Sunday, January 11, 2015

நியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து


இவ்வுலகம்தோன்றிமூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter)எனஒவ்வொன்றாகஎவ்வாறெல்லாம்உருவாகினஅதுஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறுபெற்றனஎன்பதற்கானஅறிவியலின்ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மிக சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் இவ்வாய்வுகளை ஒரு படி முன்னேர செய்திருந்தாலும், நிலையான முடிவுகளை நவீன அறிவியல் உலகம் இன்னும் எட்டவில்லை என்றே சொல்லலாம். பல்வேறு முனைகளில் இதுதொடர்பான இயற்பியல் ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது. அதில் ஒரு நிலைதான் நியூட்ரினோ ஆய்வு மையங்கள். இந்த ஆய்வு மையங்கள், உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பல்வேறு அரசுகளும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி கூடங்களும் பெரிதளவில் ஒருங்கிணைந்து வருவது இதுவே முதன்முறை எனலாம்.
ஆனால், இந்தியாவில் செயற்படுத்தப் பட இருக்கிற நியூட்ரினோ திட்டம் தொடர்பாக அச்சம் ஏற்படுத்தக்கூடிய செய்திகள் ஏராளம். இத்திட்டம் அறிவியல் உலகில் எவ்வித வெற்றியை ஈட்டித் தர இருக்கிறது என்பதற்கு அப்பால், தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் முழுமையாக அழித்தொழிக்க இருக்கிறது என்பது மட்டும் உண்மை. அமெரிக்க ஏகதிப்பத்தியத்தின் ஏவல் ஆளாகவே மாறிவிட்ட இந்தியத் துணைக்கண்டம் அமெரிக்காவின் செயல்பாட்டிற்கும் அமெரிக்க அறிவியல் கூடத்திற்கும் அடியாள் வேலை செய்யத்தான் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை கட்டவிருக்கிறது. எப்படி என்பதனையும் அதன் விளைவுகளையும் நமது மண்ணிற்கு எவ்வகையில் சவாலாக இருக்கப்போகிறது என்பதனையும் தொடர்ச்சியாக பார்ப்போம். நியூட்ரினோ திட்டம் எவ்வகையில் ஆபத்து என்பதனை நமது மக்களுக்கு நாம் புரிய வைத்தால்தான் அதனை எதிர்க்கும் வல்லமையை நாம் பெற முடியும். நியூட்ரினோ திட்டம் தொடர்பாக செல்வதற்கு முன் சிறிது இயற்பியல் புரிதல் தேவை என நினைக்கின்றேன்.

அணு மற்றும் அணுத்துகள்கள்:
இவ்வுலகில்நம்மைச்சுற்றியுள்ளஅனைத்தும் பொருள்கள்(Matter) எனலாம். இப்பொருள்கள்அனைத்தும்அணுக்களால்ஆனவை. ஒருகாலக்கட்டத்தில்அணுவேஇவ்வுலகில்இருக்கும்இறுதித்துகள்எனநம்பப்பட்டது. அணு’ (Atom) என்பதற்கானவிளக்கம் (லத்தீனமொழியில்) ‘பிளக்கமுடியாததுஎன்பதாகும்.பலநூறுஆண்டுகளுக்குமுன்தமிழுலகில், தமிழிலக்கியத்தில்கண்ணுக்குபுலப்படாதசின்னஞ்சிறுதுகளுக்குஅணுஎன்றபெயர்இருந்துவந்துள்ளதையும்இங்குநினைவில்கொள்ளலாம்.
இயற்பியல் ஆய்வுகள் தொடரத் தொடர, அணுவும், எலக்ட்ரான் (electron), புரோட்டான் (proton), நியூட்ரான் (neutron) ஆகியவைகளால்ஆனவைஎனக்கண்டறியப்பட்டது. இவைகளைஅணுத் துகள்கள் (Atomic particles) எனக் கூறுவர்.மேலும், புரோட்டானும்நியூட்ரானும்ஒன்றுசேர்த்துஇருக்கும்பகுதிஅணுக்கரு (Nuclei) எனசொல்கிறதுஅறிவியல்.அணுவினுள்பல்வேறுஉட்துகள்கள்(Subatomic particles) இருப்பதாகவும் பிறகுகண்டறியப்பட்டது. அணுஉட்துகள்களைமூலத்துகள் (எதனாலும்உருவாக்கப்படாதவை) மற்றும்கலவைத்துகள்கள்எனப்பிரித்தனர்.எலக்ட்ரான் ஒரு மூலத்துகள் ஆகும். அதில் எதிர்மறை மின்னூட்டம் (negative charge)உள்ளது. புரோட்டானில் நேர்மறை மின்னூட்டம் (positive charge) உள்ளது. நியூட்ரான் எவ்விதமான மின்னூட்டமும் இல்லாத அணுத்துகள் ஆகும். முதலில் நியூட்ரினோவிற்கும் நியூற்றான் என்ற பெயரே இருந்தது. இரண்டையும் வேறுபடுத்தவே பிற்காலத்தில் இத்தாலிய மொழியில் நியூட்ரினோ என்று பெயரை மாற்றியமைத்தனர். இத்தாலிய மொழியில் அதற்கான அர்த்தம்“A little neutral one” என்பதாகும்.

நியூட்ரினோபிசாசு துகள்:
சூரியனில் இருந்து பூமியை நோக்கி பொழிந்து வரும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் ஒரு துகளே நியூட்ரினோ. அது வானில் இருந்து இப்புவி நோக்கி பெரு மழையாக நம் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் பொழிந்துகொண்டேதான் இருக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் 60 லட்சம் நீயூட்ரினோ துகள்கள் ஊடுருவிக்கொண்டே இருக்கிறது. இயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களால் எவ்வித பாதகமும் இல்லை. அது எப்பொருளுடனும் எவ்வித வினையும் புரியாது. அது இவ்வுலகில் சிறு துரும்பைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காது. நமது கண்ணுக்கு எவ்விதம் அது புலப்படவே படாதோ அதுபோலத்தான் அதன் பாதையில் நமது மண்ணில் எப்பொருளுக்கும் அத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தக்கூடிய வல்லமை இல்லை என சொல்லலாம். இருக்கும் அணுத்துகள்களிலேயே மிக குறைந்த நிறை கொண்டதான இந்நியூட்ரினோ ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடிய வல்லமை பெற்றதனால் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. படிப்பதற்கு இவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? இந்நல்லப்பிள்ளைக்கு அறிவியல் உலகம் முதலில் வைத்த செல்லப்பெயர்பிசாசுத் துகள்
ஆற்றல் அழியா விதியின் படி (Law of conservation of energy)ஆற்றல் என்பது புதிதாக உருவாகாது, அது அழியவும் அழியாது. ஆனால், ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றம் அடையும். ஒரு வினையின் தொடக்கத்தில் இருக்கும் ஆற்றல், இயங்குவிசை என அனைத்தும் வினை நிறைவுறும் தருவாயிலும் நிலைத்திருக்கும். இயற்பியலாளர் வுல்ஃகாங்க் பௌலி (Wolfgang Pauli) 1930 இல் பீட்டாதேய்வு (Beta Decay) தொடர்பாக ஆய்வுகளை செய்யும்பொழுதுவினை நிறைவில் கிடைக்கப்பெற்றஆற்றலிலும் (energy) இயங்குவிசையிலும் (momentum) மாற்றம் இருந்தது. அதாவது அழிவு இருந்தது. இது இயற்பியலின் ஆற்றல் அழியா விதியின்படி முரண்பாடானதாக பார்க்கப்பட்டது. பௌலி, வினையின் இறுதியில் கண்டுபிடிக்க முடியாத ஆற்றலையும் இயங்குவிசையையும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத உட்துகள் ஒன்று கொண்டிருக்கிறது என வரையறுத்தார். ஆனால், அந்த உட்துகளை சோதனை வழியாக நிறுவ முடியாமல் கோட்பாட்டு முறையிலேயே உணர்ந்து வந்தனர். அந்த உட்துகளில் மின்னூட்டம் இல்லாத நிலையில் இருப்பதை அறிந்து, பௌலி அதற்கு நியூட்ரினோ என பெயரிட்டார். அடுத்ததாக வந்த 26 வருடங்கள் நியூட்ரினோவை சோதனை வழியாக கண்டுபிடிக்க முடியாமலேயே இயற்பியலாளர்கள் தவித்து வந்தனர். ஹிக்ஸ் போசானிற்குகடவுள் துகள்என பெயரிட்டது போல நியூட்ரினோவிற்குபிசாசு துகள்என அறிவியல் உலகம் பெயரிட்டது.
இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம்:
1965 இல் வான்வெளியில் இருந்து வந்துக்கொண்டிருந்த நியூட்ரினோவை (Atmospheric neutrino) உலகிலேயே முதன்முறையாக, டாடா ஆராய்ச்சி கழகமும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகமும்இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து கோலார் தங்க வயலில் நடந்த ஆய்வில் பதிவு செய்தனர். அப்பொழுதிலிருந்தே இந்திய இயற்பியலாளர்கள் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் ஆவல் இருந்து வந்தது. 1989 இல் இருந்து அதற்கான திட்டமிடல் இருந்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் காலம் இழுத்துக்கொண்டே சென்றது. 2002 நியூட்ரினோ ஆய்விற்காக நோபல் பரிசு கிடைத்ததை அடுத்து, இந்திய அணுசக்தி கழகமும் (Department of atomic energy)இத்திட்டத்தில் முழுவீச்சில் இறங்கியதை அடுத்து இந்திய துணைக்கண்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
சிங்காராவில் அமைப்பதாக இருந்த இந்த ஆய்வு மையத்திற்கு 2009 இல் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி மறுத்தது.அன்றையசுற்றுச்சூழல்அமைச்சர்ஜெய்ராம்ரமேஷ், “நியூட்ரினோஆய்வுமையத்திற்காகஅனுமதிகேட்டசிங்காராபகுதிக்குஅருகிலேயேமுதுமலைவனசரணாலயம்அமைந்திருக்கிறது. அரிதிலும்அரிதானபுலிவகைகள்வாழும்பந்திப்பூர்மற்றும்முதுமலைபகுதிக்குஅருகில்இத்தகையஆய்வுமையம்அமைக்கஅனுமதிவழங்கமுடியாதுஎனகூறினார்.ஆனால், தேனிமாவட்டத்தில்இருக்கும்சுருதிஅருவிக்குஅருகாமையில்அமைத்துகொள்வதாகஇருந்தால்அமைச்சகம்அனைத்துஉதவிகளையும்வழங்கத்தயாராகஇருக்கிறதுஎன்றும்பரிந்துரைத்திருந்தார்.
அதன்பிறகுஇதுதொடர்பாக, இந்தியநியூட்ரினோஆய்வுமையத்தின்பேச்சாளரும்டாடாஅராய்ச்சிகழகத்தைச்சேர்ந்தவருமானமொண்டால்அவர்கள்எழுதியகடிதத்தில், “சுருளிஅருவிக்குஅருகாமையில்அடர்ந்தவனப்பகுதிஇருப்பதால், ஆய்வுமையம்அமைக்கவேண்டுமானால், பெரும்பாலானமரங்கள்வெட்டப்படவேண்டும். அதற்கானமுழுமையானஅனுமதியையும்ஒத்துழைப்பையும்வழங்கினால்பரிசீலிக்கத்தயாராகஉள்ளோம்எனபதிலுரைத்திருந்தார்.
தொடர்ச்சியாக எழுதிய கடிதத்தில் மொண்டால் அவர்கள், “சுருளியாறுக்கு 30 கிமீ தொலைவில் இருக்கும் தேவாரம் பகுதியில் ஆய்வு மையம் அமைக்க விரும்புவதாகவும் ஆனால், அங்கே ஆய்வு மையத்திற்கு தேவையான நீர் வசதி பெரும் பிரச்சனையாக இருக்கும். அதனை சரி செய்ய அரசு முன்வந்தால் திட்டத்தினை செயல்படுத்துவதில் எங்களுக்கு சிரமம் இருக்காதுஎன கூறினார்.
பரிசீலிக்கப்பட்ட மூன்று இடங்களிலும் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பதனை முதலில் பார்ப்போம். நியூட்ரினோ ஏனைய அணுத்துகள்கள் போல எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதிநவீன கருவிகளைக்கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தினாலும் மிக குறைந்த அளவிலான நியூட்ரினோவை மட்டுமே பதிவு செய்ய முடியும். அதனை இயற்பியல் தன்மை அப்படியானது. மேலும், நியூட்ரினோ துகளை பதிவு செய்யும் பொழுது ஏனைய அணுத்துகள்கள், காஸ்மிக் கதிர்களும் பதிவாக வாய்ப்புள்ளதால் ஏனையவைகள் முற்றிலுமாக வடிகட்டப்பட வேண்டும்.
இப்படி காஸ்மிக் கதிர்கள் இல்லாமல்நியூட்ரினோவை ஆய்வு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் 1 கிலோ மீட்டர்அளவுள்ள மலைப்பகுதி தேவை. அதனால்தான் தேனி மாவட்டம் பொட்டிபுரம்பகுதியிலுள்ள அம்மரப்பர் மலையை தேர்வு செய்து பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.இதன்படி மலையின் உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் 132 மீட்டர்நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகைஅமைக்கப்பட்டு உலகத்திலேயே மிகப் பெரிய அளவுள்ள காந்தம் வைக்கப்பட்டுஅதனிடையே மின் தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள்ஒன்றோடொன்று இடைவெளியில் வைக்கப்படும். காந்தத்தின் செயல்பாட்டினையும் மின்தட்டு அறைகளின் செயல்பாட்டினையும் தூண்டுதல் செய்து அதற்கிடையே நியூட்ரினோதுகளை ஆய்வு செய்யப்போகிறார்கள். காஸ்மிக் கதிர்களைத் தடுக்கும் அரணாக 1500 மீட்டர் நீளமுள்ள மலைப்பகுதி செயல்படும். இந்த இடத்துக்கு வந்துசெல்வதற்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் மற்றும் 7 மீட்டர் அகலத்தில் சுரங்கம்அமைக்கப்பட உள்ளது.  
ஆக, இயற்பியலாளர்களை பொருத்தவரை அவர்களுக்கு பொருத்தமான இடம் இத்தகையதுதான்.
ஆனால் நாம் பகுத்துணர வேண்டிய செய்திகள் இதில் ஏராளம்.
1)     முதுமலை காடுகளில் அரிதிலும் அரிதான வன விலங்குகள் வாழ்வது அணுசக்தி கழகத்திற்கும் டாடா ஆராய்ச்சி கழகத்திற்கும் சுற்றுச்சூழல் துறை சொல்லும் வரை தெரியாதா? இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, வன விலங்குகள் துடைத்தெறியப்பட்டு, அதனால் ஏற்படும் ஏனைய சுற்றுச்சூழல்பிரச்சனைகள் வந்தாலும் ஆய்வுத் திட்டமே முக்கியம் என கருதும் குறுகிய மனம் படைத்தவர்கள்தான் இவர்கள்.
2)     மொண்டால் எழுதிய கடிதத்தில் சுருளியாறு பகுதிகள் காடுகளை அழிக்க அரசின் உதவியையே நாடுகிறார். இதுபோன்ற பயங்கரவாத சிந்தனை உலகத்தில் எங்குமே நடக்காது. ஒரு அரசிடம் ஒரு மனிதர் வெளிப்படையாக இயற்கை வளங்களை அழிக்க கோர முடியுமா? இந்நேரம் அவர் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் அல்லவா அடைக்கப்பட்டிருக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க போராடும் மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இந்திய துணை கண்ட அரசு காடுகளை அழிக்கக் கோரும் நபரை கெளரவப்பதவி கொடுத்து வைத்திருக்கிறது.
3)     நீரே இல்லாத பகுதியாயினும் 30 கிமீக்கு நீரை எடுத்துச்செல்லும் குழாய்களை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்கிறார்கள். காவிரி குடிநீரை ஹொகேனக்கல் பகுதியில் இருந்து பென்னாகரம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக வெறும் 18 கிமீ எடுத்து வர முடியாமல் 20 வருடங்களாக வக்கற்று நிற்கும் அரச நிறுவனங்கள் 10-20 அறிவியலாளர்களின் சாதனைக்காக அனைத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த இருப்பது, இந்திய துணைக்கண்டத்தின் அரசு மக்களுக்கானதா? அல்லது அதிகாரிகளுக்கானதா? ஆராய்ச்சி நிறுவனங்களுக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு:
இத்திட்டத்தால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருகிறது. “மேற்குத் தொடர்ச்சிமலை என்பது, பல்லுயிரியல் சூழலில்முக்கியமான பகுதி. தமிழ்நாட்டு நதிகளின் பிறப்பிடமும்கூட. நிறையஅணைகளுக்கா நீர்ப்பிடிப்புப் பகுதியும் அதுதான். தற்போது நியூட்ரினோ ஆய்வுமையம் அமைய உள்ள இடத்தைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன.பூமிக்குள் சுரங்கம்தோண்டும்போது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்க்கவேண்டும். அது அணைகளுக்கும், மலைகளுக்கும், காடுகளுக்கும், உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த திட்டம் அமைக்கப்போறதா சொல்லுற 34 ஹெக்டேர் பகுதி, மக்களோடவாழ்வாதாரமா இருக்குற கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம்.மேலும், 2.5 கி.மீ. சுரங்கம்தோண்டும்போது உருவாகும் தூசி மண்டலம், அந்தப் பகுதியை கடுமையாகமாசுப்படுத்தும். உடைக்கப்பட்ட பாறைகளை அள்ளிக்கொண்டு நூற்றுக்கணக்கானலாரிகள் குறுக்கும் நெடுக்குமாகப் பாயும். அந்தப் பகுதி கிராம மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்''
மேலும், இது குறித்தான புரிதல் ஏற்படுத்தும் விதமாக அறிவியலாளர் வி.டி. பத்மநாபன் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளில், “சுமார் 1000 டன் ஜெலட்டின்களை பயன்படுத்தி 800 நாட்கள் தொடர்ச்சியாக 800 டன் பாறைகளை உடைக்க இருக்கிறார்கள். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கிற பகுதி நீர் அடுக்குகள் (Aquifer) நிறைந்த பகுதி. இவ்வாறாக, சுரங்கம் அமைக்க வெடி வைத்து பாறைகளையும் நிலத்தையும் தகர்க்கும்பொழுது அது புவிமேலோட்டுப் பேரியக்கத்தில் (tectonics) மாற்றம் நிகழ்த்தும். நீர் அடுக்குகளால் நிறைந்த பகுதி என்பதால் நீரியல் பூகம்பத்தை (hydro seismicity) எளிதில் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.ஆய்வு மையப்பகுதியில் எவ்வித புவித்தொழிற்னுட்ப முறை ஆய்வுகளை அணுசக்தி கழகமும் டாடா ஆராய்ச்சி நிறுவனமும் இதுவரை செய்யவில்லை. அதுகுறித்து வெளிப்படைத்தன்மை உடைய அறிக்கை இதுவரை இல்லை.
மற்ற நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோஆய்வகங்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் செயல்பட்டு வந்தஆய்வகம் மூடப்பட்டுவிட்டது. ஜப்பானில் செயல்பட்டு வந்த ஆய்வகத்தின் உள்ளேசோதனைக் குழாய்கள் வெடித்துச் சிதறி மறுபடியும் அமைத்தனர். இப்போதுமீண்டும் அது செயல்படாமல் உள்ளது. ஆகவே, இங்கு எந்தப் பாதிப்புமே வராதுஎன்று யாரும் உத்தரவாதம் தர முடியாது.
மேலும் அவர் தனது கட்டுரை ஒன்றில், 'சென்னை தரமணியில் உள்ளகணிதவியல் அறிவியல் நிறுவனம் (The Institute of Mathematical Sciences)தான், .என்.-வுக்கான பணிகளைச் செய்து வருகிறது. இந்தக்கணிதவியல் கழகம், .என்.-வுக்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவதற்காகதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு விண்ணப்பித்தது. அந்தவிண்ணப்பத்தில் .என்.. என்பதை, 'அணு உலை/அணு உலை எரிபொருள் உலை/ அணுஉலைக் கழிவுகள்என்று வகையின் கீழ்தான் குறிப்பிட்டுள்ளனர். அந்தப்பகுதியில் அணு உலை அமைக்கவோ, அணு உலை எரிபொருள் ஆலை அமைக்கவோ முடியாது.ஏனெனில், அந்த அளவுக்கான தண்ணீர் வளம் அங்கு இல்லை. ஆக, அணுக் கழிவுகளைக்கொட்டுவது மட்டும்தான் மிச்சம் இருக்கும் ஒரே வாய்ப்புஎன்றுஎழுதியுள்ளார் பத்மநாபன்.
''2013 மே 6-ல்உச்ச நீதிமன்றம் கொடுத்தத் தீர்ப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியஅணு உலைக் கழிவுகளை எங்கு புதைப்பது (Deep geological repository) என்பதைஇந்திய அணுசக்திக் கழகம் முடிவுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.இதுவரைக்கும் இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் அணு உலைக் கழிவுகளைஆங்காங்கே வைத்துள்ளனர். அவற்றை மொத்தமாக ஓர் இடத்தில் புதைத்தாக வேண்டும்.தேனியில், நியூட்ரினோ ஆய்வு மையம் என்ற பெயரில் இதைத்தான்செய்யப்போகிறார்களோ என்ற சந்தேகமும் உள்ளது. இந்தக்குற்றச்சாட்டுக்கு இதுவரை .என்.. தரப்பில் இருந்து எந்தப் பதிலும்சொல்லப்படவில்லை.


No comments:

Post a Comment