Friday, July 22, 2016

கபாலி...

கபாலி..
Ranjit
மலேசிய தமிழர்களின் வாழ்வியலை மிக நேர்த்தியாக காட்டியிருக்கிறார்.. நண்பர் பா.ரஞ்சித் தன் உணர்வுகளை படத்தில் கடைசி நிமிடங்களில் உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார்.. ஏன்டா தமிழன் எப்பவுமே அடிமையாதான் இருக்கணுமா அவனுங்க முன்னுக்கு வரவே கூடாதா.. வருவேன்டா என்கிற வசனத்தில் எழுந்து நிற்கிறார்..   ரஜினியின் மேனரிசம் வராமல் பார்த்துக்கொள்ள சிரமபட்டிருக்கிறார்..
..
படம் முழுக்க ரஜினி வந்து போகிறார் மிகப்படுத்தாத நடிப்பு இயல்பான வசனம் என இருந்தாலும் இளமை மட்டும் மிஸ்ஸிங்..
மிகச்சிறந்த நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு சிரத்தையோடு நடித்துள்ளார் என்பது படம் முழுவதும் தெரிகிறது.இனி அவர் தனது உடல்நலத்தில் அக்கறைகொண்டு ஓய்வெடுத்துக்கொள்வதுதான் நன்மையாக இருக்கும்.வரும் காலங்களில் சர்ச்சைக்குறிய படங்களில் நடிக்காமல் இருப்பதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்,நிம்மதியையும் தரும் .

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...