Friday, July 31, 2015

மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச் சூழல் பிரச்சனையில் தமிழ்நாட்டின் பாராமுகம்- Western Ghats - Neglections Government of Tamil Nadu .

மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச் சூழல் பிரச்சனையில் தமிழ்நாட்டின் பாராமுகம்- Western Ghats - Neglections Government of Tamil Nadu .





ஏற்கனவே என்னுடைய தளங்களில் இதைக்குறித்து விரிவான பதிவைச் செய்திருந்தேன். மாதவ காட்கில், கஸ்தூரி ரங்கன் ஆகிய குழுக்களின் அறிக்கைகள் மத்திய அரசிடம் வழங்கப்பட்டும் இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் இல்லை.

குஜராத்திலிருந்து தமிழகம் வரை ஆறு மாநிலங்களில் படர்ந்த இம்மலையில் பரப்பளவு 60,000சதுர கி.மீட்டர்கள். இதில் சுற்றுச் சூழல் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்று இந்தக் குழு வழங்கிய அறிக்கைகளை எதிர்த்து பல சுயநல சக்திகள் போராடின. ஆனால் இந்த அறிக்கை குறித்து தமிழக அரசு எந்த நிலைப்பாட்டையும் இதுவரைத் தெரிவிக்கவில்லை.

இதில் தமிழகத்தில் 6914சதுர கி.மீட்டர் மேற்குத் தொடர்ச்சிமலையின் பரப்பு அடங்கியுள்ளது. இயற்கையை அழித்து மாசுபடுத்துகின்ற சக்திகளிடமிருந்து காக்க இந்த ஆறுமாநிலங்களுடைய அறிக்கையை மத்திய அரசு எதிர்ப்பார்த்தது. ஆனால் தமிழக அரசு அளிக்க வேண்டிய அறிக்கையின் அவகாச கால இன்றுடன் (31-07-2015) முடிவடைகின்றது.

தமிழக அரசுக்கு மேற்குத் தொடர்ச்சி  மலை சுற்றுச்சூழல் பற்றிய அறிக்கையை வழங்குவதற்கு என்ன தயக்கம்? ஏன் மெத்தனப் போக்கு?
இந்தப் பிரச்சனையை எத்தனைபேர் அறிவர்? இது வேதனையிலும் வேதனை.


See also : http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_24.html


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2015.


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...