Monday, January 16, 2017

சிந்தனைக்கு

சிந்தனைக்கு............
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் ?
-------------------------------------
விதியே விதியே தமிழ் சாதி என்ற பாரதியின் வரிகளை வேதனையோடு நினைத்து பார்க்க வேண்டிய நிலையில் தமிழ்ர்களாக நாம் இருக்கின்றோம் . 
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னின்று ஜல்லிக்கட்டை ஆந்திரத்தில்  நடத்துகின்றார் .அங்கு சேவல் சண்டையும்  நடக்கின்றது  , முதல்வரே பாரம்பரியமான சில்லாங்குச்சி , கோலி குண்டு  விளையாடுகின்றார் . வீர தீர செயல்களுக்கு ஆந்திர அரசு நிர்வாகமும் , ஆட்சியாளர்களும் மதிப்பளிக்கின்றனர் 

மைசூர் நகரில் நடக்கும் தசரா பண்டிகை விழாவில் யானைகள் பதறக்கூடிய அளவில் சக்திவாய்ந்த வெடிகள் வெடிக்கப்படுகின்றது . கேரள மாநிலம் திருச்சூர் நகரில் கொண்டாடப்படும் பூரம் திருவிழாவில் யானைகளுக்கு முன் பயங்கர வெடி சத்தத்தோடு வெடி வெடிக்கப்பட்டு யானைகள் மிரண்டு மதம் கொண்டு பல பேரை தாக்கி மிதித்த சம்பவங்களும் நடந்தும்;அதற்கு தடை ஏற்படாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள் . அங்கு எல்லாம் பீட்டாவின் குரல் எங்கே ? 
கேரள மக்கள் மத இன வேற்றுமையின்றி அனைவரும் கொண்டாட கூடிய திருவிழாவான ஓணம்  விழாவிற்கு பிரச்சினைவந்தபோது
விட்டுக்கொடுககாமல திருவிழாவை மிகுந்த போர்குணத்தோடு  கேரள மக்கள் நடத்தினார்கள்.

ஆனால் தமிழர்களின. கலாச்சார பண்பாட்டு குறியீடாக  சங்க இலக்கியங்களான  கலித்தொகை , புறநானூறு , பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் பாடப்பெற்ற ஜல்லிக்கட்டுவிற்கு தடை என்கிறார்கள் . தடையை எதிர்த்து கிளர்ச்சியோடு எழும் தமிழகத்து இளைஞர்களை காவல்த்துறை கொண்டு அடித்து விரட்டுகின்றது . ஆனால் தடையை உடைத்து ஜல்லிக்கட்டு நடந்தது மகிழ்ச்சியை தருகிறது . தமிழக மக்களின் பணத்தின் மூலம் தங்கள் வாழ்வை வளமாக்கிய சில நடிகர் நடிகைகள் ஜல்லிக்கட்டை எதிர்க்கின்றனர்.பீட்டா என்ற டீ சர்ட்டை போட்டுக்கொண்டு சமுக வலைதளங்களில் ஒரு நடிகை  ஜல்லிக்கட்டையும் தமிழர்களையும் ஏகடியம் செய்யும் வகையில் காட்சி தருகின்றார் . தமிழ் கலாச்சாரத்தை நோக்கி வினாவும் எழுப்புகின்றார் .   அந்தநடிகைநேற்றுவிளைந்தகாளான்.
தகுதியற்ற , தரமற்ற இப்படிப்பட்டவரை தமிழகம் கொண்டாடுலாமா ? பயந்து அஞ்சி பல்டியும் அடித்துவிட்டார் . அந்த நடிகை என்ன  மார்க்ஸியம்  , காந்தியம் பெரியாரியம் படித்தவரை போன்று ஆலோசனைகள் சொல்லும் நடிகைகளை தூக்கி சும்ப்பது மக்களாகிய நாம் தானே ? நேற்று முளைத்த இந்த நடிகையின் பெயரை சொல்லக்கூட இழிவாக இருக்கின்றது .  என்ன செய்ய ?  இந்த நடிகை எல்லாம் நமக்கு அறிவுரை  சொல்கின்ற நிலையை பார்த்தால் அது நமக்கு கேவலமாக இல்லை ? 
திரிஷா கருத்து சொன்னதுக்கு கோபப்படனுமா ??
இல்ல ....திரிஷாலாம் கருத்து சொல்ற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்களேன்னு கோபப்படனுமா ??

தமிழகத்தில் எத்தனையோ நேர்மையான எளிமையான அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்.நாம் ஏன் திரிஷா போன்றோர்களின் தறுதலைத்தனமாகபேச்சுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் .இது நமது குற்றம் தானே ? 

சமுகவலை தளத்தில்  அரிய கருத்துக்களை சொல்பவர்களின் பதிவுகளுக்கு விருப்பம்(Like )   தரமாட்டார்கள்.எனக்கு  தெரிந்த ஒருவர் ,பெயர்சொல்ல விரும்பவில்லை . அவர் ஒரு பெண் என்ற ஒரே காரணத்திற்காக  எந்த ஒரு ஆளமான கருத்துக்கள் எதுவும் இல்லாத அப்பெண்மணியின் முக நூல் பக்கத்திற்கு 3 லட்ச்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பு  விருப்பங்கள்   (Followers- likes)உள்ளன .சினிமா நடிகைகளுக்கு 10 முதல் 20 லட்சங்களுக்கு மேல் விருப்பங்கள்   (Followers likes)உள்ளது 

நல்லகண்ணு போன்ற எளிமையான நல்ல அரசியல் தலைவர்கள் சமுகவலைதளமான முகநூலுக்கு வந்தால்  150 விருப்பங்கள்   (Followers likes)கூட கிடைக்காது.

ஜெயலலிதா தோழியாக இருந்த சசிகலாவை முதல்வராக வரவேண்டும் என்கிறார்கள் . இன்னொரு புறத்தில் ஜெயலலிதா அண்ணன் மகள் என்ற காரணத்திற்க்காகவே  அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் எங்களை ஆள வேண்டும் என்று அவர் வீட்டின் முன் தினமும் மக்கள் கூடுகின்றார்கள் . சினிமா உலகில்  இருந்தாலே அவர் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் ஆசை வந்துவிடுகிறது .  இது  பைத்தியக்கார தனம் இல்லையா ? 

இப்படிப்பட்டவர்களுக்கு நாம் முன்னுரிமை அளித்த காரணத்தால் தான் ஜல்லிக்கட்டு,நதிநீர் பிரச்சினைகள் , மீனவர் பிரச்சினைகள் என  பல  உரிமைகள் இழந்து நிற்கின்றோம் . 

களப்பணி தியாகங்கள. எதுவுமில்லாமல் தெருவில் போகிறவர்களை எல்லாம் முதல்வராக வரவேண்டும் என்று அழைக்கும் கொடுமைகளுக்கு யார் காரணம் ? என்று மக்களாகிய நாம் சிந்தித்து பார்க்கவேண்டும் . இப்படி மக்களை முட்டாள்களாக ஆக்கி உணர்வற்றவர்களாக  மாற்றி விட்ட தொலைக்காட்சி தொடர்களும் , அர்த்தமற்ற தொலைக்காட்சி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலே  மக்கள் சிந்திக்க தொடங்கி விடுவார்கள் . திரிஷாக்களும் ,சசிகலாக்களும் ,ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாக்களும்  போன்றோர்களும் தலையெடுத்து ஆடுவதை தடுக்க மக்கள் சரியாக இருக்க வேண்டும் . ஓட்டுக்கு எப்போது  காசு வாங்கிணோமே அன்றே அடிப்படை நேர்மையும் , போர்குணமும் , மனஉறுதியும் போய்விட்டது . மக்களே சிந்தித்து சரியான நேர்வழிக்கு வாருங்கள் ! நம்முடைய சுயமரியாதையை காக்க நடிகர் -நடிகைகளையும்,தகுதியற்றவர்களையும் தாங்கி பிடிப்பதை புறந்தள்ளுவோம் !
#தமிழகஅரசியல்
#ஜல்லிக்கட்டு
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
16/01/17

No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...