#பவானிஆறு . பவானி சாகர் அணையில் தொடங்கி பவானி மற்றும் குமாரபாளையத்தில் காவிரியில் கலக்கிறது . மற்ற ஆறுகளைவிட இது ஓடும் தூரம் மிகக் குறைவே . ஆனால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் பெரும்பாலான விவசாயம் இந்த ஆற்றின் பாசனத்தை நம்பியே இருக்கிறது . ஆடி 18 , ஆடிப்பெருக்கு நாளான இன்று பவானி ஆற்றின் பாசனப்பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டும் . அந்த கொண்டாட்டங்களில் பல முறை கலந்து கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன் அவ்வளவு நிறைவான விழாவினை வேறெங்கும் கண்டதில்லை , இருகரைகளைத் தொட்டு நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் உற்சாகம் கரை புரண்டு ஓடும். பவானி , காவிரியில் கலந்து தன் ஓட்டத்தை நிறைவு செய்யுமிடத்தில் நான் என் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தேன் . தற்போது என் மகன் , பவானி தன் ஓட்டத்தை தொடங்குமிடத்தில் தன் கல்லூரி வாழ்க்கையைத் துவங்குகிறான் . எல்லோருக்கும் எல்லாவற்றையும் வாரி வழங்கும் பவானித்தாயும் , எல்லோரையும் காக்கும் பண்ணாரி அம்மனும் அவனுக்கு அருள்வார்களாக.
Tuesday, August 4, 2026
Subscribe to:
Post Comments (Atom)
ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)
ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment