Sunday, September 18, 2022

*வேலுப்பிள்ளை பிரபாகரன்* *தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்* | *எனது நட்பு*-*பகுதி-5, Part-5* |

*வேலுப்பிள்ளை பிரபாகரன்*
*தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்* | *எனது நட்பு*-*பகுதி-5, Part-5* | 
#Ksrpost
18-9-2022.

https://youtu.be/DP9hiZ4uY10

*எனது தன்னிலை விளக்கம்* *நண்பர்களுக்கு, உற்றார்- உறவினர்களுக்கு….*

*எனது தன்னிலை விளக்கம்*
*நண்பர்களுக்கு, உற்றார்- உறவினர்களுக்கு….* 
————————————
சென்னையில்  ஒரு திரையரங்கில் சமீபத்தில்ன மதிமுக தலைவர் வைகோ அவர்களைப் பற்றிய ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.
‘அந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?’ என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். இது குறித்து பல கை பேசி அழைப்புகள்…..
அவர்கள் கேட்பதிலும் அர்த்தமுள்ளது.
வைகோ அவர்களோடு தமிழக அரசியல், மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம், ஈழம், பிரபாகரனோடு அவருக்கு தொடர்பு ஏற்பட என ஓர் இருபது ஆண்டுகள்  மேல் நான் பயணித்திருக்கிறேன். அவரோடு பயணித்த காலங்களில் அவருக்காக நான் பல பணிகளை ஆற்றியதும் உண்டு.
நாற்பது ஆண்டுகளுக்கு
முன் தமிழ் நாடு காங்கிரஸ்
(கா) TNKC திரு நெடுமாறன் அவர்களின் இயக்க சட்டமன்ற உறுப்பினர்கள் SINGLE PREFERENCE VOTE என  ஒரே வாக்காக திமுக வேட்பாளரான வைகோவுக்கு வாக்களிக்க  நான் எடுத்த நடவடிக்கைகள் யாவும் 
மறக்க முடியாது.அப்போது
மாநிலங்கள் அவைக்கு தலைமை செயலகத்தில் தேர்தல் நடந்தது. அப்போது கே. வி. தங்பாலு, ஜெயந்தி நடராஜன் வேட்பாளார்கள் என களத்தில்
இருந்தாக நினைவு.
அதே கால கட்டத்தில் நீயூயார்க்கில் டாக்டர் பஞ்சாட்சரம் ஈழ முதல் மாநாடு வைகோ செல்ல பின் புலமாக இருந்தேன்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வைகோ ஈழத்துக்குச் சென்று வைகோ ரகசியமாகச் சந்தித்தது, அது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நான் பங்கேற்றது, குடியரசுத்தலைவர் குருசாமி நாயக்கர் தூக்குத் தண்டனையை நீக்குவதற்கான கருணை மனுவை நிராகரித்தநிலையில், தூக்குத்தண்டனைக்கு எதிராக போராடியது என நிறைய அவருக்கான 
பணிகளைசொல்லிக் கொண்டே போகலாம். 
‘மாமனிதன் வைகோ’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ளாதது குறித்து பல நண்பர்கள் என்னைக் குறை கூறுவதாக நான் கேள்விப்பட்டேன். அந்த விழாவுக்கு எனக்கு முறையான அழைப்பு இல்லாதபோது நான் எப்படி அங்கே செல்வது? பல நண்பர்களும், உறவினர்களும் என்னிடம் ஏன் அந்த விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை என்று அக்கறையோடு கேட்கும் கேள்விக்கு இதுதான் என்னுடைய பதில். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். 
வைகோ அவர்கள் ‘மாமனிதன் வைகோ’ ஆவணப்பட வெளியீட்டு விழா அழைப்பிதழை அனுப்பக் கூடிய நிலையில் இருந்திருந்தால், நிச்சயமாக எனக்கு அவர் அனுப்பியிருப்பார். ஆவணப்படத் தயாரிப்புக்குழு அழைப்பை அனுப்பியிருந்தால், அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில்,சிலநாட்களுக்கு முன் வைகோ அவர்களை  நக்கீரன் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி எடுக்க நடிகர் ராஜேஷ் வருகிறார். கடந்த 1982 – 1983 காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அந்தப் பேட்டியில் பதிவு செய்ய அதற்கான விவரங்களைக் கேட்டு கைபேசியில் வைகோ என்னிடம் பேசியது உண்டு.  
அந்த ஆவணப்படத்தில் என்னைப் பற்றிய பதிவுகள் எவையும் இல்லையென்று சொன்னார்கள். என்னைப் பற்றிய பதிவுகள் இடம் பெறுவது குறித்து அதனைத் தயாரித்தவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து நான் கருத்து சொல்ல இயலாது.

கி.ரா. நூற்றாண்டு விழாவை வைகோ இடைசெவலில் நடத்த இருக்கிறார். மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஏற்பாடு செய்த கி.ரா. தொடர்பான பல நிகழ்ச்சிகளில் வைகோ கலந்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக, கி.ரா.வின் 60 ஆவது பிறந்த நாள் மணிவிழா நிகழ்ச்சியினை 1982இல் எனது பங்களிப்புடன் கவிஞர் மீராவின் முயற்சியில் மதுரையில் நடந்தது. பின் 75 வது பிறந்தநாள் என….சென்னையில் கி.ரா.வின் 80 ஆவது பிறந்தநாள், 85 ஆவது பிறந்தநாள் விழாக்களை சென்னையில் நான் நடத்திய போதும் அதில் வைகோ பங்கேற்றது எல்லாம் நினைவுக்கு வருகின்றன. கி.ரா.வின் 90 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்வகையில் தினமணியும், டில்லி தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியிலும், புதுவை மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் கி.ரா.வின் 95 ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது.கதைசொல்லி- கிராவின் நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் எல்லாம் வைகோ கலந்து கொண்டு பேசியது எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இடைசெவலில் நடைபெறும் கி.ரா.நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்  
எந்தவிதத்திலும் இன்றைக்கும் வைகோ அவர்களை நான் மதிக்கின்றேன். 2001 - இல் கலைஞரோடு திமுக கூட்டணிவேண்டும் என்று சொன்னவனும் நான்தான். 2016 - இல் மக்கள் நலக் கூட்டணி ஏற்பட முன்பே, கலைஞரை வைகோ சந்திக்க வைத்ததும் நான்தான். எந்தவிதத்திலும் அவருக்கும் எனக்கும் உள்ள நட்பும் உறவும் இதுவரை குறைந்ததில்லை. இந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவுக்கான முறையான அழைப்பு எனக்கு வரவில்லை என்பதால்தான், நான் அதில் கலந்து கொள்ளவில்லையே தவிர, வேறு காரணம் எதுவுமில்லை என்பதுதான் உண்மை.
 என் மேல் அக்கறையுள்ள நண்பர்களும், உற்றார் உறவினர்களும் இதைப் புரிந்து கொள்வார்கள் என்று  நம்புகிறேன்.
இவையெல்லாம் இன்றைக்கும் கல்கி ப்ரியன், தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் என பல நண்பர்களுக்கு தெரியும்.
#KSR post 
18-9-2022.

Friday, September 16, 2022

இன்று கி.ரா.நூற்றாண்டு…

*இன்று கி.ரா.நூற்றாண்டை யொட்டி கோவை விஜயா பதிப்பகமும், சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து மூத்த படைப்பாளி*
*அ. முத்துலிங்கம் அவர்களுக்கு ரூ.5 லட்சம் கிரா விருது வழங்கும் ஜூம் மீட்டிங்,  தற்போது நடைபெற்று வருகிறது*.
*#*கதைசொல்லி*       #karpost              



16-9-2022.



(தினமணி-17-9-2022)
18-9-2022 இரவு 7மணியளவில்…

*அறிஞர் அண்ணா: தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை!*

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
நடத்தும்  திசைக் கூடல் -



*வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
*youtu.be/S0y0uxS3How*

*கரிசல் இலக்கிய பிதாமகன் கிரா* *நூற்றாண்டு விழா*

*கரிசல் இலக்கிய பிதாமகன் கிரா* *நூற்றாண்டு விழா*
————————————
*கரிசல் மண்ணின்,* *இடைசெவல் கிராமத்துக்காரர் கிரா*.
அவருடன் 1970களிலிருந்து பழகிய நினைவுகள் என் மனதில் பசுமையாக நிற்கின்றன.
மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரபிள்ளை போல  இவர் கிராமத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து தனது படைப்புகளை எழுதியவர்.
அந்தக் காலத்தில் அவர் எழுதும்போது பேனாவுக்கு மை தீர்ந்துவிட்டாலோ, பேனாவின் நிப் பழதடைந்துவிட்டாலோ அதற்காக கோவில்பட்டிக்கு வர வேண்டும். சிறிது தூரம் நடந்து பேருந்துக்காகக் காத்திருந்து, பேருந்தில் ஏறி கோவில்பட்டிக்கு வந்து செல்ல வேண்டும், இதற்கே அரை நாள் போய்விடும்.

(இன்றைய தினமணி,   இந்து  தமிழ் திசை விளம்பரங்கள்)









செப்டம்பர் 15 – பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள்,  கி.ரா.பிறந்தது செப்டம்பர் 16  ஆம் தேதி*.
பொடிக்கும், தாடிக்கும் நடுவில் பிறந்தவர் நீங்கள் என்று நாங்கள் வேடிக்கையாகக் குறிப்பிடுவோம்.
கி.ரா.நூற்றாண்டையொட்டி கோவை விஜயா பதிப்பகமும், சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து 
அ. முத்துலிங்கத்துக்கு ரூ.5 லட்சம் கிரா 
விருதை வழங்குகிறார்கள். அதற்கான ஜூம் மீட்டிங் இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது.
அனைவரையும்அழைக்கின்றோம்.


#*கிரா நூற்றாண்டு (1922 - 2022) இன்று*
*செப்டம்பர் 16-2022.*
*கரிசல் இலக்கியத்தின் கதை சொல்லி கி. ராஜநாராயணன் பிறந்த நாள்*

*தடை தாண்டி வந்த கோபல்ல கிராமம்*

youtu.be/ar8APH0AKgk

*நிமிர வைக்கும் நெல்லை - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
#ksrpost
16-9-2022.

#கதைசொல்லி
#KSR post 
16-9-2022.

Thursday, September 15, 2022

திராவிடன் ஸ்டாக்... திராவிடன் மாடல்! Dravidian Stock,Dravidian Model!




பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்   இன்று,15-9-2022  ‘’திராவிடன் ஸ்டாக்... திராவிடன் மாடல்!’’ என்ற எனது சிறப்பு கட்டுரை இன்றைய தினமணியில்…..



அதிகப்பெரும்பான்மையுடன்தி.மு.க தமிழக ஆட்சியில்  பொறுப்பேற்றுள்ளது.  மக்களின் மனவோட்டத்தின்படி திராவிட மாடல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சும் செயல்பாடும் உள்ளது. . 




திரவிடியன் ஸ்டாக்,  திரவிடியன் மாடல்,  அதன் அணுகுமுறை அதாவது திராவிடனுக்கே உரிய மரபு, கொள்கையைப் சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அச்சகம் 1938 - இல் வெளியி்ட்ட H.G.RAWLINSON  என்பவர் எழுதிய A CONCISE HISTORY OF  THE INDIAN PEOPLE   என்ற ஆங்கில வரலாற்று நூலில்  சொல்லப்பட்டிருக்கிறது திராவிடியன் ஸ்டாக் என்ற சொல்லாடல். பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரம்சட்டமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில்மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார். அங்கு  ஏப்ரல் 1962- இல்  ஆற்றிய கன்னிப் பேச்சில்  “I BELONG TO DRAVIDIAN STOCK. I AM PROUD TO CALL MYSELF A DRAVIDIAN” என்றார்.அதாவது, ``நான் திராவிட இனத்தைச்  சார்ந்தவன்திராவிடன் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமை கொள்பவன்’’ என்று அவையில் உரையாற்றினார். திராவிடியன் ஸ்டாக் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார்.

திராவிடம் என்று சொல்லுக்கு எதிர்வினையாக  சிலர் பேசி வருவது ரோக்கியமனது அல்லஇந்த எதிர்வினக்கு கோட்பட்டுரீதியக தக்க பதில்கள் உள்ளன. இனம் என்று எடுத்துக் கொண்டால்உலகம் முழுவதும்தொடக்கத்தில் மரபினங்கள் இருந்தன. பிறகு அவை தேசிய இனங்களாகப்  பரிணாம வளர்ச்சி பெற்றன. இந்த அடிப்படையில் அவர்கள் வாழ்கின்ற பூமியை நிலத்தை அவர்களுடைய மரபுரீதியிலான மாநிலமாகவும் நாடாகவும்  அரசியல்ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நம் பழைய மரபினத்தின் பெயர் திராவிடர்’ என்பது. ஆனால் இன்று திராவிடம்’ என்னும் சொல்மொழியைஇனத்தைநாட்டைக் குறித்ததிலிருந்து விடுபட்டுஒரு கருத்தியலைஒரு சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றுள்ளது. இதற்கு ஆதிச்சநல்லூர்கீழடி என பல களங்கள் சாட்சியாகவும் நம்மிடையே இருக்கின்றன.  

ஆதிசங்கரர்காஷ்மீர் பண்டைய இலக்கியம் எனத் துவங்கி பக்தி இலக்கியங்கள்தாகூர்கால்டுவெல்ஜி.யு.போப்,சுந்தரனார் என வையாபுரி பிள்ளை வரை பலர் வழிமொழிந்ததுதான் திராவிடம்.  

திராவிடன் ஸ்டாக் என்பது தொன்மையான தமிழை தாய்மொழியாகக் கொண்ட  தமிழ்நாடு மட்டுமல்லாமல்,  தமிழிலிருந்து பிறந்த தெலுங்குகன்னடம்மலையாளம் பேசும் இன மக்களின் கலாசாரமும் புவியியலும் ஒன்றோடொன்று பின்னி இணைந்ததாகும். வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’ என்று சொன்ன அண்ணாதமிழ் மக்களின் உரிமைகளையும் தனித்தன்மையையும் உரிமையோடு போற்றிப் பாதுகாக்க மாநில சுயாட்சியும் அவசியம் என தனது உயிலாக காஞ்சி’ ஏட்டில் எழுதினார். 

மாநில சுயாட்சி என்பதுதிராவிட இயக்கத்தின் குரல் மட்டுமல்லதிலகர் பூர்ண சுயராஜ்ஜியம் என்று குறிப்பிட்டதிலிருந்தே அது  தொடங்குகிறது. காங்கிரஸின்  லக்னோ உடன்படிக்கைமோதிலால் நேரு தலைமையிலான காங்கிரஸ் காரிய கமிட்டியின் அறிக்கை மற்றும் பல்வேறு குழுக்கள் மாகாண சுயராஜ்ஜியம் என்று கூறியுள்ளது. அதுவே மாநில சுயாட்சியாகும்.  இந்நிலையில் காஞ்சி இதழின் தைத்திருநாள் சிறப்பு மலரில் மாநில சுயாட்சியைப் பற்றி விரிவான கட்டுரையை அண்ணா எழுதி வெளியிட்டார். இதை ஆங்கிலத்திலும் அண்ணா  எழுதியுள்ளார். இதுவே அவரின் இறுதி உயிலாகும். 

திராவிடம் என்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகநலனுக்காகஉரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதே! இதன் அடிப்படையில் உருவானதே மாநில சுயாட்சி. அண்ணாவின் உயிலை நடைமுறைப்படுத்தும் வகையில் தலைவர் கலைஞர் மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் குழுவை அமைத்துஅதன் அறிக்கையை 1974- ல் பெற்றுஅன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்தார். மாநில சுயாட்சியை தலைவர் கலைஞர் முன்னெடுத்து சுவிட்சர்லாந்து போன்று மாநிலங்களுக்குத் தனிக்கொடிமுதல்வர்கள் அந்தந்த மாநிலத்தில் விடுதலை நாளான ஆகஸ்ட் 15- இல் கொடியேற்றும் உரிமை என்பதை முன்னெடுத்தார்.

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் மாநிலத் தனித்தன்மையுடனும்மாநில சுயாட்சியுடனும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதே அண்ணாவின் நோக்கமாக இருந்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் `DIRAVIDIAN STOCK’ என்று குறிப்பிடுவர். அதுமட்டுமல்லசமூகநீதிதமிழ்மொழி பாதுகாப்புஇங்குள்ள தமிழர்கள் மற்றும் உலகு எங்கும் உள்ள தமிழர்களின் பாதுகாப்புதமிழ் கலாசாரம், தமிழக உரிமைகள் ஆகியவற்றுக்கு தனித்தன்மையோடு  உரிமைக்குக் குரல் கொடுக்கக் கூடிய கொள்கைகோட்பாடுகள்தத்துவங்களே திராவிடன் ஸ்டாக் எனப் பொருள்படுகின்றது.

இதேபோன்று `DIRAVIDIAN MODEL’  பற்றியும்தமிழகப்பொருளாதாரம் வளர்ந்த விதம்  பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதுஇன்றைய  அரசியல் களத்தில் அவசியமானதாகிறது. அதாவது இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் சமச்சீரான வாய்ப்பை வழங்க வேண்டும். ஒரு மாநிலத்தைச் செழிப்புறச் செய்துவேறு ஒரு மாநிலத்தை மாற்றாந்தாய்ப் போக்கில் இந்திய அரசு நினைப்பதை அறவே ஒழித்திட வேண்டும். அனைத்து  மாநிலங்களுக்கும் சமன்பாடான நிதியை ஒதுக்கிஇந்தியத் திருநாட்டின் அனைத்துப்  பகுதிகளும் சமச்சீரான வகையில் வளர்ந்திடுவதற்கான வழிமுறைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மாநிலங்களிடையே பாகுபாடற்ற  நடைமுறைகளே உண்மையான  கூட்டாட்சிக்கும்  மாகாணங்களின்  வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

.

இந்திய அரசியல் சாசனம் உலகிலேயே அதிகப் பக்கங்களும் பிரிவுகளும் கொண்டது. இதுவரை சுமார் 110 திருத்தங்கள் 75 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இதில் 105 திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுள்ளன. இவற்றில் சிலதிருத்த மசோதாக்களாக நிலுவையில் உள்ளன.  ஏறத்தாழ 125 முறை பிரிவு 356 - ஐப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. 

இந்திய அரசு தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியின் அளவு நிறைவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்தி.மு.க ஆட்சிக் காலத்தில் இத்தனை தடங்கல்களையும் தடைகளையும் தாண்டிதமிழகம் பொருளாதாரரீதியில் முன்னேற்றப் பாதையில் சென்றுமுன்னோடி மாநிலமாக விளங்கிக்கொண்டிருக்கிறது என்றால்இதுதான் `திராவிட மாடல்’ என்று தெளிவாகக் குறிப்பிடலாம். இதற்குதலைவர் கலைஞருடைய நிர்வாகத் திறமை மேலும் வலுவூட்டியது. 

அதேசமயம்திமுக இந்திய ஒருமைப்பாட்டிற்கும்பாதுகாப்பிற்கும் முன்னோடியாகவும் திகழ்கிறது. சீனப் போர்பாகிஸ்தான் போர்வங்கதேசம் உதயம் காலத்தில் திமுக போர் நிதியகவும்மத்திய அரசுக்கு ஆதரவாகவும் இருந்தது. தலைவர் கலைஞர் இந்திய குடியரசுத் தலைவர்கள் மற்றும் பிரதமர்களை சரியாகத் தேர்வு செய்தும் உள்ளார். தமிழகம் மற்றும் புதுவையைப் பொருத்தவரையில் மக்களவை மற்றும் மாநிலங்களையில் மொத்தம் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நமது மாநிலப் பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும். அதன் மூலம் அம்மாநிலங்களுக்குத் தேவையான நிதிதிட்ட செயல்பாடுகளை  மேம்படுத்த வேண்டும். உதாரணமாகநதிநீர் பிரச்சனையை எடுத்துக்கொண்டால்காவிரிமுல்லைப் பெரியாறுபாலாறு என்று மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். மறுக்கவில்லை. இவை உயிர்நாடியான பிரதான பிரச்சனைகள்தாம். ஆனால்தமிழகத்தின் 20க்கு மேல் இன்னும் நதிநீர் பிரச்சனைகளைப் பேசத் தவறிவிட்டோம். 

இப்படி தமிழகத்தின் தொன்மைமிக்கப் பிரச்சனைகளை எல்லாம் தெளிவாக நாடாளுமன்றத்தில் விளக்கி விரைவான தெளிவு பெறும் வகையில் சபையில் உரையாட வேண்டும். அதுதான் திரவிடியன் ஸ்டாக்.

இந்தியாவில் மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரத் திட்டங்களை திராவிட ஆட்சியாளர்களே அதிகம் கொண்டுவந்துள்ளனர்.

சமீபத்தில் விவாதத்தில் எழுந்த இலவசங்கள் வேறுநலத்திட்டங்கள் வேறு.  பொதுவாக கல்விமருத்துவம்விவசாயம் போன்ற துறைகளில் வளர்ச்சிக்காக இலவசமாக வழங்கினால் அது ஃபிரீபீஸ் என்று சொல்லக் கூடிய இலவசங்கள் என்று சொல்ல முடியாது. இது நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் நல அரசு வழங்குகின்ற திட்டங்கள்தாம். 

இந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து விவசயிகளுக்கும் இலவச மின்சாரம்கை ரிக்சா ஒழிப்பு (மேற்குவங்கத்தில் இன்னும் கைரிக்சா உள்ளது)குடிசை மாற்று வாரியம்சமச்சீர் கல்வி, எல்லா கிராமங்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் 1974 - இலேயே முழுமைப்படுத்திவிட்டர்.  மற்ற மநிலங்களில் 2010 இல்தன் முழுமைடைந்தது.பள்ளி மணவர் இலவச உணவுத்திட்டம் போன்ற பல முன்னோடியான மாதிரியாக பல திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுகின்றன. இதுவே திராவிட மாடல்.

தமிழகத்து மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்ற நிலையில் கொண்டு வருவதுதான் திராவிடியன் மாடல் என்பது. திராவிடியன் ஸ்டாக் என்பது நம் உரிமைகளை நாடே கேட்க உரக்க எடுத்துரைத்துஉரிமைகளைப் பெறுவது. அதாவதுஉரிமைக்குக் குரல்கொடுப்போம்… உறவுக்குக் கை கொடுப்போம். திராவிடியன்  மாடல் என்பது  நம் வாழ்நிலையை உயர்த்திக் கொள்வதற்கான கடப்பாடுகள் என்னதிட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வழிவகைகள் என்ன என்பதை ஆய்ந்தறிந்து கொள்வது. 

தமிழக அரசில் ஏறத்தாழ 34 துறைகள் உள்ளன. இதில் சமூகநலத்துறைபுள்ளிவிவரத்துறைமக்கள் நல்வாழ்வுத்துறைஆதி திராவிடர் நலத்துறையிலிருந்து பெரிய வருமானங்கள் மாநில அரசுக்கு வருவதில்லை. மற்ற துறைகளிலிருந்துதான் தமிழக அரசு வருவாயை ஈட்ட வேண்டும். ஏற்கெனவே ஜிஎஸ்டி வகையிலும் தமிழகத்திற்கு வர வேண்டிய பங்கு வராமல் இருக்கின்றது.

திராவிடன் ஸ்டாக்திராவிட மாடல் ஆகியவற்றை கொள்கைரீதியாகஅறிவியல்ரீதியாக பலவகையாகப் பகுக்கலாம். இதுதான்  அண்ணா வகுத்துத் தந்துதலைவர் கலைஞர் முன்னெடுத்த திரவிடத் த்துவம்


திராவிடம் வழியே மக்கள் நலப் புரட்சியை ஏற்படுத்துவோம்...

 

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!

 

-அரசியலார் 

 

 https://bit.ly/3RMyvZy


#KSR post 

15-9-2022.

Wednesday, September 14, 2022

*இந்தியாவில் 283 கட்சிகள் ஒப்புக்கு சப்பாணியாக தேர்தல் கமிஷ்னில் பதிவு செய்துள்ளது.*



*இதில் 253 நீக்கபட்டது.எந்த செயல்பாடும் அறவே இல்லை.இந்தியாவில் 86 கட்சிகள் உயர அற்றது*.
*இதில் தமிழகத்தை சேர்ந்த 14 கட்சிகளும் அடங்கும்.*
#KSR post 
14-9-2022.
Today’s Times of India

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...