Wednesday, January 18, 2017

சந்திரா பாபு நாயுடு,

தடையை மீறி ஆந்திராவில் ஜல்லிக்கட்டையும், சேவல் சண்டையை நடத்திய சந்திரபாபு நாயுடு உன்மையான ஆண்மகனா ?? அல்லது இவ்வளவு போராட்டத்துக்கும் இடையில் நமது முதல்வர்  உன்மையான ஆண்மகனா ? 

விவசாயம் முதல் மென்பொருள் வரையும் 
சேவல் சண்டை ஜல்லிக்கட்டு போன்ற பராம்பரிய விளையாட்டு வரை எதிலும் 'முதல்வரே'
மக்களின் முதல்வர்!
சந்திரா பாபு நாயுடு, 

ஒவ்வொரு ஆண்டும், திருப்பதி அடுத்துள்ள அவரது சொந்த ஊரான நாராவாரிபள்ளியில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இதை சிறப்பிக்கும் வகையில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நாராவாரிபள்ளியில் இன்று பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு நடத்தினர்.™ தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிகட்டுபோல் இல்லாமல், காளை மாடுகளை மந்தை மந்தையாக பட்டியில் அடைத்து, மாட்டின் கொம்புகளின் மீது பதக்கம் கட்டப்பட்டு ஒவ்வொரு பட்டியாக திறந்து விடப்பட்டது.சீறிப்பாய்ந்த காளைகளின் இருபுறமும் நின்று கொண்டுருந்த இளைஞர்கள், காளையின் கொம்பில் கட்டப்பட்டுள்ள பதக்கத்தை எடுத்தால், அவர்கள் வெற்றி பெற்றதாக கருதப்படும். ராஜா
இதை மீறி, யார் கையிலும் சிக்காமல் எந்த மாடு குறிப்பிட்ட இலக்கை அடைகிறதோ அந்த மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆந்திராவில், அம்மாநில முதலமைச்சரின் சொந்த ஊரில் போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிகட்டு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை சொந்த ஊர் சென்றிருந்த சந்திரபாபு நாயுடு, ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின், இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மக்களின் மனதை புரிந்துகொண்ட மாமனிதர்


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...