Sunday, May 12, 2019

உங்களை கவரவைக்கும் விஷயங்களை பார்த்தவுடன் அதை வேண்டும் என்கிறீர்கள், அதை சொந்தமாக்கிகொள்கிறீர்கள்.

உங்களை கவரவைக்கும் விஷயங்களை பார்த்தவுடன் அதை வேண்டும் என்கிறீர்கள், அதை சொந்தமாக்கிகொள்கிறீர்கள்.
ஆக, பார்ப்பது, ஆசைப்படுவது, உடமையாக்குவது எனும் இத்தகைய ஒரு பழக்கத்தை நீங்கள் தொடர்கிறீர்கள். இத்தகைய ஒரு செயல்முறை ‘தான்’ என்பதை நிலை நிறுத்திகொண்டே இருக்கச் செய்கிறது.
கவரும் ஒன்றை தேடிச்செல்லுதல் அல்லது விலகி செல்லுதல், பற்றிக்கொள்ளுதல் அல்லது நிராகரித்தல் என இந்த ‘நான்’ என்பது உயிர்ப்புடன் செயல்பட்ட வண்ணம் உள்ளது.
அதாவது, அது தன் சொந்த ஆசைகளினாலும், செயல்களாலும் தன்னை விரிவுபடுத்திக்கொள்வதோடு மட்டுமல்லாமல், தனக்கே உண்டான தன் இயல்பான மனப்பாங்கு, அறியாமை, ஆசை, அவா ஆகியவற்றின் மூலம் தன்னைத்தானே நிலைநிறுத்திக்கொள்ளவும் செய்கிறது. அதாவது, தன் சொந்த வெப்பமே அதன் தழலை, தணலை செழிக்கச்செய்வது போல; இங்கே தணலும் வெப்பமும் ஒன்றே.
மிகச்சரியாக இதைப்போலவே ‘நான்’ என்பது ஆசையினால், இயல்பான மனப்பாங்கினால், அறியாமையால் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. இப்படி தன்னை நிலை நிறுத்திக்கொண்டாலும்கூட ‘நான்’ என்பது தனக்குத்தானாகவே ஒரு ஆசையாக உள்ளது.
விறகு, மெழுகுவர்த்தி ஆகியவை நெருப்புக்கு காரணமாகலாம். இங்கோ, உணர்ச்சிகளும், சித்தத்தின் கூறுகளும் செயல்படும்போது “நான்” என்பதற்கு காரணமாகிறது. இந்த செயல்பாட்டிற்கு ஆரம்பம் ஏது? அதுவும், இச்செயல்பாடு ஒவ்வொரு தனிநபருக்கும் பிரத்யேக தன்மையை கொண்டிருக்கிறது. இதை பரிசோதித்து பாருங்கள், அப்போது இது எந்த அளவிற்கு உண்மையானது என நீங்களே கண்டறிவீர்கள்.
“நான்” என்பதை தவிர வேறு என்ன இருக்கிறது? அந்த “நான்” என்பது எதையும், எந்த உண்மையையும் தன்னுள் மறைத்துவைத்திருக்கவில்லை.
“நான்” என்பது ஒன்றே தன் சுய விருப்ப செயல்களால் தானாக அதனை நிலை நிறுத்திக்கொண்டு, தன்னை தொடர்ந்திருக்க செய்கிறது.
ஆகவே, “நான்” என்பது அதுவாகவே ஆசையாக இருப்பதால், அது, தன்னை தொடர்ந்திருக்க செய்யும் செயல்பாடே, துன்பத்தையும், அறியாமையையும் உருவாக்குகிறது.
எங்கே தேவை இருக்கிறதோ அங்கே உள்ளொளி இருப்பதில்லை.
- ஜே கிருஷ்ணமூர்த்தி
Image may contain: one or more people, people standing and indoor

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...