Tuesday, July 5, 2022

தகுதியே தடை

மனசு பாரமாக இருந்தால் கூட சமாளித்து வாழலாம், ஆனால் உங்களை விட்டு தூரமாகி விட்டார்கள் என்றால் நீங்கள் அவர்களை விட்டு ஒதுங்குவது தான் சிறந்தது.

ஏமாந்து போன எல்லோரும் நம்பியது 
ஆரம்பத்தில் அவர்கள் உங்களோடு செயல்பட்ட விதத்தைத்தான்…

உங்களை காயப்படுத்தியவர்களுக்கே நன்றி சொல்லுங்கள், ஏனென்றால் அவர்களை விட நல்லவர்களை கண்டு பிடிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது அவர்கள் தான்.



உங்களின உதவிகள் , பணிகளை அங்கிகரத்துநேசிக்காத ஒருவரை நீங்கள் நேசித்துக் கொண்டிருப்பதும், அல்லது நேசித்துக் கொண்டிருந்த ஒருவர் உங்களை வேண்டாம் என்று விட்டு போவதும் கஷ்டமான ஒன்று தான்.

அதற்காக கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படாதீர்கள், நீங்கள் தவறான நபரை நம்பி உங்கள் நேரத்தை வீணடித்தது தான் உண்மை.

உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகமாக யோசித்து யோசித்தே தூங்க கூட முடியாமல் போய் விடுகிறார்கள்.

உங்கள் மதிப்பை உணராதவர்களையும் 
உங்கள் உணர்வுகளை மதிக்காதவர்களையும் பற்றி கவலைப்படாதீர்கள்.

வலி எப்பொழுதும் கண்ணீரில் இருப்பதில்லை சில சமயம் அது புன்னகையாக இருக்கும், ஆனால் உங்கள் விசுவாசத்திற்கு கண்ணீர் தான் எப்போதும் கடைசி பரிசு.

எந்த நியாயமான காரணமும் இல்லாமல் உங்களை திடீரென விட்டுச் செல்வார்கள், அதற்காக நீங்கள் ஒருவரை மறப்பதற்காக ஒருபோதும் இன்னொருவரை பயன்படுத்தாதீர்கள்.

நீங்கள் ஒருவருக்கு முக்கியமானவராக இருக்கலாம்,இருந்திருக்கலாம் ,இருந்து கொண்டு இருக்கலாம், இனியும் இருக்கலாம்…

ஆனால் அது எல்லா நேரத்திலும் அல்ல அவர்களுக்கு தனி தேவையை இன்னொரு நபர் வரும் வரைக்கும் தான் அந்த இடத்திற்கு நீங்கள்,

நீங்கள் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக உங்களுக்கு பிடிக்காத விஷயங்களில் இருந்து விலகி விடுவீர்கள்.

உங்கள் குறைபாடுகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால், யாரும் அதை உங்களுக்கு எதிராக பயன்படுத்த முடியாது.

இப்போது நீங்கள் நன்றாக வாழ்வதை யாரால் சகிக்க முடியவில்லையோ, அவர்கள் தான் உங்கள் கடந்தகால வலியின் பங்குதாரர்கள்.

உங்களால் உங்களை நிரூபிக்க முடியா விட்டால் உங்கள் திறன் மங்கிப் போவதைப் பற்றி யாரும் கவலைப்பட போவதில்லை…

எவ்வளவு வீதம் மற்றவர்களில் நீங்கள் தங்கி வாழாமல் இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

நீங்கள் தோல்வி அடைவதை பார்ப்பதற்காக சிலர் காத்திருக்கிறார்கள், உங்கள் முயற்சி மூலமாக அவர்களை ஏமாற்றுங்கள்.

பணத்தால் வாங்க முடியாத ஏதோ ஒன்று இருக்கும் வரை, எல்லாம் என்னிடம் இருக்கு என்று எந்த பணக்காரனாலும் கூட சொல்ல முடியாது.

உங்களை விட கீழ் நிலையில் இருக்கும் ஒருவரால் தான் நீங்கள் விமர்சிக்க படுவீர்கள், உங்களை விட சிறந்த ஒருவருக்கு உங்களை கவனிக்க நேரம் இருக்காது.

உங்கள் மதிப்பை நீங்கள் பார்க்க ஆரம்பித்தவுடன், உங்களுக்கு தேவையில்லாதவகைகளை நீங்கள் தவிர்க்கத் தொடங்குவீர்கள்.

தனியாக இருப்பவர்களின் கதைகள் பெரும்பாலும் சோகமாகத்தான் இருக்கும், ஆனால் சிலர் அவர்களை தங்கள் கதைகளில் 
வில்லனாக சித்தரிப்பார்கள்.

சுற்றி இருப்பவர்களால் உங்களை எல்லா விதத்திலும் திருப்தி படுத்த முடியாது, தனிமை ஒருபோதும் உங்களைக் கொன்று புதைக்காது.

உங்கள் மறுபிரவேசம் வலுவாக இருக்குமானால்,  நீங்கள் கடந்து வந்த வேதனைகள் அனுபவிக்க வேண்டிய ஒன்றுதான்…

நீங்கள் இல்லாமல் அவர்கள் நன்றாக இருந்தால், அவர்கள் இல்லாமல் நீங்கள் இன்னும் நன்றாக இருங்கள்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் யார் உங்களை கீழே வீழ்த்த முயற்சி செய்கிறார்களோ, அவர்கள் ஏற்கனவே உங்களுக்கு கீழே தான் இருக்கிறார்கள். 

#தகுதியே_தடை

#ksrpost
5-7-2022.

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...