Sunday, September 7, 2014

‘வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்’ புத்தகம் பாராட்டு


திருவாளர்கள் பொ.ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம் ஆகியோரின், பாண்டிய நாட்டு வரலாற்று மையம் வெளியிட்டுள்ள ‘வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்’ என்ற நூலை படித்தவுடன், ஆசிரியர்கள் சிரமப்பட்டு ஆய்வுகளையும், தரவுகளையும் திரட்டியுள்ளது தெரிகிறது. பாராட்டுக்கள்.




ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தோடும், அதன்பின் இராமநாதபுரம் மாவட்டத்தோடும் இருந்த கரிசல் மண்ணான விருதுநகர் மாவட்டம் பற்றிய வரலாற்று ஆய்வு படிக்க வியப்பாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் இந்நூலை படிக்க வேண்டும். திருவில்லிபுத்தூர், சாத்தூர், அர்ச்சுனாபுரம், திருத்தங்கல், செவல்பட்டி போன்ற பல ஊர்களின் வரலாற்றுச் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர், பாண்டியர், நாயக்கர் கால தரவுகள் யாவும் திரட்டப் பட்டுள்ளது. இந்தியாவின் வரலாறு என்றாலே தெற்கே இருந்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
                                                                                                        -
                                                                                                          கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

1 comment:

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...