Saturday, January 14, 2017

இலங்கை

அண்மையில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்குள்ளே இலங்கை மற்றும் இந்திய தூதரகங்கள் இணைந்து கூட்டமொன்றை நடாத்தி முடித்துள்ளன.
அந்த கூட்டத்திலே அறுபதிற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற கூட்டத்திலே இலங்கை அரசினால் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன.

#இலங்கையில் தற்போது இனங்களுக்கிடையே அமைதி நிலவுகிறது.
#புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.
மாவீரர்தினம் சுதந்திரமாக அனுஷ்டிக்கப்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை பாராளுமன்றத்திலே தமிழர் தரப்பே எதிர்கட்சியாக இருக்கிறது.
#மீள்கட்டமைப்பு பணிகளிலே இராணுவமே முன்னின்று பணியாற்றுகிறது.
இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த கணிசமான நிலப்பரப்பு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த அரசாங்கத்தை விடவும் தற்போதைய அரசானது தமிழர் விவகாரங்களுக்கு முக்கியத்துவமளித்துவருகிறது.
பொறுப்புக்கூறலுக்கான செயற்திட்டங்களை மேற்கொண்டிருப்பதால் அதற்கு தமக்கு வருகின்ற மார்ச் மாதத்திலிருந்து 18 மாதங்கள் தேவைப்படுவதாகவும் அதாவது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை கால அவகாசம் வழங்க வேண்டுமென்றும் அத்துடன் அதற்காக தமக்கு நிதியுதவிகள் வழங்கவேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்* —————————-  இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர...