Friday, September 19, 2014

மூதறிஞர் இராஜாஜியின் ‘சுயராஜ்யா’ ஏடு திரும்பவும் வெளிவருகிறது!

மூதறிஞர் இராஜாஜியின் ‘சுயராஜ்யா’ ஏடு திரும்பவும் வெளிவருகிறது!
-----------------------------------------------------------------------------------------------------------------



இராஜாஜியின் ‘சுயராஜ்யா’ ஆங்கில ஏடு, 34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 58 ஆண்டுகளாக வெளிவந்த சுயராஜ்யா ஏடு ஜனநாயகத்தில், அரசியல் உரிமைகளை நெறிகளை வாதாடுகின்ற ஏடாக இருந்தது. 2015 ஜனவரியிலிருந்து அந்த ஏடு திரும்பவும் வெளிவர இருப்பதாக செய்திகள் வருகின்றன. சுயராஜ்யா ஏடு, கல்கி நிறுவனத்திலிருந்து பரதன் வெளீயிட்டகம் அச்சடித்து அப்போது வெளியிப்பட்டது. சுதந்திரா கட்சியின் நடவடிக்கைகளும், அக்கால பிரபல எழுத்தாளர்களுடைய கட்டுரைகளும் அதில் இடம் பெற்றன. பண்டித நேருவின் கொள்கைகளை அவ்வப்போது சுயராஜ்யாவில் விமர்சித்ததும் உண்டு. எளிதான நடையில் புரிதல் ஏற்படும் வகையில் வெளிவந்த இந்த ஏடு திரும்பவும் உயிர் பெறுவதற்கு நாம் வாழ்த்துக்களைச் சொல்ல வேண்டும். இராஜாஜியின் கருத்துகள் ஒரு சிலருக்கு மாறுபட்டிருந்தாலும், அவர் எடுத்து வைத்த பிரச்சினைகள், வாதங்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

ஷோ கம்யூன் வாழ்வு…. என்றார். #polyamoryயும் #molecule எனும் சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship

ஓஷோ  கம்யூன்  வாழ்வு….  என்றார். #polyamoryயும் #molecule எனும்  சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship-என மே...