Friday, January 29, 2016

அசடு

காசியபனின் 'அசடு' திரும்ப படிக்கும்போது பல சிந்தனைகளை மனதுக்குள் உருவாக்கியது. பித்தன் என்று பிறரேச நின்றாய் என்ற பெருமாள் திருமொழியின் வாக்கோடு துவங்கும் இந்த படைப்பில் சில எதிரொலிகளும், மன ஒலிகளும் காண முடிந்தது.  இந்த படைப்பின் நாயகன் கணேசன் தேசாந்திரியாக, வெள்ளந்தி மனிதனாக இருப்பதும் இந்த கதையாடலின் போக்கும் பல உண்மைகளை உணர்த்துகின்றன.  சில அடிப்படை நோக்கங்களும் மதிப்புகளும், கண்ணியங்களும் இல்லாத சமுதாயத்தில் நல்லவர்கள் அசடாக தெரிவார்கள்.  தகுதியானவர்கள் தகுதியற்றவர்களாக தெரிவார்கள்.  குண்டர்களும், சமூக விரோதிகளும் நல்லவர்களாக வலம் வரும்போது என்ன செய்ய முடியும்? அது காலத்தின் கோலம்.   சில நேரங்களில் சில மனிதர்கள்.





No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்