Wednesday, May 18, 2016

விவசாயிகளுக்கு நிம்மதி தரும் உச்சநீதிமன்ற தீர்ப்பு

ஹரியானா மாநில விவசாயிகளிடம் இருந்து ஹரியானா மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை 2003 முதல் 2005 வரை நிலங்களை கையகப்படுத்தியது. அந்த நிலங்களை முறையாக ஹரியானா அரசு எந்த நோக்கத்திற்கு எடுத்ததோ, அதற்கு பயன்படுத்தாமல் இருந்தது. வீட்டு வசதிக்கு எடுக்கின்ற நிலங்களை முறையாக பயன்படுத்தவேண்டும் என்றும் அவ்வாறு பயன்படுத்தாத நிலங்களை திரும்பவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதிகள் அனில் ஆர். தவே, ஏ.கே. கோலியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று கடந்த 15 ஆண்டுகளில் விவசாயிகளின் விலை நிலங்களை சட்டங்களின் மூலமாக கையகப்படுத்தியது பெரும் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் இந்த தீர்ப்பு முழுமையான தீர்வு இல்லை என்றாலும் ஆறுதலான தீர்ப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.

Land should be given back if the project does not take off:  SC

No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...