Tuesday, December 31, 2024

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025
#ஆர்நல்லகண்ணு100 
சற்று முன் அவருடன் சந்திப்பு
———————————————————-

புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன் 
ஆர்நல்லகண்ணுவை சந்தித்தது கடந்த காலங்களை பேசி அசை போட முடிந்தது.

அரசியல் களத்தில் வயது முதிர்ந்த தலைவர்கள் பலரும் இன்று இந்திய அளவில் இல்லை.    எங்கள் நெல்லை சீமையின் புதல்வர் அருமைக்குரிய தலைவர் நல்லகண்ணு ஒரு நூற்றாண்டை  எட்டி ஒரு தத்துவத்தை போல நலமாக  இருக்கிறார்.  




நல்ல கண்ணு அவர்களுக்கும் எனக்குமான அறிமுகம் 1970 இல் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். எங்கள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகிரிசாமி அவர்கள் மூலம் அவர் திருநெல்வேலியில் வைத்து எனக்கு அறிமுகம்!

 செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் (பாளையங்கோட்டை) படித்த மாணவர் லூர்து நாதன் காவலர்களால் தாக்கப்பட்டு தாமிரபரணி படுகொலையில்  1972 இல் இறந்தபோது நான் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தேன்.

இந்தப் படுகொலை பற்றி விசாரிக்க கம்யூனிஸ்ட் தலைவர் 
எம். கல்யாணசுந்தரம் அவர்களை அழகிரி சாமி அழைத்து வந்த போது
நான் நல்ல கண்ணுவை நேரில் சந்தித்து உரையாடினேன். பிறகு அழகிரிசாமி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில்  கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சார்பில் நின்று பணியாற்றிய போது தோழர் நல்ல கண்ணு அவர்கள் எங்களது குருவிகுளம் வட்டாரத்தில் தேர்தல் பணியாற்ற வந்தார். அந்த சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்து மதியம் உணவு உண்டபின்  சற்று ஓய்வெடுத்து விட்டுப் பிறகு மீண்டும் கிராமங்களுக்குப் பிரச்சாரத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது. உடன் கோடங்காள் கிருஷ்ணசாமி, பிதப்புரம் ராமசுப்பு, குளத்துள்ளபட்டி கிருஷ்ணசாமி இருப்பார்கள்.

அப்போது மஞ்சளும் கருப்புமாக பெயிண்ட் அடிக்கப்பட்ட (டாக்ஸி) வாடகை கார் தான் கிடைக்கும்! 1970 1980களில் இப்போது உள்ளது போல பல வகையான ஏசி கார்கள் எல்லாம் கிடையாது. அந்த ஒரே காரில் நானும் நல்ல கண்ணுவும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் கைகளில் மைக் வைத்துக்கொண்டு மேலே ஒலிபெருக்கிகளைக் கட்டி கிராமத்தின் புழுதி சாலைகளில் பிரச்சாரத்திற்கு போவோம்.

பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், மாவட்டப் பிரிவினைக்குப் பின்பு, தூத்துக்குடி மாவட்டம்ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார்.

இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை.
அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர்.. சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அன்னசாமி என்பவர், தனது மகள் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொடுத்தார். இந்தத் திருமணம் 1958ஆம் ஆண்டு நடந்தது.

தென்காசி தோழர் எஸ் .பலவேசம் செட்டியார் அவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார் அப்போது தன்னிடம் பயின்ற மாணவன் நல்லகண்ணுவிற்கு உலக அரசியல் சமூக கல்வி இவற்றை பயிற்றுவித்து மாணவனுக்கு பொதுவுடமை சிந்தனையை உருவாக்கினார் தோழர் நல்லகண்ணு அவர்களை கம்யூனிஸ்ட் ஆக்கியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு 

இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் நிலச்சுவான்தார்களின் கைகளில் நிலம் இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் தலித் மக்கள் வீடுகளையோ நிலங்களையோ வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது.
"நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்..

நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது.

அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார். நான்குநேரி ஜீயர் மடத்தை எதிர்த்து வழக்கறிஞர் என்.டி. வானமாமலை, என. வானமாமலை, தொ. மு. சி. ரகுநாதன் கலந்து கொண்டார்கள்.

கடனாநதி (Gadananathi), தென்காசி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் அருகே தாமிரபரணியில் கலக்கிறது. கடனாநதி மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது. தாமிரபரணி வரை கடந்திருந்த தொலைவு 43 கிலோமீட்டர். சிவசைலம், பூவன்குறிச்சி, ஆம்பூர் வழியாக பாய்கிறது.மற்றும்  திருநெல்வேலி மாவட்டத்தில் சொக்கம்பட்டி அருகே கருப்பாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை கருப்பாநதி அணை (Karuppanadhi Dam) ஆகும். இந்த அணையின் மூலம் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுகின்றன. இந்த நீர வள ஆதாரங்களுக்கும் போராடினார்

1986இல் அழகிரி சாமியோடு எனது திருமணத்திற்கு வந்த நல்லகண்ணு அவர்கள் கலைஞரையும் சந்தித்தார்! 
அதே நாளில் தான் கலைஞரும் பிரபாகரனையும் சந்தித்தார்!
1983இல் தேசிய நதிநீரை இணைப்பு நான் தொடுத்த உச்சநீதி மன்றத்தின் வழக்கை குறித்து விசாரிப்பார். அப்போது நதி நீரை குறித்தும் நல்லகண்ணு நூலை எழுதி வெளியிட்டார்.

கங்கைகொண்டன் கோக்கோலா கம்பெனிக்கு தாமிரபரணி தண்ணீரை தருவதை எதிர்த்து போராட்டமும் இவர் நடத்தினார்.

தன்னுடைய 86 வயதிலும் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக நல்லகண்ணு போராடினார்கடந்த 2010ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து அமர்வில் விசாரணையில்  நேரடியாக ஆஜராகி நல்லகண்ணு வாதாடினார்.
தாமிரபரணி ஆறு செல்லும் இடத்தின் மணல் திட்டில் கொங்கராயன் குறிச்சி, ஆறாம் பண்ணை ஆகிய கிராமங்கள் உள்ளதாகக் கூறி அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நல்லகண்ணு வாதிட்டார்.
இதன்பிறகு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிலவியல் தொழில்நுட்பத்துறையின் தலைவர் முனைவர் சந்திரசேகர், அதே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் அருணாச்சலம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர் சேஷஷாயி ஆகியோர் கொண்ட கமிசன் நீதிமன்றம் நியமித்தது.அந்த குழு அளித்த பரிந்துரையை ஏற்று நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு மணல் அள்ளுவது தடுக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாளர், இடைக் கமிட்டி செயலாளர், விவசாய சங்கத்தின் மாநில செயலாளர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், நிர்வாகக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் எனப் பல பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார்.

மூத்த தலைவர் அம்பை கோமதிசங்கர தீட்சிதர் உடன் மோதுவார் ஆனால் அவர்மீது அன்பும் காட்டுவார்.கடந்த 1980ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு நல்லகண்ணு தோல்வியைத் தழுவினார்.
அந்தத் தேர்தலில் அதிமுக-கூட்டணி அமைத்தது. எம்.ஜி.ஆர் நேரடியாகப் பிரசாரம் செய்தார்.கடந்த 1999ஆம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நல்லகண்ணு தோல்வியடைந்தார்.

தொ மு சி ரகுநாதன், கு.அழகிரிசாமி, .நா.வானமாமலை, கிரா,
திகசி, ஜேக்கப் வாத்தியார் என பல இலக்கிய ஆளுமைகள் இவருக்கு தோழர்கள். கரிசல் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்பர்.

எனது ‘நிமிர வைக்கும் நெல்லை’, ‘கனவாகிப் போன கச்ச தீவு’, ‘தமிழகம்-50 ’ நூல்கள் வெளியீட்டு விழாக்களில் கலந்துகொண்டு வாழ்த்தினார். இந்த புத்தகங்களுக்கு அணிந்துரையும் வழங்கினார்.

கிரா -75, 85, சென்னையில் கிரா-95 புதுவையிலும் நான் நடத்திய விழாவில் 
கலந்து கொண்டார்.

1970-1980 களில் நெல்லையிலிருந்து சென்னை வந்தால் அழகர்சாமி எம்எல்ஏ
அறையில் தங்குவார்.

பத்தாண்டு முன இலங்கை தமிழர் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் அமெரிக்கா செல்ல விசா கிடைப்பதில் சிக்கல் இருந்தது. நான் சென்னை அமெரிக்க  துணை தூதரகத்திற்க்கு நான அழைத்து சென்று விசா பெற்று தந்தேன்.

இப்படி ஆர்என்கே குறித்த பல பசுமையான நினைவுகள் எண்ணங்கள்!! அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க!

#நல்லகண்ணு100
#nallakannu

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
26-12-2024


கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நினைவுகள்

#கன்னியாகுமரிதிருவள்ளுவர்சிலைநினைவுகள்……! 
———————————————————
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபப்  பாறைக்கு அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவர் சிலையை தன்னுடைய விருப்பப்படிக் கலைஞர் நிர்மாணித்தார். அதற்கான விழா நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது !ஆனாலும் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.!



திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட பிறகான இடைக்காலத்தில் இருவருக்கும் இடையே ஒரு இணக்கமான சூழல் இருந்தது. அப்பொழுது தான் அந்த சிலையும் அமைந்தது. அந்த விழாவின் போது செய்தி விளம்பரத்துறை அமைச்சர் முல்லைவேந்தன் இருந்து சிலைக்கான எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தார். ஜனவரி 30 ஆம் தேதி நானும் வை கோவும் கன்னியாகுமரி சென்று விட்டோம்.



வேலைகள் நல்லபடியாக நடந்து கொண்டிருக்க

அந்த மாவட்டத்தின் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் எம்எல்ஏ ஆவுடையப்பன் தூத்துக்குடி என் பெரியசாமி முன்னாள் அமைச்சர் ஜெனிஃபர் சந்திரன் போன்றவர்களும் அங்கு இருந்தார்கள். கலைஞரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
கலைஞர் வந்ததும் சிலை திறக்கப்பட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது! அந்த விழா நடந்து முடிந்த அன்று தான் வைகோ அவர்களின் மைத்துனர்  



எ. சீனிவாசன் குருமலை - வெங்கடசலபுரத்தில் இறந்து போன செய்தி எட்டியது. கலைஞர் அவர் யார் என்னை எப்படி இறந்தார் என்றெல்லாம் வைகோவை விசாரித்து ஆறுதல் கூறியதெல்லாம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.




அதன் பிறகு தமிழ் புத்தகாலயம் அகிலன் கண்ணன் அவர்கள் பதிப்பித்த மனித உரிமை- சிலகுறிப்புகள் என்ற எனது நூல் ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில்
வைத்து வெளியிடப்பட்டது. அது குறித்து வெளியான அழைப்பிதழ்களைப் பார்த்துவிட்டு கலைஞர்  ஏய்யா! இந்த நூல் வெளியீட்டிற்கு என்னைக் கூப்பிட வேண்டியதுதானே, ஏன் கூப்பிடவில்லை?! என்னை நீங்களும் வை கோவும் அந்நியமாக நினைக்கிறீர்களா? என்று கேட்டார்.



அப்படி இல்லை அண்ணன் நீங்கள் முதலமைச்சராக இருக்கிறீர்கள்! உங்களுடைய பணி நெருக்கடிகள் என்னவென்று தெரியவில்லை அதை தெரிந்து கொள்ள வேண்டும்! அதற்கு நேரம் இருந்தால்தான் நீங்கள் வர முடியும்  . அதன் பிறகு தான் உங்களை அழைக்கவும் முடியும்! சிலையை திறந்து வைத்து விட்டு வந்திருக்கிறீர்கள். எத்தனை நாள் அந்த பணிகள் என்றும் தெரியவில்லை! உங்களுக்குச் சிரமம் தரக் கூடாது  என்று யோசித்தோம் என்றேன்!

என்னயா! உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டி,தஞ்சை ராமமூர்த்தியை கூப்பிட்டு இருக்கிறீர்கள். அமெரிக்க தூதரைக் கூப்பிட்டு இருக்கிறீர்கள் மாலனைக் கூப்பிட்டு இருக்கிறீர்கள்! உங்கள் கட்சிக்காரர்கள் அத்தனை பேரும் இருக்கிறார்கள் உன்னை போன்ற வழக்கறிஞர்களும் இருக்கிறார்கள். அப்படியான நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பேன் அல்லவா!நான் வந்து விழாவில் அந்த நூலை வெளியிட வைகோ அதை வாங்கி இருக்கலாமே! என்று அவர் கேட்டதெல்லாம் என் நெஞ்சில்  அலை மோதுகின்றன! அந்த சிலையை எந்த இடத்தில்  நிறுவ வேண்டும் எந்த இடத்தில் எதைச் சேர்க்க வேண்டும் எப்படி எப்படி எல்லாம் அதை உருவாக்க வேண்டும் என்று அவர்  கலந்து பேசியதெல்லாம் என் ஞாபகத்தில் இருக்கிறது.




இன்றைக்கு உள்ளவர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாது! அன்றைக்கு அந்த விழாவிற்கு ஆற்காடு வீராசாமி தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறையில் அமைச்சராக இருந்த துரைமுருகன் வந்திருந்தார் . மத்தியில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டி ஆர் பாலு வந்திருந்தார். இந்த இருவரை தவிர அப்போது  எம்எல்ஏவாக இருந்த தங்கம் தென்னரசும் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். பேராசிரியர், மூப்பனார்,சிவாஜி கணேசன், ஜன வைகோ,கிருஷ்ன மூர்த்தி(பாஜக),
பாமக தலைவர் இராமதாஸ் என பலர் கலந்து கொண்டார்கள் .

இதுதான் என் ஞாபகத்தில் இருக்கிறது மற்றவர்களெல்லாம் புதியவர்கள் யார் என்று தெரியாதவர்கள். 25 ஆண்டுகள் கழித்து இந்த ஞாபகங்கள் எல்லாம் எனக்கு வருகிறது! அதைச் சொல்ல வேண்டியது என் கடமை! அத்தோடு இல்லாமல் அது கலைஞருடன் நான் பயணித்த நாட்களும் கூட. இன்றைக்கு சிலை திறந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற செய்தியைப்பார்த்த பிறகு எனது கடந்த கால ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அன்றைக்கு சென்னை மேயராக இருந்த ஸ்டாலினும் வந்திருந்தார்! கலைஞர் இருந்திருந்தால் இன்னும் இந்த ஞாபகங்கள் கூடுதலாக இருக்கும்.

உண்மையில் சிலைக்கான அடிக்கல் 1979ல் மொரார்ஜி தேசாய் அவர்களால் எம்ஜிஆர் ஆட்சியின் போது திட்டமிடப்பட்டது. அன்றைய  விவேகானந்த கேந்திரா இயக்குனர் ஏக்நாத் ராணடே அவர்களால் இந்த திட்டம் முன்மொழிக்கப்பட்டது. எம்ஜிஆரின் தலைமையில் மொரார்ஜி தேசாய் அதற்கான விழா எடுத்து அந்த அடிகல்லை நாட்டினார். அதற்குப் பிறகு 21 ஆண்டுகள் கழித்து தான் கலைஞரின்  கனவாக பிரமாண்டமான திருவள்ளுவரின் சிலை 133 அடி உயரத்தில்  வெகு சிறப்பாகக் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டது.

 அப்படியான வள்ளுவர் சிலையின் 25வது ஆண்டிற்கு கலைஞரின் நினைவுகளோடு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

#கன்னியாகுமரியில்திருவள்ளுவர்சிலை
#tiruvalluvarstatue
#kanyakumari

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட
31-12-2024

Sunday, December 29, 2024

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters
#PV. NarasimhaRao 
#ManmohanSingh
#officialfuneralrites
———————————————————-
#முன்னாள்பிரதமர்கள்
#பிவி.  நரசிம்மராவ்
#மன்மோகன்சிங்
#இறுதிச்சடங்குகள் 
———————————————————-
Yesterday, 28-12-2024 in the wake of the official funeral rites conducted by the Indian government for the late former Prime Minister Manmohan Singh, both Congress leader Rahul Gandhi and Tamil Nadu Chief Minister M. K. Stalin voiced their criticism. They claimed that the ceremony was conducted improperly and issued public statements to that effect. However, one has to wonder: on what grounds are they making these assertions?



The irony of their criticism is glaring when we look back at their own party’s history. Under Congress rule, when Sonia Gandhi was the party president, the funeral of former Prime Minister 



P. V. Narasimha Rao was handled without any official ceremony or memorial. His body was hastily moved to Hyderabad, and when the truth of this was exposed, they swiftly shut the doors of the Congress office. Given this, one must ask: how can those who mishandled such an important national figure’s farewell now claim the moral high ground when criticizing the respectful ceremony for Manmohan Singh?

Does Tamil Nadu Chief Minister Stalin know about this history? If so, shouldn’t he be asking about this justice? It’s unlikely that Stalin is aware of the events surrounding Narasimha Rao’s death in 2004!
Rahul Gandhi, too, seems to have little moral authority to comment. When a Prime Minister passed away during their tenure, his body was immediately sent to his hometown and later buried in Delhi without any formal ceremony or acknowledgment. Yet now, Rahul Gandhi is quick to criticize the lack of respect shown to another Prime Minister. The hypocrisy is clear. In a nation as diverse and vast as India, should not a Prime Minister, elected by the people, be treated with respect according to national traditions, regardless of political differences?
The situation is reminiscent of an old saying: "When the mother-in-law breaks something, it’s a golden pot; when the daughter-in-law breaks something, it’s a clay pot." The Congress party failed to follow the tradition of offering a dignified farewell to Narasimha Rao. In contrast, the current BJP government has respected this tradition by conducting Manmohan Singh’s funeral rites with the due reverence.
So, what are we witnessing now? Is it a genuine concern for respect, or is it just opportunistic criticism? Complaints without substance are nothing but hypocrisy. The question arises: Does the conscience of these leaders not bother them? What kind of politics are they playing, even in the face of death?

நேற்று 28-12-2024 இந்திய அரசு முறைப்படி நடத்திய மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின்  இறுதிச் சடங்கினை விமர்சிக்கும் முகமாக  அச்சடங்கு  முறையாக நடக்கவில்லை என்று ராகுல் காந்தியும் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினும் முறையிட்டு இருக்கிறார்கள். அதற்கான அறிக்கையும் விட்டுள்ளார்கள். இவர்கள் எந்த அறிதலில் இவ்வாறு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

அதே காங்கிரஸ் காலத்தில் சோனியா தலைவராக இருக்கும் பொழுது 2004 இல் பிரதமராக இருந்து மறைந்த  பி வி நரசிம்மராவ் அவர்களின்  திரு உடலை டெல்லியில் அடக்கம் செய்து அதற்கு முறைப்படி எந்த நினைவுச் சின்னமும் எழுப்பாமல் அன்றைக்கே அவரது உடலை ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லுமாறு கையைக் காட்டி விட்டு உண்மையைச் சொன்னால் விரட்டிவிட்டு டில்லி தலைமை காங்கிரஸ் காரியாலய கமிட்டியினுடைய கதவுகளை மூடிவிட்டார்கள். அப்படிச் செய்துவிட்ட உங்களுக்கு நியாயம் பேச என்ன தகுதி இருக்கிறது.

இந்த வரலாறு எல்லாம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா? தெரிந்திருந்தால் இந்த நியாயத்தைக் கேட்டிருக்க வேண்டாமா? 2004 இல் நடந்த நரசிம்ம ராவின் இறப்புச் சம்பவம் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

ராகுல் காந்திக்கு மட்டும் கூட இதில் என்ன ஒழுக்கம் தெரிகிறது? தங்கள் ஆட்சியில் இறந்த ஒரு முன்னாள் பிரதமரை அவரது ஊருக்கு உடனே விரட்டி விட்டு அங்கே அடக்கம் செய்யுங்கள் என்று துரத்தி விட்டீர்கள். இன்னொரு பிரதமரின் நல்லடக்கத்திற்கு சரியான மரியாதை இல்லை என்று முறையிடுகிறீர்கள்.  உங்கள் ஆட்சியில் எல்லா பிரதமரையும் ஒரே மாதிரி தானே பார்க்க வேண்டும் ஒரு தேசிய நாட்டில் உங்கள் ஆட்சியில்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை எவ்வாறு நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? மாமியார் உடைத்தால் பொன்குடம் !மருமகள் உடைத்தால் மண்குடம்! என்கிற கதையாகத்தான் இருக்கிறது. இறந்த பிரதமர்களை டெல்லியில் தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்கிற மரபை நீங்கள் தானே நரசிம்மராவ் இறப்பில் தவறவிட்டீர்கள். இன்றைய பாஜக அரசு அதைத் தன்னளவில் சரியாகத்தானே செய்து கொண்டிருக்கிறது!

உங்களுக்கு என்ன வந்தது இப்போது! அது சரி இல்லை! இது சரியில்லை! என்று சொல்லிக் கொண்டிருப்பது என்ன ஒரு வேடிக்கை ! தன் நெஞ்சே தன்னைச் சுடாதா? இவர்களெல்லாம் என்ன மாதிரியான மனிதர்கள் என்றே தெரியவில்லை! சாவிலும் அரசியல்! அநாகரிகம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!!

டெல்லியில் மட்டும் சோனியா குடும்பம் ஆக்கிரமித்துள்ள அரசு இடம் 110 ஏக்கர்! பிற காங்கிரஸ் தலைவர்கள் பெயரில் சமாதி வைக்க, காங்கிரஸ், ஆக்கிரமித்து உள்ள இடங்கள் இந்தியா முழுவதும் பல ஆயிரம் ஏக்கர்! எல்லாம் அரசின் இடங்கள்! 
        இதில் ஏதாவது ஒரு இடத்தில் மன்மோகன் சிங்  சமாதிக்கு இடம் கொடுக்க சோனியாவுக்கு விருப்பம் இல்லை! 
       மீண்டும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏக்கர் கணக்கில் ஆன இடத்தை கேட்கிறது காங்கிரஸ்! 
       இப்படி ஒவ்வொரு முன்னாள் பிரதமர்களுக்கும் ஏக்கர் கணக்கில் இடம் கொடுத்தால் கடைசியில் இந்தியாவில் சமாதிகள் மட்டுமே மிஞ்சும்! 
        ஏழைகள் அரை சென்ட் இடத்திற்கு கஷ்டப்படும் போது, பல நூறு ஏக்கர் நிலங்கள் சமாதிக்கு தேவையா? 
      ஏற்கனவே காங்கிரஸ் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள இடத்தில் மன்மோகன்சிங்கிற்கு இடம் கொடுக்கலாமே?

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
29-12-2024.


Saturday, December 21, 2024

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.



———————————————————-
தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர்.

கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சர்க்கார் சாம்பகுளம் , செங்காளிபாளையம்- வையம்பாளையம்  கிராமத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தார் நாராயணசாமி. பெற்றோர் சின்னம்ம நாயுடு - அரங்கநாயகி. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாராயணசாமி அதன் பிறகு தன்னை முழுமையாக  விவசாயத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். 1957முதலே உழவர்களின் போராட்டங்களில் கலந்து கொண்டார் நாராயணசாமி. உழவர்கள் தனித்து இருப்பதாலேயே தங்கள் கோரிக்கையில் வெற்றி பெற முடிவதில்லை என்பதை உணர்ந்து உழவர்கள் இயக்கத்தை கட்டமைப்பதிலே கவனம் செலுத்தினார். 1968-ல் கோவை வட்ட உழவர் இயக்கம் 1969-ல் கோவை மாவட்ட உழவர் இயக்கம், 1970-ல் தமிழக உழவர் இயக்கம் என உழவர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கட்டமைத்தார். 



1970-லிருந்து 1984 வரை தமிழகத்தில் நடைபெற்ற உழவர்களின் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார் நாராயணசாமி. உழவர் போராட்டங்களிலே கலந்து கொண்டதற்காக பல முறை சிறை சென்றார். 1980-க்கு பிறகு இந்திய அளவில் உழவர்களை திரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார் நாராயணசாமி. அதன் அடிப்படையில் கர்நாடகாவில்பேராசிரியர் நஞ்சுண்ட சாமியையும், ஆந்திராவில் செங்காள் ரெட்டியையும் மராட்டியத்தில் சரத் ஜோசியையும் உத்தரப்பிரதேசத்தில் மகேந்திர சிங் திகாயத்தையும் சந்தித்து உழவர் இயக்கத்தை கட்டமைக்க தூண்டினார். அதன் பிறகே இம்மாநிலங்களில் உழவர் இயக்கங்கள் ஏறபடுத்தப்பட்டன. கட்டை  வண்டிப் போராட்டம் முக்கியமாக நிகழ்ந்தது.

1970-80களில் நாராயணசாமி முன் வைத்த முதன்மையான கோரிக்கைகளில் சில;
 • உழவுக்கான மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும்.
 • கட்ட இயலாத நிலையில் உள்ள உழவர்களின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
 • வேளாண் பொருட்களுக்கு அரசு அடிப்படை விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
 • வேளாண்மையை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும்.

46 பேர் உயிரை துப்பாக்கிக்கு குண்டுக்கு பலி கொடுத்து வாங்கியது
இலவச மின்சாரம் பெற போராடி துப்பாக்கி சூட்டுக்கு தன்னுடைய உயிரை கொடுத்த 

1. ஆயிக்கவுண்டர்,பெருமாநல்லூர், கோவை மாவட்டம் 

2. மாரப்பன் (37) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம் 

3. ராமசாமி (25) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம் 

4. ஆறுமுகம் (25) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம் 

5. முத்துச்சாமிநாயக்கர் (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம் 

6. சாந்தமூர்த்தி (20) 05.07.1972Nr பெத்தநாயக்கன் பாளையம், சேலம் 

7. மணி (30) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம் 

8 . ராமசாமி (முத்து) (32) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம்,
சேலம் 

9.. பிச்சைமுத்து (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம் 

10. கோவிந்தராஜுலுநாயுடு (16) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம் 

11. விவேகானந்தன் (35) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம் 

12 . ராமசாமி (23) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம் 

13. முத்துக்குமாரசாமி (22) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா 

14. சுப்பையன் (32) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா 

15. கந்தசாமி நாயக்கர் (55) 05.07.1972 பழைய அப்பநேரி, கோவில்பட்டி தாலுகா 

16. சீனிவாசநாயக்கர் (18) 05.07.1972 சாத்தூர் தாலுகா, இராமநாதபுரம் ஜில்லா 

17. கந்தசாமிரெட்டியார் (42) 05.07.1972 அருப்புக்கோட்டை, சாத்தூர் தாலுகா 

18. நம்மாழ்வார்நாயுடு (20) 05.07.1972 சூலக்கரை, சாத்தூர் தலுகா 

19. கிருஷ்ணசாமி நாயக்கர் கோவை சிறையில். 

20. பெரியகருப்பன் திருச்சி சிறையில். 

21. நாச்சிமுத்துக்கவுண்டர் (50) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் 

22. வி.சுப்ரமணியன் (30) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் 

23. பி.சின்னசாமி கவுண்டர் (51) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் 

24. கே.குப்புசாமி (29) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் 

25. பி.கிருஷ்ணமூர்த்தி (25) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் 

26. பி.மணிக்ககவுண்டர் (52) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் 

27. ஆரோக்கியசாமி (50) 10.04.1978 நொச்சியோடைப்பட்டி, திண்டுக்கல் தாலுகா 

28. முருகேசக்கவுண்டர் (47) 11.04.1978 ஒடுகத்தூர், வேலூர் தாலுகா, (வா.ஆ) 

29. ஆர்.அரசுத்தேவர் (39) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா 

30. பி.சர்க்கரை தேவர் (35) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா 

31.வி.புலியுடை தேவர் (32) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா 

32. முத்து வேலம்மாள் (52) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா 

33. வி. பாக்யத்தாள் (37) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா 

34. மகாலிங்கம் (19) 23.04.1979 உடுமலைப்பேட்டை, கோவை ஜில்லா 

35. வேலுச்சாமி (34) 23.04.1979 உடுமலைப்பேட்டை, கோவை ஜில்லா 

36. சாத்தூரப்பநாயக்கர் (56) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா 

37.வெங்கடசாமி நாயக்கர் (55) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா 

38. வரதராஜ் நாயக்கர் (32) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா 

39. என்.வெங்கடசாமி நாயக்கர்(22) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா 

40. ரவீந்திரன் (17) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா 

41. முரளி (13) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா 

42. மணி (17) 31.12.1980 டி.சி.கண்டிகை, திருத்தணி தாலுகா 

43. ஏழுமலை (22) 31.12.1980 வீரப்பார், பண்ருட்டி தாலுகா, கட்லூர்மாவட்டம். 

44. கி. துளசிமணி சித்தோடு கங்கார்புரம், பவானி வட்டம் 

45. எத்திராஜ நாயக்கர் - 29.03.1993 வெங்கடாசலபுரம் தாலுகா, சங்கரன்கோவில் வட்டம் 

46. ஜோசப் இருதய ரெட்டியார் - 29.03.1993 அகிலாண்டபுரம், ஒட்டபிடாரம் வட்டம்.

எங்கள் கிராமத்தில் 1980 இறுதியில் டிச. 31இல் ஆறு பேர் துப்பாக்கி சூட்டில்
இறந்தனர்.

விவசாயிகள் போராட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, கோவை விவசாயிகள் தாலுகா, ஜில்லா அளவில் குழு அமைத்து போராட்டம் நடத்தி, அதன் வளர்ச்சியின் பெருக்கமாக தமிழகம் தழுவிய அளவில் அதனை போராட்ட வடிமாக மாற்றி காட்டியவர் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள்.

அவர் திமுக கூட்டணியில் இருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், கோவில்பட்டி  சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு சோ,அழகர்சாமி அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய வந்தவர்,அன்று பிரச்சாரம் முடித்துவிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதியில் 20.12.1984 ஆம் தேதியில் தங்கி இருந்தபோது, அன்று இரவு உடல்நிலை சரியில்லாத நிலையில் நெஞ்சி வலி ஏற்பட்டு மறைந்து போனார். அன்றைக்கு அவர் உடன் இருந்தவர்களில் நானும் ஒருவன். அன்றைக்கு கங்கர்சல்பட்டி கென்னினி பெருமாள்சாமி, பிச்சை தலைவன்பட்டி கென்னினி ராமசாமி, புளியங்குளம் கானப்பாடி பெருமாள்சாமி,, சத்திரப்பட்டியை சேர்ந்த ராமசுப்பு, எங்கள் ஊர் ராமானுஜம் ஆகியோர்  சிலர் உடன் இருந்தார்கள். நானும் அந்த அறையில் தான் அவருடன் தான் தங்கி இருந்தேன்.  நாராயணசாமி  நாயுடு இறந்த செய்தி காட்டு தீயாக பரவி, பயணியர் விடுதி முன்பு மிகப் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. இப்படி அய்யாவுடன் நானும் வையம்பாளையம் வரை அவரின் இறுதி பயணத்தில் பயணித்தேன் என்ற பெருமித உணர்வு இன்னும் மறக்க முடியாத நினைவுகள் ஆகும்.

அதன் பிறகு 1993ஆம் ஆண்டு கோவில்பட்டியில் மிகப் பெரிய ஊர்வலம் விவசாயிகள் நடத்தினார்கள். மேற்படி  ஊர்வலத்தின் தொடக்கத்திலே விவசாயிகளுக்கும் போலீஸ்க்கும் மிகப் பெரிய கலவரம் மூண்டது அந்த கலவரத்தில் வெங்கடாச்சலபுரம் எத்திராஜ் நாயக்கர், அகிலண்டபுரம் ஜோசப் இருதய ரெட்டியார் ஆகியோர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள். அவர்களுக்கு நீதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, புதைக்கப்பட்ட ஜோசப் இருதய ரெட்டியார் உடலை மீண்டும் தோண்டி எடுத்து, பிண கூராய்வு (Re postmortem)நடத்தி துப்பாக்கி சூடு காரணமாக தான் மரணம் நிகழ்ந்தது என்று உறுதியூட்டி, நிவாரணம் பெற்று கொடுத்தேன். அன்றைய தேதியில் மாவட்ட ஆட்சியர், கோவில்பட்டி கோட்டாச்சியர் மற்றும் அன்றைய ஆட்சியாளர்கள் என்னை எவ்ளோ வேண்டி கொண்டும் நான் கேட்காமல் விவசாயிகள் பக்கம் போராடி நிவாரணம் பெற்று கொடுத்தத்துடன் அரசாங்கம் செய்தது தவறு என்று நிரூபணம் செய்தேன். இந்த சம்பவம் குறித்தான விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணிய விசாரணை குழுவை முதல்வர் ஜெயலலிதா அன்று அமைத்தார். இந்த விசாரணை குழுவில் 
கோவில்பட்டி, சென்னையில் நான் ஆஜராகி எனது கடமையை செய்தேன்.

அதன் பிறகு பல்வேறு போராட்டங்களில் ஏற்பட்ட கலவரத்தால் விவசாயிகளின் உரிமை காக்க இறந்த போன நபர்களின் பட்டியலை 1998 இல் நான் தான் தயார் செய்து வெளியிட்டேன். கடந்த 2014 எனது சமூக ஊடகங்களில் இநன 46 பேர் பட்டியலை வெளியிட்டேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாரிசுகளுக்கு உரிய முறையில் இழப்பீடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழங்கினார்கள்.

ஆகவே, விவசாயிகளுக்காக நான் பல்வேறு பணிகளை செய்து உள்ளேன் என்ற பெருமிதம் எனக்குள்ளே உண்டு.இன்று உழவர் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடு மறைந்த தினத்தில் அவர் செய்த மகத்தான தியாகத்தை நினைவு கூர்கிறேன். அதே போல் தமிழகம் முழுவதும் விவசாயிகளின் உரிமைக்காக போராடி, ஆளும் தரப்பினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு தன்னுயிர் தந்து தியாகம் செய்த விவசாயிகளை இன்னானில் அவர்களுடைய நினைவை போற்றுவோம்.

கோவில்பட்டியில், நாராயணசாமி நாயுடு
அவர்களின் நூற்றாண்டில் எனது சொந்த இடத்தில் அவரது சிலை வைக்கவும், எனது தமிழக விவசாய போராட்ட வரலாறு நூலை வெளியிட திட்டங்கள் உள்ளன.

#விவசாயிகள்சங்கம்
#நாராயணசாமிநாயுடு
#விவசாயிகள்போராட்டம்
#Narayanasamynaidu
#tamilnadufarmersprotest
#taminaduagricultristprotest
#kovilpatti

#ksrposts
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-12-2024


Friday, December 20, 2024

In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structures that never had any intention of moving you past where you are now into where you could be.

*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structures that never had any intention of moving you past where you are now into where you could be. It is often when you reach complete exhaustion and exasperation with this view of the world that you begin to go inward and discover something solvent the power that's within. As you begin to wake up to that power, you often overuse it. You assume you are a god unto yourself, the tiny particles around which the entire universe will bend and break and reform. You begin to shake off this illusion when you realize that the things you insisted on creating did not turn out as perfectly as you once imagined.

You begin to take other people into account, their timing and their needs. You start to see that you cannot see everything, and so begins the true journey of your life, which is the dance between what is yours to handle and what is yours to release.

What you must reach for, and what you must allow to come.

When it is time to speak, and when it is time to listen. When it is time to teach, and when it is time to learn. When it is time to exert your will and when it is time to surrender to a path far greater than anything you could conceive of prior. This is what it is to live to understand your free will, and develop the discernment to use it well.

#கரிசல்மண்

அன்றைய நினைவுகள் என்றும் கனதியானவை!
அவை என்றும் உறுதியானவை!

என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு 
வானம் பார்த்த கந்தக மண் 

The beauty of village. 
The beauty Of nature 
Love of everything  village

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
20-12-2024.


Thursday, December 19, 2024

இன்றைய தினமணியில்(19-12-2024) கூட்டு குடும்பங்கள் குறித்த எனது நடுப்பக்க கட்டுரை #அன்றையகூட்டுகுடும்பங்கள்…

இன்றைய தினமணியில்(19-12-2024) கூட்டு குடும்பங்கள் குறித்த எனது நடுப்பக்க கட்டுரை 

#அன்றையகூட்டுகுடும்பங்கள்….
- வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன்
——————————————————
இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.

கிராமங்களில் ஒரு காலத்தில் அதாவது 1975 வரை எனக்குத் தெரிந்து  பிள்ளைகள் கூடி ஓடி விளையாடத் தெருக்கள் மந்தைகள் மைதானங்கள் இருந்தன!. எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் வந்து விட்டால் செம்பு நிறைய நீர் மோர் மற்றும் கேழ்வரகு கம்பு சோளம் நிலக்கடலை கருப்பட்டி போன்றவற்றில் தயாரித்த தின்பண்டங்களைக்  கொடுத்து கவனமாக விளையாடுங்கள் என்று சொல்லி அனுப்புவார்கள்.

பருவ கால விவசாயம் நடந்து கொண்டிருக்க, தை
பொங்கல், தீபாவளி, ஊர்த் திருவிழாக்கள் என நிறைந்து நிலங்களும் மனிதர்களும் செழிப்பாக- வளமையாக  இருந்த காலமும் கூட!.

ஒரு வீடு என்று சராசரியாக எடுத்துக் கொண்டால் தவறாமல் தாத்தா பாட்டி அம்மா அப்பா சில நேரம் அத்தைகள் சித்தப்பா பெரியப்பா அண்ணன் தம்பி தங்கைகள் அக்காக்கள் என பல உறவுகள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பார்கள்.

வீட்டு சமையல் அறையில் எல்லோருக்குமான உணவு எப்பவும் இருந்து கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் என்றால் கேட்கவே வேண்டாம். காலை ஆடு மாடுகளின் சாணங்களை அள்ளி எருக் குழியில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு முந்தைய நாள் நீராகாரத்தோடு பழைய கஞ்சி பழைய குழம்புகளை சாப்பிட்டு விட்டு வயல்வெளிக்குச் சென்று விடுவார்கள்.
கால்நடைக்கு பிண்ணாக்கு, பருத்தி விதை ஆட்டி காலையி்ல அதற்கு அந்த தண்ணீரை காட்டுவது… கறவை மாடுகளின் பராமரிப்பு: கறவை மாடுகளுக்குத் தீவனம்மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனம், உலர் தீவனம்அல்லது வைக்கோல் அளிக்கலாம். தீவனம்குறைந்தால் உடனே பால் அளவு குறையும். எனவே, 2.5 லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2 லிட்டருக்கும் ஒரு கிலோ கலப்புத் தீவனம் கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். பால் கறந்து, மோரை கடைந்து வெண்னெய் எடுக்கும் பல பணிகள்…
எல்லோருக்கும் ஏதேனும் ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும்.  மூதாட்டிகள் கூட தானியங்களை உலர்த்துவது உலர்ந்த தானியங்களைப் புடைப்பது அவற்றைத் திருகையில் விட்டுத் திரிப்பது ஆடு கோழிகளுக்கு தீனி இடுவது குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் செய்வது என்று பலவேலைகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். முதிய ஆண்களாக இருந்தால்  நொச்சிக்கூடைகளை முடைவது. நாற்றுகளுக்காக விதை நெல்களை ஊறவைப்பது. கோணிப் பைகளை வெயிலில் உலர்த்திச் சுருட்டி வைப்பது. சணல் நூல் திரிப்பது என ஏதாவது ஒரு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பார்கள்.
அக்காலத்தில் பல்வேறு கைத்தொழில்கள் இருந்தன! நெசவு நெய்தல், கயிறு திரித்தல், விவசாய உழு கருவிகளைச் செய்தல் ,செப்பனிடுதல் ,மீன் பிடித்தல், மற்றும் ,மரத்தச்சு வேலைகள் என்று மனிதர்கள் பல்வேறு திறன்களைத் தொழிலாகப் பெற்றிருந்தார்கள்.

உண்ணும் உணவிற்கு ஏதேனும் ஒரு வேலை செய்ய வேண்டும் என்கிற எதார்த்தம் நிறைந்த மனிதர்கள் அவர்கள். யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது
என்பதோடல்லாமல் விளையாடும் சிறுவர் சிறுமியரை அழைத்து  தங்கள் சிறிய கைச்சேமிப்பில் இருந்து சில்லரைகளைக் கொடுத்து மகிழ்வார்கள். சில பெரியவர்கள் அந்தக் காலத்தில் தங்களது அரைஞான் கயிற்றில் ஓட்டைக் காலணா என்று சொல்லக்கூடிய செம்பு நாணயங்களைக் கோர்த்து வைத்திருப்பார்கள். பத்து ஊருக்கு ஒரு சந்தை என்று பொருட்களை மலிவு விலையில் வாங்குவதற்கான கடை விரிப்புகள் ஊர்கள் தோறும் இருந்தன. மாட்டு வண்டி செல்லும் மண் தடங்கள் எல்லாம் இன்று தார்ச்சாலை ஆகிவிட்டபின் மனித வாழ்க்கை அதிகப் பொருட்ச் செலவு மிகுந்ததாக ஆகிவிட்டது.

உண்மையில் ஒரு வீடு அது எதனால் கட்டப்பட்டிருந்தாலும் சரி காரை மெத்தை வீடு, கொல்லம் ஓடு,குடிசை  மண் சுவர் வைத்து இருந்தாலும் கூட
அதற்குள் பாசமான ஒரு கூட்டுக் குடும்பம் பல உறவுகளோடு புழங்கிக் கொண்டே இருக்கும்.  சரியாகச் சொன்னால் அந்த கிராமம் முழுக்கவே ஒரு கூட்டு குடும்பம் போல ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டும் நல்லது கெட்டதில் தலையிட்டும் வாழ்ந்தார்கள்.

இடையில் பல்வேறு காரணங்களுக்காக சண்டை சச்சரவுகள் இருந்தாலும் கூட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எப்படியாவது உணவு கொடுத்து விட வேண்டும் என்கிற முறையில் தான் அங்கு நடக்கிற அத்தனை உற்பத்திகளும் வாழ்க்கை முறைகளும் இருக்கும்.
உள்ளூரில் திருமணம் செய்து  வரும் வெளியூர் பெண்களும் வெளியூருக்குத் திருமணமாகி போகும் உள்ளூர்ப் பெண்களுமாய் அந்த கிராமங்களும் சிற்றூர்களும்  உற்றார் உறவினர் என இயங்கிக் கொண்டிருந்த ஒரு காலம்.

வருடம் தோறும் சித்திரை, தை,ஆடி புராட்டசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில்  சிறு வீட்டு அம்மன்கள் எனக் கொடை விழாக்களும் ஆங்காங்கே நடக்கும்! சின்னஞ் சிறு கோயில்களில் கூடப் படையல்களும் விருந்தும் கறிச் சோறும் திருவிழாவாக மலர்ந்து அவர்களை உற்சாகப்படுத்தும்.
அந்த ஊரை விட்டு எங்கே அவர்கள் சென்றிருந்தாலும் கூட இந்த குலதெய்வ வழிபாட்டுத் திருவிழாக்களில் அவர்கள் அனைவரும் வந்து ஒருங்கிணைந்து அங்கே ஒருவருக்கொருவர் முகம் பார்த்து மகிழ்வார்கள்.

அதுபோலத்தான் வயல் வேலைகள் முடிந்து வந்ததும் இரவு நேரம் சுடச்சுட சோறு சமைத்து சாப்பாட்டின் போது வானத்து நிலவு மினுங்க வாசல் புறத்தில் கூட்டாக அமர்ந்து உணவு உண்பார்கள்.  அக்கம் பக்கம்  பசுக்கள் எருமைகள் ஆடுகளின்  கனைப்பொலி இருந்து கொண்டே இருக்கும். மாலை சரியாக 7:00மணி அளவில் ஊர் உறங்க தொடங்கிவிடும். யார் எங்கே உறங்கி கிடப்பார்கள் என்று தெரியாவிட்டாலும் பொழுது விடிந்தவுடன் மறுபடியும் அவர்கள் வேலையைத் தொடங்குவார்கள். அந்த கால பிலிப்ஸ், மர்பி ரேடியோக்களில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி ரேடியோ நிலையங்கள் சொல்லும் செய்திகள் , கொழும்பு கூட்டுஸ்தாபன ரேடியோ நிலையம் திரை கானங்கள் என தெருக்கள் தோறும் யார் வீட்டிலாவது ஒலித்துக் கொண்டிருக்கும். இன்றைய கானாப் பாட்டுகள் போன்று அக்காலப் பாடல்கள் இல்லை. மைசூர் சந்தன சோப்பு, முக பவுடர் என்பது ஆடம்பரம்.

அன்று ஒரு சில வீடுகளில் மட்டும
மேஜை மின் விசிறி அல்லது
ஒர் சீலிங் பேன் இருக்கும்.
மாவு அரைக்க கிரைண்டர்-
மிக்சி இல்லை. ஆட்டு உரல், அம்மி கல்தான் இருக்கும். முறுக்கு, சீடை, பணியாரம், முந்திரிக் கொத்து, சுசியம், அதிரசம் எனப் பல தின் பண்டங்கள்.கிணற்றுக் குடி நீர், பம்பு செட் குளியல் என அன்றாடத்தோடு இணைந்த தட்பவெட்பமான
வாழ்க்கை நிலை!.சனி , புதன் எண்னெய் குளியல் தவறாமல் இருக்கும். இப்படியான பற்பல
தரவுகள் ஞாபகத்தில் உண்டு . அவற்றைச்  சொல்ல இந்தப் பத்திகள் போதாது.

இளவட்ட கல், கபடி, சில்லாங் குச்சி, கோலி- தெள்லு விளையாட்டு, பம்பரம், கபடி, வாலிபால் என பல வித விளையாட்டுகள்…..
சினிமா கொட்டகை, ஶ்ரீ மகள் திரைப் பாடல் புத்தகங்கள் மற்றும் கல்கி
ஆனந்த விகடன்,தினமணி கதிர், கலைமகள், மஞ்சரி,
பேசும்படம் என இதன் தீபாவளி மலர்கள்…..
தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் - மதுரை பதிப்பு, தினமலர் - திருநெல்வேலி காலை எட்டு மணிக்கு வரும் . ஆங்கில இந்து கோவில்பட்டி வந்து பிற்பகல்  பஸ் மூலம் ஊர்களுக்குள் வரும்.
மதுரை நேவி பேனா….நடராஜ் பென்சில்,
மதுரை ராம விலாஸ் பதிப்பித்த எழுதும் நோட்டுகள்…..
திருநெல்வேலி எஸ்ஆர்எஸ், மெட்ராஸ் பிடி பெல், திருவேனி பதிப்பக பாடப் புத்தகங்கள் என எத்தனையோ பிராயகாலப் பள்ளி நினைவுகள்…

இப்படியாகத்தான் என் சிறு வயது கிராமங்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். தன் வாழ்நாள் முழுக்க செல்லும் இடங்களில் எல்லாம் கால்நடையாகக் கிராமங்கள்தோறும் சுற்றி பார்த்த உத்தமர் காந்தியும் இந்த உற்பத்தி உறவைத்தான் இந்திய மக்களின் உயிர் வாழ்வின் நம்பிக்கையாக
பரிந்துரைத்தார்! இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில்தான் இருக்கிறது என்றும் சொன்னார்.

அப்படியான வாழ்க்கை ஏன் பின்னாளில் சிதையத் துவங்கியது என்பதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. குறிப்பாக நகர்மயப் போக்கு அதிகரித்து விட்ட 1990களுக்கு பிறகு கூட்டுக் குடும்பங்களில் இருந்து தனிக் குடும்பங்கள் உருவாகின.

கல்வி வேலை வாய்ப்பு போன்றவற்றிற்காகவும் கூட்டு குடும்பங்களில் பாகப்பிரிவினை போன்ற விஷயங்கள் கோர்ட் வழக்கு வாய்தா என்று அண்ணன் தம்பி பங்காளி உறவுகளுக்குள் நிகழ்ந்த மாற்றங்களால் கூட்டு குடும்பத்தின் பரிமாணம் சரியத் தொடங்கியது.

மூதாதையரும் பெற்றோர்களும் இறந்த பின்னர் உண்டாகும் பாகப்பிரிவினைதான்
சொந்தங்களின் ஒற்றுமை குலைய மிக முக்கியக் காரணியாக  இருந்தது என சொல்லலாம். குறிப்பாகச் சொத்து பிரச்சனை!.  இந்த சொத்துக்களை பங்கிடும்போது உடன் பிறந்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்து அடுத்தடுத்த சந்ததியில் அவர்களுக்குள் உறவு நீடிப்பதும் உறவு கெட்டு போய் ஒருவருக்கொருவர் எதிரியாகித் தன் வாழ்நாள் முழுவதும் பங்காளியைப்  பழி வாங்குவதற்காகவே திட்டங்கள் தீட்டுவதும் தன் பிள்ளைகளுக்கு அதன் தொடர் வன்மத்தை கற்றுத் தருவதும் வாழையடி வாழையாக பல குடும்பங்களில் இப்போதும் கூடத் தொடர்கிறது.  

19ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முன் வாழ்ந்த  மக்கள் சொத்துப் பிரச்சினை இல்லாமல் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஆய்வு செய்தபோது நமக்கு மிகுந்த ஆச்சரியமும் ஆனந்தமும் ஏற்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் நமது குடும்பங்களில் பெண்கள் தான் நிர்வாகம் செய்திருக்கிறார்கள் தனக்கு 10 முதல் 11க்கு மேலும் ஆண் பிள்ளைகள் இருந்தாலும் எந்த பிள்ளை கெட்டிக்காரன் எந்தப் பிள்ளை சவலை எந்தப்பிள்ளை ஏமாளி என்பதையெல்லாம் சரியாகக் கணித்து யாருக்கு எப்படிப் பாகம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் செயலைக் குடும்பத் தலைவி ஏற்று இருந்தார்.

இன்னும் விளங்கச் சொல்ல வேண்டுமானால் திறமையான குடும்பத்தோடு கடுமையாக உழைத்த பிள்ளைகளுக்கு குறைந்த பாகமும் குடும்பத்தில் சோம்பேறியாக வேலை வெட்டி செய்யாமல் சும்மா இருந்த பிள்ளைகளுக்கு அல்லது விவரம் இல்லாத பிள்ளைகளுக்கு அதிக அளவிலான பாகமும் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்குள் தான் கூட்டு குடும்பத்தின் தர்மம் அடங்கி இருந்தது.

அந்த நாட்களில் என் தந்தையார் கிராம முனிசீப்பாக இருந்தார்! அவரின் கீழ் தலையாரி, வெட்டியான் என இருவர் இருப்பார்கள்.ஒரு.
பஞ்சாயத்து தலைவரும் இருப்பார். ஜமாபாந்தியில்
தாலுகா ஆபிஸ்சில் வைத்து பல கிராமப் பிரச்சனைகள் பேசப்படும்

கிராமத்தில் பாகப்பிரிவினை நடக்கும் போது ஊர் பஞ்சாயத்தின்
கட்டளைகளுக்கு ஏற்ப நிலம் வீடு பண்ட பாத்திரம் சுவர் வரை இரண்டாக மூன்றாக நான்காக பிரிப்பார்கள்.அப்பிடிக்கிடைத்த சிறிய நிலத்துண்டுகளைக்
கொண்டு ஒரு நிலைத்த உயிர் வாழ்வை  அங்கு அவர்களால் வாழ முடியவில்லை. வாழ்ந்த வீட்டை நிலங்களை உறவுகளை விட்டுப் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
இப்படியான பாகப்பிரிவினை போன்றவற்றால் பாரம்பரியமாக வைத்திருந்த சிறு சிறு நிலங்களைக் கூட விற்றுவிட்டு நகரத்திற்கு குடிபோன மக்கள் அன்று அதிகமாகப் பெருக தொடங்கினார்கள். அப்படி நகர் மயமான சிலர் தங்களது சகோதரர்கள் கிராமத்தில் விவசாயத்தை நம்பி மட்டுமே இருப்பதினால் நிலத்தை அவர்களிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்லி விட்டு நகரத்திலேயே தங்கி செட்டில் ஆனவர்களும் உண்டு .

பலரும்  நகரத்திற்கு சென்று ஏதேனும் ஒரு வேலை செய்து கொள்ளலாம் என்று
புறப்பட்ட கதை தான் நகர்மயமாதல்.

“பட்டணம்தான் போகலாமடி பணம் காசு சேர்க்கலாமடி” என்று சினிமாவில் பாட்டு கூட வந்தது.

பட்டிக்காடா பட்டணமா என்று நகரத்திற்கும் கிராமத்திற்கும் ஆன கலாச்சார சாதிய வெளியேற்றங்கள் 1990 களுக்குப் பிறகு தான் அதிகம் நிகழ்ந்தது.

இத்தகைய நகர் மயமாதல் மட்டுமல்லாமல் வயதானவர்களைப் பேண முடியாமை தன் குழந்தை தன் மனைவி தன் கணவன்  தன்பிள்ளைகள் என்ற சுயநலப் போக்கு மிகுந்த போது கூட்டுக்குடும்பங்கள் கண்ணீர் விட்டுக்கொண்டு பிரிந்து போயின.
நகரத்தில் வேலை வாய்ப்பு இருந்தாலும் கூட கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தகைய குடும்பங்களும் கடனில் சிக்கித் தவித்தன. சிறு தொழில்கள் வணிகங்கள் வேலை வாய்ப்புகள் என்று இருந்தாலும் கூட ஒரு நீண்ட கால தன்மையைப் பெற்று அவை எங்கு குடியேறினாலும்
நிலைபெற முடியவில்லை. இதற்கிடையில் இளைஞர்கள் பலர் அன்னிய நாடுகளுக்கு வேலைக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் ஏற்பட்டது.

நாளடைவில் கூட்டுக் குடும்பங்களை இழந்ததன் விளைவுகள் தனிக் குடும்பங்களில் விகாரமாக வெளியே தெரிய ஆரம்பித்தன. அதில் பிரதான பிரச்சனை விவாகரத்து. இவர்களை இணைத்து வைக்க எந்தவித அனுபவம் வாய்ந்த முன்னோர்களின் அறிவுரையோ அவர்களைப் பராமரித்து ஆறுதல் சொல்லி அன்பு செலுத்தக்கூடிய அக்கம்பக்க உறவுகளோ இல்லாத போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே முரண்பாடுகள் பெரிதாகி ஒருவர் ஒருவர் பிரிந்து இன்று தனிப் பெற்றோர் என்கிற நிலையில் சிலர் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனிமையில் வாழ்வதைப் பார்க்க முடிகிறது.

இன்றைய நுகர்வுக் கலாச்சாரம் எல்லாம் தனி மனிதர்களையும் பேராசை உள்ளவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது. நவீன உணவுகள் பொருட்கள் ஆடைகள் உடையும் பொருட்கள் எனப் பலவற்றையும் வாங்கி வீடுகளுக்குள் அடைத்து வைத்து உறங்கக் கூட இடமில்லாமல் சிலர் தவிக்கிறார்கள்.

அக்காலத்தில் கிராமப்புறங்களில் இருந்த கை வைத்தியங்கள் முழுவதும் மறக்கடிக்கப்பட்டு விட்டன.  வீட்டில் பெரியவர்கள் இருக்கும் போது அதற்கான கை வைத்தியத்தை உடனே எளிதாக செய்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். நூற்றுக்கு மேலான கை வைத்தியங்கள் பாட்டி வைத்தியங்கள் இருந்த காலம் போய்விட்டது!இன்று கல்வியும் மருத்துவமும் பெரும் வணிக நிறுவனங்களாக மாறிவிட்ட பிறகு  அதற்கான பணத்தை ஈட்டும் வழியை அறிய முடியாமல் பலரும் தடுமாறுகிறார்கள்.

மறைந்த எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்களின் கோபல்ல புரம் நாவலில்  ரத்தமும் சதையுமான மனித உறவுகள் மிக நுட்பமாக விவரிக்கப்பட்டு இருப்பது போல  அக்காலக்கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஒருவர் நிலம் விவசாயங்களைப் பராமரித்துக் கொள்வார். இன்னொருவர் விவசாய விளை பொருட்கள்
கணக்கு வழக்குகள் விற்பனைகளைப் பார்த்துக் கொள்வார்.  மற்றவர் உற்றார் உறவினர் வீட்டு நல்லது பொல்லதுக்கு செல்ல நேரம் சரியாக இருக்கும்.
மற்றொருவர் கால்நடைகளைப் பராமரிப்பார். மற்றொருவர் குழந்தைகளுக்கான எதிர்கால நலன்களை யோசித்து அவர்களை சரியான முறையில் வளர்க்கத் துணையாக இருப்பார்.
யாருக்கும் தனிமை என்பது இல்லை
பகிர்ந்தளித்து பழக்கப்பட்ட அந்த வேலை திட்டம் அக்கால குடும்ப உறவுகளுக்குள் இணக்கத்தையும் பாசத்தையும் உண்டாக்கியது என்றால் மிகை இல்லை.

கிராமப்புறத்தை மிகவும் மேம்பட்ட அமைதியான, நிம்மதியான வாழ்க்கை என்று சொல்வதற்காக இவற்றை  எழுதவில்லை. அங்கும் சில முரண்பாடுகள் வக்கிரங்கள் போட்டிகள் பொறாமைகள் சாதிய விலக்கங்கள் இருந்தன என்றாலும் அவை அனைத்தும் ஒரு வகையாக நிலத்தின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட்டது தான் கடந்த கால நூற்றாண்டுகளின் வரலாறாக இருக்கிறது.

ஒருவகையில் நகர மனிதர்கள் தனி குடும்பங்கள் இத்தகைய உற்பத்தி உறவின் வரலாற்றை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய அடையாளச் சிக்கல்கள் இருக்கின்றன.

இன்றைய மேலை ஐரோப்பிய நாகரிகங்கள் அல்லது குடும்பங்கள் இந்த இழப்பை மறு பரிசீலனை செய்கின்றன. தங்களின் இருப்பை எப்படி வைத்துக் கொண்டு வெளியே பயணம் செய்வது குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி வேலைக்கு போவது குழந்தைகளின் வளர்ச்சிப்போக்கில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் போன்றவற்றால் மனம் உடைந்து போன அவர்கள் மீண்டும் கூட்டு குடும்ப வாழ்வின் கதகதப்பிற்கு ஏங்குகிறார்கள். முதியவர்களும் குழந்தைகளும் இயங்கும் வெளியும் வீடும் ஒருவித மலர்ச்சிக்கும் ஆன்மீக நிலையில் மனிதர்கள் வீடு பேறு காண்பதற்கும் வாய்ப்பாக இருக்கிறது. அது இல்லாமல் எத்தனை நவீன வாழ்வை அவர்கள் மேற்கொண்டாலும்  அவர்களது ஆன்மா துயரத்தில் தான் முடிகிறது என்பதை இன்றைய மனித வள ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இன்றைய பொருளாதார மண்டலங்கள் பெரும்பாலும் மனிதத்தன்மை இழந்து பெரும் கேளிக்கையாகவும் ஆடம்பரமாகவும் தங்களை மிகைப் படுத்திக் கொண்டு போவதால் அவை எளிய மனிதரின் வாழ்வை வெளியே தள்ளி விடுகின்றன. வளரும் குழந்தைகள் அவர்களின் மாணவப்பருவம் கல்லூரி பருவம் இன்னும் குடும்பத்திற்குள்  எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்கும் முன்பு போதை பொருட்களுக்கும் மதுவுக்கும் அடிமையாதல் பொது இடங்களில் சச்சரவு செய்தல் பெண்களை தவறாக புரிந்து கொள்ளுதல்
கைபேசிகளை வைத்துக்கொண்டு கற்பனை செய்தல் என்று அவர்கள் பொது வெளியில் சிதறடிக்கப்படுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளும் கூட கொரானா நோய்த் தொற்றுக்குப் பிறகு தங்கள் குடும்பங்களை சிறப்பாகக் கட்டமைக்க முயற்சிக்கின்றன. குறிப்பாக தங்கள் வாழ் நிலத்தின் பிராந்தியத்தின் பாரம்பரியமான நினைவுகளை பயிர் செய்யும் முறைகளை சிறு சிறு தொழில்களை கற்றுக் கொள்ளும் பொருட்டு குழந்தைகளுக்கு மனவளமான அவர்களின் கலாச்சார பெருமைகளைச் சொல்லிக் கொடுக்கக் கூட்டுக் குடும்பம் தான் ஏதுவாக இருக்கிறது. அப்படியான நாடுகள் தான் இன்றைக்குச் சுதந்திரச் சிந்தனைகளுடன் இருக்கின்றன.

பாழடைந்த வீட்டின்
ஒன்றும் பாதியுமான எணகளோடு
ஊசலாடிக் கொண்டுருக்கும்
ஒடிசல் கதவில்
ஒட்டியிருக்கும் கைரேகை
கூட்டுக் குடும்பத்தின்
உறவுக் கணக்கு சொல்கிறது…..
- கரிசல் கவிஞர் கனகா பாலன்.

பழைய வடிவங்களில் கூட்டுக் குடும்பங்கள் இருக்க வேண்டும் என்பதை விட இன்றைய நவீன போக்கிற்கு ஏற்ப மீண்டும் கூட்டுக் குடும்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனில் பழைய நிலையின் விழுமியங்களைக் கைவிட்டு விடாமல் சமகாலத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்!  காலத்திற்கு ஏற்ற  வடிவில்  ஒரு பாதுகாப்பான முறையில்  உறவுகளை  காக்க - பேண குடும்பக் கல்வி முறைகள் பரவலாக்கப்பட வேண்டும். நாடு இயற்கை மனித நாகரீக வாழ்வு அதனிடைய கலைப் பண்புகளுடன்   தேசியப் பற்றுள்ள  நடத்தைகள் நம்பிக்கைகள் யாவற்றையும் கொண்டு சட்ட வடிவமற்ற நிலையில் நமக்கு நாமே அனைத்தையும் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

-அரசியலார்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
19-12-2024.


Monday, December 16, 2024

#மார்கழிபாவைநோன்பு #திருப்பாவை #மார்கழி 1/29 #ஆண்டாள்தமிழைஆண்டாள் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் !

#மார்கழிபாவைநோன்பு
#திருப்பாவை
#மார்கழி 1/29
#ஆண்டாள்தமிழைஆண்டாள் 
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் !
———————————————————-
மார்கழி  பாவை நோன்பு இது ஆண்டுதோறும் மார்கழித் திங்களில் இந்துக் கன்னிப் பெண்கள் கடைபிடிக்கும் நோன்பு ஆகும். அக்காலங்களில் எங்களது கரிசல் பூமியில் இந்த மார்கழி மாத பனி நேரத்தில் அதிகாலை எழுந்து பெண்கள்நீராடி வாசல் தெளித்து கோலம் இட்டு பசுஞ்சாணக் குவியலில் பூசணி பூ வைத்து  தூய்மையான ஆடை அணிந்து  ஈரக் கூந்தலுடன் அவரவருக்கு விருப்பமான கோவிலிற்குச் சென்று இறை வழிபாடு செய்வதைப் பார்த்திருக்கிறேன்.







பெண்ணை பாவை என்று வர்ணிப்பார்கள் கவிஞர்கள்.ஆனால் பாவை என்பது பொம்மை.. சுரூபம் ஆகவே பாவை பாடல் பாவை விரதம் எல்லாம் பெண் பொம்மைகளை வைத்து கொண்டாடும் அற்புதமான ஒரு மரபாகும்.

ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்

மார்கழி மாதத்தில் சிவ பெருமானை வணங்குபவர்கள் திருவெம்பாவை பாடுவார்கள். பெருமாளை வணங்கும் வைணவர்கள் திருப்பாவை பாடுவார்கள். மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினார். அதுவே திருப்பாவை ஆயிற்று. திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவைஎன்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று.

வடமாநிலத்தில் விஷ்ணுவைப் பாடிய  பஜன் அரசி மீரா வை போல 
நம் தென் தமிழகத்தில் கண்ணனைக் கோவிந்தனை பாடிய ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் தெய்வம் சூடிக்கொடுத்த அழகி நமது ஆண்டாள்  பாடிய பாசுரம் உலகப் பிரசித்தி பெற்றது. 

அந்தகைய பாடல் மரபு இன்றைய தமிழ் நவீனக் கவிதைகளிலும் கூட பிரதிபலிக்கிறது. இன்றைய பெண்களின் காதற் பாடல்களின் இடையே  ஆன்மீக இழைகளாக ஆண்டாளுடைய கவிதைக்கூறுகள் இருப்பதை நாம் காணலாம்.

“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்றன மற்றகாதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக்
குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்”

 இத்தகைய பாடல் மரபு இன்றைய தமிழ் நவீனக் கவிதைகளிலும் கூட பிரதிபலிக்கிறது. இன்றைய பெண்களின் காதற் பாடல்களின் இடையே  ஆன்மீக இழைகளாக ஆண்டாளுடைய கவிதைக்கூறுகள் இருப்பதை நாம் காணலாம்.  தமிழில் பக்தி இலக்கியம்  9 நூற்றாண்டுகளாக கோலோச்சியது!.இன்றைய பின் நவீன காலத்திலும் கூட ஆண்டாள் பாசுரங்களில் தென்படும் வியக்கத்தக்க மொழிதல்களை அந்த இயற்கையை திணையை காலத்தை பொழுதை இப்போது உள்ளவர்களால் எழுத முடியுமா
என்பதே ஒரு சவால். 

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

இந்தக் கவிதைகளைப் படித்ததும் எனக்கு யவனிகா ஸ்ரீராமின்  டிசம்பர் மாத குளிர்காலக் கவிதை ஒன்று ஞாபகத்தில் வந்தது.
இரண்டாம் ஜாமம்

அனல் அடங்கா வீட்டின் சூளைச்சுவர்கள் மூக்கை அரிக்க
பல முறை கேட்கும் மெல்லிசைப்பாடல்கள் அலுப்பூட்டுகின்றன
கருக்கலின் போது வீசும் மெல்லிய குளிர்காற்றிக்கு காத்திருக்கிறேன்
முறுக்கும் உடல் வலியுடன் ஆழ்ந்த உறக்கத்தை
அது துருவங்களில் இருந்து எப்படியும் தருவிக்கும் 
கொசுக்கள் அற்று இரண்டு பழங்கள் மீந்திருந்தால்
ஒரு நீண்ட பகல் பொழுதை மகிழ்ச்சியுடன்
அதற்கு ஒப்புக்கொடுப்பேன்
ஒரு லாரி டிரைவரின் வெகுதூரங்களுக்கும்
அணைகளில் வளர்ப்பு மீன்களுக்கு வலை வீசுபவரின்
துள்ளும் புலர்காலைக்கும்
பள்ளிக்குச்செல்லும் சிறார்கள் விடியும் வரை
மூங்கில் கூடைகளில் பூப்பறிக்க
தலை சும்மாட்டில் கட்டிய டார்ச் ஒளி மங்கும் பொழுது
இரவுஷிப்ட் முடிந்து நூற்பாலைப் பேருந்துகள்
பெண்களை ஊருக்குள் இறக்க வரும் தலைகலைந்த வேளையில்
பால் வேகன்கள் ஹார்ன் ஒலிக்க
பத்திரிக்கைக் கட்டுகளைப்பிரித்தனுப்பும் இடத்தில்
இரையும் ஒரு தேனிர் பாய்லர் முன்பு பற்கள் 
நடுங்கக் கதகதப்புடன் இந்த மார்கழி குளிர்காலத்திற்கு முகமன் சொல்வேன்.

ஆண்டாள் காலத்து நித்திய கடமைகள் திணை ஒழுங்குகள் ஒருபுறம் இருக்க இந்த நவீன கவிதையில் இன்றைய குளிர் கால காட்சிகள் ஆண்டாள் பாசுரங்களில் வருகிற மாதிரியே நித்ய  கடமைகளாக மாறிக் காட்சியளிக்கின்றன.

இன்னும் பல வகையான பெண்கள் கவிதைகளில் ஆண்டாளின் தாக்கங்கள் மொழி வழியான பக்தி இலக்கியத்தின் தொடர்ச்சியாக இருப்பதை ஆழ்ந்த புலமை உள்ளவர்கள் அறிவார்கள்.
அக்காலத்திலேயே இந்த மார்கழித் திங்களை மகிமை செய்த எங்கள் மண்ணின் கன்னியர் குல தெய்வம் 
ஆண்டாள்  அவதரித்த  இந் நன்னாளில் மக்கள் யாவரும் சீரும் சிறப்பு பெற்று  செல்வ வளம் அடைந்து  உடல் நலமும் பெற்று உயர்வடைய வேண்டி வாழ்த்துகிறேன். Today marks the beginning of the sacred Tamil month of Margazhi, dedicated to Andal, the only woman among the twelve Alvar saints of the Vaishnava tradition.

#மார்கழி1
#திருப்பாவை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-12-2024.


Thursday, December 12, 2024

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்..

இன்றெனை வருத்தும்

இன்னல்கள் மாய்க.

நன்மை வந்தெய்துக

தீதெல்லாம் நலிக....

~  பாரதி  

அவரவர் வாழ்க்கையில் 

ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்அந்த

நினைவுகள் நெஞ்சினில் 

திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்…….. 


நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்..


என் மௌணத்தை சிறைபிடித்து...தனிமையை ஆட்கொண்டு..ஏகாந்தத்தை வசப்படுத்திய நினைவுகள்..சுமையானாலும்..




சுகமாய்தான்...


இதில் புனிதம் என்று ஏதும் உள்ளதா? 


இதில் சிந்தனையால் தீண்டப்படாத ஒன்று? 


தூய்மை, புனிதம் என்று அழைப்பதை நாம் தேவாலயங்களில் சின்னங்களாக, அடையாளங்களாக வைத்துள்ளோம் - கன்னி மேரி, கிறிஸ்து, சிலுவை என. 


இந்தியாவிலும், பௌத்த நாடுகளிலும் அவற்றின் குறிப்பிட்ட சின்னங்கள், உருவங்கள் உள்ளன - அவை புனிதமானவை: பெயர், சிற்பம், உருவம், சின்னம். 


ஆனால் வாழ்க்கையில் புனிதமான ஒன்று இருக்கிறதா?


புனிதமானது என்பது மரணமில்லாதது, காலமற்றது - தொடக்கமும் முடிவும் இல்லாதது.


உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது, யாராலும் கண்டுபிடிக்க முடியாது.


புனிதம் என்று நீங்கள் நினைப்பதை கைவிடும்போது அது வரக்கூடும்.


மதங்கள், அவற்றின் பிம்பங்கள், அவற்றின் கோரிக்கைகள், மற்றும் நம்பிக்கைகள், அவர்களின் சடங்குகள், கோட்பாடுகள், அனைத்தும் புரிந்து கொள்ளப்பட்டு முற்றிலும் நிராகரிக்கப்படும் போது, ​​புனித நூல்கள், குருமார்கள், பின்பற்றுபவர் என யாரும் இல்லாதபோது, ​​​​அந்த அமைதியின் மகத்தான தரத்தில், தன்மையில், சிந்தனையால் தொட முடியாத ஒன்று வரக்கூடும். 


ஏனென்றால் அந்த அமைதி சிந்தனையால் உருவாக்கப்படாத ஒன்று.


காலச் சக்கரம்...

இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்....

முப்பது வயசுல இது வேணும்னு தோணும்....

நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்....

ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூட

பரவாயில்லைனு தோணும்.....

அறுபது வயசுல எது இல்லைன்னாலும் பரவாயில்லைனு தோணும்....

எழுபது வயசுல எதுவும் வேணாம்னு தோணும்....!

காலமாற்றம்....காலச்சுழற்சி...கால நேரம்....!

பிடிவாதம் எல்லாம் முடக்குவாதமா மாறும்....!

ஆணவம் எல்லாம்பணிவா மாறும்....!

அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி மாறி இருக்கும்.....!

மிரட்டல் எல்லாம் கப்சிப்னு ஆகியிருக்கும்......!

எது வேணும்னு ஆளாய் பறந்தோமோ....

அதையே தூரமாக வைத்து பார்க்கத் தோணும்....!

எதற்காக ஓடினோம்....

எதற்காக ஆசைப்பட்டோம்....

எதற்காக எதைச் செய்தோம்.....

என்ற காரணங்கள் எல்லாமே .....

காலப் போக்கில் மறந்து போகும்.... மரத்துப் போகும்....!

தீராப்பகையைத் தந்து வன்மத்தோடு வாழ்ந்து

ஆட விடுவதும் காலம்தான்...

அதன் பின் ஆட்டத்தை அடக்கி....

மறதியைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைப்பதும்

அதே காலம்தான்....!

வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும்.,...

உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது....!

வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.....

அதற்குப் பல அவமானங்களைக் கடந்திருக்க வேண்டும்....


எனக்கு நடிக்க தெரியாத தால் என்னை நிறைய பேருக்கு பிடிப்பதில்லை நடிப்பதினால் நிறைய பேரை எனக்கு பிடிப்பதில்லை... !!


வாழ்க்கைக்கு எது தேவை பணமா, நிம்மதியா?


முதலில் வாழ்க்கையில் நிம்மதி இருந்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும். வாழ்வில் இரண்டுமே தேவைதான். அதை நாம் அளவோடு வைப்பதும் அளவுக்கு மேல் வைப்பது தான் தவறு. 

உதாரணமாக கூறினால் நாம் ஒரு வேலைக்கு செல்லும் முன்பு மனம் நிம்மதியாக இருந்தால்தான் வேலை பூர்த்தி அடையும்.


ஆடம்பர வாழ்க்கைக்கும், அற்ப சுகத்திற்கும் பணம் மிகவும் தேவைப்படுகிறது. ஆனால் ஒருவேளை கஞ்சி குடித்தாலும் மனதை நிம்மதியோடு குடித்தால் அதுவே போதுமான வாழ்க்கையாகும்.


திருவோட்டினை எடுத்துக்கொண்டு தெருக்கடையில் யாசகம் பெறும் மனிதரை பாருங்கள்.


அவர்களுக்கு போதுமான பணமும் போதுமான உணவும் சாலை ஓரத்தில் உறங்க இடமும் இருப்பதால் என்னவோ அவர்களுக்கு,


ஆடம்பரமா அப்படி என்றால் என்ன? நிம்மதியா அப்படி என்றால் என்ன? என்ற கேள்விக்கு நம்மிடம் அவ்வாறு கேட்பார்கள்.


அளவிற்கு அதிகமான பணம் இருப்பவரால் தான் மனதில் நிம்மதியற்று இருப்பார்கள். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.


வாழக்கையில் ஆயிரம் கவலைகள் வலிகள் இருந்தாலும், முகத்தில் புன்னகையெனும் முகமூடியை அணிந்து கொண்டே வாழ்கின்றனர் பலர்.


சுமைகளோடே தான் மனிதர்கள் பயணிக்கிறார்கள். அதை இறக்கி வைப்பதற்குத் தயாராக இல்லை எவரும்.அந்த சுமையை ஏற்பதற்கும் யாரும் தயாராக இல்லை.


இறுதிப் பயணத்தில் தன்னை சுமக்கும் நாள் வரை இது தொடரும் போது வாழ்க்கை உற்சாகமாக இல்லாமல் கடினமானதாக இருக்கிறது.


பதற்றத்தோடும் குழப்பத்தோடும் வாழ்க்கையின் பெரும்பான்மை கழிந்து விடுகிறது.

ஆகையால் குழந்தையின் மன நிலையில் இருந்தாலே போதும் வாழ்க்கை ரசனையாகும்.


இன்முகத்தோடு இதயத்தின் கதவுகளைத் திறப்போம். அதாவது வழி தேடிச் செல்லும் பாதையில்  வலிகள் இருக்கத் தான் செய்யும்.


*சிறு குச்சியை தூக்கிப் பறக்கும் பறவைக்கு, பாரம் கூட வலி தான். பாரத்தை தாங்கி, தன் பாசத்தில் கூடு கட்டும்.


குழிகளில் விழுந்தாலும் வலிகளை மறந்து வழிகளைத் தேடிக் கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் .


அச்சமின்றி வாழ்வதுதான் வாழ்க்கை.

மறைப்பதற்கு எதுவும் இல்லாமல் இருக்கும்போது நீங்கள் எதையும் தவிர்க்க விரும்ப மாட்டீர்கள்.

உண்மையான சுதந்திரத்தை வெளிப்படையான வாழ்க்கை நடத்துவதில்தான் காண முடியும்.

ஒருவன் தனக்குத் தானே அளித்துக் கொள்ளக்கூடிய நற்சான்றிதழ்களிலேயே தலைசிறந்தது, இப்படிப் பிரகடனம் செய்வதுதான்: "நான் ஒரு திறந்த புத்தகம்."


#கே.எஸ்.ஆர் போஸ்ட்

#ksrpost

12-12-2024.

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*... ( *நான் பார்த்த அரசியல்*)

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*...  ( *நான் பார்த்த அரசியல்*) " நாம் ஒர...