருங்கிணைப்புக்கு பணியை முன்னின்று செய்து வரும் அத்தனை பேருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சொல்லி... நீண்ட காலமாக அந்தப் பகுதியில் செண்பகவல்லி கால்வாய்க்காக போராடிய இடையன்குளம் அண்ணன் ஜெயக்குமார் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் அண்ணன் கருணாநிதி போன்றவர்களையும் அழைத்திருக்கலாமா என்று முடிக்கிறேன். நன்றி ச.பென்னிகுயிக் பாலசிங்கம் ஒருங்கிணைப்பாளர் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

  #செண்பகவல்லிதடுப்புஅணைசீர்அமைப்பு கோரிக்கை , தென்மலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் (இன்று , 10-7-2025 காலை முதல் நடக்கும்) ப...