Thursday, June 30, 2022

#சென்னை_பழைய_விமான_நிலையமும்_சில_நினைவுகள்…

#சென்னை_பழைய_விமான_நிலையமும்_சில_நினைவுகள்…
———————————————————
கீழே உள்ள பழைய படம் சென்னை விமான நிலையம் இன்றைக்குள்ள விமான நிலையத்திற்கு வடக்கு புறம் 800 மீட்டர் தள்ளிஅமைந்தது இருந்தது. இதுதான் 1960,70 களில் இருந்த விமான நிலையம். இன்றைக்கு கார்கோ வாக உள்ள பகுதி 70 களில் அன்றைக்கு விமான நிலையமாக செயல்பட்டு வந்தது. 

அப்போது இன்று போல பல தனியார்
விமானங்கள் கிடையாது. மத்திய அரசின் Indian Airlines வெளி நாடு செல்ல Air India மகாராஜா சின்னத்தோடு  இயங்கியது . இவ்வளவு 
தனியார் விமானங்கள் இயக்கம் 1990களில்தான்.




எவ்வளவோ நினைவுகள் வந்து செல்கின்றன. முதல் விமான பயணம் எனக்கு இந்த இடத்திலிருந்துதான் தொடங்கின. முதல் விமான பயணத்தில் சென்னையிலிருந்து டெல்லி செல்லக் கூடிய சூழல் அமைந்தது. அப்போதெல்லாம் விமான பயணத்தின் டிக்கெட் ரசீது மாதிரி 3, 4 பக்கங்களாக book let-செவ்வக வடிவில் தாள்களாக அமைந்திருக்கும். மத்தியில் நிதித்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த தாரகேஷ்வரா சின்கா ஸ்தாபன காங்கிரஸில் முக்கியமான அகில இந்திய நிர்வாகி. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அற்புதமாக பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர். 

அவர் தமிழகம் வந்தால் நான் உடன் இருப்பேன்.  அவருடன் பயணித்து பணிகளை செய்வது உண்டு. அவர் குறிப்பாக கன்னியாகுமரி, மதுரை,திருச்சி-ஶ்ரீரங்கம், கோவை,சிதம்பரம், மாமல்லபுரம்,திருப்பதி போன்ற இடங்களுக்கு செல்வார். 

அவர் ஒரு முறை தமிழகம் நிகழ்ச்சிக்கு வந்து திரும்பும் போது என்னை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்து உடன் அழைத்து சென்றார். விமான பயணச் செலவை அவரே ஏற்று என்னை டெல்லிக்கு அழைத்து சென்றார். அதுதான் என்னுடைய முதல் விமான பயணம். முதல் விமானப் பயணம் என்பதால் பல விஷயங்கள் அறியக்கூடிய வாய்ப்பு எனக்கு 48 ஆண்டுகளுக்கு முன்  கிடைத்தது. 

டெல்லி அழைத்து சென்று தாரகேஸ்வரா அம்மையாரின் வீட்டில் என்னை தங்க வைத்து மறுநாள் என்னை இன்றைக்கு உள்ள நாடாளுமன்ற கட்டத்திற்க்கு அழைத்து சென்று;  dear Son, one day you will reach this circular building என்றார். இதெல்லாம் நடந்த நினைவுகள். நான் நாடாளுமன்றம் வளாகத்தை பார்த்தே நாற்பத்தி ஏழு எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. சின்காவின் சொன்னபடி நாடாளுமன்ற உறுப்பினராக அங்கு செல்ல 1980, 1998,2002 இல் வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஏதோ யாரோ சில புன்னியவான்களால் அது ஒருவகையில் தடுக்கப்பட்டது.அவர் நன்றாக இருக்கட்டும். 

ஆரம்ப காலத்தில் இந்த விமான நிலையம் சுற்றுலா பயணிகள் பார்க்க கூடிய இடமாக திகழ்ந்தது. அன்றைய காலகட்டத்தில் விமானம் தரை ஏறுவதும், தரை இறங்குவதும் மக்கள் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருப்பர்கள். அந்த விமான நிலையத்தில் அன்றைக்கு எத்தனையோ தலைவர்கள் காமராஜர் இந்திரா காந்தி, ஜெபி என சென்று வரவேற்றதெல்லாம் உண்டு. அதெல்லாம் பசுமையான நினைவுகள். அப்போதெல்லாம் மிக எளிமையான முறையில் வரவேற்பும் போலீஸ் காவல் துறையின் நெருக்கடிகள் இல்லாமல் எளிமையான நிகழ்வாக இருக்கும். அரசியலில் அன்றைக்கு தேசிய அளவிலான மாணவர் அரசியலில் இருந்தால் மாதத்திற்கு ஒரு முறையாவது  விமான பயணம் செய்வது உண்டு. பழ.நெடுமாறன், கவிஞர் கண்ணதாசன் போன்றோர்
டில்லி அரசியிலிருந்து விலகல் என
நிலையில் வட புல அரசியல் தொடர்புகள் இல்லாமல் ஆனாது. இருப்பினும்
கே.பி.உன்னி கிருஷ்ணன், மறைந்த
பஸ்வான், சந்திரஜித் யாதவ், சுரேந்திர மோகன், மற்றும் அம்பிகா சோனி என
பலரின நட்பு இருந்தது இன்னும் இருக்கிறது.
#Chennai_airport_memories

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksrpost
30-6-202.


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...