Monday, June 20, 2022

கண்ணீர் விட்டா வளர்த்தோம்,,,! இப்பயிரைக் கருகத் திருவுளமோ ?

வீரபாண்டிய கட்டபொம்மனும்,
பூலித்தேவனும்,
வாஞ்சிநாதனும்,
வ.உ.சிதம்பரம் பிள்ளையும், 
மகாகவி பாரதியும்,,, 
பிறந்த நெல்லை மண்ணிலேதான்,,,,,
இந்த கழிசடைகளும்,,,,,,

இந்துத்வ பயங்கரவாதி வாஞ்சிநாதன் !
பட்டம் கொடுத்த கழிசடைகளே,,,,
உங்களை நினைத்தால்,,,,,?

இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வாஞ்சிநாதன், அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை,,,,
 மணியாச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டார் என்ற அளவில்தான் ,,,நீங்களும், நானும்,,,,அறிந்திருப்போம்,,,,

ஆனால்,,,,
1806-ம் ஆண்டிலே நடைபெற்ற ,,முதல் இந்திய சுதந்திர போராட்டம் என்றழைக்கப்பட்ட,,,,
வேலூர் புரட்சிக்குப் பின்,,,,
 1910-ம் ஆண்டு வரையில் ஆங்கிலேயருக்கு எதிராக எவரும்,,,, எவரும்,,,,ஆயுதம் ஏந்தவில்லை.,,
ஏன் ஆயுதத்தினை கையிலெடுக்கக் கூட,,அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த வேளையிலே,,,,

 105 ஆண்டு கள் கழித்து 1911-ல் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் வாஞ்சிநாதன்.!

அடக் கழிசடைகளே,,,,,!
உங்கள் கூற்றுப்படியே பார்த்தாலும்,,கூட,,,
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் உங்களையெல்லாம்,,புறக்கணித்தாரா ?
கோரல் மில் போராட்டத்தினை நடத்தியது,,அங்கு பணியாற்றிய உங்க முப்பாட்டன்களுக்கும்,,சேர்த்துத்தானே ?

நீங்கள்,,,,
வீரவணக்கம் செலுத்தியது,,,,,
உங்களின் அடிமைப் புத்தியைத்தான் காட்டுகிறதோ?

இல்லையெனில்,,,
நீங்களெல்லாம்,,,, ஆஷ் துரையவரின் வாரிசுகளா ?

அப்படி வாரிசுகளென்றால்,,,,?
நீங்கள் இருக்க வேண்டிய இடம்,,,!
இந்த தேசம் அல்லவே ?

இங்கிலாந்திற்கு ,
எப்போது செல்கிறீர்கள் ?
செல்லப்போகிறீர்கள் ?,,

இதையெல்லாம்,,,செய்யச் சொல்லி,,,
உங்களின் பின்னால்,,,,நிற்பவர்கள் யார் ?
உங்களை ஊக்குவிக்கும் சக்தி எது ?
உங்களின் இந்நிகழ்வுக்கு அனுமதியளித்தவர் எவர் ?

ஊருக்கே அன்னமிட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை வறுமையிலே செத்தார் !
அவர் குடும்பம் வறுமையிலே உழன்றது !

ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்று உலகிற்கே சித்தாந்தம் சொன்ன பாரதியின் குடும்பம்,,,, வறுமையிலே உழன்றது,,

இதோ,,,வீரவாஞ்சி தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட பின் அவர் மனைவி பொன்னம்மாள் வீடு வீடாகப் பாத்திரம் தேய்த்து கும்பிப் பசி அடக்கினாள் !

அடப் பரதேசிகளா,,,,?
அதுவெல்லாம்,,,உங்கள் காமாலைக் கண்களுக்குத் தெரியவில்லை என்றால்,,,,?

எவனோ ?
ஆங்கிலேயனுக்கு மடி தடவிக் கொண்டிருந்த பண்டிதன் சொன்னதை மட்டுமே ? ஆதாரமாகக் காட்டுகிற ஈனர்களே,,,

கருவின் குற்றம்,,,என்கிற சொல்லாடல்,,,, இப்போது என் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது,,,

எல்லாவற்றையும்,,,,
வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ,
காலமொன்று,,,
இந்நாட்டிலே இருந்திருந்தது,,,! என்பதும் உண்மைதான்,,,,
ஆனால்,,,
இது,,நேற்று,,அல்ல,,,,,

நாளை,,இப்படியே,,இருக்குமா ?
இப்படியே தான் இருக்குமா ?
•••••

தூத்துக்குடி தொழிலாளர் வேலை நிறுத்தத்தையும் பொதுமக்களின் எதிர்ப்பையும் நிறுத்த ஆஷ் துப்பாக்கியால் சுட்டான். அதில் மாண்டவர்கள் நால்வர். ஒருவர் இஸ்லாமியர். ஒருவர் பட்டியல் சமுதாயத்தை சார்ந்தவர்.  ஒருவரின் வயது 17. வலம்புரியம்மன் கோவிலில் பணி செய்யும் இளைஞர். மண்டையில் குண்டு பாய்ந்து மாய்ந்தார். மற்றொருவர் வயது 18. ரொட்டிக்கடையில் வேலை செய்யும் இளைஞர். இவரும் ஆஷின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.  இறந்தவர்களின் தேகங்கள் எவ்வித அக்கறையும் மரியாதையும் இன்றி மாலை வரை தெருக்களிலேயே கிடக்கும்படி அராஜகம் செய்தான் ஆஷ். இந்த விவரங்கள் ம.பொ.சிவஞானம் ஐயா அவர்கள் எழுதிய ’கப்பலோட்டிய தமிழன்’ எனும் ஆதாரபூர்வமான நூலில் பக்கங்கள் 54-55 இல் உள்ளன. 

ஆனால் இப்படிப்பட்ட ஆஷை குறித்து அவன் ஏதோ சாதி கொடுமைகளை எதிர்த்த தயாளதுரை போல சில மக்கட் பதடிகள் பேசியும் எழுதியும் வருகின்றனர். வீர வாஞ்சிநாதனின் தியாகத்தையும் அவரது மனைவி பட்ட கஷ்டங்களையும் மோசமாக பேசுகின்றனர். இப்படிப்பட்ட கீழ்த்தர ஜன்மங்களையும் பெற்றிருக்க அவர்களின் தாயார்கள் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை. 

இதில் நம்முடைய ஒரு தவறும் இருக்கிறது. இந்த நான்குபேரையும் யார் யார் என்பதை கண்டறிந்து அவர்களை தேச விடுதலைக்கான பலிதானிகள் தியாகிகள் என கௌரவிக்க நாம் தவறிவிட்டோம். திருநெல்வேலி தேசபக்தர்கள் இவர்கள் யார் யார் என கண்டறிந்து ஆஷின் கொடுங்கோன்மைக்கு பலியான நம்மவர்களான இவர்களின் நினைவை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.




வீரவாஞ்சி ஓவியம் ; Jeeva Nandham அண்ணா

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...