Tuesday, July 14, 2026

அதிமுக ஆட்சியில் ஜெயலிதாவைப்பற்றி சில அறிவு ஜீவிகளால் எழுதப்பட்டப் புத்தகங்கள் வந்தன!

 அதிமுக ஆட்சியில் ஜெயலிதாவைப்பற்றி சில அறிவு ஜீவிகளால் எழுதப்பட்டப் புத்தகங்கள் வந்தன! ஆனால் அவரைப் பற்றிய புத்தகங்கள் அதிகமாக வரவில்லை!. திமுக ஆட்சியில் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி பற்றி பல அறிவு ஜீவிகள் நிறையப் புத்தகங்களை எழுதித் தள்ளினார்கள். எல்லாப் புத்தக கடைகளிலும் அந்த நூல்கள் முன் வரிசையில் இருந்தன.!

இப்போது விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவரைப் பற்றி முந்திக்கொண்டு புத்தகங்கள் வெளிவர ஆரம்பித்து விட்டன. இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஸ்டாலின் புத்தகங்களும் உதயநிதி புத்தகங்களும் அந்தப் புத்தகக்கடைகளில் இப்போது காணாமல் போய்விட்டன! ஒன்று கூட இல்லை! ஒரு மாதத்திற்கு முன்பாகப் பார்த்த காட்சிகள் எல்லாம் இப்போது மறைந்து விட்டன! இப்படித்தான் இருக்கின்றன நமது எழுத்தாளர்களுடைய திருப்பணிகள்!! சில இடது சாரி எழுத்தாளர்களின் பங்களிப்பு இதில் உண்டு.





No comments:

Post a Comment

JULY 04

வெந்து தணிந்த கருசல் காட்டில் வேகாது மிஞ்சியது எனது நினைவுகள் மட்டுமே.