Friday, January 20, 2017

பண்பாடு -கலாச்சாரம்

பண்பாடு -கலாச்சாரம் :
----------------------
பண்பாடு என்ற சொல் ரசிகமணி 
டி கே சி உருவாக்கினார்.பண்பாடு என்பது தமிழ்ச்சொல். கலாச்சாரம் என்பது தமிழ்ச்சொல்லன்று.பண்பு, பாடு என்ற சொற்கள் சங்க இலக்கியம் முதல் பயின்று வருகின்றன. பண்பு என்பதற்குக் குணம்,இயல்பு,முறை,வழக்கம் முதலிய பொருள்கள்;'பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுதல்'எனக் கலித்தொகை(133) கூறுகிறது. பாடு என்ற சொல்லுக்குப் பல பொருள்கள்: உண்டாதல்,நிலைமை,ஒழுக்கம்,
என பல பொருள்கள் உண்டு..ஆனால் தற்பொழுது பண்பாடு என்றால் ஒரு குழு,இனம் , மா நிலம் கொண்டொழுகும் பழக்க வழக்கம், தொன்றுதொட்டுப் பின்பற்றப்படும் வழக்கம்,வாழையடி வாழையாகப்பின்பற்றப்படும் நெறி என்பதைக் குறிக்கும். இந்த நெறிமுறைகள் பண்பாடாகும். நாகரிகம் என்பது பழக்கத்தின் வளர்ச்சியைக் குறிக்கும். நகரங்கள் வளர வளர உணவு, உடை,அணிகலன்கள்,கட்டடங்கள்,தொழில்,அறிவியல் கருவிகள், முதலியவற்றில் உண்டாகும் மாற்றங்கள் நாகரிகத்தின் அடையாளங்கள். நாகரிகத்தில் மாற்றம், வளர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருக்கும்..நகரங்கள் அழிந்தபின் இந் நாகரிகத்தின் இயல்பினை நாம் சிந்துவெளி நாகரிகம்,அரப்பா நாகரிகம்,மாயா நாகரிகம்,வைகை நாகரிகம்,பொருநை நாகரிகம் என அழைக்கிறோம்.

Culture என்ற சொல்லின் வேர் cultura என்ற லத்தீன் சொல். அதற்கு பண்படுத்துதல் என்று பொருள். Ager என்ற லத்தீன் சொல்லுக்கு நிலம் எனப் பொருள்.  இவை இரண்டும் சேர்ந்துதான் அக்ரிகல்சர் என்ற சொல் வேளாண்மைக்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. கல்சர் என்பது மனதைப் பண்படுத்துவது. அதனால்தான் பண்பாடு.

#பண்பாடு
#கலாச்சாரம்
#நாகரிகம்
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
20/01/17

No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...