Sunday, March 30, 2025

#ஆனந்தரங்கம்பிள்ளை #பிரெஞ்ச்டூப்ளே #ராபர்ட்கிளைவ் #வரலாறு

#ஆனந்தரங்கம்பிள்ளை #பிரெஞ்ச்டூப்ளே
#ராபர்ட்கிளைவ்
#வரலாறு 
————————————
அன்று மொகலாயருக்கு அடிமையாக இருந்த கதையினையும், அந்த மொகலாயருக்கு முன் யார் யார் தமிழகத்தை ஆட்சி செய்தார்கள் என்பதையும் சொல்கின்றது

ஆற்காடு நவாப் மொகபாய பிரதிநிதியாக இருந்ததையும், அவுரங்கசீப்புக்கு பின் பலமிழந்த, மராட்டியரால் நொறுக்கபட்ட மொகலாயத்தால் மொத்த இந்தியாவினையும் ஆளமுடியாமல் போக, அங்கே ஆற்காடு நவாப் இனி தமிழகம் தன் சுல்தானியம் என அமர்ந்ததையும், மொகலாயமே இல்லை உனக்கேன் வரி என தமிழக நாயக்கர்களும் இந்து மன்னர்களும் எழுந்த வரலாற்றை சொல்கின்றது







இனி இந்தியாவில் மொகலாய ஆட்சி இல்லை இனி இந்துக்கள் ஆட்சி என்ற நிலை வந்தபோது தமிழக கடற்கரையில் அன்று கோவா பக்கம் வீரசிவாஜியால் ஒடுக்கபட்ட தனி கிறிஸ்தவ ராஜ்ஜியம் இனி தமிழக கடற்கரையில் சாத்தியம் என திட்டமிட்ட பிரெஞ்ச் டூப்ளே காலத்து கதையினை சொல்கின்றது

ஆம், ஆனந்தரங்கம் பிள்ளையின் நூல் வரலற்று சாட்சி

17ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பெரும் போர் ஐரோப்பியரால் நிகழ்த்தபட்டன, காரணம் அவர்களா என்றால் இல்லை

இங்கிருந்த ஆப்கானியரான ஆற்காடு நவாபின் குடும்பம் வாரிசு சண்டையில் ஐரோப்பிய கம்பெனியார் உதவியினை கேட்க ராபர்ட் கிளைவும் டுப்ளெவும் ஆளுக்கொரு பக்கம் குதித்தனர்

பிரிட்டிசாருக்கு சென்னையிலும்  கடலூரிலும் கோட்டைகள் இருந்தன, ப்ரெஞ்சுகாரருக்கு பாண்டிச்சேரியில் கோட்டை இருந்தது

முதலில் கிளைவும் டுப்ளெவும் ஆற்காடு நவாபின் வாரிசுகளுக்கு ஆதரவாக மோதினாலும், ஒரு கட்டத்தில் நவாபினை தள்ளிவிட்டு இவர்கள் இருவரும் பகிரங்கமாக மோதினார்கள்

இதில் சென்னை கோட்டையே சில நேரம் டூப்ளேவால் கைபற்றபபட்டது, இறுதியில் ராபர்ட் கிளைவின் அடி முன்னால் நிற்க முடியாது ஓடிய பிரான்ஸ் படை அன்று பிரான்சில் நடந்த குழப்பங்களாலும் தன் எல்லையினை பாண்டிச்சேரியோடு சுருக்கிற்று

இன்றும் பாண்டிச்சேரியில் டூப்ளே சிலை உண்டு , இந்த டூப்ளேதான் முதலில் ஐரோப்பிய அரசை தமிழகத்தில் பரிசீலித்து பார்த்தவன்

அவர் ஒரு கம்பெனியின் கவர்னர் என்பதால் அவன் திட்டம் சரியாக இருந்தது , பலவீனமான குழப்பமான தமிழக பக்கம் ஒரு அரசு சாத்திய்ம் என எண்ணினான்

ஆனால் களத்தில் அவனால் சாதிக்கமுடியவில்லை தந்திரசாலி சிப்பாயாக இருந்த பிரிட்டிஷின் ராபர்ட் கிளைவ் அதை சாதித்தான்

இந்த ஐரோப்பிய காலணியாக்கத்தை நமக்கு யார் வரலாறாக கொடுத்தவர் என்றால் டூப்ளேவின் மொழிபெயர்ப்பாளராக இருந்த சில தமிழர்கள்

அவர்கள் அன்றாடம் நடந்த நிகழ்வுகளை எழுதி வைத்திருக்கின்றார்கள்

இதனால்தான் எப்படி ஆங்கிலேயன் காலூன்றினான், எப்படி பிரென்ஞ்படை பின் வாங்கியது? ஏன் ஆங்கில ஆட்சி ஏற்பட்டது பிரென்ஞ் ஆட்சி ஏன் இந்தியாவில் மலரவில்லை என பல கேள்விகளுக்கு விடை கிடைக்கின்றது

அன்றைய டெல்லி சுல்தான், நவாப், தமிழக பாளையத்தார் என பல வரலாறுகளை அது வெளிச்சம் போட்டு காட்டுகின்றது

மாவீரன் மருதநாயகம் பற்றிய குறிப்புகளை இவர்கள்தான் எழுதி வைத்தார்கள்

அவர்களில் ஒருவர் ஆனந்தரங்கம் பிள்ளை,

அன்றே சில மொழிகள் படித்தவர். சொந்தமாக கப்பல் இருந்த வியாபாரியும் கூட, இதனால் ஐரோப்பியர் பழக்கம் உருவாகி அப்படியே சென்னை கோட்டையில் திவானாக இருந்தவர்.

அப்பொழுது அங்கு வந்தவனே ராபர்ட் கிளைவ்

இவர் மூலமே தமிழக நிலவரத்தை அறிந்தான் கிளைவ்

சென்னை கோட்டையினை பிரென்ஞ்படை பிடித்தபொழுது பிரென்ஞ் பக்கம் சென்றார், அம்மொழியும் அவருக்கு தெரிந்திருக்கின்றது. அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்

அன்றைய அரசுபணிக்கு அது அவசியமாகவும் இருந்தது.

1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார் என்பதுதான் இவரின் சாதனை

அவர் கடமைக்காக எழுதினாலும் பின்னாளில் அது பெரும் வரலாற்று பெட்டகம் ஆனது

அந்த காலகட்டத்தை கண் முன் நிறுத்தும் பெரும் கல்வெட்டாக அவரின் நாட்குறிப்பு நிற்கின்றது

இந்தியா ஆங்கில அடிமையான அந்த தொடக்க காலங்கள் சுவாரஸ்யமானவை, துரோகம், அவமானம், வீரம் என எல்லாம் கலந்த கலவை

நாமும் பழைய வரலாறுகளை ஊன்றி படிக்கின்றோம், அரசர்களின் ராஜ வாழ்க்கை மிக கொண்டாட்டமாய் இருந்திருக்கின்றது

சாதி என்பது அரசனை பாதுகாக்கவே வகுக்கபட்டிருகின்றது, அவனுக்கே எல்லோரும் பணியாளாய் இருந்திருக்கின்றனர்

அக்கால அரசவைகள் அப்படி இருந்திருகின்றன, இந்தியா என்றெல்ல ரஷ்ய ஜார் மன்னனின் அரசு வரை அப்படித்தான் இருந்திருக்கின்றது, சுல்தான்கள் அவையிலும் இந்த பேதம் இருந்திருக்கின்றது

அதில் பிரிட்டிசார் வந்த காலம், அவன் ஆட்சி இங்கு துளிர்விட்ட காலம் எல்லாம் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம்

அந்த சரித்திரத்தை நமக்கு பதிந்து தந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை.இன்று அவருக்கு பிறந்தநாள்.



பிரெஞ்சு அரசின் துவிபாஷ்
அதாவது இரு மொழிகள் அறிந்த மொழிபெயர்ப்பாளராக கவர்னர் டூயூப்ளெக்சிடம் பணிபுரிந்தவரும் 
பீரங்கி என்ற போர்த்துக்கீசியச் சொல்லைத் தீக்குடுக்கை என்று தமிழில் ஆக்கியவரும் 
பதினெட்டாம் நூற்றாண்டு தமிழக பிரெஞ்சு ஆங்கிலேய அரசுகளுக்கிடையே நடைபெற்ற அதிகாரச் சண்டைகள், கடிதப் போக்குவரத்துகள், போர்கள், தளவாடப் பரிமாற்றங்கள், சமூகப் பழக்க வழக்கங்கள், குற்றங்களுக்கான தண்டனைகள், அதிகாரப் படிநிலைகள் குறித்து விரிவாகப் பதிவு செய்திருப்பவரும் 
பன்மொழி வித்தகரும்
நவீன தமிழ் இலக்கியத்தில் நாட்குறிப்பு இலக்கிய வகைமையின் முன்னோடியுமான 
ஆனந்தரங்கம் 
( 1709 மார்ச் 30 - 1761 ஜனவரி 10 )
பிறந்தநாள் இன்று.

No comments:

Post a Comment

#செண்பகவல்லிதடுப்புஅணைசீர்அமைப்பு கோரிக்கை , தென்மலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் (இன்று , 10-7-2025 காலை முதல் நடக்கும்) பங்கேற்று உரையாற்றிகிறேன். அனைவரும் வருக! •••• ச.பென்னிகுயிக் பாலசிங்கத்தின் பதிவு (ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்) *செண்பகவல்லி கால்வாய்---தாகம் தீர்க்குமா...!!!* 60 ஆண்டு காலங்களுக்கு மேலாக செண்பகவல்லி கால்வாய் தண்ணீருக்காக காத்துக் கிடக்கிறது தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள். மானாவாரி காடுகளுக்கு பெயர் பெற்ற கரிசல் காடுகளினூடாக ஏழெட்டு தலைமுறைகளாக பாய்ந்தோடி வந்த செண்பகவல்லி கால்வாய்த் தண்ணீர்,வேறு வழியேயின்றி இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 1965 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட நாளில் தொடங்கிய,விவசாயிகளின் போராட்டங்கள் இன்று வரை ஓயல்லை. இயல்பாகவே உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல,அது எந்த நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்தாலும் அதை ஒருபோதும் மதித்து நடைமுறைப்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு கேரளாவின் மீது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வரக்கூடிய குற்றச்சாட்டாகும். அது முல்லைப் பெரியாறாக இருக்கட்டும், பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, மலம்புழா, நெய்யாற்றின்கரை அணை என எல்லாவற்றிலும் அவர்களுடைய ஆதிக்கம் சுதந்திரத்திற்கு பின்னால் கொடிகட்டிப் பறக்கிறது. 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, இன்னமும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்திலுள்ள பரணில் தூங்கிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். அந்த அடிப்படையில் தான் அது செண்பகவல்லி கால்வாயியையும் அணுகுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 40 ஆண்டு காலம் தொடர் சட்டப் போராட்டங்கள் நடத்தியும்கூட முல்லைப் பெரியாறு அணையில் அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறோம் ஐந்து மாவட்ட விவசாயிகள். ஒருவேளை செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழ்நாடு உரிமை கோருமோ என்கிற கவலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கோட்டமலை டிவிசன், மணலாறு டிவிஷன், மாவடி மற்றும் சுந்தரமலை டிவிஷன்களை பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிசனாக அறிவித்தது கேரள மாநில அரசு. சிவகிரியையொட்டி இருக்கும் இந்த சுந்தரமலை டிவிசன்தான், செண்பகவல்லி கால்வாயின் மையப் பகுதியாகும். அது இன்றைக்கு ஒரு புலிகள் காப்பகத்தின் அங்கமாக அறிவிப்பு செய்யப்பட்டு, வாசுதேவநல்லூர் அருகே இருக்கும் தரணி சர்க்கரை ஆலையிலிருந்து தலையணை செல்லும் வழியில் நிறுவனமயமாக்கப்பட்டிருப்பதும் நிதர்சனமான உண்மை. கிட்டத்தட்ட 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட பெரியார் புலிகள் காப்பகத்தில், செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கிழக்கு டிவிஷன் மட்டும் சுமார் 620 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. கொடுமை என்னவென்றால் இவையெல்லாம் முறையாக 1956 மொழிவழிப் பிரிவினையின் போது அளவீடு செய்யப்படாத பகுதிகளாகும். செண்பகவல்லி கால்வாய் இருக்கும் பகுதி தற்போது புலிகள் காப்பகத்தின் ஒரு அங்கம் என்கிற நிலையில் மறுபடியும் அதற்குள் சென்று நம்மால் கால்வாயை சீரமைக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. உலகமெல்லாம் நடக்கும் போர் அத்துமீறல்களால் கான்கிரீட் கட்டிடங்கள் எல்லாம் உடைந்து சிதறும் நிலையில், கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் பாசனப்பரப்புக்காக நாம் சீரமைக்கச் சொல்வது மொத்தமுள்ள 1603 மீட்டரில், வெறும் 400 மீட்டர் நீள கட்டுமானம் மட்டுமே. தென்காசி மாவட்டத்தில், மேற்குப் பகுதியில் மட்டும் செழித்துக் கிடக்கும் வாசுதேவநல்லூரை உள்ளடக்கிய சிவகிரி தாலுகா, எப்போதும் வறண்டு கிடக்கும் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகாக்கள்... விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சாத்தூர் தாலுகாக்கள்... எப்போதும் வறண்டு கிடக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்கள்... என செழித்து கிடக்கும் மக்கள் தொகையும், பரப்பளவும் எதிர்காலத்தை நினைத்து பயந்து கிடக்கிறது. நிலத்தடி நீரே குதிரைக் கொம்பாகியிருக்கும் காலகட்டத்தில், செண்பகவல்லி கால்வாய் தண்ணீர் மறுபடியும் பாய்ந்தோடி வந்தால் அத்தனை ஊரும் கூமாபட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கேரளா இந்த செண்பகவல்லி கால்வாய் உடைப்பை சரி செய்வதற்கு அனுமதிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நம்முன் எழுந்து நிற்கிறது. வருடத்திற்கு 2,700 டிஎம்சி தண்ணீரை கடலுக்குள் கொண்டு போய் சேர்க்கும் கேரளா, போகிறபோக்கில் இந்த தமிழகத்திற்கு 100 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது இந்த அப்பாவிகளுடைய இயலாக் குரல்கள். காது கொடுத்து கேட்கத்தான் கேரளாவில் யாரும் இல்லை. இந்த நிலையில் கால்வாய் அருகே ஒரு தங்குமிடத்தை அமைத்திருக்கும் பெரியார் புலிகள் காப்பகம்,அங்கு செல்வதற்கு கேரளாவின் வழியே பயண வழி இல்லாததால்,புலிகள் காப்பகத்தின் தலைமையகமான தேக்கடியில் இருந்து கம்பம் தேனி ஆண்டிபட்டி உசிலம்பட்டி பேரையூர் திருவல்லிபுத்தூர் ராஜபாளையம் சிவகிரி வாசுதேவநல்லூர் வழியாக வாகனங்களில் தன்னுடைய வனத்துறை பணியாளர்களை 10 நாட்களுக்கு ஒரு முறை அழைத்து வரும் பெரியார் புலிகள் காப்பகம், அவர்களை தலையணை முகாமில் தங்க வைத்த பிறகுதான், செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழக வனப் பகுதி வழியாக செல்ல அனுமதிக்கிறது. ஆனால் அந்த செண்பகவல்லி கால்வாய் இருக்கும் வனப்பகுதிக்குள், தமிழக வனத்துறையினர் செல்வதற்கு தடை இருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். ஆயுதங்களை தூக்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள தேனி மதுரை விருதுநகர் மாவட்டங்களின் வழியாக தென்காசி மாவட்டத்திற்குள் புகுந்து 5,000 அடி உயரத்தில் இருக்கும் செண்பகவல்லி கால்வாய்க்கு ஆயுதங்களை தாராளமாக கொண்டு செல்கிறார்கள் பெரியார் புலிகள் காப்பக வனத்துறை பணியாளர்கள். கேட்பதற்குத்தான் நாதிகளற்றுக் கிடக்கிறோம். இதுகுறித்து தமிழக அரசியல்வாதிகள் எந்த நிலையிலும் வாயே திறக்கவில்லை என்பது கசப்பான உண்மை.விதிவிலக்குகளும் இருக்கிறது. அரிதினும் அரிதானவராக வழக்கறிஞர் அண்ணன் கே. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் இதற்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த செண்பகவல்லி கால்வாய் பிரச்சனை மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுக்குமானால், அரசியல்வாதிகளால் ஊருக்குள் நடமாட முடியாது என்பதை இந்த விவசாய சமூகம் செய்து காட்ட வேண்டும். இந்த நிலையில் வரும் பத்தாம் தேதி சிவகிரி அருகே இருக்கும் தென்மலை கிராமத்தில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒரு மாநாடு போல செண்பகவல்லி கால்வாய் மீட்பு போராட்டம் நடக்கவிருககிறது. முன்னத்தி ஏர்களாக அந்த ஒருங்கிணைப்புக்கு பணியை முன்னின்று செய்து வரும் அத்தனை பேருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சொல்லி... நீண்ட காலமாக அந்தப் பகுதியில் செண்பகவல்லி கால்வாய்க்காக போராடிய இடையன்குளம் அண்ணன் ஜெயக்குமார் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் அண்ணன் கருணாநிதி போன்றவர்களையும் அழைத்திருக்கலாமா என்று முடிக்கிறேன். நன்றி ச.பென்னிகுயிக் பாலசிங்கம் ஒருங்கிணைப்பாளர் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

  #செண்பகவல்லிதடுப்புஅணைசீர்அமைப்பு கோரிக்கை , தென்மலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் (இன்று , 10-7-2025 காலை முதல் நடக்கும்) ப...