Saturday, April 26, 2025

#Meeting with Honourable AP Deputy Chief Minister, Shri Pawan Kalyan Garu #ஆந்திராவின் துணை முதல்வர்

#Meeting with Honourable AP Deputy Chief Minister,  Shri Pawan Kalyan Garu 

#ஆந்திராவின் துணை முதல்வர் 



பவன்கல்யாண்  உடன்  சந்திப்பு 
———————————————————
கடந்த இரண்டு நாள் டில்லி, ஹைதராபாத், விஜயவாடா பயணத்தில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் போன்ற முக்கியமான தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது! பொது விஷயங்கள் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் பல விஷயங்களைப் பேசிக்கொண்டோம். 













•தமிழக ஆந்திர எல்லைப் புறப்பகுதிகளில் இருக்கும்
சித்தூர் நெல்லூர் அனந்தபூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கல்லூரிகளில்அங்கு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்பதை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.அதற்கு ஆவண செய்வோம் என்று  சொன்னார்.




•#கிழக்குதொடர்ச்சிமலை பாதுகாப்பு குறித்தது  எனது உச்சநீதிமன்ற வழக்கு பற்றி சொல்ல  பவன் அக்கறையுடனும் கேட்டு , மேற்கு தொடர்ச்சி மலையை போல நம கவனித்தில்  வேண்டும் என்றார்.

•#தேசியநதிநீர்இணைப்பை ஆதரிப்பதாக கூறினார் . இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2012 என் வழக்குகில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எடுத்து சொன்னேன்.

•#ஈழத்தமிழர்கள் சிக்கல், #இந்துமகாசமுத்திரம் அமைதி மண்டலம் குறித்தும் தன் ஆதரவை  பவன் தெரிவித்தார்.




எல்லா வகையிலும் இது ஒரு முக்கியமான சந்திப்பாக இருந்தது. 

This morning, I had the opportunity to meet the Honourable AP Deputy Chief Minister,  Shri Pawan Kalyan Garu. Despite his busy schedule, Vijayawada

We had a brief but meaningful discussion lasting around 1.5 hours, where we touched upon the following key issues:
 • Appointment of Tamil teachers in the border districts of Tirupati, Chittoor, Nellore, and Ananthapur.
 • Appointment of Tamil Assistant Professors for Tamil departments in the above-mentioned districts.
      
• #linkingofNationalrivers as per my
Writ Petition ‘s orders in Supreme Court on 2012
 
• Discussion on my writ petition pending in Supreme Court concerning the #EasternGhats, and the importance of preserving the Eastern Ghats’ ecosystem like western ghat.
 
• #SriLankanTamil issues and 
#IndianOcean  question 

 • Discussion on the current situation in #Pahalgam, Jammu and Kashmir.
 
• Discussion on the ongoing #Palestine issue and its global implications.

It was a highly productive interaction, and I am grateful for the time and attention given to these important matters. He is a rare popular leader and personality in public life.

#ksrpost
#கே௭ஸ்ஆர்போஸ்ட்
26-4-2025.

Friday, April 18, 2025

*குடியரசு தலைவர்- மத்திய அரசு- ஆளுநர்கள் vs உச்ச நீதிமன்றம்* *The President- Union of India- Governors vs The Supreme Court of India *

*குடியரசு தலைவர்- மத்திய அரசு- ஆளுநர்கள் vs உச்ச நீதிமன்றம்*

*The President- Union of India- Governors vs The Supreme Court of India *

#*தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இந்தியக் குடியரசு தலைவர் அவர்களுக்கே உத்தரவு பிறப்பித்துள்ளது.! என்னை கேட்டால் இந்த மாதிரியான சங்கடங்களுக்கு முன்பாகக் குடியரசு தலைவர் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு உச்சநீதிமன்றம் சில ரெஃப்ரென்ஸ்களை வழங்கி இருக்கலாம். இதன் இதன் அடிப்படையில் அம்மசோதாக்களை  ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றித் தருவதற்கு வழிவகைகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதை அறிவுறுத்தி இருக்கலாம்*! அதை விட்டுவிட்டு எதற்கு இந்த தீர்ப்பு என்று புரியவில்லை! நமக்குத் தெரியும்!  ஜனாதிபதி அவர்களை அனைத்து நீதிமன்றங்களுக்கும் அப்பால் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தீர்மானங்களுக்கு அடியிலும் அவரை  விமர்சிக்கக் கூடாது. அதே அடிப்படையில் தான் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் அவர்களின் தீர்ப்புகளையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க முடியாது. இந்தியக் கான்ஸ்டிடியூஷன் அடிப்படையில் இது பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்ட சாசன விதிகள்!
ஜனநாயகம் என்பது நீதித்துறை நாடாளுமன்றம் ஆட்சியாளர்கள் மூன்றும் இணைந்த ஒரு ஜனநாயகப் பூர்வமான  நிர்வாக அமைப்பு. இவை மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும் போதுதான் தேச நலன்களுக்குரிய விஷயங்கள் 
நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று மேண்டஸ்கி என்ற பிரெஞ்ச் அறிஞர் குறிப்பிடுகிறார்! இவை மூன்றும் “ஸெப்ரரேசன் ஆப் த பவர்”
Separation of powers என்கிற முறையில் இணைந்திருக்கின்றன. குடியரசு முறையாக இருந்தாலும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்றாலும் இந்த முறை பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது.  அந்த நிலையில் இருந்து விலகி ஏனோ இந்த மசோதாக்கள் விவகாரத்தில் வினோதமாக இந்தத் தீர்ப்பை நீதிபதிகள் கொடுத்துள்ளார்கள்.

“ம்யூச்சுவல் செக்  & பேலன்ஸ்”என்கிற முறையில்  The doctrine of checks and balances states that each organ of the government shall act on the other organs in such a way as to prevent them from becoming totalitarian and to prompt them towards fulfilling their constitutional obligations. மேற் சொன்ன மூன்று அமைப்பின் எல்லைகளையும்  மீறாமல் எந்த காரியம் ஆயினும் அந்தந்த தேசங்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் உலகம் முழுக்க ஒத்துக் கொண்டிருக்கிற ஜனநாயகத்தின் பண்பு! அதை ஒட்டித்தான் இந்த மசோதா விவகாரத்திலும்  நடந்திருக்க வேண்டும். அரசியல் சாசனமும் இதைத்தான் மறைமுகமாகச் சொல்லுகிறது. 1951இல் யாருக்கு அதிக அதிகாரம் குடியரசு தலைவருக்கா? இல்லை பிரதமரைத் தலைமையாகக்கொண்டு செயல்படும் மத்திய அமைச்சரவைக்கா? என்று இந்துமத சட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் எழும்பி வழக்காக மாறின. அன்றைக்கு செட்ல் வாட்,  சட்ட ஆளுமைகொண்ட இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் இதற்காக வாதாடினார்!
அது விவாதமாக மாறி இந்திய உச்ச நீதிமன்றக் கருத்தாய்வு மன்றத்தில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு பல்வேறு ஐம்பதுக்கு மேற்பட்ட விவாதங்கள் தீர்ப்புகள் என்று இந்த பிரச்சனையில் தொடர்ந்து  வழக்குகள் நடந்தன! கேசவநந்த பாரதி வழக்கு அதேபோல் மினர்வா மில் மேனகா காந்தி கோலகநாத் SR Bommai case
Judges cases etc போன்ற சம்பந்தப்பட்ட வழக்குகளும் நடந்தன. இப்படியான வழக்குகளைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பலமுறை இவற்றைப் பேசி உள்ளது! அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழக்குகளில் மிகச் சரியாக நடந்துள்ளதா என்பதும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகத்தான் இன்னும் இருக்கிறது. பகல்பூர் வழக்கில் அரசின் கொள்கை முடிவுகளை 1980 உச்சநீதிமன்றம் தன் வசமாக்கியது.மீண்டும் சொல்வது என்னவெனில் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை யாரும் விமர்சிக்கக் கூடாது! முடியாது! ஆனால் சில கருத்துக்களை  ஜனநாயக ரீதியாக முன் வைப்பது தவறில்லை. அந்த வகையில் இந்தத் தீர்ப்பு என்பது 100% சரியானதுதானா என்பதுமே இன்னும் ஆரோக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் தான்!

இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டு ஏதோ திமுக காரர்கள் நாங்கள் எதையோ சாதித்து விட்டோம் என்று
ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம் விளம்பரத்துக்கு தான்  பயன்படுமே ஒழிய வேறொன்றுக்கும் ஆகாது!
நீதிபதிகளின் முழு தீர்ப்பையும் வாசித்த பிறகு தான் இது பற்றிச் சொல்ல முடியும்! நீதிமன்றங்கள் விசாலமாக செயல்படுவதற்கு மட்டுமே அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் அது மத்திய அரசையோ மாநில அரசையோ நிர்வகிக்கக்கூடிய  பொறுப்பை அரசியலமைப்பு சட்டம் வழங்கவில்லை என நினைத்த விட முடயாது.குடியரசு தலைவர், ஆளுநர் மீது  உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற எதிர்த்துப் வழக்கு தொடர முனபு அனுமதியே கடந்த 2000 வரை தரவில்லை என நினைவு. பிரிவு 226 இன்படி ரிட் மனு வழக்கு எண்கூட வழங்க  court section இல் சிரமப்படுவர்கள்…..

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள கவர்னர் இந்திய நீதித்துறை பற்றி சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.....


இன்று இந்திய துணை ஜனாதிபதி இந்திய நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றி  கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார்......


அவருடைய கடுமையான எதிர்ப்பை அவ்வளவு சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.....


ஜனாதிபதிக்கு உத்தரவிடும் அளவிற்கு உச்ச நீதிமன்றத்திற்கு சூப்பர் அதிகாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.....


உச்சநீதிமன்றமா? ஜனாதிபதியா? என்று கேள்வி வந்தால் இந்திய ஜனாதிபதியே உச்சபட்ச வீட்டோ அதிகாரம் படைத்தவர்.......


உச்ச நீதிமன்றம் கொடுக்கக்கூடிய தீர்ப்பையே நிறுத்தி வைக்க கூடிய அதிகாரம் படைத்தவர் இந்திய ஜனாதிபதி...


இந்திய ஜனாதிபதி நினைத்தால் ராணுவத்தின் மூலமாக அவசர நிலை பிரகடனப்படுத்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே நிறுத்தி வைக்கும் அதிகாரம் படைத்தவர்....


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதன் அடிப்படையில் மட்டுமே இந்திய நீதிமன்றங்கள் செயல்பட முடியும்.....


ஆனால் அதனை கடந்து நீதிமன்றங்கள் செயல்படும் பொழுது அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்திய பாராளுமன்றத்திற்கும் இந்திய ஜனாதிபதிக்கும் உண்டு...


142 விதியின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றால்......


🍁முதலில் சம்பந்தப்பட்ட துறையுடன் ஆலோசனை செய்ய வேண்டும்.....


🍁மத்திய சட்ட அமைச்சகத்துடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்....


🍁இந்திய ஜனாதிபதி கருத்துக்களை கேட்க வேண்டும்....


142 விதியை அதன் பின்பே செயல்படுத்த முடியும்....


ஆனால் தமிழக கவர்னர் விஷயத்தில் இது எதுவுமே முறைப்படியாக நடக்கவில்லை.......


மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என மத்திய அரசை விமர்சனம் செய்து நாம் கூவம் போன்று கூத்தடித்துக் கொண்டிருந்தோம்......


ஆனால் இந்திய பேரரசு சுனாமி போல் உள்ளுக்குள் ஆழிப் பேரலையாக சீறி கொண்டு இருந்தது தற்போது வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது......


கண்டிப்பாக இந்திய துணை ஜனாதிபதியே நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசுகிறார் என்றால்......


நாளை இந்திய உச்ச நீதிமன்றம் இதற்கான விளக்கத்தை கொடுத்தே தீர வேண்டும்....


பிரதமர் மீதோ ஜனாதிபதி மீது வழக்கு தொடுக்கக்கூடிய நிலையில்


ஜனாதிபதியை கேள்வி கேட்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த நீதிபதியின் மீது வழக்கு தொடுக்க முடியுமா......


டெல்லியில் பல கோடி ரூபாய் சிக்கிய நீதிபதியின் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை.....


என பல அடுக்கடுக்கான கேள்விகளை வைத்து இந்திய நீதித்துறையின் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி.......


பூனைக்கு மணிக்கட்ட ஆள் இல்லை என்று நினைக்க வேண்டாம் நான் இருக்கிறேன் என்று வந்திருக்கிறார்.......


இந்திய நீதித்துறையின் மீதான ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.....



https://x.com/TimesAlgebraIND/status/1912815804233417000?s=08

இன்றைய 18-4-2025, தினமலரில்:
••••
தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள முன்னாள் செய்தி தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: தமிழக மசோதாக்களை நிறைவேற்றி தராமல் தாமதப்படுத்தியதாகவும், மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் சில பரிந்துரைகளை வழங்கி இருக்கலாம். அதன் அடிப்படையில், மசோதாக்களை ஜனாதிபதி நிறைவேற்றி தருவதற்கு வழி வகைகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதை அறிவுறுத்தி இருக்கலாம். அதை விட்டுவிட்டு எதற்கு இந்த தீர்ப்பு என்று புரியவில்லை.�
தி.மு.க., கொண்டாடிட்டு இருக்கும் தீர்ப்புக்கு எதிராக கருத்து சொல்லி, 'இனி தி.மு.க., சகவாசமே வேண்டாம்'னு முடிவு பண்ணிட்டாரோ?

#குடியரசுதலைவர்
#ஆளுநர்  #உச்சநீதிமன்றம்
#PresidentofIndia 
#Governor 
#SupremeCourt 

#ksrpost 
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-4-2025

Tuesday, April 15, 2025

மாநிலசுயாட்சித்தீர்மானம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

#மாநிலசுயாட்சித்தீர்மானம் சட்டமன்றத்தில்  மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதை மீண்டும் மீண்டும் நிறைவேற வேண்டியதுதான்!

தொடர்ச்சியான திமுகவின் செயல்பாடுகளைக் கவனித்துப் பார்க்கும் பொழுது தங்களுக்குத் தேவையான சாதகமான நேரத்தில் மட்டுமே தொகுதி மறு வரையறை, இந்தி எதிர்ப்பு,காவிரி பிரச்சனை,முல்லை ஆறு ,கச்சத்தீவு பிரச்சினை போன்றவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்ய ஸ்டாலின் திமுகவினர் தொடங்கி விடுகிறார்கள் !

அதாவது, தங்களிடம் உள்ள பிரச்சனைகளை இப்படியாகத் திசை திருப்பி விடுவதே திமுகவிற்கு வாடிக்கையாக இருக்கிறது.! 

நான் ஏற்கனவே கூறியது போல கடந்த 18 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று பல்வேறு கூட்டணிகளில்  நட்புடன் தொடர்ந்து இயங்கி வந்த நீங்கள் ஏன் இத்தனை ஆண்டு காலமாக இந்த மாநில சுயாட்சி வரையிலான பிரச்சனைகளை அங்கேயே பேசி  நல்லதொரு  முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை?

சரி மாநில சுயாட்சி என்றால் என்ன? தமிழகத்தில் முதன் முதலாக மாநில சுயாட்சி பற்றிப் பேசியவர்கள் வலியுறுத்தியவர்கள் தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் மற்றும் மபொசி இருவரும் தான்! 

அதன் பிறகு அண்ணா காஞ்சி இதழ் பத்திரிக்கையில் மாநில சுயாட்சி மக்களுக்கான உரிமை என்று எழுதினார். 1969இல் டெல்லியில் இருந்து கலைஞர் மாநில சுயாட்சி பற்றிய  கலந்தாய்வுக்குச் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பி. வி.ராஜமன்னார்  தலைமையில் மற்றும் ஆந்திராவில் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரா ரெட்டி,  சென்னைப் பல்கலைக்கழக வேந்தராக இருந்த 
டாக்டர் ஏ லட்சுமண சாமி முதலியார் போன்றவர்களின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்! 

அதற்கு முன்பாகவே 1966 இல் இந்திரா காந்தி ஆட்சியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாட்டில்  நிர்வாகச் சீர்திருத்த குழு என்று ஒன்று அமைக்கப்பட்டு மத்திய மாநில கூட்டாட்சி உறவுகள் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் பிறகு மொரார்ஜி தேசாய் நிதி அமைச்சர் ஆன பிறகு  அந்தக் குழுவிற்கு கர்நாடக கெங்கல் ஹனுமந்தையா தலைமை தாங்கினார். அவர்தான் கர்நாடகாவின் சட்டசபையான விதான் சவுதாவை இறுதியாக 1952 இல் கட்டியவர்!

அது ஒருபுறம் இருக்க அன்றைக்கு இந்திரா தலைமையில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் மாநில சுயாட்சி போக தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனிக் கொடி வேண்டும் என்றும் கலைஞர் கேட்டார்! உண்மையைச் சொன்னால் அன்றைக்குத் திமுகவின் தயவால் தான் இந்திரா காந்தி ஆட்சி மத்தியில் அமைந்தது! ஏனெனில் ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து இந்திரா காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸ் என்று முறிவு ஏற்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கலைஞர் சொல்லியிருக்கலாமே! எங்கள் தயவில் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள்! எங்களுக்கு மாநில சுயாட்சியைக் கொடுங்கள் என்று வலியுறுத்தி இருக்கலாமே! ஏன் கேட்கவில்லை! 

அதன் பிறகு என்ன நடந்தது? இந்திராகாந்தி அம்மையார்  நீதிபதி சர்க்காரியா அவர்களின் தலைமையில் மத்திய-மாநில உறவுகள் குறித்த ஒரு குழுவை அமைத்தார்.

கலைஞர் அமைத்த குழுவும் 1971இல் இந்திரா காந்தி அமைத்த குழுவும் இரண்டு போக்கில் தங்களது அறிக்கையை அளித்தன!  அதன் பிறகு என்டி ராமராவ் விஜயவாடாவில் கூட்டிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மாநில சுயாட்சியின் படி மாநிலங்களை கலைக்க உரிமை உள்ள 386 வது  பிரிவை நீக்க வேண்டும்.  அனைத்து மாநில உரிமைகளும் காக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

அதன் பிறகு பாரூக் அப்துல்லா  ஜம்மு காஷ்மீரில் நடந்த  மாநாட்டில் வெளி விவகாரத்துறை ராணுவம் மற்றும் தகவல் தொழில் தொடர்புத் துறைகள் போன்றவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டு மற்ற உரிமைகளை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளும்படி விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன . மேற்ச்சொன்ன விஜயவாடா கூட்டத்திலும் பாரூக் அப்துல்லா கூட்டத்திலும் கலைஞர் கலந்து கொண்டார். 

அதே பாரூக் அப்துல்லா 1998 -99 வாக்கில் மாநில சுயாட்சி கோரி  ஜம்மு காஷ்மீரில் ஒரு குழுவை அமைத்தார். அறிக்கையை பெற்றார்.

அதேபோல் மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசு தலைமையில் அமைந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடுகளில் மாநிலங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அதன் பரிவர்த்தனைகள் நியாயமாக இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. அதற்கான வெள்ளை அறிக்கை ஒன்றையும் ஜோதி பாசு வெளியிட்டார்!  

இப்படி மாநில சுயாட்சி என்பது எல்லா மாநிலங்களிலும் இருந்தும் பல்வேறு காலகட்ட முதல்வர்களால் முன்வைக்கப்பட்ட ஒன்றுதான்! ஏதோ திமுக மட்டுமே முன்மொழிந்தது போல அதற்குப் பிறகு தான் மாநில உரிமைகள் பேசப்பட்டது போல இன்றைய திமுக சொல்வதெல்லாம் வரலாற்றை மறைப்பது தான்!

மாநில சுயாட்சி பற்றி எல்லாருடைய பங்கும் அந்தந்த காலகட்டத்தில் இருந்திருக்கிறது. ஆனால் அந்தந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெறும் அறிக்கைகளாக தான் மீந்து போயின! உதாரணமாகச் சொன்னால் ராஜமன்னார் அறிக்கைகளைப் போல எதையும் நிறைவேற்ற இயலாமல்  போனதுதான் மிச்சம்!.

இதற்கு அப்பாலும் மத்திய அரசு நீதிபதி பூஞ்சிக் குழு என்று ஒன்றை அமைத்தது. அதில் மாநிலங்களின் அனுமதி  தேவையின்றியே மத்திய அரசு  அப்பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்பலாம் என்று ஒரு முடிவு செய்யப்பட்டது. அப்போது மன்மோகன் சிங் அரசுதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது கூட்டணியில் இருந்த திமுக அது எப்படி மாநிலங்களின் அனுமதி இன்றி நீங்கள் ராணுவத்தை அனுப்ப முடியும் என்று  ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை!

இப்படி தேவைக்கேற்றார் போல் நேரத்திற்கு ஏற்றார் போல் மாநில சுயாட்சி அது இது என்று பேசிக்கொள்வது! மத்தியில் கூட்டணி சேர்ந்து விட்டால்  அங்கு எது நடந்தாலும்  வாய் மூடி மௌனமாக அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பது! இவர்கள் உளப்பூர்வமாகவா மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தைக் கேட்கிறார்கள்! அப்படி எல்லாம் இல்லை! சீசனுக்கு ஏற்றார் போல முல்லையாற்றுக்கு ஒரு தீர்மானம் கச்சச் தீவிற்கு ஒரு தீர்மானம் மாநில சுயாட்சிக்கு ஒரு தீர்மானம் என்று சும்மா சும்மா கொண்டு வந்து என்ன பிரயோஜனம்! அனைத்தையும் குப்பையில் போடவா! ஆட்சியிலும் பதவியிலும் கூட்டணியிலும் இருக்கும் போது  எதையும் சாதிக்காமல் இப்பொழுது வந்து கூச்சலிட்டு என்ன செய்வது!

எத்தனை வருட காலங்கள் போய்விட்டது! நேரத்திற்கு ஏற்றார் போல் தீர்மானங்களைப் போட்டுக் கொள்வது என்பது தங்களுக்கான  சுயநலமும் சந்தர்ப்பவாதமும்  தலையெடுக்கும் போதுதான் எனில்  இந்தக் கண்துடைப்பு நாடகம் எத்தனை நாளைக்கு!?

திரும்பவும் இன்று 15-4-2025 முதல்வர் மீண்டும்  மாநில சுயாட்சி முதல்வர் தீர்மான முன்மொழிவில்;
‘’இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும்,ஒன்றிய-மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளைமேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்டகுழுஅமைக்கப்படுகிறது."என சொல்லியுள்ளார்.

#மாநிலசுயாட்சித்தீர்மானம்
#நீதிபதிசர்க்காரியா_மத்தியமாநிலஉறவுகள் 
#ராஜமன்னார்குழு
#பூஞ்சிக்குழு
#StateAutonomy
#pvrajamannarcommissin
#centrestaterelations
#sarakiyacommission
#poonchicommission

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
15-4-2025


Thursday, April 10, 2025

#திமுக முதல்வர் ஸ்டாலின், தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசசை எதிர்த்து போராடும் வேடிக்கைகள்

#திமுக முதல்வர் ஸ்டாலின்,
தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசசை எதிர்த்து போராடும் வேடிக்கைகள் 
———————————————————-
முதல்வர் ஸ்டாலின் தென் மாநிலங்களை ஒன்றிணைந்து மத்திய அரசசை எதிர்த்துப் போராட வேண்டும் என்று அவர் பாணியில் வழக்கம் போல முழங்குகிறார். தனக்கு வயிற்று வலி வரும் போதெல்லாம் இப்படிக் கூப்பாடு போடுவது தான் அவர்களது வாடிக்கை! 

மத்திய அரசு சொல்வது செயல்படுத்தவிரும்புவது இந்தித் திணிப்பு என்பதல்ல! அது தெளிவாகவே மத்திய அரசால் முன் வைக்கப்படுகிறது. இந்தியாவில் பேசப்படும் எந்த  ஒரு மாநிலத்தின் மூன்றாவது விரும்பும் எந்த மொழியையேனும் பிராந்திய மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது பண்பாட்டு கலாச்சார ஒற்றுமைக்கும் புலம்பெயர்ந்து வேலை செய்யும் இடங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கும்  தானே தவிர அதை வெறுமனே திமுக இட்டு கட்டி சொல்வது இந்தித் திணிப்பு என்று முடிவு செய்யக்கூடாது   என்று மிகச் சரியாகவே மத்திய அரசு முன்வைக்கிறது.  

ஏதேனும் ஒரு மூன்றாவது  மொழி! அவ்வளவுதான்! அதை விட்டுவிட்டு திமுக வழக்கம்போல  மத்திய அரசு  தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கிறது என்று பொதுவில் மையப்படுத்துவது அவர்கள் காலகாலமாகப் பேசி முரண்படுத்தி வரும் தங்களது அரசியல் அதிகார ஆதாயத்திற்கு தான் ஒழிய இதில் என்ன அவர்களுக்குச் சங்கடம் இருக்கிறது . ஏதோ தாய்மொழியே  வேண்டாம் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் நிர்பந்தப்படுத்துவது போலப் பிரச்சாரம் செய்கிறார்கள்

அதேபோல் ஜிஎஸ்டியை தர மறுக்கிறார்கள் என்று சொல்வதும் பச்சை பொய்! ஏறக்குறைய தமிழ்நாடு செலுத்தும் ஜிஎஸ்டி வரி வருவாயில் 72% திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள். மத்திய சர்க்கார் க்கு செல்லும் 50 சதவிகித வரியில் 20சதவீதம் வரி இவர்களுக்கு திரும்பி வந்துவிடுகிறது அதை மறைத்து சத்தம் போடுகிறார்கள்.

மத்திய அரசிற்கு எத்தனை நிர்வாக பிரச்சனைகள் இருக்கிறது என்பதை அறியாமல் கூச்சல் போடுகிறார்கள். விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை அயல் நாட்டு துறை ஏற்றுமதி இறக்குமதி அந்நிய முதலீடுகள் எல்லைப் பாதுகாப்புகள் என்று பல்வேறு காரியங்கள் இருக்கிறது. 
இத்தகைய நுணுக்கமான பிரச்சனைகள் இருப்பதை எல்லாம் அறியாத மாதிரி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.

அதேபோல டீ லிமிடேஷன் என்ற தொகுதி வரையறை குறித்த எந்த உத்தரவும் தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை.

அதுபோக போன தேர்தல் வாக்குறுதியிலேயே #மதுவிலக்கு கொண்டு வருவோம்! பழைய அரசு ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டு வருவோம்! விலைவாசியைக் குறைப்போம் என்றெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த போது திராவிடக் கழக வீரமணி அவர்களுடன் கறுப்புக் கொடி பிடித்து கும்பலாகச் சேர்ந்து போராடினார்கள்.

ஏதோ நாளைக்கே ஆட்சியைப் பிடித்து அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து விடுவது போல  தங்களின் வீட்டுக்கு முன்னால் கோஷமிட்டார்கள்!  அவர்கள் ஆட்சியில் நான்கு வருடம் கடந்து விட்டது!அதேபோல் அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் காவல் நிலைய மரணத்திற்காக முதல்வரும் அவரது தங்கையுமான கனிமொழியும் மேலும் கீழும் குதித்து ஒரேடியாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால் இவர்களின் கடந்த நான்கு வருட திமுக ஆட்சியில் நூற்றுக்கு மேலான காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன! இதற்கு என்ன பதில்! ஏறக்குறைய தமிழ்நாட்டில் தினமும் ஒரு கொலை நடப்பதாகக் கூறுகிறார்கள்! பேர்வாரியாக அதற்கான பட்டியலும் போடுகிறார்கள். இதைப் பற்றி சட்டமன்றத்தில் பேசும்போது முதல்வர் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடக்கிறது
அதிகம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்!

தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்புச் செய்வோம் என்று அரசு அதிகாரிகளையும் தென் மாநில முதல்வர்களை அரசியல்வாதிகளையும் அழைத்துத் தனக்குச் சாதகமாகக் கூட்டம் நடத்தி புகழ் வெளிச்சம் பெறப் பார்க்கிறார்!இதற்கு முதல்வர் எந்தப் பணத்தைச் செலவழிக்கிறார்! தங்கள் கட்சிப் பணத்தையா! 

#இந்திவேண்டாம்போடா! என்று சொன்னவர்கள் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறவர்கள் தங்கள் தொகுதியில் தேர்தல் நேரங்களில்  பிரச்சாரத்திற்காக மட்டும் இந்தியில் எதற்குப் போஸ்டர் அடிக்கிறார்கள்! இவர்கள் பள்ளியில், குறிப்பாக #ஸ்டாலின்மகள்பள்ளியில்இந்தி மொழி பாடம் கற்று தரப்படுகிறது.

அது போக இந்தி தெரிந்தவர்கள் தான் திமுகவில் எம்பி சீட் கேட்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இது என்ன விதமான பாணி என்று தெரியவில்லை! 

இதேபோல்தான் #கலைஞர் 1970 களின் துவக்கத்தில் #மாநிலசுயாட்சி வேண்டும் என்று தென் மாநில முதல்வகளின் கூட்டம் ஒன்றைக் கூட்டி இருந்தார். போக காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சென்னைக்கு அழைத்து நாம் அனைவரும் இந்த மாநில சுயாட்சி விவகாரத்தில் ஒன்று போல் பேச வேண்டும் என்று
 பிரேணனை செய்தார்! அதில் வேடிக்கை என்னவென்றால் பின்னாட்களில் ஜனாதிபதியான #பிரணாப்முகர்ஜி கூட காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து #பங்களாகாங்கிரஸ் என்ற ஒரு கட்சியைத் துவக்கி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஏறக்குறைய 54 ஆண்டுகள் ஆகிவிட்டது மாநில சுயாட்சி வாங்கி விட்டார்களா! இல்லையே! அன்றைக்குக் காங்கிரஸ் அல்லாத மாநிலத் தலைவர்கள் எல்லாம் சென்னையில் வந்தது கூடித்தான் இருந்தார்கள். ஒன்றும் நடக்கவில்லையே!. 

அதேபோல் கர்நாடகாவில் #ராமகிருஷ்ணஹெக்டே  இதேபோல சுயாட்சிக் கோரிக்கைகளை வைத்து பெங்களூரில் ஒரு கூட்டம் நடத்தினார். அதுவும் ஒன்றும் இல்லாமல் போனது. அதேபோல் #எம்ஜிஆரும் கன்னிமாரா ஓட்டலில் வைத்து தென் மாநில முதல்வர்களை அழைத்துப் பேசினார்! அதேபோல #என்டிஆர் விஜயவாடாவில் வைத்து காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை மாநில சுயாட்சிக் கோரிக்கைக்காக நடத்தினார். அதேபோல் மாநிலங்களுக்கு அதிக உரிமை கேட்டு கேரளாவிலும் பேசினார்கள். அதையே மறுபடியும் தமிழ்நாட்டில் இன்றைய முதல்வர் கூட்டி நடத்தி விட்டால் மாநில சுயாட்சி நிறைவேறி விடுமா! இல்லை இவர்கள்தான் இந்த கூட்டணியில் எவ்வளவு நாள் தாக்குபிடிப்பார்கள்!

இப்படி எல்லாம் மாநில உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்! தங்களுக்குள்ளே இருக்கக்கூடிய மாநிலப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு பிறகு தானே சுயாட்சிகள் பற்றிப் பேச வேண்டும்! முல்லையாறு உட்பட #நெய்யாறு வரை சுமார் #பத்துநதிநீர்ப்பங்கீடுகளைத் தங்களுக்குள் பேசி முடித்துக் கொள்ள வேண்டியது முக்கியம் இல்லையா!  உங்கள் நலக் கூட்டணியில் இருக்கும் சேட்டன் பிரனாய்ராயுடன் பேசி நீங்கள் தமிழகத்திற்கு இவ்வாறு நன்மை செய்ய வேண்டும் என்று பேசி முடிக்க வேண்டாமா! முதலில் கேரளாவுடன் தண்ணீர்க்கான  பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுங்கள்! பாவம் தமிழ்நாடு என்று தென்னிந்தியக் கூட்டணி சார்பாக அதைச் செய்ய மாட்டாரா கேரள முதல்வர்?

அதுபோக  பசுமைத் தீர்ப்பாயம் தவறு என்று தீர்ப்பு சொன்ன பிறகும் நேற்றுக் கூட #கேரளாவில் இருந்து  மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து தமிழக எல்லைகளில் இன்னமும் கொட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்! 

#கர்நாடகாவில் உங்கள் காங்கிரஸ ஆள் தானே #சீதாராமையா இருக்கிறார். அவரிடம் சுமுகமாகப் பேசி 
#காவேரிப்பிரச்சனை #தென்பெண்ணைப்பிரச்சனை #ஒகேனக்கல்பிரச்சனைகளைத் தீர்த்து தமிழகத்திற்குத் தண்ணீர் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
பிறகு தென் மாநில முதல்வர்கள் என்கிற பெயரில் எதற்குக் கூடுகிறீர்கள்! ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்காகக் கூடுகிறீர்களா? இல்லை நாட்டு நலனுக்காக மக்களுக்காகக் கூடுகிறீர்களா?

இந்த மொத்த கூட்டமும் தமிழக முதல்வர் ஸ்டாலினுடைய விளம்பரத்துக்காகத்தான்  அல்லது அவர் ஆட்சியை தக்க வைக்கத்தான் பயன்படுத்தப்படுகிறது இல்லையா!

தமிழக எம்பிக்கள் இங்கிருக்கும் போது #இந்திஎதிர்ப்பு, #தொகுதிமறுசீரமைப்பிற்குஎதிர்ப்பு ,என்று ஒரு பேச்சு! டெல்லிக்குச் சென்றால் அங்கே பிஜேபி அமைச்சர்களுடன் தொடர்புகள்! இதற்கு உதாரணம் முதல்வரின் தங்கச்சி #கனிமொழி முதலாவது இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பிஜேபி அமைச்சர்களை (அன்றைக்கு உயிருடன் இருந்த அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் தான் அந்த உபயத்தை செய்தார்.) பெரிய type தனியாக பங்களா வீடு ஒன்றை வாங்கிக் கொண்டார். மூன்று தடவை எம்பி ஆக இருந்தவர்களுக்கு எல்லாம் பெரிய வீடு கொடுக்க மாட்டார்கள். வைகோ இப்போது ஆறுவது முறை எம்பி ஆன பின் தனி பங்களாவில் இருக்கிறார். கனிமொழிக்கு மட்டும் விதிகளை மீறி எப்படி தனி பங்களாவில் பத்து வருட முன்பே கிடைத்து எப்படி⁉️பாஜக அமைச்சரின் நட்பு…..
இப்படியான பழக்க வழக்கங்கள் எல்லாம் அங்கே இவர்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு எம்பிக்கள் தங்களுக்கு வேண்டிய காரியங்களுக்கெல்லாம் பேப்பரில் எழுதிக் கொடுத்து  டெல்லியில் சாதித்துக் கொள்கிறார்கள்.

இங்கே வந்து பாஜக மதவாதம் மதவாதம் ஒழிக என்று  சத்தம் போட்டுக் கொண்டு  அங்கே போய் நீங்கள் நன்றாக நாடாளுமன்றத்தை நடத்துகிறீர்கள் என்று பிஜேபிக்கு புகழாரம் சூட்டுகிறார்கள்! எதற்கு அந்தப்புகழாரம்! தங்களுக்கான காரியங்களைச் சாதித்துக் கொள்ள தானே! மத்திய அரசு என்றால் கிள்ளுக் கீரை போலப் தமிழகத்தில் வைத்து மட்டுமே பேசுவது. அங்கே போனால் சட்டியை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொள்வது!

#பிஜேபி பிஜேபி மதவாதம் என்று கத்திக்கொண்டு அங்கே போய் நிர்மலா சீதாராமனைச் சந்திக்கும்போது நீங்கள் சரியான முறையில் ஆங்கிலத்தில் ஒரு வீரப் பெண்ணாக ஜேன் ஆஃப் ஆர்க் போல நிதித் துறையில் புகழ்பெற்றிருக்கிறீர்கள் என்று வாழ்த்துவது! அப்புறம் இங்கே வந்த பிறகு அதே  #நிர்மலாசீதாராமனை பிராமணியப் பெண் ஐயர் என்று சாடுவது! ஊறுகாய் மாமி என்னையா உங்களுடைய நாடகம்!  அதுதான் கேட்கிறேன்!நீங்கள் தென் மாநில முதல்வர்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்! உங்கள் விளம்பரத்திற்காக உங்கள் மாநிலங்களில் உங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையாவது  எதிரிபடுத்திச் சொல்ல வேண்டும்  என்பதைத் தவிர இதில் வேறு என்ன நோக்கம் இருக்கிறது?!

கேரளாவில் “#எம்பரான்” என்று ஒரு திரைப் படம் எடுத்திருக்கிறார்கள்! அதற்கு எதிர்வினை வைத்தால் தப்பு என்று சொல்கிறார் #பினாராய்விஜயன்! அதில் எதற்கு #முல்லைப்பெரியாறு பிரச்சனையை மறைமுகமாக் கொண்டு வருகிறார்கள்!? அதற்கு ஏதாவது தமிழ்நாட்டில் இருந்து அறிக்கை விட்டீர்களா!? கேரளா மூலம் தமிழ்நாட்டுக்கு அனேகப் பிரச்சனைகள் இருக்கிறது! அட்டப்பாடி முதற்கொண்டு சில பகுதிகளில் ரேஷன் கார்டுகள் எல்லாம் கொடுக்கிறார்கள்! அதற்கு ஏதாவது நீங்கள் செய்யப் போகிறீர்களா! கேட்கப் போகிறீர்களா!? அதேபோல் ஆந்திராவின் தெலுங்கானா பகுதிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை! அதைக் கேள்வி கேட்டு இருக்கிறீர்களா!?

இதையெல்லாம் விட்டுவிட்டு தென் மாநில கூட்டணி என்கிற பேரில் முதல்வர்களை வைத்து பேசி க்கொண்டு மக்களைக்  கண்துடைப்பு செய்கிறீர்கள்! அந்த கூட்டத்தில்  ரெவல்யூஷன் படி ஒரு தீர்மானமும் உறுதியாக இதுவரை எடுக்கப்பட இல்லை! மாநிலங்களுக்கான பிரச்சினைகளுக்கு இதுவரை எத்தனை நீதி விசாரணைகள் போட்டும் தாவாக்கள் அளித்தும் இதுவரை அதற்கான உறுதியான நடவடிக்கைகள் இருக்கிறதா!?

அதையெல்லாம் முதலில் தீர்மானித்து நிறைவேற்றிவிட்டு பிறகு இந்தி எதிர்ப்பு மாநில சுயாட்சி என்றெல்லாம் பேசுங்கள்!? ஏறக்குறைய உங்கள் கோஷங்களின் மூலம் இந்தியை விரும்பிப் படிப்பவர்களை கூடக் கெடுத்து விட்டீர்கள்! 1960 -70 ஜெனரேஷன்களை இப்படித்தான் நீங்கள் வெகுவாகப் பாதித்திருக்கிறீர்கள்! மாநில சுயாட்சியா! உங்கள் சுய லாபமா!? பதில்ச் சொல்லுங்கள்! கட்டுச் சோற்றுக்குள் எலியை வைத்துக்கொண்டு சுமந்து போகும் கதை தான்! கட்டிய  மூட்டையில் கோலிக் குண்டுகள் சளசளக்கத்தான் செய்யும்!

மறுபடியும் நீட்டை  திமுக பேச ஆரம்பித்து விட்டது. 2021 இல் ஆடசிக்கு வந்த உடனே நீட்டு, மது விலக்கு முதல் கையெழுத்து என்றார்கள். கடந்த நான்கு வருடமாக கையெழுத்து ஆக வில்லை. ஏமாற்றம்தான் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மறுபடியும் மக்கள் முட்டாள்கள் என்று நினைத்து திரும்பவும் ஏமாற்ற நீட்டை பேச ஆரம்பித்து விட்டனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்து "நீட் தேர்வு ரத்து" என்ற ஒரே மாவை சளைக்காமல் 4 வருடமாக அரைத்துக் கொண்டிருக்கும் திரு.@mkstalin -இன் நீட் நாடகம் இனியும் தமிழக மக்களிடம் எடுபடாது!

#நீட் #இந்திதிணிப்பு #hindi
#neet2025
#DMKFailsTN
#stalin
#திமுக
#தொகுதிமறுவரைறை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-4-2025


Wednesday, April 9, 2025

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*... ( *நான் பார்த்த அரசியல்*)

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*... 
( *நான் பார்த்த அரசியல்*)

" நாம் ஒருபோதும் செய்ய விரும்பாதவற்றைச் செய்து கொண்டும், நமக்கு விருப்பமில்லாதவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டும், நமக்கு விருப்பமில்லாத ஒரு தொழில் அல்லது வேலையில் இருந்து கொண்டும் வாழும் இந்த வாழ்க்கையை வாழ்ந்தால் என்ன? வாழா விட்டால் என்ன?

ஆனால் தன்னுடைய பணி இன்னதென்று கண்டு கொண்டவனே செல்வந்தன் ஆவான்.

தன்னுடைய பணியில் ஒரு நிறைவை உணரத் தொடங்குகிறவனே பெரிய செல்வந்தன் ஆவான்.

அந்நிலையில் மொத்த வாழ்க்கையுமே ஒரு வழிபாடாகி விடும்."
•••

*சங்கி வந்து விடுவான் ஜாக்கிரதை ! என குரல்*

திமுகவின் ஊழல் அரசியலையும் குடும்ப அரசியலையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினால் சகோதரர்கள் சொல்லுகிறார்கள் அப்படியெல்லாம் பேசக்கூடாது சங்கி வந்து விடுவான் என்று

என்னிடம் சொல்வதை விட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திடம் சொல்லுங்கள் 

உங்கள் குடும்பத்தை தவிர வேறு யாரையாவது திமுக தலைமைக்கு கொண்டு வாருங்கள் சங்கிகள் இனிமேல் வாரிசு அரசியலைப் பற்றி பேச மாட்டார்கள் என்று !

இதுவரை ஊழல் செய்தது போதும் இனிமேலாவது ஊழல் செய்யாமல் இருங்கள் சங்கிகள் இனிமேல் நம்மை பேச மாட்டார்கள் என்று ! 

சங்கிகள் யோக்கியமா இல்லையா என்பதை பற்றி விவாதம் பிறகு வைத்துக் கொள்ளலாம் நாம் முதலில் நேர்மையாக இருப்போம்

குற்றம் செய்கிறவனை வேண்டாம் என்று சொல்ல மாட்டீர்கள் ஆனால் குற்றம் செய்யாதே என்று சொன்னால் அது ஆபத்து என்கிறீர்கள்

திராவிட இயக்க கொள்கைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நாம் எதுவும் சொல்லக்கூடாது ஆனால் திராவிட இயக்க கொள்கைகளை பயன்படுத்தி ஒரு குடும்பம் கொள்ளை அடிக்கலாம் 

இது என்ன நியாயம் ?... 

அண்ணாவிற்கு பின்னால் அண்ணாவின் குடும்ப வாரிசாக இல்லாத கருணாநிதி திமுகவை சிறப்பாக வழி நடத்தினார் எம்ஜிஆருக்கு பின்னால் எம்ஜிஆரின் குடும்ப வாரிசாக இல்லாத ஜெயலலிதா அதிமுக கட்சியை வலுவாக்கினார்

ஜெயலலிதாவை எதிர்க்க முடியாமல் திமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது மத்தியில் திமுக ஆட்சி இருக்கும் போது தான் நீட் கொண்டுவரப்பட்டது

எல்லா கட்சிக்கும் சோதனை காலம் வரும் அந்தக் கட்சிக்குள் வலிமையான தலைவர்கள் இருப்பார்கள் அவர்கள் அந்த கட்சியை முன்னெடுத்து செல்வார்கள்

வாரிசுகளால் தான் கட்சியை நடத்த முடியும் என்ற ஒரு மோசமான கழிசடையான சிந்தனை அருவருக்கத்தக்கது

 அதுவும் திராவிட இயக்க சிந்தனையாளர்கள் இதை சொல்வது வெட்கக்கேடானது 

அண்ணாவின் பெரியாரின் தம்பிகள் என்று சொல்வதற்கு அவர்களுக்கு எந்த யோக்கிதையும் இல்லை

மேலும் நியாயம் பேசுகிறார்கள் 

கட்சியும் தலைமையும் ஏற்றுக் கொண்டார்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார்கள் 

பாஜகவை ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்குகிற கட்சி என்கிறீர்கள் அவன் யார் கட்டுப்பாட்டில் இயங்கினால் உங்களுக்கு என்ன அந்தக் கட்சிக்காரனும் மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் தானே அதைப் பற்றி விமர்சனம் எதற்காக செய்கிறீர்கள் என்று உங்களைப் போல நான் கேட்க மாட்டேன்

கட்சியின் தலைமை தன் வாரிசை விரும்புகிறது என்றால் கட்சியில் உள்ளவன் தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள வாரிசை தூக்கி கொண்டாடுவான்

ஒரு கட்சி தலைமைக்கு யார் வந்தாலும் மக்கள் வேறு வழியில்லாமல் அந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் வாரிசு அரசியலைக் கொண்டு வருகின்ற கட்சியை நிராகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்னும் மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது

ஒரு காலத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய திராவிட இயக்கங்கள் இன்று சுயநலமாக போய்விட்ட காரணத்தால் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்

மாநில உரிமைகளை காப்பாற்ற போராடும்போது வாழ்த்துவோம் வாரிசு ஊழல் அரசியலை எதிர்ப்போம்

இதை நான் செய்யவில்லை என்றால் இன்னொருவனிடம் திராவிட இயக்கம் பலியாகும்

இதற்காக எனக்கு பெரிய கூட்டம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை 

பகத்சிங் பத்து பேரோடு தான் போராடினான் அவன் வெற்றி பெற முடியாவிட்டாலும் கோடிக்கணக்கான மக்களிடம் உணர்வுகளை ஊட்டி விட்டு செத்துப் போனான் அவன் செத்துப் போன பிறகு வெற்றி தேடி வந்தது அவன் தியாகத்தை யாராலும் மறந்து விட முடியாது

விதைப்பது என் வேலை 
அறுவடை என் அடுத்த தலைமுறைக்கு…..
அவ்வளவுதான்.

#ksrpost
9-4-2025.


Monday, April 7, 2025

#*பிரதமர் மோடி இலங்கை பயணம்*

#*பிரதமர் மோடி
இலங்கை பயணம்*
————————————
இலங்கைக்கு அரசுப் பயணமாகவும் சென்ற பிரதமர் மோடி அவர்கள் அங்கு  பல தரப்பினரையும் சந்தித்துள்ளார். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண ஈழத் தலைவர்களையும் சந்தித்துள்ளார். அதேபோல் இந்திய வம்சாவளியான தோட்டத் தொழிலாளிகள் அதாவது மலையக தமிழர்களையும் சந்தித்துள்ளார்!
அவர்களது வீடுகளுக்கான இந்திய உதவி திட்டம் நடைபெற்று வருகிற வேளையில் அவை என்ன நிலையில் இருக்கிறது என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டார். 

இலங்கை அதிபர் அனுராவிடம் வடக்கு கிழக்கு மாகானக்கான அதிக அதிகாரங்களையும் உரிமைகளையும் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். Indo Srilanka accord 1987- 13th amendment)ஜனநாயக ரீதியான தேர்தல்களை முறையாக நடத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு நிலைத்த ஆட்சி அமைப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்! அனுரா அவர்களும் ஆவண செய்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் தமிழர்களின் இன அழிப்பு குறித்தான சர்வதேச நம்பகமான சுதந்திரமான விசாரணை, சுய நிர்ணயம் உரிமைபடிபொது வாக்கு எடுப்பு Referandum ….. 2009 இல் கானாமல் போனவர்கள் , கைது செய்ய பட்டவர்கள், தமிழர்களின் நில மீட்பு, தமிழ் விதவைகளின் மறு வாழ்வு, சீனா ஆதிக்கம் என சில கோரிக்கைகள்…. கச்சத்தீவை பற்றி.. என்னவென்று தெரியவில்லை.

ஆனால், மோடி பயணத்தில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அங்கே உள்ள இந்துக் கோயில்கள் பாதுகாப்பு அதற்கானபுனரமைப்பு சீர்திருத்தங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி மறுபடியும் அவர்களின் வழிபாட்டு உரிமையை நல்ல விதமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதையும் அனுராவிடம் சொல்லியதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த நல்லுறவுகள் அதன்படி இருநாட்டுப் புரிதல்கள் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தங்கள் ஒருபுறம் இருக்க ஒரு 700 இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே மிகவும் புதிராக இருக்கிறது!

அது ஒருபுறம் இருக்க ஏறத்தாழ இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையே ஏழு ஒப்பந்தங்கள் நிறைவேறி உள்ளன. இந்த ஒப்பந்தங்களால் இருநாட்டு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இலங்கையில் சீனாவின் தலையீடு குறித்த இந்தியாவின் கவலையும் தீர்க்கப்பட்டு புதிய புரிதல்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருக்கிறது! இந்தியாவின் ஆதரவின்றி இலங்கையின் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வழியில்லை என்பதை அனுராவும் புரிந்து கொண்டிருக்கிறார். அதாவது சீனர்களின் மூலதனச் சுரண்டலுக்கு பதிலாக  அண்டையில் உள்ள பெரிய நாடான இந்தியாவின் மனிதாபிமான உதவியே முக்கியமானது என்பதாக இந்தப் பயணத்தில் முக்கியமான ஒரு புரிந்துணர்வு நிறைவேறி இருக்கிறது.

ஆனாலும் இலங்கையில் இந்தியா மீதான எதிர்ப்பு  கொண்ட விஷமப் பிரச்சாரகர்கள் இந்த ஒப்பந்தத்தை விமர்சனமும் செய்வார்கள்!

அவை ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைக்கு இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார அழுத்தங்கள் விலை உயர்வு பல்வேறு பிரச்சனைகள் செயலாக்க மந்தங்கள் அனைத்து தேசிய மக்களுக்குமான பற்றாக்குறை  யாவற்றையும்  மனதில் கொண்டு அனுரா இந்திய ஒப்பந்தத்தை நல்வழியில் நடத்திச் செல்வார் என்பதாக எதிர்பார்ப்பு இருக்கிறது!
மோடியின் இந்த பயணம் இலங்கைக்கு சில விடயங்கள் திருகோணமலை மற்றும் சம்பூர் மின் உற்பத்தி, அனுராதாபுரம் ரயில் வழி என நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டு விட்டது.

அதலிலும் முக்கியமானது பாதுகாப்பு மற்றும் பொருளாதார பிரச்சனைகளைக் கையாள்வதில் இரு நாடும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதற்கான அச்சாரம் கையெழுத்து ஆகியுள்ளது! இந்த பாதுகாப்பு எனபது எப்படி சரியாக இருக்கும். சீனாவின் உதவி இலங்கைக்கு இருக்கும் பட்சத்தில் நமக்கு சரியாக இருக்கமா? சில நண்மைகள்…. சில விடை அற்ற விடயங்கள் உள்ளன.

மோடி இலங்கை சென்றபோது மிக மிக நுணுக்கமான தந்திரோபாயங்களை மேற்கொண்டார், எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சரியாக சென்று புத்த மடாலயத்தின் தலமை குருவினை சந்தித்து ஆசிபெற்றுகொண்டு , ரயில் போக்குவரத்துக்கு அடிக்கல் நாட்டிவிட்டு திரும்பிவிட்டார்

அனுராதபுரம் பக்கமே சிங்கள அரசர்களுக்கும் சோழபேரரசுக்கும் இடையே நடந்த  போரின் அடையாளங்கள் உள்ளன .அங்கிருந்து சற்று தூரத்தில் சோழன் தலைநகர் போல் விளங்கிய பொலனறுவ இன்று கன்னட ஹம்பி  மாதரியே இடிபாடுகளுடன் உண்டுஅனுராதபுரம் தொனமையான இடம். மதுரை, காஞ்சி போல  பழமையானதுஅங்கிருக்கும் கயா போதிமரத்தின் கிளையினை போல் பழமையானது எல்லாளன் நினைவிடம்.
கிமு முதலாம் நூற்றாண்டாக இருக்கலாம் அசோகரின் புத்தமதம் சங்க மித்திரை போன்ற பிரதிநிதிகள் மூலம் இந்து தீவான இலங்கையின் தென் பகுதியில் வளர்ந்தது.

அன்று இலங்கையில் சோழமன்னன் வம்சத்தில் ஒருவன் ஆண்டான், அவனே மனுநீதி சோழன் என்றும் சொல்வதுண்டு, அவன் பெயர்தான் எல்லாளன் என்கிறார்கள்.இவர் சிங்கள மக்களோடு அன்பு காட்டி நட்புடன் இருந்தார் என்பதும் சொல்லப்படுகிறது.

அப்படிபட்ட எல்லாளன் சிறப்பாக ஆண்டுகொண்டிருந்தபொழுது, தென்னிலங்கையில் துட்டகாமன் அல்லது கைமு எனும் சிங்களவன் தோன்றினான், அவன் தந்தை காகதீசன் தாய் விஹாரமகாதேவி.இவன் தென்னிலங்கை துறைமுக ஹம்பாதோட்டா பக்கம் சார்ந்தவன்.இந்த விஹாரமகாதேவிக்கு எல்லாளனும் அவன் இந்து ராஜ்ஜியமும் பிடிக்கவில்லை.துட்டகாமன் பிறந்தது, துஷ்ட செயல்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் செய்ததால் துஷ்ட காமினி ஆயிற்று.தனக்கென பெரும் அடியாள்படை கொண்டு தீமிரில் அட்டகாசம் செய்த காமன் எல்லாளனை வீழ்த்த கிளம்பினான், ஆனால் தந்தை எல்லாளன் நல்லவன் எனவும் அவனை வெல்லமுடியாது இப்போர் அவசியமில்லை எனவும் சொன்னார், காமினி கேட்டான் இல்லை.தந்தை மகன் மோதலில் துட்ட காமன் காட்டுக்கு விரட்ட்டபட்டான், தன் அவமானத்துக்கு காரணம் எல்லாளன் என பொருமிகொண்டிருந்தான்.தந்தை மரணத்துக்கு பின் தாய் அவனை மன்னனாக்கி எல்லாளனுடன் மோத தூண்டிவிட்டாள்

அனுராதபுரம் கோட்டை அருகே நடந்தபோரில் எல்லாளன் துட்டகாமனின் படைகளை நொறுக்கிபோட்டான், தந்திரகார காமினி எல்லாளனை ஒற்றைக்கு ஒற்றையாக போரிட அழைத்தான்

எல்லாளனுக்கு அப்பொழுது வயது 75 இருக்கலாம், துட்ட காமனுக்கு 30 வயது இருக்கும் இது முறையற்ற போர் என்பதால் எல்லாளனை அவன் மந்திரிகள் தடுத்தார்கள்ஆனால் யுத்த அழைப்பை நிராகரிப்பவன் உண்மையான வீரன் அல்ல என தனியாக மோத சென்றான் எல்லாளன்
இருவரும் யானை மேல் அமர்ந்து போர் செய்தார்கள், யுத்தவிதியினை மீறி எல்லாளன் யானையினை விழவைத்து அப்பொழுது சரிந்த எல்லாளனை கொன்றான் துட்ட காமினி

யாராலும் கொல்லமுடியா எல்லாளனை துட்டகாமன் வென்றவுடன் அவன் பெரும் வீரனாக கொண்டாடபட்டான், சிங்களரின் தனிபெரும் தலைவனானான்

ஆனால் எல்லாளனை அவன் மதித்தான், மக்கள் ஆதரவு எல்லாளனுக்கு நிரம்ப இருந்தது , எல்லாளனுக்கு எல்லா மரியாதையும் செய்யவேண்டும் என கொந்தளித்தார்கள் அதற்கு கட்டுபட்டான் துட்ட காமன்

அனுராதாபுரத்தில் பெரிய சாமாதியை எல்லாளனுக்கு கட்டி அதை கடந்து செல்வோர் தலைகுனிந்தபடி காலணி அணியாமல் செல்ல வேண்டும் அது எல்லாளனுக்கான மரியாதை என அறிவித்து கல்வெட்டும் வைத்தான்
சமாதியும் கல்வெட்டும் இன்றும் அனுராதபுரத்தில் உண்டு

பின் துட்டகாமன் என்ன ஆனான் என்பது பற்றி வரலாறு இல்லை.இவை 2000 ஆண்டுக்கு முன்பு நடந்தவை, இவை எல்லாம் மகா வம்சம் நூலில் உள்ளது.

கிபி 1954ல் வேலுபிள்ளை எனும் தமிழர் தன் மனைவி பார்வதியோடு அனுராதாபுரம் வருகின்றார் அவருக்கு 3 குழந்தைகள் இருந்தார்கள், அவர் அரசு நில அளவையாளர் என்பதால் அடிக்கடி பணிமாற்றம் உண்டு அப்படித்தான் அனுராதாபுரம் வந்தார்

அவர் மனைவி பார்வதியம்மாளுக்கு எல்லாளன் சமாதிக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் இருந்தது, அந்த அனுராதபுரத்தில் அவர் கருசுமந்தார்
அங்கு உருவான கரு யாழ்பாணம் வல்வெட்டிதுறையில் பிறந்தது, அதற்கு துரை என பெயரிட்டு அழைத்தார்கள் பின் அவன் பிரபாரகன் என்றானான்

பிரபாகரன் வடக்கே வளரும் பொழுது தெற்கே அம்பாதோட்டையில் 10 வருடம் முன்பாகவே ஒருவன் தன் தம்பியரோடு வளர்ந்து வந்தான் அப்பொழுது அவன் பெயர் மகிந்தா ராஜபக்சே

பிரபாகரன் எல்லாளன் போல மாபெறும் தலைவரானான், யாராலும் அவனை அடக்க முடியவில்லை சிங்களம் இந்தியாவிடம் சரணடைந்தது, இந்திய அமைதிபடை, ராணுவமும் அவனை பிடிக்கமுடியவில்லை.

உண்மையில் தொட்டுவிடும் தூரத்தில் தனிநாடு அடையும் அளவு மன்னர் போல வளர்ந்தான் பிரபாகரன், காலம் இந்திய சோனியா காங்கிரசின் குளறுபடியால் அவன் தோற்றான்.எல்லாளன் என அவன் போற்றபட்டான், அவனிடம் எல்லாளன் படைபிரிவும் இருந்தது

அப்பக்கம் துட்(ஷ்)டகாமன் போல வளர்ந்து வந்தார் ராஜபக்சே, எல்லாளன் துஷ்டகாமனுக்கு வாய்ப்பளித்தது போலவே மகிந்த ஆட்சிக்கு வரவும் பிரபாகரன் உதவினார்

அதில் இருந்து துட்ட காமன் என கொண்டாடபட்ட மகிந்த ராஜபக்சே, 2009ல் எல்லாளனை வீழ்த்திய துட்ட காமினி என அவருக்கு பெரும் பட்டமெல்லாம் தரப்பட்டது.

#பிரதமர்மோடிஇலங்கைபயணம்
#எல்லாளன்
#இலங்கையில்சோழர்கள்
#துட்டகாமன் 
#அனுராதபுரம்
#இந்தியாஇலங்கை
#indosrilankaaccord1987

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
7-4-2025.


Saturday, April 5, 2025

*இலங்கைக்குபயணம்செய்தஇந்திய_பிரதமர்களும், கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை*

*இலங்கைக்குபயணம்செய்தஇந்திய_பிரதமர்களும், கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை*

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை இலங்கைக்குச் செல்ல உள்ளார். இது அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணமாகும்.

தாய்லாந்து பயணத்தைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மோதி இலங்கைக்கு செல்ல உள்ளார்.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார் இந்தியப் பிரதமர் மோதி.

ஜனாதிபதி அநுர பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு தனது முதல் அரசு பயணத்தை மேற்கொண்டார்.

இந்தியா - இலங்கை உறவுகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வரலாற்று ரீதியான பிணைப்பு உள்ளது.

இலங்கைக்கு பௌத்தம் அறிமுகமாவதற்கு முன்பே, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே மத மற்றும் கலாசார ரீதியிலான உறவுகள் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

சமீபத்திய வரலாற்றைக் கருத்தில் கொண்டால், 1960 களில் இருந்து 65 ஆண்டுகளில் 8 இந்தியப் பிரதமர்கள் இந்தத் தீவுக்குப் பயணம் செய்துள்ளனர்.

1962 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இலங்கைக்குப் பயணம் செய்தார். பின்னர் 1973 ஆம் ஆண்டு இந்திரா காந்தியும் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையிலான சிறந்த உறவுக்கு வரலாறு சாட்சியாக உள்ளது.

கச்சத்தீவின் உரிமை தொடர்பான பிரச்னை தீர்க்கப்பட்ட விதம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி இலங்கையின் பிரதமராக இருந்த பண்டாரநாயக்கவுக்கும் , இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவின் உரிமையை இலங்கை பெற்றது.

1979 ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியப் பிரதமர் மொராஜி தேசாயும்,பின்னர் 1987 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கைக்குப் பயணம் செய்தனர்.

ராணுவ அணிவகுப்பின் போது நடந்த தாக்குதல் சம்பவம், ராஜீவ் காந்தியின் இலங்கைப் பயணம் வரலாற்றில் இடம்பெறக் காரணமானது.

1991 இல் - நரசிம்ம ராவ், 6வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும், 1998 இல், இந்தியப் பிரதமர் வாஜ்பாய்10வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும் இலங்கைக்குப் பயணம் செய்தனர்.

பின்னர் 2008 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 15வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கு பயணம் செய்தார்.

அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு பயணம் செய்தார்.

நான்கு இந்தியப் பிரதமர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தின் பதிவுகளின்படி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள்:

நேரு - கொத்தலாவல ஒப்பந்தம் - 1954.

இந்திய அரசியலமைப்புப் பிரிவு 8 இன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்ட தேதியில் (ஜனவரி 26, 1950) இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமையைப் பெற அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள இந்திய தூதரகங்களில் இந்தப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அந்த நேரத்தில் இலங்கையில் வாழ்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களை தங்க வைப்பதற்கு போதிய இடம் இல்லை

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு குறுகியதாக இருந்ததால், 1949 ஆம் ஆண்டின் 03 ஆம் எண் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களுக்கான காலக்கெடுவை பூர்த்தி செய்யத் தவறிய இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இந்த விஷயத்தில் தீர்வு பெறுவதற்காக தொடர்ந்து காத்திருக்க வேண்டியிருந்தது.

இது ஒரு பெரிய சிக்கலாகத் தொடர்ந்தது. இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ குடியுரிமை இல்லாமல் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்து இலங்கையில் தங்கியிருந்தனர்.

அந்தப் பிரச்னையைத் தீர்க்கும் நோக்கில், 1954 அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஒரு மாநாடு நடைபெற்றது.

குடியுரிமைக்காக காத்திருந்த மக்கள் இலங்கை குடிமக்களாக அங்கீகரிக்கப்படும் வரை இந்திய குடிமக்களாகவே இருப்பார்கள் என்று இலங்கை தூதுக்குழு கருதியது.

இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் விரும்பினால் இந்திய குடிமக்களாகப் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக இந்தியக் குழு ஒப்புக்கொண்டது.

இலங்கைக் குழுவிற்கு அப்போதைய பிரதமர் சர் ஜான் கொத்தலாவல தலைமை தாங்கினார்.

இந்தியக் குழுவிற்கு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினார்.

இரு பிரதமர்களும் 1954 அக்டோபர் 10 அன்று டெல்லியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் நேரு-கொத்தலாவல ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் இந்த ஒப்பந்தம் பிரச்னையை முழுமையாக தீர்க்கவில்லை.

 
கச்சத்தீவு ஒப்பந்தம்:

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவுகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

இலங்கை பிரதமர் பண்டாரநாயக்க - இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே ஜூன் 26, 1974 அன்று கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவின் உரிமையை இலங்கை பெற்றது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் எல்லை பிரிக்கப்படும்போது அங்குள்ள கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டு இந்திய-இலங்கைத் தலைவர்கள் கையெழுத்திட்ட மற்றொரு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவைச் சுற்றி மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்:

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இலங்கைக்குள் சுதந்திரமாக நுழைந்த இந்தியர்களின் எண்ணிக்கை, அதில் சட்டவிரோதமாக நுழைந்து உள்ளூர் மக்களுடன் இணைந்தவர்களுடன் சேர்த்து, லட்சக்கணக்கானதாக இருந்தது.

இந்த தேசிய சிக்கல் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

1964 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டதாக குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, 1964 அக்டோபர் 30 ஆம் தேதி முடிவடைந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் இந்தோ-இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் நாடற்றவர்களின் எண்ணிக்கை 30.10.1964 நிலவரப்படி, 975,000 என மதிப்பிடப்பட்டது.

பின்னர் 300,000 நபர்களுக்கு இலங்கை குடியுரிமையும் 525,000 நபர்களுக்கு இந்திய குடியுரிமையும் வழங்க இருதரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டது.

1974 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் அடிப்படையில் , மீதமுள்ள 150,000 மக்களை இரு நாடுகளுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இலங்கைக்கான எண்ணிக்கை 375,000 ஆகவும், இந்தியாவிற்கான எண்ணிக்கை 600,000 ஆகவும் மாற்றப்பட்டது.

1987 ஆம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம்:

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1987 ஜூலை 29 அன்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில், நாட்டில் எதிர்ப்பு கிளம்பியதற்கு மத்தியிலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கை உள்நாட்டுப் போரின் ஒரு திருப்புமுனையாக இது கருதப்பட்டது.

அனைத்து மிதவாத, ஆயுத குழு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீதும் விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமற்ற தடையை அறிவித்து அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட சூழலில், அமிர்தலிங்கம், சிவசித்தம்பரம் மற்றும் சம்பந்தன் போன்ற மிதவாத தமிழ்த் தலைவர்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில், அதிகரித்து வரும் ராணுவ சூழலை முடிவுக்கு கொண்டு வந்து, இந்தியாவின் ஆதரவுடன் இலங்கையில் தமிழ் தேசியப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வை எட்டுவதே அமிர்தலிங்கம் மற்றும் சம்பந்தன் போன்ற தலைவர்களின் முக்கிய முயற்சியாக இருந்தது.

இதற்கிடையில், பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனா கையெழுத்திட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் போர் நிறுத்தம் தொடங்கியது. போர்நிறுத்த அடையாளமாக புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்ததன் மூலம், நாட்டிற்கு வெளியே இருந்த தமிழ் தலைவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.

மேலும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரதமர் மோதியின் ஆட்சிக்காலம்
சமீபத்தில், 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் கீழ் செயல்படும் பிரதமர் மோதியின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ளன.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் போது இலங்கைக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கிய முதல் நாடாக இந்தியா விளங்கியது.

பின்னர், 2022-ஆம் ஆண்டில், இலங்கை அதன் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, அதற்குத் தேவையான எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவைப் பெற இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் மதிப்புடைய உதவியை வழங்கியது.

ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கைக்கு பிரதமர் மோதி பயணம் செய்தார். தாக்குதலுக்கு பிறகு, இலங்கைக்கு முதல் பயணம் மேற்கொண்ட ஒரு நாட்டின் தலைவராக மோதி விளங்கினார்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண அறிவுரைகளை வெளியிட்டிருந்த சூழலில், இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் பெற்றது.

2017 சர்வதேச வெசாக் விழாவின் விருந்தினர்
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்தார்.

மார்ச் 14, 2015 அன்று, நரேந்திர மோதி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்தார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மிக நெருக்கமான தொடர்பு பௌத்தம் என்று கூறிய இந்தியப் பிரதமர், இந்திய அரசு மற்றும் சமூகத்தின் இன்றியமையாத பகுதியாக பௌத்தம் மாறிவிட்டது என்றும், அது சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஹட்டன் நோர்வூட் பகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட டிக்கோயா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.

நரேந்திர மோதியின் முதல் இலங்கைப் பயணம் ஏன் சிறப்பு வாய்ந்தது?

மோதி இந்தியப் பிரதமாக தேர்வான பிறகு, 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்தார். இந்தியப் பிரதமர் ஒருவர் கடைசியாக இலங்கைக்கு பயணம் செய்தது சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு.

1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மீதான தாக்குதலுக்குப் பிறகு, இந்தியத் தலைவர்கள் குறைவாகவே இலங்கைக்குப் பயணம் செய்தனர்.

முன்னதாக, 2008 ஆம் ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங் சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மட்டுமே இலங்கைக்குச் சென்றார்.

2015 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் செய்த இந்தியப் பிரதமர் மோதி, அனுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மகா போதியையும் வழிபட்டார்.

இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு முதல் முறையாக பயணம் செய்தார் என்ற வரலாற்றுப் பெருமையும் கிடைத்தது.

யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுடன் கட்டப்பட்ட வீடுகளை இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு ஒப்படைக்கும் விழாவில், அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் இணைந்து கலந்து கொண்டார்.

- பிபிசி
#KSR post
5-4-2025


#Meeting with Honourable AP Deputy Chief Minister, Shri Pawan Kalyan Garu #ஆந்திராவின் துணை முதல்வர்

#Meeting with Honourable AP Deputy Chief Minister,  Shri Pawan Kalyan Garu  #ஆந்திராவின் துணை முதல்வர்  பவன்கல்யாண்  உடன்  சந்திப்பு  ——————...