Friday, July 24, 2015

நாடாளுமன்றம் மூன்று நாட்களாக ஒத்திவைப்பு - Parliament of India





கடந்த மூன்று நாட்களாக, நாடாளுமன்ற இரு அவைகளும் நடைபெற முடியாமல் அமளியினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த இரு அவைகளும் நடைபெற தனித்தனியாக  ஒரு நிமிடத்துக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவளிக்கப்படுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

நாட்டின் பிரச்சனைகளைப் பேசவேண்டிய இடத்தில் அமளிதுமளிகள் மட்டுமே மூன்று நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் இந்திய இறையாண்மைக்குத்தான் களங்கம் ஏற்படும் என்று மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவார்களா?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-07-2015

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...