Tuesday, January 17, 2017

எம்ஜிஆர்

எம்.ஜி. ஆரின் ராமாவரம் தோட்டத்தில் அவருடைய முழுவுருவ சிலை திறப்பு விழா மேடையில்  முதல்வர் ஓ . பன்னீர்செல்வமும் , சசிகலாவும் இருப்பதை பார்த்தேன்.

எம்.ஜி.ஆருடன் அறிமுகமாகி நெருங்கி பழகியவர்கள் யாருமே மேடையில் இல்லை  . பண்ருட்டி ராமசந்திரனோ , பொன்னையனோ , பி.எச். பாண்டியனோ , மதுசூதனன் போன்ற எம்.ஜி.ஆர் காலத்து ஆட்க்களை அமரவைத்து இருக்கலாம் .அப்படி விருப்பம் இல்லை என்றால் மூத்த தலைவராக இரா செழியன் அல்லது வேலுர் விஸ்வநாதனையாவது சிறப்பு அழைப்பாழராக அழைத்து இருக்கலாம் . விடுதலை புலிகள் பிரச்சனைகள் ஒட்டி எம்ஜிஆர்யேரடு நெருங்கிய அறிமுகமான எங்களை போன்றோர்களுக்கு குறையாக தெரிந்தது .எம்.ஜி.ஆருக்கு நன்கு அறிமுகமாகத சசிகலாவும், தீபாவும் எம்ஜிஆரின்  அதிமுகவை கைபற்ற நினைத்து தெரு சண்டை போடுபவர்களுக்கு முக்கியத்துவம் தருவது வெக்ககேடானது.

கர்நாடாவில் பிறந்து, ஒரு கிறிஸ்துவரை மணந்து , ஜெயலலிதா அவர்களால் புறக்கணிக்கப்பட்டு, இத்தனை நாட்களாக முகவரியே இல்லாத ஒருத்தர், இன்று திடீர் என்று தமிழக மக்களின் மேல் பாசம் பொங்குகிறது என்றால் ? அதே போல இத்தனை நாட்களாக ஜெயலலிதாவின் சொந்த உதவிக்கு , அவரின் வீட்டு விஷயங்களை பகிர்ந்துகொண்டு இருந்த ஒருத்தர், அவரின் குடும்பம் திடீர் என்று கிளம்பி தமிழகமே எங்களது என்று கூறும் நிலை!!. ஒன்றும் புரியலையே உலகத்திலே!!
.................
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! 
இருட்டினில் நீதி மறையட்டுமே! 
தன்னாலே வெளிவரும் தயங்காதே! 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!
..................
பதவி வரும் போது பணிவு வர வேண்டும்  துணிவும் வர வேண்டும் தோழா,,,

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...