Saturday, October 28, 2023

#*இப்போது நீட்தேர்வு* *போகாத,இல்லாத ஊருக்கு வழி சொல்லும் பம்மாத்து வேலை இது..*



—————————————
நேற்று இந்திய  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை  வந்த போது
 தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரைச்சந்தித்து அகில இந்திய மருத்துவத் துறைக்கான நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றும் அதன் இடர்பாட்டால் தகுதியான மாணவர்கள் பலர் மருத்துவத் துறைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள் என்று ஒரு உருக்கமான மனுவைக் கொடுத்திருக்கிறார்.சரி நீட்டை முதலில் கொண்டு வந்தவர்கள் யார்?

அதெல்லாம் சரிதான் நானும் கூட நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிப்பவன் அல்ல. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஏக மனதாய் நீட் தேர்வை ஆதரித்து மசோதா தாக்கல் நிறைவேறிய பின்பு அதில்  ஜனாதிபதியும் கையெழுத்து போட்ட பிறகு அவரிடம் போய் இம் மனுவைக் கொடுப்பது பரிதாபகரமாகத்தான் இருக்கிறது. நானும் நீட்டை எதிர்ப்பவன்தான்… ஆனால் இன்றைய நிலையில் நீக்க முடியுமா?

இந்த முறை நாங்கள் தேர்தலில் ஜெயித்து வந்தால் முதலில் நீட் தேர்வை நீக்குவதற்கு தான் முதல் கையெழுத்திடுவோம் என்று சொன்னவர்கள் தானே இவர்கள். ஆட்சிக்கு
வந்தவுடன்  அந்த முதல் கையெழுத்து என்ன ஆனது? முதல்வர் அவர்களே..
அது எவ்வாறு சட்ட வடிவானது என்று அவர்களுக்குத் தெரியாதா? ஏமாந்தவர்கள் தமிழர்கள் என்றால் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதா? அதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது எந்த வகையில் அதைச் சட்டத்தின் மூலம் கோர வேண்டும் என்பதெல்லாம் தெரியாமல் போகிற போக்கில் விருந்தாளியாய் வந்த இடத்தில் கோரிக்கை வைப்பது அபத்தமாக படவில்லையா?

நீட்டை மாற்ற முடியாது என்பது இந்திய மருத்துவ கவுன்சில் துறை இன்னும் பலவாறானத் தகுதி தேர்வுகள் அடிப்படையில் அது உறுதியான சட்டமாக்கப்பட்டு விட்டது. பல மேல் முறையீடுகளை வழக்குகளை தாக்கல் செய்தபின்பும் அதைப் பலவறாக அலசி ஆராய்ந்த இந்தியத்தலைமை உச்ச நீதிமன்றமே நீட் தேர்வு அவசியமானதே  அதை நீக்க இயலாது என்று தீர்ப்பளித்து விட்ட பிறகு ஜனாதிபதியிடம் மனு கொடுப்பது ஜால அரசியலாகத்தான் இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா கொண்டுவரப்பட்டு அந்த மசோதா  பின்னர் ஒப்புதலை பெற்று சட்ட வடிவைப் பெற்றது.ஆட்சிக்கு 2021 வந்த உடன் உங்க
கைசாத்து எங்கே

ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி நீட் ஒழிக்க முடியும் என்றால்
கோடி கையெழுத்து வாங்கி தர தாய்மார்கள் ரெடி...
டாஸ்மாக் ஒழிப்பார்களா? 

ஒரு குற்றவாளியை முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்து சிறைச்சாலையில் தள்ளிய பிறகு அவரை மீட்டுக் கொண்டு வருவேன் என்று சொல்வது வெற்று வீம்பு தானே. நான் நீட் தேர்வை குற்றவாளி போலச் சொல்லவில்லை உவமையாகவும் ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன்.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது. இந்த மனு வெறும் கண்துடைப்பு தான். இரண்டரை வருடம் ஆகியும் அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசு தான் தந்த வாக்குறுதியை மறைக்கவே இந்த நாடகத்தை ஆடுகிறது. ஓட்டு வாங்க எதையும் சொல்லலாம்!ஆனால் அதை நடத்துவதற்கு திராணி வேண்டும். இந்த அரசு தேர்தலுக்கு முன்பு தன்கட்சி சார்ந்து தந்த வாக்குறுதிகளை முதலில் முறையாக பரிசீலிக்க வேண்டும்! சரியாக அதை நடைமுறைப்படுத்த முடியுமா? அதற்கான பொருளாதார பின்னணிகள் தேசிய வரவீனங்கள் யாவற்றையும் வைத்து மதிப்பிட்டு  பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில்தான் வாக்குறுதிகளைத் தர வேண்டுமே ஒழிய வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது! .முதலில்  நமது முதுகிற்குப்  பின் என்ன இருக்கிறது என்பதைப்பற்றித்தான்  யோசிக்க வேண்டும் .பிறகு தான் நீட் தேர்வை பற்றி எல்லாம் பேச நமக்கு உரிமை இருக்கிறது.

நீட் தேர்வு ஒழித்து விடுவோம் என்று இனிமேலாவது பொய் உரைக்காமல் இருப்பது நல்லது. போகாத,இல்லாத ஊருக்கு வழி சொல்லும் பம்மாத்து வேலை இது..

#நீட்தேர்வு
#neetexam

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
28-10-2023.

No comments:

Post a Comment