Wednesday, June 4, 2025

#நடிகர்கமலஹாசன் #கன்னடம்

 #நடிகர்கமலஹாசன் #கன்னடம்

——————————————————————
திராவிட மொழிகளின் ஒப்பீடுகளில் தமிழே இவற்றுக்கெல்லாம் மூல மொழியாக இருக்க வேண்டும் என்று ஆய்ந்து கூறிய மொழியியல் அறிஞர் கால்டுவெல் அவர்களைப் பின்பற்றி நடிகர் கமலஹாசன் தனது கருத்தைச் சொல்லி இருக்கின்றார் என்று நினைக்கிறேன். அது கர்நாடகா நீதிமன்றம் வரையிலும் சென்று கமலஹாசனை மன்னிப்புக் கேட்கும் படிச் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது. அவரவர் மொழி அவரவர்க்குப் பெரிது என்றாலும் கூட ஒரு ஆய்வைப் பின்பற்றி அது ஏற்கனவே தென்னிந்திய மொழிகள் குறித்த ஆய்வுகளாகவும் குறிப்பாக மொழி ஆய்வாளர்கள்பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அது ஒரு பொதுக் கருத்து போல இருப்பதாலும் கூட அதைச் சொல்லுவதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை. சொன்னவர் ஒரு பிரபலமானவர் என்பது தான் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது.
அது ஒரு புறம் இருக்க இது மாதிரி விஷயங்களில் எப்பொழுதும் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசிக் கொள்கிற திமுகவின் அல்லது ஸ்டாலினின் முன் களப்பணியாளர்கள் பத்திரிக்கையாளர்கள் நடிகர்கள் சித்தார்த் பிரகாஷ்ராஜ் மற்றும் தத்துவவாதிகள் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் மற்றும் பல நடிக நடிகையர்கள் மற்றும் சிபிஎம் கட்சி தோழர்களும் இது பற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அல்லது ஏன் வாயைத் திறக்க மறுக்கிறார்கள். இதுவரை இவர்கள்காவிரி,முல்லைபெரியாறு, கண்ணகி கோட்டம் பிரச்சனைக்காக எந்த ஒரு
தீவிரமான குரலையும் கொடுப்பதில்லை! ஆனால் தமிழ்நாட்டில் வந்து மட்டும் கருத்துக் கந்தசாமிகளாக மாறி விடுகிறார்கள். கமல் மன்னிப்பு கேட்பதால் மட்டும் இப்பிரச்சனை தீர்ந்து விடுமா?இது விவகாரத்தில் மேற்சொன்னவர்கள் பலரும் குரல் கொடுக்காததால் கமலைத் தனிமைப்படுத்துகிறார்கள் என்று தானே எண்ண வேண்டியிருக்கிறது?
மொழியியல் ஆய்வுகளை படித்து அதன் பிரகாரம் ஒருவர் தன் கருத்தைச்சொல்வதற்கு உரிமை உண்டு தானே. அதை மறுப்பவர்கள் தங்கள் மொழியை உயர்த்தி பிடிப்பதற்கும் இருக்கும் உரிமை போல அதுவும் ஒன்றுதான்.
இது கவனமாக கையாள வேண்டிய ஒரு விடயம்.

"உங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் முக்கியமானது.

 "உங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் முக்கியமானது.

உங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடிவெடுப்பதற்கு முன் எல்லாம் சரியாக இருக்கும் என்று காத்திருக்காதீர்கள். "எல்லா சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக இருங்கள், சில நீண்ட பழக்கவழக்கங்களை மாற்ற நீங்கள் கொஞ்சம் கட்டாயப்படுத்த நேர்ந்தாலும் கூட. ஒவ்வொரு நாளும் கேளிக்கை மற்றும் குதூகலம் பெறவில்லையோ, அவன் வாழ்க்கையை மறுசீரமைக்க வேண்டும். மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள், உங்கள் இதயத்தில் அன்பு பெருகவும்.. பாதுகாப்பாக இருங்கள்..
4-6-2025.

Wednesday 4 June 2025


 

#கலைஞர் #KALIGNAR


 

கிராமத்தில் வீட்டில் காட்டில் விளைந்த உளுந்து காயுது ….

 கிராமத்தில் வீட்டில் காட்டில் விளைந்த உளுந்து காயுது ….

என் மண்….
என் பூமி…..
The beauty of village.
The beauty Of nature
Love of everything village

#கலைஞர் #KALIGNAR

 #கலைஞர்




——————————————————————
மறைந்த முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞரை நான் முதன் முதலில் அறிமுகம் 1978. ஆம் வருடம்.ஏறக்குறைய 47 வருடங்களுக்கு முன்பாக அறிமுகம். என்னைப் பிரியமாக ராதா என்று அழைப்பார். ஏதேனும் விடயங்கள் தேவையெனில் அதிகாலை என்னைத் தொலைபேசியில் அழைத்து விவரங்கள் கேடட்பார்.
நான் திமுகவில் இல்லாவிட்டாலும் கூட அவருடனான பழக்கம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. எனக்கும் தொடர்ந்து 30 ஆண்டுகள் திமுகவில் இருக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவருடன் இருந்தவரை கட்சிப் பணியில் அவர் மகிழ்ச்சி கொன்ட அளவில் என்னளவில் இயங்கி வந்தேன் ஈழத்தமிழர் பிரச்சனையாக (TESO1&2, ஐநா மன்றம் என )இருந்தாலும் ஜெயலலிதா வழக்கு போன்றவையாக இருந்தாலும் இது போன்ற முக்கிய பல்வேறு வகையான பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் எனக்கு தைரியம் வழங்கி பேசி அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சொல்வார். அவரது நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நானும் அதைச் செய்து கொடுத்திருக்கிறேன். அந்தப் பணியை நான் செய்து முடித்த பிறகு மனம் திறந்து பாராட்டுவார்.
ஆனாலும் என்னுடைய விஷயத்தில் எனக்கு ஏதேனும் செய்ய நினைக்கும் போது அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன. இருந்தாலும் அவரின் மறைவு காலம் வரை திமுகவில் நீடித்தேன். அந்த வகையில் என் மீது அவரது அன்பு இருந்தது. என் திருமணத்திற்கும் வந்து வாழ்த்தினார். என் துணைவியார் இறந்த போதும் நான் நேரில் வருகிறேன் என்று சொன்னார். நான் தான் வேண்டாம் நீங்கள் சிரமப்பட வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இப்படி எல்லாம் என் மீது அக்கறையாக இருந்தவர். ஒரு சில நேரங்களில் “அப்பா உனக்கு நான் சிலவற்றை செய்ய எண்ணி இருந்தேன் செய்ய முடியவில்லையே! ஆனால் நான் போவதற்குள் உனக்கு ஏதேனும் ஒன்றைச் செய்து விட்டு தான் போவேன்” என்றும் சொல்லி இருந்தார். இப்படி பல நிகழ்வுகள்….
அவருடைய இந்த உளப்பண்பினால் தான் எனக்கு திமுகவில் என்ன நடந்தாலும் அவருடன் கூட இருப்பதில் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். என் தகுதிக்கும் திறமைக்கும் அவர் கொடுத்த மதிப்பு முக்கியமானதாக இருந்தது . அவர் மீது பலர் பல வகையான விமர்சனங்களைச் செய்வார்கள் அது ஒருபுறம் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில் அவரது அக்கறை உண்மையாக இருந்தது.? நான் அதிகமாக பேசுகிறேன் எதையோ அதிகமாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் நான் கலைஞருடன் அறிமுகமான காலத்தில் அவருடன் கூட இருந்தவர்கள் இன்றைய முதல்வராக இருக்கக் கூடிய ஸ்டாலின் மற்றும் வைகோ,மு.கண்ணப்பன், பொன் முத்துராமலிங்கம்,துரைமுருகன் , திருத்துறைப்பூண்டி கல்யாணசுந்தரம் போக அப்போது டி ஆர் பாலு கூட ஆர் டி சீதாபதியின் கீழ் மாவட்டத் துணைச் செயலாளராக இருந்தார். இப்படி சிலர் 1978 இருந்தவர்கள் இன்று உள்ளனர்.இதை வைத்துப் பார்க்கும் பொழுது எனக்கும் கலைஞருக்கும் இருந்த நெருக்கம் பலருக்கு புரிபடும். இங்கு பல விஷயங்களை என்னால் வெளிப்படையாகப் பேசி விட முடியாது.இருந்தாலும் கலைஞர் மாற்று கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி அவர்கள் சொல்லுவதை மதிக்கக் கூடியவரும் அனுசரித்துப் போகக் கூடியவரும் அரவணைக்க கூடிய பண்பும் உள்ளவர் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
நான் கோபாலபுரம் போனால் மாடியில் அவர் படுக்கை அறையில் சாதாரணமாக மார்பில் துண்டைப் போர்த்தியபடி அமர்ந்திருக்கக் கூடிய நிலையிலும் கூட என்னை அருகே வைத்து பேசுவார். அந்த வகையில் நான் எப்போது போனாலும் மிக எளிமையாக என்னிடம் எல்லா விஷயங்களையும் பேசிக்கொள்ளும் படியான உரிமையைக் கொடுத்திருந்தார். மற்ற எந்த ஒரு தலைவருக்கும் கூட இப்படி ஒரு நெருக்கத்தை அவர் கொடுக்கவில்லை. வேறு யாரும் அவரிடம் இத்தகைய உரிமைகளை எடுத்துக் கொள்ளவும் முடியாது. அவர் வாழ்ந்து முடிந்த ஒரு அரசியல் ஆவணம். கலைஞர் தமிழக அரசியலில் ஒரு சகாப்தம் என்றே சொல்லுவேன். கலைஞர் போல ஏனோ என்னை ஸ்டாலின் அறியவில்லை. இது குறித்து எனக்கு அக்கறையும் இல்லை.

#கலைஞர் #KALIGNAR


 

பிரச்சனைகளில் இருந்து ஓடாதீர்கள், எப்போதும் தீர்வுகளை நோக்கி ஓடுங்கள்.

 பிரச்சனைகளில் இருந்து ஓடாதீர்கள், எப்போதும் தீர்வுகளை நோக்கி ஓடுங்கள். பொறுமையாக இரு, உன் எந்த பிரச்சனையும் தீர்க்கப்படாமல் இருக்காது. தீர்வு கிடைக்கும் என்று உன்னை நீ நம்பும் வரை பிரச்சனைகள் உன்னை தொந்தரவு செய்யாமல் போகலாம். தீர்வுகளில் உங்கள் கவனம் இருந்தால் உங்களால் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவுமில்லை. பிரச்சனை என்றால் தீர்வு உண்டு, தீர்வு எங்கே இருக்கிறதோ அங்கே முன்னேற்றம் உண்டு. பெரும்பாலான பிரச்சனைகள் உங்கள் மனதில் தான் உள்ளன. நீங்களே உருவாக்குகிறீர்கள். எனவே தர்க்கரீதியாக யோசியுங்கள், நீங்கள் ஒரு பிரச்சனையை தீர்க்க ஒரு வாய்ப்பு உள்ளது. அதற்கு உணர்ச்சிபூர்வமாக பதிலளிப்பது நீடிக்கிறது மற்றும் மோசமாகிறது. ஆமாம் உன் எண்ணங்கள் உன் பிரச்சனைகளை விட உயர்வாக இருந்தால் நீ அவற்றுக்கு மேலே பறக்கலாம்....

3-6-2025.

#UdhayanidhiStalin #dmk #PoliticsToday #உதயநிதிஸ்டாலின் #திமுக

 

உதயநிதி கட்சி பதவியை குறிப்பிட்டு அரசு அறிக்கை.. வெடித்த சர்ச்சையால் மாற்றம்! அதிலும் மிஸ்டேக்! #திராவிடமாடல் என்பர்
கழக இளைஞரணிச் செயலாளர் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் எப்படிப் போடலாம்?. தமிழக அரசு என்றால் திமுக வா? தமிழக அரசு இவர்கள் அப்பன் வீட்டுச் சொத்தா? அரசு அதிகாரிகள் எல்லாம் திமுகவின் நிர்வாகிகளா.? இப்படி அபத்தமாக சீர்குலைவை உண்டாக்குகிற நிலையில் தான் திமுக அதிகாரத்தின் கீழ் தமிழக அரசு இருக்கிறது.! வேதனை! வேதனை!! வேதனை!!!
It is not fair , Tamilnadu government machinery supporting ruling DMK.


கீழடிக்கும் முந்தைய நாகரிகம்

 கீழடிக்கும் முந்தைய நாகரிகம்

ஆதிதச்சநல்லூர்,நொய்யல் நதி கொடுமணல் நாகரிகமும், புரந்தல் நாகரிகமும் மற்றும் சில
கீழடிக்கு மட்டும் ஊடக வெளிச்சம் … இருக்கட்டும்
ஆனால் மறைக்கப்படும் மற்ற தமிழர் நாகரிக தொன்மங்கள்!

Monday 2 June 2025 at 10:56

 


Monday 2 June 2025 at 09:33

 


சரியான matching

 


Many of your life’s failures are when you don’t realize how close you are to success when you gave up,

 Many of your life’s failures are when you don’t realize how close you are to success when you gave up, life imposes thigs on you that you can’t control, but you still have the choice of how you’re going to live through this and you should know LIFE is not a problem to be solved its a reality to be experienced. Understand nothing binds you except your thoughts, nothing limits you except your fear and nothing controls you except your beliefs......

2-6-2025.



எப்படி எல்லாம் மாற்றி பேசறது…. இவர்களுக்கு வடிக்கை!

 



#நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்27

 #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள்

—————————————
‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்…….

#நடிகர்கமலஹாசன் #கன்னடம்

  #நடிகர்கமலஹாசன் #கன்னடம் —————————————————————— திராவிட மொழிகளின் ஒப்பீடுகளில் தமிழே இவற்றுக்கெல்லாம் மூல மொழியாக இருக்க வேண்டும் என்று ஆ...